privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேர்தல் ஆணையம் ஆசியுடன் டி.வி.எஸ் முதலாளி தேர்தல் 'புறக்கணிப்பு' !

தேர்தல் ஆணையம் ஆசியுடன் டி.வி.எஸ் முதலாளி தேர்தல் ‘புறக்கணிப்பு’ !

-

மிழகத்தின் 15-வது சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதும் அரசு நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் எடுத்து கொண்டது. பறக்கும் படையினரின் விடிய, விடிய சோதனை, நாள்தோறும் ஓர் அறிவிப்பு. கண்டிப்புக்கும், கடமைக்கும் நாங்கள்தான் இலக்கணம் என தலைக்கனத்தோடு செயல்பட்ட அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகளின் பணப் பட்டுவாடாவைத் தடுக்கவில்லை, யாரையும் தண்டிக்கவில்லை. இந்த தேர்தல் முதலாளிகளுக்காக நடத்தப்படும் நாடகம் என்பதை நிரூபித்த உண்மை சம்பவம் இதோ!

election-boycott-ndlf-puduchery-poster-11மே-16 தேர்தல் நாளன்று, அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான புகார்களுக்கு தொழிலாளர் துறை ஆணையரிடம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பினை மயிருக்கு சமமாக கருதிய முதலாளிகள், அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, ஆலைகளை இயக்கினர். அதில் ஒன்றுதான், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்திலுள்ள டி.வி.எஸ் குழுமத்திற்கு சொந்தமான ஆக்ஸில்ஸ் இந்தியா நிறுவனம் தொழிலாளர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பணிக்கு அழைத்து, ஆலையை இயக்கியது.

இது தொடர்பான தகவலை துறைசார்ந்த அதிகாரிகளுக்கு புகார் அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதில் அதிகாரிகள் நடந்து கொண்டவிதம் இது போலி ஜனநாயகம் தான் என்பதை ஐயமுற நிரூபித்துவிட்டது.

முதலில், பத்திரிக்கையில் அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, திருவண்ணாமலை ஏ.சி.எல் அவர்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறினார். திருவண்ணாமலை ஏ.சி.எல் அவர்களுக்கு தொடர்பு கொண்டால், டி.சி.ஐ.எஃப் அவர்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

டி.சி.ஐ.எஃப்-க்கு தொடர்புகொண்டால் “நான் குடியாத்தத்தில் இருக்கிறேன். உடனடியாக நான் அங்கு வரமுடியாது” என்றார்.

“உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுங்கள்” என இடித்துரைக்கப்பட்டது.

election-boycott-ndlf-puduchery-poster-05சிறிது நேரம் கழித்து லைனில் வந்த டி.சி.ஐ.எஃப்  அதிகாரி, எச்.ஆர் அதிகாரி சீனிவாசனிடம் பேசியதாகவும், ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் நம்மிடம் கூறினார்.

“எந்தக் காலத்தில் எச்.ஆர் அதிகாரிகள் உண்மையைப் பேசியிருக்கிறார்கள். காலையில் முதல் ஷிஃப்டு முடித்து மாலை 4 மணியிலிருந்து இரண்டாவது ஷிஃப்டில் ஆலை இயங்கிக்கொண்டிருக்கிறது. டி.வி.எஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள்” எனக் கேட்டோம்.

“இந்தக் கம்பெனியை என்னுடைய மேலதிகாரிதான் பார்க்கிறார். அவருக்குத் தகவல் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

அவருடைய தொடர்பு எண்ணை நாம் பெற்றுக்கொண்டு இணை ஆணையரான பெரியசாமியிடம் தொடர்பு கொண்டபோது, தான் சென்னையிலிருப்பதாகக் கூறினார். நிர்வாகம் சட்டவிரோதமாக நடந்துகொள்வதையும், தொழிலாளர்கள் மிரட்டப்பட்டு பணிக்கு அழைத்துவரப்பட்டுள்ளதையும் சொல்லிய பிறகே நடவடிக்கை எடுப்பதாகவும், அங்கு செல்வதாகவும் கூறினார்.

அதிகார வர்க்கத்திற்கே உரிய கடமைக்கு வேலை செய்வது என்பதை அச்சுப் பிசகாமல் நடைமுறைப் படுத்தினார் இணை ஆணையர் பெரியசாமி. ஆக்சில்ஸ் நிறுவனத்துக்குள் சென்று அங்கிருந்தபடியே மாவட்டச் செயலருக்குத் தொடர்புகொண்டு ”சார், 5 பேர்தான் வேலை செய்கின்றனர். மெயிண்டெனன்ஸ் ஒர்க்கர்தான். வேறு யாரும் இல்லை” என்றார்.

holy-election-2“இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். அதற்கு எதிராக நிறுவனம் நடந்துகொண்டிருக்கிறது. 4 பேரை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம் என லக்கானி அனுமதி அளித்துள்ளாரா?” எனக் கேட்டோம்.

“இல்லை சார்..” என்றவரிடம் மாவ. செயலர். “ஆக்ஸில்ஸ் இந்தியா நிர்வாகம் சட்டவிரோதமாக செயல்பட்டு, கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். பெரியசாமி முதலாளிகளுக்கான சாமியாகிவிட்டார்.

டி.சி.ஐ.எஃப் வேல் முருகனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, எனக்கு மேல் அதிகாரிதான் ஆக்ஸில்ஸ் இந்தியா நிறுவனத்தை பார்க்கின்றார் என்றார். ஆனால் அவர் எதற்காக HR சீனிவாசனிடம் பேசவேண்டும்?

உண்மையில், பு.ஜ.தொ.மு தலையிட்டு ஒவ்வொரு அதிகாரியாகத் தொடர்புகொண்டு, சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் பேசுவதற்குள், நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 16-05-2016 அன்று இரண்டாவது ஷிஃப்டுக்கு வந்த 25 தொழிலாளர்களை மாலை 5 மணிக்கு வெளியேற்றி இருக்கின்றது, நிர்வாகம். இரவு 7 மணிக்கு சென்ற இணை ஆணையரான பெரியசாமி வெறும் 5 பேர் தான், வேறு யாரும் இல்லையெனகூறி நம்மை சமாதானம் பேசி, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கறாராக பேசிய பிறகே, இரவு ஷிஃப்ட்டுக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்ப்பட்டோரை இன்று வேலையில்லையென செக்யூரிட்டி மூலம் கூறி திருப்பி அனுப்பியுள்ளது நிர்வாகம்.

ஆக, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம், அதற்காக நடத்தக்கூடிய தேர்தல், இதற்கான அதிகார வர்க்கம். இவர்கள் அறிவிக்கின்ற நியாயங்கள், சட்டங்களை, இவர்களே மதிப்பதில்லை. கையும், களவுமாக பிடிப்பட்ட பிறகும், தவறின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக முதலாளி வர்க்கத்தை பாதுகாப்பதின் ஒர் அங்கமாகதான், தேர்தல் ஆணையமும், துறைசார்ந்த அதிகாரிகளும், டி.வி.எஸ் ஆக்ஸில்ஸ் முதலாளியை போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்றினார்கள்.

சட்டத்தை மீறுவது, கிரிமினல் தனங்களில் ஈடுபடுவது, உரிமைக்காக போராடும் தொழிலாளர்களின் வேலையை பறிப்பது, பொதுச் சொத்தை சூறையாடுவது, இப்படிப்பட்ட முதலாளிகளை பாதுகாப்பதுதான், இந்த ஜனநாயக அமைப்பு. அவர்களுக்கான எடுபிடிகள்தான் இந்த அதிகார வர்க்கம் என்பதை நிரூபித்துள்ளது, இந்நிகழ்வு. இப்படிப்பட்ட அரசமைப்பிற்குள் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியுமா…?

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொடர்புக்கு – 88075 32859