privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஜூன் 2016 மின்னிதழ் : கண்டெய்னர் ஜனநாயகம் வாழ்க !

புதிய ஜனநாயகம் – ஜூன் 2016 மின்னிதழ் : கண்டெய்னர் ஜனநாயகம் வாழ்க !

-

puthiya-jananayagam-june-2016

புதிய ஜனநாயகம் ஜூன் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மின்கட்டண உயர்வுக்கு ஊழலே அடிக்கொள்ளி
நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்கள் இறக்குமதியில் நடந்துள்ள 50,000 கோடி ரூபாய் ஊழல், 2ஜி ஊழல் போல அனுமான இழப்பு அல்ல, இத்துணை ஆயிரம் கோடியும் மக்கள் மீது மின் கட்டண உயர்வாகச் சுமத்தப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

2. நீதிக்கு எதிராக வாளேந்தும் நீதிமன்றம்!

3. கண்டெய்னர் வாழ்க! போலி வாக்காளர் வாழ்க! அழிகின்ற மை வாழ்க! அழியாத முதல்வர் வாழ்க!
ஜனநாயகம் வாழ்க… வாழ்கவே!
“நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது” என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக் கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.

4. தமிழகத் தேர்தல் ஆணையம் : போயசு தோட்டத்தின் செக்யூரிட்டி!
தேர்தல் ஆணையத்தின் அதிகாரம், நடுநிலை, சுயேச்சைத் தன்மை குறித்து பார்ப்பன அறிவுஜீவிக் கும்பல் கட்டமைத்த பிம்பங்களெல்லாம் நொறுங்கிப் போய்விட்டன.

5. கொள்கையா, பணமா, சாதியா? தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பது எது?
மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள், எதற்காக வாக்களிக்கிறார்கள், வெற்றி – தோல்வியைத் தீர்மானிப்பது எது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பென்னாகரம் தொகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வு.

6. இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால்…- கேரளா உணர்த்தும் எதிர்மறை படிப்பினை
இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போகும் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் – சித்தாந்த பலவீனத்தையும், சந்தர்ப்பவாத நடைமுறையையும் சாதகமாக்கிக் கொண்டு, கேரளத்தில் இந்துவெறி பாசிச சக்திகள் அச்சுறுத்தும் அபாயமாக வளர்ந்துள்ளன.

7. மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான்!
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இந்து மதவெறியர்களுள் ஒரு சிலரை விடுதலை செய்து விட்டு, அந்த வழக்கையும் நீர்த்துப் போகச் செய்து விட்டார், நரேந்திர மோடி.

8. பிரதமர் பதவியில் ஒரு மோடி மஸ்தான்!
தான் ஊழல் கறைபடியாதவர், தனது ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்று தம்பட்டம் அடித்துவரும் மோடியிம் யோக்கியதையைக் கந்தலாக்கி விட்டது குஜராத்தில் நடந்துள்ள எரிவாயு ஊழல்.

9. “எங்களைக் கொல்லாதீர்கள்!” – அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள்
ஆனந்த் தெல்தும்டே
ஆண்டொன்றுக்கு 22,000 துப்புரவுத் தொழிலாளர்கள் மலக்குழியிலும் பாதாளச் சாக்கடையிலும் கேட்பாரின்றிக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து கமிட்டிகளை மட்டும் அமைத்து இந்தப் பிரச்சினியைத் தீர்க்க முயலுவது போல நடித்து வருகிறது அரசு.

10. ஹோண்டா தொழிலாளர் போராட்டம் : வெற்றியின் முதல் படியில்
மொழி, இனம், பண்பாடு, நிரந்தரம், தற்காலிகம் என்ற வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களிடையே ஐக்கியமும் ஒற்றுமையும் ஏற்பட்டிருப்பதுதான் இப்போராட்டத்தின் குறிப்பிடத்தக்க விடயம்.

புதிய ஜனநாயகம் ஜூன் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க