அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள்?
அரசு கையிலிருந்து கல்வி தனியாரால் அபகரிக்கப்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டன. இதனால் தற்குறிகளின் தேசம் அறிவார்ந்தவர்களின் தேசமாகிவிட்டதா?
இந்தியாவிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் 17 இலட்சம் இடங்களில் சமீப ஆண்டுகளாக 40% இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி இருக்கின்றன. 2015-ம் ஆண்டு கணக்கின் படி தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாணவர்கள் கிடைக்கவில்லை.
புதிய பொருளாதாரக் கொள்கையின் படி கல்வி விற்பனைச் சரக்காக மாற்றப்பட்டு திடீர் பணக்காரகளும், பாரம்பரிய முதலாளிகளும் போட்டி போட்டு திறந்த பொறியியல் கல்லூரிகளின் சாதனை இதுதான். இவர்களிடம் படிப்பதற்கு நடுத்தர வர்க்கம் தனது ஆயுள் சேமிப்பை கொட்டி கனவு கண்டாலும் படித்து முடித்தவருக்கு வேலை இல்லை. இறுதியில் படிப்பதற்கே ஆளில்லை. கடைசியில் ஆள்பிடிப்பதற்கு அரசே பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் கொடுத்தது. என்ன இருந்தாலம் கல்வி முதலாளிகள் நட்டப்படக் கூடாதில்லையா?
தமிழகத்தில் மட்டும் சுமார் 16,381 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் அப்படியே சுயநிதிக் கல்லூரி கொள்ளையரின் கஜானவிற்கு சென்று விட்டது. ஆனால் பட்டம் பெற்ற மாணவர்கள் கடனைக் கட்ட வழியில்லை.
இறுதியாக இந்திய ஸ்டேட் வங்கி தனது பங்கான 847 கோடி கடனை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அதாவது மொத்த தொகையில் 40% செலுத்திய அம்பானி கம்பெனி தற்போது கந்து வட்டிக்காரன் வேலையை ஆரம்பித்து விட்டது.
கடிதம், தொலைபேசி மூலம் மிரட்டல், கடனை திருப்பாமல் எங்கும் வேலை கிடைக்காது என்று அச்சுறுத்துகிறார்கள். செய்வதறியாது மாணவர்களும், பெற்றோரும் திகைக்கின்றனர். அவர்கள் ஒன்றும் மல்லையா அல்லது அம்பானி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் அல்ல.
கல்விக் கடனை ரத்து செய்த ஜெயா அரசின் அறிவிப்பில் ரிலையன்ஸ் வரும் என்று அந்த அதிகாரியும் முழங்கவில்லை. கல்வி நமது உரிமை என்பது மாறி முதலாளிகளுடைய கொத்தடிமைகளாக மாணவர்கள் மாற்றப்பட்டு விட்டார்கள்.
பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரிகள், பள்ளிகள், மழலையர் பள்ளி வரை இதுதான் நிலைமை. மக்களுக்கான கல்வியை மீட்டெடுக்க நாம் தனியார் முதலாளிகளோடு பெரும் போரே நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இத்தொகுப்பு அறியத்தரும் என்று நம்புகிறோம்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- அங்கன்வாடி
- மாதிரிப் பள்ளிகள் தேவையா ?
- நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்
- கல்விக்காக ‘கற்பைக்’ கொடுக்கும் இங்கிலாந்து மாணவிகள் !
- ஆங்கிலவழிக் கல்வி சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?
- கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் !
- ஹிந்து தாலிபான்கள் உருவாக்கும் காவி மதரஸாக்கள் !
- ’பி ஸ்கூல்கள்….’ புஸ்…. !
- அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் நவீன சேரிகள் !
- பொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு
- மருத்துவர் தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய்
- அப்பா சிறை சென்றதால்தான் மகள் படிக்க முடியும் !
- கல்வி உரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை !
- கவரப்பட்டு அரசு பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !
- புதிய கல்விக்கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________