privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்

செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்

-

1. திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

chengam-police-attack-prpc-demoதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவடியைச் சேர்ந்த ராஜா என்ற ஆட்டோ ஓட்டியும், அவரது மனைவி செங்கம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்தும் பிழைத்து வருகிறார்கள். அவர்களது மகன் சூர்யா 12-வது வகுப்பு படித்துள்ளார்.

கடந்த 11-07-2016 காலை 11 மணிக்கு ராஜாவின் குடும்பப் பிரச்சினையில் தலையிட்ட செங்கம் காவலர்கள் நம்மாழ்வார், விஜயகுமார் மற்றும் முருகன் ஆகியோர் ராஜா குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்து 15-07-2016 காலை 10 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற வழக்கறிஞர் ஐ.சேகர் தனது தலைமையுரையில், ராஜாவின் செயல் தவறானது என்றாலும் காவல்துறையினர் அதை சட்டப்படி அணுகாமல் மிருகத்தனமாக நடந்து கொண்டதை கண்டித்து பேசினார்.

அடுத்து பேசிய செங்கம் வழக்கறிஞர் சந்திரசேகரன் போலீஸ் வன்முறையை கண்டித்ததோடு துப்பரவு தொழிலாளி உஷா தனது வேலைக்காகவும் முகத்தை துடைக்கவும் வைத்திருந்த துண்டை ராஜா தாக்கியதால கிழிந்த ஆடையுடன் இருந்த உஷாவுக்கு போலீஸ் கொடுத்ததாக பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

செங்கம் வழக்கறிஞர் மணியரசன் ஆளும் வர்க்கத்தின் அத்துமீறலையும், எளியவர்களின் மீதான போலீஸ் அடக்குமுறையையும் சாடினார்.

அடுத்ததாக பேசிய திருவண்ணாமலை வழக்கறிஞர் சு.கண்ணன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் போலீஸ் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களை பட்டியலிட்டும், செங்கம் போலீசின் மனித உரிமை மீறலையும் கண்டித்தார்.

அடுத்து பேசிய மு.ஜெயபாலன் காவல்துறையினர் சமீப காலங்களில் இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்து செய்து வருவதையும் தங்களை திருத்திக் கொள்ள எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை எனவும் பேசினார்.

chengam-police-attack-prpc-demo-posterஅடுத்ததாக பேசிய கடலூர் வழக்கறிஞர் செந்தில் போலீஸ் உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொண்டு எல்லா இடங்களிலும் போலீஸ் லஞ்சம் வாங்குவதையும், வசதி படைத்தவனை நெருங்க பயப்படும் போலீசு ஏழை எளிய உழைக்கும் வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதையும் கோடிட்டு பேசினார்.

அடுத்து பேசிய சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில் காவல்துறையின் போக்கிரிகளை அரசே வளர்த்து வருவதாகவும் மக்கள் நியாயமான பிரச்சனைகளுக்கு போராடும்போது அவர்களை ஒடுக்குவதற்காக இது போன்றவர்களின் தயவு தேவைப்படுவதாகவும் பேசினார்.

அடுத்து பேசிய திருவண்ணாமலை வழக்கறிஞர் சித்தார்த்த கௌதமன், தமிழக அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக இருப்பதால்தான் இதுபோன்ற போலீசின் அத்துமீறலை கண்டிக்க முடியாதவர்களாக இருப்பதாகவும் சட்டத்தை இயற்றி அதனை பராமரிப்பவர்களை அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இறுதியாக பேசிய விருத்தாச்சலம் வழக்கறிஞர் புஷ்பதேவன் தொடரும் போலீசின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால் மக்கள் போராட்டக் குழுவினை கட்டியமைத்து எதிர்க்க வேண்டும் என்று பேசினார்.

மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் செங்கம் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

  • தோக்கவாடி ராஜா குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய செங்கம் போலீசார் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்! டிஸ்மிஸ் செய்!

பொது மக்களே!

  • மக்கள் போராட்டம் மூலமே குற்றவாளி போலீசாரை தண்டிக்க முடியும்!

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
திருவண்ணாமலை கிளை
94437 24403

2. செங்கம் போலீசு காட்டுமிராண்டித்துக்கு பு.ஜ.தொ.மு கண்டனம்

chengam-police-attack-ndlf-posterஇதுதாண்டா போலீசு…!

  • ராஜா குடும்பப் பிரச்சினையில் மூக்கை நுழைத்து கொலைவெறியாட்டம் நடத்தியது செங்கம் போலீசு!
    வேடிக்கை பார்த்த பொதுமக்களை கடித்துக் குதறிய போலீசு வெறிநாய்கள்!

தமிழக அரசே!

  • செங்கம் போலீசாரின் கொலைவெறிக்கு ஆளான ராஜா மற்றும் குடும்பத்திற்கு மருத்துவ உதவி செய்!
    நிவாரணமாக தலா ரூ 10 லட்சம் வழங்கு

உழைக்கும் மக்களே!

  • தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்!
    தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் – திருவள்ளூர் (கிழக்கு), (மேற்கு) – வேலூர் மாவட்டங்கள்
88075 32859, 94453 89536, 94453 68009, 84897 35841

 

3. அதிகரிக்கும் பெண்கள் மீதான தாக்குதல்! தலைமுறைகளை சீரழிக்கும் டாஸ்மாக்! தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? – திருச்சி கலந்தாய்வுக் கூட்டம்

மீபத்தில் நடந்த சுவாதி படுகொலையும், வினுப்பிரியா தற்கொலையும், பெண்கள் மீதான தாக்குதல் மேலும் மேலும் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருவதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் விடப்படும் சவால், எச்சரிக்கை.

கொலையாளிகளை பிடிப்பது எப்படி, தண்டிப்பது எப்படி என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீதிமன்றம், போலீசு தரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் எந்தத் தீர்வையும் கண்டு விடவில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் இத்தகைய படுகொலைகளுக்குக் காரணம் என்ன? பெண்களுக்கு பேராபத்து என்பது ஆணாதிக்க வக்கிர மனோபாவம் கொண்ட தனிப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளால் மட்டும் நடைபெறுவதில்லை. அவர்களது சொந்தக் குடும்பத்தாராலேயே – சாதி, மதவெறி பிடித்த பெற்றோர்களால், உற்றார் உறவினர்களாலும் கூட ஏற்படுகின்றன. அவை நமது சமூகத்தை கவ்வியுள்ள நோய். அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது? அவற்றை நீதிமன்றம், போலீசும் உட்பட அரசு எந்திரத்தால் ஏன் தடுக்க முடியவில்லை? இது குறித்தும் அக்கறைப்படும் நாம் அனைவரும் அவசியம் விவாதிக்க வேண்டும். தீர்வு காண வேண்டும்.

பெண்கள் மீதான தாக்குதலுக்கு குடிபோதை முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் படிப்படியான மதுவிலக்கு என்பது மோசடியானது. தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை அண்டை மாநிலத்தில் போய்க் குடிப்பார்கள் என சட்டமன்றத்தில் சொன்னவர்கள் 500 கடைகள் மட்டும் மூடலை வைத்து படிப்படியான மதுவிலக்கு என்று பம்மாத்து காட்டுகிறார்கள். சாராய சாம்ராஜ்யத்தின் வருமானத்தில் சிறிதும் குறைந்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. பூரண மதுவிலக்கை பீகார் அரசு அமல்படுத்தியிருக்கிறது. கள்ளச்சாராய ரவுடிகளுக்கு கடும் தண்டனை என சட்டம் இயற்றியதுடன், கண்காணிக்கும் பொறுப்பை மக்கள் கையில் வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஏன் முடியாது என்பது பற்றி விவாதிக்க கலந்தாய்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அவற்றில் தாங்கள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சமூகத்தில், பண்பாட்டில் ஏற்பட்ட நெருக்கடி பற்றி பரிசீலிக்க வேண்டும். பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை, பெற்றோர்களே ஆணவக் கொலை செய்கிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறார்கள், ஆசிரியரே சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார். பெண்களுக்கு எதிராக பாலியன் கொடுமைகள் பெரும்பாலும் தெரிந்தவர்கள் – உறவினர்களாலேயே நடக்கின்றன. பெண்கள் மீது பழி போடுவது, நடத்தையை சந்தேகிப்பது, கட்டுப்பாடுகள் விதிப்பது, சிறு வயதிலேயே ஆண்களுக்கு தனிமனித ஒழுக்க நீதிபோதனைகள் சொல்லிக் கொடுப்பது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிப்பது போன்ற தீர்வுகள் அனைத்தும் தோற்றுப் போய் விட்டன.

trichy-pp-meeting-flexசாதி மத அமைப்புகள் எல்லாம் காலம் காலமாக பெண்களின் உரிமைகளை மறுப்பதாகவும், ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கின்றன. பெண்களை சக மனிதர்களாக ஏற்கும் ஜனநாயகப் பண்பு சமூகம் முழுவதும் நிலைநாட்டப்பட வேண்டும். அனைத்து உரிமைகளும் சமூகத்தின் சரிபாதி பெண்களுக்கு இருக்கு்ம போது மட்டுமே இந்த சமூகம் விடுதலை பெற்றதாக சுதந்திரமானதாக இருக்க முடியும். ஒரு ஆண் தனது பாலியல் இச்சைகளுக்காக பெண்களை துன்புறுத்தி வன்கொடுமைகள் புரியும் வக்கிர செயல்களுக்காக ஒட்டு மொத்த சமூகமும் வெட்கப்பட வேண்டும்.

ஆணாதிக்கம், சாதிவெறி தீ வேரூன்றிய சமூகத்தை சீர்திருத்துவதற்கு மாறாக, அதில் பெட்ரோல் ஊற்றுவது போல, பாலியல் நுகர்வு வெறியைத் தூண்டும் ஆபாச இணைய தளஙள், “பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும், பார்க்காமலே பிடிக்கும், ஒத்துக்கல கொன்று விடுவேன், எனக்கு கிடைக்கலன்னா நீ யார் கூடவும் வாழ முடியாது..” என பெண்களை துரத்தி துரத்தி, விரட்டி – மிரட்டிப் பணியவைக்கும் காட்சிகள், பீர் பாட்டிலோடு திரியும் நடிகர் நடிகளை வைத்துக் காட்டப்படும் சினிமாக்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

பெண்களின் வாழ்வுரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கித் திணறுகிறது. மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு தர முடியாமல் முயன்று முயன்று தோற்றுப் போனதுடன் ஆளும் அருகதையை இழந்து நிற்கிறது. போலீசிடம் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் வினுப்பிரியா இறந்துள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் அனைத்து துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் படுகொலை செய்யப்பட்டனர். குற்றங்களை தடுத்து கண்காணிக்க வேண்டியே போலீசே குற்றக் கும்பலாக மாறி விட்டது. சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஸ்.ஐ முதல் ஏ.டி.ஜி.பி வரை சம்பந்தப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் பள்ளிச் சிறுவர்களை பிடித்து ஓரினச் சேர்க்கையில் காவல்துறையினரே ஈடுபடுத்தினர். ஓசூரில் லம்பாடி பெண்ணின் மீது பாலியல் வன்கொடுமையில் எஸ்.ஐ ஈடுபடுகிறார். மேலும் உடுமலை சங்கர், கோகுல்ராஜ், இளவரசன் ஆகியோர் சாதிவெறிக்கு எதிராக பாதுகாப்பு கேட்டு காவல் துறையில் முறையிட்டு போலீசு கண்காணிப்பில் இருந்த போதுதான் கொலை செய்யப்பட்டனர்.
அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் ஊழல்வாதிகளாகவும், கொள்ளைக்கு துணை போகும் குற்றவாளிகளாகவும் இருக்கும் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், அமைச்சர்கள், முதலாளிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை. அரசு எந்திரம் முழுவதும் கிரிமினல் மயமாக மாறியதுடன் பயன்படுத்த முடியாத நிலைக்கு போய் விட்டது. மக்களை பாதுகாப்பதற்கு பதில் எதிராக செயல்படுகிறது.

அதிகரிக்கும் பெண்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மதுவிலக்கு மட்டுமல்ல, தீர்வு காண முடியாத மக்களின், சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசியல், சமூக, கலாச்சார கட்டமைப்பு நெருக்கடியாம் (சிஸ்டமிக் கிரைசிஸ்) காரணம் என்பதை முன் வைக்கிறோம். இது குறித்து உரிய ஆலோசனைகள், கருத்துக்களை வழங்க, விவாதிக்க உங்களை அழைக்கிறோம். அனைத்து பிரிவு மக்களின் ஆதரவை, நம்பிக்கையை பெறாமல் கட்டமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

கலந்தாய்வுக் கூட்டம்
நாள் 17-07-2016 மாலை 5.30 மணி, இடம் சண்முகா மண்டபம், புத்தூர், திருச்சி – 17

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க