privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வினோதினி, வினுப்ரியா, சுவாதி கொலைகளுக்கு தீர்வு என்ன ?

வினோதினி, வினுப்ரியா, சுவாதி கொலைகளுக்கு தீர்வு என்ன ?

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நமது சமூகத்தில் தினமும் பல சம்பவங்கள் நடக்கின்றன. அதில் சில ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கிப் போட்டுவிடுகிறது. சமீபத்தில் நடந்த சுவாதி கொலையும் அத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கூலிப்படை கும்பல்களை பற்றிய செய்திகளைத்தான் தினமும் கேள்விப்படுகிறோம். இம்மாதத்தில் மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் ஏழு கொலைகள் நடந்திருக்கின்றன.

இதில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் மிகவும் வக்கிரமான முறையில் நடக்கின்றன. நுங்கம்பாக்கத்தில் சுவாதி, சேலத்தில் வினுப்ரியா, அதற்கு முன்பு ஜிஷா, நிர்பயா, வினோதினி என்று வரிசையாக பல பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர், தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சுவாதி வாயில் வெட்டி கொல்லப்பட்டார். ஜிஷா என்கிற தலித் பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்தி இரு மார்பகங்களையும் அறுத்து எரிந்து, வயிற்றைக் கிழித்து குடலை உருவிப்போட்டனர். டெல்லியில் நிர்பயா என்கிற பெண்ணை பேருந்திற்குள் பலாத்காரம் செய்து பிறப்புருப்பு வழியே இரும்பு கம்பியை செருகி குடல் வரை இறக்கி கொன்றனர்.

சுவாதி கொலையை பொருத்தவரை யார் கொலையாளி என்பது தான் முதலில் பரபரப்பாக பேசப்பட்டது. பிறகு ராம்குமார் என்கிற இளைஞரை swath-murder-pala-noticeபிடித்து வந்து இவர் தான் கொலைகாரர் என்று கூறியதும் பரபரப்பு அடங்கியது. ஆனால் ராம்குமார் உண்மையான குற்றவாளியா என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன என்று போலீசை நோக்கி பலர் நூற்றுக்கணக்கான கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். போலீசின் நடவடிக்கைகளும் சந்தேகத்திற்குரியவையாக உள்ளன என்றாலும் யார் கொலைகாரன் என்கிற புலனாய்வுக்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம். ராம்குமாரே குற்றவாளியாக இருந்தாலும், இத்தகைய கொடூர கொலைகளுக்கு தனிநபர்கள் மட்டும் தான் காரணமா என்பதை பார்ப்போம்.

இதற்கு முன்பும் இது போன்ற கொலைகளும், பலாத்காரங்களும் நம் சமூகத்தில் நடந்திருக்கின்றன. ஆனால் இப்போது நடப்பதை போல ஒரே நாளில் டஜன் கணக்கிலும், வக்கிரமான முறையிலும் நடந்ததில்லை. இது முற்றிலும் புதிய நிலைமை. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞன் தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை கூறி அவள் ஏற்கவில்லை என்றால் தாடி வளர்த்துக்கொண்டு குடிகாரனாகி கவிதை எழுதிக்கொண்டிருப்பான். ஒருதலை ராகம் போன்ற திரைப்படங்கள் அப்போது வந்தன. ஆனால் இப்போதோ ஆசிட் ஊற்றி முகத்தை சிதைப்பது, கொடூரமாக கொலை செய்வது என்பதாக மாறியிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு ஒரு சிறுமியை பலாத்காரப்படுத்தி பானைக்குள் அடைத்து வைத்திருக்கிறான் ஒரு சிறுவன்.

பெருகி வரும் இத்தகைய சம்பவங்களால் சமூகத்தில் ஒருவித அச்சமும் பாதுகாப்புணர்வும் அதிகரித்திருக்கிறது. எங்கே எப்போது என்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். வீட்டிற்குள்ளேயே கூட பெண்கள் தனியாக இருக்க பயப்படுகிறார்கள்.

பாலியல் பலாத்காரம் செய்து இரும்பு ராடை செருகுவது, மார்பகங்களை அறுத்தெரிவது, பிறப்புறுப்பில் பூச்சிகளை விடுவது, இரும்பால் அடித்துக் கொல்வது போன்ற வக்கிர நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்? எது இவர்களை இவ்வாறு வெறிபிடித்த மிருகங்களாக்கியிருக்கிறது?

உயர்ந்தவன் தாழ்ந்தவன், மேலானவன் கீழானவன் என்கிற ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக கொண்டது பார்ப்பனிய இந்து மதம். இந்த மதம் தான் நம் மக்களை கூறு கூறாக பிரித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆணாதிக்கத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் போற்றி பாதுகாக்கும் பார்ப்பன இந்து மதத்தில் ஜனநாயகம் என்பது துளியும் கிடையாது.

சிறு வயது முதலே குழந்தைகளை பாலினப்படி ஆண் பெண் என்று பிரித்து வைக்கிறது.

இரு பாலரையும் சேர்ந்து விளையாடக் கூட அனுமதிப்பதில்லை. பெண்கள் வயதுக்கு வந்த பிறகு வாசற்படியை தாண்டவிடுவதில்லை.

ஒருபுறம் பெண்களை மூடி மறைத்து வைப்பதன் மூலம் பாலியல் விசயங்களில் பிற்போக்குத்தனத்தையும் அறியாமையையும் ஏற்படுத்துகிறது. மறுபுறம் பெண்களை ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அடிமைகளாக வைத்திருக்கிறது. சிறு வயது முதலே இரு பாலரையும் தனித்தனியே பிரித்து வளர்ப்பதால் பெண் மீது ஆணுக்கும் ஆண் மீது பெண்ணுக்கும் ஒருவகையான ஈர்ப்பும், குறுகுறுப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இயற்கையான உணர்ச்சிகளுக்கெதிரான இத்தகைய கட்டுப்பாடுகள் திருட்டுத்தனமான தவறுகளுக்கு வழிவகுக்கிறது. வீட்டிற்குள் பெண்ணுக்கு இழைக்கப்படும் அடி, உதை, சித்திரவதை, பாலியல் கொடுமைகள் போன்ற அநீதிகள் மரபு, கலாச்சாரம் என்கிற பெயரில் நியாயப்படுத்தப்பட்டு சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. பார்ப்பன இந்து மதத்தின் இத்தகைய பழக்க வழக்கம் காரணமாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய சமூகம் பாலியல் விழிப்புணர்வற்றதாகவும், வறட்சி கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது.

இந்நிலையில் 1990-களுக்கு பிறகு உலகமயமாக்கல் கொள்கை நம் நாட்டில் அமலுக்கு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் உலகமயமாக்கல் வாரி வழங்கிய வாய்ப்புகள் அதுவரை கட்டுப்படுத்தப்பட்டு கிடந்த உணர்ச்சிகளை மொத்தமாக கட்டவிழ்த்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இணைய வசதி பரவலானது. அதுவரை இன்டர்நெட்டை கம்ப்யூட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை மாறி ஸ்மார்ட் போன் வந்த பிறகு அனைவரின் கைகளிலும் இணையம் வந்தது. அதுவரை எவையெல்லாம் மறைத்து வைக்கப்பட்டதோ, மறுக்கப்பட்டதோ அவற்றை எல்லாம் விதவிதமாகவும் வெறித்தனமாகவும் நுகரும் வாய்ப்பு கிட்டியது.

பின்தங்கிய இந்திய சமூகத்தில் மூடிமறைத்து கட்டுப்பாடு போடப்பட்டிருந்த அனைத்தையும் அப்பட்டமாக விலக்கிக்காட்டியது உலகமயமாக்கல். பிறப்பிலேயே பெண்களை இழி பிறவிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு, பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பண்டங்களாக கருதும் ஏகாதிபத்திய பண்பாடு கனகச்சிதமாக பொருந்தியது. வறண்ட பாலையில் நீரைக் கொட்டினால் உறிஞ்சிய மறுகணமே வறண்டு போவதை போல இந்திய சமூகத்திற்கும் தாகம் தீரவில்லை.

ஏகாதிபத்திய உலகமயப் பண்பாடு நுகர்வு வெறியையும், பாலியல் வெறியையும் தூண்டிவிட்டு மனிதனை மிருகமாக்கியிருக்கிறது. பொருட்களை மட்டுமே வாங்கு புதிது புதிதாக வாங்கு என்று தூண்டுகிறது. பொருட்களை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக் கொடுக்கிறது. விரும்பியதை அடைய எந்த எல்லைக்கும் செல் என்று துரத்துகிறது. அனைத்திலும் கட்டுக்கடங்காத நுகர்வையும், நிறைவின்மையையும், அடங்காத தாகத்தையும், வெறித்தனத்தையும் ஊட்டிவிடுகிறது. விரும்பிய பெண்ணை அடைய எதையும் செய்யலாம். ஏற்க மறுத்தால் தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது, உயிரோடும் இருக்கக் கூடாது என்று ஒருவனை கொலைகாரனாக்குகிறது.

ஒருபுறம் தனியார்மய, தாராளமய கொள்கை பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பாலியல் பொருளாக்கி வக்கிரங்களை தூண்டிவிடுகிறது. மறுபுறம் நிலவுகின்ற சாதி, மத ஆதிக்கம் நிறைந்த பிற்போக்கு இந்து சமூகம் பெண்ணை அடிமையாக்கி வைத்திருக்கிறது. ஒருபுறம் உலகமயம் தூண்டிவிடும் வரம்பற்ற பாலியல் சுதந்திரம், பாலியல் உறவு. மறுபுறம் கற்பு, ஒழுக்கம், அடக்கம், குடும்பக் குத்துவிளக்கு என்கிற பார்ப்பன இந்துமதப் பண்பாடு என்கிற இரண்டு ஈட்டிமுனைகளும் பெண்களை பதம் பார்க்கின்றன. இவை இரண்டும் இணைந்த கலவை கலாச்சாரம் தான் இது போன்ற குற்றவாளிகளை உருவாக்குகிறது. எனவே இத்தகைய குற்றங்களுக்கு முதன்மைக் காரணம் நுகர்வுவெறியும் பார்ப்பனீயமும் தானே தவிர தனிநபர்கள் அல்ல. அவர்கள் அம்பு தான் அதை எய்துவிடும் வில்லாக இருப்பவை இவையே.

தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கை அமலுக்கு வந்த பிறகு கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், ஒழுக்கம், சமூக அக்கறை, நேர்மை, நியாயம் அனைத்தும் முட்டாள் தனமானதாகவும், சுயநலம், இலாபவெறி, நுகர்வுவெறி, குடிவெறி, வரைமுறையற்ற இன்பம், சொகுசு வாழ்க்கை, பாலியல் வக்கிரங்கள், போதை மருந்து, கிரிமினல் குற்றங்கள் போன்ற சமூக குற்றங்கள் தவறானவை அல்ல என்கிற கருத்தும் பரப்பப்படுகிறது. மொத்த சமூகமும் கொலை, கொள்ளை, வழிபறி, ஆட்கடத்தல், கிரிமினல் குற்றங்களை தொழிலாக கொண்ட விலங்குத்தனமான காடுபோல மாறியிருக்கிறது.

தொடர்ச்சியாக நடந்து வரும் இத்தகைய கொலைகளும், கொள்ளைகளும் இந்த சமூக அமைப்பை பண்பாடற்ற விலங்கு நிலையை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இதை இப்படியே அனுமதித்தால் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தவறு செய்யாத அப்பாவிகளுக்கும் கூட வெட்டு விழலாம். சாலைகளில் யாரும் நிம்மதியாக நடக்க முடியாது. எங்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என்று மொத்த சமூகமும் கிரிமினல் குற்றக்கும்பல்களின் பிடிக்குள் சென்றுவிடும்.

இவற்றை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் நிலவுகின்ற அரசால் இவற்றை தடுக்க முடியவில்லை, இனிமேலும் தடுக்க முடியாது. ஏனெனில் இது ஆளத் தகுதியற்ற அரசாகிவிட்டது. பல குற்றங்களில் அரசே குற்றவாளிகளுக்கு உடந்தையாகவும் இருக்கிறது. போலீசு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பல வழக்குகளில் குற்றவாளிகளின் கூட்டாளிகளே போலீசுதான். நீதிமன்றத்தின் யோக்கியதை என்ன? குற்றவாளிகளான நீதிபதிகள்தான் பிற குற்றங்களையே விசாரிக்கின்றனர். தம்மைப் போன்ற சக குற்றவாளிகளுக்கு சலுகை காட்டி விடுவிக்கவும் செய்கின்றனர். எனவேதான் இந்த அரசமைப்பின் கீழ் எந்த பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்கிறோம். எனில் தீர்வு என்ன? அறிந்து கொள்ள வாருங்கள் விவாதிப்போம்.

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை – 95518 69588

  1. //சுவாதி கொலையை பொருத்தவரை யார் கொலையாளி என்பது தான் முதலில் பரபரப்பாக பேசப்பட்டது. பிறகு ராம்குமார் என்கிற இளைஞரை பிடித்து வந்து இவர் தான் கொலைகாரர் என்று கூறியதும் பரபரப்பு அடங்கியது. ஆனால் ராம்குமார் உண்மையான குற்றவாளியா என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன//

    ஆமாம் தலித்துகள் சுயமாக கொலை போன்ற காரியங்களை செய்ய துனியமாட்டார்கள்.

  2. என்னய்யா உளருர உனக்கு ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல இவ்வளவு காண்டு உன் வீட்டு சொத்த அபகரிச்சான இல்ல என்னிக்கவது செமத்தியா வாங்கினியா அவங்கட்ட

  3. /பெருகி வரும் இத்தகைய சம்பவங்களால் சமூகத்தில் ஒருவித அச்சமும் பாதுகாப்புணர்வும் அதிகரித்திருக்கிறது. ……….//

    பாதுகாப்புணர்வா அல்லது பாதுகாப்பற்ற உணர்வா…? வினவு தெளிவாக விளக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க