privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கபாலி நெருப்பில்லடா கருப்புடா - மக்கள் கருத்து

கபாலி நெருப்பில்லடா கருப்புடா – மக்கள் கருத்து

-

Saravanan Savadamuthu added 2 new photos — with Shrutitv Che and 3 others.

22 hrs ·

கபாலியின் அலங்கோலங்களுக்கு யார் காரணம்..?

jazz-companyஇந்த அலங்கோலங்களுக்கு முழு முதற் காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பெருமக்கள்தான். யார்தான் லஞ்சம் வாங்கலை.. யார்தான் ஊழல் செய்யலை என்று நமது மக்கள் என்றைக்கு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்களோ.. அன்றைக்கே இந்த சமூகம் அவலத்தை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது. இன்றைய ‘கபாலி’ வெளியிட்டூு சூழலிலும் அதுதான் நடக்கிறது.

படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமத்தை பெற்றிருப்பது ஜெயா டிவி. தமிழக தியேட்டர் உரிமத்தை பெற்றிருப்பது ஊரை அடித்து உலையில் போடுவதில் கோபாலபுரத்தை மிஞ்சிய சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஜாஸ் நிறுவனம். பிறகென்ன கேட்கவா வேண்டும்..? அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அரசு நிர்வாகங்கள் வளைந்து கொடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றன.

அரசாங்க முத்திரையோடு அமைச்சரின் PA விடமிருந்து 10 கபாலி டிச்கெட் கேட்டு அபிராமி தியேட்டர் ஊழியருக்கும் செல்லும் கடிதம்
அரசாங்க முத்திரையோடு அமைச்சரின் PA விடமிருந்து 10 கபாலி டிச்கெட் கேட்டு அபிராமி தியேட்டர் ஊழியருக்கும் செல்லும் கடிதம்

‘தெறி’ படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் சில தியேட்டர்களில் அதிரடி சோதனை நடத்தி ‘கூடுதல் கட்டணங்களை வசூலித்தால் தியேட்டர் சீல் வைக்கப்படும்’ என்று சில மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்தார்கள்.

‘விடியற்காலை ஷோ ஓட்ட வேண்டும்’ என்று ‘தெறி’ படத்தின்போதுஅனுமதி கேட்ட தியேட்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கேள்வி கேட்டபோது ‘காவல்துறையினரை அவ்வளவு விடியற்காலையில் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க முடியாது’ என்றது அரசு நிர்வாகம்.

ஆனால் இன்றைக்கு அந்த சூழல் அப்படியே நேர்மாறாக இருக்கிறது. தியேட்டரிலேயே டிக்கெட் கட்டணத்தையே குறிப்பிடாமல் நுழைவுச் சீட்டை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது உலகத்திலேயே வேறெங்கும் நடக்காத ஒரு அதிசயம் இது.

எந்த வகையிலும் அரசு அனுமதியில்லாமல் தியேட்டர் கட்டணங்களை உயர்த்துவது நிச்சயம் சட்ட விரோதம்தான். யாரோ காசு கொடுக்கிறான் என்றாலும் அதனை அனுமதிப்பதும் ஊழல்தான்.

ஒட்டு மொத்தமாக 3 நாளைக்கான காட்சிகளை பலம் வாய்ந்த கும்பல்களின் கைகளில் கொடுத்து அவர்களிடமிருந்து டிக்கெட் விலையைவிடவும் 10 மடங்கு தொகையை வசூலித்திருக்கிறார்கள் என்றால் இதைவிட மிகப் பெரிய ஊழல் வேறென்ன இருக்க முடியும்..? கொடுக்கிறவன் இருக்கும்வரையிலும் லஞ்சமும், ஊழலும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

இப்போது 120 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500 ரூபாய்க்கு தங்களிடமிருக்கும் பணத் திமிரினால் அள்ளி வீசி டிக்கெட்டை வாங்கியிருக்கும் இதே உத்தம நண்பர்கள்தான், ஒரு போலீஸ்காரர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் அதை செல்போனில் போட்டோ எடுத்து முகநூலில் போடுவார்கள்.

படம் வெளியீடும் தேதி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே ஆல்பர்ட் தியேட்டரில் ரிசர்வ் செய்ய்ப்பட்டது.

 

இன்றைக்கு அவர்கள் இந்தக் கபாலிக்கு செலவழித்திருக்கும் ஒவ்வொரு ரூபாயும், சக சாமான்ய மக்களு்ககு எதிராக அவர்கள் வீசியிருக்கும் விஷ அம்புகள்தான்..!

யார் இதைக் கேட்பது..? இதைச் செய்ய வைத்திருப்பதே மாநில முதலமைச்சரும், அவருடைய உடன் பிறவா குடும்பத்தினரும்தான். அவரது அனுக்கிரஹம் இல்லாமல் யாரும் இதை செய்திருக்க முடியாது..!

கொடுமை.. கொடுமை என்று கோவிலுக்கு போனால்.. அங்கேயும் ஒரு கொடுமை தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடியது என்பார்களே.. அது இதுதான்..!

தியேட்டர் கட்டணங்களில் இத்தனை ஊழல்களை திரைப்படத் துறையினரே செய்துவிட்டு, ‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்’ என்றும், ‘திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையத்தளங்களை செயல்படவிடக் கூடாது’ என்றும் சொல்வதெல்லாம் தனக்கு வந்தால் மட்டுமே அது ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தால் அது தக்காளி ரசம் என்பதுதான்..!

120 ரூபாய் டிக்கெட்டை கொடுத்துவிட்டு “படம் பார்க்க வா..” என்று சொல்லியும் கேட்காமல், திருட்டு டிவிடியில் படம் பார்த்தால் அது தவறு என்று சொல்வதுகூட ஒரு விதத்தில் நியாயம்.

ரீலிஸ் தேதிக்கு முந்தைய நாளில் இரவு 11 மணியிலிருந்து திரையிடப்பட்டது.
கனடாவில் விடிய விடிய கபாலி – ஏமாறுவதில் உள்நாடு வெளிநாடு வேறுபாடில்லை.

ஆனால் அநியாயமாக 1000 ரூபாய்க்கு டிக்கெட் விலையை ஏற்றி வைத்துவிட்டு “நீ திருட்டு டிவிடியில் பார்க்காதே…” என்று சொல்வது எந்த வகையில் நியாயம்..?

இங்கே யார் நீதி, தர்மம், நியாயமெல்லாம் பேசுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது..!

தயாரிப்பாளர் தாணுவும், ரஜினியும் பிலாத்து மன்னனை போல “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கை கழுவ முடியாது.. இந்தப் பாவத்தில் அவர்களுக்கும் பெரும் பங்குண்டு..

இ்பபோதுவரையிலும் அவர்களிடமிருந்து ஒரு செய்திகூட வரவில்லை. ஒரு தடுப்பாணைகூட வரவில்லை. ஆக.. இந்தக் கோல்மாலில், ஊழலில், முறைகேட்டில் அவர்களுக்கும் மறைமுகமான ஒப்புதல் உண்டு என்பதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை நோக்கிய பாதை அல்ல.. அழிவை நோக்கிச் செல்லும் பாதை.. பணம் படைத்தவனும், அதிகாரம் படைத்தவனும் மட்டும்தான் கோடம்பாக்கத்தில் இனிமேல் நீடிக்க முடியும் என்பதை இந்தக் ‘கபாலி’ சுட்டிக் காட்டியிருக்கிறான்..!

இப்படி படத்திற்கு முன்பேயே விமர்சனம் எழுத வைத்தது ஒன்றுதான், இந்தப் படத்தின் மூலம் சாமான்யனுக்கு கிடைத்திருக்கும் லாபம்..!

ஜெய்ஹிந்த்..!
‪#‎Kabali ‪#‎Neruppuda ‪#‎Kabalida ‪#‎KabaliMovie ‪#‎Rajini ‪#‎Thanu ‪#‎PaRanjith ‪#‎CinemaTheatreTicket ‪#‎JazzCinemas ‪#‎VCreations ‪#‎SasikalaFamily ‪#‎Jayalalitha ‪#‎Ilavarasi ‪#‎Vivek ‪#‎TNGovt ‪#‎HouseFull ‪#‎BlackTicket ‪#‎Corruption

_________________________

Raja Rajendran

July 19 at 8:54pm ·

………………

வெற்றி தியேட்டரில் காலை 4 மணி முதல் கபாலி படம் திரையிட தொடங்கியது
வெற்றி தியேட்டரில் காலை 4 மணி முதல் கபாலி படம் திரையிட தொடங்கியது டிக்கெட்டில் கட்டணம் இல்லை………………

இந்த கபாலிகர்கள் ஆடும் ஆட்டத்தைக் காண வேண்டுமே ? உச்சகட்ட அருவருப்பு.

அனைத்துக் கார்ப்பரேட் கம்பெனிகள், தகவல் தொழில்நுட்ப எம் என் சிக்கள்……..தங்கள் கைகளில் கபாலி வெளியாகும் மிகத் தரமான தியேட்டர்களின் டிக்கெட்டுகளை கைகளில் வைத்துக் கொண்டு, டிக்கெட் விலையைக் காட்டிலும் பல மடங்கு விலை உயர்த்தி, தம் தொழிலாளர்கள் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது, ஒரு சில தலையில் அடித்துக் கொண்டு விலையில்லாமல், விடுமுறையும் கொடுத்து தங்கள் ஊழியர்களை அப் படத்திற்கு அனுப்பி வைக்க இருக்கிறது.

Cognizant கம்பெனி 200 டிக்கெட்டுகளை ரூ.500 விலையில் AGS கம்பெனியிடம் வாங்கியதற்கான ரசீது.
Cognizant கம்பெனி தங்கள் ஊழியர்கள் வேலை நாளாக இருந்தாலும் கபாலி படம் பார்ப்பது அவசியம் என்பதால் AGS கம்பெனியிடம் 200 டிக்கெட்டுகளை ரூ.500 விலையில் வாங்கியதற்கான ரசீது.

என்ன கொடுமை என்றால், இப் பொழுது வரை தன் தலைவன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத விரக்தியைக் கூட ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு, இதெல்லாம் தலைவனுக்கு பெருமை என அவன் ரசிகன், நொடிக்கு ஒரு ஸ்டேடசாய்ப் போட்டுக் கொண்டு இருக்கிறான் நெருப்புடா என்று. அட வேகாத பருப்பே ?

ஏரோப்ளேனில் கபாலி படத்தை அந்தக் கம்பெனிகாரன் ரஜினி ஃபேன் என்பதற்காகவா வரைந்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? அது ஒரு நூதன விளம்பரம் அய்யா. அதற்கு சில லட்சங்களை அந்த ஃப்ளைட் கம்பெனிக்காரன் தயாரிப்பாளரிடமோ, விநியோகிஸ்தர்களிடமோ பெற்றிருப்பார்.

சரி, நாம அந்த பிரீமியம் டிக்கெட்டுக்குள்ள போய்டுவோம்.

சென்னை நிலவரப்படி எல்லா தியேட்டர் டிக்கெட்களையும் படச் சம்பந்தப்பட்டவர்களே முதல் மூன்று நாட்களுக்கு பல்க்காக பதுக்கி வைத்துவிட்டதாக பரவலான குற்றச் சாட்டு எழுந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.

இனி அது கள்ளத்தனமாய் 500 முதல் 2000 வரை, படம் சக்சஸ் என்றால் 5000 வரை கூட விற்கப்படப் போகிறது, ஆனால் அரசுக்கு அதே 30 ரூபாய் மட்டுமே ஒரு டிக்கெட்டுக்கு வரியாக கிட்டும்.

யார் ஏமாளி ? அரசா ? சாமானியர்களான நாமா ?

முதலில் இது ரஜினி படம் அப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுவதை தணியுங்கள். அல்ரெடி வேதாளம் அஜித்துக்கும் இதே நிகழ்ந்து, இனி அஜித் படங்கள் எல்லாவற்றுக்கும் இதே நிகழப் போகிறது. ரஜினியை போலவே அஜித்தும் எப்போதும் தொடர்பு எல்லைகளுக்கு வெளியே இருப்பவர்தான், கேட்க நாதி ஊடகங்களுக்கு கூட இருக்காது 🙁

இப்படி விட்டுக்கொண்டே இருந்தால், அடுத்து விஜய், சிவ கார்த்திகேயன் என்று அந்தக் காட்டேரிகள் தொடர்ந்து நம்மைச் சுரண்டத்தான் செய்யப் போகின்றன.

கபாலியின் கோமாளிகள்
கபாலியின் கோமாளிகள்

நண்பர் ஒருவர் அழைத்தார். மச்சி, ஈகா தியேட்டர்ல டிக்கெட் இருக்காமாம், ஆனா ஒரு டிக்கெட் 1500 ரூபாயாம். எவ்வளவு லாபம் எனப் பாருங்கள். தியேட்டருக்கு வெளியே ப்ளாக் விற்பவர்கள் டபுள் ரேட் சொன்னாலே அது அநீதி என்று சக ப்ளாக் விற்பவர்களே சண்டை போடுவதைக் கண்டிருக்கிறேன்.

எத்தனை முறை பார்த்தாலும் அவர்களின் தரம் சற்றும் உயர்ந்திருக்காது, அவர்களை அந்த நிலையிலேயே உயராமல் பார்த்துக் கொண்டிருக்கும் அருகாமை காவல் நிலையங்கள்.

இன்று அந்தக் கலாச்சாரம் முற்றிலும் அருகிப் போய்விட்டது, ஆனால் இந்த நவீன கள்ள டிக்கெட் விற்பனையாளர்களுக்கு சிறிதேனும் பிசினஸ் எதிக்ஸ் இருக்கிறதா எனப் பார்த்தீர்களா ?

ஒரு டிக்கெட்டுக்கு 1000 முதல் 1300 வரை லாபம் வேண்டுமாம். இப்படி பத்து டிக்கெட் விற்றால் 10000 – 13000 வரை லாபம் என்றால்………..பல லட்சம் டிக்கெட் விற்றால் எத்தனை சைபர்களை சேர்ப்பது என கற்பனை செய்து பாருங்கள்.

இதுதான் சுரண்டல், அப்பட்டமான கொள்ளை.

rasigan
கபாலி படத்தின் ரசிகர் ஷோ பார்க்க முடியாமல் போன பூம்புகார் ரஜினி ரசிகர் மன்றம் இப்படத்தை பார்க்க விரும்பவில்லை என அறிவித்துள்ளது

மலை, மணல், ஏரி, காடு, சுகாதாரம், கல்வி என்று கொள்ளையிட்ட கூட்டம் நம் கேளிக்கை மீதும் கை வைத்து விட்டதே ?

கபாலிக்காக எல்லாச் சட்டங்களும் வளைந்து கொடுக்கும், இயைந்து குனிந்து கும்பிடு போடும்.

முதல் மூன்று கோல்டன் நாட்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளைத் தாண்டி எந்த ஆன்லைன் கொம்பர்களுக்கும் டிக்கெட் கிட்டாது.

ரசிகமன்றத் தலைவர்களுக்கு எலும்புத் துண்டுகளாய் சில ஊரோர பாடாவதி திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை வீசியெறிவார்கள்.

ரஜினிக்காவா இப்படி நடைபெறுகிறது ?

இல்லை ஆகப் பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்ட ரஞ்சித்திற்காகவா ??

ஒருவேளை விளம்பரம் செய்வதில் மன்னரான தயாரிப்பாளர் தாணுதான் இந்த தில்லாலங்கடி செய்கிறாரோ ???

படத்தின் மொத்த விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் நிறுவனம் அம்மாவின் வலதுகரத்தின் இரு கரங்களாக இருப்பதால் இருக்கலாம் !

கபாலி கோமாளிகள்
சென்னை காசி தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் – ஊடகங்களுக்கு காத்திருக்கிறார்கள்.

டிக்கெட் விலை 1000 என்ன 10000 கொடுத்தும் கூட முதல் நாளில் பார்த்தே ஆகிவிட வேண்டும் என்கிற வெறியை உங்களுக்குள் திணிக்க வேண்டிய வேலைகளைப் பார்க்க பலர் உள்ளனர்.

மகிழ்ச்சி.

தலைவர் படம் என்றால் அப்படித்தான் இருப்போம், அப்படித்தான் செலவழிப்போம் என நாம் பொங்கவும் செய்வோம்.

பொங்க வேண்டும், அப்பத்தான் ஏழை கம்பெனி ஜாஸ் சினிமாக்கள் வீட்டில் உலை பொங்கும்.

என்ன…….. விழாக்காலங்களில் ஆம்னி பஸ் டிக்கெட் கொள்ளை, ஸ்வீதா ரயில் டிக்கெட் விலை, ப்ரீமியம் தட்கால்களுக்கும் இதே போல் பொங்குவோம்,

தலையில் இப்படி கொள்ளியை வைத்துச் சொறிந்துக் கொள்ளும் நம்மைப் பார்த்து கபாலி நெருப்புடா என்று அப்போது சரியாகக் கத்துவார்

________________

நாஞ்சில் மனோ

5 hrs ·

கபாலி படம் பார்த்த சில போராளீஸ் உன்மத்தம் பிடிச்சாப்ல இருக்குறது தெரியுதா ?

அப்போ என்னமோ நடந்துருக்கு, நான் படத்தை சொன்னேன்.

_________________________

Albert arockyaraj 10 hrs ·

ரொம்ப நாளா இந்த சினிமா விமர்சனம் எல்லாம் எழுதாம இன்னைக்கு கபாலி முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு எவ்வளவோ எழுதனும்ன்னு நினைச்சுகிட்டு போனேன் அம்புட்டுலயும் மன்னல்லி போட்டுட்டான் இந்த ரஞ்சித் பய…

ஒரு கட்டத்துல உண்மைலேயே நாம படத்துக்கு தான் வந்திருக்கோமான்னு எனக்கே சந்தேகமாகிடுச்சு தியேட்டர்ல அப்படி ஒரு மயான அமைதி,

படத்தை பத்தி சொல்லனும்னா ஜெயில இருந்து வருவாரு கொலை பன்னுவாரு குடும்பத்த கண்டுபுடிப்பாரு கொலை பன்னுவாரு அம்புட்டு தான்..

மெட்ராஸ் படத்துல நடிச்ச அத்தனை பேரும் நடிச்சிருக்காங்க நடுவுல ரஜினி கெஸ்ட் ரோல் பன்னிருக்காரு..

படம் ஏதோ டான் படம்ன்னு சொல்லி எடுத்து அதுல புரட்சிய தெளிக்கிறேன்னு எதையோ தெளிச்சிருக்காரு ரஞ்சித்து கண்டிப்பா இன்னொரு பிரச்சனைய கிளப்புவானுக…

downloadநீ என்ன ஆண்ட பரம்பரையா நீங்க மட்டும் தான் ஆளணுமான்னு வில்லன் சொல்றதும்

நான் ஆண்ட பரம்பரையில்லைடா ஆளுவேன்டான்னு ரஜினி பதில் சொல்றதும் ஆகா ஆகா என்ன புரட்சி…

ஆனா இந்த வசனம் எதுக்கு அந்த இடத்துல சம்பந்தமே வந்துச்சு? யோசிச்சு யோச்சிச்சு பாக்குறேன் ஒன்னும் புடிபடல…

இப்படி புரட்சி கருத்துகள பேசுனதாலயோ இல்லை படம் ஊத்திக்கும் அம்புட்டு டிஸ்ட்ரிபியுட்டரும் வீட்டு வாசல வந்து உட்க்காந்திருவாங்கன்ற தாலையோ தான் போல தலைவரு அமெரிக்கால போய் உட்காந்துகிட்டாரு…

காமடி இல்லை… பாட்டு ஏற்கனவே நிறைய கேட்டதால புடிச்சிருந்துச்சு… ஒரு நல்ல ஸ்டன்ட் இல்லை… எந்த நடிகருமே ஒழுங்கா நடிச்ச மாதிரி தெரியல… ரஜினுக்கு வயசானது ரொம்ப தெரிஞ்சது… எந்திரன்ல இருந்த ஒரு எனர்ஜி இல்லை…

மொத்ததுல ரஞ்சித்து ரஜினிய வச்சு செஞ்ச்சிருக்கான்… இனி பேஸ்புக் நண்பர்கள் வச்சு செய்யலாம்… மகிழ்ச்சி….

Shankar A

20 hrs ·

நெருப்புடா….
முடிஞ்சா நெருங்குடா.
ஜாஸ் சினிமாஸ்டா
ஜெயலலிதா டா

Editör Gowtham

July 16 at 2:57pm ·

‪#‎TamilRockers கபாலியில் ரஜினிக்கு அடுத்து பெரிய ட்ரெண்டாக சில நாட்களாக ஒடிக்கோண்டிருக்கிறது… இதில் ஆச்சர்யம் ‪#‎WeSupportTamilRockers என்ற ஹேஷ்டேக் முலம் அவர்களுக்கு ஆதரவும் பெருகியிருப்பது…

இதற்கு முக்கிய காரணம் கபாலி டிக்கெட்களுக்கான விலையாகத்தான் இருந்திருக்க வேண்டும்…

கேரளத்து படங்கள் மட்டும் தலைகீழாய் நின்று தண்ணி குடித்தாலும் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு கிடைப்பதில்லை.. அதன் சூட்சமமும் புரியவில்லை

Kabilan Krs

July 16 at 5:50pm ·

தம்பு கருத்துக்கு 1000likes அப்பால கேரளாவுள்ள எல்லா தியேட்டரிலும் அரசு அனுமதித்த கட்டணம் தான்.. 50, 80 அதிகபட்சம் கொச்சினில் 110 என்று கேள்வி..
இவனுங்கள்ள தியேட்டரில் கவுண்டரில் முறையாக அரசு அனுமதித்த டிக்கெட்ட விற்றக சொல்லு… மாட்டாங்க..

சத்தியம் மற்றும் நகர்புறத் தியேட்டரிகளிளேயே காம்போ விற்க சொல்லி.. வர்புற்தல் வேறயாம்..

என்னத்த சொல்ல…

Kabilan Krs

July 15 at 11:52am ·

அதிகாரபூர்வமற்ற தகவல்கள்…
கபாலி 21 மாலையே சென்னையில் வெளியாக இருக்கிறது. முதல் காட்சிக்கான டிக்கெட் கட்டணம் நான்கு இலக்கங்களில்.. அதனை தொடர்ந்து 22 அதிகாலை 4மணிக்கு அடுத்த காட்சி டிக்கெட் விலையோ குறைந்தது 500 ஒவயாயாம்…. எந்திரனில் ஆரம்பித்துவைத்து கொலை ஜாரி கொள்ளை இதிலும் தொடர்கிறது.. அதிக பணம் கொடுத்து பார்த்துட்டு படம் நல்லா இல்லேன்னா திட்டுன்னா…. என்னமோ போடா மாதவா..

Rajesh Kumar குப்புற படுக்கறதுல கூட குறியீடு ஆராயும் கோஷ்டி எல்லாம் வீக்கெண்ட்லதான் படத்துக்கே போகுது.. அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம்..

Like · Reply · 4 · 43 mins

தியேட்டரில் காத்து கிடக்கும் ஊடகங்கள் மற்றும் ரசிக பட்டாளம். சென்னை காசி தியேட்டரில் ரஜினி ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லை என்பதால் பேனர்களை இறக்கி கிழித்தனர், ரசிகர்கள். அத்தனை டிக்கெட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகையில் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லையாம்! இந்த இடத்தில் என்.டி.டி.வி போன்ற தில்லி சேனல்கள் காத்துக் கிடந்த காட்சியும் காணக்கிடைத்தது.

துக்கக் குறிப்பு: கபாலி ‘அருள்’ பாலித்தால் நமத்துப் போன கபாலி திரைப்படம் குறித்த விமரிசனம் இன்றே வெளியிடப்படும்.

  1. சினிமா சினிமா சினிமா நாட்ட சீரழிக்கற சினிமா அட அண்ணாமலை நாட்டாமை…..நேத்து டிவில ஒரு பக்கி சொல்லுது எனக்கு கடவுள்நம்பிக்கை இல்லை அனா தலிவர் தான் என் கடவுள் ,அப்புறம் இன்னொறு பக்கி சொல்லுது 2000 ரூபான கூட தலிவர் படத்த பஸ்ட் சோ பாக்கனும் வக்கு இல்லாதவம் பத்து ரூபாய்க்கு பவர் படம் காமிக்கிறானுக அத போய் பாறு ….அப்புறம் இன்னொறு பக்கி தலைவர் பட முதல் சோவுக்கு 2 லச்சம் செலவு செஞ்சு டிக்கட் வாங்கி இருக்கோம் எங்க ரசிகர் மன்றத்துல இருந்து எல்லா பக்கிகளும் நீங்க சொல்லுற உழைக்கும் வர்க்கத்த சேர்ந்த பக்கிகதான் என்னமோ நீங்கதான் கூவிக்குனே இருக்கிக…

  2. Not sure what happened to the director after first 15 mins. Poor screenplay and allowing small characters to use disrespectful words in the conversation with rajini , Students interview scene is worst in the middle and during climax (dialogue is worst) , did attakathi dinesh portion is really need?,did Ranjith think about what rajini fans will expect from his movies? Rajini is a brand name in India, don’t you know how the product expectation will be? Don’t you know how to select side actors to stand along with Rajini in each frame? Is this like family politics, using all the actors whom you casted in previous movies? We cannot complain only Ranjith in this part, such a experienced Superstar should also take the responsibility of this. When each technician in that movie comes out and says we cried on the first shoot/day when they met rajini clearly shows they admired him but they let him down in their work. I am rajini fan. But surely Ranjith and Rajini disappointed us. May be Directors are having restrictions (considering Rajini age) and expectation (from his fans) becomes a tough job in making a movie casting rajinikanth. Sorry Superstar its time to retire. Looks like more spoilers than good product. Its not about producer and actors gain, viewer should be happy otherwise money flow will be stopped at your end. This kind of business will end up in taking money from more number of lower end (distributors,theater owner, audiences) and making only few members like Producer and actor rich. This will end up in more issue to Tamil film industry. magizhchi.

  3. தமிழ் சினிமா வித விதமான வேடம்,ஒளி,ஒலி ,பாவனையென கடந்து போய்,இவர் இப்படித்தான் ,இது இப்படித்தானென்ற தோற்ற மயக்கங்களை ஏற்படுத்தி அதை நம்புகிற மனநிலையை உண்டாக்கி அதை நிலைபடுத்தும் பாசாங்கில் ஓங்கியடித்து , அவசியமானதொன்றை அழுத்தமாக சொல்லியுள்ள கபாலி திரைபடம் தமிழ் சினிமாவின் கருத்தியல் தலத்தில் அவசியமான பாதையை உருவாக்கியுள்ளது.
    அர்த்தமுள்ள படம்.

    தோழர் Karan Karki
    https://www.facebook.com/jdkarankarki

  4. திருநெல்வேலி பக்கம் நெல்லையப்பன்கிற பெயர் சாதாரணம்….

    கன்னியாகுமரி பக்கம் தாணுமாலயன்கிற பெயர்….

    அப்டித்தான் மெட்ராஸ்ல கபாலிங்கிற பெயரும்….

    இதெல்லாம் அந்தப் பகுதிகள்ல இருக்கிற பிரபலமான கோவில் மூலவரின் பெயர்களே தவிர குறிப்பிட்ட இனத்தவர் பெயர் அல்ல…

    நம்பியாரு, டேய் கபாலின்னு சொன்னதால மட்டுமே கபாலிங்கிற பெயர் ஒடுக்கப்பட்டவர் ஆகிடாது…. முன்னாடியே ஒருமுறை எழுதியிருந்தேன்.. ஆண்டைங்கிற வார்த்தை, காசுக்கு கொழுப்பெடுத்த பணக்கார பயலுங்களைக் குறிக்கிற வார்த்தையே தவிர, எந்த இனத்தையும் குறிப்பிட்டு சொல்வதல்ல… இந்த ஆண்டைங்க எல்லா ஜாதிலயும் இருப்பாங்க… எல்லா ஜாதிலயும்…

    கபாலியை ஏழை பணக்காரன், ஒடுக்கப்பட்டவன், அவனை பயன்படுத்திக்கொள்பவன் என்ற பார்வையில் பார்த்ததால் மட்டுமே படம் எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்தது…

    அதை விட்டுட்டு, கபாலி கேரக்டர் திருமாவைக் குறிக்குது, கூட வர்ற ஜான் விஜய் கேரக்டர் ஆளூர் ஷாநவாஸைக் குறிக்குதுன்னு யாராவது குறியீடு சொல்ல ஆரம்பிச்சீங்கன்னா, நான் இந்த பின் நவீனத்துவ முற்போக்கு சொக்காவைக் கழற்றி போட்டுட்டு, சைடு நவீனத்துவ கோட்டை எடுத்து மாட்டவேண்டியிருக்கும்…. ‪#‎நெருப்புடா‬… ‪#‎மகிழ்ச்சி‬…

    https://www.facebook.com/nanjilanad?fref=nf

  5. கேள்வி : ரஞ்சித் மீது தினமணி பத்திரிகை சாதிய வன்மத்தைக் கொட்டியுள்ளதே??

    பதில் : ஆமாம் நானும் படித்தேன். இவ்வளவு காலமாக கலைஞர் கருணாநிதி மீது வன்மத்தைக் காட்டிவந்த தினமணி இப்போது ரஞ்சித்துக்கெதிராகவும் தனது வன்மத்தைக் காட்டியுள்ளது.

    கலைஞர் எப்படி சாதிய வன்ம ஆட்களின் எதிர்ப்புகளை முறியடித்து தனது திறமையாலும் முயற்சியாலும் அரசியலில் எந்த கொம்பனாலும் செய்யவியலாத சாதனையை படைத்தாரோ அதேபோல ரஞ்சித்தும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி தனது துறையில் முத்திரை பதிக்கவேண்டும்…!

    https://www.facebook.com/kingofrefraction?fref=nf

  6. இந்த காட்சி படிமங்கள் உணர்த்தும் அரசியல் நுணுக்கமானது …..உண்மையை புரிஞ்ச]

    ;வன் கபாலியை கொண்டாடுவான்….உண்மையை எதிர்கொள்ள முடியாதவன்{கபாலியோட மொழியில் சொன்னா ஆண்டைகள்}தலித் அல்லாதோர் கூட்டியக்கம் கட்டி குடிசைகளை தேடி அலைவான் கொளுத்தி போட…….சரி கபாலிக்கு வருவோம்….இப்படத்தில் ஒருவசனம் வருகிறது…..காந்தி சட்டைகூட போடாமல் தன்னை ஒரு எளிய வாழ்க்கை வாழும் மகாத்மாவாக காட்டிக்கொண்டதற்கும், அம்பேத்கர் கோட்-சூட் அணிந்துகொண்டதர்க்கும் பின்னாடி ஒருஅரசியல் இருக்கு என்று கபாலி பேசுவார்….இந்த நூறாண்டுகால இந்திய சினிமாவிலும், எழுவது ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றிலும் இப்படி ஒரு உரையாடைலை நான் கேட்டதில்லை….அதுவும் கதையின் நாயகன் பேசுவதாக…காந்தி, அம்பேத்கர் என்கிற இரண்டு ஆளுமைகள் வெளிப்படுத்திய நுட்பமான அரசியலை பொது ஊடக வெளியின் விவாதத்திற்கு உட்படுத்திய இயக்குனரின் நேர்மை கவனிக்கப்படவேண்டியது…காந்தியின் துறவு{ அதாவது சட்டையை கூட ஆடம்பரம் என்று கருதி நிராகரிக்கும் மகாத்மாவின்மனநிலை} பற்றி பேசுவோம்…காந்தி தான் எப்போதும் ஏழையினும் ஏழையாக வாழ விரும்புவதாக கூறியே வந்திருக்கிறார்….என்னுடைய கேள்வி இதுதான்…ஏழ்மை என்பது வெறும் உணவோடும் , பணத்தோடும், வாழிடத்தோடும் மட்டுமே சம்மாந்தப்பட்டதா? சாப்பிட வழியில்லாமல் இருப்பதும் , உடுத்த உடைஇல்லாமல் இருப்பதும் மட்டுமே ஏழ்மையா? ஏழ்மைஎன்பது இவைகள் இருப்பது, இல்லாமல் இருப்பதை பற்றிஅல்ல…அது.அதிகாரத்தோடு சம்மந்தப்பட்டது….௨௦௦௦ ஆண்டுகளாக கூலிகளாக, கொத்தடிமைகளாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக, விலங்கினும் கீழாக நடத்தப்பட்டவர்களாக, எதிர்த்து கேள்வி எழுப்ப அனுமதிக்கபடாதவர்களாக, கல்வி மறுக்கப்பட்டவர்களாக, தங்களின் உடலுழைப்பை சுரண்டி, கையளவு நெல்மணிக்காக வீட்டின் புழக்கடை பக்கம் நிறுத்திய ஆண்டைகளின் கருணைக்காக? தன்மானம் இழந்தவர்களாக, தெருக்களில் எச்சில் துப்பினால் தண்டிக்கப்படுபவர்களாக, மாராப்புசேலை உடுத்தினால் மார்பு அருக்கப்படுபவர்களாக, இப்படி மகாத்மா எப்போதும் கைகளில் வைத்திருக்கும் பகவத்கீதை போதித்த மனுதர்ம வாழ்வியல் நெறிகளுக்கு? உட்பட்டே வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டவர்களாக , இருத்தலுக்காக மாபெரும் துயரங்களை வரலாறு நெடுகிலும் சுமந்து வந்த,,,, ஒரு சமூகம் அதிகாரத்தை விட்டு நெடுந்தூரம் தள்ளி வைக்கப்பட்ட சமூகம்…..ஏழ்மை என்பது வெறும் பணத்தோடு சம்மந்தப்பட்டதுஅல்ல…அது அதிகாரமற்று இருப்பது….அனால் காந்தி ஒருஅரசியல்வாதியாக அதிகாரத்தை கைக்கொள்ளவே விழைந்தார்….அதை சிறப்பாகவே செய்தார்….1930.களில் இந்தியாவின் மிகஅதிகாரம் படைத்தவராகவே காந்தி இருந்தார்…நீங்கள் அதிகாரம் படைத்தவராக இருந்தால் எளிமையாக வாழலாம்…ஆனால் ஒருபோதும் ஏழையாகமுடியாது…இந்த சமூகத்தில் பஞ்ச பராரிகள் அரைநிர்வாணமாக அலைவது யாருடைய கருணைக்கும் உகந்ததுஅல்ல…ஆனால் அதிகாரத்தோடு தொடர்புடைய பெரும் கோடீஸ்வரர்கள் கதர்சட்டை போட்டுக்கொண்டிருப்பதுதுதான்….இங்கு எப்போதும் பொதுபுத்தியை கவரும்…..அம்பேத்கர் ஏழையாகவே பிறந்தார் அவரிடம் துறப்பதற்குஉடமைகள் எதுவும் இல்லை….காந்தியிடம் துறப்பதற்கு நிறைய உடமைகள்இருந்தன….அதனாலே காந்தியின் துறவும் , எளிமையும் அவரை , அவரின் மகாத்மா பிம்பத்திற்கு வலிமை சேர்த்தன…..காந்தி தன்னை எளியவனாக , ஏழ்மையாக வைத்திருக்க தென்ஆப்பிரிக்காவில் பலஏக்கர் விலைநிலங்களும் , இயற்கைவழியிலான பழ மரங்களும் தேவைப்பட்டன…..இந்த எளிய வாழ்க்கைக்கு நிதி அளிப்பவர்களாக அவரின் நெருங்கிய நண்பர்கள் பிர்லாவும், பணக்காரகட்டிடக்கலை நிபுணர் ஹர்மன் அவர்களும் அவருக்கு உதவியாக இருந்தார்கள்…காந்தி தொடங்கிய பத்திரிகையின் முக்கிய புரவலர் பிர்லா..ஹர்மன் அவர்கள் ஜோகன்ச்பெர்கில் 110 ஏக்கர் நிலத்தை தந்து காந்தியின் எளிமைக்கு துணை நின்றார்….ஆனால் அம்பேத்கர் கோட்-சூட் அணிவதை எதிர்ப்பு அரசியலின்குறியீடாகத்தான் வெளிப்படுத்தினார்…அம்பேத்கர் எளிமையாக வாழ முயற்சி மேற்கொண்டதில்லை,,சுயமரியாதையோடு வாழவே போராடினார்…ஏனெனில் அம்பேத்கர் ஒருபோதும் தன்னை சுற்றி மகாத்மா பிம்பத்தை கட்டிஎழுப்ப விரும்பியவர் இல்லை..ஒருகையில் பகவத்கீதையை வைத்துக்கொண்டே சமத்துவம் பேசும் மகாத்மாவை எதிர்த்து தனது வாழ்நாளெல்லாம் கத்திமுனை கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தவர் அவர்.சுயமரியாதை என்பது நான் என்னஉடுத்த வேண்டும், என்னசாப்பிடவேண்டும் என்று நீ தீர்மானிக்ககூடாது….அது எனது விருப்ப உரிமையோடு தொடர்புடையது என்று சொல்லித்தான் தன்னை வெளிப்படுத்தினார்…..உரிமையும் தன்மானமும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்புடையவை……தனமானம் வேண்டுபவன் சாதி இழிவை ஏற்க்க மாட்டான்…..சாதிஇழிவை எதிர்ப்பவன் இந்து மதத்தை ஏற்க்க மாட்டான்…..ஆனால் காந்தி ஒரு நல்லஇந்துவாகவே இருக்க ஆசைப்பட்டார்…..அம்பேத்கர் இந்துவாக சாக விரும்பவில்லை……காந்தியின் எளிமை அவரால் அவர்மீது வலிந்து திணித்து கொள்ளப்பட்டது….அம்பேத்கரின் கோட்-சூட் மானுட சமத்துவத்திற்கான அடையாளம்….அவரின்உடல்மொழி அடக்குமுறைக்கான எதிர் வினை…..ஆண்டைகளுக்கான எதிர்ப்பு அரசியல்…..இதுதான் கபாலி மின்வைக்கும் அரசியலாக பார்க்கிறேன்….மகிழ்ச்சி……ரஞ்சித்….

    https://www.facebook.com/bala.vellore.9

  7. இன்று தினமணி கபாலிக்கு எழுதியிருக்கும் விமர்சனத்தில் வெளிப்படும் காழ்ப்பைக் கண்டபோது ரஞ்சித்தை ஆதரிப்பது அவசியம் என்று தோன்றிவிட்டது.

    https://www.facebook.com/manushya.puthiran?fref=nf

  8. கபாலி தான் ரஜினியின் படங்களில் பெஸ்ட்..
    ஓரு அரசாங்கம் செய்ய இயலாததை… ஓரு அரசியல் தலைவன் செய்ய முடியாததை
    ஓரு எழுத்தாளனால் ஆகாத சமூக அதிர்வை
    சினிமா எனும் ஆயுதத்தால் ரஞ்சித் உருவாக்கியிருக்கிறார். கபாலியின வெற்றி பணம் சார்ந்தது அல்ல. எதிர்கால தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்தது. அவ்வகையில் ரஞ்சித்தைகாட்டிலும் இப்படி ஓரு படம் வெளியாக காரணமாக இருந்த ரஜினிதான் மிகப்பெரிய பாராட்டுதலுக் குரியலர்.. இந்த தலைமுறை கல்லூரி இளைஞர்கள் குறிப்பாக கபாலி டீசரிலிருந்து அவரது வெறியர்களாக முந்தைய தலைமுறையுடன் சேர்ந்து நேற்று ஓரு நாளையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர். கலாச்சார ஆய்வாளர்கள் தமிழ் வரலாற்றில் நேற்றைய நாளை திவிரமாக பல் வேறு கோணங்களில் ஆராய வேண்டும். கடந்த சில மாதங்களாக அதள பாதாளத்தில் இறங்கி க்கொண்டிருந்த தமிழகத்தை கபாலி உயர்த்தி சமன் செய்கிறது.தொடர்ந்து ரஜினி தமிழக இளைஞர்களுக்கு அறத்தையும் சமுக மதிப்பீடுகளையும் படங்களின் வழியே மீட்டுத்தர வேண்டும்.இன்றைய தலைமுறையின் மிக அவசியமான ப்ரச்னை இது. நன்றி ரஞ்சித்.

    https://www.facebook.com/ajayanbalasitharthan?fref=nf

  9. நாலு சினிமா வந்து அதுல ஒண்ணா கபாலியும் ஓடி ஜெயிச்சா அதுக்கு பேரு வெற்றி. கபாலி மட்டுமே எல்லா தியேட்டர்லையும் ரிலீஸ் ஆகி இந்த படத்த நீ 1,000 ரூபாய் கொடுத்து பார்த்தே ஆகணும்ணு பண்ணினது கட்டப்பாஞ்சாயத்து வெற்றி. சுரண்டலின் உச்சம்.திருட்டு, அயோக்கியத்தனம்,

    https://www.facebook.com/arayanmagan?fref=nf

  10. கபாலி படத்தின் அறிமுக காட்சியில் வரும் இந்த புத்தகத்தை எழுதியவர் சத்யநாரயணா என்பவர், ஒரு கல்லூரியின் தலைமை ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர்..

    அவரது குடும்பத்தில் தாத்தா நரசிம்மையாவில் தொடங்கி, அப்பா பலைய்யா மற்றும் அவரின் வாழ்க்கையின் அனுபவங்களை நாவலாக வடித்துள்ளார்..

    தெலுங்கானாவைச் சேர்ந்த கரீம்நகர் மாவட்டத்தில் வங்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சத்யநாரயணா..

    அவர் தாத்தா காலத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வலியை வருடக்கணக்கான வடுக்களை பகிர்ந்துள்ளார்..

    இந்த புத்தகத்தில் ஒட்டுமொத்த விமர்சனமாக சொல்வது இதை படிப்பவர்களுக்கு இலட்சியம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்பதை சொல்வது..

    2011இல் இந்த புத்தகம் வெளியிட்ட பொழுது நம்ம மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவின் செய்தி தலைப்பை பாருங்கோ…

    http://www.thehindu.com/news/cities/Hyderabad/book-on-struggles-of-dalits-released/article2758758.ece

    https://www.facebook.com/al.hariharan?fref=nf

  11. “ஹிந்துத்துவ” ரஜினி அசல் “தலித்” தமிழ் படைப்பாளியான பா.ரஞ்சித்தின் படைப்பாற்றலுக்கு உடன்பட்டு நடித்ததை “தினமணி” வைத்தியநாத ஐயரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை போல… “தினமணி” வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு திரைப்படத்துக்கு எதிராக வன்மம் கக்கியிருக்கிறார்கள்…
    ( இதற்கு வணிக காரணங்களைச் சொன்னாலும், முன்பு இது போல நடந்ததே இல்லையா?.. அப்போது உங்கள் அறநெறி என்ன மணியாட்ட போயிருந்ததா?..)..

    இதற்கு எதிர்வினை நான் மட்டுமே பார்த்த “கபாலி”யை என் குடும்பம், என் அக்கா குடும்பம், திரையரங்குக்கு சென்றே வெகு வருடங்களான மூதாதையர்களையும் அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கிறேன்…

    https://www.facebook.com/profile.php?id=100003599298072&fref=nf

  12. தினமணியில் எழுதப்பட்டுள்ள இந்த எழுத்து கொடுங்கனவு; கோரக்கனவு.கனவில் கண்டிக்க முடியாது. நினைவோடு கண்டிக்கிறேன்
    http://www.dinamani.com/cinema/2016/07/24/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF—%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/article3544809.ece#.V5Sltn-BbvA.facebook

    https://www.facebook.com/ramasamy.tamil?fref=nf

  13. கலையரசன் அப்பா பேரு தமிழ்மாறன்… அவரை, வில்லன் கொன்னுட்டு, பழியைக், கபாலி மேல தூக்கிப் போட்டுடறான்… தமிழ்மாறன் பையனையும் கபாலிக்கு எதிரா திருப்பி விடறான்…. அந்த வில்லன் பேரு வீரசேகரன்….

    ஒட்டுமொத்த படத்துலயே, இதுதான் ஆகச்சிறந்த குறியீடு…..

    ரஞ்சித்து மெய்யாலுமே வேற லெவல்

    https://www.facebook.com/nanjilanad?fref=nf

  14. கபாலி…
    வழக்கம் போல பண்ணினா, வித்தியாசமா எதுவும் இல்ல வேஸ்ட்ங்கிறான்க. வித்தியாசமா பண்ணினா வழக்கம் போல இல்லேங்கிறான்க.
    உங்களுக்கு என்னதான்டா வேணும்?

    உன்கண்ணில் நீர் வடிந்தால் எடுத்த பாலுமகேந்திரா, கொடி பறக்குது எடுத்த பாரதிராஜா இருவருமே ரஜினியோடு இணைந்தபோது ரஜினி படத்தை எடுத்து தோல்வியடைந்தார்கள்.

    ரஜினியோடு இணைந்து பா.ரஞ்சித் ‘ரஞ்சித் படத்தையே’ தந்திருக்கிறார். வெற்றியடைந்திருக்கிறார். மகிழ்ச்சி !

    https://www.facebook.com/kathiresan.subramaniyam.5

  15. வழக்கமான ஜனரஞ்சகமான ரஜினி படம் அல்ல இது…. கதையினுள்ளே இழுத்து செல்லும் ரஞ்சித் தான் தெரிகிறார்… கதை, திரைக்கதை தான் நாயகன்…அதனை மேலும் வலுவூட்டி , மெருக்கூட்டி இருக்கிறார் ரஜினி..!
    இயக்குனர் ரஞ்சித்தை விமர்சிப்பதற்கு ஜாதி தான் காரணம் என்றால் ஜாதி அனைத்தையும் உடைத்திருக்கிறது… வெற்றி பெறுவது உறுதி… ரஞ்சித்திற்கு வாழ்த்துக்கள்..!

    ‪#‎கபாலி‬
    திரைப்படத்தை பார்த்த நண்பர்கள் சொன்ன விமர்சனம் இது.!

    https://www.facebook.com/susila.durai?fref=nf

  16. கபாலி பஞ்ச் வசனங்கள்
    1.காந்தி சட்டையை கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட்சூட் போட்டதுக்கும் நறைய காரணம் இருக்கு.
    2.நான் கோட்சூட் போட்டா என்ன கால்மேல கால் போட்டு உக்காந்தா உனக்கு எரியுதா…”உனக்கு எரியுதுனாநான நான் கோட் போடுவன்டா
    3.நான் ஆள பொறந்தவன் டா..
    4.இனி அடிச்சா திருப்பி அடிப்பன் டா
    ஆண்ட சாதியினர் பொடரியில் அடிக்கும் வசனங்கள்

    https://www.facebook.com/devidass.dass?fref=ufi

  17. கபாலி திரைப்படம் எத்தனை நாள் ஓடும் என்று தெரியவில்லை ஆனால் காஷ்மீரில் ஓடும் ரத்த ஆறை மறைத்து ஓடிக்கொண்டிருப்பது என்பதே உண்மை

    https://www.facebook.com/uma.gorky.5?fref=nf

  18. நான் முன்னுக்கு வரது தான்
    உன் பிரச்சனைனா
    முன்னுக்கு வருவேன்டா
    உழைப்பேன்டா
    கோட் சூட் போடுவேன்டா
    கால் மேல கால் போடுவன்டா
    உன்னால பொறுக்க முடிலனா
    சாவுடா…
    .

    ‪#‎மகிழ்ச்சிடா_கபாலிடா‬

    https://www.facebook.com/sume.sumaa?fref=nf

  19. “சார், எனது பக்கத்து வீட்டுக்காரர் ஓட்டுக்கு வந்த பணம் கபாலியிடம் போய்விட்டது! என்று சொல்லி நொந்துகொண்டார்” என்று எலக்ட்ரிசியன் நாராயணன் என்னிடம் சொன்னார்.

    https://www.facebook.com/ksradhakrish?fref=nf

  20. அவரது படங்களில் அம்பேத்கரை பேசும் ரஞ்சித் ஏன் பெரியாரை பேசுவதில்லை எனக் கேட்பவர்கள்;

    தன் படங்களில் பெரியார், வெங்காயம் என்பதை கண்டிப்பாக பேசும் சத்யராஜ் ஏன் அம்பேத்கரையும் சேர்த்து பேசுவதில்லை என்று கேட்டிருக்கிறீர்களா?

    இருவரும் இருவேறு துருவங்கள். இருவரையும் பேசுவதற்குமான இடைவெளி வெள்ளித்திரையில் வேண்டும்.

    வெகுஜன திரைப்படங்களில் இதுவரையிலும் பேசப்படாத அம்பேத்கரையும், இன்னபிற தலைவர்களையும் தன் படங்களில் ரஞ்சித் பேசவைக்கிறார். அதை அங்கீகரித்து பாராட்ட முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை, அவர் யாரை பேச வேண்டுமென்பதை கடமையாக நிர்பந்திக்க வேண்டாம்!

    https://www.facebook.com/kiruba.munusamy?fref=nf

  21. ச்ச… நீ கண்டிப்பா ஒரு ஞானி தான் கிருபா…!

    “கபாலி” படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே அந்த படத்தோட முக்கியமான வசனத்த எழுத்திருக்கியே உனக்கு எவ்ளோ அறிவு இருக்கணும். சரி விடு நம்ம நாமே புகழ்ந்துக்க கூடாது 😉
    Kiruba Munusamy
    July 18 at 8:29pm · New Delhi ·

    புரட்சியாளர் டாக்டர். அம்பேத்கர் கோட்டு, சூட்டு என மிடுக்காக உடை அணிந்ததற்கும், காந்தி சட்டை அணியாமல் கதர் வேட்டியோடு இருந்ததற்குமான அதே அரசியல் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மலக்குழியில் இறங்க மறுப்பதற்கும், ஆதிக்க ஜாதி முற்போக்காளர்கள் சாக்கடையில் இறங்கி புரட்சி பேசுவதிலும் இருக்கிறது.

    https://www.facebook.com/kiruba.munusamy

  22. என் சின்ன மகன் ரஜினியின் கபாலி படம் ரிவ்யூ பற்றிய ஒரு மெஸேஜ் ஃபார்வேர்ட் பண்ணியிருந்தான். நீளமான ஆங்கில ரிவ்யூ முடிவில் ஒற்றை வரியாக. The Emperor’s New clothes என்று இருக்க என் மகன் Wat tht means ma என்றான். நான் சிறு வயதில் வாசித்த அந்த Emperor’s new clothes கதையை சொன்னேன் .. என் மகன் சிரித்துகொண்டே He is right ma என்றான்., ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலீங்

    https://www.facebook.com/kamali.panneerselvam?fref=nf

  23. நானும்பாத்துட்டேன் நானும் பாத்துட்டேன்..

    திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் இந்த மாத திரை நிகழ்வில் அப்பாவையும் கபாலியையும் பற்றிபேசலாம் என்று நினைத்து காத்திருந்தேன்.. அனால் இன்று கபாலியை பார்தததால் ஒன்று முடிவாயிற்று..

    அப்பா மட்டும்தான் இந்த மாதத்திற்கான படம்!
    மற்றவிபரங்கள் விரைவில்..

    கபாலியைபற்றி நிறைய பேச ஆசைப்படுகிறேன்..
    என்னுடைய கூட்டத்தில் நான் நிறைய பேசுவது முறையாகாது.. யாரவது விமர்சன கூட்டம் ஏற்பாடுசெய்தால் கூப்பிடுங்களேன்.. பேசுகிறேன்..

    https://www.facebook.com/kamalabalabvijayan

  24. கபாலியாக வரும் ரஜினி, கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் எரிகிறது என்று கேட்பது சரி, அதற்காக மகாத்மா காந்தியை ஏன் ஏளனப்படுத்திக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று புரியவில்லை. – தினமணி
    விமர்சனம் எழுத சொன்னா, கலவரத்த தூண்டி உடறாய்ங்க.. கபாலியாக வரும் ரஜினி வெளிநாடு வெளிநாடா போறாரு, இதன்மூலம் மோடியை கொச்சைப்படுத்தி இருக்கிறார்

    https://www.facebook.com/karthick.mohammed.1?fref=nf

  25. 1. ப. ரஞ்சித் படமென்றால் ..இத்தனை பெரிய பட்ஜெட்டிலா ..இந்த படத்தை எடுப்பது ..??
    2. ரஜினியை மனித கடவுளாக கருதும் ரஞ்சித், ரஜினி பாணியில் படத்தை எடுக்காமல் ..ரஞ்சித் பாணி என்கிற போலித்தனம் எதற்கு ??
    3. ரஜினி தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய இயக்குனர் ரஞ்சித் அல்ல
    4. இயக்குநர் ரஞ்சித்தின் பார்வை வேறு மாதிரியானது..அது ரஜினிக்கு பொருந்தவில்லை
    5. லோ பட்ஜெட் அடித்தட்டு சிந்தனை கொண்டவர் ரஞ்சித்

    மேற்கண்டவை எல்லாம் .இன்றைய தினமணியில், கபாலி குறித்து வந்த விமர்சன வரிகள்…ஒரு தலித், ரஜினி படம் இயக்குவதையே, தாங்க முடியாத மிக பெரும் பொச்சரிப்பில் தினமணி வகையறா உள்ளதை .தெளிவாக அறிய முடிகிறது …இங்கே பல சாதி சாக்கடைகள், கபாலி திரைப்படத்தை அணுகுவதும், இதே கண்ணோட்டத்தில்தான்…பொதுவாக எனக்கு திரைபபடங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பழக்கம் கிடையாது…ஆனால்..விமர்சனம் என்கிற பெயரில். இயக்குனர் ரஞ்சித் மேல் நஞ்சை கக்கி இருக்கும் தினமணியின் செயலுக்கு, பதில் கொடுக்க ஆசைப்படுகிறேன்..

    https://www.facebook.com/soorimail

  26. 1. ப. ரஞ்சித் படமென்றால் ..இத்தனை பெரிய பட்ஜெட்டிலா ..இந்த படத்தை எடுப்பது ..??
    பதில்: ரஜினி நடிக்க வரும்போதே, 100 கோடி பட்ஜெட்டில் நடித்த நடிகரா. எத்தனை பட்ஜெட்டில் படம் எடுத்தால் என்ன ..காசு சங்கர மடத்தில் இருந்தா எடுக்கப்படுகிறது ..

    2. ரஜினியை மனித கடவுளாக கருதும் ரஞ்சித், ரஜினி பாணியில் படத்தை எடுக்காமல் ..ரஞ்சித் பாணி என்கிற போலித்தனம் எதற்கு ??
    பதில்: பேஸ்புக்கில் கிளப்பி விட்ட வதந்தியை வைத்து, ரஞ்சித் ரஜினியை மனித கடவுள் என கூறியதாக, எந்த ஆதாரமும் இல்லாமல் அதை பட விமர்சனத்தில் கூட குறிப்பிட்டு, எழுதுவது தரம்கெட்ட பத்திரிக்கை தர்மம் ஆகாதா ??..

    3. ரஜினி தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய இயக்குனர் ரஞ்சித் அல்ல
    பதில் : எப்போதோ இயக்கிய ஹிட் படங்களை ஆதாரமாக கொண்டு, கடந்த 10 வருடங்களாக குப்பை படங்களை இயக்கி வரும் பார்ப்பன இயக்குனர்கள் குறித்த மதிப்பீடு இப்படி இல்லாத போது..மெட்றாஸ் என்கிற மிகபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனரை இப்படி .. பச்சை பார்ப்பனிய செயலாக மட்டுமே தோன்றுகிறது ..

    4. இயக்குநர் ரஞ்சித்தின் பார்வை வேறு மாதிரியானது..அது ரஜினிக்கு பொருந்தவில்லை
    பதில் : ரஜினியை வழக்கம் போல, சமஸ்க்ரிதம் ,ஆன்மீகம் என பேச வைத்து இருந்தால் …இந்த அரிப்பு தினமணிக்கு ஏற்பட்டு இருக்காது …நான் கால் மேல கால் போட்டு உக்காருவேண்டா என ரஜினி பேசியதுதான் இவர்கள் கூறும் ..ரஜினிக்கு பொருந்தாத பார்வை

    5. லோ பட்ஜெட் ..அடித்தட்டு சிந்தனை கொண்டவர் ரஞ்சித்
    பதில் : பிறப்பிலே தாழ்ந்தவன் நீ..உன் சிந்தனையும் தாழ்ந்த சிந்தனை ..உனக்கு மேல்மட்டமாக சிந்திக்க கூட தெரியாது …என்று நேரடியாக கூறி இருக்கும் அயோக்கிய வரிகள் இவை ..

    மறுபடியும் சொல்கிறேன் ..சினிமா என்கிற கோணத்தில் கபாலிக்கு கொடி பிடிக்கவில்லை..ஆனால் சினிமா விமர்சனம் என்கிற பெயரில் தனது தலித் விரோதத்தை, பார்ப்பனிய சிந்தனையை வெளிப்படையாக வெளிக்காட்டி இருக்கும் தினமணியின் பத்திரிக்கை தர்மத்தை கண்டித்தே இந்த பதிவு

    https://www.facebook.com/soorimail

  27. தினமணி கட்டுரை குறித்து பெரியதாக கவலைப்பட தேவையில்லை.
    இது வழக்கமான ஒன்று தான். ரஜினி படம் அந்தர் மொக்கை என்று சொல்வதற்கோ, ரஞ்சித் ஒரு குப்பை படம் எடுத்திருக்கிறார் என்று சொல்வதற்கோ யாருக்கும் உரிமை இருக்கிறது.

    ஆனால் சூப்பர்ஸ்டாரை சூப்பர்ஸ்டாராக இருக்க விடுங்கள் என்று சொல்வது, இந்த வேலை எல்லாம் உனக்கெதுக்கு என்று சொல்வதெல்லாம் வழக்கமான தினமணியிசம் தான்.

    அப்படியே தினமணியின் கூற்றுபடியே எடுத்துக்கொண்டால் ரஞ்சித்தின் முந்தைய மெட்ராஸ் படம் ஹிட். ரஜினிக்கு லிங்கா பக்கா ஃப்லாப். அட்டகத்தி ஓக்கே..கோச்சடையான் உட்டலக்கடி ஃப்லாப்.
    ரஞ்சித்தை ரஞ்சித்தாகவே இருக்க விடுங்கள் ரஜினி என்று எழுதினால் எவ்வளவு அபத்தமோ அதே அளவு அபத்தம் தான் தினமணி செய்வதும்.
    படம் என்பது ஒன் மேன் ஷோ இல்லை.
    பிட்டு படத்தில் கூட ஒன் மேன் ஷோ சாத்தியம் இல்லை.இருந்தாலும் வெளங்காது..
    ஆனால் இதெல்லாம் தினமணிக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இப்படி எழுதுவதை ரசிக்க வேண்டும். ஏனெனில் தினமணி பாராட்டினால் தான் வம்பு.

    சிலரை எல்லாம் புறக்கனிக்கவே கூடாது.ஜாலியாக வேடிக்கை பார்க்க வேண்டும்.பேராசான் சுப்பிரமணிய ஸ்வாமி, தினமலர், தினமணி, ஜெயமோகன், ராமகோபாலன், அர்ஜூன் சம்பத் ,சீமான், ஆளூர் ஷாநவாஸ் இப்படி சூப்பர் ஆட்களை எல்லாம் ஜாலியாக வேடிக்கை பார்க்க வேண்டும்.ஆகாதவர்கள் வயிறெரிவதை விட ஆகச்சிறந்த ஆர்காசம் எது ??

    அடுத்த படத்தில் தினமணியை வயிறெரியவிடும் அளவுக்கு நல்ல படம் எடுக்க வாழ்த்துக்கள் ரஞ்சித்.

    https://www.facebook.com/umamaheshwaran.panneerselvam?fref=nf

  28. #‎கபாலி‬ -ஒரு பார்வை

    25 ஆண்டு சிறைக்கு பின்பு தனது தொலைந்த வாழ்க்கையை தேடும் இளங்கிழவனின் பயணம் தான் கபாலி…

    ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பண்ணையடிமையால் பாதிக்கப்பட்டு அதலிருந்து வெளிவரத் துடித்து ஆங்கிலேயரின் சிற்சில அணுகுமுறைக்காக மலை நாடு எனப்படும் மலேசியாவிற்கு நாடுகடத்தப்பட்டு அங்கும் வெறுமை ததும்பிய வாழ்க்கையை ரப்பர் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கொடும் வாழ்வை மேற்கொள்கின்றனர்..அப்படி அங்கும் ஒடுக்குதலை அனுபவிக்கும் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த க………………..

    https://www.facebook.com/mathivathanidhanam/posts/1154285521303152

  29. Apocalypto படம் சூப்பருன்னு கைதட்டி ரசிச்ச ஆளுகதான்

    கபாலி படத்த குப்பைன்னு விமர்சிக்குதுக!

    தமிழன்னு வசனம் வரனும்னா
    அது கொம்பன் மாதிரி படத்துலதான் வரனும்ங்கற மனநிலை கொண்ட சைக்கோக்களால் மட்டுமே
    கபாலி குப்பைன்னு விமர்சிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல!

    https://www.facebook.com/veera.karthik1

  30. #‎மகிழ்ச்சி‬!!

    சரிஞ்சி கிடந்த ரஜினியோட மார்கெட்டை தூக்கி பிடிச்சிருக்கார்

    மலேசிய தமிழர்களின் பிரச்சனையை சொல்லும் விதம் திரை வெளியிடுவதற்கு எந்த சிக்கலும் இல்லாமல் படத்தை தந்திருக்கிறார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே செம்ம ஸ்டைலுதான். ஆனா ஸ்டைலுக்கே ஸ்டைல் பண்ணிருக்கார்

    வசனங்களை சிலருக்கு தேனாகவும் சிலருக்கு மருந்தாகவும் கொடுத்துள்ளார்.!

    படத்தில் காதலுக்கு வயசில்லை என்பதையும் காதலை விரும்பாதவர்களையும் காதலிக்க தூண்டியுள்ளார்..

    “உன்னோட கருப்ப எடுத்து என் உடம்பு முழுவதும் பூசிக்கனும்” இதில் ஆதிக்கத்தை அடிச்சி விரட்டிருக்கார்..

    தமிழர் இனத்துக்கு செம்மையான வாசனை பூசி இருக்கார். படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் இது தமிழினம் என ஒரு முறை முகர்ந்து பார்த்து கொள்ளலாம்..

    அம்பேத்கரியத்தையும் தலீத்தியத்தையும் மூர்க்க தனமாக எதிர்ப்பவர்கள் கூட ஏற்று கொள்ளும் விதமாக நச்சுன்னு சொல்லியிருக்கார்….

    ஆதிக்கத்தை சும்மா போற போக்கில் அடிச்சி விரட்டியிருக்கார்..

    திறமையிருந்தால் வாய்ப்புகள் தானாக வரும் என்பதில் எந்த மாற்றும் இல்லை!
    இந்த வாய்ப்பை ஒரு கடுகளவேனும் நழுவ விடாது அனைத்தையும் சரியாக செய்து முடித்துள்ளார் இயக்குநர் ‪#‎ரஞ்சித்‬!!

    மொத்தத்தில் படத்தை பார்த்த மலேசிய நண்பர்கள்
    #மகிழ்ச்சி!!

    https://www.facebook.com/selvam.tamilmaran.7

  31. நல்லால்லை..நல்லால்லைன்னு அவ்ளோ feedback.இததவிர டிக்கட் ரேட் கூட,,,தஞ்சாவூர்ல்ல மட்டும் மூணு த்யேட்டர்ல ரிலீஸ். .ஆனாலும்….கூட்டம் அள்ளுது…
    அப்படி என்னதான் இருக்கு இந்தாள்கிட்ட…?

    https://www.facebook.com/rsuraguru.renganathan?fref=nf

  32. ஏன்னா…
    இந்த அக்கிரமத்த கேட்டேளா??

    ஒரு அய்யங்கார் ஆத்து மருமவ புள்ளையாண்டான் எங்கயோ சேரில கெடந்த அவாள்ல ஒருத்தன் பேச்ச கேட்டுண்ட்டு நிக்குரதும் நடக்குரதும் நடிக்கிறதும் லோகத்துக்கே அடுக்காது கேட்டேளா…

    கிட்டவே ஷேர்ப்படாத அவாளுக்காக இவர் டயலாக் பேஷுனது நேக்கு ஒன்னும் சரியாப்படலை…

    :- சித்த பொருடா…
    நம்ம தினமணி வைத்தி அய்யர விட்டு அவாள என்னன்னு கேப்போம்…

    https://www.facebook.com/ManikVeeramani?fref=nf

  33. தினமணி போட்ட “பீப் சாங்க்”
    …………
    கபாலி குறித்த சாதிய வன்மம் மிகுந்த தினமணி விமர்சனத்திற்குப்பிறகு இணையத்தில் ரஞ்சித்திற்கு கடந்த 24 மணி நேரத்தில் பெருமளவு ஆதரவு அதிகரித்திருக்கிறது. படம் தொடர்பான விஷயங்களை விமர்சித்து வந்த நானும் ரஞ்சித்தை ஆதரித்து பதிவிட்டேன். அப்படி செய்வது சரியானது என்று இப்போதும் நம்புகிறேன்.

    ஆனால் இதில் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவது தினமணியின் அணுகுமுறைதான். ஜெயலலிதா விசுவாசத்தை நிரூபிக்க பல ஊடகங்கள் பலவிதமாக மண்டியிட்டாலும் அவற்றால் இந்த விஷயத்தில் தினமணியை நெருங்கக் கூட முடியவில்லை. அப்பேர்பட்ட தினமணி ஜாஸ் சினிமா வாங்கிய கபாலியை இவ்வளவு கடுமையாக தாக்குவதை நம்ப முடிகிறதா? மேலும் சினிமா விளம்பரங்களை நம்பியிருக்கும் நாளிதழ்கள் எந்த பெரிய பட்ஜெட் படத்திற்கும் எதிர்மறை விமர்சனங்களை எழுதியதில்லை. தினமணியும் எழுதியதில்லை. பிறகு ஏன் கபாலிக்கு மட்டும் இந்த தாக்குதல்?

    இணையத்தில் கபாலி ஆதரவு மனநிலைக்கு இணையாக எதிர்ப்பு மனநிலையும் கடந்த சில தினங்களாக கடுமையாக வெளிப்பட்டு வருகிறது. படத்தின் வர்த்தக வழிமுறைகள், படத்தில் உள்ள பிரச்சினைகள் என பல நிலைகளில் இந்த விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவர்கள் எல்லாம் தலித் விரோதிகள் அல்ல.

    இந்த எதிர்மறை விமர்சங்களை தணித்து கபாலி ஆதரவு மன நிலையை பெருகச் செய்யவேண்டும் என தினமணி போட்ட ” பீப் சாங்க்” தான் இந்த விமர்சனமா? சமூக வலைத்தளங்களின் trending எதுவோ அதுதான் இன்று பல விஷயங்களை தீர்மானிக்கும் சூழலில் இந்த விஷயத்தை யோசிக்கலாம்.

    கபாலியை நியாயமான காரணங்களுக்காக விமர்சிப்பவர்களைக்கூட தினமணியின் அணுகுமுறையோடு இணைத்துப்பார்க்கக்கூடிய சூழலில் விமர்சகர்கள் பலருடைய சுருதி சட்டெனெ இறங்கிவிட்டது.

    பொழுது விடிந்து பொழுது போவதற்குள் எத்தனை conspiracy theory கள்.

    https://www.facebook.com/manushya.puthiran?fref=nf

  34. கபாலி சில விளக்கங்கள்…

    சினிமா, அரசியல், சமூகம் என யாவற்றிலும் நமக்கொரு கருத்து இருக்கிறது அதை எழுதுகிறோம் சொல்கிறோம். ஆனால் சமீபத்தில் கபாலி பற்றி விமர்சித்தவர்களை சாதி வெறியர்கள் என்றும். //விமர்சிப்பவர்கள் அனைவரும் சாதிவெறியர்கள் அல்ல, சாதிவெறீயர்கள் விமர்சிக்கிறார்கள்// என்றெல்லாம் நேரடியாகவும் சுற்றி வளைத்தும் எழுதுகிறார்கள். ஈழப் பிரச்சனையில் எப்படி இந்த கும்பல் நம்மை நெடுமாறனின் பக்கம் தள்ளி விட்டு ஈழ ஆதரவாளர்கள் என்றாலே அது நெடுமாறன் வகையறாதான் என்று கற்பிக்க முயன்றார்களோ அது போல இப்போது கபாலியை விமர்சிக்கிறவன் அனைவருமே சாதி வெறியன் என்று நம்மை அந்தப் பக்கம் தள்ளி விடுகிறார்கள்.

    to comtinue reading copy past the following link in your browser….

    https://www.facebook.com/arayanmagan/posts/1461836783832532

  35. படத்தை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையிருக்கிறது…

    ஆனால் பொது வெளியிலும், பெருவெளியிலும் உனக்கு இடம் கிடையாது..
    உனக்கு ஒதுக்கப்பட்ட எல்லை இதுதான் என்று வரையறுக்கும் தினமணியின் தீண்டாமையும், அறிவுசார் அராஜகமும் கண்டிக்கத்தக்கது

    https://www.facebook.com/kavitha.bharathy

  36. கபாலி படம் பார்த்துவிட்டேன். என் வழக்கப்படி படத்தைப் பார்த்த பிறகு பத்திரிகை விமர்சனங்களைப் படித்தேன்.

    இது ரஜினி படமாகவும் இல்லை, இரஞ்சித் படமாகவும் இல்லை என்று பொதுவாகப் பலரும் எழுதியிருக்கிறார்கள்.

    பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று முந்தைய பல படங்களில் ரஜினி அபத்த அட்வைஸ் பண்ணுவாரே, அது இதில் இல்லை. ஏதாவதொரு இடத்தில் ஆண்டவன் கட்டளைப்படி தான் செயல்படுவதாக அநாத்திக போதனை செய்வாரே, அதுவும் இல்லை. அரசியலைத் தூய்மைப்படுத்த இவர் வந்தால்தான் ஆச்சு என்பது போன்ற எதிர்பார்ப்பை விதைக்கும் வசனங்கள் இல்லை. இளமைக்காலத்துக் கதையில் கதாநாயகியோடு சேர்ந்து ஆடுவது போன்ற காட்சிகள் இல்லை.

    ஆக, இது ரஜினி படமாக இல்லைதான் – அதாவது வழக்கமான ரஜினி படமாக இல்லைதான்.

    https://www.facebook.com/theekathirasak?fref=nf

  37. முந்தைய இரண்டு இரஞ்சித் படங்கள் கதையோட்டத்தை மையப்படுத்தி நாயகர்கள் வருகிறார்கள். இதில், 500 கோடி ரூபாய்க்கு விற்பனை, முதல் நாளே 250 கோடி ரூபாய் வசூல் என்பன போன்ற மலைக்க வைக்கும் வர்த்தகச் சூழல்களை உறுதிப்படுத்தியிருக்கிற ரஜினியை மையப்படுத்திய கதையோட்டம். பொது சேவைக்காகவே அடியாள் கும்பல் நடத்துகிறவனாக (‘கேங்ஸ்டர்‘ என்பதற்கு அதுதானே அர்த்தம்?) கதாநாயகனைக் காட்டுகிற பாத்திரச் சித்தரிப்பு.

    ஆக, இது வழக்கமான இரஞ்சித் படமாகவும் இல்லைதான்.

    ஆனால், வயதாகிவிட்டதன் அறிகுறிகளையே சூப்பர் ஸ்டார் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான தகுதியாக்கிக் கொண்ட வகையில் இது ரஜினி படம்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ரஜினியைப் பார்ப்பது “மகிழ்ச்சி”.

    இப்படியான வர்த்தக வெற்றிப் படத்தில், மலேசியாவிற்குப் பண்ணையடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்ட தமிழர்கள், அந்த நாட்டின் வளர்ச்சியில் தமிழ்த்தொழிலாளர்களின் பங்கு, வறுமை உள்ளிட்ட காரணங்களால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போகும் இந்தக் குடும்பங்களின் குழந்தைகள் எளிதில் போதை மருந்து வியாபாரக் கும்பல்களின் விற்பனையாளர்களாக மாறிப்போகிற, படிப்படியாக அடியாட்களாக மாறிப்போகிற நிலைமை, ஆடைத் தேர்வு வழியாக அம்பேத்கர் வெளிப்படுத்திய ஒடுக்கப்பட்டோரது அரசியல் உறுதி அடையாளம்…

    ஒரு மிகப்பெரிய வர்த்தக சினிமாவில் இந்த உட்பொருள்கள் கலந்து வருவது, ரசிகர் மன்றக் காட்சிகளைக் கடந்து, ஒரு மாற்றுச் சிந்தனை சிறுதுளிகளாகவேனும் தூறுவதற்கு இட்டுச் செல்லும்.

    ‘மெட்ராஸ்’ படம் வந்தபோது எனக்கு பேட்டியளித்த இரஞ்சித், வர்த்தக ரீதியான வெற்றிகளை நிலைநாட்டிக்கொள்ள விரும்புவதாகவும், அதன் மூலம் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை மேலும் உறுதிபட வெளிப்படுத்த முடியும் என நம்புவதாகவும் கூறியிருந்தார்.

    இரஞ்சித்தின் இந்த ரஜினி படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

    (இப்போதைக்கு இதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். விரிவான விமர்சனம் பின்னர்)

    https://www.facebook.com/theekathirasak?fref=nf

  38. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தை வைத்து படம் இயக்கும் அளவுக்கு பா.ரஞ்சித் வளர்ந்துவிட்டார் என்பதற்காக, அவர் வெறுக்கவும் எதிர்க்கவும் படுகிறார் எனில், அதே காரணத்துக்காகவே நாம் அவரை நேசிப்போம் ஆதரிப்போம்.

    திரையில் ரஞ்சித் அம்பேத்கரியம் பேசுவதெல்லாம் எளிதானதல்ல. சாதிய இறுக்கம் மிகுந்த திரையுலகில், அவர் தன்னை ஒரு அம்பேத்கரிஸ்டாக அடையாளப்படுத்தியிருப்பதே பெரிய சாதனை தான்.

    https://www.facebook.com/aloor.shanavas/?fref=nf

  39. My comment on Kabalai :
    உப்பில் அயோடின் இருக்குனு அதனை அதிகமா உணவில் சேர்த்துகிறவனும் முட்டாள்…., கபாலியில் ரஜினி சார் இருக்கார்.., அது சகோ. ரஞ்சித் படமென்று ஓடிஓடி காலை 4 மணிக்கு ஓடிஓடி 1000 ரூபா,2000 ரூபா கொடுத்து பார்த்து காசை கரியாக்குபவனும் மாகா பெரிய முட்டாள்…..10 நாள் கழித்து 100 ரூபாவுக்கு உள்ளே டிக்கெட் கிடைக்கும் போது பாருங்க படம் நல்லா இருக்கும்….சுமாரா இருக்கும்…தேவலாம் போல இருக்கும்….

    குமரன்டா….ஊதாரியில்லடா ………

    https://www.facebook.com/senthilkumaran.krishnamurth

  40. My comment on Kabalai :

    என்ன கருமண்டா இருக்கு கபாலியில் ? எதுக்குடா படத்தோட டிக்கெட்டை ஆயிரம் ரெண்டாயிரமுன்னு விக்கிறீங்க?

    கபாலி திரைபட டிக்கெட் முன்பதிவு தொடர்பான செய்தியை தமிழ் இந்து நாளிதழின் இணைய பதிப்பில் படிக்க நேர்ந்தது…செய்தியின் தலைப்பே ரஜனி சார் படங்களை போன்று அதிரடியாக உள்ளது. ‘விலை குறிப்பிடாமல் ‘கபாலி’ டிக்கெட்: ரசிகர்கள் கொந்தளிப்பு’ . படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது. சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன. மேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் விலை இல்லை என்பதால் என்ன விலை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இதற்கு காரணமாம்.

    விற்பனை பொருள்களுக்கு MRP உள்ளது போன்று திரைபடடிக்கெட்களுக்கும் அரசு சட்டத்தை கொண்டுவந்தால் என்ன? அதிரடியாக ஆயிரம்,ரெண்டாயிரம் என்று பட தயாரிப்பாளரும்,திரையரங்க முதலாளியும் நிர்ணயிக்கும் விலையில் எல்லாம் இந்த படத்தை பார்க்கவேண்டுமா என்ன? படத்தின் கதை என்னதான் முற்போக்காக ,தமிழ் தேசியத்தை தொட்டுச்செல்வதாக இருந்தாலும் (நம்ம டைரக்டர் அப்படித்தான் சொல்றாரு) அந்தப்படத்தை மெல்லமாக தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன்…

    அ ப் ப நீ ங் க ?

    July 16 at 6:38pm
    https://www.facebook.com/senthilkumaran.krishnamurth

    T H E E N D

  41. தினமணியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை….அவர்களின் எரிச்சல் இயக்குனர் ப.ரஞ்சித்திற்கு கிடைத்த வெற்றி. ஆதிக்க சமூகம் உடைக்கப் பட்டு விடுமோ என்ற அச்சம்…. ஒடுக்கப்பட்ட சமூகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமை.. இவைகளை தான் உறுதி படுத்துகிறது.!

    https://www.facebook.com/susila.durai?fref=nf

  42. இன்றுவரை ரஜினி மற்றும் ரஞ்சித் ரசிகர்கள் வசமிருக்கும் ஃபேஸ்புக் நாளை முதல் கலாம் ரசிகர்கள் முற்றுகையில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    https://www.facebook.com/villavan.ramadoss?fref=nf

  43. எந்தவொரு திரைப்படத்தையும் விமர்சிப்பதற்கு எல்லா பத்திரிகைகளுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் கபாலி படம் குறித்து தினமணி விமர்சனம் செய்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். ஆனால், பா.ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கக்கூடாது என்று தினமணி ஏன் சொல்கிறது? அதன் நோக்கம் என்ன? பா.ரஞ்சித் களம் வேறு, பார்வை வேறு என்று தினமணி சொல்கிறது. அதன் உள்அர்த்தம் என்ன?

    ரஞ்சித்தை வைத்து ரஜினி படத்தை எடுக்கச் சொன்னது குருவி தலையில் பணங்காயை வைத்தது போல என்றெல்லாம் தினமணி எரிச்சலைக் கொட்டுவது ஏன்? ரஜினியை வைத்து பல நல்ல படங்களை இயக்கி இருக்கும் எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், மகேந்திரன் போன்றவர்களே ரஜினி படங்களை இயக்க வேண்டும் என்றும், ரஜினியை இயக்க வேண்டிய இயக்குனர் ரஞ்சித் அல்ல என்றும் தினமணி சொல்கிறது. படுதோல்வி அடைந்த பாபா படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது தினமணிக்குத் தெரியுமா தெரியாதா?
    கபாலி படத்தை ஒரு கெட்ட கனவு என்று முடித்திருக்கிறது தினமணி. எல்லாவற்றுக்கும் காரணம் சேரியில் இருந்து வந்த ஒருவன், சூப்பர் ஸ்டாரை இயக்குவதா என்ற வயிற்றெரிச்சல் தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

    https://www.facebook.com/kandasamy.muthurakku?fref=nf

  44. கபாலி : ரஜினி குறித்தல்ல..

    கேங்ஸ்டார் படம் என்றதும் வழக்கமான பாட்சா, தளபதி போன்றோ அல்லது சிவாஜி, எந்திரன், லிங்கா போன்றோ இருக்குமென ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து அது இல்லை என்பது வேறு..இது ரஜினி ரசிகள் பிரச்சனை. ஆனால் அதைத் தாண்டி இந்தப்படம் விமர்சனங்களை மட்டுமல்ல எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது அதற்கு காரணம் படத்தில் பேசப்பட்டுள்ள அம்பேத்கர் அரசியல்தான்.

    1. எங்கிருந்து வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘’திண்டிவனம் பக்கத்திலுள்ள கிராமத்தில் பண்ணையடிமையால் பாதிக்கப்பட்டு இங்கு வந்தோம்” என்ற பதில் முக்கியமானது. பண்ணையடிமை என்பது தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய சாதிய கொடுமைகளின் அடையாளம்.

    2. நாம் என்ன உடை போடவேண்டும் என்பதை யாரோ ஒருவன் எப்படி தீர்மானிக்க முடியும்.

    3. இறுதியில் கிஷோர் பேசுவது, ‘’யார்றா நீ.. வெறும் சோத்துக்காக இங்க வந்தவன்தானே.. தின்னுட்டு அமைதியா இருக்கவேண்டியதுதானே.. மத்தது எல்லாம் எதுக்கு நீ செய்ற.. செய்றதுக்கு நீ யாரு.. அதெல்லாம் பிறப்பிலேயே இருக்குடா.. உனக்கு என்ன தகுதி இருக்கு… கோட்டு, சூட்டு, கண்ணாடி போடா சமமா ஆயிடுவியா” (இதற்கெல்லாம் விளக்கம் ஒன்றும் தேவையில்லை என நினைக்கின்றேன்)

    4. இளைஞர்களை நெறிபடுத்துகின்ற, சமூக அக்கறையுள்ள மனிதனாக மாற்றுவதற்கான பள்ளியை நடத்திக்கொண்டு, நேர்மையாகவும், உண்மையாகவும் படைக்கப்பட்டுள்ள அமீர் என்கிற இசுலாமிய கதாபாத்திரம் மற்றும் தமிழ்நேசன், தமிழ்மாறன், ஜீவா, குமரன், யோகி போன்ற தமிழ் அடையாளப்பெயர்கள்.
    இப்படி இவையெல்லாமே ஒடுக்கப்பட்டோரின் அரசியலை மையப்படுத்துகின்றன.

    ஏற்கனவே மிகமோசமான குப்பைக்குச் சென்ற ரஜினி படங்கள் பல உள்ளது. அவைகள் எல்லாம் விமர்சனத்திற்கு ஆளானதே தவிர எதிர்க்கப்படவில்லை.

    ஆனால் இந்தக் கபாலி படம் வழக்கமான ரஜினி படங்களைப்போல் இல்லாததுடன் அம்பேத்கர் அரசியலை குறிப்பாக இயக்குநர் ரஞ்சித் மூலமாக அம்பேத்கர் அரசியலை பேசுவதுதான் பெரும்பாலோனருக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பலவாறாக புலம்புகின்றனர்.

    இரண்டு விசயங்களை நான் முக்கியமானதாக நினைக்கின்றேன்.
    1. Free Life Foundation பள்ளியை அம்பேத்கர் மன்றங்களால் நடத்தப்படுகின்ற மாலை நேரப் பள்ளியாக நினைத்துப்பாருங்கள்.

    2. பண்ணையடிமை முறையால் பாதிக்கப்பட்டு, சமூக கொடுமைகளிலிருந்து விடுதலைபெற முயல்கின்ற ஒருவன் பாடுகின்ற ”நெருப்புடா.. நெருங்குடா பார்ப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்…’’ என்று எதிர்ப்பு அரசியலை முன் வைப்பதை இந்தச் சாதிய சமூகத்தால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

    லஞ்சம்-ஊழல்-வாக்கு அரசியல் என பொதுவான வணிக விற்பனைக்கு போதுமான மசாலத்தனங்களை மட்டும் மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் எல்லோரும் ரஞ்சித்தை தூக்கிவைத்துக் கொண்டாடியிருப்பார்கள்.

    மாறாக இந்துத்துவ – சாதிய சமூக அரசியலைப் பேசுவதால் அதுவும் திரைத்துறையில் நட்சத்திர முகமான ரஜினி மூலமாக பேசவைத்ததில்.. தாங்கிக்கொள்ளமுடியாமல் எதிர்ப்பினை முன்வைக்கின்றனர்.

    இந்நிலையில் ஒடுக்கப்பட்டோர் அரசியலை படைப்பாக்குகின்ற ரஞ்சித் பக்கம்தான் நாம் நிற்கவேண்டும். நிற்கமுடியும்.

    – Murugappan Ramasamy

    https://www.facebook.com/ra.murugappan

  45. தினமணியின் திரைப்படக் கட்டுரையை வாசித்துப் பார்த்தேன். ஒரு முரட்டுத்தனமான ரஜினி ரசிகர் எழுதிய கட்டுரை என்பதையும் ரஜனியோடு சேர்த்து தமிழ் சினிமாவையும் மசாலா தளத்திற்கு திரும்பச் சொல்கிற அபத்தமான ஆலோசனையையும் தவிர அதில் வேறு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

    இது அவர் விரும்புகிற வழக்கமான மசாலா படமாக அமையவில்லையே என்கிற கோணத்தில்தான் இயக்குநரை அணுகியிருக்கிறார். உண்மையில் ரசிக மனோபாவத்தோடு எழுதப்பட்டிருக்கும் இவ்வகையான சாதாரண விமர்சனம் தினமணியில் வந்திருப்பதுதான் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக தெரிகிறது.

    வரிகளுக்கு இடையில் வாசிப்பதும் அது சார்ந்த அரசியல் விழிப்புணர்வு இருப்பதும் நல்ல விஷயம்தான். ஆனால் அதுவே அதீதமாக ஆகி விடும் போது பொருந்தாமல் போய் விடுகிறது.

    ஒருவேளை இணையத்திற்குள் லாக் – இன் ஆகும் போதே இந்த உணர்வுகளின் மிகையும் கூடவே ஆன் ஆகி விடுமோ?

    https://www.facebook.com/suresh.kannan.1806?fref=nf

  46. செருப்பை வெளிய விடாம வீட்டுக்குள்ள மாட்டிக்கிட்டு தான் வரணுமான்னு கேட்பது இந்தக் காலத்துக்கு ஒவ்வாத ஒன்னு தான் … ஆனால் கண்டதையும் மிதிச்சிட்டு அந்தச் செருப்போட வீட்டுக்குள்ள வரணுமான்னு கேட்குறது கூடவா தப்பு ???? தினமணிக்கு மூக்கிருக்கு நாற்றமடிக்குதுன்னு சொல்லுது

    https://www.facebook.com/kishore.kswamy?fref=nf

  47. My Father Baliiah….
    கபாலியின் தொடக்ககாட்சியில் ரஜனி படிக்கும் புத்தகம், தற்போது தெலுங்கானாவில் பேமஸ்.
    ஹைதராபாத் நிஜாமால், 50 ஏக்கர் நிலம் இனாமாக இந்த புத்தகத்தை எழுதிய தலித் சமூகத்தை சார்ந்த சத்யனாரயனவின் தாத்தா நரசாவிற்கு கொடுக்கபடுகிறது.
    ஆனால், உள்ளூர் உயர்சாதிக்காரர்ஒருவர், 48 ஏக்கர் நிலத்தை தான் எடுத்து கொண்டு, வெறும் இரண்டு ஏக்கர் மட்டும் கொடுத்து ஏமாற்றி விடுகிறார்.
    ஒரு கட்டத்தில் குடும்பம் நடத்த முடியாத கஷ்டத்தில், குடும்பத்துடன் ஊரை விட்டு வெளியேறுகிறார், நரசாவின் மகநானா பாலையா, எவ்வாறு கஷ்டப்பட்டு முன்னேறினார் என்பதே இந்த தலித் மக்களின் முன்னேற்றம் குறித்த இந்த புத்தகம்.
    இந்த புத்தகத்தை காட்டிவிடடுத்தான் அடுத்து ரஜனியை காண்பிப்பார்.
    இவைகளை தெரியாமல் ரஜனி நடிக்கவில்லை, தெரிந்தே இந்த படத்தில் நடித்துள்ளார். ரஜனியிடம் தெரியும் இந்த மாற்றம், உண்மையான புகழை அவருக்கு இப்போது கொடுக்கிறது

    https://www.facebook.com/hajadeen.Mohi

  48. //லோ பட்ஜெட், அடித்தட்டு சிந்தனை கொண்டவர் ரஞ்சித். இயக்குனர் ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கொடுத்திருக்க கூடாது. — தினமணி. வைத்திநாத அய்யர்..//

    பூர்வீக அசுர வம்ச அரசர்களை “பெண்களை” காண்பித்து “கொலைசெய்தது”, மன்னர், ஜமீன்தார் காலங்களில் “கூட்டி கொடுத்து” அதிகாரத்தை கைப்பற்றியது, ஆங்கிலேயர் காலத்தில் சொம்படித்து ஜால்ரா போட்டது போன்ற பல “மேல்தட்டு சிந்தனை”களை கொண்ட வைத்தி கும்பல் சொன்னா சரியாதான் இருக்கும்…

    சாதாரணமாக படங்கள் குறித்து எழுதுவதில்லை.. கபாலி “தலித் சினிமா” என்று சொல்லவில்லை , ஆனால் ஒரு தலித்தால் எடுக்கப்பட்ட படம் என்பதால், சாதாரண சினிமா விமர்சனங்களை போலின்றி, தனிமனித தாக்குதல் வரை செய்யும் சில சாதி வெறியர்களை எதிர்த்துத்தான் பதிவுகள்..

    https://www.facebook.com/prakash.jp.73?fref=nf

  49. Dr Rk Rudhran…..

    *மகிழ்ச்சி ரஞ்சித்.
    தெரிந்து கொள்ளாத எதைப்பற்றியும் பேசுவதில்லை என்பது என் சுயவிதி. படம் பார்க்கவில்லை ஆகவே அது பற்றி எதுவும் எழுதுவதாயில்லை, ஆனாலும் உன் படம் பற்றியல்ல அதன் பாதிப்பு குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை.
    பேசத்தயங்கும் ஒரு ஜாதி விஷயத்தைப் பற்றி கிட்டத்தட்ட அனைவரும் பேச வைத்ததற்காக மகிழ்ச்சி ரஞ்சித்.
    ஜாதி மறுக்கும் அத்தனை பேருக்கும் தெரியும் ஜாதி ஒழியவில்லை என்று. சுய ஜாதி மறைத்தும் தன்மானம் பேசும் யாவருக்கும் தெரியும் ஜாதி உண்டென்று.
    ரஞ்சித், உன் படம், மிகைமொக்கையென்றாலும், உன் நாயகன் அதிநுட்ப நடிப்பைக் காட்டியிருந்தாலும், கதைசொல்லும் நயம் குளறுபடியானாலும், ஒரு மிக மோசமான வியாபார விளம்பர ஆபாசம் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருந்தாலும்,மகிழ்ச்சி ரஞ்சித்.
    இனி உன்னைக் கொஞ்சம்கூடத் தெரியாத ஒருவன், உன் வளர்ச்சியை அதன் வீச்சைக்கண்டு , உன்னை வசை பாடுவான். அவனை உதாசீனப்படுத்து ரஞ்சித். அவன் போன்றவர்களால் என் பல மாதங்கள் சில வருடங்களுக்குமுன் வீணாயின. உன்னை விமர்சிப்பவன் யோக்கியனில்லை, உன் படைப்பை படைப்பாக மட்டுமே விமர்சிப்பவனே உன் பதிலுக்கு அருகதையானவன்.
    நம் ஜாதியை விடவும் நம் சாதனையே வாழ்க்கை என நாம் முன்னேறுவோம் என ஒரு தீர்மானத்துடன் பார்வையை தீர்க்கமாக்கினால், நமக்கு, மகிழ்ச்சி ரஞ்சித்.

    https://www.facebook.com/doctor.rudhran?fref=nf

  50. மாவோ குறித்து Director Ranjit:

    மக்களுடைய பிரச்சினையை சொல்வதுதான் நல்ல சினிமா. கலையை அரசியல் ஆக்க நினைக்கிறேன். இது அரசியல் படமல்ல… கலையே அரசியல்தான்.

    https://youtu.be/SDs9Z7SP4JA?t=25m1s

    • Tnx for providing this video link and publishing it in vinavu….Tns to Mr Maakkan and Vinavu…. The politically motivated discussion can be started from this video regarding Kabalai movie…

Leave a Reply to kSK பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க