1. தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை எதிர்த்து மக்கள் அதிகாரத்தின் தொடர் போராட்டம்
மக்கள் நடத்திய மனு கொடுக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து 31-07-2016 அன்று மூடும்வரை முற்றுகைப் போராட்டம் !
01-07-2016 அன்று மக்கள் அதிகாரம் தோழர் சண்முகசுந்தரம் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்று கட்சியினர், பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட மக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, 15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக்கை மூடவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கி டாஸ்மாக்கை மூடுவோம் என்று கெடுவிதித்துவிட்டு வந்தனர்.
15 நாள்கள் கடந்தும் மூடாததால் வரும் 31-07-2016 மூடும்வரை முற்றுகை அறிவித்து தொடர் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 24-07-2016, 25-07-2016 இரு நாள்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் மையக் கலைக்குழுவின் பிரச்சாரம் நடைபெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
2. காண்டிராக்ட் சுரண்டை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! – தெருமுனைக் கூட்டம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சார்பாக தூசி பேருந்து நிறுத்தம் அருகில் காண்டிராக்ட் சுரண்டலை எதிர்த்து 25-07-2016 மாலை 5.30 மணி அளவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்