privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஉன் கவிதையில் உலகத்தரமில்லை !

உன் கவிதையில் உலகத்தரமில்லை !

-

அவர்களது அங்கீகாரம் வேண்டாமல்..

திகாரப் பீடங்களின் விருதுகளையும்
நல்லாசிகளையும்
இரந்து பெற்றவர்கள் சொல்லுகிறார்கள்:

இன்னொன்றை பற்றி
இன்னொன்றை பற்றி

உன் கவிதைகள் பரிசுக்குரியனவல்ல.
நீயும் சான்றோர் மண்டலங்களின்
அங்கீகாரத்துக்குரியனவல்ல.

தூய கலை இலக்கிய அங்கியால்
தம் அரசியலை மூடியவாறு
அழகியல் உபாசகர்கள் சொல்லுகிறார்கள்:

உன் கவிதைகள் காலத்தால்
அழியாதவையல்ல.
அவை உலகத்தரம் கொண்டனவுமல்ல.

தங்களைச் சூழும் வட்டங்களின் எல்லைகளைக்
காணத் தலைகுனிந்தும் பார்க்காதவர்கள்
சொல்லுகிறார்கள்:

உன் கவிதைகள் குறுகிய அரசியல் சிந்தனை
வட்டத்துக்குரியன.
நீ அதனின்றும் வெளியேற முயல வேண்டும்.

காலத்தால் அழியவொணன்னாக் கலைஞர்களெனத்
தம்மைக் கற்பனை செய்கிறவர்கள் சொல்கிறார்கள்:

நீ என்றுமே கலைஞனல்ல.
கருவிலே திருவில்லாத நீ வெறும் எழுத்தாளன்
மட்டுமே.

ஒரு வணிகன் என்னிடம்
ஒளிவுமறைவின்றிச் சொல்கிறான்:

உன் கவிதையை விற்று நீயும் பிழைக்க
முடியாது. நானும் பிழைக்க முடியாது.

ஒளிவுமறைவின்றி நானும் சொல்லுகிறேன்:

மேலிடத்து அங்கீகாரமோ பரிசோ பெற
வேண்டாது
காலத்தாற் சிதைகின்ற காகிதத்தில்
வெய்யிலுக்கு மங்குகிற மை கொண்டு எழுதிய
என் கவிதை
உலகத் தரத்தை எட்டும் மொழிக்குப்
பெயராமல்
விற்பனைக்கில்லாத என்னுடைய அரசியற்
சிந்தனை மீது
உறுதியாகக் காலூன்றி நிற்கின்றது.
இன்னுஞ் சொல்லுகிறேன்:
பெருமைமிக்க ஆரவாரங்கட்கு உரியோரின்
பார்வைக்கு எட்டாத ஒர் உலகம்
எனக்கு அருகே தெரிகிறதால்,
தூய்மையாளர்களின் சொர்க்கத்தில் இடம்
வேண்டாமல்
நான் எழுதும் எளிய வரிகளை வேறு எவரேனும்
இவ்வேளை எழுதிக்கொண்டிருக்கலாம்
என நன்கு அறிந்தும்,
என் பாழ்நரகத்துக்குப் போகும் வழியில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.

– சி. சிவசேகரம்
இன்னொன்றைப் பற்றி – கவிதை தொகுப்பு
தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு – கொழும்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க