privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதிருச்சி கூட்டம் - மணப்பாறை டாஸ்மாக் முற்றுகை - களச் செய்திகள்

திருச்சி கூட்டம் – மணப்பாறை டாஸ்மாக் முற்றுகை – களச் செய்திகள்

-

1. ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பிறந்த கள்ளக்குழந்தையே மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை! – திருச்சி அறைக்கூட்டம்

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரான கொள்கையாக உள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர் அமைப்பினர், புரட்சிகர அமைப்புகள், ஆசிரியர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், ஜனநாயகவாதிகள் என பலரும் எதிர்த்து போராடி வரும் சூழலில் ஆர்.எஸ்.எஸ் அடிவருடிகளான தந்தி தொலைக்காட்சி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்களும், பார்ப்பன பத்திரிகைகளும் இக்கல்விக் கொள்கை சரியானது என நச்சுத்தனமான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர்.

nep-exposure-meeting-trichy-posterஇச்சூழ்நிலையில் இக்கல்விக்கொள்கையின் உண்மையான நோக்கமான பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறித்து, சமஸ்கிருத வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனமயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் அகண்டபாரத அபாயத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக திருச்சி உறையூர் பகுதியில் 21-09-2016 அன்று மாலை கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

பல்வேறு பள்ளிக்கல்லூரி மாணவர்கள், புரட்சிகர தோழமை அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கத்திற்கு திருச்சி மாவட்ட ம.க.இ.க-வின் பொருளாளர் தோழர்.சரவணன் தலைமை வகித்தார். ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சத்யா கருத்துரையும், மாநில இணைப்பொதுச் செயலாளர் தோழர்.காளியப்பன் சிறப்புரையும் வழங்கினார்கள்.மேலும் திருச்சியில் புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டம் நடத்திய பு.மா.இ.மு மாணவர்கள் மேடையேற்றப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். அப்போது தோழர்.குமார் தங்கள் களப்போரட்ட அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார். இடையிடையே புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. இறுதியாக திருச்சி ம.க.இ.க-வின் தோழர்.பாவேல் நன்றியுரை வழங்கினார்.

தலைமையுரை – தோழர் சரவணன்:

nep-exposure-meeting-trichy-com-saravanan
தோழர் சரவணன்

“இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள மெக்காலே கல்விமுறையானது மாணவர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமை வேலை செய்யும் எந்திரங்களாக மாற்றிக்கொண்டு வரும் சூழலில், கல்வியை தனியார் மயமாக்கியதன் விளைவு பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கி வருகிறது. நாம் இக்கல்விமுறையை ஒழித்து அரசே ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அவரவர் தாய்மொழியில் தரமான இலவசக்கல்வியை கொண்டுவரவே போராடி வருகிறோம். ஆனால் இந்த மோடி அரசு புதியகல்விகொள்கை என்ற பெயரில் பழைய வர்ணாசிரம குலக்கல்விமுறையை அமுல்படுத்தி அதில் 100% கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முனைகிறது.

nep-exposure-meeting-trichy-1இந்திய தரகு முதலாளி ரிலையன்ஸ் அம்பானி குழுமம் அரசு வங்கிகளிடம் வாங்கிய கடனை வாங்க வக்கில்லாத அரசாங்கம், மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் அம்பானி குழுமத்திடமே ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் விளைவு மதுரை பொறியியல் மாணவர் லெனின் ரிலையன்ஸ் ரவுடி கும்பலால் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதைக் கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் ரிலையன்ஸ் கடைகளை முற்றுகையிட்டு போரடினர். ஆனால் இந்த மோடி அரசோ அம்பானி குழுமத்திடம் கைக்கோர்த்துக்கொண்டு அவர்களின் ஜியொ சிம்மை அறிமுகப்படுத்தி தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது. புதிய கல்விகொள்கைக்கும், ரிலையன்ஸிற்கும் எதிராக போராட வேண்டிய மாணவர்களோ இன்று ஜியோ சிம்மை பெறுவதற்கு நாள்முழுக்க கடைகள் முன் கையேந்தி நிற்பது எவ்வளவு கேவலமான செயல் என்பதை நாம் இத்தருணத்தில் உணர வேண்டும்” என மாணவர்கள் போராட்டத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.

கருத்துரை தோழர் சத்யா:

தோழர் சத்யா
தோழர் சத்யா

“புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் அதிகப்படியான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்துவருகின்றன. ஏனெனில் இப்புதிய குலக்கல்வி கொள்கை பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளின் கல்வி மறுப்பு கொள்கையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் விவசாயிகளும், மாணவர்களும் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயி வாங்கிய கடனை கட்ட முடியவில்லை; விளைந்த பயிருக்கு விலையில்லை; விவசாயத்திற்கு தண்ணீரில்லை; அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதேபோல், மாணவர்களை பொருத்தவரையில் கல்வி இலவசமில்லை; கல்விக்கட்டண கொள்ளை; படித்த படிப்புக்கு வேலையில்லை மற்றும் அதனால் கல்விக் கடனை கட்ட முடியவில்லை இப்படி பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தனியார்மயம், இத்தனியார் மயத்தால் தங்கள் பிள்ளைகளை இழந்த பல பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் இந்த அரசு தனியார் முதலாளிகளின் வாராக்கடனை தள்ளுபடி செய்ய கூட்டம் போடுகிறது. மேலும் இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வியில் நூறு சதவிகித தனியார்மயத்தை கொண்டுவர முயற்சிக்கிறது இந்த மோடி அரசாங்கம். இப்படி ஒருபுறம் கல்வியை காசாக்கி கொண்டே மறுபுறம் கல்வியை காவிமயமாக்க துடிக்கிறது. அப்படி கல்வி காவி மயமாக்கப்பட்டால் குஜராத்தை போன்றதொரு ஆர்.எஸ்.எஸ் வேட்டைக்காடாக தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் மாறும்” என எச்சரித்துப் பேசினார்.

அனுபவ உரை தோழர் குமார் :

தோழர் குமார்
தோழர் குமார்

“மோடி அரசு கொண்டுவரத்துடிக்கும் புதிய கல்விக்கொள்கையின் அபாயத்தை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக இலட்சக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்தும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்துவருகிறோம். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 20, 2016 அன்று தமிழகம் முழுவதும் மாணவர்களை திரட்டி புதிய கல்விகொள்கையின் நகல்களை மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்கள் முன்பு எரித்து எதிர்ப்பை தெரிவித்தோம். சென்னை மற்றும் கோவையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், விழுப்புரத்தில் போராடிய மாணவர்களை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்த காவல் துறையினரையும் ஜெயா-மோடி அரசையும் வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று கூறினார். மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இருந்தும் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை உணராமல் இருக்கும் சூழலில் பு.மா.இ.மு தலைமையில் இப்போராட்டத்தை முழுவீச்சில் எடுத்து செல்வோம் என்றும் கூறினார்.

சிறப்புரை தோழர் காளியப்பன்:

nep-exposure-meeting-trichy-com-kaliappan
தோழர் காளியப்பன்

“புதிய கல்விக்கொள்கையானது அணுகுண்டின் அபாயத்திற்கு ஈடானது. மேலும் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாட்டில் இது மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவிலே இதுவரை பல கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவும் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் கல்வியாளர்களால் ஆய்வு செய்து வரையறுக்கப்பட்டவை. ஆனால் இதனை அவசர அவசரமாக வெறும் 3 மாத காலத்திற்குள்ளாகவே ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கிய பொறுப்புகளை வகித்து பணிபுரிந்த அதிகாரிகள் மட்டுமே வரையறுத்து சூழ்ச்சிகரமான முறையில் அதன் வரைவினை வெளியிட்டு இருக்கிறார்கள். இக்கல்விக் கொள்கையை மேலோட்டமாக பார்ப்போமேயானால் இந்தியாவின் கல்வியை உலக தரத்திற்கு உயர்த்துவது போல தோன்றும். ஆனால் உன்னிப்பாக பார்ப்போமேயானால் இது ஒரு தேன் தடவிய விசம் என்பது புரியும். உலக பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக கல்வியை அடகு வைக்கும் முறைதான் இந்த கல்விக் கொள்கை. உலகம் முழுவதுமே கல்வி என்பது தாய்மொழி வழியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியை மறுத்து மாணவர்களின் திறமையை, அறிவு வளர்ச்சியை முற்றிலுமாக தடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான கொத்தடிமைகளை உருவாக்கவே முயற்சிக்கிறது. மேலும் வேத கலாச்சார குப்பையான சமஸ்கிருதத்தை அனைத்து பள்ளிக்கல்லூரிகளிலும் கட்டாயமாக திணித்து மாணவர்களை இயல்பிலேயே சிந்தனைரீதியாக சாதி-மத வெறியுடன் வளர்க்க நினைக்கிறது.

nep-exposure-meeting-trichy-5கட்டாய தேர்ச்சியின் காரணமாக மாணவர்களின் தரம் குறைந்து விட்டது, எனவே ஐந்தாம் வகுப்பு முதல் அவர்களை வடிகட்டி தரப்படுத்துகிறோம் என்கிறது இக்கல்விக் கொள்கை. அப்படி மாணவர்களின் தரம் குறைந்ததற்கு யார் காரணம் என்றால் இந்த அரசு தான். ஆனால் அதனை மறைத்து குறைந்த கற்றல் திறன் மாணவர்களை குழந்தை தொழிலாளியாக மாற்றி அவர்களின் உழைப்பை சுரண்டி குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வரத் துணிந்து விட்டது மோடி அரசு.

தேசிய அளவிலான திறனாய்வு தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி பெரும்பான்மையான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தடைக்கல்லாக இக்கல்விகொள்கை நிற்கப்போகிறது. மேலும் இனி அரசு புதிதாக எந்த கல்வி நிறுவனங்களையும் திறக்காது, பழைய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மானியமும் வழங்காது. தரமான கல்வி எனும் பெயரில் அதிக கட்டணங்களை வசூல் செய்யும் பன்னாட்டு பல்கலைகழங்கள் மட்டுமே அரசால் ஊக்குவிக்கப்படும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை இழுத்து மூடுவது. இதன் மூலம் அருகமை பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளின் லாபத்தை பெருக்குவது. இப்படி பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவும், பார்ப்பனிய பனியா கும்பலின் நலனுக்காகவும் ஒரு கல்வி கொள்கையை உருவாக்கி ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பறிக்கும் இந்த அபாயத்தை முறியடிக்க வேண்டும்” என ஆய்வுப்பூர்வமாக விளக்கிப்பேசினார்.

கருத்தரங்கு உரைகளுக்கு இடையிடையே “நாமக்கட்டி ஆளப்போகுது”, “சமசுகிருதம் படிக்கப்போறியா?”, “எச்சரிக்கை! எச்சரிக்கை!” முதலிய ஆர்.எஸ்.எஸ்சின் அபாயம் குறித்த ம.க.இ.க வின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இளந்தோழர்களின் முன்முயற்சியால் அரங்கத்தில் புதிய கல்விக் கொள்கையின் அபாயத்தை உணர்த்தும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பல்வேறு பள்ளிக் கல்லூரிகளிலிருந்து வந்த மாணவர்கள் ஆர்வமாக கருத்தரங்கினை கவனித்தனர். புதிய கல்வி கொள்கையின் அபாயத்தை உணரும் வகையில் இக்கூட்டம் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

2.  மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூடும் வரை தொடர் போராட்டம்!

உழைக்கும் மக்களே அணிதிரண்டு வாரீர்! வாரீர்!

நாள்: 28.09.2016 நேரம்: காலை 11 மணி

manaparai-othakadai-tasmac-siege-noticeகெட்டது போதும்!
கெடுத்தது போதும்!
டாஸ்மாக்கால் பட்டது போதும்!
வீட்டை நாட்டை கெடுக்கின்ற
உயிரை, உடலை பாதிக்கின்ற
அரசு மதுபானக்கடையை
இழுத்து மூடுவோம்!

குடும்பம் தோறும்
குடிக்க வைத்து
வறுமையில் நாளும்
வாடவைத்து,
உழைத்த காசை உருவிகிட்டு
ஊரை கெடுக்கும் செயலை செய்ய
ஆட்சி எதற்கு? அதிகாரிகள் எதற்கு?

ஊட்டச் சத்து டானிக்கா – நீ
ஊருக்குள்ளே விற்கும் சரக்கு,
ஊரே திரண்டு மூட சொல்லியும்
போலீசை வைத்து திறப்பது எதற்கு?

வரம் வேண்டி தவமிருந்தாதான்
வாரம் இருமுறை குடிதண்ணி
கிடைக்குது!
வாழ்வை கெடுக்குற சரக்கு வண்டி
வாரம் முழுக்க வந்து போகுது!

படிக்கிற பிள்ளைக்கு நல்ல
பள்ளிக்கூடம் இல்லை!
வகுப்புகள் தோறும் வாத்தியார்
இல்லை!
சுத்தம் இல்லை! சுகாதாரம் இல்லை!
சுகாதார நிலையம் ஊருக்குள்
இல்லை!
ஆட்சியாளர்களே! அதிகாரிகளே!
நீங்கள், ஆள்வதும், வாழ்வதும்
யாருக்காக?
வருஷம் முழுக்க வழிபறி கொள்ளை!
வழி நெடுக பெண்களுக்கு
தொல்லை!
நாட்டில் நடப்பதை நாளும்
பார்க்கிறோம்
நாத்தம் பிடித்த கடையை மூடி
நல்வழிக் படுத்த ஓரணியில்
திரள்வோம்!

மக்களால் நான்!
மக்களுக்காக நான்!! – மகராசி நீ
சொல்வது உண்மைன்னா
மக்கள் சொல்கிறோம்
டாஸ்மாக் கடையை மூடு!

மக்கள் அதிகாரம்
மணப்பாறை
தொடர்புக்கு : 98431 30911,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க