privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்இந்து முன்னணியை விரட்டுவோம் - சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்

-

1.சென்னை

கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம் – சென்னையில் ஆர்ப்பாட்டம்

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-posterகோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 01-10-2016 அன்று நடைபெற்றது.

சசிகுமார் என்ற இந்துமுன்னணியினைச் சேர்ந்த நபர் கொல்லப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்பட்ட இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காலிகள் கோவையை சூறையாடினர், போலீசோடு சேர்ந்து கொண்டு.

இந்த வெறியாட்டத்தை கண்டித்து அடுத்த நாளே வியாபாரிகளும் முற்போக்கு அமைப்பினரும் சுமார் 800 பேர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு இருக்கிறார்கள் . இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பி.ஜே.பி – எச்சு ராஜா பார்ப்பன மதவெறியை கக்குகிறார். தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எல்லாவகையிலும் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்தி, “இந்த அரசுக்கட்டமைப்பு மக்களைக்காக்க வக்கில்லை அதுமட்டுமல்ல இதுதான் எதிரி; மக்களைக்காக்க மக்கள் அதிகாரமே தீர்வு” என்பதை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட துண்டறிக்கைகளையும் விநியோகித்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டியது; மக்களிடையில் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றது.

அதன் படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 01-10-2016 கொளுத்தும் வெயிலிலும் நடந்த ஆர்ப்பாட்டம் காவிக்காலிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாகவும் தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பை தூக்கியெறியவேண்டும் என்பதை அறிவிக்கும் விதமாகவும் இருந்தது.

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-vetrivel-chezhiyan
தோழர் வெற்றிவேல் செழியன்

இந்த கண்டன ஆர்ப்பட்டத்திற்கு மக்கள் அதிகாரம் சென்னைமண்டல ஒருங்கிணைப்பாளர் சென்னை தோழர் வெற்றிவேல் செழியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளை செயலர் வழக்கறிஞர் மில்டன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலர் தோழர் குமரன், திராவிடர் கழகத்தின் மாநில மாணவரணி  செயலர்தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலர் தோழர் ஆளூர் ஷானவாஸ், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலர் தோழர் மா.சி.சுதேஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலர் தோழர் விடுதலை ராஜேந்திரன், மக்கள் அதிகாரத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-sudhesh-kumar
தோழர் மா.சி.சுதேஷ்குமார்

சாலையை கடந்து சென்ற ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சவாரிக்கு போகாமல் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை கேட்டுக்கொண்டு இருந்து இருக்கிறார். அப்போது ஆட்டோவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் சிலர் “இவங்க எல்லாம் எதுக்கும் பயப்பட மாட்டாங்க, எவ்வளவு நேரம் ஆனாலும் இருப்பாங்க, தீவிரவாதிங்க” என்றிருக்கிறார்கள். இதைக்கேட்ட ஆட்டோ ஓட்டுனரோ, “நல்லவங்க எல்லாத்தையும்,  போராடுறவங்க எல்லாத்தையும் தீவிரவாதின்னு அப்படியே சொல்ல வேண்டியதுதானே” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

காவிக்காலிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாகவும் மக்களை பாதுகாக்க வக்கில்லாத தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பை தூக்கியெறியவேண்டும் என்பதை அறிவிக்கும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் இருந்தது.

தோழர் குமரன், தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தோழர் கணேசன், தோழர் காளியப்பன், தோழர் விடுதலை ராஜேந்திரன், தோழர் ஆளூர் ஷானவாஸ், தோழர் மில்டன் ஆகியோரின் ஆர்ப்பாட்ட உரைகள் விரைவில் தனிப்பதிவுகளாக வெளியிடப்படும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை
9176801656

2. திருச்சி

கோவையில் போலீசு உதவியுடன் BJP-RSS இந்து முன்னணி காலிகள் வெறியாட்டம் –

திருச்சியில் 04-10-2016 காலை 10 மணியளவில்

கண்டன ஆர்ப்பாட்டம்

kovai-hindu-munnani-riots-trichy-demoஇடம்: தந்தை பெரியார் சிலை, மத்திய பேருந்து நிலையம், திருச்சி.

தலைமை: தோழர் தர்மராஜ்,மாநில ஒருங்கிணைப்புக்குழு, மக்கள் அதிகாரம்.

கண்டன உரை:
திரு. திருச்சி வேலுச்சாமி,
தோழர் தமிழாதன், நாடாளுமன்ற தொகுதிச்செயலாளர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,
தோழர் சுரேஷ், நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தோழர் வாழையூர் குனா, கொள்கைபரப்புச் செயலாளர், புதிய தமிழகம்,
தோழர் கராத்தே வீரமுருகன், மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் கட்சி,
தோழர் கந்தவேல் குமார், மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்,
தோழர் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தோழர் ஜீவா, மாவட்டசெயலர்,மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தோழர் காளியப்பன், மாநில தலைமைக்குழு, மக்கள் அதிகாரம்

பெரியார் பிறந்த மண் இது ஜனநாயக முற்போக்கு சக்திகளே அணிதிரள்வீர்!

தகவல்
மக்கள் அதிகாரம்
திருச்சி தஞ்சை திருவாரூர் நாகை
94454 75157 94431 88285 96263 52829 98903736020

3. புதுச்சேரி

கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகளின் பாசிச வெறியாட்டத்தைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

ஆர் எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி, போலீசு உள்ளிட்ட பாசிச கும்பலின் தடைகளை கடந்து  04-10-2016 அன்று

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: சுதேசி மில் அருகில் நேரம் : மாலை 4.00 மணிக்கு

ஜனநாயக சக்திகள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம், புதுச்சேரி

  1. நம் இந்திய தேசம் வேண்டுமானால் காந்தி பிறந்த மண் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம். ஆனால், எம் தமிழ் தேசத்தின் பெருமை என்பது சுயமரியாதையை தமிழ் மண்ணில் விதைத்த ஈ. வெ. ரா பெரியார் அவர்களால் மட்டுமே. எம் தேசம் சுதந்திரம் அடைந்து பிரிவினையை கண்டபோது, வடமாநிலங்கள் யாவற்றிலும் இரத்த ஆறுகள் ஓடின. கலவரங்களும், படுகொலைகளும் எம் தேசத்தின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கின. மதத்தின் பெயரால் சமூகங்கள் துண்டாடப்பட்டன. அப்படிப்பட்ட காலத்திலும் கூட எம் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்து வந்தது.

    ஆனால் சமீப காலங்களில் விநாயகரின் பெயரால் மக்களை கூறுபோட கிளம்பியிருக்கும் காவி பயங்கரவாத கும்பல் எம் தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என கொக்கரிக்கிறார்கள், மிரட்டுகிறார்கள். அதனை எம் தமிழக காவல்துறையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. கோவையில் இந்துமுன்னணி பிரமுகர் சசிக்குமார் அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே முஸ்லிம்கள்தான் அதனை செய்தார்கள் என்ற பலி சுமத்தப்பட்டு அவர்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதல்களும், பள்ளிவாசல்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதும், முஸ்லிம்களுடைய கடைகள் குறி வைத்து தாக்கப்படுவதுமாக சம்பவங்கள் நடந்தேறின. ஒரு சில கடைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இவைகள் அனைத்தும் சில மக்களால் படம் பிடிக்கப்பட்டு வாட்ஸாப்பில் உலா வந்தன.
    (அன்று) எம் தேசத்தந்தை மஹாத்மா காந்தி அவர்களை ற்ஸ்ஸ் -இன் நாதுராம் கோட்சே சுட்டு கொன்றபோது அவன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குதியிருந்தான். அவனுடைய நோக்கம் இந்து – முஸ்லீம் கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதே. அன்று தொடர்ந்த கோட்சேவின் சிந்தனை இன்றுவரை இவர்களை அழைத்து சென்றுகொண்டிருக்கிறது.

    தாக்குதலில் ஈடுபட்ட சிலரை காவல்துறை கைது செய்து இருப்பதாக செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்தாலும் அவர்களை தண்டிக்கும் விதத்தில் காவல்துறை எத்தகைய கடுமையான போக்கினை கையாளப்போகிறது என தெரியவில்லை. கலவரங்களில் ஈடுபடும்போது அதனை தடுக்க வேண்டிய காவல்துறை தனது இரு கைகளையும் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்த காணொளி காட்சிகளை நாம் பார்த்திருப்போம். எனவே, கைது செய்யப்பட குற்றவாளிகளுக்கு மாமியார் வீட்டில் கிடைக்கும் விருந்து உபசரிப்பை போன்ற கவனிப்பு மட்டுமே இருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்..

    இவ்வாறான சூழலில் சமுதாய ஒற்றுமையை முன்னிறுத்தியும், தாக்குதலில் ஈடுப்பட்ட காவி பயங்கரவாதிகளை கைது செய்து தண்டித்திட கோரியும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்திருப்பது முஸ்லிம்களுக்கான, சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திருக்கின்றது. குஜராத்தில் நடந்த அநீதிகளுக்கு எதிராக தீஸ்தா என்ற மனிதநேயப்போராளி இன்றுவரை எவ்வாறு அவர்களோடு துணை நிற்கின்றாரோ அதேபோல் மக்கள் அதிகாரம், தமிழ் அமைப்புக்கள், கமியூனிச தோழர்கள், தலித் சமூகம் மற்றும் தந்தை பெரியார் வலி வந்த தோழர்களும் உண்மையின் பக்கம் நின்று கொண்டிருப்பதை நினைக்கும்போது ஆறுதல் ஏற்படுகிறது.

    சசிகுமாரை கொன்றவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற வேண்டியவர்களே. ஆனால், சசிக்குமார் மரணத்தை வைத்து அரசியல் நடத்த நினைக்கும் இந்து முன்னணி போன்ற மதக்கலவர கும்பல்களை தமிழக அரசு உடனடியாக தடை செய்திட வேண்டும். அப்படி செய்திட்டால் மட்டுமே தமிழகத்தை மோதல் போக்கிலிருந்து காப்பாற்றிட முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க