privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயங்கொண்டம் டாஸ்மாக் படுகொலை - ஒகேனக்கல் பரிசல் மக்கள் மீது தாக்குதல்

ஜெயங்கொண்டம் டாஸ்மாக் படுகொலை – ஒகேனக்கல் பரிசல் மக்கள் மீது தாக்குதல்

-

1. ஜெயங்கொண்டம் – டாஸ்மாக் போதையில் ஓட்டுனர், 15 உயிர்கள் படுகொலை – ஜெயா அரசே முதல் குற்றவாளி

jayankondam-shutdown-tasmac-pp25-09-2016 இரவு 8.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அருகில் உள்ள கச்சிபெருமாள் கிராமத்தில் இருந்து மினிலாரியில் புதுகுடி கிராமத்திற்கு துக்க காரியத்திற்காக சென்று விட்டு வீடு திரும்பிய போது அவர்களின் கிராமத்திற்கு எதிரே சிமென்ட் ஏற்றி வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அது அந்த பகுதிவாழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை அறிந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை பட்டாளம் படை சூழ அவசர அவசரமாக காலை 7 மணி முதலே எடுத்துச் சென்று தனது சொந்த செலவில் அடக்கம் செய்தது அரசு.

இந்த நிகழ்வுக்கு டாஸ்மாக்தான் காரணம் என்பதை உணர்ந்த அதிகாரிகள், மக்கள் கோபம் கொண்டு கடைகளை அடித்து நொறுக்கி விடுவார்கள் என்று அஞ்சி ஜெயங்கொண்டம் முதல் உடையார்பாளையம் வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அன்று காலை முதலே மூடி விட்டது. மக்கள் ஏதும் செய்யாத பட்சத்தில் மாலை மீண்டும் திறந்து விட்டது.

விபத்துக்குக் காரணம் மக்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை ஓட்டியவர் குடித்து இருந்ததுதான் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு 90 விழுக்காடு மதுதான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததுதான். எத்தனை பேருடைய உயிரை எடுத்தாலும் டாஸ்மாக் கடையை மூடாத இந்த அரசுதான் முதல் குற்றவாளி.

ஜெயா அரசு டாஸ்மாக் நேரத்தை குறைப்பதாகக் கூறி நாடகமாடியது. ஆனால், காஐல 6 மணி முதலே டாஸ்மாக் சாராயம் விற்கப்படுகிறது என்பது ஊரறிந்த ரகசியம். மேலும், உடையார்பாளையம் பகுதியைச் சுற்றி பல இடங்களில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இதனால் காவல்துறை நன்றாக கல்லா கட்டுகிறது.

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லக் கூடாது என்ற விதி இருந்தும் காவல்துறை இதை அமல்படுத்துவது இல்லை. அப்படி வாகனத்திடம் இருந்து ஒரு தொகை பெற்றுக் கொண்டு தங்களுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கே இந்த சட்டம் காவல்துறைக்கு பயன்படுகிறது.

அரியலூர் மாவட்டம் தற்போது சுண்ணாம்பு கற்களுக்காக கற்பழிக்கப்படுகிறது. பல சுரங்கங்களில் இருந்து எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்படுகிறது. இதை ஏற்றிச் செல்லும் லாரிகள் விதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே ஏற்றிச் செல்கின்றன. இதற்கு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் துணை போகின்றனர். இவர்களுக்கு அதிக வருவாயைத் தரும் கற்பகமரமாக இந்த சுரங்கத் தொழில் நடைபெறுகிறது. அப்படி ஏற்றி வந்த வாகனம்தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், சென்ற மாதத்தில் காரைக்குறிச்சி கிராமத்தில் செயல்படும் மணற்குவாரியில் இருந்து மணல் ஏற்றிவந்த லாரி ஏறி, சிலால் கிராமத்தில் பச்சிளம் குழந்தை மாண்டது.

மேலும், இந்த கச்சிபெருமாள் கிராமத்தில் நடந்த விபத்தில் இறந்தவர்கள் இருவர் மட்டும்தான் விபத்து நடைபெற்ற இடத்திலேயே இறந்தவர்கள், மற்ற அனைவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிர்காக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க முடியாததும் இந்த சாவுகளுக்கு முக்கிய காரணம். எந்த மருத்துவ அவசரத்துக்கும் தஞ்சாவூர் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை.

ஜெயாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதும் அப்பல்லோவுக்கு போக முடியும். அரசு மருத்துவமனையே கதி என்று இருப்பவர்களுக்கு போஸ்ட் மார்ட்டமே உயர் சிகிச்சை.

இந்த நாட்டில் மருத்துவம், கல்வி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் சாமானியனுக்கு இல்லை என்பது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூடாதவரை இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த டாஸ்மாக் கடைகளை கொலையாளிகளே மூடுவார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம். இந்த சனியனை உழைக்கும் மக்களாகிய நமது அதிகாரத்தை நிறுவுவதன் வழியாகத்தான் மூட முடியும். அப்போதுதான் நமது பிற உரிமைகளையும் தேவைகளையும் பெற முடியும் என்பது குன்றின் மேலிட்ட விளக்கு.

தகவல்

மக்கள் அதிகாரம்,

ஜெயங்கொண்டம்

2. ஒகேனக்கல்

பரிசல் ஓட்டும் தொழிலை முடக்கி, வாழ்வுரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தாக்குதல், பொய்வழக்கு, சிறை

றட்சிக்கு பேர்போனது தருமபுரி மாவட்டம் என்றாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் இடம்தான் இம்மாவட்ட்த்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல். மேட்டூர் அணைகட்டிய போது அப்பகுதியில் கரையோரம் வசித்த மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். அப்படி இடம் பெயர்ந்த பகுதிதான் ஒகேனக்கல்லில் இருக்கும் ஊட்டமலை என்னும் கிராமம். இப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு எண்ணெய் மஜாஜ் செய்யும் தொழிலும்,சேவியர் சமூகத்தை சார்ந்த மக்கள் படகு ஒட்டுவதும்,மீன் பிடித்தொழிலும் 50, 60 வருடங்களாக ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக படகு (பரிசல்) ஓட்டும் தொழிலில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

hogenakal-people-power-1இங்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் இச்சுற்றுலா தலத்தை சுற்றி பார்க்க வரும் மக்களை படகு சவாரில் சுற்றி காட்டும் இத்தொழிலை நம்பிதான் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை படகு சவாரி செய்யும் போது படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரழந்தனர். அந்த சம்பவத்தில் இருந்து தொடர்ச்சியாக படகு ஓட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மழை காலங்களிலும், தண்ணீர் வரத்து அதிகம் வரக்கூடிய காலங்களிலும் படகு சவாரி முற்றிலும் நிறுத்தப்படும். அப்போதும் உரிய நிவாரணம் ஏதும் வழங்குவதில்லை. இந்நிலையில் கடந்த 1 வருட காலமாகவே தண்ணீர் வரத்து இல்லாத காலங்களிலும், எப்போதும் அனுமதி கிடையாது என்று மறுத்துவருகிறது மாவட்ட நிர்வாகம்.

hogenakal-people-power-2முற்றிலும் அவர்களின் வாழ்க்கையே முடக்கி வறுமைக்கு தள்ளும் அதிகாரவர்க்கம். இதனையே நம்பி வாழ்ந்த வந்த தொழிலாளர்களுக்கு வேறு வேலையும் தெரியாது என்பதால் கடந்த 1 வருட காலமாக பல முறை போராடியும், மனுக்கொடுத்தும் மன்றாடியும் ஒன்றும் நடக்கவில்லை இவர்களின் பிரச்சினையை கண்டுகொள்ளவே இல்லை. எங்களுக்கு வேறு வேலை தெரியாது அதனால் இத்தொழிலை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று கேட்டபோது, வெளியூருக்கு போய் வேலையை தேடுங்கள் என்று திமிர்த்தனமாக பேசிய அதிகார வர்க்கத்தை பார்த்து அதிர்ந்து போன நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் சொல்லும் பிரச்சினை கேட்காமல் அவர்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தது போலீசு.

hogenakal-people-power-3திடீரென அவர்களின் படகை எடுத்து கவிழ்க்க முற்பட்ட காவல் துறையினரை படகை கவிழ்க்காதிர்கள் என்று தடுக்க போன தொழிலாளர்களை தாக்க ஆரம்பித்தது. இதனை பார்த்து ஓடி ஒளியாமல் நேருக்கு நேர் நின்று வார்த்தைகளாலும் ,திரும்பி தாக்கியும் பதிலடி கொடுத்தனர் அப்பகுதி மக்கள். உடனே இதனை பொறுத்தக்கொள்ளாத காவல் துறை அவர்களை பழித்தீர்க்கம் கொலை வெறியோடு அழைந்து வருகிறது. வீடு வீடாக சென்று போட்டோவை காட்டியும் ,பெயரை குறிப்பிட்டும் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. பெண்களையும் கைது செய்து சேலம் சிறைச்சாலையில் அடைத்துள்ளது. அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு செல்லும் வழியில் கடுமையாக தாக்கியிருக்கிறது. இப்படி மொத்த நிர்வாகமும் செயலிலந்து போனதற்கான இன்னும்மொரு சாட்சிதான் இப்பகுதி மக்கள் மீதான அடக்குமுறை.

hogenakal-people-power-4தற்போது பரிசல் ஓட்டும் தொழிலாளர்களை அத்தொழிலை இருந்து விரட்டி ஆயிரகணக்கான மக்களை வெளியேற்றிவிட்டு அத்தொழிலில் தனியாரை அனுமதிக்கும் சதித்திட்டம் அடங்கியிருக்கிறது.

hogenakal-people-power-5பாதிக்கப்பட்ட மகேஸ்வரி கூறும் போது, “ரோட்டுல கூடத்தான் பஸ் ஆக்ஸிரெண்டு ஆகுது, அதுக்காக பஸ்சையே உடுறதில்லையா? எதிர்பாராம நடந்த விபத்துக்கு எங்களை முற்றுலும் தொழில் பண்ணாம தடுக்குறாங்க” என்று உள்ள குமுறலை வெளிப்படுத்தினார்.

மகேஸ்வரிக்கு மூன்று ஆண் மகன் உள்ளனர். இவர்களில் 2 பேர் படகு ஒட்டும் தொழில் செய்து வருகிறார்கள். இன்னொரு மகன் எம்.எஸ்.சி, பிஎட் படித்துவிட்டு கடந்த 5 வருடங்களாக அரசு பணிக்காக தேர்வு எழுதி வருகிறார். அவ்வாறு எழுதி தேர்ச்சி அடைந்தாலும் எந்த போஸ்டிங்கும் போடவில்லை.

hogenakal-people-power-6“கவருமெண்டு வேலை வாங்கின பிறகுதான் கல்யாணம் பண்ணிபேன்னு சொல்லுறான் அதுக்குள்ள அவனுக்கு வயசே ஆயிடும், என்னைக்கு வேலை கெடக்குறது, என்னைக்கு கல்யாணம் பண்ணறது, எங்க ஆம்புளங்க சம்பாதனைய நம்பிதான் இருக்கிறோம். இப்ப இந்த தொழிலும் செய்யமுடில நாங்க என்ன பண்ணுறது, நான் இந்த மீனை வறுத்து விக்கிறேன். ஏதோ 1 பீஸ்,2 பீஸ் ஓடுனாத்தான் உண்டு. அதுவும் ஞாயித்து கிழமையா இருந்தா ஓரளவுக்கு வியாபாரம் இருக்கும்,எத்தனை நாளைக்கு பொறுத்து போறது, அதனாலதான் குடும்பத்தோட போராட்டம் பண்ணினோம். அன்னையிலிருந்து போட்டோவை காட்டியும், இன்னும் லிஸ்ட் இருக்குதுன்னு வீடு வீடா சுத்தி சுத்தி வர்றாங்க. இந்த ஊர வுட்டுட்டு ஓடிறலாம்னு இருக்குது, பயந்து சாக வேண்டியதா இருக்குது, என்ன பண்ணறது, கெவருமெண்டு அவங்க கையில இருக்குதுன்னு ஆடுறாங்க” என்று வேதனையை கொட்டித்தீர்த்தார்கள்.

வாழ்வுரிமைக்காக போராடிய மக்களை போலீசு கடுமையாக தாக்கியதையும், பொய்வழக்கு, சிறைப்படுத்தப்பட்டிருப்பதை கண்டித்தும் மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியது. இதைபார்த்த அதிகாரவர்க்கம் தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதாக கூறி 10 தோழர்களை மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பினரையும் கைது செய்ய சொல்லி இருக்கோம் என்று டிஎஸ்பி பரிசல் ஓட்டிகளை அழைத்து மிரட்டியுள்ளார். இங்கு யார் மக்கள் அதிகாரம் அமைப்பில் இருப்பது என்று விசாரித்துள்ளது காவல் துறை. நமது வாழ்வு சூறையாடும் போது போலீசு என்ற அச்சதை தூக்கியெறிந்து வீதிக்கு வருவது தான் போராடுவதுதான் தீர்வாக முடியும். இது வெகுதூரத்தில் இல்லை ?

[படங்களைப் பெரிதாகப் பார்த்து அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

பு.ஜ செய்தியாளர்
தருமபுரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க