privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்திருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை - களச் செய்திகள் 06/10/2016

திருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை – களச் செய்திகள் 06/10/2016

-

1. திருச்சி

கண்டன ஆர்ப்பாட்டம்!

kovai-hindu-munnani-riots-trichy-demo-01கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னணி வானர படைகள் நடத்திய வன்முறை வெறியாட்டமும், கடைகள் சூறையாடி கொள்ளையடிக்கப் பட்டதும் நாடே அறிந்த செய்தி.
காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டே நாடு முழுவதும் கலவரங்களை நடத்தி மக்களை மோதவிடும் சூழ்ச்சியை செய்து வருகின்றனர்.

மாட்டுத்தோலை உரித்தார்கள் என காரணம் காட்டி வடமாநிலங்களில் கலவரம் செய்து மோதலை உருவாக்குகின்றனர். மதமாற்றம் செய்கிறார்கள் என காரணம் காட்டி சிறுபான்மை மக்கள் மீது வன்முறையை ஏவிவிடுகின்றனர்.

kovai-hindu-munnani-riots-trichy-demo-02இஸ்லாமியர்கள், தலித் மக்கள், ஜனநாயக சக்திகள் என அனைவர் மீதும் தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடும் இந்த காவி பயங்கரவாதிகள் தமிழகத்திலும் காலுன்ற பார்க்கின்றனர். விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் அவர்கள் ஆண்டுதோறும் நடத்தி வரும் வெறியாட்டங்கள் ஒருபுறம், இன்னொருபுறம் இந்து முன்னணி, பா.ஜ.க மற்றும் சங்பரிவார அமைப்பு நிர்வாகிகள் எனப்படுவோர் பெரும்பாலும் சமூகவிரோத கிரிமினல் கும்பலாகவே உள்ளனர். ரியல் எஸ்டேட் புரோக்கர் , கட்டப்பஞ்சாயத்து, கள்ளத்தொடர்பு என செத்துப்போன பெரும்பாலானோரின் பின்புலம் இதுவாகவே உள்ளது. காவல்துறை அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்துகின்றது.

kovai-hindu-munnani-riots-trichy-demo-03இத்தகைய சூழ்நிலையில் தான் கோவையில் சசிகுமார் என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவரின் இரத்தம் காயும் முன்னே வெறிகொண்டு முஸ்லீம் மக்களின் கடையை சூறையாடுவது, கொள்ளையடிப்பு, வாகனங்களை தீக்கிரையாக்குவது என பொறுக்கித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்துத்துவ வெறியர்கள்.
இஸ்லாமிய மக்களிடம் கோபத்தை தூண்டிவிட்டு அதில் குளிர் காய செய்த சதியே இத்தகைய வன்முறைக்கு காரணம். இதற்கு காவல்துறை துணை போயுள்ளது. 12 கி.மீ ஊர்வலத்தை அனுமதித்து அவர்களின் (வன்முறைக்கு) கொள்ளைக்கு காவல் காத்து நின்றது.

kovai-hindu-munnani-riots-trichy-demo-04இதை அனுமதித்தால் நாளை நாடு முழுவதும் இத்தகைய சமூக விரோதச் செயல்களை நிறைவேற்றுவார்கள். ஆகவே இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி தரமறுத்தது. தடையை மீறி 04-10-2016 அன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மக்கள் அதிகாரம், ம.க.இ.க, பு.மா.இ.மு, ஆதித்தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட தோழர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

kovai-hindu-munnani-riots-trichy-demo-05கட்சிகளைச் சேர்ந்த பலர் தேர்தல் நேரம் என்பதால் கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு ஆர்ப்பாட்டத்தில் பார்வையாளர்களாக கலந்து கொண்டு சென்றனர். ஆதித் தமிழர் கட்சி செயலர் வீரமுருகன் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்.

இப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமையேற்று நடத்தினார். காலை 11.00 மணி அளவில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ஒட்டி தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி முறியடிப்பதே இன்றைய நமது முக்கிய கடமையாக உள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவண்
மக்கள் அதிகாரம்
திருச்சி
94454 75157

2. புதுவை

கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டம்!

kovai-hindu-munnani-riots-puduvai-demo-1டந்த 22/9/2016 அன்று கோவையில் இந்து முன்னணியை சேர்ந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட் புரோக்கர் சசிகுமார் செத்து போனதற்கு கோவை நகரத்தையே கலவரத்தின் மூலம் அச்சுறுத்தி மக்களின் கடைகளை கொள்ளையடித்து சூறையாடி, அரசு வாகனங்களை உடைத்து- எரித்து குஜராத் மாடலில் வன்முறையை தூண்டினர் இந்துத்துவ ரவுடிகள். உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றி தமிழகத்தில் காலூன்றவே பல கலவரங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த காவிபடையின் பாசிச வன்முறையை கண்டித்து புதுவையில் ஐந்து நாட்களாக மக்கள் மத்தியில் துண்டு பிரசுரம் கொடுத்து, “பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட மதவெறி அமைப்புகளை நமது நாட்டு மண்ணில் இருந்து அழித்தொழிக்காமல் மக்களுக்கு விடுதலை கிடையாது” என பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

kovai-hindu-munnani-riots-puduvai-demo-5கடந்த 30-09-2016 அன்று சாரம் பெரியார் சிலை அருகில் “காக்கிச் சட்டை அனுமதியுடன் காவிப்படை நடத்திய வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்” நடத்த புதுவை காவல் துறையிடம் அனுமதி கேட்ட போது , “நீங்கள் கேட்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது” என்று மறுத்துவிட்டனர்.

பிறகு “முத்தியால் பேட் மார்க்கெட்டில் நடத்திக் கொள்கிறோம்” என கேட்ட போது, “அங்கும் உங்களுக்கு அனுமதி இல்லை” என்றனர். “ஏன்” என்று கேட்டதற்கு, “அங்கு கோவில்கள் இருக்கின்றன, பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்” எனக் கூறி அங்கேயும் அனுமதி மறுக்கப்பட்டது. “இனி நீங்கள் அனுமதி இல்லை என்று மறுத்தால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக மூன்றாவதாக கேட்ட சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதித்தது காவல் துறை, அதுவும் வாய்வழியாக.

தோழர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி தயாரித்துக்கொண்டிருக்கும் போது காவல் துறையில் எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்து நடத்திக்கொள்ள சொன்னார்கள். காக்கிகள் 7 நபர்களை பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தனர்.

kovai-hindu-munnani-riots-puduvai-demo-3ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் சாந்தகுமார் ஜனநாயக சக்திகளை வரவேற்று துவக்கி வைத்தார்.

1. தோழர் தீனா அமைப்பாளர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி.

2. தோழர் கோகுல் காந்திநாத், ஒருங்கிணைப்பாளர், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், புதுச்சேரி

3. தோழர் புருசோத்தமன், பொதுச்செயலாளர், ஏ.ஐ.சி.சி.டி.யு, புதுச்சேரி

4. தோழர் தினேஷ் பொன்னையா, மாநிலக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி

5. தோழர் லோகநாதன், இணைச்செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. புதுச்சேரி.

இவர்கள் அனைவரும் இந்துமத வெறியர்களை கண்டித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டம் நடக்கும் போது இடையிடையே இந்து முன்னணி காலிகள் தோழர்கள் பேசுவதையும் எவ்வளவு பேர்கள் கலந்துகொள்கின்றனர் எனவும் ஆய்வு செய்தனர். கலவரம் எதுவும் செய்ய முடியாமல் தவியாய் தவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் புதுவை மக்களுக்கும் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு புது நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

காலிகளின் கால்களில் பெரியாரின் மண்ணை மிதிபட விடமாட்டோம்!
பார்ப்பனிய மதவெறி ஆட்டத்திற்கு முடிவுகட்டுவோம்!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

3. தருமபுரி

தமிழகத்தின் மீதான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி!

ஒருதலை பட்சமான ஒருமைப்பாட்டுக்கு கட்டுப்பட மறுப்போம்

என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக தர்மபுரி பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் உரிமையை பறிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-யின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தியும், மோடியின் உருவ பொம்மையை எரித்தும் விண்ணதிரும் முழக்கமிட்டதும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.

dharmapuri-modi-photo-burning-1அப்போது தோழர்களை கைது செய்ய முயன்ற காவல் துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை ஐநூறுக்கும் மேற்ப்பட்ட மக்கள் கவனித்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது பகுதி மக்களிடேயே காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் எதிரி பி.ஜே.பி-தான் என்பதை பதிய வைக்கும் வகையில் அமைந்தது. பிறகு பெண்கள் குழந்தைகள் உட்பட போராடியவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது மாலை 7 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தனர்.

தமிழ்நாட்டின் கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரியம்
தமிழன் உணர்வை அவமதிக்கும்
மோடி அரசின் கயமைத்தனத்தை
தோலுரிப்போம் தோலுரிப்போம்.

dharmapuri-modi-photo-burning-4ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி
காங்கிரசுக்கு எதிராளி
தமிழன் உரிமை பறிப்பிலே
கர்நாடகத்தின் கூட்டாளி

சித்தராமையா நரேந்திரமோடி
ஊரை ஏமாற்ற லாவணி
காவிரி உரிமை மறுப்பிலே
தமிழனுக்கு எதிரணி

போதும்நிறுத்து போதும்நிறுத்து
உன் தேசிய ஒற்றுமை கூப்பாட்டை
போதும்நிறுத்து போதும்நிறுத்து

பதில்சொல் பதில்சொல்
நரேந்திரமோடியே பதில்சொல்.
தமிழகம் என்ன பாகிஸ்தானா
இல்லை-இந்தியாவிற்குள் தனிநாடா

dharmapuri-modi-photo-burning-7பதிலடி கொடுப்போம் பதிலடிகொடுப்போம்
மோடிஅரசின் காழ்ப்புணர்ச்சிக்கு
பதிலடிகொடுப்போம் பதிலடிகொடுப்போம்.

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
கன்னட இனவெறி தூண்டிவிட்டு
தமிழன் உரிமைக்கு வேட்டுவைக்கும்
ஆர்எஸ்எஸ்- பிஜேபி கும்பலை
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்.

ஒண்றினைவோம் ஒண்றிணைவோம்
தமிழ்நாட்டுக்கு எதிரான
பார்ப்பன பாசிச பாஜகவை
பெரியார் பிறந்த மண்ணிலே
ஓட ஓட விரட்டியடிப்போம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
தருமபுரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க