திருச்சி: நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்!
நடுவர்மன்றம் – இடைக்காலத்தீர்ப்பு – இறுதித்தீர்ப்பு – மீண்டும் வழக்குகள், உச்சநீதி மன்றத்தின் அவ்வப்போதைய பிச்சைப்போடும் தீர்ப்புகள்…
இவற்றால் மத்திய அரசுமீது நம்பிக்கைவைத்திருந்த விவசாயிகளுக்கு பெரிய பட்டை நாமத்தைச்சாத்தி கழுத்தறுத்திருக்கிறார் மோடி !
நாற்பது ஆண்டுகளாகத் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராகிப்போயிற்று. ஆட்சிக்கு வந்தால் மேலாண்மை வாரியம் அமைப்போம், காவிரிச் சிக்கலைத் தீர்ப்போம் என வாய்ச் சவடால் அடித்த மோடியின் பா.ஜ.கதமிழகத்தில் காவிரி நீர் விட மறுத்து, தமிழர்களைக் தாக்கி, சொத்துக்களை சூறையாடும் ரெளடித்தனத்தில் இறங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு சாக்கடையில் வீசிய போது, மோடியே நேரில் தலையிட்டுப் பேசினால்தான் சிக்கல் தீருமென சிறுபிள்ளைத்தனமாகப் பேசிய தமிழகத்தலைவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதென நிராகரிக்கிறார் மோடி.
சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழகத்தில் நடந்த கடையடைப்பை திமுக அரசு ஆதரித்ததற்காக “ஆட்சியைக் கலைக்க உத்தரவிடுவோம்” என எக்காளமிட்ட உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தின் அடாவடித் தனத்திற்குத் துணைபோகும் வகையில் “கடவுள்தான்காப்பாற்ற வேண்டும்” என மண்டியிடுகிறது. ஒவ்வொரு முறையும் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முறையிடும் போதும் அதற்கு இணங்கி, தான் திறக்க உத்தரவிட்ட நீரின் அளவை 15OOO, 12OOO, 6OOO கன அடி என குறைத்து தன்பங்குக்கு அநீதியிழைக்கிறது உச்சநீதிமன்றம்.
இரு மாநில நதி நீர் சிக்கல்களை நியாயமாகத் தீர்ப்பதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாது, தனது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு பகுதி மக்களை திட்டமிட்டே வஞ்சிக்கும் துரோகத்தையும் செய்கிறது பா.ஜ.க, காங்கிரஸ் கும்பல். குறிப்பாக ஆர.எஸ்.எஸ் பா.ஜ.க கும்பல் தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு தமிழகம் மிகப்பெரும் தடையாக இருக்கிறது என்பதால் கூடுதல் ஆத்திரத்துடன் தமிழகத்தை வஞ்சிக்கிறது. கார்ப்பரேட் கொள்ளையர்களின் லாபவெறிக்காக காடுகளை அழிப்பது, தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்வளங்களை சீர்குலைப்பது, கிரானைட், மணற்கொள்ளை என இயற்கைச் சூழலை நாசம் செய்வது, மழைவளம், நீர் ஆதாரம் இவற்றை முற்றாக அழிக்கும் வேலையை “வளர்ச்சி” என்ற பெயரால் அரங்கேற்றி வருகின்றன மத்திய மாநில அரசுகள். நீர் பங்கீட்டுச்சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. மத்திய மாநில அரசுகளோ, நீதிமன்றங்களோ மக்கள் பிரச்சனைகளைத்தீர்க்கத்தவறிவிட்டது மட்டுமின்றி மக்களுக்கு எதிரான அமைப்புகளாக சீரழிந்துவிட்டன.
எனவே, மாற்று வழிகளை சிந்திப்போம்!
இந்த அரசுக்கட்டமைப்புக்குள்ளே அல்ல அதற்கு வெளியே!
கருத்தரங்கம்
நாள் : அக்டோபர் 12, 2016.
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : சண்முகா திருமண மண்டபம், புத்தூர் 4 ரோடு, திருச்சி.
தலைமை : தோழர் ப.தர்மராஜ், மாநில ஒருங்கிணைப்புக் குழு, மக்கள் அதிகாரம்.
கருத்துரை :
திரு. காடுவெட்டி ந. தியாகராஜன், திருச்சி வடக்கு மாவட்டச் செயலர், திமுக
தோழர். த. இந்திரஜித், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச் செயலாளர்.
திரு. திருச்சி. இ. வேலுச்சாமி
திரு. S.பாலசுப்ரமணியன் தீட்சதர். மாவட்டத் தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்
திரு. ம.ப.சின்னதுரை, மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம். திருச்சி
பொறியாளர். N.நடராஜன், (ஓய்வு) பொதுப்பணித்துறை. திருச்சி
தோழர். நாகப்பாண்டி, பழனிமலை பலையர் புலையர் கூட்டமைப்பு, கொடைக்கானல்.
சிறப்புரை : தோழர். ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு 9445475157
திருச்சி மாவட்டம்
கடலூர்: நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்!
மக்கள் அதிகாரம் விழுப்புரம் மண்டலம் சார்பில் நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் எனும் தலைப்பில் அக்டோபர் 09 2016 அன்று கடலூர் பகுதியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்களும், தோழர்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.
தலைமை : தோழர். பாலு,
மக்கள் அதிகாரம் விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர்
கருத்துரை :
திரு. இள. புகழேந்தி, மாணவரணி மாநில செயலாளர், தி.மு.க.
தோழர். முல்லை வேந்தன், கடலூர் மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள்
தோழர். சேகர், கடலூர் மாவட்ட செயலாளர், AITUC.
திரு. சண்முகம், கடலூர் மாவட்ட செயலாளர், பெருமாள் ஏரி நீர் பாசன விவசாயிகள் சங்கம்.
திரு.பூங்குன்றன், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்.
திரு. சண்முகம், வெண்புறா பொது நல பேரவை செலாளர்.
தோழர். காளியப்பன், மக்கள் அதிகாரம் மாநில தலைமைக் குழு.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.