privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபுதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு !

புதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு !

-

ந்தியா முழுவதும் தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆகிய இந்துத்துவ அமைப்புகள் மக்கள் மத்தியில் காலூன்ற முயற்சித்து வருகின்றன. குறிப்பாக மக்களிடையே இருக்கும் உணர்ச்சிவசமான விசயங்களை வெறியாக மாற்றி தனது இந்து ராஷ்டிரக் கனவை நிஜமாக்கிக் கொள்ள பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றனர்.

நாடுமுழுக்க தேச வெறி !

புதுச்சேரிகாஷ்மீரில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மக்கள் எழுப்பும் இந்தியாவும் வேண்டாம் பாக்கிஸ்தானும் வேண்டாம் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற விடுதலை (ஆசாதி) முழக்கம் வலுவடைந்து வரும் சூழலில், உரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இராணுவத்தின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பதை முன் வைத்து இந்திய தேசிய வெறியைத்தூண்டி தன்னையும் காஷ்மீர் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளையும் நியாயப்படுத்த முயல்கிறது பா.ஜ.க கும்பல்.

மாநிலங்களில் இனவெறி !

அதே போல காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் என்ன செய்தாலும் உடனடியாக கைமேல் பலன் இல்லை என்பதாலும் கர்நாடகத்தில் இழந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதாலும் மேலும் திட்டமிட்டே கார்பரேட்டுகளுக்காக காவிரி டெல்டா பகுதி விவசாயத்தை அழிப்பதற்காகவும் இந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல்  கன்னட இனவெறியைத் தூண்டி அதில் ஆதாயம் அடைய முயற்சி செய்கிறது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் அமுல்படுத்த முடியாது என அடாவடி செய்கிறது.

ஊருக்குள் மதவெறி !

அதேபோல தமிழகத்தில் கோவையில் இந்து முன்னணி சசிக்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள இசுலாமியர்களின் கடைகள், வீடுகள், மசூதி ஆகியவற்றை குறிவைத்து தாக்கி கலவரச்சூழலை ஏற்படுத்தி மதவெறியைப் பரப்பி வருகின்றனர். இதில் முசுலீமகள் மட்டுமல்ல, இந்துக்களின் கடைகளையும் தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர்.

இது போக நாடுமுழுக்க மாட்டுக்கறி, பசுப்பாதுகாப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு என பல ஒடுக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர். ஆனால் ஆரிய ஒடுக்குமுறை கடவுளர்களான இராமனையும், கிருஷ்ணனையுமே செருப்பல் அடித்த பெரியார் மண்ணில் இவர்களுக்கு இடமில்லை எனும் அடிப்படையில் புதுவை 8-10-2016 அன்று காலை 10 மணிக்கு பாஜக அலுவலக முற்றுகை போராட்டம் என அறிவித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இப்பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த போது இதை கேள்வி பட்ட பெரியார் சிந்தனையாளர் இயக்கம், வேறு சில ஜனநாயக சக்திகள், பாஜக விற்கு எதிராக போர்குணமாக போராட வேண்டும் என்று ஆதரித்தார்கள்.

புதுச்சேரி 1திட்டமிட்ட 8-10-2016 அன்று காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள்  இந்திராகாந்தி சிக்னலில் இருந்து பேரணியாக புறப்பட்டு பாஜக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். பாஜக அலுவலகத்தை பொருத்தவரை அன்றைய தினம் கூட்டமில்லை.

பா.ஜ.கஅலுவலக முற்றுகையின் போது வானரக்கூட்டம் தனது எதிர்ப்பை காட்டினாலும் அதை மீறி முற்றுகை போராட்டம் நடந்தது. பாஜக-விற்க்கு எதிராகவும், தேசிய வெறி, பார்ப்பன மதவெறியை அம்பலப்படுத்தியும் முழக்கமிட்டும், கிட்டத்தட்ட ஒருமணி நேரம்  போராட்டம் நடத்தப்பட்டது. மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. போலீசு வந்து தள்ளுமுள்ளு ஆன பிறகு முற்றுகை செய்த தோழர்களை போலீசு கைது செய்து கோரிமேட்டில் உள்ள போலீசு பயிற்சி பள்ளி இருக்கும் இடத்திற்கு அருகில் சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தது.

புதுச்சேரி 2பாஜக அலுவலகம் அமைந்து இருக்கும் பகுதி என்பது பெரியார் நகர், நெல்லித்தோப்பு, உள்ளடக்கிய ஒரு பகுதி. இந்த பகுதிகளில் விடுதலை சிறுத்தைக் கட்சியில் இருந்து சமீபகாலத்தில் பலபேர் விலகி இந்து முன்னணிக்கு போய் சேர்ந்துள்ளனர். புதுச்சேரியில் மாநில தலைமையில் உள்ள சாமிநாதன் போன்றவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு உட்கட்சி பூசலில் கொலை செய்யப்பட்ட ஜெனார்த்தனன் போன்ற சாராய கடத்தல் பேர்வழிகள், மதுபாட்டில்கள் கடத்துவது போன்ற வேலையை செய்யக்கூடிய ’தேசபக்தர்கள்’ உதிரிகளையும், பொறுக்கிகளையும், லும்பன்களையும் வைத்துக் கொண்டுதான் இந்து தேசியத்தை கட்டபொகிறோம் என்று தேசபக்தி வேடம் போடுகின்றனர்.

எனவே இவர்கள் பேசக்கூடிய இந்திய தேசியத்திற்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முற்றுகை போராட்டம் நடைபெற்ற போது இந்துத்துவத்தின் குண்டர் படைகள் வரலாம் என எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை. தோழர்களை கைது செய்த பின்பு ஒரு வேனில் குண்டர் படை வந்தது. அவர்களை காவல்துறை பத்திரமாக திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்த போராட்டம் அப்பகுதியை சுற்றியுள்ள சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மை இந்துக்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு ஒரு நம்பிகையை ஊட்டியிருகிறது. அந்த மக்களை பார்ப்பன மதவெறிக்கு பலியாகாமலும், ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, இந்துமுன்னணி ஆகிய சங்பரிவார அமைப்புகள் தூண்டிவிடும் தேசிய வெறி, மதவெறி அல்லது சாதிவெறி இப்படி எதற்க்கும் பலியாகாமல் உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். இதைத் தான்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், மக்கள் அதிகாரமும் இப்போராட்டத்தின் வாயிலாக தெரிவிக்கின்றது.

 தகவல்:

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி
.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க