உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவுக்கு அருகில் இருக்கும் மதுரா, வட இந்திய ‘இந்துக்களுக்கு’ முக்கியமான நகரம். ஆகவே ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கும் அது கேந்திரமானது என்பதில் ஆச்சரியம் இல்லை. இப்பேற்பட்ட மதுராவில் நாத்திகவாதிகள் நடத்த இருந்த அறைக்கூட்டத்தை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துமதவெறி குண்டர்கள் காவல்துறை துணையுடன் தாக்கி நிறுத்தியுள்ளனர்.
முதலில் ஆன்மீக சாமியாராக இருந்து பின்னர் நாத்திகராக மாறியவர் சுவாமி பாலெண்டு. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுராவில்தான். ஏழைக் குழந்தைகளுக்காக அம்மாஜி என்ற ஒரு உணவகத்தையும் அங்கு நடத்தி வருகிறார்.
அக்டோபர் 14-ம் நாள் நடக்கவிருந்த ஒரு நாத்திக அறைக்கூட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து நாத்திகர்கள், முற்போக்கு நண்பர்கள் எல்லாம் அவரது பிந்து சேவா சன்சதன் ஆசிரமத்திற்கு அழைத்திருந்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்திருந்தார்.
கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக அந்த கூட்டத்தைப்பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை, எனவே அது ஒரு கட்டுக்கதை என்று பாலெண்டு குறிப்பிட்டிருந்தார். ஆகவே இவர் மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் இந்துமதவெறி கும்பல்களை உசுப்பிவிட்டன.
அதைத் தொடர்ந்து வெறியேறிய விஷ்வ ஹிந்து பரிஷத் , பஜ்ரங் தள் உள்ளிட்ட காவி வானரங்கள் அக்டோபர் 14 காலையில் ஆசிரமத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தி நாசம் செய்தன. இந்து மதம் என்று குறிப்பாக சொல்லாமல் “மதம்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இந்துத்துவ ரௌடி கும்பலுடன் சில இசுலாமிய மத அடிப்படைவாதிகளும் சேர்ந்து கொண்டனர். பாலெண்டு ஒரு விளம்பரப்பிரியர் என்றும் கடவுள் நம்பிக்கையாளர்களைக் காயப்படுத்த அவருக்கு உரிமையில்லை என்றும் சாஹி ஜமா மஸ்ஜிதை சேர்ந்த இமாம் முகமது உமர் குவாத்ரி கூறினார். இந்த முசுலீம் அமைப்பு இந்துமதவெறியர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுபவர்களாகவும் இருக்கலாம். அதே நேரம் பகுத்தறிவுவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் இந்து மதவெறியர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள் தான் இசுலாமிய மதவெறியர்கள்.
தாக்குதலுக்குப் பிறகு காவல்துறை உயரதிகாரிகளை அழைத்து வந்த அந்த வானரக் கும்பல் இது வெறும் தொடக்கம் தான் பாலெண்டு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினால் நகரத்தில் மோசமான சம்பவங்கள் நிகழும் என்று காவல்துறையினர் முன்னிலையிலேயே மிரட்டியிருக்கின்றனர்.
“இது ஒரு தனிப்பட்ட கூட்டம் என்றாலும் காவல்துறையிடம் அனுமதி வாங்கியிருக்கிறோம். கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால் கருத்து சுதந்திரம் மற்றும் கடவுள் நம்பிக்கையின்மைக்கு எதிரான தாக்குதலாக இது இருக்கிறது” என்று சுவாமி பாலெண்டு வருத்தத்துடன் குற்றஞ்சாட்டினார்.
“அந்தச் சந்திப்பினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், அதனால் அறைக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியாது என்று காவல்துறை கூறியிருந்தது. என்னுடைய விருந்தினர்கள் சிலர் எனது ஆசிரமத்திற்கு வருவது ஏன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும்? புரியவில்லை” என்று பாலெண்டு கேட்கிறார். எனினும் விருந்தினரின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் உருவாக்க்கப்பட்டுவிட்டதால் பாலெண்டு அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
கூட்டதிற்கு வருகை தந்த பலரும் தாங்கள் சமூக வலைதளங்களில் நாத்திக கருத்துக்கள் எதுவும் எழுதக்கூடாது என்று மிரட்டப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த அறைக்கூட்டம் சட்ட ஒழுங்கை எப்படி பாதிக்கும் என்று வியப்படைவதாக வந்திருந்த அனைவரும் கூறினர்.
புல்டோசரைக் கொண்டு ஆசிரமத்தின் முன்னாள் இருக்கும் சாக்கடையை திறந்து விட்டதன் மூலம் ஆசிரமத்திற்கு அத்துமீறி வருபவர்களை தடுத்திருப்பதாக காவல்துறை பொய்யான குற்றத்தை தயாரித்து கூறியது. அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு நடக்கவிருந்த அறைக்கூட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, அதற்கெதிராக வன்முறையாட்டம் ஆடிய மதவெறி கும்பலுக்கு பாதுகாப்பு கொடுத்தது.
“நகர நிர்வாகம் எங்களைத் தொல்லைப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆசிரமத்தின் உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுத்தரமானதாக இல்லை என்று போலியாகக் குற்றஞ்சாட்டி ஆசிரமத்தைப் மூட முயல்கிறது” என்று குற்றஞ்சாட்டுகிறார் பாலெண்டு .
இது போன்ற அருவருப்பான குற்றச்சாட்டுகளை நான் ஒருபோதும் கண்டதில்லை என்கிறார் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வந்த புகைப்படப் பத்திரிக்கையாளரான சர்வேஸ். மூவர்ணக்கொடியை ஏந்தி பயமுறுத்தும் முழக்கங்களைப் போட்டு வந்த அவர்களைப் படம் பிடிக்க முயற்சிக்கையில் அந்த குண்டர்களால் தானும் தாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
எண்ணிக்கையில் சிறியதாக இருந்த அந்த குண்டர்களை காவல்துறை மிக எளிதாக கலைத்திருக்க முடியும். ஆனால் இது மோடி அரசு, பா.ஜ.க ஆட்சி, ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு என்பதற்கேற்ப போலீசு காவிக்கறையுடன் செயல்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாதீர்கள், நிகழ்ச்சியை இரத்து செய்து விடுங்கள் என்று தங்களிடம் காவல்துறை கூறியதாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த டெல்லிப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த அசுதோஷ் குமார் கூறுகிறார். சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் காந்தி ஆசிரமத்தை நடத்தி வந்த கிமான்சு குமார் இந்த அறைக்கூட்டதில் பங்கேற்க வந்திருந்தார். நாத்திகவாதிகளை கைது செய்யச் சொல்லும் பதாகைகள் மற்றும் பி.ஜே.பி விளம்பர அட்டைகளுடன் காவி குண்டர்கள் ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர், அவர்கள் கைகளில் லத்தி கம்புகள் இருந்தன என்றும் கூறுகிறார் குமார். காவல்துறை அச்சுறுத்துதலால் கடந்த பிப்ரவரி மாதத்தில் அவரது ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.
சமஸ்கிருதமே உலக மொழிகளுக்கெல்லாம் தாய். விநாயகனின் உருவம்தான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு சான்று, காந்தாரியின் கருப்பைப் பிண்டத்திலிருந்து உலகின் முதல் ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மகாபாரத காலத்திலேயே உலகின் முதல் தொலைக்காட்சி…… இப்படி அண்டமே நடுநடுங்கும் வகையில் மோடி கம்பெனி ரீல் விடும் நாட்டில் அறிவியலுக்கோ, உண்மைக்கோ, இறை மறுப்புக்கோ என்ன மரியாதை இருக்கும்?
அதன் விளைவுகள் தான் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, ரோகித் வெமுலா என அடுத்தடுத்த பகுத்தறிவுவாதிகளின் படுகொலைகள். “ஏன் இந்துக்களின் புனித இடமான பிருந்தாவனில் இந்த கூட்டத்தை நடத்துகிறீர்கள்? நிஜாமுதீன் தர்காவில் இதை நடத்த உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? தைரியம் இருந்தால் மெக்கா மெதினா சென்று இதை நடத்திப் பாருங்கள்” என்று இந்துத்துவ வெறியர்கள் சமூக வலைத்தளங்களில் புத்திசாலித்தனமாக கேட்கின்றனர். ஆனால் இந்தியாவிலும், வங்கதேசத்திலும் நாத்திகம் பேசும் முற்போக்காளர்களை இருமதவெறியர்களும் கொன்றுதான் வருகின்றனர்.
சரி, இந்துக்கள் அனைவரும் ஒன்று என்பதாலேயே நம்மூர் சுடலைமாடனுக்கு படைக்கப்படும் சுருட்டு, சாராயம், கறி போன்ற பிரசாதங்களை மதுரா கிருஷ்ணன் கோவிலில் படைக்க இவர்கள் தயாரா? இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ் ஐயர்-ஐயங்கார் குடும்பங்களில் பெண் கேட்டு மேலவளவு தலித்துக்கள் வருவதை ஏற்றுக் கொள்வார்களா?
இந்தியாவில் பார்ப்பனிய இந்துமதத்திற்கு எப்படி ஒரு மரபும், பழமையும் இருக்கிறதோ அதற்கு குறையாமல் இருக்கிறது நாத்திக மரபு. அதனால்தான் இங்கே சாருவாகர்கள்,புத்தர்,சித்தர்கள் துவங்கி பகத்சிங், பெரியார் வரை பெரும் படையே இருக்கிறது. இந்த மரபைக் கொல்வதுதான் அவர்களின் நோக்கம். இராமனையே எரிக்கும் தமிழ் மரபு இருக்கும் வரை அந்த நோக்கம் நிறைவேறாது!
– சுந்தரம்
செய்தி ஆதாரம்:
Hindutva activists attack, force cancellation of private meeting of atheists in Mathura
In Vrindavan, Communal Goons and ‘Secular’ Police Unite to Deny Atheists Space
‘Atheist’ conclave cancelled after religious leaders protest in Mathura
It is sad to notice that this country is sliding fast into deep absymal state of fascism.people are denied of freedom of expression and thought, guaranteed by our so called constitution.Soon this sort of intolernace hearalds / does not augur well for the unity and integrity of the country.
பாசிசம் என்பது இதுதான் போல. மதம் மனிதனை மிருகமாக்கும் என்பதை இப்போது நன்றாக பார்க்கமுடிகிறது.
மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் உங்களை போன்ற ஆட்கள் செய்வது தான் பாசிசம், எந்த நாட்டில் சார் பெரும்பான்மை மக்கள் வழிபடும் மத கடவுளை இந்த மாதிரி கேவலப்படுத்துவம் அவமானப்படுத்துவதும் நடக்கிறது. இங்கே இந்தியாவில் தலித் பிரச்சனை என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறவெறி பிரச்சனை. இது உலகம் முழுவதும் மனிதன் தோன்றிய காலம் முதல் இருக்கும் பிரச்சனை தான்… ஆனால் வினவு போன்றவர்கள் திட்டமிட்டு ஹிந்து கடவுள்களை கேவலப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுவது எந்த வகையில் நியாயம்.
மணிகண்டன்,
தயைக் கூர்ந்து வெற்றுப்புலம்பல்களை தவிர்த்து ஆக்கபூர்வமாக யோசிக்கவும்.
இந்தியாவில் தலித் பிரச்சினை என்று எதையும் சடுதியில் முடித்து கொள்ள முடியாது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மாற்றுக் கருத்துக்கருத்து கொண்டோரை நயவஞ்சகமாக அழித்தொழிப்பது தான் பார்ப்பனீயம்.
உண்மையில் வெறும் பொருளாதாரம் சார்ந்து மட்டும் அல்ல கலாச்சார ரீதியாகவும் ஏற்றத் தாழ்வுகளை நடைமுறைப்படுத்தி வரும் பார்ப்பனியம் உண்மையில் தனித்துவமானது. அதுவும் நிறவெறியும் சமமல்ல. அனைத்தையும் கடந்த ஒரு உச்சக்கட்ட கொடுமை.
சகிப்புதன்மை தான் ஹிந்து மக்களின் அடிப்படை ராமனை பற்றியும் சிவனை பற்றியும் பலர் பல விதமாக கேவலமாக பேசினாலும் அதை தாங்கி கொண்டு வாழ்பவர்கள் ஹிந்து மக்கள். பாகிஸ்தானில் இப்படி பெரும்பானமையினார் வழிபடும் மத கடவுளை அவதூறாக பேசுவது பற்றி கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. சமீபத்தில் தான் பெண்களுக்குள் நடந்த தண்ணீர் சண்டையில் இஸ்லாமிய கடவுளை நிந்தித்தார் என்று சிறுபான்மை கிறிஸ்துவ பெண்ணுக்கு அவர்கள் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை கொடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் இப்படி ஒரு செயலை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, சிவனையும் விஷ்ணுவையும் யார் எப்படி வேண்டுமானலும் அவதூறாக பேசலாம், யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். இது சரியா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று சொல்வேன், இம்மாதிரி அவதூறாக பேசுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
உங்களை போன்றவர்களும் வினவு போன்றவர்கள் மக்களின் இந்த சகிப்பு தன்மையை மீண்டும் மீண்டும் திட்டமிட்டு சோதித்து அவர்களை வன்முறைக்கு தூண்டி கொண்டு இருக்கிறீர்கள்.
வினவு போன்றவர்களின் இந்த செயலை நாட்டை நாசம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் சதி திட்டமாகவே நான் பார்க்கிறேன்.
///சகிப்புதன்மை தான் ஹிந்து மக்களின் அடிப்படை ///
சகிப்புதன்மை தான் சாதிய சமூகத்தின் அடிப்படை. தாழ்த்தப்படும், ஒடுக்கப்படும் மக்கள் சகிப்புத்தன்மையுடன் அவர்கள் மீதான ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் வரை தான் இந்து மதம் உயிர் வாழும்.
அந்த சகிப்புத்தன்மையை கேள்வி கேட்டு, அதை அம்மக்களிடமிருந்து களைவதற்கு பிரச்சாரம் செய்வதால், போராடுவதால் தான் நீங்கள் இப்படி பைரவராக மாறியுள்ளீர்கள்.
இல்லையெனில் இரும்படிக்கும் இடத்தில் ஈ-க்கு என்ன வேலை? அது அதன் இயல்புப்படி ‘பீ’யை அல்லவா தேடிப்போக வேண்டும்?
மணி அண்ணே,
///எந்த நாட்டில் சார் பெரும்பான்மை மக்கள் வழிபடும் மத கடவுளை இந்த மாதிரி கேவலப்படுத்துவம் அவமானப்படுத்துவதும் நடக்கிறது///
எந்த மதத்தில் சார் பெரும்பான்மை மக்கள் வழிபடும் கடவுளை அந்த மக்கள் தொட்டால் தீட்டு என்று சொல்கிறார்கள்?
எந்த மதத்தில் சார் பெரும்பான்மை மக்கள் வழிபடும் கடவுளை அந்த மக்களின் மொழியில் வழிபடுவது தீட்டு என்கிறார்கள்?
எந்த மதத்தில் சார் பெரும்பான்மை மக்களை சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் சொல்லி இழிவுபடுத்துவதோடு, தொட்டாலே தீட்டு, பார்த்தாலே தீட்டு என்று வகைபிரித்து வைத்திருக்கிறார்கள்?
பாசிச மதத்தினை விமரிசிப்பது, அதில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்க முயற்சிப்பது எப்படி பாசிசமாகும்?
///வினவு போன்றவர்கள் திட்டமிட்டு ஹிந்து கடவுள்களை கேவலப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுவது எந்த வகையில் நியாயம்.///
தவத்திரு தர்மதீர்த்த அடிகளார் என்ற இந்து மதப் பெரியவர் கூட இந்துமதக் கொடுங் கோன்மையின் வரலாறு என்ற புத்தகத்தில் இந்து மதத்தின் பாசிச தன்மையை விமரிசனம் செய்திருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் உயர்த்திப் பிடிக்கும் விவேகானந்தரும் கூட இந்து மதத்தை தன்மையை விமரிசனம் செய்திருக்கிறார் என்று கேள்வி!
இவர்களெல்லாம் இந்து மதத்தை சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் (அதை சீர்திருத்த முடியாது என்ற போதிலும்) விமரிசித்திருக்கிறார்கள். அவற்றை – அவர்களின் விமரிசனங்களை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா?
///இங்கே இந்தியாவில் தலித் பிரச்சனை என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறவெறி பிரச்சனை. இது உலகம் முழுவதும் மனிதன் தோன்றிய காலம் முதல் இருக்கும் பிரச்சனை தான்…///
வேறு எங்கேயும் அதற்கு மதச்சாயம் பூசி புனிதப்படுத்தி, இசைவிணக்கமான (harmonious) சமூக அமைப்பு என்று பீற்றிக் கொள்வது நடக்கவில்லை, நடைமுறையில் இல்லை.
உங்களுடை நீண்ட கேள்விபட்டியலை படித்தேன். மற்ற மதங்களில் இவையெல்லாம் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?
மற்ற மதங்களில் இருக்கிறது ஜெயந்த்,
ஆனால் இந்து மதம் போல, இவ்விசயங்கள் எதுவும் அம்மதங்களின் அடிப்படையாக இல்லை.
இங்கே சாதியம் தானே இந்து மதத்தின் அடிப்படையாக இருக்கிறது ?.
ஜெயந்து, ஜெயந்து..
//மற்ற மதங்களில் இவையெல்லாம் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?//
ஆக, இந்து மதத்தில் இவை இருக்கிறது என்பதையும், இந்து மதம் ஒரு ஒடுக்குமுறை கருவி என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்கள். அதை ஏற்றுக் கொண்டு மற்ற மதம் யோக்கியமா என்று பேச என்ன தகுதி இருக்கிறது?
ஏற்றுக் கொண்டு அந்த இந்து மத மயக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க முயற்சிக்கும், போராடும் நாத்திகர்களை மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது ஏன் ? இதை தான் பாசிசம் என்கிறோம்.
ஆமா நாங்க அப்படித்தான், உனக்கு பிடிச்சாலும், பிடிக்கலைன்னாலும் உள்ள இருந்து தான் ஆகனும். இல்லைன்னா நாங்க கொல்வோம், தப்பிக்கனும்னா பாகிஸ்தானுக்கு போன்னு சொல்ற பிக்காலித்தனம் பாசிசம் இல்லாமல் வேற என்ன?
manikandan
இந்தியா மதச்சார்பற்ற நாடுன்னு அரசியல் சாசனத்துல எழுதியிருக்காங்க. அதை முதல்ல நீங்க ஏத்துக்கிறீங்களா?
இந்தியா மதசார்பற்ற நாடு தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை, அதற்காக பெரும்பான்மை மக்கள் வழிபடும் கடவுளை கேவலப்படுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இது உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காத ஒரு கேவலமான வக்கர அரசியல்.
“அறிவியல் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம் – வீடியோ” Mr. Manikandan what is your opinion about this article. (please do not mistiken me for asking this question under “மதுராவில் நாத்திகக் கூட்டத்தை நிறுத்திய இந்துமத வெறியர்கள்” Title. Because you and Indian weren’t there)
மணிகண்டன்,
முதலில் கட்டுரையை படியுங்கள்.
முதலில் நீங்க நாத்திக கூட்டத்தை நடத்த கருணை காட்டியிருந்து பின்பு புலம்பியிருந்தால் அல்லவோ நேர்மை.
மாற்றுக்கருத்து என்ற சொல்லை கூட சொல்ல தகுதியற்றவர்கள் தான்(உங்கள்) இந்து மத வெறியர்கள். புத்தமர்கள், சமணர்கள் சார்வாகர்கள் உள்ளிட்டு மாற்றுக்கருத்துடன் வாதிட்டவர்களை எல்லாம் கயமைத்தனமாக சமாதி செய்தது யார்?.
ஹிந்து மதத்தையும் அதன் மதவெறியர்களையும் சமாதிக்கட்ட வேண்டிய தேவையும் வரலாற்றுக் கடைமையும் நமக்கு இருக்கிறது.
பிறப்பாலே மனிதர்களைத் தரம் பிரித்து இதை நானே செய்தேன் என்று சொல்லும் கடவுளும் அதை நடைமுறைப்படுத்தும் ஒரு கூட்டமும் மூடத்தனத்தின் சட்டகத்துக்குள் மக்களை முடக்கி வைத்திருக்கும் பெரும்பான்மை மதத்தின்(?) யோக்கியதை அவ்வளவு கேவலமாக இருக்கிறது.என்ன செய்வது?இந்த இழி நிலையைக் குழி தோண்டி புதைக்கும் வரை போராட்டம் தொடரும்தான்.
இந்த மணீகண்டன் வகையாறாக்கள் எதற்காக சொம்படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.வெண்முரசு பாசறையோ?
ஹிந்து மத தர்மப்படி பிறப்பினால் யாரும் இந்த ஜாதி என்று பிரிக்கப்படவில்லை, ஒருவருடைய குணத்தினால் நடத்தையினால் தான் ஒருவரை இந்த ஜாதி என்று பிரிக்கப்படுகிறது. அசுரர் குளத்தில் பிறந்த ராவணனை பிராமணன் என்று சொல்வதற்கு காரணம் இது தான்.
காபிர்கள் என்று சொல்லி மனிதனை மனிதனே கொலை செய்யும் மதத்தை பற்றி இங்கே யாரும் பேசுவது இல்லை, காரணம் அப்படி பேசினால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஹிந்து மதத்தை பற்றி யார் எப்படி வேண்டுமானாலும் அவதூறாக பேசலாம் கேட்டால் அது தான் முற்போக்கு அது தான் மதசார்பின்மை என்று சொல்வார்கள்… ஊருக்கு இளிச்சவாயர்கள் ஹிந்துக்கள்.
மணியண்ணே ..
ஒண்ணு அறிவியல் வரலாறு , மானுடவியல் எதாவது ஒண்ண முழுசா படிங்க .. இல்லைன்னா நீங்க மெச்சுற இந்து மதப் புராணத்தையாவது படிங்க … பிளீஸ் ..
எதையும் முழுசா படிக்காம .. ஏதாவது அம்பி எங்கயாவது பொலம்புறத கேட்டுட்டு வந்து டார்ச்சர் பண்ணாதீங்க..
அசுரர் குலத்தில் இராவணனை வைத்தத்ற்குக் காரணம் அவரது தந்தை பிராமண குலத்தில் பிறந்து அசுர குலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பார்ப்பன வேத தர்மத்தின் படி ஒரு பிராமனனுக்குப் பிறந்திருந்தாலும், இராவணன் அசுரனாகவே பார்க்கப்படுகிறான். இது அப்பட்டமான வேத மரபின் சாதி வெறியே ஆகும்.
அடுத்ததாக இசுலாமியர்களைப் பற்றி இங்கு யாரும் பேசுவதில்லை என்ற ரங்கராஜ் பாண்டே வாதத்தை மீண்டும் மீண்டும் இங்கு வாந்தி எடுக்க வேண்டாம். இஸ்லாமிய பிற்போக்குத் தனங்கள் குறித்தும் இசுலாமிய அடிப்படைவாதிகள் குறித்தும் வினவு ஏற்கனவே பல பதிவுகளை போட்டிருக்கிறது. தேடிப் படிக்கவும்.
மணியண்ணே ..
தனிப்பட்ட ரீதியில் (இக்கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத) இன்னொரு விசயத்தையும் கூறிக் கொள்கிறேன்.
இந்து மதத்தையும் இந்துக்களையும் நோகடிப்பது வினவுக்கோ,, இங்கு பின்னூட்டம் இடும் நபர்களுக்கோ கிடையாது. இந்து மதத்தின் ஆன்மாவான சாதிய பேதத்தையும், மனிதர்களை ஏற்றத்தாழ்வாகக் கருதும் தன்மையையும், மற்ற சமூகத்துஇன் மீது தேசியம் என்னும் பெயரில் இந்துத் தத்துவத்தைத் திணிப்பதையும் தான் கண்டிக்கப் படுகிறது.
அதனைப் புரிந்து கொண்டு நீங்கள் விவாதித்தால் நன்றாக இருக்கும். தயவு செய்து வேதங்கள் குறித்தும் இராமாயணம் குறித்தும், பகவத் கீதை குறித்தும், மகாபாரதம் குறித்தும் உங்கள் சொந்த முயற்சியைல் (ஆர்.எஸ்.எஸ். மற்றும் இதர பார்ப்பனக் கூட்டத்தின் தலையீடு இல்லாமல்) படித்து விட்டு அதில் கூறப்படும் விசயங்கள் சரியா தவறா என நீங்களே பரிசீலித்து விட்டு வந்து விவாதியுங்கள்..
அப்போது தான் இங்கு இராமாயணத்திலோ, மகாபாரதத்திலோ, பகவத் கீதையிலோ, சாதி வெறி இப்படி வெளிப்பட்டிருக்கிறது என்று யாராவது பேசினால், அதனை மறுப்பதற்கு நீங்கள் படித்ததில் இருந்து குறிப்பிட்டு மறுக்க முடியும். உங்களது கருத்து இன்னும் பலருக்கு உதவிகரமாக இருக்கும்.
நன்றி,
பகவத் கீதையில் பல நல்ல விஷங்கள் உள்ளது ஆனால் அது எதுவும் உங்களை போன்றவர்களின் கண்களுக்கு தெரியாது. பகவத் கீதையை கிருஷ்ணர் சொன்ன பிறகு அர்ஜுனனிடம் நான் எது சரி தவறு என்று விளக்கம் கொடுத்து இருக்கிறேன் அதை புரிந்து கொண்டு ஏற்பதும் ஏற்காததும் உன் விருப்பம் என்று சொல்கிறார்.
பகவத் கீதையை நீங்கள் ஏற்கவில்லை என்பதால் அதற்கு எந்த குறையும் இல்லை, ஆனால் இழப்பு உங்களை போன்றவர்களின் பொய் பிரச்சாரங்களை நம்பி பகவத் கீதையை படிக்காமல் இருக்கும் மற்றவர்களுக்கு தான், இந்த நாட்டின் முன்னோர்கள் பல அற்புதமான விஷயங்களை மனிதகுல மேம்பாட்டிற்காக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் சமஸ்கிரத எதிர்ப்பு, ஹிந்து மத எதிர்ப்பு என்ற பெயரில் முட்டாள்தனமாக அழித்து கொண்டு இருக்கிறோம்.
ராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று அகழ்வாராய்ச்சி செய்து கொண்டு இருப்பதை விட ராமாயணத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும்.
குரானில் கூட பல நல்ல விஷயங்கள் இருக்கிறது அதேபோல் அதிலும் ஜிகாத் காபிர் போன்ற தீய விஷயங்களும் உள்ளது அதற்காக குரானை தீமை போதிக்கிறது என்று சொன்னால் அது முட்டாள்தனம் அதேபோல் தான் ராமாயணம் பகவத் கீதை போன்றவைகள்.
மணியண்ணே ..
////
பகவத் கீதையில் பல நல்ல விஷங்கள் உள்ளது ஆனால் அது எதுவும் உங்களை போன்றவர்களின் கண்களுக்கு தெரியாது. ////
மறுபடியும் பழைய கதைய ஆரம்பிச்சுட்ட பாத்தியா ?.
சும்மா மொட்டையா நல்ல விசயம் இருக்கு .. நொல்ல விசயம் இருக்குன்னு சொல்றத விட்டுட்டு, அது என்ன நல்ல விசயம்னு சொல்லுங்கண்ணே .. அதப் பத்தி பேசுவோம்.
/// இந்த நாட்டின் முன்னோர்கள் பல அற்புதமான விஷயங்களை மனிதகுல மேம்பாட்டிற்காக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் சமஸ்கிரத எதிர்ப்பு, ஹிந்து மத எதிர்ப்பு என்ற பெயரில் முட்டாள்தனமாக அழித்து கொண்டு இருக்கிறோம். ///
எங்கள் முன்னோர் செய்தத்தை எல்லாம் பார்ப்பான் செய்ததாகப் பீற்றிக் கொள்ளுவதைத் தான் (உ.ம்: யோகக் கலை, சித்த மருத்துவம்) நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் தமிழ் மொழியின் பாரம்பரியம் இருக்க கண்ட கண்ட பார்ப்பன நாய்கள் சொந்தம் கொண்டாடும் சமஸ்கிருதத்தை நாங்கள் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். 200 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்ட மதம் தான் ஹிந்து மதம். அதற்கு முன்னால் வைணவர்களை, சைவர்கள் கொன்ற கதையெல்லாம் உனக்குத் தெரியாதா முட்டாள் மணியண்ணே ? இந்த எழவுக்குத் தான் போய் உன் பொந்து மதப் புராணத்தையாவது முழுசா படிச்சுட்டு வாயான்னு சொல்றேன் .. புரியுதா ? இல்லையா ?
///
ராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று அகழ்வாராய்ச்சி செய்து கொண்டு இருப்பதை விட ராமாயணத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். ///
மொதல்ல இராமாயணம் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தைப் படிச்சுட்டு வந்து அதுல இருந்து ரெண்டு நல்ல விசயத்தைச் சொல்லுங்க சாமி .. கேட்டுத் தெரிஞ்சிக்குறோம்.
///
குரானில் கூட பல நல்ல விஷயங்கள் இருக்கிறது அதேபோல் அதிலும் ஜிகாத் காபிர் போன்ற தீய விஷயங்களும் உள்ளது அதற்காக குரானை தீமை போதிக்கிறது என்று சொன்னால் அது முட்டாள்தனம் அதேபோல் தான் ராமாயணம் பகவத் கீதை போன்றவைகள்.
///
குரான், இராமாயணம், பகவத்கீதை போன்ற குப்பைகள் எல்லாம் அடிமைத்தனத்தை மக்களின் மீது செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. அதை முழுமையாகப் படித்து அதனை முழுமையாகப் புரிந்து கொண்டு பின்னர் விவாதிக்க வரவும், அடிமைத்தனம் சரியா இல்லையா என்று …
கடைசியாக ஒன்று,
ஆபாசக் கதைப் புத்தகங்களில், ஆபாசப் படங்களில் கூட தவிர்க்க முடியாதபடி கதைக்குத் தகுந்தாற்போல் சில நல்ல விசயங்கள் சொல்லப்பட்டிருக்கலாம், அதற்காக ஆபாசக் கதைப்புத்தகங்களையோ, ஆபாசப் படங்களையோ வீட்டில் உள்ளவர்களுக்கு பரிந்துரைப்பீர்களா ?..
அது போலத்தான் பகவத் கீதை, குரான், இராமாயணம்.
மறுபடியும் நல்லதை மட்டும் எடுத்துக்கோன்னு உம்ம புராணத்தை ஆரம்பிக்காதீரும்..
கொஞ்சம் படிச்சுட்டு வந்து விவாதிங்க …
உங்களுக்கு பகவத் கீதை சொல்லி கொடுக்க நேரம் இல்லை, முடிந்தால் அதை படித்து விட்டு வந்து பேசுங்கள்.
ஆக மொத்தம் பகவத் கீதையை படிக்காமலேயே இவ்வுளவு முட்டாள்தனமாக கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது, முதலில் படித்து விட்டு வந்து பேசுங்கள். அதற்கு முன் அது பற்றி இப்படி அவதூறாக பேசுவதற்கு உங்களுக்கு தகுதியில்லை
மணியண்ணே .. உங்கள கிளாஸ் எடுக்கச் சொல்லி இங்க யாரும் தவம் இருக்கலண்ணே .. பகவத் கீதை படிச்சிருக்கியா இல்லையான்னு தான்னே கேட்டிருக்கேன் ?.
உனக்கு வர வர தமிழும் புரிய மாட்டேங்குதுண்ணே …
சரிண்ணே – “சதுர்வர்ணமும் நானாக இருக்கிறேன்னு” நம்ம பத்து வப்பாட்டிக்காரன் கிருஸ்ணன் சொன்னானே, அதுக்கு அர்த்தம் என்னான்னு தெரியுமா உங்களுக்கு ?
(பி.கு: உடனே முகமது நபி பத்து வப்பாட்டிகாரன் இல்லையான்னு கேக்கக் கூடாது.)
கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுண்ணே .. நீ படிச்சியா இல்லை தூக்கத்துல கேட்டுட்டு வந்து உளறுரீயான்னு தெரிஞ்சிடும்ணே..
மறுபடியும் சொல்றேன் .. கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் சொல்லனும் .. அதை விட்டுட்டு அவனுக்கு ’இது’ இல்லையா, குரான்ல ’அத’ சொல்லலையா ?., பைபிள்ள ’இத’ சொல்லலையான்னு கேக்கக் கூடாது .. கேள்விய மறுபடியும் கேக்குறேன்
சதுர்வர்ணமும் நானாக இருக்கிறேன்னு , சிரி கிருட்டிண பரமாத்துமா சொன்னதன் அர்த்தம் என்ன ?.
வினவு போன்றவர்களின் நோக்கம் தீமையானது அவர்களின் ஹிந்து மத எதிர்ப்பு எல்லாம் தீய உள்நோக்கம் கொண்டது
என்னா உள்நோக்கம்னு சொல்லுண்ணே ..
ஒரு குற்றச்சாட்டு சொன்னா முழுசா சொல்லுண்ணே .. மேலோட்டமா சொல்லாதண்ணே …
இப்படி மொட்டையா பேசிட்டு இருந்தா இனி உனக்கு என்ன பேரு வைக்கிறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேண்ணே ..
என் முந்தைய பல கட்டுரைகளில் எழுதியிருக்கும் கருத்துக்களை எடுத்து படித்து பார்க்கவும் பதில் கிடைக்கும்
மணிகண்டன்,
முந்தைய கட்டுரைகளின் உங்கள் கருத்துக்கள் இருக்க இங்க எதுக்கு விவாதத்துக்கு வந்தீங்க ? விவாதிக்க முடியவில்லை என்றால் கணினியில் அமர்ந்துக்கொண்டு சுப்ரபாதம் கேட்டிண்டு பொறி கடலை , போலி ,மசால் வட சாப்பிடலாம் இல்லையா நீங்க? அத உட்டுட்டு விவாதத்துக்கு வரது பின்னல அழுதிண்டு ஓடறது என்று சின்னப் புள்ளையாட்டம் இருக்கீங்களே …., இது நல்ல்லாவா இருக்கு?
விவாதம் என்று வந்தால் பேசுங்க சாரே…. இந்த தொட்டா சினிங்கித்தனம் எல்லாம் உங்களுக்கு எதுக்கு சாரே? விவாதத்தில் முழுகனும் என்று வந்தீட்டிங்க முழுசா முழுகி எழுந்திங்க சாரே…!
ஆம் மணிகண்டன் அண்ணே,
சமணர்களை,சார்வாகர்களை கழுவிலேற்றியது,
சீக்கியர்களை படுகொலை செய்தது,
குஜராத்துல இசுலாமியர்களை கொன்றழித்தது,
மாட்டுக்கறியை இஷ்டம் போல தின்று ஒருகாலத்தில் தீர்த்து இன்று ஆட்டுகறியை கூட மாட்டுக்கறி என்று கள்ளப்பரப்புரை செய்து தலித் மற்றும் இசுலாமியர்களை கொல்லுவது,
மாட்டு மூத்திரம் ஆண்மைகுறைவில் இருந்து கான்செர் வரைக்கும் குணப்படுத்தும் என்று அறிவியல் அறிஞர்களுக்கே தண்ணி காட்டுவது ,
முசாபர் நகர் உள்ளிட்டு நாடு முழுக்க கலவரம் செய்வது……..லிஸ்டுல இன்னும் இருக்கு. ஆனால் இதையெல்லாம் எழுத வியாசர் இன்றில்லை.
இவற்றையெல்லாம் செய்த இந்து வெறியர்கள் சாத்வீகம் குணம் கொண்டவர்கள்.
இவற்றை எதிர்க்கும் வினவு மற்றும் அதன் ஆதரவாளர்கள் தீமையானவர்கள்.
அரசபலசான பழைய சரக்கும்ர தீர்ந்து விட்டது என்று நினைக்கிறேன். அதான் நீதி,நியாயம்
என்று புலம்புகிறீர்கள்.
மாட்டு கரி வைத்து இருந்தார் என்று சொல்லி நடக்கும் வன்முறைகளை நான் ஆதரிக்கவில்லை, நிச்சயம் அது மன்னிக்க முடியாத குற்றம், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதே சமயம் வேண்டும் என்றே ஹிந்து மக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மாட்டுக்கறி பிரியாணி விருந்து என்று சொல்லி நடத்தப்படும் அநாகரிக செயல்களையும் நான் கண்டிக்கிறேன்.
மணியண்ணே …
மாட்டுக்கறி வேதகால இந்துக்களின் (பிராமணர்களின்) புனித உணவு.
ஆதாரம்: ரிக் வேதம்.
////
வரலாற்றைப் புரட்டினால், புலால் உண்ணும் பழக்கமே எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தது என்பது புரியும். யாகம் நடத்தி, அந்த யாகத்தீயில் மாடுகளையும், குதிரைகளையும் வெட்டிப்போட்டு, நெய் வழிய வழிய புலால் உண்ட கூட்டம் எது என்பதைப் “புனித வேதங்கள்’ புகலும்.
“ரிக்வேதகால ஆரியர்கள்’ என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், “”அவர்களிலே (ஆரியர்களில்) மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரிஷிகள் , முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்” என்று எழுதியுள்ளார்.
“”தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்” என்கிறது பிரகதாரண்ய (6-4-18) உபநிடதம்.
///
இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமென்றால் , பண்டைய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா அவர்கள் எழுதிய “Myth of Holy Cow” புத்தகம் படிக்கவும்.
இன்றும் மாட்டுக்கறி திண்ணாத ஆதிக்க ஜாதி இந்துக்கள், தாங்கள் வளர்க்கும் பசுமாட்டை அது பால் தருவதை நிறுத்தியவுடன் அடிமாட்டுக்குத் தான் அனுப்புகின்றனர். பசுவை யாரும் இந்து வெறிக் கும்பல் சொல்வது போல் தாயாகப் பார்ப்பதில்லை.
இந்து வெறிக் கும்பலின் உசுப்பேற்றலுக்கு தயவு செய்து தலையைக் கொடுக்காதீர்.
////
பார்ப்பனர் நடத்திய பசுவதை அய்தேரயப்ராஹ்ணம் கூறுகிறது
Image result for கோமேத யாகம்
அய்தரேய ப்ராஹ்ணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:
யஜ்னேவை தேவா – ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோக மாயம்ஸ்தே பியயுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ் சானுப் ரஞ்ஞாஸ் யந்தீதி (அய்தரேயப்ராஷ் மணம்த்ஷதீய பஞ்சிகா பிரதம காண்டம்)
இதன்பொருள்:- தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தார். ஆதலால், மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர் யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும் . யூபம் – யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.
இதன்பின் யாகத்தால் உயிர்களைக் கொல்லக் கட்டளையிடுகிற மந்திரமாவது:-
தைவ்யா:- சாமி தார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ராதா ஸ்கர்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மத மாலா பந்த உதி சீனாம் அஸ்பபதோ நிதித்தாமஸுர்யம் சக்ஷீர்க்ம ப்தாத் வாந்தப் ராண மன் வஸ் ருஜ தாந்திரி க்ஷமஸும் திச ஸ்ரோத்திரம், ப்ருதிவிசரீம்
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது இந்தப் பசுவை எனக்கு கொடுங்கள்.
இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும் படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான். அதன்பின் சுரா இடா ஸுனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித்துச் சதையை அரிந்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.
இந்த பசுவைப் பங்கிடும் முறை ஞான சூரியன் முதல் பக்கத்தில் மேற்படி மந்திரமும், அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபதப் ராஹ்மணம் என்னும் வேத நூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு சுவர்க்கத்தை அடைகிறது என்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது:
பார்வை நியாமான; ஸம்ருத்யும் ப்ரா பஸ்யத் ஸதேவான் நான் வகா மயதைதும் தம் தேவா அப்ரூ வன் கம் னேஹிஸை வர்க்வத்வர் லோகம் கமயிஷ் யாம இதி
(அய்தரேயப் ராஹ் பஞ்சிகா காண்டம் 6)
பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தை காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களை காண்கிறது.
தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-
அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேதத் ப்ராணன் தாதிஸ் யேன மாஸ்ய வக்ஷ கருணுதாத் ப்ரசஸா பஹீ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ வகவேஷாரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்காயஸ்கா அனுஷ்ட யோச்யா வயதத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-
உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய பஞ்சி 2 க6)
பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்
சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)
பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே.
தொகுப்பு: பெ.சுந்தரராசன். /////
யாரோ ஒருத்தர் தேடிப்பிடிச்சு எடுத்துப் போட்டிருக்காரு ..
நன்றி சொல்லிட்டுப் படிங்க மணியண்ணே ..
http://thathachariyar.blogspot.in/
அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார்னு ஒரு வயசான பெரியவர், இந்து மதம் எங்கே போகிறதுன்னு ஒரு பெரிய புக்கே எழுதிருக்காரு … அது பத்தி அவர் எழுதுனதை இங்கே தொடரா போட்டிருக்காங்க … இந்து மனது புண்படுதுன்னு சொல்றீங்களே மணியண்ணே ..
போய் படிச்சுட்டு வந்து சொல்லுங்க யாரு ஹிந்துன்னு ?..
முக்கியமாக இதைப் படிங்க ..
http://thathachariyar.blogspot.in/2011/01/91.html
மணியண்ணே …
http://maattru.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/
மேலே குறிப்பிட்டது கொசுறுக்கு ..
இதெல்லாம் படிச்சிட்டும் மாடு இந்து மதத்தின் புனிதம்னு பழைய கதைய ஆரம்பிச்சிடாத மணியண்ணே …
இனி மாட்டைப் பத்தி பேசுறதுன்னா இதையெல்லாம் வேதத்துல போயி பாத்து கன்பார்ம் பண்ணிட்டுக் கூட வந்து பேசுங்க .. தப்பில்லை. ஆனா எதையும் படிக்காம மட்டும் வந்து பேசி டார்ச்சர் பண்ணாத மணியண்ணே ..
மணியண்ணன் ,ஜெயந்த் தம்பி யாரும் நீங்க எத்துனை பின்னுட்டத்தில் பதில் அளித்தாலும் வரமாட்டாங்க சார்…. ஏன் என்றால் அவர்களின் டிசைன் அப்படி…. யார் மாட்டுக்கறி விருந்து வைத்தால் மணிகண்டனுக்க்கு எங்க வலிக்கிறது ? எதுக்கும் பதில் இருக்காது இப்படிபட்ட டிசைன்களிடம்…. சும்மா போறபோக்கில காலத்தூக்கி கசடுகளை கொட்டிட்டு போறவங்க இவிங்க….
ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் உயர்த்திப்பிடிக்கும் விவேகானந்தர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தலைவிரித்தாடிய சாதிக்கொடுமை கண்டு “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.
ஐயா வைகுண்டரும்,நாராயண குருவும், ஐயன் காளியும் கூட சாதிக்கொடூரங்களை கண்டு இந்து மதத்தை கடுமையாக விமரிசித்ததோடு தங்களுடைய மக்களுக்கு “மாற்று வழி”யையும் உருவாக்கிக் கொடுத்தனர்.
சாதி அமைப்பை – அதன் கொடூரங்களை சரி செய்யாமல் (சாதி அமைப்பை சரி செய்தால் இந்து மதம் நிலைத்திருக்க முடியாது !!) அவர்கள் கண்டடைந்த “மாற்று வழி”யையும் இந்து மதத்தின் பிரிவாக சுவீகரித்து பித்தலாட்டம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் இந்து மதத்தின் கொடூரங்களை அம்பலப்படுத்துவோரின் மீது பாய்ந்து குதறுகின்றன.
மணிகண்டன் வகையறாக்கள் – நீங்கள் ‘என்ன கையப்புடிச்சு இழுத்தியா’ என்று கேட்பதால், நாமும் ‘முதல்ல இருந்து வா.. பொண்டாட்டி ஓடிப்போனதுல இருந்து வா..’ என்பது போல் ராமன் தன் பொண்டாட்டியை துரத்திவிட்டதில் இருந்தும், ஊரெல்லாம் வைப்பாட்டிகள் வைத்திருந்ததில் இருந்தும் பேச வேண்டியிருக்கிறது.
நீங்க ‘என்ன கையப்புடிச்சு இழுத்தியா’ என்று கேட்குறதால தான் இந்து மதம் அதிகமா நாறுது ராசா…
யார் தமிழர்?
தமிழர் என்பவர் எவர் என்பதற்கு, “தமிழைத் தாய்மொழியாக உடையவர்; தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆகார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழி போல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழர்”