இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.
மோடியின் இந்த நடவடிக்கை, உள்நாட்டிலும் பதுக்கப்பட்ட பணத்தை வெளிக் கொண்டு வராது. நகைகளாகவும் சொத்துக்களாகவும் நிலங்களாகவும், பதுக்கப்பட்ட கருப்புப்பண முதலீடுகளை ஒன்றும் செய்யாது.
மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை !
மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி, சாதாரண மக்களை நள்ளிரவில் நடுத்தெருவில் தள்ளியுள்ளது.
ரூ.500, 1000 செல்லாது ! மோடியின் கருப்புப் பணமோசடி !
ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம் ?
கருப்புப் பண முதலைகளின் எந்தவகை முதலீடுகளையும் முடக்காது.
சாமானிய மக்களின் சேமிப்பையும் சம்பளத்தையும் வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல் !
கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி ரூபாய் !
இந்த மோசடிப் பேர்வழிகளின் பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடியா, கருப்புப் பணத்தை மீட்கப் போகிறார் ?
இவண்
மக்கள் அதிகாரம்
சென்னை – 91768 01656
தேசவிரோத மணிகண்டன் அவர்களே …, பெரு முதலாளிகளிடம் இருந்து தேசிய வங்கிகளுக்கு திரும்பி வராத ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடனை வசூலிக்க துப்பு இன்றி உள்ள மோடிக்கும் ஆதரவாக ஏன் பேசிக்கொண்டு உள்ளீர்கள்? இன்னும் மக்களின் கை பணத்தை பிடுங்கி அந்த பெரு நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் முயர்சி தான் இது என்பதனை அருண் ஜேட்லியின் வார்த்தைகளை படித்து உணருங்கள் தேச மக்கள் விரோதியே மணிகண்டன்…
அருண் ஜெட்லி வாக்குமுலம் : “””வங்கிகளுக்கு இதன் மூலம் (இந்த பணம் 500 1000 ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம்) மூலதனம் கிட்டும் என்றாலும் அவற்றிற்கு மேலும் மூலதனம் தேவைப்படும். ஆனால் இதன் மூலம் மூலதனம் திரட்டும் ஆதாரம் அதிகரித்துள்ளது””
பழய ஐநூறு நோட்டை மாத்த வந்தவரின் கையிருப்போ 1500. வங்கியின் இருப்போ புதிய 2000 நோட்டு. நாளைக்கு நூறு ரூபா நோட்டு வந்துருமாங்கையா என்ற கேள்விக்கு வங்கியின் பதில் “நாளை வந்து பாருங்க”. இவர்களைப் போன்றோருக்கு என்ன பதில் மோடி அவர்களே.