privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைமோடிய திட்டாதவங்க யாரு ? தமிழ் ஃபேஸ்புக்கின் விளாசல் - தொகுப்பு

மோடிய திட்டாதவங்க யாரு ? தமிழ் ஃபேஸ்புக்கின் விளாசல் – தொகுப்பு

-

Manitham Mattun

அம்பானியும் அதானியும்
ஆடிய ஆட்டத்தில் விழுந்த
ஓட்டைகளை
அப்பாவிகளின் உழைத்து தேய்ந்த எலும்புகளால் அடைப்பதற்கு பெயர் அரசாங்கமாம்
தூ..

_______________

Edgar Solomonraja

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனப்படுவது…
இப்போதைக்கு 2 வகைப்படும்….

  1. எதிரிகளை அழித்துவிட்டதாக நாடகமாடுவது!
  2. சொந்தகுடிகளை நாடகமாடி அழித்துவிடுவது!

#மோடி_அகராதி

____________________

Barathi Thambi

விளைவுகள்….

//கான்பூரில் பணம் இல்லாததால் மக்கள் ரேசன் கடைகளை சூறையாடி அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை பங்கிட்டு எடுத்துச்சென்றனர்!//

//உபியில், பணம் இல்லாததால் மக்கள் பேங்கை அடித்து நொறுக்கி பணத்தை பங்கிட்டு எடுத்துச்சென்றனர்//

//இன்று திட்டமிட்ட இரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க போதிய பணமில்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என நேற்றே முயற்சித்தாலும் காத்திருப்போர் பட்டியல் 50க்கு மேல் இருந்தது. எனவே பயணச் சீட்டு எடுக்காமல் பயணிப்பது என முடிவெடுத்தேன்.

ரயிலில் பரிசோதகர் வந்தார். ஏ டி எம் களில் பணமில்லை, அதனால் பயணச்சீட்டு எடுக்கவில்லை, இது என் பிரச்சினை அல்ல, அரசு உருவாக்கிய பிரச்சினை அதனால் அபராதமும் கட்ட முடியாது, இல்ல சட்டபடிதான் நடந்துக்க வேணும் என்றால் என் ஏடிஎம் கார்டை தருகிறேன். அபராதம் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதா என அவருடன் வாதம் செய்ததில், உட்காருங்க சார் என்றார். //

____________________

Bala G

பீதியா இருக்கு..

மோடிஜீயின் ஆப்ரேசன் அமாவாசை மணி.. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ரிலீஸ் குறித்து பொதுமக்கள் கடுமையாக விமர்சிப்பதைப்பார்த்து அவர் கடுப்பாகிப்போய் அடுத்த அட்டாக்கா நாலாயிரம் ரூபாய் நோட்டை ரிலீஸ் பண்ணிட்டார்னா என்ன பண்றது..

எதுக்கும் அடக்கியே வாசிப்போம்..

மரண பயத்தை காட்டிட்டான் பரமா மொமண்ட்..

____________________

தே.கி. மலையமான்

ஒரு ஆந்திரக் கட்டிடத் தொழிலாளி அவருக்கு தெரிந்த அரைகுறைத் தமிழில் நேற்றிரவு வீட்டருகே என்னிடம் “என்க்கிட்ட 30000 ரூபா இருந்தது அதுல ஒரு பத்தாயிரத்த மாத்தினேன் அதுக்கு கமிசனா ஒரு ஆயிரத்துக்கு 200 வீதம் 2000 ரூபாக் கொடுத்து மாத்தினேன் என்றார்.” சரிங்க பேங்குக்கு போய் மாத்த வேண்டியதுதானா..ஏன் இந்த மாதிரி புரோக்கர்ங்கிட்ட எல்லாம் மாத்தனும் ன்னே்ன்..என்கிட்ட அக்கெளண்ட் இல்லையே என்றார்..(இதுதான் பலக்கோடிக்கணக்கோரின் நிலைமை அவர்களுக்கு போதிய கால அவகாசமோ போதிய முறையான வழிக்காட்டுதலோ செய்யாமல் திட்டம் அறிவித்ததனால் எவ்வளோ துயர்).அதுக்கு இப்ப நான் என்ன பண்ணும்ங்க என்றேன். “பாக்க நீங்க போலீஸ் மாதிரி இருக்கீங்க”..அவங்கள மாதிரி ஆளுங்கள ஏதாவது பண்ணனுங்க சார் அதான் என்றார் வேதனையுடன்… எனக்கு என்ன சொல்லி அவருக்கு புரியவைப்பதென்றே தெரியவில்லை…மீதி இருக்குற 20000 ரூபாயவாவது பேங்க் ல போய் மாத்துங்க..வோட்டர் ஐடி இருந்தாலே போதும்..2 அல்லது 3 நாளு கழிச்சிப் போய் மாத்திக்குங்க கண்டவங்கக்கிட்ட கொடுத்து ஏமாறாதீங்க என்று சொல்லிவிட்டு மகனை கூட்டிவர அப்பா வீட்டிற்கு நகர்ந்தேன்…

இதுபோல் எத்தனை கோடி பேர் தங்களது பல வருட சேமிப்பை ஒரே ஒருவரின் மடத்தனமான நடவடிக்கையால் இழந்துக்கொண்டிருக்கின்றனரோ?? ஏழைகளின் கண்ணீரில் கார்ப்பரேட்களின் சிரிப்பை ரசிக்கிறார் ஜப்பானிலிருந்து இந்நாட்டு பிரதமர்.

____________________

Raja Hussain

மோடி ஏன் ஜப்பான் சென்றார்?

இந்திய மக்கள் மோடியின் மீது கொண்டிருக்கும் வெறுப்பு எந்த அளவிற்கு உள்ளதென்றால் மோடியின் உருவ பொம்மையை கொளுத்த மாட்டோம் மோடியையே கொளுத்தி விடுவோம் என்ற அளவிற்கு நிலைமை உள்ளதால் மோடி ஜப்பானுக்கு தப்பி ஓடியதாக தகவல்!!!

____________________

Sellampillai Rajkumar

4000 க்கும் 4500க்கும் என்ன அப்படி பெரிய வித்தியாசம் என்று RBI விளக்கவேண்டும். தினமும் எடுக்கலாம், வாரத்துக்கு 24000 ரூபாய் எடுக்கலாம் என்று கணக்கு வேறு கொடுக்கிறார்கள். தினமும் வங்கிக்கு வந்து வரிசையில் நின்றால், குடும்பத்துக்கு மோடி வந்தா கஞ்சி ஊற்றுவார். உழைக்கும் மக்களின் அடிமடியில் கைவைத்து இருப்பதை பிடிங்கி வங்கியில் சேர்த்து அதையும் கார்பொரேட் நிறுவனத்துக்கு கொடுக்க இருக்கிறது.

கருப்பு பண முதலைகள் வெறும் 1% பேர் தான் அவர்களும் அதை தங்கமாக, நிலமாக, டாலராக வெளிநாட்டில் முடங்கி இருக்கிறது. அதை விடுத்து 99% மக்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருக்கிறது மோடி அரசாங்கம்.
வாராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்ட முதல் 10 பேரின் கடன் மட்டும் 10 லட்சம் கோடிக்கும் மேல். [அம்பானி சகோதர்கள் மட்டும் 3 லட்சம் கோடி].

சுழற்சியில் இருப்பதாக அரசு சொல்வது 16 லட்சம் கோடி. மேற்படி 10 லட்சம் எந்த கணக்கில் வருகிறது..??

கடந்த மூன்று நாட்களாக அப்பாவி மக்களிடம் இருந்து பிடிங்கி வங்கிக்கு கொண்டு வந்த தொகை 2 லட்சம் கோடிகளாம்..

வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணம் மட்டுமே 10 லட்ச கோடிக்கு மேல், எப்படி கணக்கு காண்பிப்பது என்று தெரியாமல் தான் சிறுவாடுகளின் மேல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று ஒன்றை தொடங்கி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். சுருக்குப்பை, கடுகுடப்பா, முதியோர்களின் முந்தானை முடிச்சியில் இருக்கும் சிறு தொகைகளை வங்கிக்குள் வந்து கொண்டு இருக்கின்றன.\

இதில்லாமல் வீடுவீடாக சென்று தங்கவேட்டை நடத்தும் திட்டம் ஒன்றும் இருக்கிறதாம்.

எளியோர்களின் மீது மோடி அரசு பெரும் போர் ஒன்றை தொடங்கி இருக்கிறது..
எளியோர்கள் தாக்கு பிடிப்பார்களா, அல்லது பர்மா அகதிகளை போல் சொந்த நாட்டிலே அனைத்தையும் இழந்து அகதிகளாய் அடிமைகளாய் அலைவார்களா…??

காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !!

________________

Prakash JP

//வங்கிகளில் லட்சம் கோடி டெப்பாசிட்… கருப்பு பண ஒழிப்புக்கு வெற்றி — தினமலம் கூவல்….//

ப்பா என்னே அறிவு.. செல்லாது என அறிவிப்பதற்கு சில மணிநேரம் முன்பு ATM ம்மில், எடுத்த பத்தாயிரம் ரூபாயில் இருக்கும் பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, அடுத்தநாள் அதே வங்கியில் செலுத்தினால், அது மீட்கப்பட்ட “கருப்பு பணம்மா” ?? முட்டாள் கூட்டம்….

பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்தை “கருப்பு பணம்” என்று கூசாமல் சிலர் சொல்கிறார்கள்..

சாதாரண மக்களிடம் கையிருப்பில் உள்ள, செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்துகிறார்கள்.. அது எப்படி கருப்பு பணமாகும்??

__________________

.சுரேஷ் குமார் கொத்தமங்கலம்

பண முதலைகள் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை எல்லாம் மோடி அண்ணாச்சி அவர்கள் ஜப்பான் புல்லட் ரயிலில் ஏற்றிக்கொண்டு மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்.

ஊருக்கு வந்ததும் அவர் தேர்தலின் போது அளித்த வாக்குப்படி இந்தியர்கள் அனைவரது வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தை வரவு வைப்பார் என்பதை இங்கே தெரியப்படுத்துகிறோம்.

ஆகவே மக்களே இப்போது தாங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை விரைவாக சென்று வங்கியில் செலுத்துங்கள்.
அம்பானிக்கும் , அதானிக்கும் வராக்கடன்கள் கொடுக்க பணம் தேவைப்படுகிறது.

____________________

Vini Sharpana

பதிவை பார்த்தெல்லாம் நான் இதுவரை யாரையும் அன்பிரண்ட் செய்ததில்லை. ஆனால், இப்போது ஒருவரை நீக்கியே விட்டேன். அவர் ’மோடியால் கருப்பு பணம் ஒழிந்துவிட்டது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்பதுபோல ஒரு நாளைக்கு 20 பதிவுகளாவது போட்டு எனக்கு கடுமையான எரிச்சலை உண்டாக்கிவிட்டார். நானே 2000 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு சில்லரை கிடைக்காமலும் எதுவும் வாங்கமுடியாமலும் கடுப்பில் இருக்கிறேன் 🙁 எங்கு பார்த்தாலும் பேங்க்குகளிலும் ஏ.டி.எம் வாசலிலும் மக்கள் தவித்துப்போய் நீண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களது வலி வேதனையெல்லாம் அறியாமல் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருக்கும் கேடியை புகழவும் ஒரு இழிமன நிலை கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது

____________________

Abdul Hameed Sheik Mohamed

“மோடி என்ன செய்தாலும் நீங்கள் ஆதரிக்க மறுப்பதற்கு என்ன காரணம் ? ” என்று ஒரு நண்பர் ஆதங்கத்துடன் இன்பாக்ஸில் வந்து கேட்கிறார்.

நான் ஒரு முட்டாள் இல்லை என்பதைத்தவிர ஒரு காரணமும் இல்லை

____________________

Madanraj Rajagopal

சாப்பிடக்கூட காசு இல்லாதவர்கள் பாரத் மாதாகீ ஜே என சொன்னால் பத்து நிமிடத்தில் பசி தீரும்.

குழந்தைக்கு பால் இல்லாவிட்டால் பக்கத்தில் இருக்கும் பசு மாட்டு மூத்திரத்தை சங்கில் ஊற்றி கொடுக்கவும். மூத்திரம் வைரத்தைவிட மேலானது என நீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது.

வைத்தியத்துக்கு பணம் இல்லாவிட்டால் அடிவயிற்றில் இருந்து ஜெய்ஹிந்த் என கத்தவும். நாபிகமலத்தின் வாயிலாக குண்டலினி கிளம்பி நோய்கள் தீரும்.

வங்கி கியூவில் நிற்க சிரமமாக இருந்தால் மோடிக்காக மேக்னா படேல் ஆடிய வீடியோக்களை போனில் பார்க்கவும். மோடிக்காக எதையும் தியாகம் செய்யலாம் எனும் எழுச்சியும் கிளர்ச்சியும் உண்டாகும்.

அதிகம் பகிருங்கள், இந்த தகவல் ஒவ்வொரு இந்தியனையும் போய் சேரட்டும். மோடியின் கரத்தினை வலுப்படுத்துவோம்.

share if you are a true indian.

1 share = 100 glass of cow urine.

____________________

Ramachandran Muthaiah

மோடி வந்தா சேஞ்சு வரும்னு சொன்ன பலபேரு சேஞ்சிக்காக ரோடு ரோடா அலையுறதா நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது ?

____________________

Syed Abdul Kadhar

பெரும்பாலும் அனைத்து ஏடிஎம்களும் பணமின்மையால் மூடப்பட்டு விட்டன.

விடுப்பின்றி கூடுதல் பணி நேரம், ஓய்வின்மை இவைகளால் கடும் உடல் மன நெருக்கடிகளுக்கு உள்ளாகும் வங்கி ஊழியர்கள் ஓரிரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஜப்பானில் இருக்கும் மோடி, ஜப்பானிலேயே இருந்து கொள்ள வேண்டிவரும்..

____________________

Jamalan Tamil

கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு என்பார்கள்.. தற்போது ஆறு நாட்கள்கூட தாங்கவில்லை. தமிழகத்தில் 4500 கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன. 1500 நியாயவிலைக்கடைகள் மூடப்பட உள்ளது. காரணம் கிராமமக்களின் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் வங்கி கூட்டுறவு வங்கிதான். இவர்கள்தான் கிராமங்களின் பொருளியல் நிர்வாகத்தை செய்பவர்கள். இவர்கள்தான் நியாயவிலைக்கடைக்கான பொருட்களை வாங்குபவர்கள். தற்போது மத்திய ரிசர்வ வங்கி இவர்களை தனிநபர் கணக்கு என்று சொல்லி பணம் வழங்குவது பத்தாயிரம்தானாம்.. இதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லையாம். ஏழை விவசாயிகளின் சேமிப்பும் வரவு செலவு கடன் எல்லாம் அந்த வங்கிகளில்தான் நடைபெறுகிறது என்பதாவது ரிசர்வ் வங்கிக்கும் தான் அறிவித்த 24 ஆயிரத்தையே 25 ஆயிரம் என்று தொலைக்காட்சியில் உளறும் அரசு பொருளாதார விவகாரத்திற்கான செயலளார் சக்தி காந்த தாஸ் க்கும் தெரியுமா?

paytm ல் பல லட்சம் டிராண்ஸ்க்ஷன் நடந்துவிட்டதாக பெருமையில் பீற்றுகிறார்கள் பிஜேபி நடுநிலை கூஜாதூக்கிகள். உண்மையில் பே-டிஎம் யாருக்கு பணத்தை அளிக்கிறது. குப்பன் சுப்பன் என்கிற கிராமபுற ஏழை சில்லறை வியபாரிகளா? பே-டிஎம் நடத்துபவர் ஆங்கிலம் தெரியாத ஏழையாக இருந்து இன்று மில்லியனர் ஆகிவிட்டார் என்று பீற்றுகிறார்கள். அவர் பணக்காரராவதில் என்ன பெருமை. கோடிக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடித்தால்தான் ஒருவன் பணக்காரனாக முடியும். நல்லா இருக்கு இவிக நடுவு நிலமை… இந்த பத்திரிக்கை சொம்பு தூக்கிகள்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாம்.

அட வெட்கங்கெட்டவைங்களா? இதற்க்குத்தான் வெள்ளையும் சுள்ளையுமா அலைஞ்சீங்களா?

____________________

Arul Ezhilan

மோடியின் கண்ணீர்!

மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை இழந்து விட்டு தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஒரு கேடும் இல்லை. அவர்கள் மிகப் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் ஜப்பானில் இருந்து திரும்பிய மோடி என்னை கொலை செய்தாலும் மக்களுக்காக நிற்பேன் என்று வெட்டி சவடால் அடித்திருக்கிறார். நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒருவன் சாட்டையால் தன்னை அடித்தபடியே நம்மிடம் பிச்சை எடுப்பான் அது நமக்கு அருவறுப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் ஆனால் அடித்து அடித்து ரத்தம் வர வர பரிதாபம் தேட முயல்வான்.. இது பற்றி ராகுல் அடித்திருக்கும் கமெண்ட்தான் ஹிட் //ஜப்பானில் சிரிப்பு, இந்தியாவில் கண்ணீர்// …

____________________

Veera Kumar

தினமலர் பேப்பர படிச்சுட்டு தன்னை பெரிய பொருளாதார மேதையாக நினைத்து கொள்ளும் சில முட்டாள்கள் தவிர்த்து அத்தனை மக்களும் மோடியை கேவலமாக திட்டுகிறார்கள் .

____________________

சு.விஜய பாஸ்கர்

இப்போது சென்னை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருக்கிறோம்.

எனக்கு கடும் தண்ணீர் தாகம். ஆளுக்கொரு பாட்டிலாக இரண்டு தண்ணீர் பாட்டில்கள் உள்ளன. ஆனால் தண்ணீர் குடிக்க இயலவில்லை. சிறுநீர் முட்டிக்கொண்டு வருகிறது. என்ன செய்ய.. இதனால் தூங்கவும் இயலவில்லை. தண்ணீர் இருந்தும் குடிக்க முடியவில்லை. சிறுநீரும் கழிக்க இயலவில்லை. தண்ணீர் பாட்டிலை பார்த்துகொண்டே, சிறுநீரை அடக்கிப்பிடித்துக்கொண்டு, தூங்காமல் விழித்துக்கொண்டு வருகிறேன்.

இப்போ சீனை மாற்றிப்போடுங்க.

வீட்டில் அரசி இல்லை. பணம் 500 ரூபாய் தாள்கள் பல உள்ளன. பசி வயிற்றை கிழிக்கிறது. 500 ரூபாயை வாங்க கடை இல்லை. பசியோடு 500 ரூபாயை பார்த்துக்கொண்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்.

பொறுத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் பொறுமையாக இருந்துகொள்ளுங்கள்.

பக்கத்தில் அமர்ந்திருக்கும் தோழரிடம் கேட்டேன். “முட்டிக்கிட்டு வருதே என்ன செய்ய?”.. அவர் சொன்ன பதில் “எல்லாருக்கும் அதே நிலைதான், ஆனா எப்போ ட்ரைவருக்கும் கண்டருக்கும் முட்டிக்கிட்டு வருதோ, அப்போதான் எல்லாருக்கும் விடிவு வரும்”.

இப்போ முடிவு பண்ணிக்கொள்ளுங்கள். யாருக்கு முட்டவைக்க வேண்டும் என்று.

பின்குறிப்பு: ட்ரெயின்ல போயிருக்கலாமே ஜீன்னு சொல்ற அறிவாளிகளும், டெபிட் கார்டு யூஸ் பண்ணலாமே ன்னு சொல்ற தேச பக்தர்களும் பக்கத்தில் வந்துறாதீங்க. மலத்தை கரைச்சி வச்சிருக்கேன்.

____________________

Paraneetharan K

மக்கள் இந்த கஷ்டத்தை இன்னும் 50 நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி!

திருவாளர் பொதுஜனம்: ரெண்டு வருடமா பொறுத்துக்கொண்டு விட்டோம்…இதில் ஐம்பது நாள் என்ன, இன்னொரு ரெண்டரை வருடம் பொறுத்துக்கொள்கிறோம். பிறகு உங்களை அத்வானி, வாஜ்பாய் இருக்கும் இடத்துக்கு ஒரே அடியா அனுப்பி வைக்கிறோம்.

____________________

Saravanan Savadamuthu

கருப்பு பணம் தானே வேணும்?

முதல்ல ஊர் சுத்தறத நிறுத்திட்டு, இவனுங்க வங்கியில வாங்குன கடன கட்ட சொல்லு…

திருட்டுப் பணம் தானா வெளியில் வரும்…. மிஸ்டர் கேடி

  1. ஜிவிகே ரெட்டி (GVK Group) (33933 Crores)
  2. வேனுகோபால் தூத் (Videocon Group) (45405 Crores)
  3. மதுசூதன ராவ் (Lanco Group) (47102 Crores)
  4. ஜி.எம்.ராவ் (GMR Group) (47976 Crores)
  5. சஜன் ஜிந்தல் (JSW Group) (58171 Crores)
  6. மனோஜ் கவுர் (Jaypee Group) (75163 Crores)
  7. கவுதம் அதானி (Adani Group) (96031 Crores)
  8. சசி ருஇயா & ரவி ருஇயா (Essar Group) (101000 Crores)
  9. அனில் அகர்வால் (The Vedanta Group) (103000 Crores)
  10. அனில் அம்பானி (Reliance Group)(125000 Crores)

(மேல உள்ள பட்டியலில் உள்ள 10 பேர் நம் தேசத்தின் பொது துறை வங்கிகளில் வாங்கி கட்டாத கடனின் ஒரு சிறிய பகுதி இது.)

தகவல் அ.முத்துகிருஷ்ணன்

____________________

Bala G

எப்போதும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடையில் தான் காய்கறிகள் பணம் கொடுத்து வாங்குவோம்..

இன்று கையில் செல்லாத (யாருமே வாங்கிக்காத) இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இரண்டு இருக்கு..
எஸ்.ஜே.சூர்யா சொல்ற மாதிரி ” இருக்கு.. ஆனா இல்ல.. ”

வேற வழியில்லாமல் அம்பானி கடையில் போய் டெபிட் கார்ட்டை தேய்ச்சு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்கினேன்.. என்பதைவிட வாங்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்..

இதுதான் மோடிஜியின் ராஜ தந்திர அரசியல்..
புரிகிறதா..

____________________

Ravi Shankar

இன்று
பலரின் தாடிகளுக்கு
லேடி காரணமல்ல,
மோடியே காரணம்.

ஷேவ் பண்ண கூட காசில்லைடா !

____________________

Poornachandran Ganesan

மோடி மஸ்தான் வேலை
இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் சுமார் 16 லட்சம் கோடி என்று தெரிகிறது. இதில் சுமார் 13 லட்சம் கோடிப்பணம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளில்தான் புழங்கிவந்தது. பத்துமாதமாகத் திட்டமிட்ட மோடி, இந்த அளவு பணத்திற்கு நூறுரூபாய் ஐம்பது ரூபாய் நோட்டுகளை அடிக்கச் சொல்லி வைத்துக் கொண்டல்லவா 500-1000 ரூபாய் நோட்டுகளை முடக்கியிருக்க வேண்டும்? மக்கள் அவதிப்பட்டு கையில் காசின்றித் தவித்து செத்துச் சுண்ணாம்பான பிறகுதான் 100 ரூபாய் நோட்டுகளை அடிப்பார்களா? இன்னும் 50 நாட்கள் இப்படியே அவஸ்தைப் படும்படி பிரதமர் சொல்கிறார். அப்புறம் மட்டும் என்ன? பலன் பூஜ்யம்தான். மோடியின் வித்தை தெரிந்தோ தெரியாமலோ நிறையப் பேர்-குறிப்பாக பாஜகவினர், அறிவிப்புக்கு முன்னாலேயே பணத்தை மாற்றி விட்டார்கள் என்று செய்திகள் வருகின்றன.

____________________

Appanasamy Apps

ஐயய்யோ! கருப்புப் பணத்தை ஒழித்த அரசு இப்போ பினாமி சொத்துகளையும் பறிமுதல் செய்யப்போகிறதாம்!

மிக்சி, ஓடாத கிரைண்டர், கேஸ் ஸ்டவ், டிவி, பிரிஜ், வாஷிங், மிஷின், ஒரு ஓட்டை கூலர், மூணு சீலிங் பேன், ஒரு கம்யூட்டர், நாலு பேண்ட், எட்டு சட்டை, ஆறு பணியன், ஆறு ஜட்டி எதுக்குமே என்னிடம் பில் இல்லை.. பினாமியாக நான் சேர்த்துள்ள சொத்துகள் இவை. இதை எப்படி பதுக்குவேன்? யாராவது ஐடியா சொல்லுங்களேன்.

____________________

Venkat Ramanujam

நானோ சிப் கூட ஓகே ., ஆனா 120mtr பூமி அடியில் வச்சாலும் காட்டி கொடுக்கும்ன்னு விட்டிங்கே பாரு ஒரு நூலு .. ? திருப்பதியில் வெங்கிக்கு ஜிலேபி போடுறங்கான்னு சொன்ன பிக்காலி 420 கோஷ்டி தானடா நீங்க .. ?

#15lakhsmasterstroke மண்டையாஸ் தாங்க முடியலடா ..?‍♂

____________________

Aga Mugan

நெல்லை மாவட்டத்தில் 425 கிராம பஞ்சாயத்துகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 408 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. பல விவசாயிகளுக்கு வங்கி கணக்கு, ஆதார் அட்டை போன்ற விபரங்கள் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருந்தனர்.

தற்போது ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதால் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கிராமங்களில் உள்ள வங்கி, தபால் நிலையங்களுக்கு சென்றால் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். சில வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் டெபாசிட் செய்து விட்டு நாளை வந்து வாங்கி கொள்ளுமாறு ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதனால் காய்கறி மார்கெட்டுகள், பலசரக்கு கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நேரத்தை பயன்படுத்தி கிராமப்புற வங்கிகள் பொது மக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு கெடுபிடி செய்து வருகிறது. பணத்தை மாற்ற ஏதேனும் ஒரு அடையாள சான்று காண்பித்தால் போதும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பல வங்கிகள் ஆதாரை மட்டுமே கேட்பது புரியாத புதிராக உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆதார் எண் இல்லாத விவசாயிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

____________________

Meenakshi Sundaram Somaya

நம்பவே முடியாத மோடி
==============================

கொல்ல சதி உயிரையும் கொடுப்பேன் என்று வசனம் பேசிய மோடி யின் ஒரு நாள் COSTUME..மூன்று உடைகள் …

____________________

Anthony Fernando

அனைத்து அமைப்புகளும் தெருவில் இறங்கி போராட வேண்டிய நேரமிது. தெருவில் நிற்பதை நிறுத்தி விட்டு தெருவில் இறங்கி போராட்டத்தை ஆரம்பிப்போம்.

____________________

சம்பத் இளங்கோவன்

 ஊரே அல்லோகலப்படும் தகவலை யாரும் அம்மையாரிடம் சொல்லவில்லை போலும் அறிக்கையில ஒரு வார்த்தை காணோம். அதிர்ச்சியான தகவலை எதுக்கு சொல்லிக்கிட்டுன்னு நினைச்சிருக்கலாம்தானே?
_______________