privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைசாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்

சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்

-

தீய்ந்து போகும் இதயம்
எழுதும் பாடல்
இன்னொரு இதயம் பற்றித் தீய்க்கும்.

எரி அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளி
பனிக்கட்டி போல இருக்கமுடியுமோ?

beacon-fire-2நானெழுதும் இப்பாடல்
கணவன் முன் வன்புணரப்பட்ட
பெண்களின் வேதனையிலிருந்து வருகிறது.

– பசித்துச் சோறுகேட்ட ஒரே குற்றத்திற்காக
மனிதர்களாக மட்டுமே வாழ்வோம்
என்று குரல் கொடுத்ததற்காக
கட்டி வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட
மக்கள் தலைவர்களின்
மரணவேதனையிலிருந்து வருகிறது

இந்தப்பாடல்
எப்படி உனக்கு இன்பம் கொடுக்கும்?
இதயம் மட்டும் உனக்கு இருக்குமானால்
அது துடிதுடிக்கும்

வாழ்க்கை எனும்
சாணைக்கல்லில் தீட்டியது
இந்தப் பாடல்
எப்படி இது நடுநிலை வகிக்கும்?
எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?

ஒன்று நீ நம் ஆளாயிருக்கவேண்டும்
அல்லது எதிரியாக இருக்கவேண்டும்

எதிரிக்கு எதிராய் நடக்கும் போரில்
என்னைப் பொருத்தவரை
என் பாடலும் ஒர் ஆயுதமே!

எச்.ஆர்.கே. (தெலுங்கு)

புதிய கலாச்சாரம், நவ, டிச 1990- ஜன1991.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க