privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்கிராமங்கள் – சிறு நிறுவனங்களில் வங்கி பரிவர்த்தனை - ஒரு பார்வை

கிராமங்கள் – சிறு நிறுவனங்களில் வங்கி பரிவர்த்தனை – ஒரு பார்வை

-

பண மதிப்பைக் குறைத்தல் விளைவு: பண நெருக்கடி தொடர்வதால் வங்கிச் சேவையற்ற கிராமங்கள், சிறு வணிகங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன

கிராம மற்றும் நகரங்களில் ஏ.டி.எம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகளின் சமநிலையற்றப் பரவல் இந்திய கிராமப்புறப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளை அழித்திருக்கிறது. இதனால் நுண், சிறு, குறு நிறுவனங்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் தடுமாறுகின்றன.

india-agriculture-economyஇந்தப் புள்ளிவிவரத்தைக் கவனியுங்கள். கிராமப்புற மற்றும் சிறுநகர மையங்களில் உள்ள ஒவ்வொரு வங்கிக் கிளையும் நகர்ப்புற – பெருநகரங்களில் இருக்கும் மக்களை விட இரண்டு மடங்கு மக்களுக்கு உதவுகிறது. கிராமம் மற்றும் சிறு நகரங்களில் உள்ள ஒரு வங்கிக்கிளை 12,863 மக்களுக்கு உதவுகிறது. இதுவே நகர மற்றும் பெருநகரங்களில் உள்ள ஒரு வங்கிக்கிளை 5,351 மக்களுக்கு மட்டுமே உதவுகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் டிசம்பர் – 2015 மாத “இந்தியாவின் நிதி சேர்க்கை” ( financial inclusion in India) என்ற அறிக்கைக் கூறுகிறது.

ஏ.டி.எம் இயந்திரங்களின் பரவலும் கூட நகரங்களுக்கு ஆதரவாக தான் வளைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக டெல்லியில் 9,070 ஏ.டி.எம் இயந்திரங்களும் அதனை விடப் பெரிய மாநிலமான இராஜஸ்தானில் அதை விடக் குறைவான ஏ.டி.எம் இயந்திரங்களுமே இருக்கின்றன.

இப்போது நுண், சிறு குறு நிறுவனங்களின்(MSMEs micro, small and medium enterprises) பரவலைப் பார்க்கலாம். இந்திய கிராமப்புறங்களில் பதிவு செய்யப்படாத 200.18 இலட்சம் நிறுவனங்களும், நகர்ப்புறங்களில் 161.58 இலட்சம் நிறுவனங்களும் உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவில் கிராமப்புற நிறுவனங்களின் பங்கு மட்டும் 55% ஆகும். கடைசியாக கிடைத்த 2006-07 ஆம் ஆண்டிற்கான நுண், சிறு, குறு நிறுவனங்களின் கணக்கெடுப்பு இதைத் தெரிவிக்கிறது. மாவட்டத் தொழிற்துறை மையங்களில் MSMEs தாக்கல் செய்த தொழில் முனைவோர்கள் குறிப்பாணையில் 2007-08 முதல் 2014-2015 வரைத் தொகுத்தளிக்கப்பட்டத் தகவலின் படி 22.10 இலட்சம் புதிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிராமப்புற நிறுவனங்களா இல்லை நகர்ப்புற நிறுவனங்களா என்று அது கூறவில்லை. ஆனால் இது சமமானப் பரவலாக இருந்தாலும் கூட அதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

நாக்பூரைச் சேர்ந்த தொழில் முனைவோரான அபிதாப் மெஸ்ராம் அரசுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மொத்தமாக குடிநீரை வழங்குகிறார். நகரத்திற்குள் குடிநீரை வழங்கச் செல்லும் வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வாரக் கூலிக் கொடுப்பதற்குக் கூடச் சிரமமாக இருக்கிறது என்கிறார். “என்னிடம் வேறொரு வேளாண் சார்ந்த தொழிலுள்ளது. ஆனால் பணமில்லாமல் பூண்டு வெங்காயம் போன்ற பொருட்களை பெரிய அளவில் மண்டிகள் வழங்காது”.

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், 10 இலட்சத்திற்கும் அதிகமான நுண் மற்றும் சிறு நிறுவனங்கள் இருக்கின்றன. ”ஒரு ஒன்றரை மாதத்திற்கு உற்பத்தியேதும் இருக்காது. சென்னையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் 2015 வெள்ளச்சேதத்தில் இருந்தே இன்னும் மீண்டெழவில்லை. நாங்கள் விற்பனை எதுவும் செய்ய மாட்டோம் என்பது உறுதியாக இருந்தாலும் வங்கிகள் பழைய கடன்களுக்கான மாதத் தவணையை வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும் என்பது அதை விட உறுதி” என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் நுண் நிறுவனங்கள் அமைப்பின் தலைவர் சி.பாபு. இந்த அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் 1.5 கோடிக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

farmers-protest-759“பற்றாக்குறையான வங்கிக்கிளைகள் தான் சிறு வணிகத்தில் பணப்புழக்கத்திற்கான ஆதிக்கத்திற்கு ஒரு இன்றியமையாதக் காரணமாகும். பெரும்பான்மையான வங்கிகள் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்தியக் கிராமப்புறங்களில் வங்கிப்பணிகளை ஒரு சுமையாகவே மக்கள் கருதுகின்றனர்” என்கிறார் நுண் சிறு குறு நிறுவனங்கள் கூட்டமைப்பின்(Fisme) பொதுச் செயலாளர் அணில் பரத்வாஜ். “நிறுவனம் சிறிதாக இருந்தால் பிரச்சினைப் பெரிதாக இருக்கும். உற்பத்தியின் கூடுதல் மதிப்பு மேற்கொண்டு உயராமல் நின்று விட்டதாக இடை நிகழ்ச்சி அறிக்கைகள்(Anecdotal reports) அறிவுறுத்துகின்றன” என்று அவர் கூறுகிறார்.

2001-2015 ஆண்டுகளுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி நகர மற்றும் பெருநகரங்களில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 20,713 லிருந்து 43,716 என இரண்டு மடங்கிற்கும் மேலாக எகிறிவிட்டது. அதேக் காலக்கட்டத்தில் கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 44,905 லிருந்து 82,358 ஆக அதிகரித்திருந்தாலும் நகர்ப்புற அளவிற்கு வேகமாக இல்லை. 2015 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கிராமப்புற மக்களுக்கு 7.8 கிளைகளே இருந்தன. ஆனால் இந்திய நகர்ப்புறங்களில் வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் மக்களுக்கு 18.7 ஆக இருப்பது பரத்வாஜின் கூற்றை மெய்ப்பிக்கிறது.

கணக்கில் வராத பணம் மற்றும் கருப்புப் பணத்திற்கு இடையேயான பாரிய வேறுபாடு காணாமல் போனது தான் மிகப் பெரியப் பிரச்சினை என்கிறார் நுண் சிறு குறு நிறுவனக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் வி.கே.அகர்வால். தவறான நடவடிக்கையினால் வரும் பணம் தீங்கானது தான். ஆனால் சிறு வணிகத்தில் புழங்கும் பணமானது பொருளாதார நடவடிக்கைகளுக்கு வலுவை மட்டுமேச் சேர்க்கிறது” என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவில் பெரும்பாலான MSMEs நிறுவனங்களின் விற்றுமுதலே சில இலட்சங்கள் தான். இதில் நடுத்தர அளவு நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 1% கூடக் கிடையாது. அகர்வாலுடைய நடுத்தர அளவு நிறுவனமான ஷாஷி கேபிள்ஸ் லிமிடெட் கம்பிவட கடத்திகளைத் தயாரிக்கிறது. இணையத்தில் RTGS வசதியை பயன்படுத்துவதால் தான் பாதிக்கப்படவில்லை என்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல் வரிசையில் நின்று பணம் எடுக்கவும் செலுத்தவும் அவரிடம் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

“நடுத்தர அளவு நிறுவனங்களால் பணப்பற்றாக்குறையை எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் பெரும்பாலான சிறு குறு நிறுவனங்கள் தனி மனிதர்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள் பயங்கரமான நிலையில் இருக்கின்றனர்” என்று அகர்வால் கூறுகிறார். இதுவரையில் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று கூறுவது கடினம் என்றாலும் பொருளாதார நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று MSME லிருப்பவர்கள் கூறுகிறார்கள்.

“MSME ஒரு பலபடித்தான துறையாகும். அமைப்புச்சாரா MSME பிரிவில் ஏற்படும் தொழில் முடக்கத்தை உணர நீண்ட நாட்கள் ஆகும். அதை உணரும் போது நேரம் கடந்து விடும்” என்று பரத்வாஜ் கூறுகிறார். இந்தத் துறை பணமில்லாப் பொருளாதாரத்தை வரவேற்றாலும் அதற்கு நேரம் வேண்டும். “ஒன்றிரண்டு வாரங்களில் நீங்கள் எப்படி பேடிம்(Paytm)மிற்கு மாற முடியும்? இதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும்” என்கிறார் அவர்.

“இணையப் பரிமாற்றத்தை சிறுதொழில் துறைக் உறுதியாக கைக்கொள்ளும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். ஆனால் இது ஒருப் படிப்படியான செயல்பாடாகும். வணிகத்தில் உருவாகும் பணமானது ஒழுங்கற்றது அல்ல என்பதை ஒப்புக் கொள்வதும் இன்றியமையாததாகும். சில பிரச்சினைகளை ஓரளவிற்கு மேல் ஒரு அமைப்பை முடமாக்கி அதன் விளைவைச் சிதைக்கும் அளவிற்கு திணிக்க முடியாது.” என்கிறார் அகர்வால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க