மனித குலம் உருவான காலத்திலிருந்து மனிதனுக்கு அச்சத்தை தந்த ஒரு விடயம் மரணம். மரணம் பற்றிய பயத்தினால் தான் கடவுள் கூட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே மரணம் தந்த அச்சமே இப்போது தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மீது கட்டமைக்கப்படும் புனித பிம்பத்திற்கு காரணம்.
பெண் என்பதால் , அல்லது ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் புனிதமடைந்து விடுவாராயின் நமது அரசியல் நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது என்றே அர்த்தம். பெண் என்பதால் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வர்க்கம் சார்ந்து வேறுபடும்.
ஒரு தாயாக என் குழந்தையை வளர்க்க நான் மிகவும் கஸ்டப்பட்டேன் என்று ஐஸ்வர்யா ராய் சொல்வதற்கும் , தினக்கூலிவேலை செய்யும் ஒரு பெண் சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா?
இவ்விருவரும் பட்ட கஸ்டங்களை பெண் என்பதற்காகவே சமப் படுத்தி விடமுடியுமா? சாதி , இனம் , நிறம் சார்ந்து ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றது.
ஒரு பார்ப்பன பெண்ணும் ஒரு தலித் பெண்ணும் ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள நேர்வது ஒரே அளவுகளில் அல்ல. ஆதிக்க சாதிவெறியுடன் கூடிய ஆணாதிக்கத்தை எதிர்கொள்ளும் தலித் பெண்களையும் ஜெயலலிதா எதிர்கொண்ட ஆணாதிக்கத்தையும் இந்த மரணத்தின் மூலம் சமப்படுத்திவிடுகின்றனர் முற்போக்குவாதிகள்.
#ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்கொண்டு வெற்றியீட்டிய ஆளுமையைக் கண்டு பிரமிப்பதாக பல பதிவுகள். இதில் பெண்களின் பதிவுகளும்.அடக்கம்.
ஒரு அரசியல் ஆளுமையை விமர்சனம் செய்வது அவரின் அரசியல் சமூக செயற்பாடுகளின் விளைவுகளை பரிசீலனை செய்வதன் மூலமாகவா? அல்லது அவர் என்ன பாலினம் சார்ந்தா?
சரி, ஒர் பெண்ணாக தான் பட்ட கஸ்டங்களினூடாக கற்ற பாடங்களினூடாக ஒடுக்கப்படும் பெண் இனத்திற்காக ஜெயலலிதா என்ன செய்துவிட்டார்?
கூடங்குளத்தில் தம் வாழ்வுரிமைக்காக போராடிய பெண்களுக்கும் டாஸ்மார்க்கினால் தம் தாலியை பறிகொடுத்த பெண்களுக்கும் , போலீஸ் மிருகங்களை ஏவி அவர்களின் பிறப்புறுப்பில் உதைத்து விரட்டினாரே ஜெ , இதுவா ஆளுமை?
பெண் என்றால் பேயும் இரங்குமாம். ஜெ இரக்கம் கொள்ள வில்லையே…. ம.க.இ.க. வின் டாஸ்மார்க் எதிர்ப்பு பிரசாரத்தில் ஐந்து வயது சிறுமிக்கும் அதே தண்டனையை வழங்கவில்லையா? அவர் ஆட்சியில் இருந்த போது பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு தனது அரசியல் லாபத்தில் அக்கறை கொள்ளாமல் பாரபட்சமற்ற நீதியைப் பெற்றுத் தந்தாரா?
போலீஸ் அதிகாரியான விஷ்ணுப்பிரியாவே ‘தற்கொலை’ செய்து கொள்ளும் நிலைமை தானே ஏற்பட்டது. தமது அரசியல் , சாதீய , வர்க்க நலனைத் தாண்டி பெண்களுக்காக என்ன செய்து விட்டார் ஜெயலலிதா? டாஸ்மார்க் மூலம் பல பெண்களின் தாலியை பறித்ததை தவிற அவர் பெண்களுக்காக செய்தது எதுவுமில்லை.
கடைசியாக மரணப்படுக்கையில், மருத்துவமனையில் வேதனையை அனுபவித்தாராம். டாஸ்மார்க் இனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட கணவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பிள்ளைகளுக்காக கல்லுடைக்கவும் , களை பிடுங்கவும் , வீட்டு வேலைக்கும் செல்கிறாளே ஏழைத்தாய், அந்தத் தாயைவிட இந்த மாண்புமிகு அம்மாவின் வேதனை பெரிதா?
ஆத்மா சாந்தியடையட்டும் என்று சொல்ல ஆத்மாவில் நம்பிக்கையில்லாததால் , மரணத்தின் மூலமும் மன்னிக்க முடியாதவராகவே இந்த ” அம்மாவிற்கு” விடை கொடுக்க வேண்டியிருக்கிறது.
நன்றி : மோகனா தர்ஷினி
THE MAIN CONTENT OF THE ESSAY IS THIS://பெண் என்பதால் , அல்லது ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் புனிதமடைந்து விடுவாராயின் நமது அரசியல் நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது என்றே அர்த்தம். //
The very first correct critic. Our people are proving that we are emotionally hyper-behaved.
வினவின் கருத்து மிக சரியானது. ஆனால் இதுவோ கோவணாண்டி ஜால்ராக்கள் ஊர்
அருமையான வார்த்தை பிரயோகம்
மோகனா அவர்களே
மரணம் யாரையும் புனிதபடுத்திவிடாது
மரணம் யாரையும் புனிதப்படுத்திவிடாது.
அருமையான பதிவு, இதேதான் எனது நிலைப்பாடும். என்னால் அவரது அதிரடி மற்றும் தைரியமான(??!!) நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியவில்லை. ஆனால் நம்மை சுற்றி இருக்கும் 99.9 சதம் மக்கள் அவரைப் புனிதப்படுத்த படாதபாடு படுகிறார்கள்.இது என்ன மனநிலை?
வாழும்போது மனசாட்சி அற்றுநடப்பவர்களுக்கு , பேயாட்டம் ஆடியவர்களுக்கு இறந்தவுடன் ஆத்ம சாந்தி எப்படி கிடைக்கும்? அம்மா இட்டிலி கடைக்கு பாராட்டலாம் ; பக்கத்திலேயே டாஸ்மாக் கடை இல்லாமலிருந்தால்! தி மு க வை தூற்றி அம்மாவை புகழலாம், கருணானிதியின் கெட்ட குணங்கள் அம்மாவை பீடிக்காமல் இருந்தால்! தனி வாழ்விலும், அரசியலிலும் அவர் ஒரு சாடிஸ்ட் , அதற்குரிய சாவு ஏற்பட்டுள்ளது! அ வரால் தனிப்பட்ட முறையில் பலனடைந்த பலர் வருந்தலாம், பாதிக்கப்பட்ட சமூதாயம் மன்னிக்கவோ , மறக்கவோ முடியாது! மாசெ துங்கின் மருத்துவர் எழுதிய புத்தகத்தை படித்தவர்,நம்ம ஊர் பட்டினத்தார் “காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது” என்றதும், “ஓட்டப்பம் வீட்டை சுடும்” (தன் வினை , தன்னையே சுடும்) என்ற தமிழ் வரிகளை படிக்காதது ஏன்?
I dont want comment your articles,(Because your role in tamilnadu comment others, for the last 20 years other then that nothing you did for people), but in your articles also some contents are very true, at the same time please remember due to Amma only now we are getting Kaveri water by supreme court, i am not sure if any other politicians will do that, they may be compromise with Karnataka politician.
For demonstration plenty of poor people are struggling, but due to demonstration only land value and other broker effect (even some case corruption also) reduced like anything.
To be frank 100 % idealistic never won anywhere else.
How much water TN got and how many farmers cultivated how many acres of Samba?Please share your information.
The land would be purchased only by people who have money for that.But,even a wage earner under 100 days’scheme wastes his time in the bank foregoing his wages for that day.A vegetable vendor.who purchases vegetables for say Rs 5000 or Rs 6000 per day,could not do so nowadays.Who will take care of his family? Many elderly persons who get pension of Rs1000 per month,were not paid from last month.Auto rikshaw drivers linked with OLA forego trips since many customers pay by OLA MONEY instead of hard cash.This driver can not wait till OLA gives reimbursement.
The govt should also be practical.Yesterday,being Friday,there was much crowd in the banks since there will be two holidays.In one bank,they were giving only Rs 4500/- per head.Imagine a family of say 5 persons,forced to restrict its expenses within Rs 4500/-The head of the family does not know when he will get next payment from his bank.There is a very WISE cartoonist in Dinamani,who considers himself as more smart than its editor.In his cartoon today,the family head says that he has learnt to run the family by cutting the family’s expenses by 30%.That cartoonist is said to be a follower of Ramakrishna Paramahamsa.And yet he has no empathy with the suffering of common man due to demonetization.
Dear Sooriyan
In my message i already accepted plenty of poor people are struggling, I am not against your statement, but at the same time, please think how many middle class people are fearing for the purchase of site in many place…… (If its continue no one have the ability to buy in high price).
Infact some real estate broker are telling to people, Please buy the sites or plots now in white money after this issue over give remaining money (Black money).
In that case i wish to bring to tell, even demonetization also good.
சரியான கருத்து மட்டுமல்ல நிதர்சனமான உண்மை.இந்த உண்மைகளை உணரவிடாமல் ஊடகங்களும் எதையோ சாதித்ததை போல செய்தியை பரப்புகின்றன.மரணத்திலும் கண்டிப்பாக மன்னிக்கமுடியாது…..
100% உண்மாஇ, சரியான கருத்து
சின்னம்மா சின்னம்மான்னு உருகுறானுங்க.அவரின் பின்னணி என்ன?அவர் செய்த செயல்கள் என்ன?ஊழல்கள் என்ன?பின்னணியில் ஆட்டிவைத்தது எப்படி?அப்பல்லோவில் நடந்தது என்ன?இதுபற்றிய பதிவுகளை இடுங்கள் தோழர்
கடைசியாக வந்த முக்கிய செய்தி! ஓபிஎஸ் தலைமையில் கூடிய தமிழ்னாடு மந்திரிசபை அம்மாவுக்கு “பாரத ரத்னா” பட்டம் கொடுக்கன் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறது! இவர்கள் சிபாரிசு இல்லாமலேயே அவர்கள் கொடுப்பார்கள், அதற்கான எல்லா தகுதியும் அம்மாவிற்கு உண்டு; யாசர் அராஃபட்,நெல்சொன் மன்டேலா, மதசார்பு அற்ற சோசியலிச இந்தியாவிற்கு கட்டமைப்பு ஏற்படுத்திய ஜவகர்லால்நேரு போன்ற ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் கடைந்தெடுத்த அயோக்கியர்களே !நகர்வாலா ஊழல் முதல் எமெர்ஜென்சி கொடுமை வரை அனைத்து மக்கள் விரோத, தான் தோன்றி அகந்தை செயல்களால் புகழடைந்த இந்திரா காந்தி, ஊறு காய் வியாபாரியிடம் லஞ்சம், வி பி சிங் மீது அவதூறாக போர்ஜரி வங்கி கணக்கு ஆரம்பித்து ( இப்போது 2ஜி போல) ஊழல் குற்றச்சாட்டு கூறி உச்சநீதி மன்றத்தினாலேயே கண்டனத்துக்கு உள்ளாகிய நரசிம்ம ராவ், இந்தியாவின் பங்கு பேர ஊழலில் பிள்ளையார் சுழி போட்ட டி டி கே, திராவிட இயக்கத்தை பிளந்தன்றி வேறு மக்கட் சேவை அறியாத ராஜாஜி, பிளாக் மெயில் செய்யப்பட்டு தமிழகத்தை மினிஹேரளா ஆக ஆக்கிய எம் ஜி யார் , இந்த வரிசையில் பார்ப்பன அடிமை ஆட்சிக்கு தலைமை தாங்கி, தேர்தல் ஆணையம் முதல்நீதி மன்றங்கள் வரை எல்லா அதிகார மையங்களின் வன்டவாளத்தை தண்டவாளமேற்றிய ‘அம்மா’ விற்கும் ‘பாரத ரத்னா’ மிக பொறுத்த மானதே! வரவேற்கிறேன்!
காரல் மார்க்ஸ் முக நூலில் :
நாலு எதிர்க்கட்சிகாரன தூக்கி போட்டு மிதிச்சா அயர்ன் லேடி. மூணு சொந்தக்கட்சிக்காரனை பொடணியில மிதிச்சா மிலிட்டரி லேடி. வப்பாட்டி வச்சிருக்க மந்திரிய கூப்டு வாயிலேயே மிதிச்சா போல்ட் பெண்ணுரிமை லேடி. ரெண்டு டமில் தேசியவாதியை கூப்பிட்டு, எப்படி இருக்கீங்க… இலங்கை அங்கயேதான இருக்குன்னு விசாரிச்சா ஈழ லேடி. ஒரு சாமியாரோட வேட்டிய உருவிட்டு ஊர்ல உள்ள மீதி சாமியாருக்கெல்லாம் படியளந்தா சமூகநீதி லேடி. ஓட்டுக்கு ரெண்டாயிரத்த உடைக்காம குடுத்து பகுமானமா ஆட்சியைப் புடிச்சா கிங்மேக்கர் லேடி.
அப்புறம் மைனாரிட்டி, தீயசக்தி, மானே… தேனே… சவால்.
இவ்ளோதான இங்க பாலிடிக்ஸ். இத செய்யத்தெரியாதா சின்னம்மாவுக்கு? ஓவரா பொலம்புறீங்க… ரேஸ்கல்ஸ். பிச்சு…பிச்சு!
அதாவது மக்கள் என்ன தரத்தில் இருக்கிறார்களோ அதே தரத்தில் தான் அவர்களின் மத்தியில் இருந்து உருவாகும் அரசியல்வாதிகளும் இருப்பார்கள். பக்கத்தில் இருக்கும் கேரளத்தில் ஆட்சியில் இருந்த/இருக்கும் அரசியல்வாதிகளில் பலர் (காங்கிரஸ் கட்சியானாலும் கம்யூனிஸ்டு கட்சியானாலும்) மிகவும் எளிமையானவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இருந்தால் மக்களிடம் ஓட்டு வாங்க முடியாது. பந்தா காட்டினால் தான் நம் மக்கள் திரும்பியே பார்ப்பார்கள். ஜெயலலிதாவின் இளவயது ஆசை சட்டம் படிப்பது. ஆனால் குடும்ப சூழ்நிலையால் பணம் சம்பாதிப்பதற்கு சினிமாவில் இறங்க வேண்டியதாயிற்று. அங்கே தான் அவர் குணம் கெட்டது. சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் ஏழைப்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக சொல்லும் சுதந்திரமாவது அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் சினிமாவில் இருக்கும் பெண்கள் தங்கக்கூண்டில் இருக்கும் கிளிகள் மாதிரி. குறிப்பாக வலுவான பின்புலம் இல்லாத நடிகைகள் பாலியல் ரீதியில் மிகவும் சுரண்டுப்படுவார்கள். அதை அவர்கள் வெளிப்படையாக சொல்லவும் முடியாது. பல அவமானங்களை அமைதியாக சகித்துக்கொண்டு தான் ஆக வேண்டும். ஜெயலலிதா சினிமா துறையில் இறங்காமல் சட்டம் படித்துவிட்டு தனக்கென கணவன், பிள்ளைகள், குடும்பம் என்னும் பின்னணியோடு அரசியலில் இறங்கி இருந்தால் ஒருவேளை நாம் எதிர்பார்க்கும் நல்ல குணங்கள் அவரிடம் இருந்திருக்கும்.
இந்த கட்டுரையில் ஜெயலலிதா அயோத்திக்கு ராமர் கோயில் கட்ட செங்கல் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதே ஜெயலலிதா தான் ஆனானப்பட்ட சங்கராச்சாரியையே ஒரு தீபாவளி நாளில் கம்பி எண்ண வைத்தார். இந்தியாவில் இருக்கும் மற்ற எந்த அரசியல்வாதியும் எந்த காரணத்துக்காகவும் இதை கற்பனை கூட செய்ய முடியாது. வாஜ்பேயி ஆட்சியை பதிமூன்று மாத காலம் அலைக்கலித்து கடைசியில் ஒரே ஓட்டில் காலி செய்தார். அண்ணாவை தவறாக விமர்சித்த சேஷனுக்கு தன் கட்சி மகளிர் அணி மூலம் கலை நிகழ்ச்சி நடத்தி வரவேற்பு கொடுத்தார். சுப்பிரமணிய சாமிக்கும் மகளிர் அணியின் கலை நிகழ்ச்சி மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் பின்பற்றப்படும் அறுபத்தி ஒன்பது சத இட ஒதுக்கீட்டுக்கு தனிச்சட்டம் கொண்டு வந்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது உண்மை. இது விடுதலைப்புலிகளின் வன்முறை மீது இருந்த வெறுப்பால் சொன்னது. ஆனால் பிற்பாடு இவர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானமும் மேற்கொண்ட நடவடிக்கைகளும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளும் இந்திய அரசையும் சிங்கள அரசையும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடையச்செய்தன. லக்பீம என்னும் சிங்கள பத்திரிக்கையில் ஜெயலலிதாவை மிகவும் ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிடப்பட்டது. தமிழக மீனவர் பிரச்சினையில் இவரை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்பு துறை இணைய தளத்தில் ஒரு கட்டுரையும் மோசமான கார்ட்டூனும் வெளியிடப்பட்டன. மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதிலும் முடக்குவதிலும் தொடர்ந்து குறியாக இருக்கும் மத்திய அரசை இவர் எதிர்கொண்டு தகராறு செய்தது போல் மற்ற தமிழக ஆட்சியாளர்கள் எதிர்கொள்வார்களா என்பது சந்தேகமே. நதிநீர் பிரச்சினையில் அடாவடித்தனம் செய்யும் அண்டை மாநிலங்களையும் இவர் சரியாக எதிர்கொண்டார். கர்நாடக அரசியல் கட்சிகளால் மிகவும் வெறுக்கப்படக்கூடிய தமிழக அரசியல்வாதி யார் என்றால் அது ஜெயலலிதா தான். சாதி இந்துக்கள் பெரும்பாண்மையாக வாழும் தொகுதியில், ஒரு தலித்தை வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற செய்யும் வல்லமை அதிமுகவுக்கு தான் உண்டு. தான் பார்ப்பண சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் முக்குலத்தோர் சாதியை சேர்ந்த சாதாரண பின்னணி கொண்ட சசிகலாவை உடன் சேர்த்துக்கொண்டு உடன்பிறவா சகோதரி என அறிவித்தார் (உண்மையில் அதிமுகவின் அதிகார மய்யம் சசிகலா தான்). அதே சாதியை சேர்ந்த சுதாகரனை தன் வளர்ப்பு மகனாக அறிவித்து ஊழல் பணம் பல கோடியை செலவு செய்து அவருக்கு திருமணமும் செய்து வைத்தார். இவற்றால் இவரின் பார்ப்பண சாதி அடையாளம் பெரும்பாலும் அடிபட்டு போய்விடுகிறது. இவருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் இவ்வளவு செல்வாக்கிற்கு இது முக்கிய காரணம். எல்லாவற்றுக்கும் மேல் கருணாநிதி என்னும் அரசியல்வாதியின் காட்டிக்கொடுக்கும்/கூட்டிக்கொடுக்கும் ஈன அரசியல் மற்றும் சொந்த மக்களுக்கே சூனியம் வைக்கும் சுயநலம் ஆகியவற்றோடு ஒப்பிடும் போது சற்று மேம்பட்ட அரசியல்வாதியாக ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தெரிகிறார். அதனால் தான் அதிமுக அதிக மக்கள் ஆதரவை பெற்றுள்ளது. மேற்கண்ட காரணங்களால் நாம் ஜெயலலிதாவுக்காக கண்ணீர் விடவேண்டியதில்லை என்றாலும் ஒரு மலர்வளையம் நிச்சயம் வைக்கலாம்.
எனது வேதனையை இதன் மூலம் தெரிவிக்கிறேன், ஜெயலலிதா முதலில் முதலமைச்சர் ஆனபோது அவருக்கு நானும் ஒட்டு போட்டேன், அவர் ஜெயித்தவுடன் நான் மகிழ்ச்சியடைந்தேன், அதன்பின் அவர் என் வாழ்க்கைக்கே உலை வைத்துவிட்டார், ஐந்து வருடம் வேலை யில்லா திண்டாட்டத்தை உருவாகிவிட்டார், நான் படித்த படிப்பு இந்த நாட்டுக்கும் என்குடும்பத்திற்கும் பயன்தராமல் செய்துவிட்டார், என்னைப்போல் எத்தனையோ படித்தவர்களின் வாழ்வை சீர்குலைத்த சதிகார பெண்மணி ஜெயலலிதா, வேதனைப்பட்டேன், தமிழ்நாட்டைவிட்டு வெளியேறினேன், அவர் போட்ட ஆணவ ஆட்டங்கள், திமிர்த்தனங்கள், எல்லோரையும் மன்னிக்கும் ஆண்டவனுக்கே பிடிக்கவில்லை, மனிதனை ஏமாற்றலாம், அப்பாவிகளை தனது தந்திரத்தால் ஏமாற்றலாம், ரௌடிகளுக்கு பணம்கொடுத்து அடிப்புடி செய்யலாம், ஜெயித்துவிடலாம், ஆனால் ஆண்டவனை ஏமாற்றமுடியாது, அவர்மீது இருந்த கோபமும் வேதனையும், அவர் மரணம் என்னைபோன்ற பாதிக்கப்பட்ட படித்த ஏழைகளுக்கு ஆறுதலாக உள்ளது,வினாவுக்கு நன்றி