மலையாள எழுத்தாளரும் நாடக செயற்பாட்டளருமான கமல்ஸி பிராணா (18.12.2016) ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். செய்த குற்றம் என்ன ? ஃபேஸ்புக் மறுமொழி ஒன்றில் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருக்கும் கேரள போலீசு, அவர் மீது 124 ஏ தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது.
கொல்லம் மாவட்டத்தின் கருங்கபள்ளி காவல் நிலையத்தில் பா.ஜ.க.-வின் இளைஞர் அணி கொடுத்திருக்கும் புகாரின் பேரில் பிராணா கோழிக்கோடு நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பிராணா சமீபத்தில் எழுதிய “சமஸ்தானங்களோடே” எனும் நாவலில் இருந்து சில வரிகளை எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். பள்ளி ஒன்றின் மாணவர்கள் கழிப்பறை செல்வதற்கு மறுக்கும் ஆசிரியர்கள் குறித்த சூழலை அந்த வரிகள் விளக்குகின்றது. பள்ளி மூடும் நேரமான மாலை நான்கு மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது. அப்போது மாணவர்களுக்கு “அப்பாடா இனியாவது நிம்மதியாக கழிப்பறை செல்லலாம்” என்று தோன்றுகிறது. அதாவது அவர்களைப் பொறுத்தவரை தேசிய கீதம் என்றால் கழிப்பறைக்கு சுதந்திரமாக செல்லும் வாய்ப்பை வழங்குகிற ஒரு குறியீடு.
இந்தக் காட்சியை ஃபேஸ்புக்கில் வெளியிடும் வரை பிராணவின் நாவல் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்படவில்லை. மேலும் கேரளாவில் சமீபத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சில பங்கேற்பாளர்கள் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்கவில்லை என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில்தான் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் துவங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் பாடவேண்டுமென்று உச்சீநீதிமன்றம் உத்தரவிட்டது.
தன்னை ஒரு தீவிரவாதி போல போலீஸ் சித்தரிக்கிறது என்கிறார் எழுத்தாளர் பிராணா. முதலமைச்சர் பினரயி விஜயன் கேரளாவின் மோடியாக மாறிவிடக் கூடாது என்றும் அவர் கவலைப்படுகிறார். சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினரும் முன்னார் அமைச்சருமான எம்.ஏ.பேபி, போலீஸார் இதை முழுமையாக விசாரிக்காமல் கைது செய்து விட்டார்கள் என்று சமாளித்திருக்கிறார். இந்தக் கைதை கண்டித்தோ, அவரை விடுதலை செய்யுமாறோ பேபி நேரடியாக கோரவில்லை. அரசு நல்லபடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவே குறிப்பிடுகிறார்.
இடதுசாரி பாரம்பரியம் உள்ள மாநிலமான கேரளாவில், பார்ப்பனியத்தை எதிர்த்தும் அது உருவாக்கிய பாரத தேசபக்தியை எதிர்த்தும் எந்த விதமான பண்பாட்டு போராட்டமும் நடத்தவில்லை. அதன் விளைவாக இன்று கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் குறிப்பிடத்தக்க செல்வாக்கை உருவாக்கியிருக்கிறது.
இதை எதிர்கொள்ள முடியாத கேரளாவின் போலி கம்யூனிஸ்டுகள் மறுபுறத்தில் பொதுப்புத்தியில் அமைந்திருக்கும் பார்ப்பனிய மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் நேரடியாக இந்துமதத்தையோ அதன் ஆதிக்கங்களையோ, மூடநம்பிக்கையையோ எதிர்த்து பேசுவதில்லை. நம்பூதிரிபாடு போன்ற சி.பி.எம் பிதாமகர்கள் இந்து மதத்தின் ‘நல்ல வரலாற்றையெல்லாம்’ கண்டுபிடித்து எழுதியிருக்கிறார்கள். அதை “போலி கம்யூனிஸ்டுகளின் வேத உபதேசம்” எனும் புதிய கலாச்சாரம் கட்டுரைத் தொடரிலிருந்து அறியலாம்.
எனவே எழுத்தாளர் பிராணா கைது செய்யப்பட்டிருப்பது ஏதோ கேரள போலீசின் முட்டாளதனமான நடவடிக்கையில் இருந்து எழவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் பார்ப்பனிய சமரசமே இந்த தேசபக்தி குதிப்பிற்கு அடிப்படையான காரணம்!
அதனால்தான் முதலமைச்சர் பினரயி விஜயன், கேரளாவின் மோடியாக மாறிவிடக்கூடாது என்று எழுத்தாளர் பிராணா கூறுமளவு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அவரது நாவலில் குழந்தைகளின் கழிப்பறை அவஸ்தையை பள்ளி நிர்வாகத்தின் ஒழுங்கு எப்படி கேலி செய்கிறது என்பதை தேசிய கீதம் வழியாக புரிந்து கொள்கிறோம். போகிற போக்கைப் பார்த்தால் அந்தக் குழந்தைகளையே கைது செய்துவிடுவார்கள் போலும்!
பா.ஜ.க மோடியை எதிர்த்து கொள்கை பேசும் போலிக் கம்யூனிஸ்டுகள், தமது ஆழ்மனதில் பூணுலாய் பதிந்து கிடக்கும் பார்ப்பனிய மதிப்பீடுகளை வெட்டி எறியாமல் ஆர்.எஸ்.எஸ்-ஐ முறியடிக்க முடியாது. இல்லையெனில் இடதுசாரிகளில் ஒரு இந்துத்துவா எனும் புதிய இழி பெயருக்கு அவர்கள் தயாராக வேண்டும்.
செய்தி ஆதாரம்:
For a school tale, Kerala writer held for ‘disrespecting’ national anthem
தேசப்பற்றை ஒரு தவறான விஷயம் என்பது போல் வினவு பேசுவதற்கு என் கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
வினவு போன்ற இடதுசாரிகள் எல்லோரும் இந்த நாட்டின் எதிரிகள் என்பதை மேலும் ஒரு முறை இந்த கட்டுரை மூலம் நிரூபித்து இருக்கிறீர்கள்.
அட காவி, இங்கே தேசப்பற்ரு வைத்து அரசியல் நடத்த படுகிறது . இந்த (RSS) ற் ஸ் ஸ் கும்பல் பல ஆண்டுகளாக தேசிய கொடியை தன்னுடைய அலுவலகத்தில் ஏற்றியது கிடையாது . இப்போது செய்கிறார்கள் என்றால் அது முழுக்க அரசியல் நோக்கம் . இந்த கட்டுரையில் அதை தான் சுட்டி காட்டுகிறார்.
RSS கேரளாவில் வலுவாக இருக்கிறது என்று இந்த கட்டுரை ஒப்புக்கொள்கிறது அதற்கு காரணம் என்ன ? இந்த நாட்டையும் அதன் கலாச்சாரத்தையும் அவதூறாகவும் கேலியாகவும் பேசும் இடதுசாரிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் வெறுப்பை தான் இது காட்டுகிறது. RSS இந்த நாட்டின் ஒற்றுமையை பற்றி பேசுவதால் தான் அதற்கு ஆதரவு கூடி கொண்டு இருக்கிறது.
ஹிந்து இயக்கங்களை வலுவாக வளர்த்து விட்டதில் இடதுசாரிகளுக்கு அதிக பங்கு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது, இடதுசாரிகளின் போலி மதசார்பின்மை தான் ஹிந்து இயக்கங்களின் வளர்ச்சிக்கு அடித்தளம்.
இடதுசாரிகள் உண்மையில் மதச்சார்பின்மைவாதிகளாக நடுநிலையோடு இந்த நாட்டின் நலனுக்காக அரசியல் செய்து இருந்தால் நிச்சயம் (நான் உட்பட) மக்கள் அவர்கள் பின் நின்று இருப்பார்கள்.
என்னை பொறுத்தவரையில் இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட்கள்) இந்த நாட்டின் சாபக்கேடுகள்.
கம்யூனிஸ்ட்கள் எந்தளவுக்கு இந்த நாட்டிற்கு ஆபத்தானவர்கள் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
கம்யூனிஸ்ட்கள் இல்லனா இன்நேரம் காவி ஏஜேன்ட் கேடி இந்தியவை விற்றுஇருப்பர் ,
வெள்ளைகாரனுக்கு காட்டி & கூட்டி கொடுத்த காவிகள் தேச பற்று பத்தி பேச அருகதை இல்லை நம் நாட்டில் சாபக்கேடுகள் இந்த காவி கூட்டம்,
மணி ஒரு லூசு என்று தெரியும்….. ஆனா இந்த அளவுக்கு வெவரம் இல்லாதவர் என்பது இப்ப தான் புலனாகின்றது…… உச்சா வந்தா கொழந்தைங்க என்ன செய்யும்? லஞ்சுக்கு அப்புறம் பிரேக் எதுவும் பள்ளியில் கிடையாது…. பள்ளி முடியும் போது 4மணி ஆகுது…. அப்ப உச்சா வரும் குழந்தைங்க உச்சா போகுமா? இல்ல தேசிய கீதம் பாடுமா? இதை தான் எழுத்தாளர் தன் நாவலில் கேள்வி கேட்கின்றார்….!மணிகண்டனுக்கு பிளாடர் பெரிசா இருக்கு என்பதற்க்காக குழந்தைகளுக்கும் பெரிசா இருக்குமா? அவ்வளவு நேரம் அவிங்க தாக்குபிடிப்பாங்க? என்னா மணிகண்டன் தேசியகீதம் பாடும் போதே அவிங்கள உச்சா போக சொல்றிங்களா? அது பேருதான் தேச பக்தியா?
//இடதுசாரி பாரம்பரியம் உள்ள மாநிலமான கேரளாவில், பார்ப்பனியத்தை எதிர்த்தும் அது உருவாக்கிய பாரத தேசபக்தியை எதிர்த்தும் எந்த விதமான பண்பாட்டு போராட்டமும் நடத்தவில்லை//…
இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன ? என்னமோ தேசப்பற்று என்பது RSS க்கு மட்டுமே உள்ள விஷயம் (அரசியல்) என்பது போலவும் அதை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை என்ற வருத்தமும் இந்த கட்டுரையில் உள்ளது.
ஏன் இடதுசாரிகளுக்கு தேசப்பற்று என்றால் தீண்டத்தகாத வார்த்தையாக இருக்கிறது ? நிச்சயம் இடதுசாரிகள் கண்டனத்திற்கு உரியவர்களே… இந்த நாட்டிற்கு இடதுசாரிகள் நல்லது செய்யாவிட்டாலும் தீமைகளை செய்யாமல் இருக்கலாம்.
என்ன அர்த்தம் என்றால் பார்ப்பனியத்தை முன்னிறுத்தி rss உருவாக்கியுள்ள தேச பக்தி அரசியல் அமைப்பு சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு வராது என்று பொருள் ! இது கூட புரியவில்லையா உங்களுக்கு மணி? RSS கூவும் தேசபக்தி என்பது போலியானது என்று பொருள் என்பது கூட புரியவில்லையா உங்களுக்கு மணி! கம்யுனிஸ்டுகாரர்களின் தேச பக்தி என்பது இந்த நாட்டின் மண்ணை காப்பதிலும், அதன் வளங்களை காப்பதிலும், இந்த மண்ணின் 100 கோடிக்கும் அதிகமான உழைக்கும் மக்களின் அபிலாசைகளை நிறைவேர்ருவதிலும் தான் உள்ளடங்கி உள்ளதே தவற உங்களின் பார்பனிய நலன்களை முன்னிறுத்தும் பம்மாத்து தேச பக்தியை என்றுமே வளியுருத்தாது.
ஆக மூல பிரச்சினை, நீண்ட நேர வகுப்புகள், கழிப்பறை செல்ல கூட அனுமதி இன்றி.
அதை அப்படியே சொன்னால், கல்லா கட்டுமா?
அதில் தேசியத்தை கொஞ்சம் கலந்து, RSS நெய் ஊற்றி, எழுதினால், ஆஹா, சுவையே தனி.
இதில், மூல பிரச்சினையை தீர்க்க யாராவது ஏதாவது செய்தார்களா என்பது பற்றி பேச்சு மூச்சு கிடையாது.
இடதுசாரிகள் இந்த நாட்டின் எதிரிகளோ இல்லையோ,இந்த நாட்டின் மக்கள் எல்லோரும் இந்த நாட்டின் 1ம் நம்பர் எதிரிகள்.சங்கப் பரிவாரங்கள் மட்டும் தான் தேச பக்த்தர்கள், இந்த நாட்டின் மக்கள்.தே.ப.வின் மொத்த குத்தகைதாரர்கள்.அவர்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் தேசபக்தி இருக்க வேண்டும். நீதித் துறையில் இருக்கும் தேசபக்த்தர்கள் உத்தரவு போடுவார்கள்.அதை நாட்டிலிருக்கும் மிலேச்சர்கள் அமல்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆர்.எஸ்.எஸ்.தேசபக்தியின் பெயரால் சிறை.அது உச்சா போகிற 1ம் கிளாஸ் பிள்ளையாக இருந்தாலும் தேச பக்தி விஷயத்தில் எல்லோரும் ஒன்று தான்.இப்படித்தான் தேச பக்த்தியை வளர்க்க முடியும்.இல்லாவிட்டால் தே.ப.எப்படி வளரும்?இதை புரிந்துகொள்ளாதவர்களுக்கு கம்பி தான்.அது தான் பிராணாவுக்கும்.ஆமா,பினராயி இடதுசாரி இல்லையா?அவர் தானே கைது செய்திருக்கிறார்?ஆனால் இப்படியெல்லாம் தேசபக்தியை வளர்க்க முடியுமா என்ன? நாட்டுப் பற்று என்பது தன் மக்கள் சார்ந்த சீரிய செயல்பாடுகளால் மக்களுக்கு எவ்வளவு அணுக்கமாக அரசு இருக்கிறதோ அவ்வளவுக்கு மக்களுக்கு அதன் மீது பற்று உருவாகும் வளரும்.வேறு எந்த குறுக்கு வழியிலும் அது வராதே.மோடி மஸ்தான்கும்பல்களுக்கு வருவது போல் நடிப்புதான் வரும்.இன்னும் ஒரு மாதம் பணப் புழக்கம் இப்படியே இருந்தால் தேசபக்தி நன்றாகவே வளரும் மணி.Keep it up!!
உங்கள் பெயரே சொல்கிறது நீங்கள் யார் என்று, இடதுசாரி கூட்டத்தில் நீங்களும் ஒருவர்… தேசப்பற்று என்பது நீங்கள் நினைப்பது போல் அரசின் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டது இல்லை. அரசியல் காட்சிகள் என்பது இன்று இருக்கும் நாளை காணாமல் போகும் ஆனால் தேசம் என்பது நிரந்தரம் ஆனால் உங்களை போன்ற இடதுசாரிகள் இந்தியாவே நிரந்தரம் இல்லை என்று சொல்விர்கள், அதனால் உங்களை போன்ற ஆட்களுக்கு தேசம் அதன் மீது பற்று என்பது எல்லாம் கிடையாது.
என்ன மணிகண்டன் தேசத்தின் ஆனமாவாக இருந்த காந்தியை சுட்டுகொன்ற கயவர்கள் , தேசவிடுதலை போராட்டத்தின் போது வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்து அந்தமான் ஜெயிலில் இருந்து விடுதலை பெற்ற வெள்ளையனின் ஷு நக்கிகள்.., தேச விடுதலை போராட்ட வீரர்களை காட்டிகொடுத்த வாஜிபாய்கள்…pnote மூலம் திவிரவாதிகளின் அந்நிய பணத்தை இந்திய பங்கு சந்தையில் அனுமதிக்கும் அரசுகள் ,அவற்றை ஆள்பவர்கள் இவர்கள் எல்லாரும் என்ன கம்யுனிஸ்டுகளா? துரோகத்தின் பிறப்பிடமே உங்கள் ஆட்கள் தான் என்னும் நிலையில் இங்கு வந்து தேச பக்தியை பற்றி பேச அதுவும் கம்ம்யுநிச்டுகளை பற்றி உண்மைக்கு புறம்பாகபேச உங்களுக்கு வெக்கமாக இல்லையா மணி என்ற மணிகண்டன்?
கம்யூனிஸ்ட்கள் இந்தியா ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் RSS பற்றி பேசுவதற்கு கூட தகுதி இல்லாதவர்கள்.
விவரம் கேட்ட மணிகண்டன்….. முதலில் நான் கம்யுனிஸ்டு கிடையாது. எனவே உங்கள் தேச துரோக ஆட்கள் மீது நான் வைத்த குற்றசாட்டுகளுக்கு பதில் கூறுங்கள்.
மணிகண்டன் தேச பக்தியை பற்றி பேச உங்களுக்கு அருகதை சிறிதும் இல்லை என்பதனை முந்தைய பின்னுட்டத்தில் விளக்கி உள்ளேன். இப்பவும் கூறுகின்றேன்… தேச துரோக செயல்களுக்கு மட்டுமே நீங்கள் உரிமை கோரமுடியும். நீங்கள் உரிமை கோரவேண்டிய உங்களின் தேச துரோக செயல்களை பட்டியல் இடவும் நான் தயாராக தான் உள்ளேன். சரி விசயத்துக்கு வருவோம். சிறுவர்களின் உச்சாவுக்கு விடுதலை கோரிய ஒரு சாதாரண எழுத்தாளனை கைது செய்ய கோரும் அளவுக்கு அல்லவா உங்கள் பிஜேபியின் தேசபக்தி உள்ளது. !
என்னா மணிகண்டன்…, தேச பொருளாதாரத்தின் மீது சீட்டாட்டம் அதாங்க சூதாட்டம் ஆடிக்கொண்டு இருக்கும் உங்களுக்கு உங்கள் மோடிக்கு எல்லாம் தேச பக்தியை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கு? நேற்றைய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு (“இந்தியாவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 தாள்களை வங்கிகளில் செலுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசின் , இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு) பின்னனியில் மோடியின் தோல்வியின் பதட்டம் தான் அப்பட்டமாக தெரிகின்றது.
கடந்த 13-ஆம் தேதி வரை ரூ.12.44 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.1000, ரூ.500 தாள்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் காந்தி அறிவித்தார். அதன்பின் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்பட்ட நிலையில் குறைந்தபட்சம் ரூ.1.56 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாக வைத்துக் கொண்டால் கூட, மொத்தம் ரூ.14 லட்சம் கோடி பழைய தாள்கள் நேற்று வரை வங்கிகளில் திரும்பச் செலுத்தப்பட்டிருக்கலாம்; இதை உறுதி செய்யும் வகையில் ஏராளமான புள்ளி விவரங்களும், ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சிறிது நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி அன்றைய தேதியில் புழக்கத்தில் இருந்த பழைய தாள்களின் மதிப்பு ரூ.14.95 லட்சம் கோடி ஆகும். அதனால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் சிக்கும் என்ற கனவு சிதைந்தது கூட இப்பதற்றத்துக்கு காரணமாக இருக்கலாம். மீதி உள்ள பழைய பணம் ஒரு சுமார் லச்சம் கோடியும் வங்கிகளுக்கு வந்து விடும் என்ற காரணம் கூட மோடியின் பதட்டத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். மணி கணக்கு வழக்கு புரிதால் மட்டுமே பதில் சொல்லுங்க! சும்மா மொக்கை போடவேண்டாம் என்று மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்.
RSS காந்தியை சுட்டு கொள்ளவில்லை என்று நேரு அமைத்த கமிஷன் அறிக்கை கொடுத்து இருக்கிறது. தற்போது நீதிமன்றமும் ராகுல் காந்தி RSS பற்றி தவறாக பேசியதற்காக கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
ஒன்றை மட்டும் நிச்சயம் சொல்வேன் இந்தியா ஒற்றுமையை குலைக்கும் ____(ஜாதி மதம் கடந்து) பேசும் RSS இயக்கம் எவ்வுளவோ மேலானதே…
உடனே என்னை RSS காரன் என்று சொல்ல வேண்டாம், நான் பல விஷயங்களையும் படித்து விட்டு தான் இது பற்றி எல்லாம் பேசுகிறேன். நான் RSS இயக்கத்தை சேர்ந்தவன் இல்லை.
மீண்டும் மணிகண்டன் வெவரம் கேட்டவர் என்று நிருபிகின்றார். காந்தியை கொன்றது rss என்று நான்கூறாத நிலையிலேயே எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று மணிகண்டனே காந்தியை கொன்றது rss இல்லை என்று பேசுகின்றார். காந்தியை கொன்ற பார்பனர்கள் ஹிந்துத்துவா கருத்துகளால் ஆட்கொள்ளப்ட்டதால் தான் கொன்றார்கள் என்ற உண்மையை கோட்சேவின் தம்பியின் புத்தகத்தில் உள்ள கருத்துகளில் இருந்து நாம் காணமுடிகின்றது. அது சரி மணிகண்டன்.., காந்தியை கொன்ற விசயத்தில் உங்கள் கருத்து என்ன? அவர்கள் காந்தியை கொன்றதற்க்கான காரணம் ஹிந்துத்துவா கருத்துகள் தான் என்ற நிலையில் இந்த விசயதில் உங்கள் கருத்து என்ன?
Comrade Pinarayi Vijayan Intervenes in the Sedition Case Issue!
Instructs Police to Remove Sedition Charges!
No Case of Sedition on Anyone on National Anthem Issue!
Papers had the news that the writer Kamal C. Chavara has been booked under Section 124A, i.e. Sedition, for a post on FB, again on the national anthem issue. Pinarayi Vijayan, who is also Home Minister, has instructed the police to remove the sedition charge. The police has done the same. There is no case of sedition against anyone on the national anthem issue in Kerala.
This issue has another dimension. All over the country, people have been suffering from demonetisation, but for the most part one hasn’t seen any mass protests against it. Many opposition parties have either supported it or been mute. Even AAP and TMC, for all their leaders’ statements and tweets, haven’t organised mass protests. The exception has been Kerala, where the Left parties and the state government have been mobilising people in large numbers to come out and protest. In particular, the issues of cooperative banks not being allowed to change money and the non-acceptance of old notes at PDS stores have been at the forefront. Even before demonetisation, the RSS-BJP have targeted Kerala very particularly, for obvious reasons. This effort to ratchet up communal hatred now is part of a larger attack on the Left.
These are difficult times. In the coming days as well, we are going to see all kinds of stories coming out of Kerala. Please guard against deliberately misleading, incomplete stories.
தேசிய கீதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கேரள எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான கமல் சவரா கைது செய்யப்பட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவினர் கொல்லம் காவல் துறையிடம் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் கமல் சவராவை கைது செய்த காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. எனினும், இந்த விஷயத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். எழுத்தாளர் கமல் சவராவை கமாலுதீன் என அழைப்பது மத வெறுப்பு மனப்பாங்கை காட்டுவதாகவும் இந்தப் போக்கை மாநில அரசு அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
எங்க பெரியண்ணாத்த என்ன பண்ணுனார் தெரியுமா? என் பக்கத்து ஊட்டுக்காரனுக்கு (அவனுக்கும் எனக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம்) கூர் தீட்டிய கத்திய அவன் கையில கொடுத்து, இவரு வீட்டுக்கே அவன இட்டாந்து, கத்திய எப்புடி சொருகணும்? எந்த வாகுல குத்துனா ஒரே குத்துல என்னை மேல அனுப்ப முடியும்னு, அவனுக்கு நல்லா சொல்லிக் கொடுத்துட்டு, அவனுக்கு மேற்கொண்டு பணமும் கொடுத்து என்னைக் கொல்லுன்னு தூண்டி விட்டிருக்காரு, அதுவும் என் கண்ணு முன்னாடியே இந்த அக்கிரமத்தை பண்ணிய என் பெரியண்ணாத்த, அந்தப் பக்கமா போறப்ப நான் எந்திரிச்சு நிண்ணு அவருக்கு மரியாத கொடுக்கணும்னு ஒரு கண்டிசன் வேற போடுறாரு… எந்திரிச்சு நிக்கல்லேண்னா நான் தேசத்துரோகி… என்னப் புடிச்சு செயில்ல போட்டுவேன்னு மெரட்டுராரு.
இந்தக் கொடுமய நான் எங்க போயி முட்டிக்கிறது?
இந்தக் கண்றாவிக்க மத்தில நான் தினமும் பேங்க் வாசல்ல போயி தேவுடு காக்குதேன் மணிக்கணக்கா… ஆறுநாள் இந்த வெட்டி வேலய பாத்தா ஒரு நாள்தான் நான் பேங்குக்க உள்ளேயே போக முடியுது… அதுவும் என் கணக்குல இருக்குத காசக் கேட்டா இரண்டாயிரத்ததான் வாங்கிட்டு போ… அது எங்க பத்தும் எனக்குன்னு கேட்டா, எங்கெயாவது விழுந்து சாவு ன்னு பேங்குகாரன வேற சொல்ல வச்சிருக்காரு எங்க பெரியண்ணாத்த..
இப்புடி எனக்கு கொடும மேல கொடும செஞ்சு, அக்கிரமமா நடந்துகிட்டிருக்கிற எங்க பெரியண்ணாத்தைக்கு என்ன மரியாதையக் கொடுப்பேன்னு நினைக்கிறீங்க?
அரிஅர புத்ரனின் பார்வைக்கு…
என்னங்க இளமாறன், பெரியண்ணத்த ,அரிஹர புத்திரன் என்று எல்லாம் விடுகதை போடுறிங்க! பெரியன்னாத்த யாருன்னு தெரியுது! ஆனா ஹரிஹர புத்திரன் யாருங்க! ? மணிகண்டனா?