கம்பத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீதான காவல்துறை தாக்குதலைக் கண்டித்தும் பீட்டாவை தடை செய்யக்கோரியும் மறியல், ஆர்ப்பாட்டம்!
கம்பத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மோடி, ஓபிஎஸ் அரசை எதிர்த்து தோழர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தோழர்கள் ஊர்வலமாக கிளம்பினார்கள். கம்பம் சிக்னல் அருகே சென்ற போது டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ஊர்வலத்தை தடுக்க முயற்சித்த போது தோழர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். மறியல் செய்த தோழர்களை காவல்துறை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தது. தோழர்களின் விடாமுயற்சியால் காவல்துறை பின் வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. அதன் பின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த்து. மீண்டும் வந்த டிஎஸ்பி காவல் துறை வாகனத்தில் ஏறும்படி கூறினார்கள். வாகனத்தில் ஏறமுடியாது நடந்துதான் வருவோம் என்ற போது நிலைமையை உணர்ந்த காவல்துறை மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து செல்லுங்கள் என்றது. மக்கள் அதிகாரத்தின் இந்த ஆர்ப்பாட்டம் கம்பம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
மக்கள் அதிகாரம்,
கம்பம்.
Mr.Vinavu
I believe this so called Youngsters “JALLI KATTU PORATTAM” is organised by VK Sasikala & AIADMK group
to overshadow the Farmers agitation over ‘ Farmers suicide and drought situation’
and also silently cover up the Sekar Reddy and Rama Mohana Rao raids and its follow ups.
இதுதான் அரசு அதிகாரத்துக்கு எதிரான மக்கள் அதிகாரத்தைப் பருண்மையாக எடுத்துக்காட்டுவதற்கான போராட்ட வடிவம்.ஜல்லிக்கட்டை ஆதரிப்பதுபோல் பாவ்லா காட்டுகிறீர்கள். நீதிமன்றங்களின் தீர்ப்பை நீதிமன்றங்களே,அரசாங்கமே பல தருணங்களில் மதிக்காமல் இருந்துவிட்டு மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் போது மட்டும் தீர்ப்பைத் தீவிரமாக அமல்படுத்த வருகிறீர்கள்.உங்கள் சட்டத்தை நீங்களே மதிக்காத போது எங்களுக்குத் தொடர்பில்லாத சட்டத்தை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவர்களிடம் உள்ள ஒரே பதில் அரச வன்முறை!தட்டித் தகர்ப்போம் அதை!