திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி கைது !
திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி அவரது வீட்டில் நேற்று (24.01.2017)இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் கியூ போலீஸ் தியாகராஜன் ஆகியோரால் கைது செய்யப்பட்டு கொரடாச்சேரி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று காலை 10 மணிக்கு திருவாரூர் பேருந்துநிலையம் அருகே நடக்க இருந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தை மோப்பம் பிடித்த போலீசு அவரை கைதுசெய்திருக்கிறது.
மேலும் 11.01.17 அன்று புதிய ரயிலடியில் “நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்ற முழக்கத்தின் கீழ் பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து நாள் முழுவதும் நடந்த மக்களதிகாரம் தர்ணாவில் தொண்டர்கள் கம்பு வைத்திருந்தது, மாலை 5 மணிக்கு முடிக்க வேண்டிய தர்ணாவை 06.45 க்கு முடித்தது மற்றும் நேற்று (23.01.2017) அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களை போலீசு வெறிகொண்டு தாக்குவதைக் கண்டித்து சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தது என அவர் மீது 143, 188, 504 IB, 195/17 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் கொரடாச்சேரியிலிருந்து திருவாரூர் டவுன் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்பட்டு நேற்று இரவு 07.15 க்கு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு நன்னிலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
தகவல் :
மக்களதிகாரம்,
திருவாரூர்.