privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோலீஸ் வன்முறை : எங்களை எதிர்த்துப் பேச எங்களிடமே அனுமதியா ?

போலீஸ் வன்முறை : எங்களை எதிர்த்துப் பேச எங்களிடமே அனுமதியா ?

-

கோத்தகிரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ல்லிகட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய  காவல்துறையை கண்டித்து  கோத்தகிரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.

ஜல்லிகட்டு வேண்டும் என்று போராடிய மணவர்கள், இளைஞர்கள், மாணவிகள் பொதுமக்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி தடியடி நடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியது, அதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.   100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அந்த செயலை கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி 4 நாள் முன்னதாகவே 31.01.2017 அன்று கேட்கப்பட்டது.  ஏற்றுக்கொண்ட கோத்தகிரி ஆய்வாளர் இறுதி நாளில் அனுமதி இல்லை, இன்னும் மூன்று நாட்கள் கழித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேளுங்கள் என்றனர். அதன்படி 03.02.2017 அனுமதி கேட்டகப்பட்டு திட்டமிட்டபடி கோத்தகிரி ஜீப் நிலையம் பகுதியில் காலை 10.30 மணி முதல் 11.45 வரை நடந்தது. அதில் மக்கள் அதிகார அமைப்பை சார்ந்த தோழர்.ரவி தலைமை வகித்தார்.

கண்டன உரை நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தை சார்ந்த பொருளாளர் விஜயன் உரையாற்றினார்.  அவர் பேசுகையில் காவல்துறையினர் வெறி செயலை அம்பலப்படுத்தினார்.  மேலும் அவர்களை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரை மக்கள் முன்னால் கிழித்துள்ளனர்.  கிழித்த காவல்துறையை கண்டித்து பேசினார்.  வேடிக்கை பார்த்த பொதுமக்களுக்கு அறைகூவலாக நீங்கள் வீதியில் இறங்கி இதுபோல் அமைப்புகளில் இணைந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறி முடித்தார்.

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பாலன் கண்டன உரையாற்றினார்.  அவர் பேசுகையில் துரோகிகள் யார், நாட்டுப் பற்றாளர்கள் யார்? நாட்டையும் இயற்கை வளத்தையும், நீர்நிலைகளையும் காக்க போராடுபவர்கள் தேச துரோகி என்றால், நாங்கள் அதை செய்கிறோம், அப்படியே நாங்கள் தேசத் துரோகியாகவே இருக்கிறோம் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.  யார் தேச துரோகி யார் நாட்டு பற்றாளர்கள் என்று ஜல்லிகட்டு போராட்டத்தில் வெளிப்படுத்தினார்கள்.  மத்திய மாநில அரசுகளை எப்படி திட்டினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இனி நாட்டை சூறையாட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்  மாணவர்கள் இளைஞர்கள் என்று கூறி முடித்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் கோத்தகிரி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது
பார்ப்பனிய கும்பல் தமிழகத்தை அழிக்க நினைத்தது.  அது இலட்சக்கணக்கான காளைகளை உருவாக்கியது. அந்த எழுச்சியை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இருந்தது. மத்திய மாநில அரசுகளை தன் வார்த்தைகளால் குத்தி கிழித்தது.  அதை கண்டு அஞ்சி நடுங்கிய அரசுகள் நீர்த்து போகும் வண்ணம் ஒரு பொய்யான வாக்குறுதியை அளித்தது.  அதை ஏற்க மறுத்த மாணவர்கள் உறுதியாக போராடினார்கள்.  அதை கண்டு சமூக விரோதிகளை உள்ளே சென்று விட்டனர் என்று தடியடியை நியாயப்படுத்தியது.  காவல்துறை ஒரு ஏவல்துறையாக மாறிவிட்டது. அனைத்து போராட்டத்தையும் ஈவு இரக்கம் இன்றி அடித்து சித்திரவதை செய்கிறது.  காவேரி போராட்டம் முல்லைபெரியார் போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம், மாற்றுத் திறனாளிகள் போராட்டம், மக்கள் நல பணியாளர்கள் போராட்டம், தேயிலை விவசாயிகள் போராட்டம் என அனைத்து வாழ்வாதார பிரச்சனைக்காக போராடினாலும் அடித்து சித்திரவதை செய்வது பொய்வழக்கு போடுவது என்று உள்ளனர்.

இதற்கு மக்கள் அதிகாரம் தான் மாற்று என்று  பேசியதோடு பாதிக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள், பொதுமக்கள் அனைவருக்கும் உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.  தடியடி நடத்திய காவல் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி  விடுதலை  செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மீண்டும் பெரிய போராட்டத்திற்கு தயங்க மாட்டார்கள் மக்கள் என்று எச்சரித்து பேசினார்.  ஆர்ப்பாட்டம் இடையே ஜல்லிகட்டுக்கு இல்லை டில்லிக்கட்டு, தேசத் துரோகி ஆக வேண்டும் என்றால் பெப்சியை குடி, திருத்த முடியுமா போலீசை திருத்த முடியுமா என்ற பாடல்கள் பாடப்பட்டது.  இறுதியில் நன்றியுரையாற்றினார், மக்கள் அதிகார அமைப்பு சார்ந்த வெங்கட்.

தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி.

***

எழுந்துநின்ற தமிழகமே எதிர்த்து நில்! போடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மெரினாவில் மாணவர்களின் போராட்டத்தைக் கலவர பூமியாக்கி நரவேட்டை நடத்திய போலிசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, தேனி மாவட்டம் போடி நகரில் கடந்த 03/01/2017 அன்று விவிமு சார்பில் கண்டனக் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, அனுமதி கோரியபோது, “எங்களை திட்டுறதுக்கு எங்ககிட்டயே அனுமதி கேட்டு வர்றியா” என்று விறைப்பாக பேசி மறுத்துவிட்டனர். அடுத்து டி.எஸ்.பி.இடம் முறையிட்டபின், மாவட்ட எஸ்.பி. இடம் பேசிவிட்டு, “இங்க எந்த அசம்பாவிதமும் நடக்கலையே. தேனியில்தான் சின்ன தள்ளுமுள்ளு நடந்தது. நீங்க அங்க போயி ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டியதுதானே” என்று சலித்துக் கொண்ட டி.எஸ்.பி இறுதியில், “ஒரு மணி நேரத்தில் முடித்துக் கொள்ள வேண்டும்” என்று பெரிய மனதுடன் அனுமதித்தார். இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்த்து போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய நகர்பகுதிகளில் குறிப்பாக மாணவர்களிடம் பிரசுரம், போஸ்டர் மூலமாக விரிவான  பிரச்சாரம் செய்திருந்தோம். பஸ் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் உணர்வுபூர்வமான ஆதரவுடன் தாராளமாக நன்கொடை அளித்தனர் !

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். வாஞ்சிநாதன்

போடி நகரச் செயலாளர் தோழர் A.T. கணேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். வாஞ்சிநாதன் அவர்கள் பேசுகையில் “தமிழகம் முழுக்க ஆறுநாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல்தான் இருந்தது. போலிசு நுழைந்த பிறகுதான் கலவரமானது. போராடிய மாணவர்கள் இளைஞர்கள், பெண்களை மண்டையை உடைத்தது, ஆட்டோக்களுக்கும், குடிசைகளுக்கும், மீன் மார்க்கெட்டுக்கும் தீயிட்டுக் கொளுத்தியது, வீட்டிற்குமுன் இருந்த வாகனங்களை அடித்து உடைத்தது எல்லாமே போலீசுதான்! இதுவெல்லாம் அப்பட்டமாக மீடியாக்களில் அம்பலாமான பிறகும் சமூகவிரோதிகள் தான் கலவரத்துக்கு காரணம் என்று சாதிக்கிறது தமிழக அரசு!

உண்மையான சமூக விரோதிகள் போலீசுதான் என்பது ஊடகங்கள் மூலம் மக்களிடம் அம்பலமாகிப் போனதால் தற்போது கண்துடைப்பு விசாரணைக் கமிசன் அமைத்து நாடகமாடுகிறது அரசும் போலீசும்!” என்று சமூகவிரோதிகளை தோலுரித்துக் காட்டியவர் மேலும், “போராடிய மாணவர்களை மட்டுமல்ல, அடைக்கலம் கொடுத்து உதவிய மீனவ மக்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறது போலீசு ! போராட்டம் நடந்த ஆறு நாட்களும் இந்த அரசும், போலீசும், நீதிமன்றங்களும், இவர்களின் சட்டங்களும் முற்றாக செயலற்று முடங்கிப் போனது ! சுமூகமாக இப்போராட்டத்தை முடித்தால் ருசிகண்ட பூனைகளாக ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இதுபோன்ற போராட்டங்களுக்கு மக்கள் திரண்டு விடுவார்கள். தங்களது அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். மீண்டும் இப்படி ஒரு ஆபத்து நமக்கு எதிராக திறந்துவிடக் கூடாது என்ற பயத்தில்தான் போலிசின் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது அரசு ! இந்த அரசின் கட்டமைப்பு முழுவதும் தோற்றுப் போனதன் அடையாளம்தான் இந்த தாக்குதல்!” என்று தாக்குதலுக்கான காரணத்தையும் விளக்கிப் பேசினார்.

இறுதியாக, “முல்லைப்பெரியார் அணிக்காகவும், காவிரி நீர் உரிமைக்காகவும் போராடிய விவிமு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்காக போராடிய ம.க.இ.க., டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிகாரம், ஆகிய அமைப்புகளைத்தான் சமூக விரோதிகள் என்று போலீசும், அரசும் பீதியூட்டி வருகிறது! புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும்தான் உண்மையான மக்கள் நண்பர்கள் என்பதை இப்போராட்டம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது!” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இறுதிவரை களையாமல் நின்று கேட்டுசென்றனர். அலங்காநல்லூர் மக்களின் அனுபவத்தை சம்பவமாக தோழர் விவரித்துக் கூறியது பலரையும் கவர்ந்ததாக மக்கள் கூறினார். மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலரும் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி
தேனி மாவட்டம்.

***

வேதையில் மக்கள் அதிகாரம் சார்பில் 4.2.17 அன்று சல்லிக்கட்டு போரட்டத்தை கலவரமாக்கிய போலிஸ் அதிகாரிகளை கண்டித்தும் அவர்களை கைது செய்திட வலியுறுத்தியும் தோழர் தனியரசு தலைமையில் (மக்கள் அதிகாரம்) மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது. இதில் வேதையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சிசுந்தரம் (தி.மு.க), தோழர் ஒளிச்சந்திரன் (விவசாயிகள் அமைப்பு), மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மாரிமுத்து, பாலு, ஆசாத், வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். சிறப்புரையாக தோழர் காவேரி நாடன் (மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்),காவல் துறையின் அதிகாரத்திமிரை விளக்கி  பேசினர். சுமார் 100க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டம் பகுதி மக்களிடம் வரவேற்பை உருவாக்கியுள்ளது. வேறு எந்த அரசியல்; அமைப்புகளும் இதுபற்றி வாய்திறக்காத நிலையில் மக்கள் அதிகாரம் தலைமையேற்று நடத்தியது சிறப்பாக அமைந்தது.

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க