privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுற்றவாளி ஜெயா படங்களை அகற்று : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !

குற்றவாளி ஜெயா படங்களை அகற்று : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !

-

ஜெயா படத்தை அகற்றுங்கள்! – திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஏ 1 குற்றவாளி அம்மாவின் வாரிசுகள் அவரது ஆட்சியை அமைக்க சபதம் ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்தை சண்டைக்களமாக மாற்றிக் கொண்டிருந்த தருணத்தில், 18.02.2017 அன்று காலை 10.30 மணியளவில்

“குற்றவாளிகளுக்கு அரசு மரியாதையா? மெரினாவிலிருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று ! மாணவர்களே தீயசக்தி ஜெயாவின் படத்தை பாடநூலிலிருந்து அகற்றுங்கள்! மக்களே விலையில்லா பொருட்கள் கிரிமினல் போட்ட பிச்சையல்ல! ஜெயா படத்தை அகற்றுங்கள்!”

என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி-சத்திரம் பேருந்து நிலையத்தில் பறை ஓசையுடன் விண்ணதிரும் முழக்கங்களுடன் தொடங்கியது மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின்  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்த் தலைமையேற்க, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினர்.

அவர் உரையில்: “ஜெயா-சசி கும்பல் ஒரு புதிய வரலாற்றை தமிழகத்தில் படைத்துள்ளது. “அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கையில் அவரது ஆட்சி எப்படி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் 20 வருடங்களுக்குப் பிறகு தவிர்க்க முடியாமல் சொத்து குவிப்பு வழக்கில் போட்டுஉடைத்துள்ளது. ஜெயலலிதாதான் சொத்து குவிப்பு வழக்கின் மூளையாக செயல்பட்டுள்ளார். சசி கும்பலை பயன்படுத்தி குற்றங்களிலிருந்தது தப்பித்திக்கொள்ளவே ஜெ முயற்சித்துள்ளார் என அவரது கிரிமினல் -கேடித் தனத்தை  நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்பை தொடர்ந்து அம்பலப்படுத்துயுள்ளது உச்சநீதிமன்றம்.

  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஜெயாவுக்கு அரசு மரியாதையில் மெரினாவில் சமாதி இருப்பது சட்டத்திற்கு விரோதமானது. அதை உடனே அகற்ற வேண்டும்!
  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஜெ வின் படங்கள் மற்றும் குறிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும்! அதற்கு பதிலாக தமிழகத்தின் பெருமையாக இருக்க கூடிய திருவள்ளுவர் படங்களை ஒட்ட வேண்டும்!

மக்கள்வரிப்பணத்தில் செயல்படுத்தக்கூடிய மக்கள் நலத்திட்டங்களை  , இலவசத்திட்டங்கள் என அறிவித்து தமிழக மக்களை பிச்சைகாரர்களாக கருதிய பார்ப்பன பாசிஸ்ட், ஊரறிந்த கிரிமினல் குற்றவாளி ஜெயாவின் புகைப்படங்களை தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.”

காவல் துறையின் அனுமதி இன்றி நடந்ததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. பேச:9445475157.  

_______________

சீர்காழியில் தோழர்கள் கைது : உச்சநீதிமன்ற உத்தரவை துடைத்துப் போட்ட காகிதமாக மதிக்கும் சீர்காழி காவல்நிலையம்

“குற்றவாளிக்கு அரசு மரியாதையா? ‘மெரினாவில் இருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று!”
என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டியாக ஒட்டப்பட்டது. அதே முழக்கத்தை அச்சடித்து சுவரொட்டியாக சீர்காழி நகரத்தில் ஒட்டப்பட்டது. மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவியும், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சுப்ரமணியன் அவர்களும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தபோது சிவில் உடையில் இருந்த காவலர்கள் சுவரொட்டியையும், பசை குண்டானையும் பாய்ந்து குதறினார்கள். போலீஸ்தான் என்று தெரிந்தவுடன் போலிசை அம்பலப்படுத்தியும், தமிழகத்தில் நடைபெறும் மாபிஃயா கும்பலின் ஆட்சியையும், ஜெயா சமாதியை அகற்றும் முழக்கங்களை தோழர்கள் போட்டார்கள். 18-02-2017 காலை 08-00 மணிக்கு கைது செய்யப்பட்டு சீர்காழி காவல்நிலையத்தில் U/S 153, 504, IPC R/W  PUBLIC PLACE DISTRUBMENT ACT  ல் கைது செய்யப்பட்டு சீர்காழி நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, மாலை மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் தோழர் ரவி மீது சீர்காழி மற்றும் புதுப்பட்டினம் காவல் நிலையங்கள் சுவரொட்டி ஒட்டியதற்கு வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். சீர்காழி மற்று புதுப்பட்டினம் காவல் நிலையங்கள் ஜனநாயக விரோதமாகவும், பாசிச நடைமுறையோடும் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.தொடர்பு : 9843480587

_______________

 சென்னையில் ஆர்ப்பாட்டம் !

“குற்றவாளிக்கு அரசு மரியாதையா?மெரினாவில் இருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அண்ணா சாலை பேருந்து நிலையத்திலிருந்து முழக்கமிட்டவாறே ஆர்ப்பாட்டம் தொடங்கியது. மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் ”ஜெயா- சசி கும்பல் குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இது பெரிய சாதனையாக பேசி கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பை வியந்து பேசிகிறார்கள். இதில் ஒரு புதிய விசயமும் இல்லை. மக்கள் ஏற்கனவே இவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதிவிட்டார்கள். இப்போது தான் நீதிமன்றம் 21 வருடங்களுக்கு பிறகு, எல்லோருக்கும் தெரிந்த விசயம் என்பதால் வேறு வழியில்லாமல் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு சரி என்றால் ஏற்கனவே தவறான தீர்ப்பு சொன்ன குமாரசாமி, தத்துவிற்கு என்ன தண்டனை? இவர்கள் சொல்லும் சட்டப்படியே ஒரு நிரூப்பிக்கப்பட்ட குற்றவாளி அரசு துறைகளில் வேலை செய்ய கூடாது என்று இருக்கிறது. இவர்கள் சொல்லும் சட்டத்தின் படியே ஜெயலலிதாவின் சமாதி மெரினாவில் இருக்க கூடாது. மெரினா என்பது மக்களின் சொத்து. குற்றவாளிகளுக்கு அங்கு இடம் கிடையாது உடனே அகற்ற வேண்டும் இதை இந்த அரசு செய்யுமா? செய்யாது. மக்களாகிய நாம் தான் இதை செய்ய வேண்டும் அதற்கு தொடக்கமே இந்த போராட்டம் என்று பேசினார்.

அதை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் அவர்கள் இன்று ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்தது வெறும் 66 கோடி என்று தான் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அவர்கள் அடித்த கொள்ளை இதை விட பல கோடி அதிகம். அ.இ.அ.தி.மு.க என்பது ஒரு கட்சியல்ல, அது ஒரு கொள்ளை கூட்ட கும்பல். இதில் சசிகலா, டி. டி. வி தினகரன், ஒ.பி.எஸ், எடப்பாடி அனைவரும் குற்ற கும்பல் தான். இன்று சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது மங்காத்தா சீட் போல் யாரை சேர்ந்தெடுப்பது என்ற சூதாட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தை வைத்து கொண்டு பேரம் பேசி எம். எல். ஏக்களை யார் வாங்குவது என்ற குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் எங்கேயிருந்தார்கள் இந்த எம்.எல்.ஏ க்கள் கூவத்தூரில் சொகுசு விடுதியில் கைதிகளாக வைக்கப்பட்டிந்தார்கள். எப்படி புழல் சிறையிலிருந்து வெளியே வர முடியாதோ, எப்படி பரப்பன அக்கிரக்கார சிறையில் இருந்து சசிகலா வெளியில் வர முடியாதோ? அது போல் எம்.எல்.ஏ க்களும் சொகுசு விடுதிலிருந்து வெளியே வர முடியாது. அவர்கள் உள்ளூக்குள் இருந்து கொண்டே எங்களை யாரும் அடைக்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை என்று கூறுகிறார்கள். இவர்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வெளியில் விட்டால் பணம் விலையாடும், கட்சி தாவிவிடுவார்கள் என நம்பாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்களா மக்கள் பிரச்சனைகளை தீர்க்க போகிறார்கள்? இனி இவர்களை நம்பி பயனில்லை. இதை மாற்ற ஒரு அறைகூவல் தான் இந்த மக்கள் போராட்டம் என்று பேசினார்.

மக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதாலும், வாகன போக்குவரத்து அதிகமுள்ள இடம் என்பதாலும் பலரிடம் இந்த போராட்டமும், முழக்கமும் சென்றடைந்தது. வரவேற்பை பெற்றது. குழந்தைகள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜெயா சமாதியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்ற உறுதியோடு போராடினர்.

போலிஸ் உடனே கைது செய்ய தயாராக வேன்களை நிறுத்தி வைத்திருந்தது. உடனே போராட்டத்தை முடித்து கொள்ளும் படி போலிஸ் நெருக்கடி கொடுத்தது. அனைவரையும் போலிஸ் கைது செய்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
சென்னை. தொடர்புக்கு : 91768 01656


சென்னையின் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் நோட்டுப் புத்தகங்களில் உள்ள குற்றவாளி ஜெயா படத்தை திருவள்ளுவர் படம் ஒட்டி மறைக்கின்ற இந்த படம் சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ளது. இவர்களைப் போன்று அனைவரும் பாட புத்தகங்களில், நோட்டுக்களில் உள்ள குற்றவாளி ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதை மரபு இளம் குருத்துக்களின் மத்தியில் துளிர்ப்பதை வரவேற்போம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


பென்னாகரம் : பொது இடங்களில், மக்கள் சொத்துக்களில் குற்றவாளி படங்களை வைப்பதா ?

குற்றவாளி ஜெயாவின் படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து உடனே அகற்று ! என மக்கள் அதிகாரம் தோழர்கள் 20.02.2017 அன்று காலை பென்னாகரத்தில் போராட்டம் நடத்தினர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க