privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

-

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 2

தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க மட்டும் தான் உபயோகப்படுத்தப் படுகிறதா?

ஆண்களுக்கும் ஹார்மோன்கள் சுரப்பதை தடுப்பதிலும், உயிரணுக்களை அழிப்பதிலும் இத்தடுப்பூசி உபயோகிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஆண்களையும் பெண்களையும் இத்தடுப்பூசிகள் மலடாக்குகின்றன.

ருத்துவ உலகம், குறிப்பாக அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசிகள் பற்றிக் கூறும் போது உடனே அலெக்சாண்டர் பிளெமிங்கையும் அவரின் பென்சிலின் தடுப்பூசியையும் நன்றியோடு நினைவூட்டுவார்கள்.  ஆம்!  அலெக்சாண்டர் பிளெமிங்கின் பென்ஸிலின் தடுப்பூசி மானுட குலத்திற்கு ஒரு கொடை தான் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.  ஆனால் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றால் உருவாகும் நோய்களுக்கு மட்டுமன்றி கடந்த இருபது ஆண்டுகளாக இம்யூனோகாண்டிராசெப்டிவ் எனப்படும் கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகளும் உபயோகத்தில் உள்ளன. அலோபதி மருத்துவத்தில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கான சிறந்த வழியாக தடுப்பூசி முறை முன்னிறுத்தப்படுகிறது.

இந்தியாவில் டாண்டன் என்ற ஆராய்ச்சியாளர் பல பத்தாண்டுகளாக இத்தடுப்பூசிகளை உருவாக்கும் திட்டத்தில் வேலை செய்கிறார். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இத்திட்டத்திற்கு பல கோடிகளை இதுவரை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் 2014 வரை உரிமம் பெற்ற கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகள் எதுவுமில்லை.

கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படும்? இத்தடுப்பூசி நரம்பு வழியாக இரத்தத்தில் வழங்கப்படும்.  இத்தடுப்பூசியினால் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்கள் இரண்டு வகையாக வேலை செய்கின்றன.  பெண்களில் கருவுறுதலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதை இத்தடுப்பூசி உருவாக்கும் எதிர்ப்பணுக்கள் தடுத்து விடுவதால், கருவுறுதல் நடைபெறுவதில்லை.  இரண்டாவதாக உயிரணுக்களை உடலே நோய்க்கிருமியாக நினைத்து எதிர்ப்பணுக்களைக் கொண்டு அழித்து விடும். இதன் மூலம் கருவுறுதல் தடுக்கப்படும். ஆண்களுக்கும் ஹார்மோன்கள் சுரப்பதை தடுப்பதிலும், உயிரணுக்களை அழிப்பதிலும் இத்தடுப்பூசி உபயோகிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஆண்களையும் பெண்களையும் இத்தடுப்பூசிகள் மலடாக்குகின்றன.  செல் வழியாக உருவாக்கப்படும் கருத்தடைகள் மற்ற எல்லா முறைகளையும் விட வெற்றிகரமானதென மக்கட்த்தொகைக் கட்டுப்பாட்டின் பிரச்சாரகர்கள் கொண்டாடுகிறார்கள். தற்போது டி என் ஏ தடுப்பூசி எனப்படும் நோய்க்கிருமிகளின் ஜீனோமை எடிட் (genome edited) செய்யப்பட்ட சொட்டுமருந்துகள் மூக்கு/வாய் மூலம் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி வடிவங்களும் ஆராய்ச்சி நிலையில் உள்ளன.

மீப்பெரு கருத்தரிப்புத் தடுப்பூசியும் நிறவெறிப் படுகொலையும்

உலக மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கை (depopulating the world) என்ற பெயரில் மூன்றாம் உலக ஏழை நாடுகளின் குழந்தைகளை பெண்ணின் கருப்பையில் உருவாகும் போதே அழிக்கும் கொடூரமான திட்டமிது.
உலக சுகாதார நிறுவனம், கென்ய அரசுடன் இணைந்து பல இலட்சம் பெண்குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கிய இரண்டாம் கட்ட டெட்டனஸ் தடுப்பூசிகள் அனைத்தும் பீட்டா human chorionic gonadotropin எனப்படும் ஹார்மோன் கலந்திருந்ததாக கென்ய நாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் குற்றம் சாட்டினர். 

மார்ச் – அக்டோபர் 2014 காலகட்டத்தில் கென்ய நாட்டில் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம், கென்ய அரசுடன் இணைந்து பல இலட்சம் பெண்குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கிய இரண்டாம் கட்ட டெட்டனஸ் தடுப்பூசிகள் அனைத்தும் பீட்டா human chorionic gonadotropin எனப்படும் ஹார்மோன் கலந்திருந்ததாக கென்ய நாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் குற்றம் சாட்டினர்.  கருத்தரிப்பு சிகிச்சையில் hCG ஹார்மோன் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அது நரம்பு வழியாக தடுப்பூசி வடிவில் கொடுக்கப்படும் போது அது கருத்தடையை உருவாக்குகிறது. கென்யாவில் hCG கலந்த டெட்டனஸ் தடுப்பூசி வழக்கத்துக்கு மாறாக இரண்டாண்டுகளில் 5 முறை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இதற்கு முன்னர் இதுபோன்ற பாரிய அளவிலான கருத்தரிப்புத் தடுப்பூசிகள் போடப்பட்டதை கேள்விப்பட்ட பாதிரிகள் கென்ய சுகாதார அமைச்சகத்திடம் முறையிட்டு தேவையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியும் அரசு பாராமுகமாக இருந்துள்ளது.  இதைத்தொடர்ந்து பாதிரியார்களே உள்நாட்டு மருத்துவர்களின் உதவியுடன் இத்தடுப்பூசிகளின் மாதிரிகளை பன்னாட்டு சோதனை சாலைகளுக்கு அனுப்பி சோதித்துப் பார்த்ததில் அனைத்து vial களிலும் hCG எனப்படும் கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன் இருந்துள்ளதை உறுதி செய்தனர். கென்னிய அரசாங்கமும் அதன் சுகாதாரத்துறையும் இக்குற்றச்சாட்டுகளை விசாரிக்க மறுத்தன. ஏனென்றால்  யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தைப் போன்றே கென்ய அரசும் கூட்டுக் குற்றவாளியாக இருந்து கருத்தரிக்கும் வயது வந்த பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசியைப் போட்டுள்ளது. இம் மீப்பெரு கருத்தடையை ஒரு ’நிறவெறிப் படுகொலை’ என்றே குற்றம்சாட்டுகின்றனர்.

ஏனென்றால் உலக மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கை (depopulating the world) என்ற பெயரில்  மூன்றாம் உலக ஏழை நாடுகளின் குழந்தைகளை பெண்ணின் கருப்பையில் உருவாகும் போதே அழிக்கும் கொடூரமான திட்டமிது.  இதற்கான நிதி போதிய அளவு கென்னிய அரசிடம் இல்லாத நிலையில், இத்தடுப்பூசிகளுக்கான உதவியை GAVI vaccine alliance (கவி) என்னும் அமைப்பு வழங்கியுள்ளது.  இது போன்ற பாரிய அளவிலான போலியோ சொட்டுமருந்தை கடந்த காலத்தில் பிலிப்பன்ஸில் 5 இலட்சம் குழந்தைகளுக்கும், சிரியாவில் 17 இலட்சம் குழந்தைகளுக்கும் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம் மூலம் கவி  வழங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. 

யார் இந்த கவி?

பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்
பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்

2000-ஆம் ஆண்டில் பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய 750 மில்லியன் டாலர் நிதியில் உருவாக்கப்பட்ட அரசு-தனியார் கூட்டான இவ்வமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், ஆராய்ச்சி மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்கள், குடிமை சமுதாயங்கள், பில் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகியவை.

இதன் மையக் குறிக்கோள் மூன்றாம் உலக நாடுகளின் அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளை வழங்குவது. குறிப்பாக கருப்பை புற்று நோய்க்கான பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, மஞ்சள் காமாலை, தட்டம்மை-ரூபெல்லா, தட்டம்மை இரண்டாவது டோஸ், ஐந்துகூட்டுத் தடுப்பூசிகள், ரோட்டாவைரஸ், மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றிற்கான தடுப்பூசிகளை மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கு கட்டாயமாக வழங்குவது. தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி முதல், கிளினிக்கல் ட்ரயல், உரிமம் வழங்குவது, பாரிய அளவிலான உற்பத்தி, கொள்முதல், விநியோகம் வரை அனைத்தையுமே  உள்ளடக்கிய மாபெரும் வலைப்பின்னலைக் கொண்ட அமைப்பிது.

இதன் முக்கியமான இயங்குதளம் மூன்றாம் உலக நாடுகளான தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் 49 நாடுகள். இந்நாடுகள் கவி நாடுகள் என்றே அழைக்கப்படுகின்றன.  2013 ஆம் ஆண்டு வரை கேட்ஸ் ஃபவுண்டேஷன் இவ்வமைப்பிற்கு 1.5 பில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது.  இதுவரை 370 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை இவ்வமைப்பு வழங்கியுள்ளது. அடுத்து 7 மில்லியன் குழந்தைகளைக் குறிவைத்துள்ள இவ்வமைப்பு இதுவரை உதவி என்ற பெயரில் தடுப்பூசி மற்றும் அடிப்படை மருத்துவத்திற்கு மூன்றாம் உலக நாடுகளுக்கு செலவிட்ட தொகை சுமார் 10 பில்லியன் டாலர்கள். இதில் சுமார் 2 பில்லியன் டாலர் கேட்ஸ் ஃபவுண்டேஷனின் முதலீடு. மேலும் இவ்வமைப்பின் உறுப்பினர்களில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் தவிர எந்த நிறுவனங்களின் பெயரும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்பதிலிருந்தே கவி தடுப்பூசிக் கூட்டமைப்பே மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளையும் பெண்களையும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் எனும் ஆக்டோபஸின் மாயப் பிடிக்குள் கொண்டுவருவதற்கான ஒரு கருவி மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதே கவி மூலம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் தான் தற்போது நமது குழந்தைகளுக்கு வழங்கப் போகும் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் உரிமம் வழங்கி கொள்முதல் செய்து யூனிசெஃப் வழியாக உலகெங்குமுள்ள மூன்றாம் உலக நாடுகளின் அப்பாவிக் குழந்தைகளுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும் வழங்கப் போகிறார்கள். அதன் முன்னோட்டம் தான் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கும் பாரிய அளவிலான தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம்.  அதன் பின் தற்போது தேசிய நோய்தடுப்புத் திட்டத்தின் கீழ் 9-வது மாதத்திலும் 16-24-வது மாதத்திலும் வழங்கப்படும் தட்டம்மை தடுப்பூசியை முழுவதுமாக நிறுத்திவிட்டு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை மட்டுமே அரசு வழங்கும். 

ஏற்கனவே தேசிய தடுப்பூசித் திட்டத்தில் வழங்கப்படும் டிபிடி மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுடன் எச்ஐபி சேர்க்கப்பட்டு பெண்டாவாலெண்ட் என்ற ஒரே தடுப்பூசியாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 2011-ல் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 54 குழந்தைகள் இத்தடுப்பூசியால் இறந்ததால் குழந்தை நல மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் இத்தடுப்பூசிக்கெதிராக அரசிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லை. சாந்தா பயோடெக் எனும் ஹைதராபாத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பாளர் உற்பத்தி செய்யும் இத்தடுப்பூசியை இந்திய அரசு தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த 165 மில்லியன் டாலரை கவி வழங்கியுள்ளது. ஐந்து வருடங்களுக்குப் பின் இத்திட்டத்தை அரசே முழுமையாக முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். 2013-இல் ரூ 312.7 கோடியை செலவழித்த இந்திய அரசு 2017-இல் ரூ 3587.1 கோடி மக்கள் பணத்தை பெண்டாவாலண்டுக்கு மட்டும் செலவிடப் போகிறது.  பெண்டாவாலெண்ட் உற்பத்தி சாந்தா பயோடெக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்திலும் மெர்க் நிறுவனத்திலும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் முக்கியமான பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-13 ஆண்டுகளில் மானுடகுலத்திற்கெதிராக கேட்ஸ் ஃபவுண்டேஷன் நடத்திய மனிதத் தன்மையற்ற பல கொடிய குற்றங்களும் அம்பலப்பட்டு தேசிய நாளிதழ்களில் செய்திகளாகியது.

மெலிண்டா கேட்ஸ்வுடன் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி.நட்டா

கென்யாவில் நடத்தப்பட்ட ’மீப்பெரு கருத்தடை’ தடுப்பூசி நடவடிக்கையின் போது உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், கென்ய அரசு ஆகியவை அம்பலப்பட்ட அளவிற்கு கவி மற்றும் அதன் பின்னாலிருக்கும் கேட்ஸ் ஃபவுண்டேஷனின் குற்றம் அம்பலப்படவில்லை.  ஆனால் 2009-2010 ஆண்டுகளில் பாத் (PATH) என்னும் தொண்டு நிறுவனம் மூலம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவு இந்தியாவை மட்டுமன்றி சர்வதேச அறிவியல் சமூகத்தைக் கூட குலைநடுங்கச் செய்தது.

2013 இல்  இக்கொடிய அழிவைப் பற்றி விசாரித்த இந்திய பாராளுமன்ற கமிட்டி, இக்குற்றத்தின் பின்னணியில் இருந்த அத்தனை சக்திகளையும் பெயர்சொல்லி அம்பலப்படுத்தியது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR), இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு பொது மேலாளர் (DCGI) போன்ற அரசு நிறுவனங்கள் எவ்வாறு தானே உருவாக்கிய சட்டங்களை மதிக்காமல் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் அமெரிக்க தொண்டு நிறுவனம் மூலம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளான கிளாக்ஸோ ஸிமித் கிளைன் மற்றும் எம் எஸ் டி ஃபார்மஸ்யூடிகல்ஸ் தயாரித்த இத்தடுப்பூசிகளை இப்பழங்குடிப் பெண் குழந்தைகளில் சோதிக்கத் துணை நின்ற மாபெரும் குற்றத்தை செய்தன என இவ்வறிக்கை வெளிப்படுத்தியது.  மத்திய அரசின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தைப் பயன்படுத்தி கேட்ஸ் மற்றும் அதன் கூட்டுக் குற்றவாளிகள் இச்சோதனைகளை நடத்தியது. இதனாலேயே இத் தடுப்பூசி சோதனைக்கு மரியாதையும் அதிகார பூர்வ ஒப்புதலும் ஏற்பட ஆந்திர குஜராத் மாநில அரசுகள் வழிவகை செய்தது.  15 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்கின்ற மிகக் குறைந்த பட்ச நடைமுறையைக் கூட பின்பற்றாத இத்தடுப்பூசி நடவடிக்கையில், பெரும்பாலான ஒப்புதல்கள் சோடிக்கப்பட்டவை என அம்பலமாகியது.

இத்தடுப்பூசியின் மிகக் கொடூரமான விளைவு, இது தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்.  ஆனால் ஆந்திர மற்றும் குஜராத் மாநில அரசுகள் இத்தடுப்பூசியின் பின்விளைவுகளால் இறந்த/தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை கூட செய்யாமல் கேட்ஸ் ஃபவுண்டேஷனை தப்பிக்க வைத்தன.  அரசு நிறுவனங்களான ICMR & DCGI ஆகியவை இந்திய நாட்டின் சட்டங்களுக்கும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கும் விரோதமாக இந்த சோதனைகளுக்கு ஒப்புதலை வழங்கி, நடைமுறைப்படுத்தவும் உதவி செய்ததோடு, அரசு நிதியை தகாத வழியில் உபயோகித்தது, தனியார் நிறுவனத்தின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைக்கு அரசு ஊழியர்களையும் அரசாங்க உட்கட்டமைப்பையும் (infrastructure) வழங்கி இக்குற்றத்தில் கூட்டு பங்காளிகளாகவும் செயல்பட்டுள்ளன.

கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சட்டபூர்வ சோதனைசாலையானது இந்தியா .

இந்திய நாட்டின் குழந்தைகளை சோதனை சாலை எலிகளைப் போல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் உபயோகிக்க அரசின் அவ்வளவு துறைகளையும் அதுவே வகுத்த சட்டங்களை மதிக்காமல், அவற்றை இந்நிறுவனங்களின் ஏவலாளியாக்கி ஒரு கொடூரக் குற்றத்தை செய்ய வைக்க வேண்டுமென்றால், கண்ணுக்குத் தெரியாத எவ்வளவு பெரிய வலைபின்னலை நம் மக்களைச் சுற்றி கேட்ஸ் ஃபவுண்டேஷன் பின்னியுள்ளது? இதே போன்ற சோதனைகளை பெரு, வியட்நாம், உகாண்டா ஆகிய நாடுகளின் 2006-ஆம் ஆண்டு கேட்ஸ் ஃபவுண்டேஷன் இதே தொண்டு நிறுவனம் மூலம் நடத்தியுள்ளதை அந்நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய தொகை 27.8 மில்லியன் டாலர்.

பாராளுமன்ற கமிட்டி இக்குற்றம் குறித்து இந்நாடுகளின் அரசுகளுக்கு இராஜாந்திர உறவுகள் வழி உடனடியாக அறிவித்து இதன் மேல் அந்த அரசாங்கங்களையும் நடவடிக்கையெடுக்கப் பரிந்துரைக்க வேண்டும் என இந்திய அரசிற்கு கட்டளையிட்டது.   இதை விட முக்கியமான குற்றசாட்டு, இக்குற்றவாளிகள் இதே பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கட்டாயமாக்கி பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்க அரசிடம் இலாபி செய்துள்ளது.  பாராளுமன்றக் கமிட்டியின் 72-ஆவது அறிக்கை இதை மிகப்பெரியதொரு சதித் திட்டமென்றே குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது கவியின் குறிக்கோளை நினைவு படுத்திப் பாருங்கள்.  பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி மட்டுமல்ல, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியையும் இந்திய மக்களுக்கு மட்டுமன்றி கவி நாடுகள் எனப்படும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கும் கட்டாயமாக அந்நாட்டு அரசுகள் மூலம் வழங்குவதே அதன் திட்டம்.   எதற்காக இதை செய்கிறார்கள்; அவர்கள் யாரை எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் பாராளுமன்ற கமிட்டியால் மிகப்பெரும் நெறிமுறையற்ற, சட்டத்தை மீறிய குற்றச் செயலாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த வழக்கு என்னானது என்பதைப் பார்ப்போம்.

2015-இல் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இம்மண்ணின் இதுவரையான சட்டங்கள் எதைக் கொண்டும் இக்குற்றங்களைச் செய்த இத்தொண்டு நிறுவனத்தையோ அதற்கு நிதியுதவி வழங்கிய கேட்ஸ் ஃபவுண்டேஷனையோ இதற்கு துணைபோன ICMR, DCGI, மாநில அரசுகள் ஆகியவற்றையோ தண்டிக்க முடியாது எனக்கூறி வழக்கை வாபஸ் வாங்கியது மோடி அரசு. அதுபோலவே பாராளுமன்றக் கமிட்டியின் மற்ற வழிகாட்டுதல்களும் குப்பைத் தொட்டிக்கு சென்றன.  ஆம்! இதன் பின்னர் இந்தியா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சட்டபூர்வ சோதனைசாலையானது, குழந்தைகளும் பெண்களும் எலிகளென செத்து மடிகின்றன.

(தொடரும்)

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1

செய்தி ஆதாரம்:
ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…!
Gates Foundation may fund Pune institute
Bill & Melinda Gates Foundation Vaccine Empire on Trial in India
Calls in India for legal action against US charity
“Mass Sterilization”: Kenyan Doctors Find Anti-fertility Agent in UN Tetanus Vaccine
‘Can’t penalise US NGO for violating drug trial norms’
GAVI – The Vaccine Alliance
Gates Foundation continues to support national health mission, no links terminated: Govt
‘Conflict of interest’: NHM panel raises questions on Bill Gates Foundation
Nigeria: WHO Begins Vaccination of 4.7 Million Children in North-East