டொனால்ட் ட்ரம்பின் மவுனத் திறப்பு மோடியை நினைவுபடுத்துகிறது!
முசுலீம் மக்கள் மீதான வன்மத்தில் ‘உத்தமர்கள்’ மோடிக்கும், ட்ரம்புக்கும் வேறுபாடு கிடையாது. வங்கதேச ஏழைகள் இந்தியாவில் வேலை பார்ப்பதை இந்துமதவெறியர்கள் எதிர்ப்பது போல மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதை வெள்ளை நிறவெறியர்கள் எதிர்க்கிறார்கள். கன்சாஸ் மதுவறை துப்பாக்கிச் சூட்டில் இந்தியரான ஸ்ரீனிவாஸ் கொல்லப்பட்ட போது வாய் மூடியிருந்த ட்ரம்ப் மார்ச் 1 புதனன்று கண்டிப்பது போன்று பாவனை செய்கிறார். கொள்கையில் பிரிந்திருக்கலாமே ஒழிய வெறுப்பு மற்றும் தீய நடவடிக்கைகளை எதிர்ப்பதில் நாம் ஒன்றுபட வேண்டும் என்று ஓநாய்க் கண்ணீர் வடிக்கிறார் டிரம்ப். தாத்ரி படுகொலையாகட்டும், உனா தலித் மக்கள் மீதான தாக்குதலாகட்டும் மோடியும் கூட இதே நாகரீகத்தோடுதான் சில பல நாட்கள் கழித்து “வருந்தத்தக்கது” என்றார்.
ஹிட்லர் கண்ணீர் வடித்தார் என்றெல்லாம் ஊடகங்கள் செய்தி போடுமளவு ‘கலியுகம்’ முற்றிவிட்டது!
_________________
எச்சரிக்கை: கொலைவெறி நாய்!
“கவனம் – உள்ளே கோபக்கார லூசு நாய் அலைகிறது!” -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியிருக்கும் வெள்ளை மாளிகையில் தொங்கும் எச்சரிக்கைப் பலகை!
கார்ட்டூன் நன்றி: கிரீஸ் நாட்டைச் சேர்ந்த Dino, Cartoon Movement.
புதிர் போட்டி: அத்தனைக்கும் ஆசைப்படும் ஜக்கியின் ஆதி யோகி பொம்மைக்கு மாடலிங் செய்தவர் யார் ?
No comment
“காஷ்மீரில் கல்லெறிபவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றே கருதுப்படுவார்கள்”
– இராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத்
கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi
மக்கள் அதிகாரப் போராட்டம் வென்றது
– வினவு ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள் – கேலிச்சித்திரங்கள்.
இணையுங்கள்:
- வினவு களச்செய்திகள்
- வினவு குறுஞ்செய்திகள்
- வினவு கேலிச்சித்திரங்கள்
- வினவு
- வினவு யூடியூப்
- வினவு டிவிட்டர்
- வினவு கூகிள் பிளஸ்