privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !

மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !

-

14.03.17

பத்திரிக்கைச் செய்தி

டந்த மார்ச் 10-ம் தேதியில் தில்லி குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மாருதி ஆலைத்தொழிலாளர்கள் மீது நடந்து வந்த குற்றவியல் வழக்கில் 117 தொழிலாளிகளில் 31 பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் மீது கொலைக் குற்றமும், 18 பேர் மீது வன்முறை, தீயிடல், சூறையாடல் குற்றமும் திணிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும், போலீசு – நீதிமன்றம் – முதலாளிகளும் கூட்டணி சேர்ந்து கொண்டு தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்கத் தீவிரமாக முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

வன்முறை நடந்ததாகச் சொல்லப்படுகின்ற சம்பவத்தில் அதிகாரிகளும் போலிசும் காயமடைந்ததாக பொய்க் குற்றச்சாட்டை போலீசு புணைந்துள்ளது. போலிஸ் தரப்பிலிருந்து சொல்லப்பட்ட அனைத்தும் பொய்யெனத் தெரிந்தும், நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகச் செயல்படுகின்ற போலிசையும், நீதிமன்றத்தையும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், வருகின்ற 17-ம் தேதியன்று மேற்படி வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதால் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் நிரபராதிகள் என அறிவித்து வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்கிற கோரிக்கையின் அடிப்படையில் 16.03.2017 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த திட்டமிட்டுள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு எமது சங்கத்தின் கிளை / இணைப்புச் சங்க தொழிலாளர்களும், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர் சங்கம், பெல் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி, கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஆகிய மாநில இணைப்புச் சங்கங்களும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள்.

1 திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம்,வேலூர் மாவட்டங்கள். ஆவடி புதிய நகராட்சி அலுவலகம் எதிரில்
2 புதுச்சேரி திருபுவனம் தொழிற்பேட்டை எதிரில்
3 கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம் ராம் நகர் அண்ணாசிலை அருகில்
4 கோவை, நீலகிரி செஞ்சிலுவை சங்கம் அருகில்

இவண் :
சுப. தங்கராசு, மாநிலப் பொதுச் செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – 94448 34519

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க