privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மணப்பாறை - தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மணப்பாறை – தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

-

ணப்பாறையில் 15-03-2017 புதன்கிழமை காலை 10-00 மணிமுதல் மாலை 05-00 மணிவரை மக்கள் அதிகாரம் தோழர் பாண்டியன் தலைமையில்
துப்பாக்கிச்சூட்டுக்கு மீனவர் பலி ! காவிரி துரோகத்துக்கு விவசாயிகள் பலி !!
கோக்கோ கோலாவிற்கு தாமிரபரணி பலி ! ஹைட்ரோகார்பனுக்கு நெடுவாசல் பலி !!
புதிய பொருளாதாரக் கொள்கையின் தனியார் மயம், தாராளமயம், உலகமயத்திற்கு நாடே பலி !
என்ற முழக்கத்தை முன்வைத்து மணப்பாறை பெரியார் சிலை அருகில் தர்ணா போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு  காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் 13-03-2017 அன்று எழுத்துப்பூர்வமாக அனுமதிவழங்கியுள்ளனர்.

தர்ணா போராட்டம் குறிப்பிட்ட தேதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் 15-03-2017 அன்று காலை 10-00 மணியளவில் அனுமதி மறுக்கப்பட்டது என வாய்மொழி உத்தரவு மூலம் காவல் துறை தடுத்தனர். இதில் காவல்துறை அதிகாரிகளுக்கும், மக்கள் அதிகார தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டமாக மாற்றி நடப்பட்டது.

தோழர் இரும்பொறை பிச்சை, நகர தலைவர், திராவிடர் கழகம்
திரு மணவை துரை காசிநாதன் திமுக தலைமைகழக பேச்சாளர்
தோழர் பழனிச்சாமி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்
தோழர் ந. பிரபாகரன் மாநில து. பொதுச்செயலாளர், முற்போக்கு மாணவர் கழகம்
தோழர் வீ. தனபால் திராவிடர் விடுதலைக்கழகம்
திரு தே. கோபி புதிய தமிழகம், புறநகர் மாவட்டச் செயலாளர்
தோழர். கராத்தே வீர. முருகன் மாவட்டச் செயலாளர், ஆதிதமிழர் கட்சி
வழக்கறிஞர் கு. தமிழ்மணி சமூக ஆர்வலர்
திரு சுப்பிரமணியன் சேர்மன் சூர்யாநர்சிங்கல்லூரி, வையம்பட்டி
கவிஞர் பசுலுதீன், தலைவர், மணவைத்தமிழ்க் கழகம்
கவிஞர் வே. பால சுப்பிரமணியன், மணவை தமிழ்ச்சங்க பொருளாளர்
கவிஞர் அறிவுச் செல்வன் சமூக ஆர்வலர்
தோழர் வை.கண்ணன் மக்கள் அதிகாரம், மணவை

ஆகிய தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள் மற்றும் முற்போக்கு ஜனநாயக் சக்திகள் கலந்துகொண்டு தங்களது கருத்தை பதிவு செய்தனர். நிறைவாக தோழர்காளிதாஸ் நன்றியுரை ஆற்றினார்.

மக்கள் அதிகார தோழர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சுமார் 30 பேரை கைசெய்து மாலை 06:00 மணிக்கு விடுதலை செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
மணப்பாறை. தொடர்புக்கு – 98431 30911

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க