privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்சீர்காழி : ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் போலீசு

சீர்காழி : ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் போலீசு

-

மிழகத்தின் காவிரி டெல்டாவை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் ONGC – யை கண்டித்து 14-03-2017 அன்று தாண்டவன்குளம் மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராம மக்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுத்த காவல்துறை கிராம மக்களுக்கு அனுப்பிய குறிப்பாணை.

தடையை மீறி 14/03/2017 – அன்று நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையபாளையம் தாண்டவன்குளம் பகுதியில் ஒ.என்.ஜீ.சி, ஹைட்ரோ கார்பன் இயற்கை பேரழிவு கொள்ளை திட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ் அராஜகமாக  நடந்து கொண்டது. இதனை செய்தியாக மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி கொடுத்த தகவலை, வினவுக்கும் முகநூல் பதிவுக்கும் மக்கள் அதிகாரம் ஆதரவாளர் தோழர் வீரசோழன் அனுப்பியுள்ளார். இத்தகவலை முகநூல் பதிவில் பார்த்த புதுப்பட்டினம் காவல்துறை ஆய்வாலர் முருகேசன் தோழர் வீரசோழனை அழைத்து,”எப்படி நீ காவல்துறையை பற்றி எழுதலாம் இனிமேல் இப்படி எழுதினால் உன்மேல் நடவடிக்கை எடுப்பேன் ஜாக்கிரதையாக இரு” என்றும் ”F.I.R. போட்டுவிடுவேன்” என்றும் மிரட்டினார்.

தகவல்
ஒருங்கினைப்பாளர் ரவி
மக்கள் அதிகாரம். தொடர்புக்கு 9843480587

***

இன்று (16.03.2017 )சீர்காழி தாலுக்கா தாண்டவன்குளம் பகுதியில் இயற்கை எரிவாயு பேரழிவு கொள்கைக்கு எதிராக நடக்க இருந்த போராட்டம் போலீசின் பீதியூட்டலாலும், அச்சுறுத்தலாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தாண்டவன்குளத்திற்கு வரும் சாலை பகுதியிலுள்ள மைதானம், பண்ணீர்கோட்டகம், பழையபாளையம், தாண்டவன்குளம், புதுப்பட்டினம்  என 15 கீ.மீ வரை சீர்காழியின் டி.எஸ்.பி  தலைமையில் 500க்கும் மேற்ப்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுக்கின்றனர். போலீசு கிராமம் முழுவதையும் ரீமாண்ட் செய்துவிடுவோம் யாரும் போராட்டத்திற்க்கு வரக்கூடாது என்று எச்சரிப்பதுடன், ஊர் நாட்டாமை, முக்கியஸ்த்தர்கள், போராட்டக்குழு என அனைவரையும் மிரட்டி போராட்டம் நடத்த கூடாது என்று எழுதிவாங்கி கொண்டனர். போலீசின் பீதியூட்டலால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். ஒரு பக்கம் போலீசு சில அமைப்பு தோழர்களை கைது செய்து கொண்டு இருக்கின்றது, இருப்பினும் இன்னோரு பக்கம் போராட்டத்தை உறுதி படுத்த மக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்று கொண்டே இருக்கின்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
சீர்காழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க