privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்டுவோம் - கருத்துப் படங்கள்

பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்டுவோம் – கருத்துப் படங்கள்

-

குருதியில் மலர்ந்த மகளிர் தினம் !

புத்தகத்தை பார்த்து புதுக்கோலம் போடும் விழாக்காலமல்ல இது !
புதைந்து போன வாழ்வை புனரமைக்கும் புரட்சிகர தினம் !


பெண் : தன்னை மட்டுமல்ல சமூகத்தையே விடுவிக்க போராடுகிறாள் !

நந்தினி, நிர்பயா, ஹாசினி, ரித்திகா
பச்சிளம் குழந்தை வரை தொடரும் பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்ட அமைப்பாவோம் !


மெரினாவைத் தொடர்ந்து நெடுவாசலில் கிளர்ந்த பெண்களின் எழுச்சி வெல்லட்டும் !

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வோ, மாநிலத்தின் எடப்பாடியோ…
மண்ணை அடகுவைக்கும் மாஃபியாக்களாக மாறிவரும் ஆட்சியாளர்களுக்கெதிராக வீரம் செறிந்த போராட்டத்தில் பெண்கள் !


பெண்ணே எழு !

படிதாண்டு, கூந்தல் நறுக்கு
பூ வெறு, பொட்டழி, தாலி மறு,
மனமறிந்து மணம்புரி
நீ விரும்பினால் பெரு
தகாத மணமெனில் முறி
தடை மரபை உடை
அடிமை என்றால் அடி
கேட்டால் சொல்…

நீயும் நானும் ஒன்றென்று !


அழுகிப் போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிடு…

பார்ப்பன சனாதன இந்து மதத்தை விட்டு வெளியேறினார் டாக்டர் அம்பேத்கர் !
பார்பனியத்தை தோலுரித்தார் தந்தை பெரியார் !

அழுகிப் போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிட்டு…
புதிய சமூகத்தை கட்டியமைக்கும் மாற்று அரசியலுக்கான எழுச்சியே பெண்விடுதலையை சாதிக்கும் !


புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் !

இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். அல்லது புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்

தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம் உருப்படியாகாது !

-தந்தை பெரியார்

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி, தொடர்புக்கு : 97503 74810.

  1. //படிதாண்டு, கூந்தல் நறுக்கு
    பூ வெறு, பொட்டழி, தாலி மறு,//

    ஆம் பெண்ணே, அப்படியே மொட்டையும் அடித்துக் கொள், உன் மூக்கையும் அறுத்துக் விடு இனி எந்த ஆணும் உன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான், பயந்து ஓடி விடுவான் . இது மட்டுமல்ல ,நீ பெற்ற உன் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக இந்த படு பாதக இயற்க்கை உனக்கு கொடுத்த மார்புகளையும் கூட காம பொருளாக(Erotic) ஆக்கி விட்டார்கள் இந்த ஆணாதிக்க சண்டாளர்கள், ஆகவே உன் கூந்தலோடு சேர்த்து உன் நகில்களையும் அரிந்து விடு. போதும் பெண்ணே, ஆணாதிக்க, நுகர்வு கலாச்சாரத்தில் இருந்து பெற்றாய் நீ விடுதலை. ஒரு ஆண் உன்னை போக பொருளாக பார்க்க கூடாது என்பதாற்காக, உன்னை நீ அசிங்கம் ஆக்கிக் கொள்ள துணிந்து விட்டாய். என்ன இருந்தாலும் நீ பகுத்தறிவை மொத்த குத்தகைக்கு வாங்கிய பெரியாரின் பேத்தி ஆயிற்றே . வாழ்க உன் பகுத்தறிவு.

    • ரெபேக்கா மேரி அவர்களே..,
      நான் பெரியாரின் பேத்தியாக இ்ல்லை…
      ரெபேக்காவின் வார்த்தைகளையே ஏற்கிறேன்.

      கூந்தலையும் நீளமா வளத்துக்கிறேன்.
      பூ வும் வெச்சிக்கிறேன்.
      பொட்டும் வெச்சிக்கிறேன்.
      தாலியும் கட்டிக்கிறேன்.

      இதெல்லாம் எனக்கு சுய மரியாதையக் கொடுக்குமா, சோறு போடுமா?
      இல்ல, ஆணுக்கு அடங்கிய பதுமையாக்குமா? ஆணாதிக்கத்துக்கு வக்கீலாக்குமா?

      • @ லட்சுமி

        //இதெல்லாம் எனக்கு சுய மரியாதையக் கொடுக்குமா, சோறு போடுமா?
        இல்ல, ஆணுக்கு அடங்கிய பதுமையாக்குமா? ஆணாதிக்கத்துக்கு வக்கீலாக்குமா?//

        அது, உங்கள் மனதை பொறுத்தது, மேற்சொன்ன விஷயங்களுக்கும் ஆணாதிக்கதிற்கும் எந்த தொடர்புமில்லை. பூ, பொட்டு போன்றவை ஏன் வைக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் கொடுக்கலாம், அதனால் எந்த பயனும் ஏற்படப்போவது கிடையாது. நீங்கள் ஒரு நிலைப்பாட்டில் நின்றுக் கொண்டு இதனை எதிர்க்கும் பொழுது, நான் என்ன கூறினாலும் நீங்கள் ஏற்கப் போவது கிடையாது. கடைசியில் ‘பார்ப்பன கைக்கூலி’ என்று முத்திரை ஒன்றை குத்து விட்டு தான் செல்வார்கள். இருந்தாலும், சில விடயங்களை கூறி விடுகிறேன்.

        பூ,பொட்டு,தாலி போன்றவற்றிற்கும் பார்பனீயத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது, இவை அனைத்தும் தமிழர் பண்பாடுகள் தான். எந்த ஆரிய பார்ப்பானும் இதனை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. இந்தியா முழுவதும் இது இருக்கிறதென்றால், அது தமிழர் பண்பாட்டின் ஏகதேசமே அன்றி வேறில்லை. பூ வைக்கும் விடயத்தில் மற்ற எந்த மாநிலத்தை விடவும், குறிப்பாக வட இந்திய பெண்களை விட தமிழ் பெண்கள் தான் அதனை வெகுவாக கடைபிடிக்கிறார்கள்.

        சங்க காலத்தில் இருந்தே பெண்கள் பூ சூடிக் கொள்வதும், பொட்டு வைத்துக் கொள்வதும் இருந்து கொண்டு தான் வருகின்றன. பூவும் பொட்டும் வைப்பதும், வைக்காமல் போவதும் அவர்களின் சுயம் சார்ந்த ஒன்று. பிடித்தால் வைத்துக் கொள்ளலாம், பிடிக்கவில்லையா விட்டு விடலாம். அதை விட்டு, ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்காக இதனை நான் துறக்க போகிறேன் என்று நீங்கள் கூறினால் அதை விட நகைப்பிற்க்கூறிய ஒன்று உலகில் வேறேதுமில்லை. ஏனென்றால் உங்கள் பெரியாரிய-கம்யூனிஸ்ட் நிலைப்பாட்டின் படி பார்த்தால் பெண்கள் புடவை கூட கட்டக் கூடாது. அதுவும் கூட பிற்போக்கான கிராமத்து நிலவுடமை சார்ந்த உடைதான்.

        மேலும், பொட்டு, தாலி, பூ போன்றவற்றை என்றுமே கேள்விப்படாத, ஐரோப்பிய, அமெரிக்க,ஆப்ரிக்க நாடுகளை சார்ந்த பெண்கள் கூட தினமும் அதிகளவில் குடும்ப வன்முறைக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களை போக பொருளாக நினைக்கும் பண்பாடு மேற்கத்திய முறை சிந்தனையின் விளைவு தான். இங்கு கூட பொட்டு வைக்காத என்னுடைய சக தோழிகளான பிராட்டஸ்டன்ட் கிறித்துவ பிரிவை சார்ந்த பெண்களும் பாலியல் கொடுமைகளை சந்தித்து தான் வருகிறார்கள். ஏன், உங்கள் ம.க.இ.க அமைப்பை சார்ந்த பெண் தோழர் ஒருவருக்கு இதை போன்று ஒரு அனுபவம் பேருந்தில் ஏற்பட்டதே, அது எதனால், பூவும் பொட்டும் வைத்திருந்ததாலா. மேற்படி சம்பவம் இதே வினவில் கட்டுரையாக வந்திருக்கிறது போய் படியுங்கள். பெண்கள் பூ, பொட்டு வைத்து தன்னை அலங்காரம் செய்துக் கொள்வதே தன்னை ஆணுக்கு முன்னாள் பாலியல் பண்டமாக்குவதற்கு தான் என்று நீங்கள் கூறுவது எப்படி இருக்கிறது என்றால், ஆண்களின் மனதை சலன படுத்துவதே பெண்கள் போடும் உடை தான் என்று சில தற்குறிகள் கூறு வதை போல் இருக்கிறது, இதற்க்கு மேல் என் கருத்தினை ஏற்பதும் ஏற்காமல் போவதும் உங்கள் விருப்பம், நன்றி.

        • @ லட்சுமி…

          நீங்கள் இன்னுமும் உங்களுக்கு வசதியாக தான் கருத்து கூறுகிறீர்களே ஒழிய, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளவில்லை. உங்களின் பொருளற்ற புரிதலுக்கெல்லாம் நான் பொறுப்பாளி ஆக முடியாது. உங்களின் பேச்சில் பெரியாரிஸ்ட்டுகள்-கம்யூனிஸ்ட்டுகள் பேசும் வெறுப்பின் அடிப்படையிலான வறட்டு வாதம் மட்டும் தான் தொக்கி நிற்கிறது.

          //ஆணாதிக்கத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் சம்பந்தமில்லை என்பது நகைப்பூட்டுகிறது. தாலி தேவையா? என்று மாற்று சிந்தனைகளுடன் வெளிவரும் ………….//

          இப்பொழுதும் சொல்கிறேன், தாலிக்கும் பார்பனீயத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பார்ப்பனர்கள் தான் இந்த பண்பாட்டை உருவாக்கினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பின்னாளில் அவர்களும் அந்த பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டார்கள், அவ்வளவுதான். என்னை பொறுத்த அளவில் தாலி அடிமை சின்னத்தின் குறியீடு என்பது முற்போக்குகள் கண்டுபிடித்த முட்டாள்தனங்களில் ஒன்று. எவனும் தன்னுடைய அடிமைக்கு தங்கத்தில் எல்லாம் சங்கிலி வாங்கி போடமாட்டான். என்னை பொறுத்த அளவில் தாலி என்பதை ஒரு கணவன் தன் மனைவிக்கு அளிக்கும் பரிசாக, அன்பின் அடையாளமாகத் தான் நான் பார்க்கிறேன். கால போக்கில் சில சுயநலவாதிகளால் அதில் சில தவறான கருத்துக்களும் திரிபு வாதங்களும் ஏற்ற பட்டது. அதற்காக, ஒரு பண்பாட்டை வெறுப்பது அறிவுடைமையாகாது. விலையுர்ந்த பட்டு புடைவையை கரை படிந்து விட்டதென்றால் கரையை தான் நீக்க வேண்டுமே தவிர, புடவையை யாரும் எரிக்க மாட்டார்கள்.

          பூ, பொட்டு முதலியவை ஆண்களுக்கு முன்னாள், தன்னை கவர்ச்சி பொருளாக்கி காட்ட வேண்டும் என்பதற்க்காக வரலாற்றில் ஒன்றும் உருவாகவில்லை. அப்படி ஒரு மலினமான காரணத்திற்காக இவை அனைத்தும் உருவாகி இருந்தால், என்றோ அவை காலாவதியாகி இருக்கும். 2000 ஆண்டு காலமாக ஒரு பண்பாட்டு தொடர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்றால் அதற்க்கு ஒரு வலுவான காரணம் இல்லாமல் இருக்காது. சும்மா,எதெற்கெடுத்தாலும் ஆணாதிக்கம், பார்ப்பனீயம் என்று கூறுவதெல்லாம் வெற்று பேச்சுக்கள். எந்த ஒரு ஆதிக்கமும் வெகு காலத்திற்கு எந்த ஒரு பண்பாட்டையும் தாங்கி பிடிக்க முடியாது.

          மேலும், ஆணாதிக்கம் என்பது இங்கு இருந்திருக்கலாம், ஆனால் நீங்கள் மிகைப்படுத்தி கூறுவதை போன்று, கொடூரமான ஆணாதிக்க அடக்கு முறைகள் இருந்ததா என்பது இங்கு சந்தேகமான ஒன்று. ஜான்சி ராணி,வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள் போன்று எவ்வளவோ பெண்கள் இங்கு நாட்டை ஆண்டிருக்கிறார்கள், வெள்ளையனை எதிர்த்து போராடி இருக்கிறார்கள், இந்திய விடுதலை போரில் எண்ணற்ற பெண்கள் பங்கெடுத்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பூவெறுத்து, பொட்டழித்து, தாலி மறுத்து, கூந்தலை நறுக்கி விட்டு தான் களத்திற்கு வந்து போராடினார்களா. கடுமையான ஆணாதிக்க ஒடுக்க முறை இருக்கும் தேசத்தில் எதிரிகளுக்கு எதிராக எந்த பெண்ணும் நாட்டைக் காக்க போரிட வந்திருக்க முடியாது.

          //பூவும் பொட்டும் வைப்பதும், வைக்காமல் போவதும் அவர்களின் சுயம் சார்ந்த ஒன்று. பிடித்தால் வைத்துக் கொள்ளலாம், பிடிக்கவில்லையா விட்டு விடலாம் எனும் அளவுக்கு இங்கு பெண் உரிமை பூத்து குலுங்குகிறதா?//

          இன்றும் ஐ.டி மற்றும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோரில் பலரும் பொட்டணியாமல், பூ வைக்காமல் வருவதை பார்க்க முடிகிறதே. உடைகளில் எல்லாம் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டதே. உங்களோடு புரட்சி செய்து தான் அவர்கள் மேற்படி அடையாளங்களை கைவிட்டார்களா?

          இதற்க்கு மேல் கூற ஒன்றுமில்லை, ஏற்றுக் கொள்வதும் ஏற்காமல் போவதில் அவரவரின் இஷ்டம். நன்றி.

          • வேலை பளு அதிகமாக இருப்பதால், என்னால் தொடர்ந்து பதிவிட முடியாது. மற்றபடி நான் கூற வேண்டிய என் கருத்தை கூறி விட்டேன். தொடர்ந்து பேசுவதற்கு இனி ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. வாசகர்கள் இனி முடிவு செய்துக் கொள்ளட்டும். நன்றி.

  2. அருமையான கருத்து சகோதரி, போலி கம்யூனிஸ்டுகள் முகத்தில் கரியை பூசிவிட்டீர்கள்..

  3. பூவும் பொட்டும் வைப்பதும், வைக்காமல் போவதும் அவர்களின் சுயம் சார்ந்த ஒன்று. பிடித்தால் வைத்துக் கொள்ளலாம், பிடிக்கவில்லையா விட்டு விடலாம் எனும் அளவுக்கு இங்கு பெண் உரிமை பூத்து குலுங்குகிறதா?

    ஆணாதிக்கத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் சம்பந்தமில்லை என்பது நகைப்பூட்டுகிறது. தாலி தேவையா? என்று மாற்று சிந்தனைகளுடன் வெளிவரும் பெண்களை மொட்டை அடித்துக்கொள், மூக்கை அறுத்துவிடு, நகில்களையும் அரிந்து விடு, புடவை கட்ட கூடாது… எனும் வார்த்தைகளோடு வரவேற்பது சரியா? இதுதான் அவரவர் விருப்பத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளும் முறையா?

    பாரம்பரியம், பண்பாடு என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தின் குறியீடுகள்தான் அழகுக்கு இலக்கணமா?

    உலகம் முழுவதும் மதங்களில் பெண்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் தங்களுக்கு தெரியாதா?

    சங்க காலத்தில் ஆண்களின் உடையும், முடியும்கூட எப்படி இருந்தது. அவை மாறிவிட்டது. ஆனால், பெண்ணுக்கு மட்டும் மாறவில்லை காரணம் தெரியலையா?

    மாற்று சிந்தனைகளுடன் வரும் முற்போக்காளர்களின் நிலைமைகளை நாள்தோறும் செய்திகளில் பார்க்கவில்லையா?

    இவர்களை எதிர்க்கொள்ள பெரியாரும், கம்யூனிஸ்டுகளும் இல்லாமல் யாரை துணைக்கழைப்பது?

    • // பூவும் பொட்டும் வைப்பதும், வைக்காமல் போவதும் அவர்களின் சுயம் சார்ந்த ஒன்று. பிடித்தால் வைத்துக் கொள்ளலாம், பிடிக்கவில்லையா விட்டு விடலாம் எனும் அளவுக்கு இங்கு பெண் உரிமை பூத்து குலுங்குகிறதா? // எனக்கு தெரிந்து வட மாநில பெண்கள் பூ மற்றும் போட்டு வைப்பதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டனர் என்றே சொல்ல வேண்டும். பெண் உரிமை என்றால் என்ன என்பதாய் இங்கு ஆளாளுக்கு, பெண்களுக்கு மத்தியிலேயே மாறுபடுகிறது. தங்களை போன்ற முற்போக்கு சிந்தனைவாதிகள் (???) பெண் உரிமை என்றால் என்ன என்பதை ஒரு பட்டியல் போட்டு தெரிவித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்

      // ஆணாதிக்கத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் சம்பந்தமில்லை என்பது நகைப்பூட்டுகிறது. தாலி தேவையா? என்று மாற்று சிந்தனைகளுடன் வெளிவரும் பெண்களை மொட்டை அடித்துக்கொள், மூக்கை அறுத்துவிடு, நகில்களையும் அரிந்து விடு, புடவை கட்ட கூடாது… எனும் வார்த்தைகளோடு வரவேற்பது சரியா? இதுதான் அவரவர் விருப்பத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளும் முறையா? // பெண்களை என்ன அணிய வேண்டும் என்பதை ********** யோக்கியமா?

      // உலகம் முழுவதும் மதங்களில் பெண்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் தங்களுக்கு தெரியாதா? // – கடவுளே இல்லை என்று சொல்கிற காலத்தில் மாதங்களில் என்ன உள்ளது என்பது யாருக்கு இந்த காலத்தில் தெரிகிறது. எனக்கு தெரிந்து இன்னும் தி.க வினர் ஆதிகாலத்து பார்ப்பன சிந்தனையை விட்டு வெளியே வரவில்லை போலும்

      // சங்க காலத்தில் ஆண்களின் உடையும், முடியும்கூட எப்படி இருந்தது. அவை மாறிவிட்டது. ஆனால், பெண்ணுக்கு மட்டும் மாறவில்லை காரணம் தெரியலையா? // இப்படி மனசாட்சிக்கு விரோதமாக தாங்கள் பேசக்கூடாது. பெண்கள் தற்காலத்தில் புடவை எப்போது அணிகிறார்கள்? மற்ற நாட்களில் அல்லது நேரங்களில் எதை அணிகிறார்கள்?

      // மாற்று சிந்தனைகளுடன் வரும் முற்போக்காளர்களின் நிலைமைகளை நாள்தோறும் செய்திகளில் பார்க்கவில்லையா? // இங்கு முற்போக்கு, பகுத்தறிவு என்றெல்லாம் ஒரு வெங்காயமும் கெடையாது. எந்ததெந்த விஷயங்களில் முற்போக்காக சிந்திக்க வேண்டும்? அந்த சிந்தனை சரியா அல்லது தவற என்பதை யார் முடிவு செய்வார்? ஆளாளுக்கு முற்போக்கு சிந்தனைகளும், பகுத்தறிவாதமும் மாறி கொண்டே தான் இருக்கும்? இது தான் சரி என்று இங்கு நிலையானது எதுவும் கெடையாது.

      // இவர்களை எதிர்க்கொள்ள பெரியாரும், கம்யூனிஸ்டுகளும் இல்லாமல் யாரை துணைக்கழைப்பது? // மனிதன் மனிதனாய் சிந்திப்பதற்கு பெரியாரும், கம்யூனிஸ்ட்களும் தேவை இல்லை. உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் அழைத்து கொள்ளுங்கள். பெரியார் சொன்னது எல்லாம் என்ன வேதா வாக்கா?

      • Periyar EVR created much needed awareness among women in 1920s itself.We do not believe in vedas and hence we do not trust whatever words described as VEDAVAAKKU.
        Sathish seems to be having the habit of reading articles in Vinavu occasionally.That is why he has missed the typical brahminical comment by Raman for a recent poem by Durai Shanmugam about atrocities committed against women.Even the part of your comment about the occasional wearing of saris by women is betraying your male chauvenistic attitude.Who gave you the authority to dictate to them to wear saris always?

        • // typical brahminical comment by Raman//

          Gentleman, You have never helped your wife in your whole life and preaching here about women empowerment. Your version of women empowerment is she has to cook,clean,raise childern at home and after that she should also earn money.Then that just by removing Thaali she can feel equal to men. You were not able to answer one simple question , how many times you have helped your wife in chores. And here you show up in all your glory, to show the world how great you are!

          You have your clan under the safety of capitalism and preaching socialism here.

          You are such a hypocrite and stop dragging me in your comments.

          • Your comments were criticized not only by me but also by several Vinavu readers and Vinavu itself.How do you know that I have not helped my wife in household chores?Since all your comments are half-baked,you are receiving brickbats from every Vinavu reader.In stead of answering their criticism,you are dragging my family.I have repeatedly told you that capitalism has not given job for my son.He earned his job and salary by sheer merit and it is not a charity from his employer.Your shallow thinking is exposed.Do you know that socialists are there in America itself and scores of magazines such as “Equality”,”Truth-dig””Truth out” are published there.Don’t be a frog in the well.Grow up man!

        • Yes I read vinavu articles occassionally

          You can re-read the reply on wearing sarees. That was one of my reply to so called rationalists. I believe I did not say that women should wear sarees always

  4. If we need ‘periyar’ to know about women empowerment, socialism and other so-called rationalism related activities then what is the point of our education and why we should go to school / college?

    It’s our responsibility to think and act so that we can do justice to our education. At least I don’t need so-called rationalist like periyar.

    • You don’t need Periyar.But during 1920s and there after,people of TN wanted Periyar to have enlightenment on many social issues including women empowerment.

      • Yes exactly now I and several other groups of this society does not need him. You guys also please come out of his and his old age thoughts. So called rationalists still living mentally in old age. 1920 is gone before a century. We are in 2020 now. We need to create a new history by resolving the issues on our own. My comments about periyar are not published by Vinavu

        • In 2017, we have all the irrationalities of Periyar’s time in excess which he fearlessly advocated. There won’t be a difference even after 1000 years when opinions like yours dominate in open space.

          I do not have any idea of your age. Better grow up. Whatever you say like women empowerment, socialism, rationalism and communism were never taught in any school or college. Not only India, this is the case in almost every country and the only reason CAPITALISM. To know the alternate philosophies, one need to learn only in the non-academic mode.

          If you are still passing on abusive comments on Periyar, it exposes your ‘cross-belt-mind’.

        • பெரியார் எங்களின் ஊன்றுகோல், தேவை ஏற்படின் பாம்புகளை நசுக்கவும் பயன்படும் கைத்தடி. உங்களுக்கு ஊன்றுகோல் தேவை இல்லை என்பது உங்களின் முடிவு, சகதியில் உருண்டு தான் போவேன் என்பது உங்களின் விருப்பம். ஆனால், அதில் பெருமை பேச எதுவுமில்லை.
          சகதி என்பதற்கு ஒரு உதாரணம், பெண்களையும், சக மனிதர்களையும் அடிமையாக நடத்தும் மதம்.

          • To both KKN and Madhav, first thing I’d like to highlight that I did not pass any abusive comments against ‘Periyar’. If yes, please point that comment. I am ready to apologize for that

            பெரியார் என்கிற ஊன்றுகோல் எனக்கு தேவை இல்லை. ___

            மதம் சகதி என்று பல நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது, நீங்களும் அதையே தான் சொல்கிறீர்கள். நானும் உங்கள் பக்கமே நிற்கிறேன் . நாம் அனைவரும் சேர்ந்து மதத்தை ஒழித்து விடலாம்.

            மதத்தை ஒழித்தால் பெண் உரிமை நிலை நாட்டப்படும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை?

            இங்கே மதம் எல்லாம் பிரச்சனையை இல்லை. ஜாதியால் பிரச்சனையை இருக்கிறது. சரி ஜாதியையும் ஒழித்து விடலாம்.

            சரி ஜாதியை ஒழித்தால் பிரச்சனையை தீர்ந்து விடுமா என்றால் இல்லை. மொழியாலும் பிரச்சனையை இருக்கிறது. சரி மொழியையும் அழித்து விடலாமா ?

            சரி மொழியையும் அழித்து விட்டோம். அடுத்து ‘நிறத்தால்’ பிரச்சனை இருக்கிறது. நிறத்தை எப்படி அழிப்பீர்கள் ??? அது எந்த கொம்பனாலும் முடியாது.

            பிரச்சனையை மதத்திலோ, மொழியிலோ, நிறத்திலோ இல்லை. மாறாக அதை தன சொத்து என்று உரிமை கொண்டாடுபவன் தான் பிரச்சனைகளை உருவாக்குகிறான்

            இல்லை மதம் தான் பிரச்சனை என்று நீங்கள் தீர்க்கமாக நம்பினால் அதற்க்கு என்னை போன்ற ‘அறிவிலிகள்’ மதத்தில் ஒரு சில நல்ல விஷயங்களாவது இருக்கிறது என்றே சொல்லுவோம்.

            மதத்தை அழிக்க துடிப்பவர்கள் ‘ஜாதி, மொழி மற்றும் நிறம்’ இவை மூன்றையும் அழிக்க முடியுமா? ஏன் என்றால் இவைகளாலும் மனிதர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன

            Grow-up என்று சொல்லும் அளவிற்கு விஷயங்கள் தெரிந்தவன் நான் இல்லை.

            ஆனால் நான் சொன்னவற்றில் உண்மை கண்டிப்பாக இருக்கிறது. அதற்க்கு உங்களை போன்ற பகுத்தறிவாதிகள் (சிந்திப்பதற்காகவே பிறந்தவர்கள்) தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

            நன்றி

            • @@@ சதீஷ் :
              சாதி, மதம், இனம், மொழி, நிறம் கடந்தவர்கள் தான் கம்யுனிஸ்டுகள்… நீங்கள் சொல்வது போன்று சாதி ,மதம், இனம், நிறம் ,மொழி ஆகியவற்றால் தோன்றும் பாகுபாடுகளை ஒழிக்க வழிகள் இல்லாமல் இல்லை… மனிதர்களிடையே இனக்கலப்பு/சாதியகலப்பு என்ற விஷயம் செயலில் இருக்குமாயின் இத்தகைய பாகுபாடுகளை நீக்க முடியும்.! மேலும் ஒவ்வொரு தேசிய இனத்தின் அடையாளமாக இருக்கும் மொழிகளை அழிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறது.? மொழி என்பது தகவல் தொடர்புக்கு பயன்படும் எனில் அதனை ஏன் அழிக்க வேண்டும்?அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமையை கொடுப்பதன் மூலமாக மொழிகளுக்கு இடையே உள்ள சமத்துவம் இன்மையை நீக்கிவிடமுடியும். மதங்களின் மீதான தேவையை அறிவியல் பூர்வமான சிந்தனை மற்றும் செயலாக்கம் கொண்டு நீக்கிவிடமுடியும்… மனிதனுக்கு இப்போது மதங்களின் மீதான தேவை ஏன் தொடர்ந்து பாரம்பரியமாக வந்து கொண்டு உள்ளது என்று கூறுங்கள் பார்ப்போம்!

              • மதத்தில் உள்ள நிறைய விஷயங்கள் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டது தான். இதையும் மறுப்பீர்களா? மதத்தை விஞ்ஞானம் கொண்டு எல்லாம் அழிக்க முடியாது.

                ‘ஜனனம்’, ‘மரணம்’, ‘பசி’ இவை மூன்றும் இருக்கும் வரை ‘மதங்களும்’, ‘தெய்வ நம்பிக்கையும்’ இருந்தே தீரும்.

                இனி நான் விவாதம் செய்து எந்த பயனும் இல்லை.

                • மனிதன் இந்த உலகில் பரிணாமம் அடைந்ததில் இருந்தே அவன் சிந்திக்க தொடங்கினான் என்ற நிலையில் பார்க்கும் போது தேவையின் பொருட்டு அவனின் சிந்தனையில் செயலில் ஏற்பட்ட அறிவியல் பூர்வமான வளர்சிகள் எல்லாம் மதத்தின் நற்கொடைகளாக நீங்கள் நினைத்துக்கொள்கிண்றீர்கள் ! கற்கால மனிதர்கள் வேட்டையாடுதலின் பொருட்டு பயன்படுத்திய கல் போன்ற ஆயுதங்கள் அதன் பின் உலகங்களின் கண்டுபிடிப்புகளின் மூலம் மனிதன் கண்டு பிடித்த கத்தி போன்ற ஆயுதங்கள்…. அதற்கு பின் கண்டுபிடிக்கபட்ட சக்கரங்கள் ,அதன் மூலம் கண்டுபிடிக்க பட்ட வண்டிகள் ,ரதங்கள்…, இன்று பேருந்துகள், ரயில் வண்டிகள் , விமானங்கள் என்று மனிதனின் சிந்தனையும் செயலும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் மேல் நோக்கியே சென்று கொண்டு உள்ளது…. இவ்வளவு உண்மைகளையும் பக்தி பரவசத்தில் முழுகி திளைக்கும் ராசா இளையராஜா அவர்களின் nothing but wind ஆல்பத்தில் உள்ள nothing but wind இசையை கேட்டு புரிந்துகொள்ளுங்கள்… உலகின் அறிவியல் வளர்சியை நீங்கள் புரிந்து கொள்ள ஒரு எளிமையான இசை அனுபவத்துடன் கூடிய வழி இது.

                  https://www.tamilmp3song.in/nothing-but-wind-mp3-songs-download

                  • அது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. அறிவியல் என்றாலே பரிணாமம், மருந்து, மாத்திரை, ஆஸ்ப்பித்ரி, வண்டி, விமானம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்

                    நான் அவற்றை பற்றி சொல்லவில்லை. மனிதன் எப்படி இருந்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம் முன்னோர்கள் நிறைய சொல்லிக்கொடுத்து விட்டு இருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் நாம் காற்றில் பறக்க விட்டு வெகு காலமாகிவிட்டது

                    அனால் அவர்கள் அனைத்தையும் மதத்தோடு இணைத்து விட்டனர். நேரடியாக சொன்னால் செய்வானோ, மாட்டானோ என்கிற எண்ணத்தின் காரணமாக அவர்கள் அவ்வாறு செய்தனர்

                    உதாரணமாக வளைகாப்பு நடத்துவது, காகத்திற்கு அன்னமிடுவது போன்றவை, வாழை இலையில் சாப்பிடுவது போன்றவை. இதன் பின்னணியில் அறிவியல் உள்ளது. பகுத்தறிவாதிகளுக்கு தெரியாதது இருக்க முடியாது.

                    அறிவியல் என்றாலே நிரூபணம் இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து ‘பரிணாம கொள்கை’ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அப்படி நிரூபித்து இருந்தால் link தரவும்.

                    Science expects evidence. I need concrete evidence (or) proof for ‘evolution theory’ and not just hypothesis

                    • சதீஷ் !இவ்வளவு அலுப்புடன் விவாதத்தில் ஈடுபட்டால் நன்றாகவா இருக்கு சத்தீஷ்! முழுமனதுடன் விவாதிக்க வாங்க! பேசுவோம்! இன்றைய நவீன கால மனிதனின் இன்றைய நிலை பரிணாமம், மருந்து, மாத்திரை, ஆஸ்ப்பித்ரி, வண்டி, விமானம் என்ற முன்னேற்றங்களில் இல்லை என்று உங்களால் வாதடமுடியுமா? இந்த அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் மக்களின் நல வாழ்வுக்கு பயன் படுத்துவதில் தான் இன்று பிரச்சனையே தவிர இந்த முன்னேற்றங்களால் எந்த பிரச்சனையும் இல்லை! ஏன் மேற்கண்ட கண்டுபிடிப்புகளை கூட நம் முன்னோர்கள் (இங்கு முன்னோர்கள் என்றால் ஒட்டுமொத்த மனித குலத்தையும் தான் சுட்டுகிறேன்) தான் நமக்கு அளித்துவிட்டு சென்று உள்ளார்கள். அவற்றை நாமும் இன்னும் செழுமை படுத்தி நமது அடுத்த தலைமுறைக்கு அளித்துவிட்டு த்தான் செல்லப்போகிறோம்! இந்த நிகழ்வில் மதத்துக்கு என்ன வேலை சதீஷ் ?

                      // அது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. அறிவியல் என்றாலே பரிணாமம், மருந்து, மாத்திரை, ஆஸ்ப்பித்ரி, வண்டி, விமானம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்நான் அவற்றை பற்றி சொல்லவில்லை. மனிதன் எப்படி இருந்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம் முன்னோர்கள் நிறைய சொல்லிக்கொடுத்து விட்டு இருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் நாம் காற்றில் பறக்க விட்டு வெகு காலமாகிவிட்டது//

                      பரிணாம கொள்கை நிருபணம் செய்யபட்ட ஒன்று ! ஆனால் உங்கள் வாக்கு தான் காலவாதியான ஒன்று…ஏன் லிங்க் கேட்கிண்றீகள்? உங்களால் தேடி கண்டு எடுக்க இயலாதா என்ன? proof for evolution theory என்று கூகிள் செய்து பாருங்கள் ! விவரங்கள் உங்களுக்கு அறிவியல் பூர்வமாக கிடைக்கும்!

                      //அறிவியல் என்றாலே நிரூபணம் இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து ‘பரிணாம கொள்கை’ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அப்படி நிரூபித்து இருந்தால் link தரவும்.//

            • Religion and its byproducts like dowry evil, male chauvanism etc only prevent women to have social awareness.There are many slogans in Manuneedhi saasthra degrading women.Already MrKKN has given an apt reply to you stating as to who create problems in the name of religion,caste,language and skin colour.

              • @@@@ Ki Senthil Kumaran,

                // சதீஷ் !இவ்வளவு அலுப்புடன் விவாதத்தில் ஈடுபட்டால் நன்றாகவா இருக்கு சத்தீஷ்! முழுமனதுடன் விவாதிக்க வாங்க! பேசுவோம்! இன்றைய நவீன கால மனிதனின் இன்றைய நிலை பரிணாமம், மருந்து, மாத்திரை, ஆஸ்ப்பித்ரி, வண்டி, விமானம் என்ற முன்னேற்றங்களில் இல்லை என்று உங்களால் வாதடமுடியுமா? இந்த அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் மக்களின் நல வாழ்வுக்கு பயன் படுத்துவதில் தான் இன்று பிரச்சனையே தவிர இந்த முன்னேற்றங்களால் எந்த பிரச்சனையும் இல்லை! ஏன் மேற்கண்ட கண்டுபிடிப்புகளை கூட நம் முன்னோர்கள் (இங்கு முன்னோர்கள் என்றால் ஒட்டுமொத்த மனித குலத்தையும் தான் சுட்டுகிறேன்) தான் நமக்கு அளித்துவிட்டு சென்று உள்ளார்கள். அவற்றை நாமும் இன்னும் செழுமை படுத்தி நமது அடுத்த தலைமுறைக்கு அளித்துவிட்டு த்தான் செல்லப்போகிறோம்! இந்த நிகழ்வில் மதத்துக்கு என்ன வேலை சதீஷ் ? //

                சரி முழு மனதுடன் விவாதிப்போம். நான் விஞ்ஞானத்தால் முன்னேற்றம் இல்லை என்று எங்கும் குறிப்பிடவில்லை. விஞ்ஞான, so-called பகுத்தறிவாதம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் மிக குறைந்த பொருட் செல்வாவின் (அல்லது) பொருட் செலவே இல்லாமல் சொல்லி தந்த எல்லாவற்றையும் கோட்டை விட்டு இன்று ‘plastic paper’ பயன்படுத்தி உண்ணுகிறோம், டீ குடிக்கிறோம்.

                உண்மையில் பகுத்தறிவாதிகள் என்ன செய்து இருக்க வேண்டும். ‘ஏன் மதம் வேண்டும் என்று தெளிவாக கேள்வி கேட்க தெரிந்த’ பகுத்தறிவாதிகளுக்கு, plasticஐ கண்டு பிடித்த போதே ‘இதை எப்படி அழிப்பீர்கள்’? ‘அதற்கான வழிமுறைகள் உள்ளதா’? என்று கண்டுபிடிக்கப்பட்ட போதே கேள்வி கேட்டு இருக்க வேண்டும்.
                இவற்றை கேள்வி கேட்டால் என்னை போன்றவர்களை ‘சாதா அறிவு’ உங்களுக்கு என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

                இந்த காலத்தில் மருந்து, மாத்திரைகளை பற்றி பேச ஆரம்பித்தோம் என்றால் விவாதம் முடியவே முடியாது என்பதை நீங்களே ஒப்பு கொள்வீர்கள் என்று நினைக்கிறன். ஆனால் என்னை பொறுத்தவரை சாதாரண காய்ச்சல், சளி, இருமல் இவற்றிற்கு ‘சித்தா’ முறையை பின்பற்றலாம். அறுவை சிகிச்சை முறைகளுக்கு ‘allopathy ஐ’ நாடலாம் என்பது என் கருத்து.

                // இந்த நிகழ்வில் மதத்துக்கு என்ன வேலை சதீஷ் ? // என்ன தான் இருந்தாலும் பகுத்தறிவாதிகள், பகுத்தறிவாதிகள் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

                இதற்க்கு இந்து மதத்தை திறந்த மனதுடன் தாங்கள் எதிர் கொள்ள வேண்டும்/ மீண்டும் ‘பார்ப்பன சதி’, ‘மத வெறி கொள்கைகள்’ என்று பேச ஆரம்பித்தால ‘இந்து மதத்தின் அறிவியல் கட்டமைப்பு’ யாருக்கும் புரியாமலே போகும். நம் முன்னோர்கள் ‘எவ்வளவு ஆழமான அறிவியல் நுட்பங்களை’ மிக எளிதாக நமக்கு சொல்லி தந்துள்ளனர் என்பதை நீங்கள் ‘அனுபவ பூர்வமாகவே’ பார்க்க முடியும்.

                ஆனாலும் நான் தங்களின் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே. பகுத்தறிவாதிகளுக்கே பதில் சொல்லுவதா என்கிற தயக்கம் தான்? வேறென்ன ?

                இவ்வளவு அறிவியல் விஷயங்களை சொன்ன வெங்காயங்கள் (முன்னோர்கள்) இதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே. எதற்காக மதத்தை கட்டமைத்தார்கள்?

                இதற்கான பதிலை நான் சொன்னால் ‘அடச்சீ … இவ்வளவு தான் விஷயமா” என்று LKG படிக்கும் குழந்தைகளே சொல்லும் அளவிற்கு மிக மிக மிக மிக மிக மிக எளிமையானது.

                // நேரடியாக சொன்னால் செய்வானோ, மாட்டானோ என்கிற எண்ணத்தின் காரணமாக அவர்கள் அவ்வாறு செய்தனர் // – இது ஒரு காரணம். ஆனால் இது ‘மூல காரணமல்ல’

                ஆகையால் ‘எதற்காக மதத்தை கட்டமைத்தார்கள்?’ என்கிற பதிலை பகுத்தறிவாதிகளே சாதாரணமாக யோசித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை.

                // பரிணாம கொள்கை நிருபணம் செய்யபட்ட ஒன்று ! ஆனால் உங்கள் வாக்கு தான் காலவாதியான ஒன்று…ஏன் லிங்க் கேட்கிண்றீகள்? உங்களால் தேடி கண்டு எடுக்க இயலாதா என்ன? proof for evolution theory என்று கூகிள் செய்து பாருங்கள் ! விவரங்கள் உங்களுக்கு அறிவியல் பூர்வமாக கிடைக்கும்! //

                தாங்கள் சொல்லித்தான் ‘பரிணாமம்’ நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று எனக்கு தெரியும். நான் தேடிய வரையில் ‘mixed results’ தான் வருகிறது. நீங்களே உங்களுக்கு தெரிந்த ‘approved evidence (or) proof’ இருந்தால் தாருங்களேன். அதனால் என்ன ஆகி விடப்போகிறது. ஏனென்றால் ‘இன்டர்நெட்ல்’ யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் எழுதலாம் இல்லையா ?

                சரி எனக்கு பரிணாமம் பற்றி ஒரு கேள்வி உள்ளது. தங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள் (அல்லது) ஆதாரம் இருந்தால் கொடுங்கள்

                ‘ஜனனம், மரணம், பசி’ என்று முன்பு நான் குறிப்பிட்டு இருந்தேன் இல்லையா. இதில் நான் ‘ஜனனம்’ (மற்றும்) ‘மரணத்தை’ இப்போதைக்கு விட்டு விடுவோம்.

                ‘பசியை’ மட்டும் எடுத்து கொள்கிறேன். ஏனென்றால் ‘பசி’ என்ற ஒரு விஷயம் இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது அல்லவா.???

                ‘பரிணாம படி’ முதலில் எந்த உயிரினம் தோன்றியது? அந்த உயிரினத்திற்கு ‘பசி’ இருந்ததா? ‘அப்படி’ பசி இருந்து இருந்தால் ‘அந்த முதல் உயிரினம்’ எதை சாப்பிட்டது ?

                முதலில் தோன்றிய உயிரினத்திற்கு ‘பசி’ இல்லை, பரிணாம படி தான் ‘பசியும்’ வந்தது என்றால் ‘இரண்டாவதாக’ அல்லது ‘மூன்றாவதாக’ தோன்றிய உயிரினத்திற்கு ‘பசி’ எப்படி ஏற்பட்டது ?

                இந்த கேள்வியை இங்கே முன் வைக்க காரணம், பரிணாமத்திற்கு ‘பசியின்’ முக்கியத்துவம் எப்படி தெரிந்தது? ‘பரிணாமத்திற்கு’ அந்த ‘natural or artificial intelligence’ வந்தது எப்படி ?

                தயை கூர்ந்து விளக்குங்கள். நேரம் பிடிக்கும் என்பது எனக்கும் தெரியும்.

                பகுத்தறிவாதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் ஆதலால் என்னை போன்ற ‘சாதா அறிவு’ கொண்டவர்களின் கேள்விகளை புறக்கணிக்காமல், எங்களின் ‘அறியாமை இருளை’ போக்கும் படி கேட்டு கொள்கிறேன்

                மீண்டும் விவாதிப்போம். நன்றி

        • Are you reading daily newspapers?Just few days back a woman techie and her seven year old son were stabbed in their house at “ultra modern” USA.Strong suspicion is raised by the parents of the deceased woman about the role of the woman’s husband who is also a techie.Police investigation is in progress.Not a day passes without the news of some honour killing in our country.On the eve of New Year,women were molested in the “ultra modern”Bengaluru.One of my woman colleague rushed home the other day to receive her husband from his Sabarimalai trip.I know many working women hand over their salaries to their husbands/in-laws and get only few rupees every day for paying bus-charge for attending their offices.Even in 2017,I know some families where the house wives do not go for Diwali shopping and contented with whatever sarees selected and purchased by their husbands.Even after 30%reservation for women in local body elections,even after being elected as the Municipal/Panchayat chairmen,the defacto chairmen happen to be their respective husbands.Where is woman empowerment in your “modern”India with much “enlightened intelligentia “available in the society?What sort of words were used by Trump against Hillary during his campaign?Just yesterday I read a news about certain airlines prohibiting women passengers wearing leggings in their planes.One should come out of his shelf if he thinks that he is “much enlightened”As suggested by another reader,grow up man!

          • /இங்கே மதம் எல்லாம் பிரச்சனையை இல்லை. ஜாதியால் பிரச்சனையை இருக்கிறது. சரி ஜாதியையும் ஒழித்து விடலாம்./

            ஜாதிப்பாகுபாடே இந்துமதத்தோட ‘கொடை’. அதனால்தான் ஜாதியோட ஆணிவேரான இந்துமதமே ஒழிக்கப்பட வேண்டுமென்றார் பெரியார்.

            /மொழியாலும் பிரச்சனையை இருக்கிறது. சரி மொழியையும் அழித்து விடலாமா ?/

            எந்த மொழியாலும் பிரச்சனை இல்லை. ஒரு மொழி ‘தேவ பா௸’; மற்ற மொழிகளெல்லாம் ‘நீச பா௸’. இந்த இத்துப்போன கொள்கைய ஆயிரமாயிரமாண்டுகளாக உடும்புப்பிடியா பிடிச்சிக்கிட்டு, சகமனிதர்களை ‘கல்வி’ங்கிற காற்றை சுவாசிக்க விடவில்லை. இதுவும் இந்துமதத்தோட ‘கொடை’. இப்ப செத்து-புதைக்கப்பட்ட அதையே மக்கள் செலுத்துகிற வரிப்பணத்தைக்கொண்டு திணிக்க முயல்வதுதான் பிரச்சனை. எந்த மொழியும் அழிய வேண்டாம். மக்கள் உபயோகத்திலுள்ள எந்த மொழியையும் கொலை செய்ய ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்த விடவும் கூடாது.

            /நிறத்தால்’ பிரச்சனை இருக்கிறது. நிறத்தை எப்படி அழிப்பீர்கள் ??? அது எந்த கொம்பனாலும் முடியாது./

            இதை யாரிடம் சொல்ல வேண்டும்? நால்வர்ணக் கொள்கையைப் பிடித்துக்கொண்டு பலஜாதி மனிதர்களின் கறுப்பு நிறத்தை வைத்து அடையாளம் கண்டு பாகுபாட்டைப்பேணும் இந்து மதவாதிகளிடமா? அல்லது அது கூடாது என்று கூறும் முற்போக்காளர்களிடமா?

            தமிழர்களுக்கு 1920ல் ஒரு பெரியார்தான் தேவையிருந்தது. 2020ல் ஆயிரம் பெரியார்கள் தேவைப்படுகிறார்கள்

            • // ஜாதிப்பாகுபாடே இந்துமதத்தோட ‘கொடை’. அதனால்தான் ஜாதியோட ஆணிவேரான இந்துமதமே ஒழிக்கப்பட வேண்டுமென்றார் பெரியார்.//

              ஏன் உங்கள் பெரியார் இந்து மதத்தை மட்டும் தான் கேள்வி கேட்பாரா (அல்லது) மற்ற மாதங்களில் உள்ள ஜாதிகளை பற்றியும் கேள்வி கேட்பாரா ? உண்மையில் தொழில் அடிப்படையில் தான் ஜாதியே உருவானது. பின்னர் மனிதர்கள் அதை தங்கள் சுய லாபங்களுக்கு பயன்படுத்தி கொண்டனர்

              இந்து மதத்தை ஒழித்து விடலாம் சரி. மற்ற மதங்களை யார் ஒழிப்பார்கள் ? எப்போது ஒழிப்பார்கள்? மற்ற மாதங்களில் ஜாதி பாகுபாடு இல்லையா ? அதையெல்லாம் பற்றி முற்போக்கு மற்றும் பகுத்தறிவு பேசுபவர்கள் எப்போது பேசி எப்போது அழிப்பார்கள்?

              May be இந்து மதத்தை அழிக்கவே இத்தனை ஆண்டுகள் ஆவதால், முதலில் இந்து மதத்தை அழித்து விட்டு பிறகு ஒவ்வொரு ‘மதமாக’ பகுத்தறிவாதிகள் கையில் எடுத்து கொள்வார்கள் என்று நினைக்கிறன்.

              அது என்ன ‘பகுத்தறிவு’ இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்கிறது ?

              ஆமாம் எல்லாம் சரி. அதென்ன பகுத்தறிவு ஆன்மிகம் (அல்லது) ஜோதிடத்திற்கு மட்டுமே தேவைப்படுகிறது ? பகுத்தறிவாதிகளுக்கு ‘selective-amnesia வா’ (அல்லது) பகுத்தறிவுக்கே ‘selective-amnesia வா’ ???

              அழிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த உலகில் எதுவுமே மிஞ்சாது. நீங்களும் நானும் கூட ஏதோ ஒரு வகையில், யாருக்கோ ஒரு வகையில் தவறானவர்களாக தான் தெரிவோம்.

              //எந்த மொழியாலும் பிரச்சனை இல்லை. ஒரு மொழி ‘தேவ பா௸’; மற்ற மொழிகளெல்லாம் ‘நீச பா௸’. இந்த இத்துப்போன கொள்கைய ஆயிரமாயிரமாண்டுகளாக உடும்புப்பிடியா பிடிச்சிக்கிட்டு, சகமனிதர்களை ‘கல்வி’ங்கிற காற்றை சுவாசிக்க விடவில்லை. இதுவும் இந்துமதத்தோட ‘கொடை’. இப்ப செத்து-புதைக்கப்பட்ட அதையே மக்கள் செலுத்துகிற வரிப்பணத்தைக்கொண்டு திணிக்க முயல்வதுதான் பிரச்சனை. எந்த மொழியும் அழிய வேண்டாம். மக்கள் உபயோகத்திலுள்ள எந்த மொழியையும் கொலை செய்ய ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்த விடவும் கூடாது.//

              சமஸ்கிருதம் ‘தேவ பாஷை’ என்கிற சொல்வதற்கும் (அல்லது) கோவில்களில் ஏன் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. புராண கதைகளின் அடிப்படையில் அல்ல. ஆனால், அதை ‘பகுத்தறிவாதிகளுக்கே’ விளக்கும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை.

              எனக்கு தெரிந்து ‘கல்வி’ என்றாலே ‘காமராஜர்’ தான் என் நினைவுக்கு வருகிறார். இதில் ‘பெரியார்’ நாம் ‘கல்வி கற்க’ என்ன செய்தார் என்பது நிஜமாகவே தெரியாது. ஜாதி கொடுமைகள் இருந்த காலத்தில் கூட மக்கள் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர்.

              அனைத்து மொழிகளும் சரி சமமாகவே நடத்த பட வேண்டும். ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியதை சொன்னேன்.

              // இதை யாரிடம் சொல்ல வேண்டும்? நால்வர்ணக் கொள்கையைப் பிடித்துக்கொண்டு பலஜாதி மனிதர்களின் //கறுப்பு நிறத்தை வைத்து அடையாளம் கண்டு பாகுபாட்டைப்பேணும் இந்து மதவாதிகளிடமா? அல்லது அது கூடாது என்று கூறும் முற்போக்காளர்களிடமா? //

              நால்வர்ணத்தை எதிர்த்து கொடி பிடியுங்கள். வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லை.

              ஆனால் ‘கருப்பு-சிவப்பு’ நிறத்தை வைத்து இந்த உலகமே ஒரு இனத்தை தனிமை படுத்தி கொண்டே இருக்கிறது. முதலில் ‘போராட்டம்’ என்றால் ‘கருப்பு’ நிற துணி அணிந்து போராடுகிறார்கள் பகுத்தறிவாதிகள் உட்பட. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. முதலில் பகுத்தறிவாதிகள் ‘கருப்பு சட்டை’ அணிந்து போராடுவதை தவிர்க்கட்டும். ஏனென்றால் ‘பகுத்தறிவாதிகள்’ சிந்திப்பதற்க்கே பிறந்தவர்கள் ஆயிற்றே.

              இந்தியாவில் இருக்கும் ‘இந்து மதம்’ மற்றும் ‘வர்ணங்களை’ ஒழிக்கவே பகுத்தறிவாதிகளுக்கு நேரம் போதவில்லையே. இதில் உலகத்தில் நிலவும் ‘கருப்பு-சிவப்பு’ பிரச்சனைகளை பற்றி பேசவோ, செயல்படவோ நேரம் இருக்காது என்பது உண்மை தான்.

              // தமிழர்களுக்கு 1920ல் ஒரு பெரியார்தான் தேவையிருந்தது. 2020ல் ஆயிரம் பெரியார்கள் தேவைப்படுகிறார்கள் //

              முதலில் நான் பெரியார் பற்றி எழுதினால் அதை ‘வினவு ‘ பிரசுரிக்க வேண்டும் என்கிற guarantee எனக்கு யாரவது வாங்கி தாருங்கள். அதன் பின்பு விவாதித்தால் தான் சரியாக இருக்கும்.

              முதலில் நீங்கள் பேசுவது ‘பகுத்தறிவாதமல்ல’, ‘நாத்திகவாதம்’. ஆகவே நீங்கள் பகுத்தறிவாதிகள், முற்போக்குவாதிகள் என்று நீங்களே சொல்ல வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

              குறிப்பிட்ட ஒன்று, இரண்டு விஷயங்களை எப்படி பகுத்தறிவாதமாகும் என்று எனக்கு தெரியவில்லை (அல்லது) நான் தங்கள் அளவிற்கு இன்னும் ‘grow-up’ ஆகவில்லை

              • Hinduism is the majority religion in India.Let us,as born Hindus first eliminate the ills prevalent in Hindu religion.Whoever talks about ills in other religions are not really interested in elimination of ills in any religion.They use that type of argument only to sidetrack the issue.
                You cannot explain why Sanskrit is required in temples.Better acquire information to counter the arguments before venturing to defend Sanskrit.
                It seems that you are poor in political history.When Rajaji brought in the notorious Kulakkalvi Thittam,it was bitterly opposed not only by Periyar,but also by the Congressmen themselves.Rajaji was adamant about implementing that Thittam.His attitude cost his CM post.Kamaraj became CM with the wholehearted support of Periyar.Kamaraj dropped the Kulakkalvi Thittam.He reopened 6000 primary schools which were closed by Rajaji.He also started 6000 more schools.He brought the Madhiya Unavu Thittam for school students.Periyar called Kamaraj as “Pachai Thamizhar”and supported Kamaraj in all his endeavours in providing education to the downtrodden.
                After reading about Periyar,venture into writing about Periyar.Vinavu would have withheld your comments about Pertiyar since it might have been a half-baked one.
                Atheiesm is a the result of Rationalism.You are repeatedly telling that you have not grown up.But you are giving non-solicited advice to rationalists.

          • I’ll try to grow up to your standards. However, I am struggling to grow-up to the level of rationalists

            Whether religion, caste, language, race exists or not all these will happen? eg Molesting, killing, harassment, domination of men etc

            Do you agree with me or not ? But whatever mentioned above should not happen. As I did not grow up to the level of rationalists, but my little heart / mind says they are wrong

            • I am an ordinary reader of ‘vinavu’ like you.

              Since you opened a healthy discussion unlike ‘ஒரு ஆண் உன்னை போக பொருளாக பார்க்க கூடாது என்பதாற்காக, உன்னை நீ அசிங்கம் ஆக்கிக் கொள்ள துணிந்து விட்டாய். என்ன இருந்தாலும் நீ பகுத்தறிவை மொத்த குத்தகைக்கு வாங்கிய பெரியாரின் பேத்தி ஆயிற்றே . வாழ்க உன் பகுத்தறிவு.’ and a raider ‘அருமையான கருத்து சகோதரி, போலி கம்யூனிஸ்டுகள் முகத்தில் கரியை பூசிவிட்டீர்கள்’, I intented to pass on my comment. (Sorry to mention, without Periyar and his untired preaching Rebecca Mary’s would not have been allowed to learn and to be free)

              First of all there was no religion known as Hindu. This name was coined by Persians to indentify people living beyond the river Sindhu. As per definition by Hindu Marriage Act, ‘all those to any person who is a Hindu by religion in any of its forms or developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj, who is a Buddhist, Jain or Sikh by religion, who is not a Muslim, Christian, Parsi or Jew by religion’. Read this sentence once again. There is a clear cut definition for all religions except for Hindu and hence inlcludes a clause ‘who is not…’

              Dravidians(those who speak Tamil, Kannada, Telugu, Tulu and Malayalam) are not Hindus, though they were compelled/ forced/ indoctrinated to accept the brammanical layers of ‘chathurvarna’ long back. ‘Hindu’ was branded on them by the British misunderstanding during colonial rule which in turn continues till today.

              It is pathetic that Dalits were never considered as a human being in this ‘chathurvarna’ system. They are suppose to be fifth class, out of ‘chathurvarna’. We have a different name in Tamil to this social group – Aadhi Dravida and their duty is to serve all the people in every known menial jobs to every one abover their social strata ie ‘chathurvarna’. Gandhi changed the name to ‘Harijan’. Did it bring any relief to their life?

              To understand the life of a Dalit, one has to live as a Dalit for at least a week without his/her real identity, like some time back IIM greaduates venturing to live with Rs 15/- or Rs 20/- per day, for few days as their project work.(Rs 15/- or Rs 20/- being recommended by Ahluwalia, ex-economic advisor to PM, as minimum value for determining below poverty line)

              Don’t try to preach Sanskrit is a divine language. First of all it was not having a script since it was a language spoken by nomads of Central Asia. For nomads, language – a tool for communication, was needed very minimal to keep collecting the necessities of daily life rather than having philosophical discourses. When it was a nomadic language, Tamil was rich in literature.(Those Naam_Tamilar’ folks, please don’t raise your collars! I am also a Tamilian, but you fail to understand importance of economy but argue only on supremacy of a language. Be it my own mother-tongue, my progreesive thinking forbids such type of hegemony based on language)

              On your other points:

              i agree that without Kamaraj education of masses in Tamilnadu would have been impossible but Justice Party and Periyar were instrumental in initiating this possibility. Justice Party begged where as Periyar revolted, hitting the root cause of this social evil, caste ie Hinduism, the another apt name is Brahminism.

              By and large, I have read abusive and adverse comments, including vulgar ones in comments section of Vinavu. As a reader i find your complaint very strange. Wonder, what worst language you used, more than H.Raja of BJP. H.Raja’s verbosity is understandable since he is a bramin in a bramin-bania party. Periyar opposed braminism tooth and nail. Those bramins who shred out their supremacy tag and who think progressively will proclaim and prove Periyar and Ambedkar as the real reformers of the society and not Gandhi.

              Communist – A person associates and believes in the communist philosophy embraces himself or herself to egalitarian principles first and on these line of thoughts, he/she progresses to be a rationalist, athiest and socialist. (There are & were communists, but no country can be called as a communist country. There could be only communist society. The path of reaching that stage is socialism. None of the critics of communism understands this basic item but keep on shouting louder against communism)

              There are lot of essays published in Vinavu for you to go through

              Search here for many books in Tamil. Please read and you will have self-enlightenment. Afterwards tear with your arguments.
              http://padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=78&Itemid=122

              • I don’t know whether Sanskrit had script or not.

                I have got my own tongue and cultural practices. Why should I backup Sanskrit? Am I going to make money out of it

                But, despite everything else and all odds there’s a special reason for promoting Sanskrit.

                I’ll leave that to rationalists to dig and find the truth behind that ‘speciality’

              • With regards to civilization it’s almost impossible to backtrack. We go by books and they may not be accurate. History professors / researchers may provide different information based on what they have found / researched

                Whatever we found in books may not be true. At the same time what we did not found need not to be false

                I can have a clear debate on this but as I am a novice (comparing to rationalists), I understand that you guys need not to know anything from me. Thank you

                  • As I’ve got only ‘normal knowledge’ I don’t have any guidelines. Whatever I’ve raised so far are my doubts against rationalism

                    No matter what we debate it will be incomplete. Because the historical information itself is incomplete

                    But, I’d like to stop my comments here as I want to go one-by-one

                    I raised few doubts on rationalism, their activities and about evolution theory. I kindly request rationalists to clear doubt of human beings who has ‘normal knowledge’

              • //Dravidians(those who speak Tamil, Kannada, Telugu, Tulu and Malayalam) are not Hindus, though they were compelled/ forced/ indoctrinated to accept the brammanical layers of ‘chathurvarna’ long back//

                compelled and forced? is there any evidence ? I am open minded and like to know those evidences.Also like to know the circumstances that made one society submit to other society.And the reasons invaders had mercy on local gods and let those gods live.

                // a tool for communication, was needed very minimal to keep collecting the necessities of daily life rather than having philosophical discourses//

                Unfortunately that language has Vedas and Puranas…Tamils willingly translated those .
                In case of other religion conversions , Interested party learned the language of the targeted people and translated to local language.

                //First of all it was not having a script//

                This is an interesting topic ,when the writing is started and where it is started for Indian languages .Unfortunately

                // ‘Hindu’ was branded on them by the British misunderstanding during colonial rule which in turn continues till today.//

                British cannot foresee your wish :). When they see one follows Hinduism and prays Hindu God , that is how it will be documented.

                This is a very common statement. “Our race is great and advanced race if only those invaders dint intervene”

                RSS uses the same statement in the religion level.You are falling into the Naam Thamilar trap

                • தயவு செய்து ‘வால்காவிலிருந்து கங்கைவரை – ராகுல சாங்கிருத்தியாயா (தமிழில் கண.முத்தையா)’ புத்தகத்தை வாசிக்கவும். தங்களுடைய பல வினாக்களுக்கு விடை கிடைக்கக்கூடும்.

                  I am not falling into the trap of Naam Thamilar. Since I observe some of the comments from such folks, I put a caveat.

                  How RSS analogy is relevant? British used to mention the enire network of faiths existing in this subcontinent in a single name as ‘Hinduism’ with confused mind. RSS knew very well that Hinduism is nothing but Brahminism which extends to persistance of casteism. Yet they hide this fact of casteism-Brahminism under the name hidden name given by British ie Hinduism.

  5. //Whether religion, caste, language, race exists or not all these will happen? eg Molesting, killing, harassment, domination of men etc//
    There shall be 1000 entities, acting as root causes of these inhuman things. However, in India the major root cause behind all these are Hinduism and the Parpaneeyam. These two depends on each other and causing all the inhuman activities.

  6. Mr. Satish,

    That is a very interesting position. Could you please expand a bit on what you mean when you say big bang theory and evolution might not be 100% correct. Are there specific areas that you have issues with or is it a much broader issue? I would love to have a conversation with you and understand where you are coming from.

    • @@@சிந்தனை செய்

      I’ve got very basic questions on both though I’ve not gone through both of them fully

      1) How did they backtrack on both theories, especially ‘big-bang’? They say sun appeared in this world 450 crores of years ago. How was the world / universe before that? Geo-centric vs Helio-centric is still a debate. How accurate their backtracking is?

      2) In ‘evolution theory’ they say that both ‘Monkey’ and ‘Man’ derived from a common-ancestor. But, who’s / what’s that common ancestor ?

      3) Why human-being did not change into some other form (or) species (need not to turn monkey again) despite being several thousands of years? (or) Is there any answer provided by ‘evolution theory’ on the ‘approximate number of years’ it would take for an species to create another / new one from it???

      It appears they ‘assuned / presumed’ species already existed. They did not try to prove what species existed and how those species were created

      Thanks

      • Ill try to answer them to the best of my abilities here. But please do understand that these questions are very complex and have hundreds of years of scientific research behind it. So the one i give here is a simple/reductive one but if you like, please do feel free to ping me and we can discuss things in detail. I do not want to derail the conversation here.

        1. These two questions i.e. Big bang and age of sun has different answers. Big bang is the result of hundreds of years of observations but the big players are the fact that galaxies are receding from one another and the Cosmic Microwave Background. The first was observed by Hubble and is the basis of Hubble’s law. CMB was an accidental discovery but was one of the discoveries that cemented Big bang as the leading proponent of the origin of the universe. There were many theories about the universe before like Steady state, oscillating, etc. but the discovery of CMB is the best evidence that the universe indeed was created by quick inflammation in accordance with the Big bang theory.

        As for the second part, regarding age of the sun, we know how starts and planets are formed. It is something we can observe every moment with telescopes. The way we determine the age of the sun is by radiometric dating of asteroids and moon rocks. Sun, asteroids and planets were all formed at the same time by condensing of the dust cloud, so the logical inference is that the age of the oldest asteroids we find is also the age of the sun. And the oldest asteroids we have found are dated to 540 crores of years ago and so is the age of the solar system.

        And, helio-centric and geo-centric is not a debate at all. In fact, we have known from the time of ancient Greece, Egypt, India and China that we are indeed helio-centric. Moving earth i.e.Helio centrism as opposed to static earth has been recognized atleast since 3rd century BC but it took until the Copernican revolution and mountains of observational evidence to completely destroys the shackles of geo-centrism. The evidence for helio centrism can be easily gotten by anyone with a decent enough telescope these days.

        2. The question of human evolution is very complex but to answer your question, the last common-ancestor is not a single one but a family. That is for example, the last common ancestor for your brother and you would be your parents which is a single couple, but the last common ancestor for species as a whole is not so. The last common ancestor of dogs today is not a single dog or wolf but various domesticated breeds. So if you are looking for the last common ancestors of humans, chimpanzees and gorillas, the scientific consensus is that its the Nakali ape. Other possible candidates have been proposed such as the Ouranopithecus macedoniensis but those remain controversial due to various shortcomings in genetic as well as anatomical differences.

        3. Speciation is what you are referring to here and it can be due to natural or artificial reasons. Artificial speciation for example, most of the crops we have domesticated in the last 10,000 years from when we started agriculture, are nothing like their wild ancestors from which they were bred. In this case they survived and evolved because they were artificially selected to survive and was not evolution by natural selection. Same with dogs. We bred dogs that were obedient rather than ferocious ones, therefore today you wont see any dogs in the wild hunting down animals. Obedience was the preferred trait and the ones that had traits humans saw as valuable were bred while others were discarded.

        Evolution by natural selection on the other hand is an ongoing process in response to the environmental pressures. What we are doing currently i.e. adapting the environment to suit us is not how evolution occurs. Usually the species adapts to the environment via natural selection but due to the neolithic revolution after agriculture, we have done the opposite which is a first in the history of the earth. It doesnt mean human evolution has stopped, it is still ongoing! There are multiple different examples such as groups of people adopting to be resistant to heart conditions, increased fertility favoring in descendants of early settlers and so on. In fact we had multiple different species of humans who all lived together. Just 30,000 years ago, homo sapiens lived along with multiple other human species such as Neanderthals in Europe and western Asia, the Denisovans in Asia, and the “hobbits” from the Indonesian island of Flores. Homo sapiens survived simply because we were better suited to the changing conditions and could adopt better.

        Thousands of years is not a big timescale when it comes to evolution at all. Moreover, evolution is not dependent on time but other pressures and variables such as climatic conditions, presence of natural predators and competitors, size of the population of itself, predators and competitors, how efficiently it competes with other animals, availability of food and so on. If the conditions are fairly stable, there would be no need for adoption and therefore evolution. For example, you wouldnt find a pure white animal in a forest simply because they cannot compete with other animals who can hunt better due to their natural camouflage. For example, a white deer will stand out in a forest and is easy target for predators. So they wouldnt survive long enough to create children and pass on their genes. So in this case, it does not matter how long it takes. A white deer is simply unfit to the forest environment so it wont evolve. Unless the conditions change where having a white coat gives a better chance of survival, you wouldnt see a species with white coat forming. These variables are also unbelievably complex and has lot of interdependent factors which means the calculation is not simple. We can estimate for a certain set of variables yes but the hard part is actually figuring out the values of these variables to do the calculation.

        One thing you can be sure in science is that there are no results based on assumptions. If you assume something to prove something, then you have to show that your assumptions are correct first.That is a fundamental requirement of scientific investigation.

        • 1) 540 கோடி வருடங்கள் என்று எவ்வாறு கணக்கிட்டார்கள் ? இது ஊகத்தின் அடிப்படையிலான கணக்கா ?
          2) ‘பரிணாமத்தை’ பற்றிய என்னுடைய மற்றொரு கேள்வியை ‘4.1.1.2.1.2.1 செக்ஷனில்’ பாருங்கள் ? பரிணாமத்தில் ‘படைப்புகள்’ மட்டும இருந்தால் அவர்கள் சொல்வதை ஏற்று கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு படைப்பிலும் மிக நுட்பமான ‘அறிவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது’. இவை எல்லாம் ‘தானாக நடந்தது’ என்பது நம்பும்படியாக இல்லை
          3) ‘பூமி மைய்ய கொள்கை வ்ச் சூரிய மையம்’/ எனக்கு தெரிந்து ‘சூரிய மைய கொள்கை நிரூபிக்கப்படவில்லை’

          (அ) பூமி சுற்றுவதற்கு ஆதாரமாக சொல்லப்பட்ட ‘Fஒஉசல்ட்ச் Pஎன்டுலும் எxபெரிமென்ட்’ தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
          (ஆ) பூமி சுற்றுவதற்கு மற்றுமொரு ஆதாரமாக சொல்லப்பட்ட ‘Mஇச்கெல்சொன் Mஒர்லெய் யின்’ முடிவு சர்ச்சைக்குள்ளான முடிவு அது

          ஆனால் பூமி ‘சுற்றாததற்கு’ ஆதாரமாக ‘ஆஇர்ய்ச் எxபெரிமென்ட்’ சொல்லப்படுகிறது.

          சரி எxபெரிமென்ட் எல்லாம் ஓரமாக வைத்து விட்டு நாம் சாதாரணமாக யோசிக்கலாம். இப்போதைக்கு ‘பூமி சுற்றவில்லை என்றே வைத்து கொள்வோம்’

          ‘பூமி சுற்றாத போதே’ ஒரு பறவை ‘இறை தேட சென்று விட்டு’ தன்னுடைய கூட்டை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது

          ஆனால் பூமியோ ‘1100 மைல்கள் வேகத்தில் சுற்றுகிறது’. சுற்றி கொண்டே இருக்கிறது. இவ்வளவு வேகத்தில் சுற்றும் பூமியில் ‘இறை தேடி பல மைல்கள் பல நாட்கள்’ பறந்து சென்ற பறவை திரும்பி எப்படி தன்னுடைய கூட்டிற்கு வருகிறது ???

          நீயா-நானாவில் ஒரு டாக்டர் ‘ஜோதிடம்’ சூரிய மைய கொள்கைப்படி தவறு என்றார். இப்போது ‘சூரிய மைய கொள்கை’ தவறு என்றால் ‘ஜோதிடம் சரி’ என்று ஒப்புக்கொள்வார்களா ??

          இந்த கேள்விகள் மட்டுமில்லை இன்னும் நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது பதிகிறேன் . பகுத்தறிவாதிகள் பதில் சொல்லலாம். நன்றி

          • Typo when changed the keyboard character set

            (அ) பூமி சுற்றுவதற்கு ஆதாரமாக சொல்லப்பட்ட ‘Foucalts Pendulum experiment’ தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
            (ஆ) பூமி சுற்றுவதற்கு மற்றுமொரு ஆதாரமாக சொல்லப்பட்ட ‘Michelson Morley யின்’ முடிவு சர்ச்சைக்குள்ளான முடிவு அது

            ஆனால் பூமி ‘சுற்றாததற்கு’ ஆதாரமாக ‘Airy’s experiment’ சொல்லப்படுகிறது.

          • திரு. சதீஷ்,

            பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. பொதுவாக பேசாமல் core points மட்டும் எடுத்துகொள்வோம். distractions, tangents எதுவும் இல்லாமல் அந்த பாயிண்ட் பற்றி மட்டும் பேசுவோம். உங்கள் கூற்றுகளின் மிக, மிக அடிப்படை எந்த பாயிண்ட் என்று கருதுகிறேனோ அதை மட்டும் கீழே தொகுத்து இருக்கிறேன், அவை பற்றி மட்டும் நமது discussion முன்னெடுத்து செல்லுவோம். ஒரு வேலை அவை முக்கியம் அல்ல, வேறு ஒன்று தான் என்றால் தயவு செய்து கூறவும். திருத்தங்கள் செய்துகொள்ளல்லாம். உங்கள் பிறகு அதில் இருந்து ஒவ்வொரு பாயிண்ட் எடுத்துக்கொண்டு, ஒன்னொன்றாக செல்வோம். Lets take the core, strongest argument and then proceed from there.

            1. சூரியனின் வயது 540 கோடி வருடங்கள் என்று எவ்வாறு கணகிட்டர்கள்?

            2. big bang தியரி மற்றும் அதை சார்ந்த கேள்விகள்.

            2. பரிணாமத்தில் ஒவ்வொரு படைப்பிலும் மிக நுட்பமான ‘அறிவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது

            3. முதலில் தோன்றிய உயிரினம் எது? அதற்க்கு பசி இருந்ததா?

            4. பசி இல்லாவிட்டால் உலகம் இயங்காது.

            5. Foucalts Pendulum experiment தவறு என நிரூபிக்க பட்டு உள்ளது. இது பூமி சுற்றுவதற்கும், சூரிய மைய கொள்கைக்கு(helio centric) எதிரான ஆதாரம்.

            5. Michelson Morley ஆய்வு முடிவும் சர்ச்சைக்கு உரியது. அதுவும் பூமி சுற்றுவதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

            6. பூமி சுற்றாதர்க்கு ஆதாரமாக சொல்லப்படும் Airy’s experiment உள்ளது.

            7. ‘பூமி சுற்றாத போதே’ ஒரு பறவை ‘இறை தேட சென்று விட்டு’ தன்னுடைய கூட்டை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

            8. சுற்றும் பூமியில் எப்படி பறந்து சென்ற பறவைகள் தங்கள் கூட்டுக்கு திரும்பி வருகின்றன.

            இதில் உங்கள் strongest argument என்று எதை கருதுகிறீர்கள் என்று கூறவும். அதை பற்றி பேசுவோம்.

            • @@@சிந்தனை செய்

              கேள்விகளை தொகுத்தமைக்கு நன்றிகள். மொத்தம் 10 கேள்விகளை கொடுத்து உள்ளீர்கள்.

              10 கேள்விகளை பற்றியும் விவாதிப்போம் அவற்றில் முதலில் எளிமையானதாக நான் கருதுவது ‘சூரிய vs பூமி’ கொள்கை சார்ந்த இவ்வைந்து கேள்விகள் பற்றிய தங்களது பதிலை சொல்லுங்கள்

              1. Foucalts Pendulum experiment தவறு என நிரூபிக்க பட்டு உள்ளது. இது பூமி சுற்றுவதற்கும், சூரிய மைய கொள்கைக்கு(helio centric) எதிரான ஆதாரம்.

              2. Michelson Morley ஆய்வு முடிவும் சர்ச்சைக்கு உரியது. அதுவும் பூமி சுற்றுவதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

              3. பூமி சுற்றாதர்க்கு ஆதாரமாக சொல்லப்படும் Airy’s experiment உள்ளது.

              4. ‘பூமி சுற்றாத போதே’ ஒரு பறவை ‘இறை தேட சென்று விட்டு’ தன்னுடைய கூட்டை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

              5. சுற்றும் பூமியில் எப்படி பறந்து சென்ற பறவைகள் தங்கள் கூட்டுக்கு திரும்பி வருகின்றன.

              தாங்கள் பதில் சொல்வதற்கு முன் எனக்கு தெரிந்த ஒரு ‘hint’ சொல்லி விடுகிறேன்.

              எனக்கு தெரிந்த வரை ‘Helio-centric theory’, ‘open earth modelஐ’ பின்பற்றுகிறது. ‘open earth modelஐ’ மனதில் நிறுத்தி பதில் சொல்லவும். அது தான் ‘key’ இங்கே

              மற்ற ஐந்து கேள்விகளை, பின்னர் விவாதிப்போம்

              நன்றி

              • திரு. சதீஷ்,

                இதில் ஒவ்வொரு கேள்வியாக வருவோம். முதல் கேள்வி:

                //Foucalts Pendulum experiment தவறு என நிரூபிக்க பட்டு உள்ளது. இது பூமி சுற்றுவதற்கும், சூரிய மைய கொள்கைக்கு(helio centric) எதிரான ஆதாரம்.//

                இதில் முதலில் உங்கள் பக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம். உங்கள் கூற்று என்பதால் நீங்கள் அதை விளக்க வேண்டுகிறேன். Foucalts pendulum எவ்வாறு வேலை செய்கிறது, அதில் எது தவறு என நிரூபிக்கபட்டு உள்ளது. எவ்வாறு நிரூபிக்க பட்டு உள்ளது. அது தவறு என்பதால் கண்டிப்பாக சூரிய மைய கொள்கை தவறு என்று எப்படி கூற முடியும்?

                • நாம் அனைவரும் பூமியிலே தான் இருக்கிறோம். முதலில் ‘பூமி மைய்ய’ கொள்கை பின்பற்றப்பட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே

                  ‘சூரிய மைய கொள்கை’ உருவாக்கப்பட்ட பின் ‘பூமி சுழல்கிறது’ என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது

                  அப்போது உருவாக்கப்பட்டது தான் இந்த ‘பெண்டுலம்’. பெண்டுலம் ‘working principleஐ’ கூகுளில் தேடி கொள்ளுங்கள். இந்த ‘பெண்டுலம் முன்னேயும்-பின்னேயும் போய் போய் வரவல்லது, அப்படியே சுழலவும் செய்யவல்லது.

                  பூமி சுழல்வதால் தான் இந்த பெண்டுலம் ‘முன்னேயும்-பின்னேயும் ஆடி சுழற்சி ஏற்படுகிறது’ என்று ‘சூரிய மைய்ய’ கொள்கையை விஞ்ஞானிகள் கூறினர்.

                  ‘George Airy’ மற்றும் ‘Maurice Allias’ போன்ற விஞ்ஞானிகள் 1954ம் ஆண்டு இதை தவறு என்று நிரூபித்தனர் அதாவது ‘பெண்டுலமின் சுழற்சி’ பூமி சுற்றுவதினால் ஏற்படவில்லை என்பதனை நிரூபித்தனர்.

                  இது ‘சூரிய மைய்ய’ கொள்கை சரியில்லை என்பதற்கு ஒரு எடுத்தக்காட்டு

                  இன்னும் நிறைய இருக்கிறது. நீங்கள் ‘சூரிய மைய்ய’ கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நீங்கள் ‘வலுக்கட்டாயமாக’ விஞ்ஞானத்தில் ஒரு பல விஷயங்களை மறந்து விட வேண்டும்.

                  ஆனால் இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் (உங்களை சொல்லவில்லை).

                  சூரிய மைய கொள்கையினால் ‘ஜோதிடம் தவறு’ என்று சொல்வது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை.

                  அது கூட பரவாயில்லை. ‘GMT’, CET’, ‘IST’ என்று நிறைய நேர முறைகள் இருப்பதனால் ‘ஜோதிடம்’ தவறு என்று சொல்கின்றனர். ‘நேரத்தின்’ அடிப்படை கூட தெரியாதவர்கள் ஜோதிடத்தை எதிர்க்க ‘நேரத்தை’ துணைக்கு அழைத்து கொண்டனர். எல்லாம் ‘தலைவிதி’. ஆனால் அவர்கள் தான் புத்திசாலிகள். எங்கே போய் முட்டிக்கொள்வது நாம்

                  நன்றி

                  • //நாம் அனைவரும் பூமியிலே தான் இருக்கிறோம். முதலில் ‘பூமி மைய்ய’ கொள்கை பின்பற்றப்பட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே//

                    இதற்க்கு ஆதாரம் என்ன? கூகுள் மூலம் பார்த்ததில் heliocentrism முதலில் வந்ததாக தான் தெரிகிறது. Philolaus என்பவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் சூரியமைய கொள்கை வகுத்து விட்டதாக தெரிகிறது. ஆனால் பூமி மைய கொள்கை வகுத்த Ptolemy இருந்ததோ கி.பி. இரண்டாம் நூற்றாண்டில். முதலில் பூமி மைய கொள்கை முதலில்பின்பற்றப்பட்டது என நீங்கள் கூறுவது என்பது எதன் அடிப்படையில்? ஒரு வேலை அப்படியே வைத்துகொண்டாலும் பின்பற்றப்பட்டது என்பதால் அது தான் சரி என்று நீங்கள் கூறுகிறீர்களா?

                    //‘George Airy’ மற்றும் ‘Maurice Allias’ போன்ற விஞ்ஞானிகள் 1954ம் ஆண்டு இதை தவறு என்று நிரூபித்தனர் அதாவது ‘பெண்டுலமின் சுழற்சி’ பூமி சுற்றுவதினால் ஏற்படவில்லை என்பதனை நிரூபித்தனர்.//

                    அது தான் சார் எப்படி என்று சற்று விளக்கவும். அவர்கள் இருவரும் எப்படி அது பூமி சுற்றுவதால் ஏற்படவில்லை என்று நிரூபித்தனர்? பூமி சுழற்சி இல்லை என்றால் வேறு எதனால்?

                    //இன்னும் நிறைய இருக்கிறது. நீங்கள் ‘சூரிய மைய்ய’ கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நீங்கள் ‘வலுக்கட்டாயமாக’ விஞ்ஞானத்தில் ஒரு பல விஷயங்களை மறந்து விட வேண்டும்.//

                    இவை என்ன? எந்த எந்த விசயத்தை மறந்து விட வேண்டும்?

                    • தங்கள் கேள்விகளுக்கு நான் கண்டிப்பாக பதில் தருகிறேன். ஆனால் முழுவதுமாக பதில் தர எனக்கு நேரமில்லை

                      இடையில் ‘ராமன்’ போன்றோரின் தொந்தரவு வேறு. மன்னிக்கவும்

                      ‘ராமன்’ ஏதோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்று நான் கூறுவது போல் எனக்கு ‘அறிவுரைகளை’ அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்.

                      நான் கேட்கும் கேள்விகள் அனைத்தும் என்னுடையவை அல்ல. ‘astronomy’ துறையிலே இருப்பவர்கள் கேட்ட கேள்விகள் தான் அவை

                      நானும் என் நண்பர்களும் ‘மாதக்கணக்கில்’ தொடர்ந்து ‘தகவல்களை சேகரித்தோம்’. ‘உணவு இடைவேளை’, ‘தேநீர் இடைவேளை’ என்றும் பாராமல் எங்களுக்கு கிடைத்த ‘தகவல்களை’, எங்கள் அறிவுக்கு ஏற்றார் போல் விவாதித்தோம்

                      அதை தான் நான் இங்கு பதிவிட்டு உள்ளேன்

                      முதலில் ‘ராமனுக்கு’ பதில் அளித்து விட்டு நமது விவாதத்தை தொடரலாம் இது அவர் ‘பெரிய ஆளா’ நான் ‘பெரிய ஆளா’ என்கிற விவாதம் இல்லை

                      selective-amnesia உள்ளவர்களுக்கு இது ஒரு ‘சிறிய’ அனுபவமாக இருக்கும்.

                    • ஒருவன் கேள்விகள் கேட்டகிறான் என்றால் அவன் எதுவுமே தெரியாதவன் என்கிற ‘ராமனின்’ நினைப்பை என்னவென்று சொல்லுவது

                      இந்த விவாதத்தின் இறுதியில் ‘சூரிய மைய கொள்கையை’ பற்றி தெளிவாக விவாதித்த ‘லிஙக்’ பகிர்கிறேன்

                      அந்த ‘லிங்கில்’ அவர் எழுதிய ‘விஷயங்களை’ விட அதன் மீது நடந்த ‘பின்னூட்டங்களே’ முக்கியம் . நானும் என் அறிவிற்கு இரண்டு, மூன்று கேள்விகளை கேட்டுள்ளேன்

                      சற்று பொறுமையாக இருங்கள். உண்மை புரியும்

                    • கீழே உள்ள லிங்க், ‘helio-centric’ தியரியில் உள்ள ஒரு ஓட்டையை பற்றி விவரிக்கிறது. அந்த கேள்வியை கேட்டவர் ‘astronomy’ துறையில் 40 ஆண்டு கால அனுபவம் உள்ளவர் என்பதை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்

                      திரு ராமன் அவர்கள் இதற்க்கு என்ன பதில் அளிக்கிறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ?

                      https://www.freelists.org/post/geocentrism/solar-eclipse-explanation-failure

                      The moon would have to be travelling A WHOLE LOT FASTER THAN 2100
                      MPH at the distance they claim it is in order for it to even keep up with the
                      15 degree per hour turn of the earth, let alone for it to be faster than the
                      earth. Isn’t this basic geometry? I know as a kid I was always really flying
                      on the outside of the merry go round, and getting sick, while all the while I
                      would be able to look at some kid’s calm face sitting in the center who was not
                      feeling near the agony I was.

                      இன்னும் நிறைய தொடரும். திருவாளர் ‘ராமன்’ என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ?

      • கற்பனை கதைகள் நம்புவதற்கு சுலபம் . எல்லாவற்றிற்கும் காரணம் கடவுள் என்று குகை மனிதர்களின் சிந்தனையில் உதித்ததை , நிரூபியுங்கள் என்று கேள்வி கேட்க உங்கள் மனம் என்றைக்கும் விழைந்தது இல்லை .

        கோவிலில் இடமிருந்து வலமாக சுத்த வேண்டும் என்று நெற்றி நிறைய விபூதியோடு ஒருவர் சொன்னால் , அவரிடம் உங்களுக்கு எப்படி தெரிந்தது , உங்களுக்கு சொன்னவருக்கு எப்படி தெரிந்தது ,
        மாற்றி செய்தால் என்ன ஆகும் என்று உங்கள் மனம் கேள்வி கேட்காது .

        ஆனால் அறிவியல் என்பது புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது . கடவுள் என்பதோ மூன்று வயது குழந்தைக்கே புரிந்து விடுகிறது.

        உங்களுக்கு உண்மையிலேயே புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்தால்

        “அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு ” என்னும் புத்தகத்தை படியுங்கள் . ஓரளவிற்கு அரவியலாளர்கள் எப்படி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதிலை தேடினார்கள் என்பது சுவையாக கூறப்பட்டு இருக்கிறது .

        உதாரணமாக பூமியின் எடை இவ்வளவு என்கிறார்கள் எப்படி அளந்தார்கள்?
        http://www.amazon.in/Anaithaiyum-Kuritha-Surukkamana-Varalaru-Bryson/dp/9382826289

        • // கற்பனை கதைகள் நம்புவதற்கு சுலபம் . எல்லாவற்றிற்கும் காரணம் கடவுள் என்று குகை மனிதர்களின் சிந்தனையில் உதித்ததை , நிரூபியுங்கள் என்று கேள்வி கேட்க உங்கள் மனம் என்றைக்கும் விழைந்தது இல்லை //.

          இவ்வுலகில் உயிரினங்களுக்கு அத்தியாவசிய விஷயங்களை தவிர்த்து மற்றவை ‘மறைபொருளாகவே’ இருக்கின்றன. அவற்றை மனிதர்கள் தான் கண்டறிய வேண்டும்.

          அது என்ன ‘மறைபொருள்’? இதற்க்கு நீண்ட விளக்கம் தேவை. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். கிரகங்கள் பல இருந்தாலும் உயிரினங்களுக்கு நேரடியாக கண்ணுக்கு தெரிவது ‘சூரியனும்’, ‘சந்திரனும்’ மட்டும் தான். ‘பகலும்’, ‘இரவும்’ நமக்கு அத்தியாவசமானவை, மற்றவைகளை உயிரினங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்

          ஏதோ ‘கடவுள் துகள்’ இருப்பதாக படித்தவர்கள் சொல்கிறார்கள். ஆராய்ச்சிகள் ‘மெய் ஞான ரீதியாகவும்’, ‘விஞ்ஞான ரீதியாகவும்’ நடந்து கொண்டு தான் இருக்கிறது.

          // கோவிலில் இடமிருந்து வலமாக சுத்த வேண்டும் என்று நெற்றி நிறைய விபூதியோடு ஒருவர் சொன்னால் , அவரிடம் உங்களுக்கு எப்படி தெரிந்தது , உங்களுக்கு சொன்னவருக்கு எப்படி தெரிந்தது ,
          மாற்றி செய்தால் என்ன ஆகும் என்று உங்கள் மனம் கேள்வி கேட்காது .//

          இந்து மதத்தில் நிறைய சம்பிரதாயங்கள் ஆனால் அவற்றிற்கு விளக்கம் இல்லாமல் இல்லை.

          உதாரணமாக ‘தாழ்ப்பாளை ஏன் ஆட்டக்கூடாது’, ‘வளைகாப்பு ஏன் நடத்தப்படுகிறது’, ‘கோவில் இல்லாத ஊரில் ஏன் குடியிருக்க கூடாது’, ‘அபிஷேகங்கள் ஏன் நடத்தப்படுகிறது’ என்பதற்கு விளக்கங்கள் உள்ளன

          // ஆனால் அறிவியல் என்பது புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது . கடவுள் என்பதோ மூன்று வயது குழந்தைக்கே புரிந்து விடுகிறது.

          உங்களுக்கு உண்மையிலேயே புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்தால்

          “அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு ” என்னும் புத்தகத்தை படியுங்கள் . ஓரளவிற்கு அரவியலாளர்கள் எப்படி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதிலை தேடினார்கள் என்பது சுவையாக கூறப்பட்டு இருக்கிறது . // நேரம் கிடைக்கும் பொது படிக்கிறேன். நன்றி

          • //கிரகங்கள் பல இருந்தாலும் உயிரினங்களுக்கு நேரடியாக கண்ணுக்கு தெரிவது ‘சூரியனும்’, ‘சந்திரனும்’ மட்டும் தான்//

            ஐந்து கிரகங்கள் கண்ணுக்கு தெரியும் . நீங்கள் அறிவியல் என்ன என்பதை எந்த முயற்சியும் எடுக்காதவர்.

            //ஆராய்ச்சிகள் ‘மெய் ஞான ரீதியாகவும்’, ‘விஞ்ஞான ரீதியாகவும்’ நடந்து கொண்டு தான் இருக்கிறது.//

            அடேங்கப்பா , அது என்ன மெய் ஞான ரீதியாந ஆராய்ச்சி என்று விளக்கினால் தெரிந்து கொள்கிறேன் .இது வரை அந்த மெய் ஞான ரீதியாந ஆராய்ச்சி மூலமாக வேறென்ன கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

            //உதாரணமாக ‘தாழ்ப்பாளை ஏன் ஆட்டக்கூடாது’, ‘வளைகாப்பு ஏன் நடத்தப்படுகிறது’, ‘கோவில் இல்லாத ஊரில் ஏன் குடியிருக்க கூடாது’, ‘அபிஷேகங்கள் ஏன் நடத்தப்படுகிறது’ என்பதற்கு விளக்கங்கள் உள்ளன
            //

            ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
            ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

            //நேரம் கிடைக்கும் பொது படிக்கிறேன். நன்றி//

            நீங்கள் அறிவியல் வளர்ச்சி குன்றி ஐ சி யூ வில் இருக்கிறீர். உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது . நேரம் கிடைக்கும்போது படிக்கும் அளவிற்கு தள்ளி போட்டால் அறிவீனம் அதிகம் ஆகும் .

            • //ஐந்து கிரகங்கள் கண்ணுக்கு தெரியும் . நீங்கள் அறிவியல் என்ன என்பதை எந்த முயற்சியும் எடுக்காதவர். //

              வெறுங்கண்ணால் (telescope உதவி இல்லாமல்) நீங்கள் எப்படி ஐந்து கிரஹங்களை பார்ப்பீர்கள் என்று எனக்கு நிஜமாகவே தெரியவில்லை

              நல்ல வேலை எந்த விஞ்ஞானி ‘telescopeஐ’ கண்டுபிடித்தானோ அவனுக்கு நன்றி சொல்லவேண்டும். இல்லை என்றால் ‘கிரஹங்கள் 9 எல்லாம் இல்லை’ என்று தான் சொல்லி இருப்பீர்கள். வெறும் ‘2 தான்’ என்று சொல்லி இருப்பீர்கள்

              // அடேங்கப்பா , அது என்ன மெய் ஞான ரீதியாந ஆராய்ச்சி என்று விளக்கினால் தெரிந்து கொள்கிறேன் .இது வரை அந்த மெய் ஞான ரீதியாந ஆராய்ச்சி மூலமாக வேறென்ன கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். //

              அதை நான் எப்போதோ கேட்டு விட்டேன். இதே ‘போஸ்டில்’ என்னுடைய பழைய கேள்விகளை பாருங்கள்.

              // //உதாரணமாக ‘தாழ்ப்பாளை ஏன் ஆட்டக்கூடாது’, ‘வளைகாப்பு ஏன் நடத்தப்படுகிறது’, ‘கோவில் இல்லாத ஊரில் ஏன் குடியிருக்க கூடாது’, ‘அபிஷேகங்கள் ஏன் நடத்தப்படுகிறது’ என்பதற்கு விளக்கங்கள் உள்ளன
              //

              // ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
              ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா //

              வளைகாப்பு ஏன் நடத்தப்பட வேண்டும் என்பதை நீங்களே விளக்குங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

              மேற்கண்டவற்றிற்கு நீங்கள் தான் விளக்கம் சொல்லுங்களேன். நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சொல்வதை கேட்டு விட்டு நானும் தங்கள் சந்தோசத்தில் பங்கு கொள்வேன் இல்லையா. நான் தங்கள் சந்தோசத்தில் ‘பங்குஎடுக்க’ வேண்டாம் என்று நினைத்தால் ‘நான் மேற்சொன்னவற்றிற்கு’ விளக்கம் தர வேண்டாம்.

              // நீங்கள் அறிவியல் வளர்ச்சி குன்றி ஐ சி யூ வில் இருக்கிறீர். உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது . நேரம் கிடைக்கும்போது படிக்கும் அளவிற்கு தள்ளி போட்டால் அறிவீனம் அதிகம் ஆகும் .//

              என்னை போன்றவர்கள் ‘ICUவில்’ இருப்பதை பற்றி கவலை இல்லை. ஆனால் உங்களை போன்றவர்களுக்கு ‘selective-amnesia’ பிடித்து ஆட்டி கொண்டு இருக்கிறது. அதை முதலில் சரி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் படித்தவர்கள். உங்களின் சேவையும், அறிவும் நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகிறது.

  7. // நேரம் கிடைக்கும்போது படிக்கும் அளவிற்கு தள்ளி போட்டால் அறிவீனம் அதிகம் ஆகும் //

    கொஞ்சம் படித்துவிட்டாலே அடுத்தவர்களை மட்டம் தட்டி பார்ப்பது இயல்பு தான். ஆனால் நம் அனைவருக்குமே ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது

    ‘சைக்கிள் ரிப்பேர்’ செய்பவனுக்கு அதில் இருக்கும் அறிவு நமக்கு இருக்காது. அதற்காக ‘சைக்கிள் ரிப்பேர்’ செய்பவன் உங்களை பார்த்து ‘அறிவிலி’ என்று சொன்னால் அதை தாங்கள் ‘ஏற்று கொள்வீர்களா’???

    • இயற்கையிலேயே விவரம் தெரியாமல் ஆனால் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு வகை .

      விவரம் தெரியாமல் ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாமல் , அதை மூடி மறைத்து , வார்த்தை ஜாலத்தால் மேதாவித்தனத்தை நிலை நாட்டுபவர் இன்னொரு வகை . இந்த வகை ஆசாமிகளுக்கு ஸ்பூனில் ஓட்டினாலும் சாப்பிட்டு கொண்டே சாப்பாடு சரி இல்லை என்று ஏகடியம் பேசுவார்கள் . இவர்களுக்கு பொதுவாக நான் பதில் அழிப்பது இல்லை .

      ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகள் என்று நினைப்பவர்கள் , சதீஸ் ஐயாவை பார்த்து தெளிவீர்களாக .

      உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் புத்தகம் படியுங்கள் . உங்களை போன்ற அனைத்தும் தெரிந்த மேதாவிகளோடு பேசி எனது நேரத்தை விரயமாகக் நான் விரும்பவில்லை .

      கடைசியாக இந்திரா காந்தி செத்துட்டாங்களா ? என்பது போல பூமி நடுவுல இருக்கு என்று ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கேள்விகளை விவாதிக்கும் நீங்கள் எங்கே கல்வி ப்யிண்றீர்கள் , என்ன மாதிரியான ஆள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் கற்காலத்தில் இருக்கிறீர்கள் என்பதை சுட்டி கூட்டுபவர்களுக்கு நன்றி கூறுங்கள்

      //நல்ல வேலை எந்த விஞ்ஞானி ‘telescopeஐ’ கண்டுபிடித்தானோ அவனுக்கு நன்றி சொல்லவேண்டும். இல்லை என்றால் ‘கிரஹங்கள் 9 எல்லாம் இல்லை’ என்று தான் சொல்லி இருப்பீர்கள். வெறும் ‘2 தான்’ என்று சொல்லி இருப்பீர்கள்
      //

      இந்த மாதிரியான இட்டு கட்டி விவாதிக்கும் ஏமாற்று வேலையை செய்து விவாதத்தில் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணாமல் , அறிவை தேடுங்கள்.

      இன்று இரவு நிலாவை பாருங்கள் , அதன் அருகில் மினுக்கமால் ஒரு பிரகாசமான புள்ளி தெரியும் , அதுவே ஜூபிடர் , அதாவது குரு பகவான் . அடுத்து குரு பெயர்ச்சி என்பது , ஜூபிடர் எந்த கான்சப்டேல்லசனில் இருக்கிறது என்பதை குறிக்கிறது.

      http://earthsky.org/tonight/moon-jupiter-io-europa-ganymede-callisto
      http://earthsky.org/tonight/moon-saturn-couple-up-in-morning-sky

      சூரிய சித்தாந்தா என்கின்ற புத்தகம் மூலம் தான் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. அது சூரிய நடுநிலை கொண்டது.

      //‘பூமி சுற்றாத போதே’ ஒரு பறவை ‘இறை தேட சென்று விட்டு’ தன்னுடைய கூட்டை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது
      //

      50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் உங்கள் பேருந்தில் ஒரு ஈ ஒரு சீட்டில்சீ இருந்து இன்னொரு சீட்டிற்கு சென்று வருகிறது . அது எப்படி ?

      // ஏனென்றால் நீங்கள் எல்லாம் படித்தவர்கள். உங்களின் சேவையும், அறிவும் நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகிறது.
      கொஞ்சம் படித்துவிட்டாலே அடுத்தவர்களை மட்டம் தட்டி பார்ப்பது இயல்பு தான். ஆனால் நம் அனைவருக்குமே ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது
      //
      மன்னிக்கவும் , நீங்கள் மிகவும் பின்தங்கி கற்காலத்தில் இருக்கிறீர்கள் என்பதை பிறர் சொல்ல கேட்கும் பொழுது கசப்பாகத்தான் இருக்கும் . உங்களை காமெடி பீஸாக வைத்து பொழுது போக்காமல் , உங்களுக்கு உதவிதான் செய்துள்ளேன் .

      புத்தகத்தை படிக்காமல் இந்த பின்னூட்டத்திற்கு பதில் அளிக்க வேண்டாம் .

      • Ok, I’ll answer to all your queries

        YOU HAVE TO ‘NAME ME THE EXPERIMENT’ WHICH PROVED HELIOCENTRIC THEORY?

        CAN’T YOU PROVIDE THAT INFORMATION?

        What is your answer to Michelson-Morley ?

        What is your answer to Faucalt Pendulum ?

        What is your answer to Airy’s failure?

        All the experiments mentioned above are related to ‘Science’ purely. They did not come out of imagination.

        If you got the answer for those questions let me know that please

        I won’t run away. Answers for your other queries will follow shortly

        Will check-mate you soon. Don’t forget. Mark these words

          • I did not see jupiter or venus. If you could take video and attach I’ll be happy. thank you

            I am not here to spend my time on non-sense

      • Please note that I am not asking about the ‘heliocentric theory’

        I am asking about the ‘Scientific experiment’ which proved ‘heliocentric theory’

        Answer to question ‘related to bird’ is simply awesome. Have you heard about ‘chaos theory’????

        Don’t worry I’ll not run away.

      • So, You won’t answer for any of the questions related to ‘scientific experiments’ raised by me

        and you’re asking me to refer the books. I agree I am not a scientist. I am not a FOOL

        YOU GOT TO PROVIDE ME THE NAME OF THE ‘SCIENTIFIC EXPERIMENT’ WHICH PROVED ‘HELIOCENTRIC THEORY’

        Mind your words first. AM I A FOOL???? DON’T I HAVE ANY COMMON-SENSE ????

        WHAT SORT OF REPLY DID YOU GIVE TO ‘BIRD SCENARIO’?

        FIRST OF ALL DO YOU KNOW WHY I RAISED THAT QUESTION ???

        YOU GOT TO PROVIDE ME THE NAME OF THE ‘SCIENTIFIC EXPERIMENT’ WHICH PROVED ‘HELIOCENTRIC THEORY’

        EVEN IN CASE IF YOU PROVIDE THE ‘NAME OF THE SCIENTIFIC EXPERIMENT’ I’LL FIRE UP THE NEXT SET OF QUESTIONS TO YOU. BE READY!!!!

      • // இயற்கையிலேயே விவரம் தெரியாமல் ஆனால் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு வகை .

        விவரம் தெரியாமல் ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாமல் , அதை மூடி மறைத்து , வார்த்தை ஜாலத்தால் மேதாவித்தனத்தை நிலை நாட்டுபவர் இன்னொரு வகை . இந்த வகை ஆசாமிகளுக்கு ஸ்பூனில் ஓட்டினாலும் சாப்பிட்டு கொண்டே சாப்பாடு சரி இல்லை என்று ஏகடியம் பேசுவார்கள் . இவர்களுக்கு பொதுவாக நான் பதில் அழிப்பது இல்லை .

        ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகள் என்று நினைப்பவர்கள் , சதீஸ் ஐயாவை பார்த்து தெளிவீர்களாக .

        உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் புத்தகம் படியுங்கள் . உங்களை போன்ற அனைத்தும் தெரிந்த மேதாவிகளோடு பேசி எனது நேரத்தை விரயமாகக் நான் விரும்பவில்லை

        கடைசியாக இந்திரா காந்தி செத்துட்டாங்களா ? என்பது போல பூமி நடுவுல இருக்கு என்று ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கேள்விகளை விவாதிக்கும் நீங்கள் எங்கே கல்வி ப்யிண்றீர்கள் , என்ன மாதிரியான ஆள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் கற்காலத்தில் இருக்கிறீர்கள் என்பதை சுட்டி கூட்டுபவர்களுக்கு நன்றி கூறுங்கள் //

        முதலில் நீங்கள் செய்ய வேண்டியது (அல்லது) எனக்கு சொல்ல வேண்டியது ‘எந்த அறிவியல் செயல்மாதிரியின்’ படி ‘சூரிய மைய்ய கொள்கை’ நிரூபிக்கப்பட்டுள்ளது???

        முதல் அதன் ‘பெயரை’ சொல்லுங்கள். அதை சொல்லாமல் ஏன் நீட்டி முழக்குகிறீர்கள் ????

        உங்களுக்கு தான் நிறைய அறிவு இருக்கிறதேய ‘அறிவியல் செயல்மாதிரியின்’ பெயரை சொல்லவேண்டியது தானே ? எது உங்களை தடுக்கிறது ?

        // 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் உங்கள் பேருந்தில் ஒரு ஈ ஒரு சீட்டில்சீ இருந்து இன்னொரு சீட்டிற்கு சென்று வருகிறது . அது எப்படி ? //

        நான் என்ன கேள்வி கேட்டு இருக்கிறேன்? எதற்காக கேட்டு இருக்கிறேன் என்று தெரியாமலே பதில் அளித்துளீர்கள்.

        ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ‘Open earth’ மற்றும் ‘Closed earth’ தியரி தெரியாமல் அந்த கேள்விக்கு ‘பதில் சொல்ல முடியாது.

        ‘Open earth’ மற்றும் ‘Closed earth’ தெரிந்தாலும் கூட அந்த கேள்விக்கு பதில் சொல்வது என்பது குதிரை கொம்பானது.

        // சூரிய சித்தாந்தா என்கின்ற புத்தகம் மூலம் தான் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. அது சூரிய நடுநிலை கொண்டது.// – நன்றி

        // மன்னிக்கவும் , நீங்கள் மிகவும் பின்தங்கி கற்காலத்தில் இருக்கிறீர்கள் என்பதை பிறர் சொல்ல கேட்கும் பொழுது கசப்பாகத்தான் இருக்கும் . உங்களை காமெடி பீஸாக வைத்து பொழுது போக்காமல் , உங்களுக்கு உதவிதான் செய்துள்ளேன் .

        புத்தகத்தை படிக்காமல் இந்த பின்னூட்டத்திற்கு பதில் அளிக்க வேண்டாம் .//

        முதலில் கேட்ட கேள்விக்கு பதில் வரும் வரை அதையே நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் கேட்பேன்

        ‘எந்த அறிவியல் செயல்மாதிரியின்’ படி ‘சூரிய மைய்ய கொள்கை’ நிரூபிக்கப்பட்டுள்ளது??? ‘எந்த அறிவியல் செயல்மாதிரியின்’ படி ‘சூரிய மைய்ய கொள்கை’ நிரூபிக்கப்பட்டுள்ளது??? ‘எந்த அறிவியல் செயல்மாதிரியின்’ படி ‘சூரிய மைய்ய கொள்கை’ நிரூபிக்கப்பட்டுள்ளது???

        நன்றி

      • // இந்த மாதிரியான இட்டு கட்டி விவாதிக்கும் ஏமாற்று வேலையை செய்து விவாதத்தில் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணாமல் , அறிவை தேடுங்கள். //

        இதை நீங்கள் எனக்கு சொல்வதற்கு முன், நான் கேட்ட கேள்விகளுக்கும், நான் கொடுத்த ‘லிங்கில்’ உள்ள வினாவிற்கும் பதில் தாருங்கள்

        • @ Satish

          You are too Smart! This article is about பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்டுவோம. You had hijacked like a ‘bakt’ to totally irrelevant things to the article.

          • Dear KKN,,

            I did not hijack anything. When discussing about ‘rationalism’ (???) I mentioned few things and Mr ‘Sindhanai Sei’ was attracted towards that

            Even if I am a ‘Bhakt’ (as you label them) I need not to worry. Because, atleast I didn’t harm anybody

            Thanks

          • @@@KKN, I noticed one thing about ‘rationalists’ in this post

            They keep raising queries (or) advicing ‘bhakts’ (as you label us) but does not respond to questions raised by ‘bhakts’.

            Not sure why ? Is rationalism one-way ?

            • @KKN

              இந்த ‘வினவு’ தளத்தில் நானும், திரு சிந்தனை செய் அவர்களும் ஏதோ எங்களுக்கு தெரிந்ததை விவாதித்து கொண்டு இருக்கிறோம்

              ‘வினவும்’ சரி இவர்கள் ஏதோ விவாதித்து விட்டு போகட்டும் என்று அனுமதிக்கறது. இதில் உங்களுக்கு என்ன ‘சிக்கல்’ என்று தெரியவில்லை

              தலைப்புக்கு சம்பந்தம் இல்லாதது என்று கூறுகிறீர்கள். இது வரை நடைபெற்ற அத்தனை விவாதங்களும் ‘தலைப்பை’ ஒட்டி தான் நடைபெற்றதா ?

              விவாதம் என்றால் ‘track’ மாறும். மீண்டும் ‘trackக்கு’ வரும். இதெல்லாம் எல்லா விவாதங்களிலும் இயல்பாக நடக்க கூடிய ஒன்று. டிவி விவாதங்கள் இதற்க்கு சிறந்த உதாரணம்

              உங்களுக்கு ‘இந்து மதத்தை’, விமர்சித்து கொண்டு இருந்தால் தேவலை. உங்களுக்கு எல்லாமே ‘bakths’ ஆக தான் தெரிகிறது போலும் 🙂

  8. திரு. சதீஷ்,

    தங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது பேசுவோம். ஒரு வேலை இங்கு முடியவில்லை என்றால், எனக்கு ping செய்யவும். என்னுடைய contact details தருகிறேன். நாம் கண்டிப்பாக பேசுவோம். எப்போது வேண்டுமானாலும் ping செய்யவும்.

    • கண்டிப்பாக விவாதிப்போம் ஐயா. விஞ்ஞான நிரூபணம் என்பது பல விஷயங்கள் ‘தாற்காலிகமானதாகவே’ உள்ளது என்பது தங்களுக்கு தெரிந்ததே

      ‘சூரிய மைய கொள்கையும்’ அதை போன்றதே. அதிலும் ஏராளமான ‘ஓட்டைகள்’ உள்ளன

      இங்குள்ள பகுத்தறிவாதிகள் ‘ஆன்மிகம்-ஜோதிடத்தை’ மட்டுமே கேள்வி கேட்பவர்களாக இருக்கிறார்கள்

      என்னை பொறுத்த வரை பகுத்தறிவு என்பது ‘நம்மால் முடிந்த அளவு’ ஒரு விஷயத்தை படித்து தெரிந்து கொண்டு ‘அதில் உள்ள நல்லவைகளை’ எடுத்த கொள்ள வேண்டும்.

      நன்றி

      • பூமி உருண்டை என்பதே ஏமாற்று வாதம் . பூமி உருண்டை என்றால் கடல் நீர் எப்படி ஒரே இடத்தில இருக்கும். அதை விட முட்டாள்தனம் பூமி சுற்றுவது என்பது , பூமி சுத்தினால் கடல் நீர் பறந்து போகாதா ?

        யாருகிட்ட ? நல்லா கேளுங்க சதீசு ஐயா ! தமிழகத்தில் அடுத்த ஐன்ஸ்ட்டின் உருவாகிவிட்டார் 🙂

        தங்களின் மேலான மெய்ஞான ஆராய்ச்சி மூலமாக தட்டையான பூமியை சூரியன் சுற்றிவருகிறது என்பதை எப்பொழுது நிரூபிப்பீர் என்ற ஆவலோடு காத்துகொண்டு உள்ளோம்.

        எதற்கும் ஐயா அவர்கள் கல்வெட்டு ஒன்றை நட்டு பக்கத்திலேயே நிற்கவும், இல்லை என்றால் வெளிநாட்டினர் உங்கள் கருத்துக்களை திருடும் அபாயம் உள்ளது .
        🙂 🙂 🙂

        பின்குறிப்பு : நீங்கள் உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் , சிந்தனை செய் உங்களுக்கு அறிவு புகட்ட முயற்சிக்கிறார் . அவர் உங்களோடு விவாதம் செய்வதாக தவறாக நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

        நீங்கள் எங்கே கல்வி கற்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். நம் கல்விமுறை எப்படி பட்ட “பகுத்தறிவவாதிகளை ” உருவாக்கி வைத்துள்ளது என்பதை காணும் பொழுது மிகவும் கவலையாக உள்ளது .

        • Dear Mr Raman,

          I’d taken an exception this time. முதலில் விவாதத்தில் நேர்மை வேண்டும்

          // பூமி உருண்டை என்பதே ஏமாற்று வாதம் . பூமி உருண்டை என்றால் கடல் நீர் எப்படி ஒரே இடத்தில இருக்கும். அதை விட முட்டாள்தனம் பூமி சுற்றுவது என்பது , பூமி சுத்தினால் கடல் நீர் பறந்து போகாதா ?

          யாருகிட்ட ? நல்லா கேளுங்க சதீசு ஐயா ! தமிழகத்தில் அடுத்த ஐன்ஸ்ட்டின் உருவாகிவிட்டார் ?//

          Where did I mention about ‘flat theory’. Don’t assume things. If I am wrong point that to me

          // தங்களின் மேலான மெய்ஞான ஆராய்ச்சி மூலமாக தட்டையான பூமியை சூரியன் சுற்றிவருகிறது என்பதை எப்பொழுது நிரூபிப்பீர் என்ற ஆவலோடு காத்துகொண்டு உள்ளோம். ///

          I am asking you very simple questions

          1) Please point me the ‘experiment’ which proved ‘heliocentric theory’. இதை சொல்வதில் தங்களுக்கு என்ன சிக்கல் என்று புரியவில்லை ? சிந்தனை செய் அவர்களே தங்களுக்காவது இது தெரியுமா ? இல்லை இந்த கேள்வியில் ஏதேனும் தவறு உள்ளதா? அல்லது எனக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

          2) What’s your answer to the question raised by ‘astronomy expert’ in the link provided above? Is he a fool? Do you think so ?

          WILL YOU PROVIDE ANSWERS FOR THOSE OR NOT? TELL THAT FIRST

          கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தங்களுக்கு ‘திராணி’ இருக்கிறதா? இல்லையா ? பதில் தெரியுமா? தெரியாதா?

          If you don’t know the answer you have to accept you don’t know.

          Are you trying to teach ‘science’ to 40-year experienced ‘astronomist’.. நீங்கள் 40 வருட அனுபவ வாய்ந்த ‘astronomistகு’ பாடம் எடுக்கிறீர்களா ? கொஞ்சம் கூட யோசிக்காமல் எனக்கு அறிவுரை வேறு

          உங்களுக்கு திராணி இருந்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்லி தங்கள் புத்திசாலித்தனத்தை நிரூபிக்க வேண்டியது தானே ?

          You are not kidding me, instead you are kidding ‘astronomist’

          // தங்களின் மேலான மெய்ஞான ஆராய்ச்சி மூலமாக தட்டையான பூமியை சூரியன் சுற்றிவருகிறது என்பதை எப்பொழுது நிரூபிப்பீர் என்ற ஆவலோடு காத்துகொண்டு உள்ளோம். // I’ll provide you my dear sir. Wait till Monday. Why till nonday? To provide you a chance to answer for the 40-year experienced astronomy

          சிந்தனை செய் அவர்கள் எனக்கு புத்தி புகட்டுவாரா என்பது எனக்கு தெரியாது.

          ஆனால் நான் பகிர போகும் ‘இணையதளம்’ உங்களுக்கு புத்தி புகட்டதான் போகிறது .

          இவன் எல்லாம் என்னடா சொல்லிவிட போகிறான் என்கிற ஏளனம் தானே ?

          ஒருவன் ‘ஒரு முறைக்கு பல முறைகள் சொல்கிறான்’ என்றால் விஷயம் இல்லாமல் சொல்ல மாட்டான் என்கிற அடிப்படை ‘அறிவு’ கூட இல்லாமல் என்னிடம் விவாதிக்கிறீர்கள். நீங்கள் எங்கே படித்தீர்கள் ?

          // எதற்கும் ஐயா அவர்கள் கல்வெட்டு ஒன்றை நட்டு பக்கத்திலேயே நிற்கவும், இல்லை என்றால் வெளிநாட்டினர் உங்கள் கருத்துக்களை திருடும் அபாயம் உள்ளது .// Keep one ready for you with your comments

          // நீங்கள் எங்கே கல்வி கற்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். நம் கல்விமுறை எப்படி பட்ட “பகுத்தறிவவாதிகளை ” உருவாக்கி வைத்துள்ளது என்பதை காணும் பொழுது மிகவும் கவலையாக உள்ளது .// – ‘ll let you know for you where I studied. Why you are bothered about it?

          ஆனால் தாங்கள் ‘பறவை’ எப்படி கூட்டை கண்டுபிக்கிறது என்கிற ‘பதிலை’ தாங்கள் ‘கல்வெட்டில்’ பதித்து கொள்ளுங்கள். விஞ்ஞானிகளுக்கு உபயோகப்படும். ஏனெனில் ‘விஞ்ஞானிகள்’ அதை எப்போதோ ‘chaos theory இல்’ சேர்த்து விட்டார்கள் :-).

          விஞ்ஞானிகளுக்கு தெரியாத பதிலை சொன்னதால் நான் ‘ஐன்ஸடீனா’ அல்லது நீங்கள் ‘ஐன்ஸடீனா’ என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எங்கே கல்வி பயின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்? ஏனெனில் விஞ்ஞானிகளுக்கு தெரியாத பதிலையே தாங்கள் சொல்லி உள்ளீர்கள் அல்லவா ?

          முதலில் சொன்ன பூமி மைய்ய கொள்கை தான் சரி என்றால் பின்பு ஏன் ‘சூரிய மைய கொள்கை’ உருவாக்க பட்டது ?. பூமி மைய்ய கொள்கையை பிடித்து தொங்க வேண்டியது தானே ?

          தங்களின் ‘அதிமேதாவி’ தனத்தை என்னிடம் காட்டுங்கள் பரவாயில்லை.

          ஆனால் நான் பகிர போகும் ‘இணையதளத்தில்’ காட்டாதீர்கள். மீண்டும் சொல்கிறேன் தங்களின் ‘அதிமேதாவி’ தனத்தை என்னிடம் மட்டுமே காட்டுங்கள்

          இதில் எனக்கு அறிவுரை வேறு. யாரு non-sense என்பது வரும் திங்கட்கிழமை தெரியத்தான் போகிறது அப்போது பார்க்கலாம் தங்கள் முகத்தை எங்கு வைத்து கொள்ள போகிறீர்கள் என்று

          அந்த தளத்தில் உள்ள விவாதத்திற்கு எத்தனை ‘ராமன்’, ‘சிந்தனை செய்’, ‘KKN’ வந்தாலும் நான் அதை பொருட்டாகவே மதிக்கப்போவதில்லை

          தாங்களும் அந்த தளத்தில் கேள்விகள் கேட்கலாம். தங்களுக்கும் கண்டிப்பாக பதில் கிடைக்கும். எனவே கவலை வேண்டாம்/ ஆனால் என்ன, அவர்களிடம் சற்று அடக்கி வாசியுங்கள்/ என்னிடம் காட்டிய ‘அதிமேதாவி தனத்தை’ அவர்களிடம் காட்ட வேண்டாம் என்று பணிவுடன் மீண்டும் ஒரு முறை கேட்டு கொள்கிறேன்

          விஞ்ஞானத்தையும் சேர்த்து கேள்வி கேட்டு இருந்தால் நீங்களே தெளிந்து இருப்பீர்கள். ஆனால் ‘selective-amnesia’ உள்ளவர்களுக்கு விஞ்ஞானத்தை கேள்வி கேட்க மாட்டார்கள் என்று தெரியும் எனக்கு

          முடிந்தால் நான் கேட்ட கேள்விகளுக்கு ‘நீங்களும்’, ‘சிந்தனை செய்’ அவர்களும் வரும் திங்கட்கிழமைக்குள் ‘பதில்’ அளிக்க முயற்சியுங்கள். மிகவும் எளிமையான கேள்விகளை தான் கேட்டு உள்ளேன் நான்

          நீங்கள் எல்லோரும் பகுத்தறிவாதி தானே? கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு என்ன தயக்கம்? நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் இந்நேரம் ‘தாங்களோ’ (அல்லது) ‘சிந்தனை செய்’ பதில் சொல்லி இருக்க வேண்டாமா ?

          நன்றி

        • // பூமி உருண்டை என்பதே ஏமாற்று வாதம் . பூமி உருண்டை என்றால் கடல் நீர் எப்படி ஒரே இடத்தில இருக்கும். அதை விட முட்டாள்தனம் பூமி சுற்றுவது என்பது , பூமி சுத்தினால் கடல் நீர் பறந்து போகாதா ? //

          கேட்ட கேள்விக்கு தான் பதில் அளிக்க முடியவில்லை தங்களால். நான் போட்ட கமெண்டை கூட தாங்கள் தவற விட்டு விட்டீர்களே ‘ராமன் ஐயா’ அவர்களே

          நான் ‘flat earth’ பற்றி எங்கே குறிப்பிட்டு உள்ளேன் ? தயவு செய்து அதை ‘பதியவும்’

          // பின்குறிப்பு : நீங்கள் உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் , சிந்தனை செய் உங்களுக்கு அறிவு புகட்ட முயற்சிக்கிறார் . அவர் உங்களோடு விவாதம் செய்வதாக தவறாக நினைத்து கொண்டு இருக்கிறீர்கள். // இதற்கு நான் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது

          இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன். என்ன ‘பகுத்தறிவாதிகள்’ என்றால் என்ன பெரிய கொம்பா ???
          பகுத்தறிவாதிகள் என்ன ‘பகுத்தறிவு’, ‘பொது அறிவு’, ‘அறிவியல் அறிவு’ இம்மூன்றையும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து உள்ளீர்களா ?

          அடுத்தவனுக்கு எப்போதும் பாடம் புகட்டி கொண்டே இருக்கமுடியாது என்பது கூட தெரியாதா ?

          ‘ ஓடமும் வண்டியில் ஏறும் , வண்டியும் ஓடத்தில் ஏறும் ‘

          இதில் நக்கல், நய்யாண்டி வேறு. கேள்விக்கு பதில் தெரியாவிட்டாலும் நக்கல், நய்யாண்டிக்கு குறைச்சல் இல்லை

        • பூமியின் அடர்த்தியும், கடலின் அடர்த்தியும், காற்று மண்டலித்தின் அடர்த்தியும் வெவேறானது தானே ? இவை எல்லாம் ஒரு சேர எப்படி சுற்ற முடியும் ?

          எந்த பௌதிக விதியின்’ கீழ் இது சாத்தியமாகிறது ? அந்த ‘பௌதிக விதியை’ குறிப்பிடவும்.

          • அடர்த்தி=density. எனக்கு தேவை ‘பௌதிக விதியின் பெயர் அவ்வளவே’

            ‘பௌதிக விதி தெரிந்தால் சொல்லவும்’. இல்லையேல் இல்லை என்று சொல்லவும். நீட்டி முழக்க வேண்டாம்

        • சிறு திருத்தம்
          ==============

          பூமியின் (Solid state) அடர்த்தியும், கடலின் (Liquid state) அடர்த்தியும், காற்று மண்டலித்தின் (Gaseous state) அடர்த்தியும் வெவேறானது தானே ? இவை எல்லாம் ‘ஒரு சேர ஒரே வேகத்தில்’ எப்படி சுற்ற முடியும் ?

          எந்த பௌதிக விதியின்’ கீழ் இது சாத்தியமாகிறது ? அந்த ‘பௌதிக விதியை’ குறிப்பிடவும்.

        • // பின்குறிப்பு : நீங்கள் உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் , சிந்தனை செய் உங்களுக்கு அறிவு புகட்ட முயற்சிக்கிறார் . அவர் உங்களோடு விவாதம் செய்வதாக தவறாக நினைத்து கொண்டு இருக்கிறீர்கள். //

          சிந்தனை செய் அவர்கள் தற்போதைக்கு எனக்கு பாடம் புகட்ட முடியாது

          ஏனென்றால் அவர் இப்போது தான் Ptolemy பற்றி தேட ஆரம்பித்து 1ம் வகுப்பில் இருக்கிறார். நான் 5ம் வகுப்பில் இருக்கிறேன்.

          ‘சிந்தனை செய்’ அவர்கள் என்னுடன் ‘catch-up’ செய்வதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று (week) காலங்களாவது பிடிக்கும்

  9. @@@சிந்தனை செய்

    நான் இந்த வார இறுதி வரை சூரிய மய்யம்’ சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ‘பகுத்தறிவாதிகளிடம்’ பதில் வருகிறதா என்று காத்திருப்பேன்

    பார்க்கலாம் என்னை கற்கால மனிதன், அதிமேதாவி, ஒன்றும் தெரியாதவன், பக்த் என்றெல்லாம் விமர்சித்தவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று

    அப்படி யாரும் பதில் அளிக்க வில்லை என்றால் நான் ‘மொத்த’ தகவல்களையும் இங்கேயே பகிர்கிறேன்

    • அறியாமையில் உளறுபவர்கள் வேறு . அவர்கள் அப்பாவிகள் . கற்றது கையளவு கல்லாதது உலக அளவு . ஆனால் நீங்களோ மதத்தை விற்க வேண்டும் என்னும் ஆசையில் , கண்ட கண்ட கல்ட் வெப்சைட்டுக்குகளை படித்து உங்கள் மதத்தை வியாபாரம் செய்யும் ஆசையில் உள்ளீர் போல் உள்ளது .

      முதலில் கிரகங்களை கண்களால் பார்க்க முடியாது என்று கூறினீர்கள் , பிறகு அதை எப்படி பார்ப்பது என்று கூறிய பிறகு அது நான்சென்ஸ் ஆகா போய்விட்டது . சிலது எல்லாம் புரிவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் . எதுவுமே பண்ண மாட்டேன் என்றால் ?

      நீங்கள் வித்தியாசமான ஒரு கல்ட் கூட்டத்தில் மாட்டி இருக்கிறீர்கள் . உங்கள் சிற்றறிவுக்கு ( ?! ) புரியும் வகையில் கதை சொல்லி உங்களை நன்றாக காமெடி பீஸாக்கி விட்டார்கள் .

      இப்பொழுது பூமி சுற்றவில்லை , எப்படி நிலம் நீர் காற்று சேர்ந்து சுற்றும் என்று கேட்கிறீர்கள் . பூமி தட்டை என்பது உங்கள் சிந்தனையில் அடுத்து உதிக்கும் , அதை நான் முன்பே கண்டுபிடித்துவிட்டேன் 🙂

      இங்கே நீங்கள் நீங்கள் அறிவை தேடவில்லை . அறிவியலை மட்டம் தட்டி , உங்கள் மேன்மையை நிலை நிறுத்தி , பின்னர் மதம் , மெய்ஞ்ஞானம் போன்ற இத்யாதி ஸ்நேக் ஆயில் சமாச்சாரங்களை மதிப்பு கூட்ட முயற்சிக்கிறீர்கள் . அதனால் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை .

      அடுத்து உங்களுக்கு 40 வருட அஸ்ட்ரானாமி அறிவுள்ளவர் துணை இருக்கும் போது நாங்கள் என்ன சொல்லி தருவது ? 🙂 அங்கேயே உங்கள் அறிவு திறனை கூர் தீட்டுங்கள்.

      பின்குறிப்பு :
      பூமி படைக்கப்பட்டு 6000 வருடங்கள் தான் ஆகிறது
      ஆதாரம் இதோ 🙂
      https://answersingenesis.org/age-of-the-earth/how-old-is-the-earth/

      • // அறியாமையில் உளறுபவர்கள் வேறு . அவர்கள் அப்பாவிகள் . கற்றது கையளவு கல்லாதது உலக அளவு . ஆனால் நீங்களோ மதத்தை விற்க வேண்டும் என்னும் ஆசையில் , கண்ட கண்ட கல்ட் வெப்சைட்டுக்குகளை படித்து உங்கள் மதத்தை வியாபாரம் செய்யும் ஆசையில் உள்ளீர் போல் உள்ளது .//

        எல்லாவற்றையும் மதத்தோடு இணைத்து பார்ப்பது ‘பகுத்தறிவாதிகளின்’ speciality என்பது எனக்கு தெரியும். மதத்தை வைத்து வியாபாரம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கென்று ஒரு அறிவு இருக்கிறது, ஒரு தொழில் இருக்கிறது. அது என்னை காட்பாற்றும். உங்களின் குறுகிய சிந்தனையை விடுத்து நீங்கள் வெளிய வாருங்கள் முதலில். எனக்கு அப்புறம் அறிவுரை சொல்லலாம்

        // முதலில் கிரகங்களை கண்களால் பார்க்க முடியாது என்று கூறினீர்கள் , பிறகு அதை எப்படி பார்ப்பது என்று கூறிய பிறகு அது நான்சென்ஸ் ஆகா போய்விட்டது . சிலது எல்லாம் புரிவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் . எதுவுமே பண்ண மாட்டேன் என்றால் ? //

        நீங்கள் கூடத்தான் ‘பறவை’ கூட்டை கண்டுப்பிதற்கு சூப்பரான விளக்கம் ஒன்றை அளித்தீர்கள். அதெல்லாம் நான்-சென்ஸ்இல் சேராதா? நான் உங்களை போட்டோ எடுத்து attach செய்ய சொன்னேன். எங்கே அது??

        மேலும் நான் சொன்னது ‘naked-eyes’ தெளிவாக கண்ணுக்கு தெரிவது ‘சூரியன்-சந்திரன்’ மட்டுமே. இதையும் மறுப்பீர்களா ?

        // நீங்கள் வித்தியாசமான ஒரு கல்ட் கூட்டத்தில் மாட்டி இருக்கிறீர்கள் . உங்கள் சிற்றறிவுக்கு ( ?! ) புரியும் வகையில் கதை சொல்லி உங்களை நன்றாக காமெடி பீஸாக்கி விட்டார்கள் .

        இப்பொழுது பூமி சுற்றவில்லை , எப்படி நிலம் நீர் காற்று சேர்ந்து சுற்றும் என்று கேட்கிறீர்கள் . பூமி தட்டை என்பது உங்கள் சிந்தனையில் அடுத்து உதிக்கும் , அதை நான் முன்பே கண்டுபிடித்துவிட்டேன் ?//

        உங்களுடைய கண்டுபிடிப்பை உங்களோடு வைத்து கொள்ளுங்கள். மன்னிக்கவும். கேள்வியை சற்று திருத்தி உள்ளேன்

        பூமியின் (Solid state) அடர்த்தியும், கடலின் (Liquid state) அடர்த்தியும், காற்று மண்டலித்தின் (Gaseous state) அடர்த்தியும் வெவேறானது தானே ? இவை எல்லாம் ‘ஒரு சேர ஒரே வேகத்தில்’ எப்படி சுற்ற முடியும் ?

        ‘ஒரே வேகத்தில்’ என்பது தான் இங்கு முக்கியமானது. அதை மனதில் நிறுத்துங்கள்.

        கேள்வியை நன்றாக படித்து பார்த்து பதில் சொல்லவும் இது மிகவும் அடிப்படையான கேள்வி.

        ‘Flat earth theory’ மறந்து விடுங்கள். நான் ‘flat earth தியரி படித்ததில்லை. நீங்கள் மனதில் ‘flat earth’ theoryஐ வைத்து கொண்டு நான் என் தவறாக சொல்லுவதாக ஏன் வாதத்தை திசை திருப்புகிறீர்கள் ?

        // இங்கே நீங்கள் நீங்கள் அறிவை தேடவில்லை . அறிவியலை மட்டம் தட்டி , உங்கள் மேன்மையை நிலை நிறுத்தி , பின்னர் மதம் , மெய்ஞ்ஞானம் போன்ற இத்யாதி ஸ்நேக் ஆயில் சமாச்சாரங்களை மதிப்பு கூட்ட முயற்சிக்கிறீர்கள் . அதனால் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை .

        அடுத்து உங்களுக்கு 40 வருட அஸ்ட்ரானாமி அறிவுள்ளவர் துணை இருக்கும் போது நாங்கள் என்ன சொல்லி தருவது ? ? அங்கேயே உங்கள் அறிவு திறனை கூர் தீட்டுங்கள். //

        அறிவு திறனை நீங்களே மற்றவர்களுக்கு எவ்வளவு காலம் தான் தீட்டி கொண்டு இருப்பீர்கள். அதை விடுங்கள்.

        நீங்கள் உங்கள் முட்டாள்தனம், selective-amnesia தான் பகுத்தறிவாதம் என்று சொன்னால் அதை நாங்கள் ஏற்று கொள்ள வேண்டுமா ?

        // பின்குறிப்பு :
        பூமி படைக்கப்பட்டு 6000 வருடங்கள் தான் ஆகிறது
        ஆதாரம் இதோ ?
        https://answersingensis.org/age-of-the-earth/how-old-is-the-earth/ // – இதெல்லாம் ‘gult’ வெப்சைட் சேராதா ?

        ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிகிறது. கேள்விகளை யாருமே படிக்கவில்லை. கேள்விகளை புரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. ‘மதம்’, ‘flat earth theory’ என்று உங்கள் மனம் அதிலேயே லயித்து இருக்கிறது..

        இது வரை நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் வரவில்லை. மாறாக அறிவுரைகள் மட்டுமே பதில்களாக வருகிறது

        விஞ்ஞான ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க என்ன தயக்கம் ? நான் கேட்டது விஞ்ஞான ரீதியா கேள்விகள் தானே ? அவை விஞ்ஞானம் இல்லை என்று மறுப்பீர்களா ?

        ‘பௌதிக விதியின்’ பெயரை கேட்டல் சொல்ல வேண்டியது தானே ? அதை விடுத்து ‘பூமி தோன்றி 6000 வருடங்கள்’ ஆகிறது என்கிறீர். அதையே நான் கேட்டேன் ?

        அப்படியே ‘நான் சொன்னது அனைத்தும் தவறாக இருந்தாலும் கூட’ அந்த கேள்விகளுக்கு ‘விஞ்ஞான’ ரீதியான பதில்களை தானே சொல்ல வேண்டும். அது தானே பகுத்தறிவாதம்.

        எதற்கு மதத்தை விற்கிறேன் என்று விவாதத்தை திசை திருப்ப வேண்டும் ? ஏன் கேட்ட கேள்விகளுக்கு ‘விஞ்ஞான விளக்கங்களையும்’ ‘ஆதாரங்களையும்’ தர மறுக்கிறீர்கள் ?

        // all rotates nicely with earth // – இங்கே தான் பிரச்சனையை ஆரம்பமாகிறது

        இங்கே இந்த blogஇல் உண்மையான பகுத்தறிவாதிகள், விஞ்ஞானத்தை-விஞ்ஞானமாக மட்டும் பார்ப்பவர்கள் யாரேனும் உள்ளனரா ?

        • @@@sathish :
          The answer for your doubt set on the gravitational force for the earth. The gravitational force is a force that attracts any objects with mass. You, right now, are pulling on every other object in the entire universe! This is called Newton’s Universal Law of Gravitation. Gravity is most accurately described by the general theory of relativity (proposed by Albert Einstein in 1915) which describes gravity not as a force, but as a consequence of the curvature of spacetime caused by the uneven distribution of mass/energy.
          //பூமியின் (Solid state) அடர்த்தியும், கடலின் (Liquid state) அடர்த்தியும், காற்று மண்டலித்தின் (Gaseous state) அடர்த்தியும் வெவேறானது தானே ? இவை எல்லாம் ‘ஒரு சேர ஒரே வேகத்தில்’ எப்படி சுற்ற முடியும் ?//

  10. நான் கேட்ட கேள்விகளுக்கு ‘விஞ்ஞான ரீதியான’ பதில்களை எதிர்பார்க்கிறேன்.

    ‘நான் சொன்னது அனைத்தும் தவறாக இருந்தாலும் கூட’ அதை விஞ்ஞான காரணங்கள், விதிகளை கொண்டு விளக்க யாரேனும் இந்த blogல் உள்ளனரா ? (ராமனை தவிர்த்து)

    திருவாளர் ராமன் அவர்களுக்கு ‘விஞ்ஞான விளக்கங்கள் தரமாட்டாராம்’. அறிவுரைகள் மட்டுமே தருவாராம். சிந்தனை செய் அவர்களே நீங்களே ‘ராமனின்’ விஞ்ஞானமற்ற விளக்கங்களை ஏற்று கொள்கிறீர்களா ?

    ‘நான் சொன்னது அனைத்தும் தவறாக இருந்தாலும் கூட’ விஞ்ஞானத்தின் மூலமாகத்தானே பதில்கள் இருக்க வேண்டும். இதை எத்தனை பகுத்தறிவாதிகள் ஒப்பு கொள்கிறீர்கள் ?

    • At the equator, the circumference of the Earth is 40,070 kilometers, and the day is 24 hours long so the speed is 1670 kilometers/hour ( 1037 miles/hr). This decreases by the cosine of your latitude so that at a latitude of 45 degrees, cos(45) = .707 and the speed is .707 x 1670 = 1180 kilometers/hr. You can use this formula to find the speed of rotation at any latitude.

      • If I understand right, the basic calculation of ‘earth rotation’ itself is not correct in helio-centric theory.

        That’s why I pointed out the question which was asked by a 40-year experienced guy. The astronomist follow ‘geo-centric’ theory but not ‘flat earth’ theory

        Look at what he asked.

        // 99% of the time the earth is 30 times faster, except at the
        peculiar new moon phase where the moon and sun line up more exactly. Then is
        when the cosmic brakes are applied to the earth and the moonspeed overcomes the
        earth. Hmm. In case you were wondering, immediately after the solar eclipse,
        the earth resumes its 30 times faster speed again. Whose system is more
        incredulous? // –> Should we bye-pass this question before accepting helio-centric model?

        If you understand or already aware of the ‘rotation’ process / periods of planet this will be straight-forward to you. Though the question is related to solar-eclipse it explains the basic ‘rotational calculation’ of earth before moving on the question of ‘solar-eclipse’

        I am not sure why a person should accept ‘helio-centric theory’ when it has basic arithmetic error in rotation calculation

        If you justify the calculation I am ready to accept it

        Entire question can be seen here

        https://www.freelists.org/post/geocentrism/solar-eclipse-explanation-failure

        • Yes earth rotation is slowed ! But What way it against the helio-centric theory!

          Each century, the length of the solar day, or the time it takes the planet to do a full rotation, grows by 1.8 milliseconds, according to a new study using astronomical observations going back to 750 B.C. Researchers have known that the planet’s rotation is slowing because of friction caused by the tides, as water that’s being tugged on by the moon’s gravity sloshes against the solid Earth. However, measurements of this tidal effect suggest that the planet should be slowing in its rotation by 2.3 milliseconds per century, slightly more than the new research finds.

          The difference between 2.3 milliseconds and 1.8 milliseconds over a century may seem trivial, said study researcher Leslie Morrison, who worked at the Royal Greenwich Observatory for nearly 40 years. But those fractions of milliseconds are important for understanding the ways that the Earth has changed shape since the end of the last ice age, about 12,000 years ago, Morrison told Live Science.

          • I am really sorry to say this and it’s unfortunate that I am not with you in person. Otherwise, I could have explained that question

            If I understand right that was not related to ‘slow down of objects’. No matter whether it’s normal or slow down the question asked by that expert ‘will remain same’ which clearly explains the ‘basic geometric error’ in helio-centric theory

            The question was relatively straight forward. But it was bit lengthy which might have confused you

            Believe me you need not to be a scientist to understand that question. Even if you know the basics of ‘astrology’ you can understand that question well

            • First you clear you foolish confusions about the earth science ! Since in practical every system are open model they will be affected by others ! During ‘solar-eclipse’ the earth rotation is affected my moon interference ! so the earth is slowing in its rotation by 2.3 milliseconds per century.

              Now tell me how this slowing is against the helio-centric theory! ?

  11. திருவாளர் ராமன் தவிர்த்து நான் கீழே குறிப்பிட்டவற்றிற்கு ‘விஞ்ஞான ரீதியான’ விளக்கங்களை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்

    நீங்கள் கேட்ட கேள்விகளை நான் புரிந்து கொண்டேன். உங்களின் கேள்விகளில் இந்தந்த ‘விஞ்ஞான ரீதியான’ தவறு உள்ளது. அதை ‘விஞ்ஞானம் கொண்டே’ நான் சுட்டி காட்ட விரும்புகிறேன் என்று ‘விஞ்ஞானத்தை’ மட்டுமே ‘அடிப்படையாக’ வைத்து யாரேனும் விளக்கம் தர தயாரா ?

    1) இந்த விஞ்ஞான ‘ஆதாரத்தின் படி’ பூமி சுற்றுகிறது.

    2) இந்த ‘பௌதிக விதியின்’ கீழ் அனைத்தும் ‘ஒரு சேர ஒரே வேகத்தில்’ சுற்றுகிறது என்று விஞ்ஞான விளக்கம் தர யாரவது இருக்கிறீர்களா ?

    3) இந்த விஞ்ஞான விதிப்படி 40 வருட அனுபவமுள்ளவர் கேட்ட கேள்வி தவறு என்று விளக்க முடியுமா

    மேலே சொன்னவற்றிற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன்.

    பதில்கள் சரியா? தவறா ? என்பதை பிறகு விவாதிப்போம். முதலில் ‘விஞ்ஞான ரீதியான’ பதில்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன்

    NANDRI

    • We can’t feel Earth’s rotation or spin because we’re all moving with it, at the same constant speed. Earth spins on its axis once in every 24-hour day. At Earth’s equator, the speed of Earth’s spin is about 1,000 miles per hour (1,600 kph). The day-night has carried you around in a grand circle under the stars every day of your life, and yet you don’t feel Earth spinning. Why not? It’s because you and everything else – including Earth’s oceans and atmosphere – are spinning along with the Earth at the same constant speed. It’s only if Earth stopped spinning, suddenly, that we’d feel it. Then it would be a feeling similar to riding along in a fast car, and having someone slam on the brakes!

      Think about riding in a car or flying in a plane. As long as the ride is going smoothly, you can almost convince yourself you’re not moving. A jumbo jet flies at about 500 miles per hour (about 800 km per hour), or about half as fast as the Earth spins at its equator. But, while you’re riding on that jet, if you close your eyes, you don’t feel like you’re moving at all. And when the flight attendant comes by and pours coffee into your cup, the coffee doesn’t fly to the back of the plane. That’s because the coffee, the cup and you are all moving at the same rate as the plane.
      //இந்த ‘பௌதிக விதியின்’ கீழ் அனைத்தும் ‘ஒரு சேர ஒரே வேகத்தில்’ சுற்றுகிறது என்று விஞ்ஞான விளக்கம் தர யாரவது இருக்கிறீர்களா ?//

      • // We can’t feel Earth’s rotation or spin because we’re all moving with it, at the same constant speed. Earth spins on its axis once in every 24-hour day. At Earth’s equator, the speed of Earth’s spin is about 1,000 miles per hour (1,600 kph). The day-night has carried you around in a grand circle under the stars every day of your life, and yet you don’t feel Earth spinning. Why not? It’s because you and everything else – including Earth’s oceans and atmosphere – are spinning along with the Earth at the same constant speed. It’s only if Earth stopped spinning, suddenly, that we’d feel it. Then it would be a feeling similar to riding along in a fast car, and having someone slam on the brakes! //

        Ok. Thank you. First of all thank you for coming out of religion, caste and answering my question in a scientific way

        // Think about riding in a car or flying in a plane. As long as the ride is going smoothly, you can almost convince yourself you’re not moving. A jumbo jet flies at about 500 miles per hour (about 800 km per hour), or about half as fast as the Earth spins at its equator. But, while you’re riding on that jet, if you close your eyes, you don’t feel like you’re moving at all. And when the flight attendant comes by and pours coffee into your cup, the coffee doesn’t fly to the back of the plane. That’s because the coffee, the cup and you are all moving at the same rate as the plane. //

        Do you follow open-earth model or closed-earth model? If I am not wrong you answer suggests that you feel ‘closed-earth model’. What model heliocentric follows? Open earth or closed earth ?

        If helio-centric theory follows ‘closed earth model’ your answer is acceptable. But, you need to answer for other queries then which is a different story. If I am not wrong helio-centric theory follows ‘Open earth model’. Isn’t it a contradiction between you answer and helio-centric model then?

        // including Earth’s oceans and atmosphere – are spinning along with the Earth at the same constant speed // – I’ve replied to this to your other reply

        • And is there any information at which altitude (1,00,000 ft ? 2,00,000 ft or above) a person can see the ‘rotation of earth’

          Is there any information from astronauts?

          Thanks a lot

        • Your hidden agenda is propagating religion and its fakes and wrong beliefs ! Your first discussion in this eaasy clearly shows your attitude !
          //Ok. Thank you. First of all thank you for coming out of religion, caste and answering my question in a scientific way//

          How can a heliocentric model is closed one? Think!

          It is open system where sun is centered and other plants are involved in this system ! Try to explain what is the contradiction in my answer!

          • // Your hidden agenda is propagating religion and its fakes and wrong beliefs ! Your first discussion in this eaasy clearly shows your attitude ! //

            I am not here to discuss about this. That rules applies to other religions where they believe in quran and bible. But, I don’t belong to that religion

            //How can a heliocentric model is closed one? Think!

            It is open system where sun is centered and other plants are involved in this system ! Try to explain what is the contradiction in my answer! //

            Please point me the ‘text’ in which / where I mentioned ‘helio centric theory’ follows closed-earth so that I can correct the text before proceeding further

            Instead I mentioned ‘If I am not wrong helio-centric theory follows ‘Open earth model’.

            Please correct me if I am wrong

          • // How can a heliocentric model is closed one? Think! //

            If I understand right ‘The reply what you mentioned in section 12.1.1’ is applicable for closed-earth theory

            Other rationalists cam shed some light on this

            // Think about riding in a car or flying in a plane // – Let’s see what you replied. Travelling in ‘car’ or ‘flight’ represents closed area (or for easier understanding ‘closed earth’)

            As you also agreed ‘heliocentric theory’ follows ‘open earth model’ don’t you feel it’s contradictory?

          • In closed-earth theory, I need not have to a wind-shield to protect me when I walk down our market area. Because I always move with everything else (earth and earth’s atmosphere). I don’t see any difference and feel anything wrong

            What about the scenario mentioned above in open-earth? Please explain

          • Let us assume ‘all rotates well’ including solid, water and gas regardless of the contradiction between ‘gravity’ and ‘aerodynamics’

            Do you feel ‘earth atmosphere’ spins along with the earth? If yes, please go through the following links

            https://physics.stackexchange.com/questions/1193/why-does-the-atmosphere-rotate-along-with-the-earth
            https://www.youtube.com/watch?v=NwosMypQXwI

            Lets assume whatever said is false and the explanation provided in the links are NULL and VOID

            If ‘earths atmosphere’ rotates nicely with ‘earth and sea’ why are we seeing ‘passing clouds’ from different directions?

            Or does ‘passing clouds’ defies ‘earth’s gravity and ‘rotational theory’? Please explain

            • Passing clouds ! You rally do not understand the reason! The air that force moves the clouds ! Think about this! We are in earth! It rotates at the specified speed ! You raid on a bike with 80 Km speed! What is your speed ? It is earth rotation speed + 80km

              Next think about the jet flight with 700km speed!

              What is the speed of the flight? It is earth rotation speed + 700km….

              The specified rotation speed of the earth is depend on latitude! I explain this in feedback 11.1 already

            • ஏரோ டைனமிக்ஸ் பற்றி பேசும் உங்களுக்கு மேகங்கள் ஏன் நகர்கின்றன என்ற விசயத்தில் எப்படி சந்தேகம் வந்தது….! ? புவியின் ஈர்ப்பு விசை, காற்றின் விசை ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிந்திக்க உங்களை தடுக்கும் சக்தி எது?

  12. மீண்டும் மீண்டும் அதே கேள்வியை பதிகிறேன்

    (1) பூமியின் (Solid state) அடர்த்தியும், கடலின் (Liquid state) அடர்த்தியும், காற்று மண்டலித்தின் (Gaseous state) அடர்த்தியும் வெவேறானது தானே ? இவை எல்லாம் ‘ஒரு சேர ஒரே வேகத்தில்’ எப்படி சுற்ற முடியும் ?

    வெவேறான அடர்த்தையுடைய (different densities) ‘பூமி’, ‘கடல்’, ‘காற்று மண்டலம்’ இவை அனைத்தும் ‘ஒரு சேர ஒரே வேகத்தில்’ சுற்றுகிறது

    ‘ஒரே வேகத்தில்’ என்பது தான் இங்கு முக்கியமானது. அதை மனதில் நிறுத்துங்கள்.

    இது எந்த அறிவியல் (அல்லது) பௌதிக விதியின் படி சாத்தியமாகிறது ???

    (2) All rotates nicely with earth

    கேள்வியில் ‘விஞ்ஞானம்’ மட்டுமே உள்ளது. இதை ‘விஞ்ஞானம்’ இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது ?

    இப்போது (1) அண்ட் (2) இரண்டையும் ‘combine’ செய்து யோசித்து ‘விஞ்ஞான விளக்கம்’ மட்டுமே தரவும்

    • You may ask any number of times ! But the answer is it is happening just because of Gravity of the earth……

      Earth gravity : 9.807 m/s²
      Mars gravity : 3.711 m/s²
      Moon is about 1.625 m/s2

      Finally, “weight” is a measure of the gravitational pull between two objects. So of course you would weigh much less on the moon.

      Weight = Mass × Gravity

      if my weight is 75 kg in earth but is only Weight On the Moon: 12.40 kilograms
      (Weight on the Moon= (Weight on Earth/9.81m/s2) * 1.622m/s2.)

      • Thanks for specifying all the mass related information.

        You say ‘including Earth’s oceans and atmosphere – are spinning along with the Earth at the same constant speed’

        But what I am aware of is ‘basics of aerodynamics’ says that a ‘solid object’ (earth) does not carry less dense gas (earth’s atmosphere) with it. This is because ‘gas’ and ‘solid’ are of different densities

        That’s why I repeatedly ask for the ‘physics law’. Science laws cannot have contradictions between them

        Please let me know if I am wrong

        • ஏரோடைனமிக்ஸ் பேசுற உங்க மூளைக்கு இந்து மதத்தில் உள்ள முட்டாள் தனமான, அராஜகமான நம்பிக்கைகளான பசு மூத்திரம் குடிப்பது போன்ற விசயங்கள் பற்றி ஏதும் முரண்பாடு இல்லையா?

          • // What is aerodynamics?

            One of the most obvious differences between solids, liquids, and gases is their density: how many atoms of “stuff” there are in a given space. Solids and liquids are much more dense than gases //

            அந்த முதல் வரியை படிக்கவும். தாங்கள் ‘க்ராவிட்டி’ என்று கூறினீர்கள். அதை நான் ‘aerodynamics’ என்கிற ‘விஞ்ஞான’ (‘விஞ்ஞான ரீதியில்) மட்டுமே எதிர்த்தேன்

            சூரிய மைய கொள்கை நிரூபிக்கப்பட்ட ஒன்று தானே? அதை நீங்கள் just எனக்கு எடுத்து காட்ட வேண்டும் அவ்வளவு தான். என் பணியை விட தங்கள் பனி சுலபமானது தான்

            // இந்து மதத்தில் உள்ள முட்டாள் தனமான, அராஜகமான நம்பிக்கைகளான பசு மூத்திரம் குடிப்பது போன்ற விசயங்கள் பற்றி ஏதும் முரண்பாடு இல்லையா? //

            இந்து மதத்தில் உள்ள ‘பசு மூத்திரம் குடிப்பதை’ மட்டும் எதிர்க்க மாட்டேன். கூடவே சேர்ந்து ‘விஞ்ஞான வெறி’ பிடித்து அலையும் ‘செலக்ட் அம்னீஷியா’ உள்ளவர்களையும் எதிர்ப்பேன். எதையும் ஆதாரம் இல்லாமல் பேசுபவன் நானில்லை

            விஞ்ஞான ரீதியான விஷயத்தில் மதம் எப்படி வந்தது ? நீங்கள் பகுத்தறிவாதி தானே. நாம் விஞ்ஞான ரீதியான விஷயங்களை தானே பேசி கொண்டு இருந்தோம். திடீரென்று என் திசை மாறினீர்கள் ?

            மூர்க்கத்தனமான கூட்டத்தையும் எதிர்ப்பேன், முட்டாள் தனமான கூட்டத்தையும் எதிர்ப்பேன். மீண்டும் சொல்கிறேன் எதையும் ஆதாரம் இல்லாமல் பேசுபவன் நானில்லை

            நீங்கள் விஞ்ஞானத்தை என் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள் ? உங்களை எது தடுக்கிறது ?

            முடிந்தால் விஞ்ஞான ரீதியான வாதத்தை மட்டும் முன் வைக்கவும்

            நன்றி

        • The atmosphere of Earth is the layer of gases, commonly known as air, that surrounds the planet Earth and is retained by Earth’s gravity.

          //But what I am aware of is ‘basics of aerodynamics’ says that a ‘solid object’ (earth) does not carry less dense gas (earth’s atmosphere) with it. This is because ‘gas’ and ‘solid’ are of different densities//

      • Sorry, I should have asked this first.

        You say ‘gravity’ which heliocentric-theory follows is responsible for spinning everything together at the same speed

        But, if I understand correctly ‘gravity is a pulling force’ and ‘not a science law’

        I need the name of the ‘scienctific law’ which explains the practical implementation of ‘earth, sea and atmosphere’

        Even if there is one such law, you need to answer why it differs from the basics from ‘aerodynamics’

        I believe debate will happen only based on ‘science’ and not on anything else. Also I believe, anybody who interferes in this discussion provides comments only the basis of ‘science’ and not of anything else

        Thanks a lot

        • No way it is differing with aerodynamics! Gravity is a scientific Law! Newton’s law of universal gravitation states that a particle attracts every other particle in the universe using a force that is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between their centers

          • I’ll wait wait for other ‘rationalists’ what they feel

            My question was according to ‘aerodynamics’ solid object cannot carry ‘less dense’ object.

            You say ‘no way it differs’. Can you explain it to me bit briefly why they are same ? Because I read it differently

        • gravity is a pulling force அல்லது a science law வா என்ற விசயம் ஒருபக்கம் இருக்கட்டும் தம்பி சதிஷு! விஷயம் என்ன வென்றால் நான் மாட்டு மாமிசம் சாப்பிடுவதில் ஹிந்து மத மனித மாமிசம் உண்ணும் கங்கை நதி ஓர சாமியார்களுக்கு என்ன பிரச்சனை என்று விவரிக்க முயலுங்கள் தம்பி!

          • // விஷயம் என்ன வென்றால் நான் மாட்டு மாமிசம் சாப்பிடுவதில் ஹிந்து மத மனித மாமிசம் உண்ணும் கங்கை நதி ஓர சாமியார்களுக்கு என்ன பிரச்சனை என்று விவரிக்க முயலுங்கள் தம்பி! //

            hmm கண்டிப்பாக விவாதிப்போம். என் அவசரப்படுகிறீர்கள் ?? நான் எங்கேயும் ஓடி போக மாட்டேன்.

            முதலில் ‘நான் துவக்கிய’, சிந்தனை செய் அவர்கள் தொடர்ந்த இந்த விஷயத்தை முடித்து கொள்வோம்

            அப்போது தானே உங்களை போன்ற ‘செலெக்ட்டிவ் அம்னீஷியா’ உள்ளவர்களின் மற்றவர்களுக்கு புரியும்

            இதில் இருந்தே தங்கள் பதட்டம் புரிகிறது.

            hmm போகட்டும். நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் என்ன.’திருவாளர் ராமன்’ அவர்களும் ‘சிந்தனை செய்’ அவர்களும் அல்லது வேறு யாரேனும் எனக்கு பதில் சொன்னால் கூட போதுமானது

            மேலே உள்ள பதிலை பாருங்கள். இதற்க்கு மேலும் நான் ‘சூரிய மைய கொள்கை’ எப்படி பட்டது என்பதை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறன்

            ராமன் அவர்களோ மற்றவர்களோ ‘விஞ்ஞான கேள்விகளோடு’ வந்தால் நான் விவாதிக்க தயாராக உள்ளேன்

  13. திருவாளர் ராமன் சொல்லுவது போல் ‘flat earth theoryகும்’ இது வரை நான் கேட்ட எந்த கேள்விகளுக்கும்’ எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக சொல்லி கொள்ளுகின்றேன்.

    நான் ‘உருண்டை பூமியை’ conceptஐ தான் follow செய்கிறேன்

    ராமன் அவர்களின் வாதத்தை கேட்டு ‘flat earth theoryக்கு’ திசை திரும்பாதீர்கள்

  14. // இப்பொழுது பூமி சுற்றவில்லை , எப்படி நிலம் நீர் காற்று சேர்ந்து சுற்றும் என்று கேட்கிறீர்கள் . பூமி தட்டை என்பது உங்கள் சிந்தனையில் அடுத்து உதிக்கும் , அதை நான் முன்பே கண்டுபிடித்துவிட்டேன் ?//

    நான் flat earth theory இல்லை என்பதை முன்பே சொல்லிவிட்டேன். நீங்கள் அதையே பிடித்து தொங்கி கொண்டு இருந்தால் நான் எதுவும் செய்ய முடியாது

    எங்கே சிக்கல் ஆரம்பமாகிறதோ அதை தான் கேள்வியாக முன் வைக்க முடியும். (அல்லது) விஞ்ஞானத்தை கேள்வியே கேட்க கூடாது என்று சொல்கிறீர்களா ?

    கேள்விக்கு ‘விஞ்ஞான ரீதியான’ பதில் தெரியுமா ? தெரியாத ? (அல்லது) கேள்வி விஞ்ஞான ரீதியாக தவறு என்பதை நிரூபியுங்கள் ? உங்களை எது தடுக்கிறது ?

    விஞ்ஞானத்திற்கு விஞ்ஞானத்தை பயன்படுத்தி பதில் சொல்லாமல் ஏன் வியாக்கியானம் பேசுகிறீர்கள் ?

    இப்போது சொல்கிறேன் நீங்கள் உண்மையிலேயே ‘படித்தவர் என்றால்’, ‘பகுத்தறிவாதி என்றால்’ நான் கேட்ட கேள்விகளை ‘விஞ்ஞான ரீதியாக’ உடைத்து தூள் தூள் ஆக்குங்கள். நான் மனப்பூர்வமாக ஏற்று கொள்கிறேன்

    அதை விடுத்து அறிவுரைகளும், வியாக்கியானுங்களும் எதற்கு ?

    • // மேலும் நான் சொன்னது ‘naked-eyes’ தெளிவாக கண்ணுக்கு தெரிவது ‘சூரியன்-சந்திரன்’ மட்டுமே. இதையும் மறுப்பீர்களா ?
      //

      நவ கிரகத்துல இருக்கிற மத்த கிரகத்தை எல்லாம் மெய்ஞ்ஞான திருஷ்டியில் பார்த்தார்களா ?
      எப்படி ஜூபிடர் பார்க்கிறது என்று லிங்க் கொடுத்தாச்சு , மறுபடியும் மறுபடியும் உளறிக்கிட்டு

      // all rotates nicely with earth // – இங்கே தான் பிரச்சனையை ஆரம்பமாகிறது

      பிட்ஸ் அண்ட் பீசஸ் ஆ படுச்சுட்டு உளறுவதற்கு, அதுவும் எங்களுக்கு சொல்லித்தர தானே முயற்சி எடுக்கிறீர்கள் .
      மெய்ஞ்ஞான ஆராச்சி என்று சொன்னது நீங்கள் தான் , அதை வைத்து மத வாத கூட்டம் என்று நினைத்தேன் .

      நிலாவுல பத்து பேரு கார் ஓட்டியாச்சு .
      ரெண்டு ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டி . ஒன்னு சுத்தி கிட்டு இருக்கு .
      ஆயிரம் வருஷம் பழைய கொஸ்டின் கேட்டு கிட்டு , மேதாவி ஆக்ட்டிங் வேற .

      • // நவ கிரகத்துல இருக்கிற மத்த கிரகத்தை எல்லாம் மெய்ஞ்ஞான திருஷ்டியில் பார்த்தார்களா ?
        எப்படி ஜூபிடர் பார்க்கிறது என்று லிங்க் கொடுத்தாச்சு , மறுபடியும் மறுபடியும் உளறிக்கிட்டு //

        நம் முன்னோர்கள் எப்படி ‘டெலெஸ்கோப்’ இல்லாமல் பார்த்தார்கள் என்பதை நீங்களே விளக்குங்களேன் ?

        // மெய்ஞ்ஞான ஆராச்சி என்று சொன்னது நீங்கள் தான் , அதை வைத்து மத வாத கூட்டம் என்று நினைத்தேன் . // பரவாயில்லை

        // பிட்ஸ் அண்ட் பீசஸ் ஆ படுச்சுட்டு உளறுவதற்கு, அதுவும் எங்களுக்கு சொல்லித்தர தானே முயற்சி எடுக்கிறீர்கள் . //

        Hmm Interesting. அப்படியே நான் ‘செந்தில் குமரன்’ அவர்களுக்கு ஒரு சில replyகலை கொடுத்து உள்ளேன். அதற்கும் பதில் தாருங்களேன்.

        உங்களிடம் இருந்து நான் கற்று கொள்கிறேன்

        // நிலாவுல பத்து பேரு கார் ஓட்டியாச்சு .
        ரெண்டு ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டி . ஒன்னு சுத்தி கிட்டு இருக்கு .
        ஆயிரம் வருஷம் பழைய கொஸ்டின் கேட்டு கிட்டு , மேதாவி ஆக்ட்டிங் வேற .//

        நிலவுல கார் ஓட்டுங்கள், நிலாவில் இருந்து கூட வேறு கிரகத்துக்கு ராக்கெட் கூட விடுங்கள். வேண்டாம் என்று யாரு தடுக்க போகிறார்கள்

        ஆனால் ‘சூரிய மைய’ கொள்கை பற்றி , நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லையே ? நான் சரியாகத்தான் சொல்கிறேன் என்று நினைக்கிறன்

  15. Sathish, எந்த பொருளும் புவியை விட்டு விலகாமல் அதனை சுற்றிகொண்டு இருக்க காரணம் 9.81m/s2 என்ற மந்திர எண்களில் தான் உள்ளது. அது என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று நினைகின்றேன். ஆம் புவியின் ஈர்ப்பு விசை… ஒரு வேலை புவியின்ஈர்ப்பு விசை ஜீரோ ஆனால் நீங்கள் நினப்பது படி நடக்கலாம்…. காத்திருங்கள் ஜீரோ கிராவிட்டியில் விரைவில் நடைமுறை அனுபவம்(practical experience) பெற்றுவிட்டு அந்த ஆன்மிக உன்னத அனுபவத்தை ! உங்களுக்கு எழுத்து மூலம் அளிகின்றேன்.

    • Please reply for the questions mentioned above

      I’ve got few more questions on ‘gravity’ and its rotational energy. Will ask when you reply

      Thanks a lot for answering

      • திரு. சதீஷ்,

        வேலைபளுவின் காரணமாக தளத்துக்கு வர முடியாமல் போய் விட்டது, மன்னிக்கவும். எனக்கு உங்களுடன் விவாதிப்பதில் எல்லாம் எண்ணம் இல்லை சார். நான் செய்ய நினைப்பது வேறு. உங்களுடன் பேச வேண்டும். நீங்கள் ஏன் ஒரு விசயத்தை நம்புகிறீர்கள், எவ்வாறு, எதை கொண்டு அந்த நம்பிக்கைக்கு வந்தீர்கள் என்பது தான் நான் அறிய முயல்வது. நீங்கள் எண்ணுவது சரி, தவறு என்றெல்லாம் நான் வரவே இல்லை. நீங்கள் கூறுவது என்ன, எதன் அடிப்படையில் என்பதை புரிந்துகொள்வது மட்டுமே என் எண்ணம். இதில் என்னுடைய bias, நான் ஆதாரத்தை அள்ளி வீசுவது என்பது எல்லாம் இல்லை சார். நீங்கள் எந்த விஷயம் சொன்னாலும் சரி, முழுதாக கேட்டு, அதில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்பேன், அவ்வளவு தான்.

        My aim is to understand why you believe what you believe and change myself if that is better than my current thought process. I will not try to throw evidence, argue or anything like that. Its just a discussion. நீங்கள் சொன்ன மாதிரி உங்க கூட வேலை செய்பவரிடம் ஒரு ஐந்து நிமிட coffee break டயத்தில் பேசுவது மாதிரி. என்ன நான் உங்கள் பார்வையை புரிந்துகொள்ள முயல்வதால், கொஞ்சம் கேள்விகள் இருக்கும். ஆனால் நக்கல், நையாண்டி, விதண்டாவாதம் போன்றது எல்லாம் இருக்காது. உங்களுக்கு சரி என்றால் பேசுவோம். முழுக்க, முழுக்க உங்கள் விருப்பம்.

          • I frankly say that I am not a scientist. But, most of the questions raised by me are pretty straight-forward and we need not to be ‘scientists’ to understand those questions

            Yes, I agree it takes some time to understand but yes we need not to be a scientist

            But, I believe nothing is 100% perfect in this world no matter whether it’s individual or science

            I don’t believe in ‘selective amnesia’ and knowledge is common for all. I am not bothered whether I am right or not

            But, I share whatever I have come across.

        • I’d like to mention one point here

          People say all spin (earth, sea and earth’s atmosphere) together.

          But if I am not wrong science says otherwise. They cant spin all together at the same speed for a simple reason that it cannot do so. Their densities differ and we don’t require much science to understand it

  16. சதீஷ், பசு முத்திரம் குடிக்கும் இந்திய திரு நாட்டில் நாட்டில் , நீங்கள் புவி மைய்ய கொள்கையை நம்புவதில் ஒன்றும் வியப்பு இல்லை அல்லவா? அது உங்கள் உரிமையையும் கூட தானே? மாட்டு மாமிசம் உண்ணும் எங்கள் மீது நீங்கள் எங்கள் உணவு பழக்கத்துக்கு எதிராக வன்முறையை திணிப்பது போன்று தானே உங்கள் புவி மைய்ய கொள்கையை எங்கள் மீது திணிக்க முயலுகின்றீர்கள்! சரி சரி மீண்டும் மீண்டும் முயளுங்கள் வெற்றி கிடைக்கின்றதா என்று பார்க்கலாம்!

    • // சதீஷ், பசு முத்திரம் குடிக்கும் இந்திய திரு நாட்டில் நாட்டில் , நீங்கள் புவி மைய்ய கொள்கையை நம்புவதில் ஒன்றும் வியப்பு இல்லை அல்லவா? அது உங்கள் உரிமையையும் கூட தானே? மாட்டு மாமிசம் உண்ணும் எங்கள் மீது நீங்கள் எங்கள் உணவு பழக்கத்துக்கு எதிராக வன்முறையை திணிப்பது போன்று தானே உங்கள் புவி
      மைய்ய கொள்கையை எங்கள் மீது திணிக்க முயலுகின்றீர்கள் !//

      இதற்கான விரிவான பதில்களை நான் already பதிந்து விட்டேன். கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விஞ்ஞான ரீதியான மறுப்பு வரவில்லை

      ‘gravity’ சர்வ ரோக நிவாரணி போல் ‘செயல்படுகிறது’ அறிவியலுக்கு .

      How gravity resolves the differences between ‘densities’ ? Where is the theory for that ? Please point that to me

      // சரி சரி மீண்டும் மீண்டும் முயளுங்கள் வெற்றி கிடைக்கின்றதா என்று பார்க்கலாம்! //

      hmm கண்டிப்பாக. விவாதத்தை துவக்கியதேய நான் தானே. அதெப்படி முடிக்காமல் விட முடியும். அனால் சரியான ‘விஞ்ஞான விளக்கங்கள்’ வரவில்லை

      ஒரு விஷயம் கவனித்தீர்களா? நேற்று வரை ‘ராமன்’ அவர்கள் டக் டக் என்று பதில் அளித்து கொண்டுஇருந்தார்.

      திருவாளர் ராமன் அவர்கள் மௌனம் கலைகிறாரா என்று பார்க்கலாம் ? இப்போது அவர் யோசித்து கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறன் (அல்லது) என்னை ‘கழுவி ஊற்ற’ காத்து கொண்டு இருக்கிறாரா என்று தெரியவில்லை. பார்ப்போமே அதையும்

      நீங்கள் எனக்கு ‘சூரிய மைய்ய கொள்கை’ பற்றி ஆதாரம் தரவில்லை என்றால் என்ன ? என்னுடைய பங்கிற்கு நான் என்னுடைய ஆதாரத்தை தந்து தானே ஆக வேண்டும்.

      நன்றி

  17. திரு ராமன் (அல்லது) திரு சிந்தனை செய் இந்த விவாதத்தை விஞ்ஞான ரீதியாக ‘இனிமேலாவது’ எடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்

  18. Satish has the doubt about the earth and atmosphere rotation! I can show some /many evidence about this issue using the videos from NASA…. published in you tube!

    NASA/JPL’s description of the first frame from their Photojournal: “This color image of the Earth was obtained by Galileo at about 6:10 a.m. Pacific Standard Time on Dec. 11, 1990, when the spacecraft was about 1.3 million miles from the planet during the first of two Earth flybys on its way to Jupiter. The color composite used images taken through the red, green and violet filters. South America is near the center of the picture, and the white, sunlit continent of Antarctica is below. Picturesque weather fronts are visible in the South Atlantic, lower right. This is the first frame of the Galileo Earth spin movie, a 500- frame time-lapse motion picture showing a 25-hour period of Earth’s rotation and atmospheric dynamics.”

    I saw this Galileo shot in An Inconvienent Truth and had a hard time finding it. Once I did, I uploaded it to YouTube to share. I originally uploaded this in 2007 and can’t find the source anymore. The description above mentions the Earth spin movie as having 500 frames, but my original uploader description says this version of the movie has 256. It does look jumpy compared to the one I just found on NASA’s site, which looks much better.

    See this video…….. Earth rotates along with the earth atmosphere !

  19. Earth rotation along with atmosphere! Another visible proof :

    NASA_International Space Station (ISS)
    Our Universe Is Not Silent – Although space is a virtual vacuum, this does not mean there is no sound in space. Sound does exist as Electromagnetic Vibrations. Through specially designed instruments the NASA Voyager, INJUN 1, ISEE 1 and HAWKEYE space probes, used Plasma Wave antenna to record the vibrations all within the range of human hearing (20-20,000 Hz). The recorded sounds are the complex interactions of charged electromagnetic particles from the solar wind, ionosphere and planetary magnetosphere.
    Look at the below link to know more Details.

    • நாளை இந்த விவாதம் என் தரப்பில் இருந்து ‘முடித்து வைக்கப்படும்’. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை நான் ‘பகிர போகும்’ அந்த blogger இடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கும் கண்டிப்பாக பதில் கிடைக்கும்

  20. பல நூற்றாண்டு காலமாக ‘நான் பகுத்தறிவாதி’ என்று சொல்லும் யாரும் ‘விஞ்ஞானத்தை’ எதிர்த்து கேள்வி கேட்கவில்லை

    ‘விஞ்ஞானத்தின்’ தீமைகளை ‘தீமை தான் அது’ நேர்மையாக ஒப்புக்கொள்ள மனமில்லை

    வேற யாரவது விஞ்ஞானத்தின் உண்மைகளை சுத்திக்காட்டினாலும் ‘மதவாதி’, ‘பக்த்’ என்கிற பட்டங்கள் கிடைக்கின்றன

    சரி விஞ்ஞானத்தை நாம் தான் தவறாக புரிந்து கொண்டோம் என்று பார்த்தல் அதற்கும் ‘சரியான’ விஞ்ஞான மறுப்புகள் இல்லை

    விஞ்ஞானத்தின் ‘அடிப்படை கேள்விகளை’ கேட்டதற்கே இத்தனை பட்டங்களா ?

    விதிகளை வகுத்தது நானல்ல. உங்கள் விஞ்ஞானம் தான். அதை சுட்டிக்காட்டி தான் நான் கேள்விகளை கேட்கிறேன். இல்லை நான் ஏதாவது தவறாக கேட்கிறேனா ?

    அது தவறு என்றால் ‘சரியான விஞ்ஞான’ மறுப்புடன் வாதத்தை முன் வைத்து பேசுவது தானே பகுத்தறிவாதம் ?

    நான் பள்ளியில் அப்படி தான் படித்து இருக்கிறேன் ஆகவே அது தான் உண்மை என்று நம்பினால் அது உங்களின் ‘நம்பிக்கை’ மட்டுமே. அது ‘விஞ்ஞானம் ஆகாது’ என்பதை மனதில் நிறுத்துங்கள்

    கிட்டத்தட்ட கடந்த ஒரு வார காலம் ‘ராமன்’ அவர்கள் என்ன ‘கழுவி, கழுவி’ ஊற்றினாரே?

    அதெல்லாம் சரியா அப்போது ? அதெல்லாம் பகுத்தறிவாதத்தில் சேருமா ?. திரு ‘சிந்தனை செய்’ மட்டுமே ‘சரி இவன் என்ன தான்’ சொல்ல வருகிறான் பார்ப்போம் என்று காத்து கொண்டு இருக்கிறார்

    திருவாளர் ராமன் அவர்கள் முதலில் மௌனம் கலையட்டும். பிறகு விவாதிப்போம்

    நன்றி

  21. https://www.freelists.org/list/geocentrism

    geocentrism: Geocentric Universe Debate
    To discuss the physics and mathematics of cosmological models. In particular, to investigate the predictions and consequences of a geocentric, geostatic Bible-based cosmology, and to compare these with the ruling Big Bang paradigm that has recently been called into the public eye in less favourable light.

    பைபிள் சரி என்று நிரூபிக்க முயற்சிக்கும் கூட்டம் நடத்தும் இடத்தில போய்தான் அறிவியல் கற்க வேண்டுமா ?
    என்று யோசித்ததில் உங்கள் மதம் பரப்பும் நோக்கம் தெரிந்து விட்டது .மதம் பரப்புவதற்காகவே கருத்துகளை தேடி தேடி படித்து உள்ளீர்கள்.

    முதலிலேயே உங்களுக்கு அதுவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தை பரிந்துரை செய்தேன் . அறிவியல் என்றால் என்ன என்பதை ஆரம்பத்தில் இருந்து படித்தால் தான் புரியும் .

    ஆனால் ஐந்து கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று கூறிய என்னை , கண்களால் பார்க்க முடியாது என்று கூறிய நீங்கள் , நவ கிரகத்தில் எப்படி வந்தது என்று நிரூபிக்க சொல்கிறீர்கள் .
    கண்ணால் பார்க்கு முடியாமல் எப்படி மெய்ஞ்ஞானம் செய்தார்கள் என்பதை நீங்கள் தானே நிரூபிக்க வேண்டும்?

    டார்வினிசம் சரி இல்லை , பூமியை சூரியன் சுற்றுகிறது என்று ஆணித்தரமாக இங்கே வாதாடுகிறீர்கள்
    அதிலே நாற்பது வருட அஸ்ட்ரானாமி அனுபவம் உள்ளவர் கூறுவது என்று ‘Expert fallacy ‘ வேறு தந்திரமாக பயன்படுத்தி உளீர்கள் .

    ஆகா நீங்கள் இந்த வினவு தளத்தின் லிங்கை கொடுத்து , பாருங்கள் பகுத்தறிவாளர்களும் தெரியவில்லை , ஆகவே கடவுள் உண்மை,விவிலியம் உண்மை , சரணாகதி அடை என்று பிரச்சாரம் செய்வதர்காகவே இது போன்ற விவாதத்தை எடுத்து செல்கிறீர்கள்.

    மத கிரிமினல் சதீசு என்பவரின் மெய்ஞ்ஞானத்தால் பாதிக்கப்பட இருக்கும் அந்த அப்பாவிக்காக சில அறிவியலை கொடுக்கிறேன் . அதே போல இந்த கிரிமினலை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்றும் சில டிப்ஸ் கொடுக்கிறேன் .

    புவி மைய கொள்கை
    ——————————————–

    புவி ஈர்ப்பு விசையின் ஆரம்ப பாடம் தான் ந்யோட்டனின் ஈர்ப்பு விசை . அவருடைய பார்முலாவை கொண்டு மெர்குரி தவிர பெரும்பான்மையான கிரகங்களின் சுற்றுப்பாதையை கணிக்க முடிந்தது. அடுத்து ஏன் அந்த விசை ஏற்படுகிறது என்பதையும் அவரால் சொல்ல முடியவில்லை .

    ஐன்ஸ்டீன் தான் அந்த புதிரை விடுவித்தார். அந்த ஸ்பேஸ் டைம் குறித்து விளக்குவது கடினம்
    ஓரளவிற்கு பார்த்து புரிய இந்த லிங்க் கொடுக்கிறேன் ..ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் முழு பார்த்தீர்கள் என்றால் புரியும்

    https://www.youtube.com/watch?v=MTY1Kje0yLg

    கிரகங்கள் சூரியனை எதனால் சுற்றுகிறது என்பதை வீடியோ விளக்கி இருக்கும். இந்த ஸ்பேஸ் டைம் குழியை சுற்றி வருவதால் உண்டான வேகத்தை வைத்து தான் , இந்தியா மங்கள்யான் என்னும் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது .

    அடுத்து ஒரே ஒரு சூரியன் மட்டும் உருவாகவில்லை , கோடிக்கணக்கான சூரியன்கள் உருவாகி உள்ளன.
    ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியனே . அதை கிரகங்கள் சுற்றி வருகின்றன . அந்த கிரகங்களை கெப்ளர் தோலை நோக்கி மூலம் கன்டுபிடித்து வருகிறார்கள் . இப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டு பிடிக்க பட்டு உள்ளன.

    அடுத்து கேலக்சி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான சூரியன்கள் ஒரு கரும் பொருளை மையமாக கொண்டு சுற்றுகின்றன. இது போல பல கோடி கேலக்சிகள் உள்ளன

    மேற்கொண்டு அறிவியலை நீங்கள் மேற்கண்ட பின்னூட்டங்களில் குறிப்பிட்டு உள்ள புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

    இந்த மதபோதகர் சதீசு அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

    1. பூமியை சூரியன் என்ன வேகத்தில் சுற்றிவருகிறது ?
    2. டெலசக்கொப்பில் தெரியும் மற்ற சூரியன் குடுப்பதில் , கிரகங்கள் சூரியனை சுற்றும் போது நமது சூரியனை குடும்பத்தில் மட்டும் ,சூரியன் ஏன் கிரகத்தை சுற்ற வேண்டும்?
    3.இரவு பகல் எப்படி ஏற்படுகிறது ?
    4. நாற்பது வருட அஸ்ட்ரானமர் ஒருவருக்கு தான் உண்மை தெரியுமா ? உலகில் எத்துணையோ நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் போது அவர்களுக்கு தெரியாதா ?
    5. அந்த எஸ்பிரிமெண்ட் இந்த எஸ்பிரிமெண்ட் என்று பழைய கதைகளை விவரம் தெரிந்தவர் போல உலரும் போது , ஏன் அவைகளை பயன்படுத்தி எந்த அறிவியலும் செய்யவில்லை என்பதை கேளுங்கள் .

    மதவாத கூட்டத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள்.மதத்திற்கு தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே நடிப்பார்

    • // பைபிள் சரி என்று நிரூபிக்க முயற்சிக்கும் கூட்டம் நடத்தும் இடத்தில போய்தான் அறிவியல் கற்க வேண்டுமா ? என்று யோசித்ததில் உங்கள் மதம் பரப்பும் நோக்கம் தெரிந்து விட்டது .மதம் பரப்புவதற்காகவே கருத்துகளை தேடி தேடி படித்து உள்ளீர்கள். //

      வழக்கமாக நம்மூர் ஆட்கள் சொன்னால் தான் ‘பார்ப்பன சாதி’, ‘சாமியார்’ என்று விஷயத்தை திசை திரும்புவார்கள். வெள்ளைக்காரனுக்கு ‘வால் பிடித்தே’ நமக்கு பழக்கமாகி விட்டது.

      ஆனால் இந்த விஷயத்தை மட்டும் ‘வெள்ளைக்காரனையே’ எதிர்த்து கேள்வி கேட்டு ‘பகுத்தறிவாதத்தை’ நிலை நாட்டி விட்டார்கள்.

      ஆதாரங்களை தேடி படிக்காமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்? ஆதாரங்கள் நம்மை தேடி வரும் என்று சொல்கிறீர்களா ?

      ‘விஞ்ஞானம்’ என்கிற பெயரில் நீங்கள் போடும் ‘ஆட்டத்திற்கு’ என்னை ‘மேளம்’ வாசிக்க சொல்கிறீர்களா ?

      // டார்வினிசம் சரி இல்லை , பூமியை சூரியன் சுற்றுகிறது என்று ஆணித்தரமாக இங்கே வாதாடுகிறீர்கள்
      அதிலே நாற்பது வருட அஸ்ட்ரானாமி அனுபவம் உள்ளவர் கூறுவது என்று ‘Expert fallacy ‘ வேறு தந்திரமாக பயன்படுத்தி உளீர்கள் . //

      பூமி சுற்றவில்லை என்பதே என் வாதம் ‘geo-centric’ சரி என்று நான் எங்கு சொல்லி உள்ளேன் ? அந்த ‘textஐ’ பதியவும்.

      geo-centric பற்றி ஒரு விஞ்ஞானி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பிறகு பதிகிறேன் ? நான் சொன்னால் நீங்கள் ஏற்று கொள்ளமாட்டீர்கள்

      ‘Expert’ சொன்னதை பயன்படுத்தாமல் ‘என்னை புதிதாக’ கொள்கையை உருவாக்க அதை உங்களிடம் ‘விளக்க’ சொல்கிறீர்களா ? அப்படி சொன்னால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா ?

      ‘பூமி மைய்ய கொள்கையே சரியானது’ (அல்லது) ”சூரிய மைய்ய கொள்கையே சரியானது’ என்றெல்லாம் ஒரே வரியில் சொல்ல நம்மூர் ‘selective-amnesia’ கொண்ட பகுத்தறிவாதிகளால் தான் முடியும்.

      அது சரி ‘நாம் தான்’ விஞ்ஞானத்தை கேள்வி கேட்பதே கிடையாதே ? அப்புறம் என்ன ‘சூரியன்’, ‘பூமி’ என்று உளறிக்கொண்டு

      • இந்தியாவிலேயே ஏன் வேர்ல்டுலேயே ‘பகுத்தறிவாதத்திற்கு’ பெயர் பெற்ற ஊர் நம்மூர் தான். இங்கேயே ‘பகுத்தறிவாதம்’ இப்படி இருந்தால் ‘மற்ற மாநிலங்களின்’ நிலைமை என்னவாகும். என்ன கொடுமை சார் இது!!!

  22. // பைபிள் சரி என்று நிரூபிக்க முயற்சிக்கும் கூட்டம் நடத்தும் இடத்தில போய்தான் அறிவியல் கற்க வேண்டுமா ? என்று யோசித்ததில் உங்கள் மதம் பரப்பும் நோக்கம் தெரிந்து விட்டது .மதம் பரப்புவதற்காகவே கருத்துகளை தேடி தேடி படித்து உள்ளீர்கள். //

    அட மேதவியே. எனக்கும் பைபிள்கும் என்ன சம்பந்தம். நான் என் அதை செய்ய வேண்டும் ? நான் பைபிளை காப்பாற்ற முயற்சிக்கும் ‘logic’ என்னவாக இருக்கும் ??? தயவு செய்து விளக்குங்களேன்

    // முதலிலேயே உங்களுக்கு அதுவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தை பரிந்துரை செய்தேன் . அறிவியல் என்றால் என்ன என்பதை ஆரம்பத்தில் இருந்து படித்தால் தான் புரியும் . //

    ஓஹோ அப்படியா!!! நன்றி. நான் இங்கு எந்த அறிவியலும் தெரியாமல் தான் வந்துள்ளேன்

    // ஆனால் ஐந்து கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று கூறிய என்னை , கண்களால் பார்க்க முடியாது என்று கூறிய நீங்கள் , நவ கிரகத்தில் எப்படி வந்தது என்று நிரூபிக்க சொல்கிறீர்கள் .
    கண்ணால் பார்க்கு முடியாமல் எப்படி மெய்ஞ்ஞானம் செய்தார்கள் என்பதை நீங்கள் தானே நிரூபிக்க வேண்டும்? //

    இதற்க்கு முன்பே பதில் சொல்லியாகி விட்டது. மீண்டும் பதிய தேவையில்லை

    // டார்வினிசம் சரி இல்லை , பூமியை சூரியன் சுற்றுகிறது என்று ஆணித்தரமாக இங்கே வாதாடுகிறீர்கள்
    அதிலே நாற்பது வருட அஸ்ட்ரானாமி அனுபவம் உள்ளவர் கூறுவது என்று ‘Expert fallacy ‘ வேறு தந்திரமாக பயன்படுத்தி உளீர்கள் . //

    அவர் கேட்ட கேள்வி தவறு என்று சொல்ல வருகுறீர்களா ? அப்படியெனில் எப்படி என்று விளக்கவும். அதை சொல்ல மாட்டேன் என்கிறீர்களே ‘ராமன் ஐயா’.

    // ஆகா நீங்கள் இந்த வினவு தளத்தின் லிங்கை கொடுத்து , பாருங்கள் பகுத்தறிவாளர்களும் தெரியவில்லை , ஆகவே கடவுள் உண்மை,விவிலியம் உண்மை , சரணாகதி அடை என்று பிரச்சாரம் செய்வதர்காகவே இது போன்ற விவாதத்தை எடுத்து செல்கிறீர்கள்.

    மத கிரிமினல் சதீசு என்பவரின் மெய்ஞ்ஞானத்தால் பாதிக்கப்பட இருக்கும் அந்த அப்பாவிக்காக சில அறிவியலை கொடுக்கிறேன் . அதே போல இந்த கிரிமினலை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்றும் சில டிப்ஸ் கொடுக்கிறேன் . //

    ‘மத கிரிமினல்’ என்று பயன்படுத்தி உள்ளீர்கள். இதுவே உங்களின் மோசமான மனநிலையை குறிக்கிறது. பரவாயில்லை.

    ‘மத கிரிமினல்’ – இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு நீங்கள் நாளை ‘வெட்கி தலை குனிய போகிறீர்கள்’. பிறகு நான் உங்களை மோசமாக பேசினால் எனக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

    // இந்த மதபோதகர் சதீசு அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் //

    1. பூமியை சூரியன் என்ன வேகத்தில் சுற்றிவருகிறது ? – ‘பூமி’ சூரியனை சுற்றவேயில்லை என்பது தான் என் வாதம். ‘அடிப்படை’ aerodynamicsகு எதிரானது தங்கள் வாதம். அந்த விதியை வகுத்தது விஞ்ஞானம் தான். நானல்ல. அதை மனதில் நிறுத்துங்கள்

    2. டெலசக்கொப்பில் தெரியும் மற்ற சூரியன் குடுப்பதில் , கிரகங்கள் சூரியனை சுற்றும் // சரி

    // போது நமது சூரியனை குடும்பத்தில் மட்டும் ,சூரியன் ஏன் கிரகத்தை சுற்ற வேண்டும்? // கேள்வி புரியவில்லை

    3.இரவு பகல் எப்படி ஏற்படுகிறது ? –> இதற்க்கு வேறு பல காரணங்கள் உள்ளன ? அவை என்னவாக இருக்க முடியும் ?

    4. நாற்பது வருட அஸ்ட்ரானமர் ஒருவருக்கு தான் உண்மை தெரியுமா ? உலகில் எத்துணையோ நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் போது அவர்களுக்கு தெரியாதா ?

    அப்போது அவர் கேட்ட கேள்வி மட்டும் தவற என்ன ? விளக்கவும் ? என் escape ஆகிறீர்கள்

    // 5. அந்த எஸ்பிரிமெண்ட் இந்த எஸ்பிரிமெண்ட் என்று பழைய கதைகளை விவரம் தெரிந்தவர் போல உலரும் போது , ஏன் அவைகளை பயன்படுத்தி எந்த அறிவியலும் செய்யவில்லை என்பதை கேளுங்கள் . //

    இங்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள? சத்தியமாக எனக்கு புரியவில்லை. என்ன ‘experiment’ செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

    // மதவாத கூட்டத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள்.மதத்திற்கு தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே நடிப்பார் //

    முதலில் உங்கள் மனதில் உள்ள அழுக்கை போக்கிக் கொள்ளுங்கள்

    நாளை நான் ‘சிந்தனை செய்’ அவர்களுக்காக அந்த தளத்தின் ‘லிங்க்ஐ’ பதிகிறேன். உங்களுக்கெல்லாம் அந்த ‘லிங்க்’ பயன்படாது. நீங்கள் எல்லோரும் அனைத்தையும் படித்து தெளிந்து விட்டீர்கள்

    ஏனெனில் நீங்கள் ‘மதம்’, ‘பைபிள்’, ‘பிளாட் எர்த்’ என்று அதையே யோசித்து யோசித்து விஞ்ஞானம் சொல்லும் அடிப்படை விதிகளை எந்த ‘basis’il’ மீறுகிறீர்கள் ???

    அடிப்படையே தவறாக இருக்கும் போது ‘பூமி’ எப்படி சுற்ற முடியும் ???? Aerodynamics விதி தவறு என்றால் எப்படி? எப்படி? எப்படி ?

    அந்த கேள்விகளை மீண்டும் பதிகிறேன். முடிந்தால் நன்கு யோசித்து பதில் சொல்லவும்

    (1) பூமியின் (Solid state) அடர்த்தியும், கடலின் (Liquid state) அடர்த்தியும், காற்று மண்டலித்தின் (Gaseous state) அடர்த்தியும் வெவேறானது தானே ? இவை எல்லாம் ‘ஒரு சேர ஒரே வேகத்தில்’ எப்படி சுற்ற முடியும் ?

    Density முக்கியம் இல்லை என்று விஞ்ஞான ரீதியாக இங்கு சொல்ல முடியாது. Aerodynamics அடிப்படை விதிகளை மனதில் வைத்து சொல்லவும். Aerodynamics விதி தவறு என்றால் எப்படி? எப்படி? எப்படி ?

    (2) நான் மீண்டும் சொல்கிறேன் இங்கே தான் பிரச்சனையை ஆரம்பமாகிறது ‘ all rotates nicely with earth’

    (3) How gravity resolves the differences between ‘densities’ ? Where is the theory for that ?

    கடைசியாக ஒரு முறை நன்றாக யோசித்து பார்த்து கொள்ளுங்கள் . மீண்டும் ‘மதம்’, ‘கிரிமினல்’ என்றெல்லாம் யோசிக்காமல் சற்று ‘மாற்றி யோசியுங்கள்’.

    நான் சொன்னதெல்லாம் சரியா? தவறா? எனக்கு தெரியாது. ஆனால் ‘அதிமேதாவிகளுடன்’ என்னால் விவாதிக்க முடியவில்லை. போதுமடா சாமி நீங்களும், உங்கள் பகுத்தறிவும். ஆளை விடுங்கள்.

    திரு ‘சிந்தனை செய்’ அவர்களே நாளை இரவு வரை காத்திருக்கவும்.

    நீங்கள் அந்த ‘linkல்’ உள்ள விவரங்களை படித்து பார்த்து ‘நீங்களே’, ‘நீங்களே’, ‘நீங்களே’ இங்குள்ளவர்களுக்கு எடுத்து சொல்லவும். ஏனெனில் நான் ‘மத கிரிமினல்’ ஆகி விட்டேன். ‘கிரிமினலுக்கு’ சத்தியமாக மூளை இருக்காது

    கோடான கோடி நன்றிகள் பகுத்தறிவாதிகளே. வாழ்க தங்கள் பகுத்தறிவாதம். வளர்க தங்கள் சமூக சிந்தனை.

  23. திரு ‘சிந்தனை செய்’ அவர்களே நாளை இரவு வரை காத்திருக்கவும்.

    நீங்கள் அந்த ‘linkல்’ உள்ள விவரங்களை படித்து பார்த்து ‘நீங்களே’, ‘நீங்களே’, ‘நீங்களே’ இங்குள்ளவர்களுக்கு எடுத்து சொல்லவும்

    தாங்கள் பொறுமை காத்தமைக்கு நன்றிகள்

  24. திரு சிந்தனை செய் அவர்களே நீங்கள் அந்த தளத்தை ‘பொறுமையாகவும்’, ‘முழுமையாகவும்’ படித்து தங்கள் கருத்தை ‘வினவில்’ பதியுங்கள். It may take a day or two for you.

    அந்த தளத்தில் உள்ள ‘textஐ’ விட ‘comments’ தான் மிக மிக முக்கியமானவை. ஏனென்றால் அதில் அவரை ஒரூ சில வாசகர்கள் ‘கழுவி ஊற்றி இருப்பார்கள்’. ஒரு சில பேர் ‘தங்களது சந்தேகங்களை கேட்டுயிருப்பர்’. எல்லாவற்றிற்கும் அவரால் முடிந்தவரை அவர் ‘பதில்’ அளித்து இருப்பார்

    ‘comments’ தான் மிக மிக முக்கியமானவை. அதில் என்னுடைய ‘கமெண்ட்’ தான் முதல் ‘கமெண்ட்’ ஆக இருக்கும்.

    நீங்கள் ‘உங்கள் கருத்தை’ பதியும் வரை நான் யாரும் எந்த பதிலும் அளிக்க போவது கிடையாது. அவர்கள் என்னை எப்படி ஏசினாலும் சரி. ஏற்கனவே நிறைய ஏசி விட்டனர் என்பது வேறு விஷயம்

    நானும் என்னுடைய சொந்த blogஇல் ‘நான் படித்த தகவல்களை’ எழுதி உள்ளேன். மன்னிக்க வேண்டும். [என்னுடைய ‘மதத்தை’ பரப்பி (அதாவது வியாபாரம்) செய்து அதன் மூலம் நான் கோடிகளை அள்ளலாம் என்கிற ‘முக்கிய குறிக்கோளோடு’ அந்த blogஐ துவக்கினேன்]. அதை பிறகு பகிர்கிறேன்

    YouTubeல் பூமி சுற்றாததற்கு ஒரே வீடியோவில் ‘200 ஆதாரங்கள்’ உள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் நான் பகிர போவதில்லை

    எனக்கு ஒரு விஷயம் இன்னும் என்ன புரியவில்லை என்றால் ‘நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை’. ஒரு வேலை அவர்களுக்கு அதெல்லாம் கேள்விகளாகவே தெரியவில்லையோ என்னமோ ?

    நான் முதலில் எதிர்பார்த்தது என்னுடைய கேள்விகளுக்கு ‘விஞ்ஞான ரீதியான’ பதில்கள் தான் வரும் என்று நினைத்தேன் மாறாக அவர்கள் ‘google அல்லது YouTube’ உள்ள ‘சூரிய மைய கொள்கைக்கான’ ஆதாரங்களை பதிகின்றனர்.

    ‘சூரிய மைய்ய கொள்கையை’ நான் நிராகரித்தேனா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் ‘selective-amnesia’ பகுத்தறிவாதிகளின் உண்மை முகத்தை குறைந்தபட்சம் இந்த தளத்தில் உள்ளவர்களுக்கு ‘தெரிவித்து விட்டேன்’ என்றே நம்புகிறேன்

    அதிலும் குறிப்பாக ‘திரு ராமன்’ அவர்கள் படித்தது விட்டோம் என்ற ‘மமதையில்’ தன்னையே மறந்து விட்டார் என்றே சொல்லவேண்டும். அவர் உபயோகப்படுத்திய வார்த்தைகள் சூப்பரோ சூப்பர்

    நன்றி

  25. // 4. நாற்பது வருட அஸ்ட்ரானமர் ஒருவருக்கு தான் உண்மை தெரியுமா ? உலகில் எத்துணையோ நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் போது அவர்களுக்கு தெரியாதா ? //

    இந்த கேள்வியை புரிந்த கொள்ள நீங்கள் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அடிப்படை ‘ஜோதிடம்’ தெரிந்தாலே போதுமானது. மிக சாதாரண கணிதத்தை தான் அவர் பயன்படுத்தி இருப்பார்

  26. திரு. சதீஷ்,

    உங்கள் மைய புள்ளி மாறுபட்டு கொண்டே வருகிறது. நம் discussionக்கு ஒன்றே ஒன்றில் இருந்து ஆரம்பிப்போம். அது என்ன என்பதை தாங்களே கூறவும். அங்கிருந்து தொடங்குவோம்.

    • @@@ சிந்தனை செய்

      தாங்கள் 10 கேள்விகளை தொகுத்து இருந்தீர்கள். அவற்றில் 6-10 வரைக்குமான கேள்விகளுக்கான பதில்களை நான் கீழே கொடுத்துள்ள வலைத்தளத்தில் பார்க்கலாம்

      இந்த தளம் தான் நான் ‘heliocentry theoryஐ’ எதிர்க்க அடித்தளம். சூரிய மையம் ஏன் தவறு என்பதற்கான ‘விளக்கம்’ கீழ் உள்ள ‘லிங்க்ல்’ உள்ளது

      http://www.wildheretic.com/heliocentric-theory-is-wrong-pt1/

      சூரிய மைய கொள்கையை மற்றும் இன்ன பிற தகவல்களை பார்க்க

      http://www.wildheretic.com/
      http://www.wildheretic.com/heliocentric-theory-is-wrong-pt2/

      ‘Comments’ தான் மிக முக்கியமானவை. உதாரண கமெண்ட் ஒன்று கீழே

      Keiran Nariek November 20, 2015 at 9:46 pm
      I am amazed that people are willing to advertise their unintelligence in public :O
      Things that “hover” don’t have the Earth moving under them? Of COURSE they don’t because they have an initial momentum when they take off, as does the air they travel through, all rotating nicely WITH the Earth thank you very much!
      Go back to school… LMAO! these sites are SOOO funny!)

      Wild HereticWild Heretic November 22, 2015 at 1:29 pm
      “all rotating nicely WITH the Earth” —–> That is the key to the whole mess. Now don’t go back to school, but think about what you have just said and begin a new education.

      நன்றி

      • திரு. சதீஷ்,

        லிங்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. மேல சொன்னது போல, ஒரு பாயிண்ட் இருந்து ஆரம்பிப்போம். லிங்க், 200 reasons அதெல்லாம் வேண்டாம்.

        உங்களை பொறுத்தவரை மிக, மிக முக்கியமான காரணம் எது? இந்த ஒன்று heliocentric எதிர்ப்புக்கு மிக முக்கிய காரணி என்பது உங்களை பொறுத்தவரை எது? அதை தங்கள் வார்த்தைகளில் கூறவும். source, வெப்சைட் எல்லாம் வேண்டாம். நம் வார்த்தைகள், லாஜிக் கொண்டே நாம் இப்போது பேசுவோம்.

        • சரி. முதலில் ஒரு சாதாரண மனிதனாக கேள்விகள் ‘9 அண்ட் 10க்கு’ விஞ்ஞான ரீதியான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்

          சூரிய மைய்ய கொள்கை சரி என்றால் 9 & 10கான விடைகள் பதியவும். Nandri

    • @@@சிந்தனை செய்

      மன்னிக்கவும். மேலே கொடுக்கப்பட்ட லிங்கில் 6-8 வரையிலுமான கேள்விகளுக்கே விடைகள் இருக்கும்

      ‘மதம்’, ‘மாடு’, ‘பக்த்’ என்று சொல்லி இடையில் சற்று ‘மடை மாற்றி’ விட்டார்கள் என்பது உண்மையே

      கீழே உள்ளவற்றிற்கு நானே விடை அளித்து விட்டேன். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பதிகிறேன்

      9. ‘பூமி சுற்றாத போதே’ ஒரு பறவை ‘இறை தேட சென்று விட்டு’ தன்னுடைய கூட்டை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. – இதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இனிமேலும் கண்டுபிடிப்பார்களா என்பது மிகவும் சந்தேகத்திற்கு உரியது

      10. சுற்றும் பூமியில் எப்படி பறந்து சென்ற பறவைகள் தங்கள் கூட்டுக்கு திரும்பி வருகின்றன. – இந்த ‘Scenario’ ஒரு பறவையின் செயல்பாட்டை கண்டுபிடிப்பது என்று ‘விஞ்ஞானத்தால்’ இயலாத விஷயம். குறிப்பக்க ‘1600’ மைல் வேகத்தில் சுற்றும் பூமியின் “””‘எதிர் திசையில்'””” பறவை பறப்பது என்பதே ‘கடினமானது’. ஏனென்றால் ‘காற்றின்’ வேகத்தை நினைத்து பாருங்கள்!!!

      ‘சூரிய மைய்ய கொள்கை’ என்பது
      (1) ‘கணித ரீதியானது’ (pure astronomical calculations).
      (2) எனக்கு தெரிந்து அவற்றிற்கு ‘செயல்முறை ஆதாரம் இல்லை’
      (3) 100% நிரூபிக்கப்படாத ஒன்று (எப்படி என்பதற்கு எளிதாக புரிந்து கொள்ள கேள்விகள் 9 & 10ஐ பார்க்கவும்). அவை தவிர விஞ்ஞான ரீதியாக நிறைய சொல்லப்படுகின்றன

      மேற்சொன்ன 3 மூன்று விஷயங்களை மனதில் வைத்து கொள்ளாமல் ‘விஞ்ஞானம்’ சொல்லிவிட்டது என்று வாதாடினால் அது அவர்களின் ‘நம்பிக்கை’ மட்டுமே. அது ‘விஞ்ஞானம்’ ஆகாது

      நான் கொடுத்த தளத்தில் உள்ள விஷயங்களை நீங்கள் முடித்து விட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்

      மற்ற கேள்விகளை பற்றி விவாதிப்போம். அதாவது கேள்விகள் 1-5ஐ விவாதிப்போம்

      நன்றி

      • //குறிப்பக்க ‘1600’ மைல் வேகத்தில் சுற்றும் பூமியின் “””‘எதிர் திசையில்’””” பறவை பறப்பது என்பதே ‘கடினமானது’. ஏனென்றால் ‘காற்றின்’ வேகத்தை நினைத்து பாருங்கள்!!!//

        திரு. சதீஷ், நீங்கள் கூறிய மேலே நான் quote செய்த விசயத்தில் இருந்து ஆரம்பிப்போம்.

        உங்களை பொறுத்தவரையில் காற்று(wind and everything related to it) என்பது பூமி சுற்றுவதால் உருவாகிறது என்பது சரியா? Is that an accurate representation of your views? If not, please do rephrase it to an accurate representation.

        • // உங்களை பொறுத்தவரையில் காற்று(wind and everything related to it) என்பது பூமி சுற்றுவதால் உருவாகிறது என்பது சரியா? Is that an accurate representation of your views? If not, please do rephrase it to an accurate representation. //

          என்னை பொறுத்தவரை என்று சொல்வதை விட ‘விஞ்ஞானத்தை’ பொறுத்தவரை என்று சொல்வது சரியாக இருக்கும்

          // காற்று(wind and everything related to it) என்பது பூமி சுற்றுவதால் உருவாகிறது // ‘காற்று’ என்பது பூமி சுற்றுவதால் உருவாவதில்லை. அதற்க்கு தனி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பிறகு பார்ப்போம்

          இயற்கையாகவே பூமியோடு ‘காற்று மண்டலமும்’ (earth atmosphere) ஒட்டி இருக்கிறது. ‘காற்று மண்டலம்’ பூமியோடு ‘எந்த சக்தியால்’ ஒட்டியிருக்கிறது என்பதற்கு ‘சரியான’ விளக்கங்கள் இல்லை. பொதுவாக ‘க்ராவிட்டி’ என்று சொல்லப்படுகிறது

          பூமி ‘1600 மைல்’ வேகத்தில் சுற்றும் போது அதனோடு ஒட்டி இருக்கும் ‘காற்று மண்டலமும்’ 1600 மைல்கள் சுற்றவேண்டும். ‘காற்று மண்டலமும்’ பூமியோடு சேர்ந்து ‘1600 மைல்கள்’ வேகத்தில் சுழல்வதால் ‘காற்றின் வேகம்’ எப்படி இருக்கும் தாங்களே யூகித்து கொள்ளுங்கள்

          • //பூமி ‘1600 மைல்’ வேகத்தில் சுற்றும் போது அதனோடு ஒட்டி இருக்கும் ‘காற்று மண்டலமும்’ 1600 மைல்கள் சுற்றவேண்டும். ‘காற்று மண்டலமும்’ பூமியோடு சேர்ந்து ‘1600 மைல்கள்’ வேகத்தில் சுழல்வதால் ‘காற்றின் வேகம்’ எப்படி இருக்கும் தாங்களே யூகித்து கொள்ளுங்கள்//

            பூமியோடு காற்று மண்டலமும் இருப்பதால், அதுவும் சுழலவேண்டும் என்பதில் நம் இருவருக்கும் மாற்று கருத்து இல்லை. இதில் காற்றின் வேகம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?

            ஒரு addendum. பூமி சுழல்வது மட்டுமே wind உருவாக காரணமா? அல்லது வேறு ஏதேனும் முக்கிய factors உண்டா?

            • பூமி சுற்றவில்லை என்பது தான் என் முதல் வாதம்.

              // பூமியோடு காற்று மண்டலமும் இருப்பதால், அதுவும் சுழலவேண்டும் என்பதில் நம் இருவருக்கும் மாற்று கருத்து இல்லை.//

              இபோதைக்கு பூமி சுற்றவாதாக வைத்து கொள்வோம். பூமியோடு சேர்ந்து காற்று மண்டலமும் சுழல வேண்டும். சரி

              // இதில் காற்றின் வேகம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்? // – இது எனக்கு தெரியாது. ஆனால் பூமியின் அதே வேகத்தில் (அதாவது 1600 மைல்கள்) காற்று மண்டலத்தால் சுழல முடியாது.

              அப்படி எல்லாம் ஒரே வேகத்தில் சுழல வேண்டுமானால் ‘பூமி மற்றும் காற்று மண்டலம்’இரண்டு ஒரே அடர்த்தியில் (same density) இருக்க வேண்டும்.(OR) Gravity somehow should resolve the differences in density. But, I need the theory for that in case if ‘Gravity’ resolves

              இதை தான் நான் என்னுடைய பழைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன். ஆதாரமும் நான் பகிர்ந்த linkல் உள்ளது

              http://www.wildheretic.com/heliocentric-theory-is-wrong-pt1/

              Nandri

              • //ஆனால் பூமியின் அதே வேகத்தில் (அதாவது 1600 மைல்கள்) காற்று மண்டலத்தால் சுழல முடியாது.//

                திரு. சதீஷ்,

                இது தான் உங்கள் அடிப்படை பாயிண்ட். இது ஏன் என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்பதும் கீழே:

                //பூமி மற்றும் காற்று மண்டலம்’இரண்டு ஒரே அடர்த்தியில் (same density) இருக்க வேண்டும்.(OR) Gravity somehow should resolve the differences in density. But, I need the theory for that in case if ‘Gravity’ resolves//

                இதில் அடிப்படை கேள்வி, அடர்த்திக்கும் வேகத்துக்கும் என்ன சம்பந்தம்? இரு வேறு அடர்த்தி உள்ள substance ஒன்றாக இருக்கும் போது அதன் மீது force செலுத்தினால் என்ன நடக்கும்? உதாரணமாக ஓடும் ஆற்றில் அல்லது ஒரு stream of waterஇல் ஒரு துணி விழுந்தால் அது ஆற்றின் வேகத்தில் செல்லுமா அல்லது அதன் அடர்த்தி வேறு என்பதால் வேறு வேகத்தில் செல்லுமா?

                மிக எளிதாக, நீங்கள் சொல்வது போல பூமியின் வேகத்தில் காற்று மண்டலத்தால் சுழல முடியாது என்றால், அதற்க்கு காரணமாக ஒரு mechanism இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன? எல்லாம் ஒரே வேகத்தில் சுழல வேண்டும் என்றால் ஏன் கண்டிப்பாக ஒரே அடர்த்தியில் இருந்து தான் தீர வேண்டும்?

                • @@@சிந்தனை செய்

                  // இதில் அடிப்படை கேள்வி, அடர்த்திக்கும் வேகத்துக்கும் என்ன சம்பந்தம்? இரு வேறு அடர்த்தி உள்ள substance ஒன்றாக இருக்கும் போது அதன் மீது force செலுத்தினால் என்ன நடக்கும்? உதாரணமாக ஓடும் ஆற்றில் அல்லது ஒரு stream of waterஇல் ஒரு துணி விழுந்தால் அது ஆற்றின் வேகத்தில் செல்லுமா அல்லது அதன் அடர்த்தி வேறு என்பதால் வேறு வேகத்தில் செல்லுமா? // இது நல்ல கேள்வி தான். இதை பற்றிய விவாதம் வேறு ஒரு தளத்தில் நடந்து உள்ளது. அந்த தளத்தில் ‘துணிக்கு” பதிலாக ”மரத்தின் இலையை’ பயன்படுத்தி கேள்வி கேட்டு இருப்பார்கள். தளத்தை நான் மீண்டும் தேடி தான் எடுக்க வேண்டும்

                  // மிக எளிதாக, நீங்கள் சொல்வது போல பூமியின் வேகத்தில் காற்று மண்டலத்தால் சுழல முடியாது என்றால், அதற்க்கு காரணமாக ஒரு mechanism இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன? எல்லாம் ஒரே வேகத்தில் சுழல வேண்டும் என்றால் ஏன் கண்டிப்பாக ஒரே அடர்த்தியில் இருந்து தான் தீர வேண்டும்? //

                  அப்படி தான் Áerodynamics விதி சொல்கிறது. அதனால் தான் விவாதமே. அப்படி எல்லாம் இல்லை, உங்கள் புரிதல் தவறு (அல்லது) அந்த விதி தவறு என்று யாரவது விளக்கினால் நல்லது தான்

                  இதை தான் அந்த blogger விவாதத்தின் போதும் பதிந்து இருக்கிறார்

                  Wild HereticWild Heretic December 30, 2015 at 3:59 pm
                  For other readers:
                  https://www.youtube.com/watch?v=nAifrGXkE2k

                  So, yet again all arguments come back to why and how substances of all different densities move in sync with the rotating Earth? Is there an all-encompassing field which moves everything in tandem? What is the force that rotates the Earth and where does it emanate from? Has no physicist in the entire history of “science” ever bothered to ask such a question? Or is the “science” sold to us merely contrived marketing to give us a world-view in the marketeer’s image?

                  Thanks

                  • //அப்படி தான் Áerodynamics விதி சொல்கிறது.//

                    எந்த aerodynamics விதி அது. அது எப்படி பூமி சுழல்வதற்கு apply செய்யபடுகிறது?

                    கூடுதலாக இன்னொரு சந்தேகம். பூமி மற்ற கிரகங்கள் போலவே ஒரு sphere என்பதில் உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து உண்டா?

                    • // எந்த aerodynamics விதி அது. அது எப்படி பூமி சுழல்வதற்கு apply செய்யபடுகிறது? //

                      என்னுடைய புரிதல் சரி என்றால் ‘aerodynamics’ விதி பூமி சுழற்சிக்கு பயன்படுத்தவில்லை. மாறாக ‘பூமியின் சுழற்சியை’ எதிர்த்து கேள்வி கேட்க பயன்படுகிறது

                      விஞ்ஞானிகள் ‘பூமி, கடல். காற்று மண்டலம்’ அனைத்தும் ஒரே வேகத்தில் தான் ‘சுற்றுகிறது’ என்று கூறுகின்றனர்.

                      ஆனால் அவர்களே ‘aerodynamics theoryல்’ densityஐ பயன்படுத்தி ‘solid’ மற்றும் ‘gas’ இவற்றை வேறுபடுத்தியுள்ளனர். ‘

                      A denser solid object does not carry a less dense gas along with it’. எனக்கு தெரிந்து இந்த விதியை ‘தவறு’ என்று அந்த blog முழுவதும் விவாதம் செய்த யாருமே சொல்லவில்லை. மாறாக வேறு சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

                      ஒரு புறம் விஞ்ஞானிகள் அனைத்தும் ‘ஒரே வேகத்தில்’ (regardless of their density) சுழல்கிறது என்கின்றனர். ஆனால் மறுபுறம் அவர்களே ‘aerodynamicsல்’ (used in aircraft designing where these rules are followed) வேறு மாதிரியாக கூறியுள்ளனர்.

                      இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் இது ‘கேள்விகேட்கப்படுகிறது’ (அல்லது) ‘ஏற்று கொள்ளும்படியாக இல்லை’

                      பூமி மைய கொள்கை நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் ‘Ptolemy’ அவர்கள் கிரகங்களின் ‘வக்கிர சுழற்சியில்’ உள்ள கணித முறை தான். எனக்கு தெரிந்து இப்போது பயன்படுத்தப்படும் சூரிய மைய கொள்கை ‘கணித ரீதியில்’ (astronomical calculation or mathematical model ) simplify செய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் அதே சமயம் ‘Ptolemy’ அவர்களின் ‘model’ total failure என்றும் சொல்லமுடியாது. இது வேறு விவாதம்

                      // கூடுதலாக இன்னொரு சந்தேகம். பூமி மற்ற கிரகங்கள் போலவே ஒரு sphere என்பதில் உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து உண்டா? // See reply 29.1.1.1

                      நன்றி

              • \\‘பூமி மற்றும் காற்று மண்டலம்’இரண்டு ஒரே அடர்த்தியில் (same density) இருக்க வேண்டும்.(OR) Gravity somehow should resolve the differences in density. But, I need the theory for that in case if ‘Gravity’ resolves//

                ஓடும் பேருந்தின் மீது கட்டப்பட்டிருக்கும் பொதிகள் அடர்த்தி வேறுபாடு காரணமாக பேருந்தின் வேகத்தில் வர முடியாது என அடம் பிடிப்பதில்லை.பூமிதான் சுழல்கிறது.காற்று மண்டலத்தை ஈர்ப்பு விசையால் தன்னோடு கட்டிபோட்டுக்கொண்டு அதனை இழுத்து செல்கிறது.காற்று மண்டலம் தானாக சுழலவில்லை.அவ்வளவுதான், இப்படி எளிமையாக புரிந்து கொள்வதை விடுத்து ஏனிந்த விதண்டாவாதம்.

                • // பூமிதான் சுழல்கிறது.காற்று மண்டலத்தை ஈர்ப்பு விசையால் தன்னோடு கட்டிபோட்டுக்கொண்டு அதனை இழுத்து செல்கிறது.காற்று மண்டலம் தானாக சுழலவில்லை.அவ்வளவுதான் //

                  இங்கே தான் பிரச்சனையை ஆரம்பமாகிறது. ‘ஈர்ப்பு விசை’ என்பது எனக்கு தெரிந்து ‘pulling force’ தானே ?

                  First of all ‘காற்று மண்டலம்’ சுழல்கிறதா ? நன்றாக யோசித்து கொள்ளுங்கள். முடிந்தால் விவாதத்தை முதலில் இருந்து படிக்கவும்

                  Thanks

                  • விவாதத்தின் துவக்கத்திலேயே நீங்கதான் சொல்லிருக்கீங்க,கூடுதலான அடர்த்தி கொண்ட பூமி சுழல்வதாக இருந்தால் குறைவான அடர்த்தி கொண்ட காற்று உடன் சுழல முடியாது.தப்பி சென்றிருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.,அதைத்தான் மறுபடியும்

                    //பூமி மற்றும் காற்று மண்டலம்’இரண்டு ஒரே அடர்த்தியில் (same density) இருக்க வேண்டும்.(OR) Gravity somehow should resolve the differences in density. But, I need the theory for that in case if ‘Gravity’ resolves//

                    என சொல்கிறீர்கள்.அதற்க்குத்தான் ஓடும் பேருந்து,பொதிகள் எடுத்துக்காட்டு தந்து விளக்கி இருக்கிறேன்.அதற்க்கு நீங்கள் அளிக்கும் விடை,

                    \\‘ஈர்ப்பு விசை’ என்பது எனக்கு தெரிந்து ‘pulling force’ தானே ?//

                    ஆமா அது ‘pulling force’ தான்.அதை வச்சு என்ன சொல்ல வரீங்க.

                    \\ ‘காற்று மண்டலம்’ சுழல்கிறதா ? நன்றாக யோசித்து கொள்ளுங்கள். முடிந்தால் விவாதத்தை முதலில் இருந்து படிக்கவும்//

                    பூமியுடன் சேர்ந்து அதுவும் பயணிக்கிறது,தானாக சுழலவில்லை.அதற்க்கு பெயர்தான் சார்பு இயக்கம்.அதனால்தான் நிற்கும் பேருந்திலிருந்து குதிக்க முடிகிறது.ஓடும் பேருந்திலிருந்து குதித்தால் கீழே விழுந்து விடுகிறோம்.

                    • விஞ்ஞானம் அவ்வளவு எளிதாக இருந்தால் இந்த விவாதம் தேவை இல்லை

                      நானும் , “திரு சிந்தனை செய்” அவர்களும் எங்கள் சிற்றறிவுக்கு ஏற்றாற்போல் விவாதித்து கொண்டு இருக்கிறோம்

                      எல்லாம் தெரிந்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்களாகவே இருக்கட்டும்

                      நன்றி

                    • அடேங்கப்பா ,கலாய்க்கிறாராம்.சிற்றறிவு பேரறிவுன்னு லொள்ளுக்கு ஒன்னும் குறைச்சலில்லை,ஆனா கேட்ட கேள்விக்கு விடை சொல்லத்தான் துப்பில்லை.

                      அய்யா,பேரறிவாளரே,அறிவியல் கடினமானதுதான்.அது யாருக்கு என்றால் இதுவரை மனிதகுலம் அறிந்திராத ஒரு உண்மையை ஆய்வு செய்து எல்லோருக்கும் தெரிவிக்கிறார்களே அந்த அறிவியல் ஆய்வாளர்களுக்கு கடினமானது.உங்களுக்கும் எனக்கும் அல்ல.பிறர் ஆய்வு செய்து சொன்னவற்றை படித்தோ ,கேட்டோ புரிந்து கொள்வதில் என்ன கடினம் இருக்கிறது.என்ன அதை புரிந்து கொள்வதற்க்கு மனித மூளை வேண்டும்.ஆட்டு மூளைகளுக்கு அது கடினம்தான்.

                      அப்புறம் தனக்கு சிற்றறிவு என்று சொல்வதை அவையடக்கம்,என்றோ வஞ்சப்புகழ்ச்சி என்றோ எடுத்துக்கொள்ளலாம்.உடன் விவாதிப்பவருக்கும் சிற்றறிவு என சொல்வது ஆணவம்,திமிர்.

                      அதனால் அறிவாளியே,கேட்ட கேள்விக்கு விடை இருந்தால் சொல்லுங்கள்.இல்லையேல் அமைதியாக மற்ற நண்பர்களின் விவாதத்துக்கு நகர்ந்து விடுங்கள்..உங்க நல்லதுக்கு சொல்கிறேன்.சமாளிக்கிறேன் பேர்வழின்னு இப்படி உளறி வைக்காதீங்க.ரெம்ப அசிங்கமா இருக்கு.

                    • @@@ Thippu, Ajathasathru

                      முழுக்க முழுக்க விஞ்ஞானத்தை பற்றி நான் பேசும் போது ‘மதம்’, ”மாடு’ என்றெல்லாம் விவாதத்தை திசை திருப்புவது நானா ? உங்களை போன்றவர்களா ?

                      // பிறர் ஆய்வு செய்து சொன்னவற்றை படித்தோ ,கேட்டோ புரிந்து கொள்வதில் என்ன கடினம் இருக்கிறது. // பிறகு என் நான் சொன்ன பதில்களை புரிந்து கொள்ளாமல் அதையே வேறு வடிவத்தில் கேட்கிறீர்கள்

                      // இந்த ஈர்ப்பு விசை எல்லா பொருண்மைக்கும், வாயு முதல் இரும்பு, பாதரசம் போன்ற எல்லா பொருண்மைக்கும் உண்டு-அவைகளின் அடர்த்தி எண்ணுக்கு ஏற்றார்ப்போல! //

                      நீங்கள் கேள்வி கேட்கவேண்டியது என்னையல்ல. விஞ்ஞானத்தை.

                      // அதனால் அறிவாளியே,கேட்ட கேள்விக்கு விடை இருந்தால் சொல்லுங்கள்.இல்லையேல் அமைதியாக மற்ற நண்பர்களின் விவாதத்துக்கு நகர்ந்து விடுங்கள்..உங்க நல்லதுக்கு சொல்கிறேன்.சமாளிக்கிறேன் பேர்வழின்னு இப்படி உளறி வைக்காதீங்க.ரெம்ப அசிங்கமா இருக்கு. //

                      எனக்கு சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. திருவாளர் ராமன் என்னென்ன பேசியுள்ளார், என்னென்னெ பதில் சொல்லியுள்ளார் என்பதை படித்து விட்டு மீண்டும் வரவும்

                      அறிவுரைகளும், நக்கல்களும், நய்யாண்டிகளும், ”மத கிரிமினல்” என்கிற பட்டமும் தான் மிச்சம் இந்த விவாதத்தில் எனக்கு

                      நான் என்னுடைய கேள்விகளை கேட்டு விட்டேன். பல முறை கேட்டு விட்டேன் இது வரை யாரிடமிடம் இருந்தும் பதில் வரவில்லை

                      உண்மையிலேயே உங்களுக்கு விவாதத்தில் பதில் சொல்ல ஆர்வமிருந்தால் கேள்விகளை நன்றாக புரிந்து கொண்டு பதில் தரவும்

  27. திரு சிந்தனை செய் அவர்களே,

    உங்களுக்கு வேறு ஏதேனும் ‘கேள்விகள் இருந்தால்’ கேட்கலாம். எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்

    உங்களுக்கு எதுவும் கேள்விகள் இல்லையென்றால் ‘நீங்களே’ அந்த தளத்தை ‘படித்து’ இங்குள்ளவர்களுக்கு ‘உண்மையை’ எடுத்து சொல்லி விடவும்

    குறைந்தபட்சம் நீங்கள் ‘ஒருவராவது’ சரியாக புரிந்து கொண்டால் நன்றி. ஏனென்றால் ‘என்னை திட்டுவது மட்டுமில்லாமல்’, ‘வினவு அட்மினையும்’ சேர்த்து திட்ட ஆரம்பித்து விட்டார்கள்

    விஞ்ஞானம் தான் ‘விதிகளை ‘ வகுத்து இருக்கிறது. ஆனால் அந்த விதிகளை ‘எந்த விளக்கமும்’ சொல்லாமல் ‘விஞ்ஞானம்’ தான் மீறுகிறது. இதை கேள்வி கேட்டால் ‘அறிவற்றவன்’, ‘மத போதகர்’ என்றெல்லாம் ‘பட்டம்’ சூட்டுகின்றனர்.

    இது வரைக்கும் பதிவுகளை அனுமதித்த ‘வினவு அட்மின்கும்’ நன்றி

    நன்றி

    • யப்பா சதீசு ,
      முதலில் நீங்கள் ஸ்மார்ட்டான ஆள். மதம் சார்ந்து அறிவியலை மறுக்கிறீர்கள் என்று நினைத்தேன் . இப்பொழுது ஏதோ ஒரு க்லட் இடம் மாட்டி இருக்கிறீர்கள் .

      இப்பொழுது உங்கள் மன நிலை:-
      அந்த வெப்சைட்டில் போடுவது மட்டும் தான் விஞ்ஞானம். பூமி சுத்தும் வீடியோ காட்டினாலும் நம்ப மாட்டேன். எந்த அறிவியிலயும் நம்ப மாட்டேன் . அறிவியல் என்பது மக்கள் நம்பும் ஒரு நம்பிக்கை . அது நிரூபிக்க படாதது . விஞானம் என்பது அந்த வெப் சைடில் சொல்வது .அவர்கள் சொல்வது சரி என படுகிறது. அவர்கள் எதையும் நிரூபிக்க வேண்டியது இல்லை.

      அடுத்து நீங்கள் ஒரு கல்ட் இக்கே உரிய , நமக்கு மட்டும் தான் தெரியும் . அடுத்தவங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது என்றும் நினைக்கிறீர் .

      இவர்களுக்கே எப்படி சொல்லி புரிய வைக்க போறோம் என்று வேறு நினைக்கிறீர் சரி தானே !

      உண்மை நிலவரம் :
      பள்ளி சூழலில் , பள்ளியில் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியலை ஏதோ ஒரு முட்டாள் கும்பலிடம் போய் படித்து , அவர்கள் சொல்வது மனதிற்கு சரியாக படுகிறது என்று முழமையாக நம்பி ஏமாந்து நிற்கிறீர்கள் .

      இப்பொழுது இந்த முட்டாள்தானத்தில் இருந்து வெளியே வருவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான் . நீங்களாக முயற்சி எடுக்காமல் பாழும் கிணற்றில் இருந்து வெளியே வர முடியாது.

      வெட்டியாக தேவை இல்லாத இணைய தளத்தை படிப்பதை விட்டு விட்டு , புத்தகத்தை படியுங்கள் .

      கடைசியாக ஒரு கேள்வி ?
      உலகம் தட்டை இல்லை , உருண்டை என்று எப்படி நம்புகிறீர்கள் ? உருண்டை என்றால் , மேலே அர்டிக்கில் இருப்பவர்கள் தான் நேராக நிற்க்க முடியும் , இந்தியா இருக்கும் நில நடு கோட்டிற்கு அருகே , மக்கள் எப்படி நேராக நிற்க முடியும் . இன்னும் கீழே அண்டார்டிகாவில் நிற்கவே முடியாதே ? உங்கள் குருஜி இடம் கேட்காமல் நீங்களே சொல்லுங்கள்.

      • சதீசு ,

        உங்கள் உதவி இல்லாமல் உங்களை தெளிய வைக்க முடியாது . உங்கள் குருஜி இடம் கேட்காமல் நீங்களே இந்த எஸ்பிரிமெண்ட்டை செய்யுங்கள்.

        நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலில் ஏறுங்கள்.

        எஸ்பிரிமெண்ட் 1

        ரயிலின் மூன்றாவது படுக்கை உயரத்தில் இருந்து ஒரு பந்தை கீழே போடுங்கள்.

        பந்து கீழே விழுவதற்குள் , ரயில் எத்துனை தூரம் நகர்ந்தது ?

        அடுத்து ஒரு கோழி இறகை கீழ போடுங்கள் . அது கீழே விழுவதற்குள் ரயில் எத்துனை தூரம் நகர்ந்தது ?

        நீங்கள் ஒரு ஹை ஜம்ப் செய்யுங்கள் . நீங்கள் மேலே குதித்து கீழே வருவதற்குள் ரயில் எவ்வளவு தூரம் நகர்ந்தது ?

        எஸ்பிரிமெண்ட் 2

        இப்பொழுது ரயில் செல்லும் திசையில் நண்பரை ஒரு இருபதடி நிற்க சொல்லி , பந்தை வீசுங்கள்.

        நீங்கள் எத்துனை கிலோமீட்டர் வேகத்தில் பந்தை நண்பருக்கு வீசினீர்கள் ?

        ரயிலின் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் பந்து உங்களிடமே இருக்குமா ?

        நூறு கிலோமீட்டருக்கு அதிகமான வேகத்தில் வீசினால் தான் பந்து உங்கள் நண்பரிடம் செல்லுமா ?

        இப்பொழுது உங்கள் நண்பர் உங்களுக்கு பந்தை வீச வேண்டும் . அவர் பந்தை வீசாமல் சும்மா விட்டாலே உங்களிடம் வருமா ? பந்த உங்கள் நண்பர் விட்டவுடன் நீங்கள் நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்று பந்தை பிடித்துவிடுவீர்களா ?

        • இந்த கேள்வியை கேட்டு கேட்டு வெறுத்து விட்டேன் நான். சரி. உங்களின் கூற்றுப்படியே அவர், நான் எல்லோரும் ‘முட்டாள்’, ‘கல்ட்’ ஆகவே இருந்து விட்டு போகட்டும்

          அடிப்படையான கேள்வி : எந்த அடிப்படையில் ‘aerodynamics’ அடிப்படை விதியை மீறி ‘பூமி சுற்றுகிறது’?

          இதில் என்ன தவறு கண்டுவிட்டீர்கள் தாங்கள் ? (அல்லது) இந்த கேள்வியில் விஞ்ஞான ரீதியாக தவறு ஏதேனும் இருந்தால் ‘விஞ்ஞான ரீதியாக’ கேள்வியே தவறு என்று சுட்டி காட்டுங்கள்

          நாங்கள் சொல்வது தவறாகவே இருந்தாலும் ‘விஞ்ஞான ரீதியான’ வாதத்தை முன்வையுங்கள். இந்த ‘விஞ்ஞான விதிப்படி’ பூமி ‘aerodynamics’ அடிப்படை விதியை மீறி சுற்றுகிறது என்று சொல்லுங்கள். ஏற்றுக்கொள்ளுகிறோம்.

          எங்களுக்கு எது தவறாக தோன்றுகிறதோ அதை நாங்கள் கேள்வியாக முன் வைக்கிறோம். ‘,முட்டாள்’, ‘கல்ட்’ என்று வாயால் சொல்வதை விட ‘விஞ்ஞான ரீதியாக’ சொல்லிவிட்டால் எங்களால் மறுக்க முடியாது என்பது உண்மை தானே ?

          இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் விவாதத்தை ஏன் நகர்த்துகிறீர்கள் ?

      • திருவாளர் ராமன் அவர்களே,

        நீங்கள் அந்த வெப்சைட் ஓபன் கூட செய்யவில்லை என்று நினைக்கிறன் (அல்லது) நீங்கள் ஒரு கமெண்டை கூட படிக்கவில்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது

        உங்களுக்கு தெரியாத ஒன்றை சொன்னால் உடனே அவர்களை ‘கல்ட்’, ‘முட்டாள்’ என்று பட்டம் சூட்டுவீர்களா ?

        உங்களிடம் யார் ‘பூமி சுற்றும்’ விடியோவை பதிய சொன்னது. ‘சூரிய மைய்ய கொள்கையை’ எந்த ‘scientific experiment’ மூலமாக நிரூபித்தனர். அதன் பெயரை பதியவும். எதற்கு வாதம் ?

        இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் ‘பூமி சுற்றுவதற்கு எதிராக’ ஒரு வெப்சைட் அறிவியல் ரீதியான கேள்விகளை முன்வைத்தால் அது ‘வெட்டியா’? உங்களை பொறுத்தவரை

        சரி வெட்டி, முட்டாள் என்றே வைத்துக்கொள்வோம்.

        அடிப்படையான கேள்வி : எந்த அடிப்படையில் ‘aerodynamics’ அடிப்படை விதியை மீறி ‘பூமி சுற்றுகிறது’? இதுவும் தவறு என்று சொல்வீர்களா ?

        நாங்கள் சொல்வது தவறாகவே இருந்தாலும் ‘விஞ்ஞான ரீதியான’ வாதத்தை முன்வையுங்கள். இந்த ‘விஞ்ஞான விதிப்படி’ பூமி ‘aerodynamics’ அடிப்படை விதியை மீறி சுற்றுகிறது என்று சொல்லுங்கள். ஏற்றுக்கொள்ளுகிறோம்.

        கேள்விக்கு பதில் சொன்னால் தானே தெளிவு பிறக்கும். யாராக இருந்தாலும் அதானே உண்மை. மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே என் அரைக்கிறீர்கள் ?

        மேலும் நீங்கள் என்னிடம் கேட்பதை விட அவரிடமே கேட்கலாம். ஏன் இப்படி ‘உலகத்தை ஏமாற்றுகிறீர்கள்’ என்று கூட கேட்கலாம்

        அவரை நீங்கள் ‘முட்டாள்’ என்று சொல்லி உள்ளீர்கள். ஆனால் அவருக்கு வேறு ஒருவர் இப்படி கமெண்ட் செய்து இருக்கிறார்.

        Sam Crawford February 26, 2015 at 8:48 pm
        Have you submitted any of this to a scientific, peer-reviewed journal? —-> இப்படி சொன்னவனும் ‘விஞ்ஞானம்’ தெரிந்தவன் தானே ? அப்போது ‘கமெண்ட்’ போட்டவரும் முட்டாளா ?

        a) அந்த வெப்சைட் உருவாக்கினவன் முட்டாள். சரி
        b) அந்த வெப்சைட் படித்து கமெண்ட் போட்டவன் முட்டாள் – அதுவும் சரி.
        c) அந்த வெப்சைட் படித்த நானும் முட்டாள் – மிகவும் சரி

        மேலே நான் சொன்ன அனைத்தும் சரி. ஆனால் தாங்கள் எனக்கு தேவையான ‘விஞ்ஞான விளக்கத்தை’ அளிக்கவில்லையே இன்னும் ?

        மீண்டும் மீண்டும் அறிவுரைகள் தான் பதிலாக வருகின்றன.

        நன்றி

  28. எந்த வெப்சைட் ஓபன் செய்தாலும் ‘Closed train’ , moving train’ வாதங்கள் தான் முன்வைக்கப்படுகின்றன

    நான் கொடுத்த வெப்சைட்லும் தெளிவாகவே விவாதித்து இருக்கிறார்கள். அதற்காக தான் ‘comments’ செக்ஷனை படிக்க சொன்னேன்

    இருந்தாலும் ஒரு ‘சிறு துணுக்கை’ மட்டும் பேஸ்ட் செய்கிறேன்

    Wild Heretic September 5, 2015 at 7:40 am
    I’ve done this moving earth argument a thousand times. See comments below. The moving train is a very poor analogy. 1. If you stood on a train going at 150 km/h, you too would experience 150 km/h winds going in the other direction. 2. helicopters, balloons, and planes don’t jump. They are in the air for hours, not seconds.

    ‘ If you jumped on a moving train and stayed in the air for hours, do you think you would still land on that train? ‘ —–> இந்த வரியில் உங்களுக்கான விடை இருக்கிறது. ‘Jumping Inside Train’ விவாதமும் ‘comments’ உள்ளது

    இதை பற்றிய விரிவான விவாதம் அங்கேயே உள்ளது. அங்கே விவாதம் எல்லாம் நடக்காமல் ஒன்றும் இல்லை. ‘Bloggerக்கு’ மட்டும் தான் விஞ்ஞானம் தெரியுமா ? கேள்வி கேட்பவர்களுக்கு விஞ்ஞானம் தெரியாதா?

    வருவோர், போவோர் எல்லாரையும் ‘முட்டாள்’, ‘கல்ட்’ என்று சொன்னால் ‘கேள்வி கேட்காமல்’ இருப்பதே சால சிறந்தது.

    நீங்கள் ‘closed earth modelஐ’ follow செய்கிறீர்களா ? அல்லது ‘open earth modelஐ’ follow செய்கிறீர்களா ? சூரிய மைய்ய கொள்கை என்ன சொல்கிறது

    எது எப்படி இருந்தாலும் ‘அடிப்படையான கேள்வி (அல்லது) சந்தேகத்திற்கு’ பதில் அளிக்காமல் விவாதத்தை நகர்த்தாதீர்கள்

    நன்றி

    • உலகம் தட்டை இல்லை , உருண்டை என்று எப்படி நம்புகிறீர்கள் ? உருண்டை என்றால் , மேலே அர்டிக்கில் இருப்பவர்கள் தான் நேராக நிற்க்க முடியும் , இந்தியா இருக்கும் நில நடு கோட்டிற்கு அருகே , மக்கள் எப்படி நேராக நிற்க முடியும் . இன்னும் கீழே அண்டார்டிகாவில் நிற்கவே முடியாதே ? உங்கள் குருஜி இடம் கேட்காமல் நீங்களே சொல்லுங்கள்.

      • உலகம் உருண்டை என்றால் கடல் நீர் எப்படி பூமி பந்தின் மேலே போகும் . எல்லா நீரும் பூமி பந்தின் கீழே போயிருக்க வேண்டும் அல்லவா ? அப்படி என்றால் அண்டார்டிகா என்பதே நீரில் மூழ்கி இருக்க வேண்டும் ? பூமி உருண்டை என்று நம்பினால் விடை கொடுங்கள் ..

        பூமி சுற்றுகிறதா இல்லையா என்று விவாதிக்கும் முன்னர் பூமி உருண்டையா இல்லையா என்று ஒரு முடிவுக்கு வருவோம்

        • // உலகம் உருண்டை என்றால் கடல் நீர் எப்படி பூமி பந்தின் மேலே போகும் . எல்லா நீரும் பூமி பந்தின் கீழே போயிருக்க வேண்டும் அல்லவா ? அப்படி என்றால் அண்டார்டிகா என்பதே நீரில் மூழ்கி இருக்க வேண்டும் ? பூமி உருண்டை என்று நம்பினால் விடை கொடுங்கள் .//

          Honesty speaking இந்த விஷயத்தை பற்றி நான் சிந்தித்தது இல்லை. ஆனால் நான் படித்தது பூமி ‘exactly’ உருண்டை வடிவத்தில் இல்லை. நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு சற்று மாறுகிறது

          மேலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு நிறைய ‘visualization’ எனக்கு தேவைப்படுகிறது. ஆனால் இதற்க்கு பூமி ‘concave’ or ‘convex’ theory படிக்க வேண்டும் என்று நினைக்கிறன். இதிலும் நிறைய கருத்து மாறுபாடுகள் உள்ளன.

          So far நான் படித்து தெளிந்த ஒரே விஷயம்.

          பூமி சுற்றுகிறது என்பதை நிரூபிப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. நானும் ஒரு தேடலில் தான் இருக்கிறேன். ஒரே வரியில் ‘பூமி மைய கொள்கை தவறானது’ (அல்லது) ‘சூரிய மைய கொள்கை சரியானது’ என்று விஞ்ஞான ரீதியாகவே யாரும் சொல்ல முடியாது (அல்லது) சொல்லவும் கூடாது

          // பூமி சுற்றுகிறதா இல்லையா என்று விவாதிக்கும் முன்னர் பூமி உருண்டையா இல்லையா என்று ஒரு முடிவுக்கு வருவோம் //

          பூமி உருண்டை என்பதை நானும் நம்புகிறேன். பூமி மைய்ய கொள்கையை உருவாகின ‘Ptolemy’ அவர்களே கூட ‘flat earth’ என்று ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் ‘flat earth’ என்றால், என்னால் ‘பூமியின் இறுதி பகுதியை’ காண்பிக்க தெரிய வேண்டும். எனக்கு தெரிந்து இது அசாத்தியமான ஒன்று.

      • // இந்தியா இருக்கும் நில நடு கோட்டிற்கு அருகே , மக்கள் எப்படி நேராக நிற்க முடியும் // – If I am not wrong, this may be due to ‘centrifugal force’ at equator

  29. “பூமி சுற்றவில்லை” ! இதுவென்ன வினவுக்கு வந்துள்ள சோதனை! யார் இந்த சதீஷ்! கீழ்பாக்கத்தில் இருந்து தப்பித்து வந்துவிட்டாரா?

  30. திரு. சதீஷ்,

    மேலே பதில்கள் அளிக்க reply முடிந்து விட்டது, எனவே இங்கே தொடர்கிறேன்.

    //மாறாக ‘பூமியின் சுழற்சியை’ எதிர்த்து கேள்வி கேட்க பயன்படுகிறது//

    என்னுடைய கேள்வி சிறிது குழப்பம் அளிக்கும் விதத்தில் இருக்கிறது என்று நினைக்கிறன். மன்னிக்கவும். நான் கேட்டது சில கேள்விகளின் தொகுப்பு, அவை தனி, தனியாக கீழே:

    உங்கள் கூற்று படி, aerodynamics பூமி சுழற்சியை எதிர்த்து கேள்வி கேட்க பயன்படுகிறது. எனவே இதில் நாம் படி, படியாக செல்லவேண்டும். இதில் முதல் கேள்வி:

    1. aerodynamics என்றால் என்ன? எதை பற்றிய field இது? இது எங்கு, எதற்கு apply செய்யவேண்டும், எங்கு செய்ய முடியாது?

    இது முதல் அடிப்படை கேள்வி. சிரமம் பார்க்காமல் சிறிது விளக்க முடியுமா?

  31. // 1. aerodynamics என்றால் என்ன? எதை பற்றிய field இது? இது எங்கு, எதற்கு apply செய்யவேண்டும் //

    Aerodynamics என்பது aircraft designingல் பயன்படுத்தபடுவது. அதாவது aircraft ‘wind resistanceஐ’ எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது

    // எங்கு செய்ய முடியாது? // – இது எனக்கு தெரியாது

    • திரு. சதீஷ்,

      அலுவலகத்தில் சிறிது வேலை பளு. எனவே தாமதமாக பதில் அளிக்கிறேன். மன்னிக்கவும்.

      //Aerodynamics என்பது aircraft designingல் பயன்படுத்தபடுவது. அதாவது aircraft ‘wind resistanceஐ’ எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது//

      எங்கிருந்து wind resistance வருகிறது? காற்று அடித்தால் மட்டும் வருமா அல்லது எப்போதுமே இருக்குமா? பதிவு 35இல் நீங்கள் கூறி இருப்பது:

      //A denser solid object does not carry a less dense gas along with it when it moves. This is self-evident (வார்த்தையை கவனிக்கவும்) as it is the basis of aerodynamics –//

      இது எவ்வாறு self evident? ஒரு solid object, உதாரணத்துக்கு ஒரு aircraft என்றே எடுத்து கொள்வோம். அதற்க்கு உள்ளேயும் less dense gas உள்ளது அல்லவா? விமானம் நகரும் போது அதற்கு உள்ளே இருக்கும் gas அதனுடன் நகர்வது இல்லை என்று உங்கள் மேற்கண்ட statement மூலம் நாம் முடிவு செய்யலாமா?

      • திரு சிந்தனை செய்,

        // அலுவலகத்தில் சிறிது வேலை பளு. எனவே தாமதமாக பதில் அளிக்கிறேன். மன்னிக்கவும். // பரவாயில்லை. நானும் உங்கள் பதிலை கவனிக்கவே இல்லை. மன்னிக்கவும்

        // எங்கிருந்து wind resistance வருகிறது? காற்று அடித்தால் மட்டும் வருமா அல்லது எப்போதுமே இருக்குமா? பதிவு 35இல் நீங்கள் கூறி இருப்பது:// Wind resistance எப்போதும் இருக்கும் ஒன்று தான். உதாரணமாக நீங்கள் ஒரு பந்தை ‘உங்களிடம்’ இருந்து ‘இன்னொருவருக்கு’ horizontal ஆக வீசும் போது ‘wind resistance’ அதனுடைய வேகத்தை ‘தூரம் செல்ல செல்ல’ குறைக்கும். இது இயற்கையான நிகழ்வு தான்

        // இது எவ்வாறு self evident? // – Greater density cannot carry lesser density at the same speed என்பது விஞ்ஞானம் சொல்கின்ற அடிப்படை விதி எனக்கு தெரிந்த வரை.

        // ஒரு solid object, உதாரணத்துக்கு ஒரு aircraft என்றே எடுத்து கொள்வோம். அதற்க்கு உள்ளேயும் less dense gas உள்ளது அல்லவா? விமானம் நகரும் போது அதற்கு உள்ளே இருக்கும் gas அதனுடன் நகர்வது இல்லை என்று உங்கள் மேற்கண்ட statement மூலம் நாம் முடிவு செய்யலாமா? // தங்களின் புரிதல் ‘closed-earth theoryக்கு’ சரியாக இருக்கும். இதனால் தான் ‘moving inside train’, ‘jumping inside train’ வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒரு train உள்ளே நாம் பயணம் செய்யும் பொது ‘train’ எந்த வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் தான் நாமும் செல்வோம்

        ஆனால் எனக்கு தெரிந்த வரை ‘சூரிய மைய கொள்கை’ open-earth theoryஐ பின்பற்றுகிறது. தங்கள் புரிதல் ‘open earth theoryக்கு’ set ஆகாது என்பது என்னுடைய புரிதல்

        நன்றி

        • //Wind resistance எப்போதும் இருக்கும் ஒன்று தான்.//

          இந்த wind resistance எப்போதாவது இல்லாமல் போக வாய்ப்பு உள்ளதா? இல்லை, எப்போதும் கண்டிப்பாக இருந்தே தீருமா?

          //Greater density cannot carry lesser density at the same speed என்பது விஞ்ஞானம் சொல்கின்ற அடிப்படை விதி எனக்கு தெரிந்த வரை.//

          எந்த விஞ்ஞான விதி அது? அதன் பெயர்? ஒரு வேலை இரண்டு density உள்ள object ஒரே திசையில் பயணித்தால் இந்த விதி behavior என்ன இருக்கும் என சொல்கிறது?

          //தங்களின் புரிதல் ‘closed-earth theoryக்கு’ சரியாக இருக்கும்.//

          இந்த open earth, closed earth என்ன? இந்த இரு மாடல் earth என்பதில் என்ன வித்யாசம்?

          aircraft பற்றிய விளக்கத்துக்கு நன்றி.அப்படியே ஒரு tennis பந்தின் மீது static charge மூலம் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஏதேனும் பொருள் அல்லது தண்ணீரில் நனைந்த பந்து open system அல்லது closed system, இதில் எது என கூற முடியுமா?

          • // இந்த wind resistance எப்போதாவது இல்லாமல் போக வாய்ப்பு உள்ளதா? இல்லை, எப்போதும் கண்டிப்பாக இருந்தே தீருமா? // பூமியோடு ‘காற்று மண்டலம்’ ஒட்டி இருக்கும் வரை ‘air resistance’ என்பதும் இருந்தே தீரும்

            // எந்த விஞ்ஞான விதி அது? அதன் பெயர்? // நானும் தேடி பார்த்தேன். விதியின் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை

            // ஒரு வேலை இரண்டு density உள்ள object ஒரே திசையில் பயணித்தால் இந்த விதி behavior என்ன இருக்கும் என சொல்கிறது? // என்னுடைய புரிதல் ‘இரு வேறு density’ உள்ள object ‘ஒரே திசையில்’ பயணித்தாலும் ‘வீதியில்’ எந்த மாற்றமும் இருக்காது. உதாரணம் ‘பூமி’, ‘கடல்’ மற்றும் ‘காற்று மண்டலம்’ அனைத்தும் எப்போதும் ஒரே திசையில் தான் சுற்றுகின்றன (anti clockwise direction) சூரிய மைய கொள்கைப்படி.

            // இந்த open earth, closed earth என்ன? இந்த இரு மாடல் earth என்பதில் என்ன வித்யாசம்? // Closed-earth என்பது நாம் அனைவரும் ஒரு ‘மூடப்பட்ட பந்தினுள் (ball)’ இருப்பதற்கு சமம். ஆனால் ‘open-earth’ என்பது நாம் திறந்த வெளியில் இருப்பதற்கு சமம்

            // ஒரு tennis பந்தின் மீது static charge மூலம் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஏதேனும் பொருள் அல்லது தண்ணீரில் நனைந்த பந்து open system அல்லது closed system, இதில் எது என கூற முடியுமா? // – மன்னிக்கவும். கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை

            • // பூமியோடு ‘காற்று மண்டலம்’ ஒட்டி இருக்கும் வரை ‘air resistance’ என்பதும் இருந்தே தீரும்//

              இதில் ஒரு சின்ன குழப்பம் சார். நீங்கள் மேலே சொன்னபடி பந்தை நான் மற்றொருவருக்கு எரிகிறேன் என்றால் wind resistance இருக்கும் என்றீர்கள். ஒரு வேலை காற்று நான் பந்தை வீசும் திசையில் இருந்தால் wind resistance இருக்குமா? பந்து நீங்கள் மேலே கூறியபடி கம்மி தூரம் செல்லுமா அல்லது அதிக தூரம் செல்லுமா?

              //நானும் தேடி பார்த்தேன். விதியின் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை//

              கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு வேலை இந்த assumption தவறாக இருக்க வாய்ப்பு உள்ளதா? ஒரு வேலை ஏதோ ஒரு blog இதை விஞ்ஞான விதி என சொல்ல, அதை கொண்டு தவறாக ஒரு வேலை இதை விஞ்ஞான விதி என்கிறோமா?

              //என்னுடைய புரிதல் ‘இரு வேறு density’ உள்ள object ‘ஒரே திசையில்’ பயணித்தாலும் ‘வீதியில்’ எந்த மாற்றமும் இருக்காது//

              இது சற்று புரியவில்லை. இதில் வீதி என்பது என்ன? மேலே உள்ள பந்து போல ஏதேனும் எளிதான விளக்கம் முடிந்தால் கூற முடியுமா?

              // Closed-earth என்பது நாம் அனைவரும் ஒரு ‘மூடப்பட்ட பந்தினுள் (ball)’ இருப்பதற்கு சமம். ஆனால் ‘open-earth’ என்பது நாம் திறந்த வெளியில் இருப்பதற்கு சமம்//

              மிக்க நன்றி. நீங்கள் மேலே நம் புரிதல் எல்லாம் open earthக்கு ஒத்து வராது என்கிறீர்கள். இது ஏன் என தெரிந்து கொள்ளலாமா? மேலும் இந்த open earth, closed earth பற்றி கேள்விகள் உள்ளன. ஆனால் அவை பற்றி பிறகு கேட்கிறேன். இப்போது நம் discussion தடம் மாற விரும்பவில்லை.

              மேல என் கேள்வி சரியாக புரியாததற்கு மன்னிப்புகள். என்னுடைய example குழப்பம் விளைவித்து விட்டது என நினைக்கிறன். டென்னிஸ் பந்து வேண்டாம். ஒரு காந்தம் எடுத்துக்கொள்வோம். இது open systemஆ அல்லது closed systemஆ? இப்போது அதன் மீது இரும்பு துகள்கள் ஒட்டிக்கொண்டு உள்ளது என வைத்துக்கொள்வோம். இப்போது அது open system or closed system, இதில் எதில் சேரும்?

              • // ஒரு வேலை காற்று நான் பந்தை வீசும் திசையில் இருந்தால் wind resistance இருக்குமா? பந்து நீங்கள் மேலே கூறியபடி கம்மி தூரம் செல்லுமா அல்லது அதிக தூரம் செல்லுமா? //

                காற்றின் வேகம் நீங்கள் ‘பந்தை’ வீசிய திசையில் அதிகமாக இருந்தால் பந்து ‘குறைவான தூரம்’ தான் செல்லும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ‘காற்றின் வேகம்’ குறைவாக இருந்தால் ‘தூரம் அதிகரிக்கும்’. ”காற்றின் வேகம்’ அதிகமாக இருந்தால் ‘தூரம் குறையும்’,

                // கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு வேலை இந்த assumption தவறாக இருக்க வாய்ப்பு உள்ளதா? ஒரு வேலை ஏதோ ஒரு blog இதை விஞ்ஞான விதி என சொல்ல, அதை கொண்டு தவறாக ஒரு வேலை இதை விஞ்ஞான விதி என்கிறோமா? //

                (a) எனக்கு தெரிந்து ‘விதி’ தவறாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் நான் ‘அளித்த தளத்தில்’ விவாதம் செய்த யாருமே ‘விதி தவறு’ என்று எங்குமே குறிப்பிடவில்லை

                (b) What is aerodynamics? One of the most obvious differences between solids, liquids, and gases is their density

                // இது சற்று புரியவில்லை. இதில் வீதி என்பது என்ன? மேலே உள்ள பந்து போல ஏதேனும் எளிதான விளக்கம் முடிந்தால் கூற முடியுமா? // விதி ஒன்று தான். Different Densities cannot rotate at the same speed

                // டென்னிஸ் பந்து வேண்டாம். ஒரு காந்தம் எடுத்துக்கொள்வோம். இது open systemஆ அல்லது closed systemஆ? இப்போது அதன் மீது இரும்பு துகள்கள் ஒட்டிக்கொண்டு உள்ளது என வைத்துக்கொள்வோம். இப்போது அது open system or closed system, இதில் எதில் சேரும்? //

                தங்களின் எண்ண ஓட்டத்தை ‘internetல்’ புரிந்து கொள்ள சற்று சிரமமாக உள்ளது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ‘நாம் அனைவரும்’ பூமி பந்தின் மேலே (open earth) இருக்கிறோம். பூமி பந்தின் உள்ளே (closed earth) அல்ல .

                நன்றி

  32. இந்துத்வா காரருக்கு பூகோளத்திலேயே சந்தேகம்? இந்த லட்ஷணத்தில் ஆங்கில அறிவியலை ஒழித்துகட்ட சுதேசி(சமஸ்கிருத) அறிவியல் கொண்டுவர துடிக்கிரார்கள்!

    அண்டத்தில் ஆவியாக பிரிந்து சுற்றிகொண்டிருந்த பூமி போன்ற கோள்கள் , வெ இப்பம் இழந்து , பளுவான பொருண்மை மத்தியிலும் படிபடியாக பளு குறைந்த பொருண்மைகள் மேலடுக்கிலும் உள்ளன. திடமான தரை எனப்படும் பொருண்மைக்கும், வாயு வாக உள்ள அடர்த்தி குறைந்த பொருண்மைக்கும் இடையில் திரவநிலைநீர்டம் பெறுகிறது! பூமியின் ஈர்ப்பு விசை , அதன் வெளி அடுக்குகளை மய்யத்தைநோக்கி இழுத்து கொண்டுள்ளது! கீழ் அல்லது மேல் என்ற கோட்பாடு , உண்மையில்- மய்யம்நோக்கி அல்லது அதற்கு எதிர்புறம் என்றுதான் விளங்கிக்கொள்ள வேண்டும்! ர்ஷ்ய வெளியீடான ‘பொழுது போக்கு பெள்தீகம் என்ற மலிவு விலைநூல புத்தக கண்காட்சியில் கிடைக்கும். படித்து பயனடைக!

  33. பூமிர்யின் மத்திய பகுதி (கவனிக்கவும்- கீழே/மேலே அல்ல) அடர்த்தி மிகுந்த பொருண்மை , வெளிபுறத்தில் உள்ள அடர்த்தி குறைந்த பொருண்மைகளை ஓரளவு சுதந்திரத்துடன் (வயலில் முளையில்,நீண்ட கயிற்றால் பிணைக்கப்பட்டு, குறிப்பிட்ட சுற்றளவில் மட்டும் புல் மேய, ஆட்டுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம் போல) கட்டுப்படுத்துகிறது ! இந்த ஈர்ப்பு விசை எல்லா பொருண்மைக்கும், வாயு முதல் இரும்பு, பாதரசம் போன்ற எல்லா பொருண்மைக்கும் உண்டு-அவைகளின் அடர்த்தி எண்ணுக்கு ஏற்றார்ப்போல! பிரபன்சத்தில் உள்ள எல்லா பொருண்மைகளும் தங்களுக்குள் இந்த
    ஈர்ப்பு விசை கரங்களால் அதனதன் சக்திக்கு ஏற்ப பிணைத்து கொண்டுள்ளன! கண்ணால் காண்முடியாத, கறுப்பு துளைகளும் அண்டவெளியில் உண்டு! சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கிக்கின்பாதம்ஸ் புத்தக கடையில் ஒரு ரூபா விலையில் சுமார் 30 புத்த்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கபட்டு கிடைத்தன! தற்போது புத்தக வெளியீட்டாளர்கள் மக்களை முட்டாளாக்கும் பொழுது போக்குநாவல்களையும், பக்திநூல்களையும் அதிக விலை வைத்து , கொள்ளையடிக்கிறார்கள் ! விஞ்ஞான புத்தகங்கள் தமிழில், குறைந்த விலையில் காண முடிவதில்லை!

  34. உங்கள் வாதபடியே வருவோம்

    The density of the Earth has been calculated at 5,515 kg/m3 (whether accurate or not is unknown). The density of air is 1.204 kg/m3 at room temperature, 4580 times less dense than the Earth.

    4580′ kg/m3 மடங்குக்குள் வித்தியாசம் உள்ள ”பூமிக்கும்”, ‘காற்று மண்டலத்தையும்’ க்ராவிட்டி சுற்றவைக்கிறது என்று சொல்கிறீர்கள். சரி.

    A denser solid object does not carry a less dense gas along with it when it moves. This is self-evident (வார்த்தையை கவனிக்கவும்) as it is the basis of aerodynamics –
    (a) இந்த விதி அப்போது என்ன சொல்ல வருகிறது ? (அல்லது) இந்த விதி தவறா ? (அல்லது) இந்த விதி எப்போது செயல்படும் ?
    (b) இந்த விதியை மீறி க்ராவிட்டி எப்படி செயல்படுகிறது ? (அல்லது) தாங்கள் சொன்னதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையா ?
    (c) இந்த விதியை மீறி க்ராவிட்டி செயல்படுகிறது என்றால் அதற்கான theory எங்கே ?
    (d) அடர்த்தி எண்” என்று சொல்லி உள்ளீர்கள். இந்த அடர்த்தி எண் ‘densityக்கு’ ஏற்றாற்போல் மாறிக்கொண்டே இருக்குமா ? (அல்லது) ”stateக்கு ‘ (solid / gas ) ஏற்றாற்போல் ஒரே எண்ணாக தான் இருக்குமா ?

    நன்றி

    • ஒரு தட்டு மற்றும் பந்து எடுத்து கொள்ளவும் .
      இரண்டிலும் நீர் ஊற்றுங்கள். எதில் நீர் நிற்கிறது ? பந்தின் மீது நீர் நிற்கிறதா ?

      எந்த fluid dynamics விதியின் படி பானையின் அடியில் திரவம் ஒட்டி கொண்டு இருக்கும் ?

      எதை வைத்து பூமி உருண்டை என்று சொல்கிறீர் ? அந்த விதியை தரவும் .

      தாலமி கணக்கு போட்டு பூமி உருண்டை என்று சொன்னதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது. அது விஞ்ஞானம் ஆகாது அவரது நம்பிக்கை மட்டுமே .

      நிலநடுக்கோட்டிற்கு அருகே எப்படி மனிதர்கள் நேராக நிற்க முடியும் என்று கேட்டால் , மைய ஈர்ப்பு விசை என்கிறீர் . மரண கிணறு வண்டி மாதிரி நாம் சுற்றுகிறோமா ? இல்லை பூமி சுற்றுகிறதா ?

      நேராக ஆர்க்டிக்கில் நடக்கும் பேன்க்யூன் பறவையை , அன்டார்க்டிக்கில் விட்டால் அதனால் தலைகீழாக நடக்க முடியுமா ?

      • // தாலமி கணக்கு போட்டு பூமி உருண்டை என்று சொன்னதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது. அது விஞ்ஞானம் ஆகாது அவரது நம்பிக்கை மட்டுமே . // இதற்கான பதிலை Section 29.1.1.1 பார்க்கவும். இதற்க்கு பதில் அங்கே இல்லை என்றால் என்னிடம் மீண்டும் இந்த கேள்வியை கேட்கவும். பதில் அங்கே தெளிவாகவே உள்ளது

        // நிலநடுக்கோட்டிற்கு அருகே எப்படி மனிதர்கள் நேராக நிற்க முடியும் என்று கேட்டால் , மைய ஈர்ப்பு விசை என்கிறீர் . மரண கிணறு வண்டி மாதிரி நாம் சுற்றுகிறோமா ? இல்லை பூமி சுற்றுகிறதா ?

        நேராக ஆர்க்டிக்கில் நடக்கும் பேன்க்யூன் பறவையை , அன்டார்க்டிக்கில் விட்டால் அதனால் தலைகீழாக நடக்க முடியுமா ? //

        திரு ராமன் அவர்களே இதற்கான பதிலை நான் ‘நேர்மையாகவே’ சொல்லி இருக்கிறேன். Section 29.1.1.1 பார்க்கவும். பூமியின் வடிவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கான யூகத்தையும் நான் அதில் சொல்லி இருக்கிறேன்

        நான் எதை படித்து தெளிந்து இருக்கிறேனோ அதை மட்டுமே இங்கு கேள்விகளாக முன் வைத்து இருக்கிறேன். எல்லோரும் என்னை கேள்விகள் தான் கேட்டு கொண்டு இருக்கிறார்களே தவிர யாரும் என் கேள்விகளுக்கு பதில் இது வரை அளிக்கவில்லை

        நான் மேலே (a), (b), (c), (d) என்று நான்கு கேள்விகளை கேட்டு இருக்கிறேன். உண்மையில் ‘பகுத்தறிவாதி’ என்ன செய்ய வேண்டும். நான்கு கேள்விகளுக்கும் ‘தனி தனியாக’ பதில் அளித்து தெளிவு படுத்த வேண்டும். அது தானே நியாயம்

        Newton laws disprove செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் அதையே தான் நாம் படித்து கொண்டு இருக்கிறோம். என்னையும் அதையே என் படிக்க சொல்கிறீர்கள் ??

        இன்னும் உண்மையை சொல்லவேண்டும் என்றால் உங்கள் விஞ்ஞானம் ‘தற்போது’ என்ன சொல்கிறதோ அதை தான் நான் கேள்விகளாக முன் வைக்கிறேன். நீங்கள் என்னை கேள்வி கேட்கவில்லை, விஞ்ஞானத்தை தான் கேள்வி கேட்கிறீர்கள்

        யாரும் நான் அளித்த தளத்தை ‘ஒரு முறை’ கூட படிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த கேள்விகளை எல்லாம் நீங்களே அந்த தளத்திலேயே விவாதிக்கலாம். விவாதிப்பதற்கு தான் அந்த தளம்.

        உண்மையிலேயே விவாதம் செய்ய வேண்டும் என்று இருந்தால், நான்கு கேள்விகளுக்கும் ‘தனி தனியாக’ பதில் அளித்து தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

        நன்றி

        • You are an english speaking imbecile and cant be cured. you are carefully ignoring all the medicine.
          You will not believe science but want scientific proof.
          You will pick and choose what to believe and what not based on a blog from another imbecile.
          You cant even understand the video , but want to understand and question science.
          You are not ready to read the book for knowledge.

          You are a product of Private schools which teaches to memorize and repeat. Without searching/accpeting knowledge from the right resources, You will have to live with your disability rest of your life.

          • See Mr Raman,

            // You will not believe science but want scientific proof. // – Science is all about evidence. There must be some evidence when you say something that is science.

            No one single genuine answer. That’s great by a rationalist. Oh! sorry so-called rationalist. Repeating same words, not answering the question, deviating from topic etc. I am not at all surprised by that

            You can’t provide me any evidence or answer because there’s no such thing. Had you were honest you would have digged the truth and replied stating that Í am wrong’ scientifically. You did not, because you are not willing to do anything.

            // You will pick and choose what to believe and what not based on a blog from another imbecile. // – Insults belittle you. Mind it. All are not fools. If questions are wrong you should say that scientifically not by words and by using some hi-fi english

            // You cant even understand the video , but want to understand and question science. // When video was taken and by which satellite? Please provide me the name of the satellite and the year it was taken. Can you provide that ?

            // You are not ready to read the book for knowledge. // Science has emerged a lot. There’s no rule / law in this world which MUST be static always. Do you believe in such a theory ? If so, you are not a rationalist then. Science is subject to change always. Do you still watch B&W TV?

            // You are a product of Private schools which teaches to memorize and repeat. Without searching/accpeting knowledge from the right resources, You will have to live with your disability rest of your life. //
            I am disabled. I agree. But you guys are rationally disabled. How did you figure that the blog did not reveal the right thing? Have you ever gone through that blog? And you’re ruling out 40-year astronomy as éxpert fallacy’. What else I can expect from a ‘selective amnesia’ rationalist ?

            I MAY BE TOTALLY WRONG. BUT THAT HAS TO BE PROVED SCIENTIFICALLY. SCIENCE EXPECTS EVIDENCE. KEEP THAT IN MIND. I’D WELCOME IF MY QUESTIONS / UNDERSTANDING WAS PROVEN WRONG SCIENTIFCALLY. But that never happened and it will never happen.

            Last but not least, I AM NOT going to lose or gain anything. No matter whether earth spins or not. I am least bothered about that

            I will remain as a ‘ordinary fool’ rather than being a ‘rational fool’. Try to respond with ‘logic and science’ at least in other topics. Don’t deviate from topic.

            // You will have to live with your disability rest of your life. // – DITTO

            • தான் உளறுகிறோம் என்பது கூட புரியாமல் இருக்கும் உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை . உங்கள் பைத்தியத்தை தெளிய வைக்க கடைசி முயற்சசி .

              சரி உங்கள் பாஷையிலே ஆரம்பிப்போம் . பூமி சுற்றுகிறதா இல்லையா என்பது எவிடென்சு கிடையாது . யார்க்கும் தெரியாது . மக்கள் நம்ம்பிக்கை என்கிறீர் . அப்படியே இருக்கட்டும் .

              1 + 1 =2 என்பதை படித்து விட்டு 16X16 படிப்போம் . சரியா

              ஏரோ டயனாமிக்ஸ் கேள்விகள் எல்லாம் தோன்றாத கால கட்டத்திற்குள் நுழைகிறோம். அங்கே நீங்கள் தால்மியின் கிராமத்தி வசிக்கிறீர். இப்பொழுது உங்கள் கிராமத்தில் …

              பூமி உருண்டை என்பதை தாலமி ஏன் நம்பினார் ?
              எப்படி கண்டு பிடித்தார் ?
              என்ன எவிடென்சு கொடுத்தார் ?
              அதை மக்கள் ஏன் ஏற்று கொண்டார்கள் ?

              • // தான் உளறுகிறோம் என்பது கூட புரியாமல் இருக்கும் உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை . உங்கள் பைத்தியத்தை தெளிய வைக்க கடைசி முயற்சசி . // கேள்வி கேட்பவர்கள் முட்டாள்கள் என்றால் இங்கு எந்த மாற்றமும் வந்து இருக்காது

                என் நீங்கள் நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும், விரிவாகவும் பதில் சொல்லி வீட்டீர்களா ? வீடியோ என்று ஒன்றை பதிந்தீர்கள். அதற்க்கு என்னுடைய பதில் கேள்விக்கு இன்னும் ‘விடை’ வரவில்லை

                // 1 + 1 =2 என்பதை படித்து விட்டு 16X16 படிப்போம் . சரியா // முற்றிலும் தவறு. இப்போது நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள் என்பதை ஆணித்தரமாகவே சொல்ல முடியும். நீங்கள் சிந்திக்க மறுப்பதால் நீங்கள் ‘பைத்தியமா’???

                1+1=2 தான் என்று எந்த ‘படித்த மூதேவி’ உங்களிடம் சொன்னார்? 1+1=2 என்று நாம் பள்ளியில் படித்ததை தானே சொல்கிறீர்கள்?

                Binary additionல் ‘1+1=2’ என்றா வரும் ? ‘2’ என்று வந்தால் உலகத்தில் உள்ள எந்த கணிப்பொறியாவது boot ஆகுமா ?
                Boolean Algebraவில் ‘1+1=2″ என்றா வரும் ?

                எங்கே நான் மேலே சொன்னவற்றை இல்லை என்று சொல்லுங்கள் பாப்போம். அடிப்படையை தாண்டி ‘சிந்திக்க மறுத்த’ நீங்கள் பைத்தியமா அப்போது ??? ஏனென்றால் நான் மேலே சொன்னவற்றை யாராலும் மறுக்க முடியாது

                பெயரில் ‘binary’ (அல்லது) ‘boolean’ உள்ளது என்று சொல்லாதீர்கள். கூட்டப்படும் எண்கள் ‘1ம்’ மற்றொரு ‘1ம்’ தான்.

                கணிதமும், அறிவியலும் மனிதன் தன்னுடைய ‘தேவைக்காகவும், வசிதிக்காகவும்’ உருவாக்கினான். அதை அவ்வப்போது மீண்டும் ‘தேவைக்காகவும், வசிதிக்காகவும்’ அதனை மாற்றியும் அமைத்தான். அதற்கான உதாரணம் தான் நான் மேலே சொல்லி உள்ளேன்

                மீண்டும் சொல்கிறேன் கணிதமும், அறிவியலும் மனிதன் தன்னுடைய ‘தேவைக்காகவும், வசிதிக்காகவும்’ உருவாக்கப்பட்டது, அவ்வப்போது மாற்றியும் அமைக்கப்பட்டது.

                // ஏரோ டயனாமிக்ஸ் கேள்விகள் எல்லாம் தோன்றாத கால கட்டத்திற்குள் நுழைகிறோம். அங்கே நீங்கள் தால்மியின் கிராமத்தி வசிக்கிறீர். இப்பொழுது உங்கள் கிராமத்தில் …

                பூமி உருண்டை என்பதை தாலமி ஏன் நம்பினார் ?
                எப்படி கண்டு பிடித்தார் ?
                என்ன எவிடென்சு கொடுத்தார் ?
                அதை மக்கள் ஏன் ஏற்று கொண்டார்கள் ? // பூமி தட்டை கிடையாது என்கிற பதிலை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

                Ptolemy அவர்கள் அவருடைய ‘mathematical modelக்கு’ (அதாவது geo-centric theory) அவருடைய சிந்தனைக்கு ஏற்ப ‘பூமி உருண்டை’ என்று முடிவெடுத்து இருக்கலாம். ‘தட்டையான பூமி’ அவருடைய mathematical modelக்கு’ எதிரானதாக அமைந்து இருக்கலாம் (அல்லது) ‘flat earth’ அவருடைய கணிதத்தில் பல சிரமங்களை கொடுத்து இருக்கலாம். இது என்னுடைய யூகம் தான்.

                • நான் பள்ளியில் 1+1=2 என்று தான் படித்தேன் ஆகவே அது மட்டும் தான் சரி என்று சொல்வீர்களா ? (அல்லது) ஏன் கணிதத்தை மாற்றி அமைத்தீர்கள் என்று ‘கணித / விஞ்ஞான’ பார்த்து கேள்வி எழுப்புவீர்களா ?

                  1+1=’0′ என்று கணக்கை மாற்றை அமைத்தால் ‘விஞ்ஞானிக்கு’ விஷயங்கள் எளிதாக முடியும்.

                  அதை போன்றதொரு நடைமுறை தான் ‘சூரிய மைய்ய கொள்கையில்’ பின்பற்றப்பட்டுள்ளது. இனிமேலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை.

                  இதை சொன்னால் கூட இதற்கும் பைத்தியம் என்று சொல்வீர்கள் போல

                  மேலும் நான் ‘பூமி சுற்றுகிறதா’ என்பதை தான் விவாதிக்கிறேனே தவிர ‘பூமி தட்டையா (அல்லது) உருண்டையா’ என்பது என் தனிப்பட்ட விவாதத்தின் கருப்பொருள் அல்ல

                  • // உங்கள் பைத்தியத்தை தெளிய வைக்க கடைசி முயற்சசி . //

                    நான் பைத்தியம் என்று சொல்ல நீங்கள் என்ன doctor ரா ? பொது வெளியில் சற்று நாகரீகமாக பேசுங்கள்

                    படித்தால் மட்டும் போதாது என்பதை அந்த காலத்தாலேயே சரியாக தான் சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள்

  35. பைய்தியகாரருக்கு பதில் அளிப்பதனை நண்பர்கள் தவிர்க்கவும்! இது முத்திய கேசு! dr ருத்திரன் வந்தால் கூட குனபடுத்த இயலாத கேசு இந்த சதீஷ் கேசு!

    • Question science whether right or not. We can rectify if we are wrong. But you guys will never do that because you love it and that does not make me mad just because I raise few questions

      There are 1000s (or) ‘n’ of people around this world who questions helio-centric theory. According to you, all must be treated by Dr Rudran not just me

      • உமது கிறுக்கு தனமான கேள்விகளுக்காக உம்மை கிறுக்கர் என்று நான் அழைக்கவில்லை. அந்த கிறுக்கு தனமான கேள்விக்களுக்கு ராமன், செந்தில்,திப்பு, அஜந்தசத்துரு என்று நண்பர்கள் உமது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முனைந்தாலும் அந்த பதில்களை பற்றி உமக்கு ஏற்படும் மன விளைவுகளுக்காக தான் உம்மை நான் கிறுக்கன் என்று அழைக்கின்றேன்

        • // அந்த கிறுக்கு தனமான கேள்விக்களுக்கு ராமன், செந்தில்,திப்பு, அஜந்தசத்துரு என்று நண்பர்கள் உமது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முனைந்தாலும் அந்த பதில்களை பற்றி உமக்கு ஏற்படும் மன விளைவுகளுக்காக தான் உம்மை நான் கிறுக்கன் என்று அழைக்கின்றேன் //

          புரிய வைக்க முயற்சித்தமைக்கு நன்றிகள்

  36. @@@சிந்தனை செய்

    நீங்கள் பொதுவானவராக தெரிகிறீர்கள். உங்களுக்கு என்றைக்கு நான் சொன்னவை “சரி” என்று படுகிறதோ அப்போது இங்கு இருப்பவர்களுக்கு நீங்களே உண்மையை எடுத்து சொல்லுங்கள்

    என்னுடைய வாதங்களை பொறுமையாகவும், wrt subject கேளிவிகளை கேட்டமைக்கும் நன்றிகள்

    நன்றி

  37. அய்யா ராமன்! நீங்கள் எப்போதுமே இப்படித்தானா? அல்லது மொடி ஆட்சிக்கு வந்தபின்னர் இப்படி ஆனீர்களா? ஆனாலும் சென்னையில் வெப்பம் அதிகம்தான்! பூமி உருண்டை எனநிரூபிக்க இன்னொரு எடுத்துக்காட்டும் உள்ளது; தூரத்தில் வரும் கப்பலைப்பார்த்தால், முதலில் அதன் பாய் மரம் (இப்போது ரேடார் ஆண்டெனா?) தெரியும்; பின்னர் அருகில் வர வர அதன் மற்ற பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேலிருந்து ,கீழ்பகுதி வரை தெரியும்; பூமி உருண்டையானதாலும், பந்தின் மேல் உள்ள ஈரம் போல கடல்நீர் படர்ந்து இருப்பதாலும் இப்படி தெரிகிறது! அது சரி ! பெரல்மான் எழுதிய சோவியத் புத்தகம் ‘அனைவருக்குமான பொழுபோக்கு பெளதீகம்’ படித்தீர்களா?

    • @Ajathasathru

      ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் என்பது போல ,, சதீஸ் அவர்களுக்கு அவர் மொழியிலேயே பேசி புரிய வைக்க முயற்சி செய்தேன் 🙂

      அந்த பெருமகனார் , இன்னும் பூமி உருண்டையா என்று யூகம் தான் செய்கிறார் .

      • என்னிடமாவது ஆடி கறக்கலாம் (அல்லது) பாடி கறக்கலாம். தங்களிடம் இருந்து ஒரு உண்மையான பதிலை பெறுவது ‘காளை மாட்டிடம்’ பால் கறப்பதற்கு சமமானதாக உள்ளது

        இவ்வளவு பேசுகிறீர்களே இந்த கேள்விக்கு விடை சொல்லுங்கள்

        பூமி 1600 மைல்கள் வேகத்தில் சுற்றுகிறது என்று சொல்லப்படுகிறது. பூமியின் வேகத்தை கணிக்க அவர்களிடம் ஏதாவது ஒரு ‘கருவி’ இருந்து இருக்க வேண்டுமல்லவா ?

        எந்த கருவியின் துணை கொண்டு பூமி ‘1600 மைல்கள்’ வேகத்தில் சுற்றுகிறது என்று சொன்னார்கள் ?

        (a) அந்த கருவியின் ‘பெயர் என்ன’ ?
        (b) அந்த கருவி ‘எந்த விஞ்ஞானியால்’ கண்டுபிடிக்கப்பட்டது ?
        (c) அந்த கருவி ‘எந்த வருடம்’ கண்டுபிடிக்கப்பட்டது ?

        மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகள் பாமரனின் கேள்விகள் தான். நீங்கள் எந்த விஞ்ஞான விளக்கமும் சொல்ல தேவையில்லை.

        மிகவும் எளிமையான கேள்விகளை தான் கேட்டு இருக்கிறேன். இதற்கும் ‘பைத்தியம்’ என்று சொல்ல மாடீர்கள் என்று நினைக்கிறேன்

        நன்றி

    • இந்த கேள்வி ராமனுக்கா (அல்லது) எனக்கா என்று தெரியவில்லை

      ஒரு வேலை எனக்காக இருந்தால் நான் ‘பூமி உருண்டை’ என்பதற்கு ஆதாரம் கேட்கவில்லை. பூமி உருண்டை ‘என்பதை’ என்னுடைய பதிலில் நானே சொல்லி இருக்கிறேன்

      ‘பூமி சசுற்றுவதற்கு’ தான் ஆதாரம் கேட்கிறேன்

      என்னுடைய “முதல் பதிவில்” இருந்து நான் கேட்பது ‘பூமி சுற்றுகிறது’ என்பதை நிரூபித்த ‘scientific experimentஇன்’ பெயர் என்ன. அவ்வளவு தான். வெரி சிம்பிள்.

      இது ஒரு பாமரனின் கேள்வி தான். இதில் நீங்கள் எனக்கு புரிய வைக்க எதுவுமில்லை. பெயரை சொல்ல வேண்டும் அவ்வளவு தான்

      இந்த கேள்விக்கு இது வரை பதில் வந்துள்ளதா (?) என்பதை நீங்களே உங்கள் நண்பர்களுடன் கலந்து பேசி எனக்கு தெரிவிக்கவும். வெயில் அதிகமாக இருப்பதால் தங்களின் பதில்கள் எனக்கு புரியவில்லை என்பது உண்மை தான் என்ன செய்ய நான்.

    • ராமன் அவர்கள் என்னை மடக்குவதற்காக கேட்ட கேள்விகள் தான் அவை. பூமி உருண்டையா அல்லது இல்லையா என்று ?

      ‘ராமன்’ உங்கள் கருத்தோடு ஒத்து போகிறவர் தான். அவர் என்றைக்குமே கருத்து ரீதியாக உங்கள் நண்பர் தான். அல்லது குறைந்தபட்சம் என்னை எதிர்க்கவாவது உங்களோடு தான் இருப்பார்

      இங்கே பொய் பேசுபவன் நான் ஒருவன் மட்டுமே. நீங்கள் ‘convex earth theoryஐ’ follow செய்கிறீர்களா அல்லது ”concave earth theoryஐ’ follow செய்கிறீர்களா ??

  38. சதீஷ், ராமன்! நல்ல வேடிக்கைதான் போங்கள்! கெப்லர் , கோபெர்னிக்கஸ், கலிலியோ காலத்திற்கு பிறகு அய்சக்ந்யூடன், அய்ஸ்ன்டீன், தற்போது ஃகிக்கின்ஸ் தியரி வரை , விஞ்ஞானம் இன்னும் ‘அண்ட ரகஸ்யத்தை’ விண்டு கொண்டே வருகிறார்கள்! எதிலும் முற்றான ‘உண்மை’ என எந்த விஞ்ஞானியாலும் கூற முடியாது, அண்ட ரகசியம் மென்மேலும் வெளிப்பட்டு வருவதால்! சுயனலம் கருதி , மதவாதிகளுக்கே இறுதியான உண்மை தேவைப்படுகிறது, மக்களை முட்டாளாக வைத்திருக்க! தலைப்பை மீறி கருத்து பகிர்வு எஙெஙோநீண்டுவிட்டது; வினவு இன்னும் எதற்கு காத்திருக்கிறது?

    • // சதீஷ், ராமன்! நல்ல வேடிக்கைதான் போங்கள்! கெப்லர் , கோபெர்னிக்கஸ், கலிலியோ காலத்திற்கு பிறகு அய்சக்ந்யூடன், அய்ஸ்ன்டீன், தற்போது ஃகிக்கின்ஸ் தியரி வரை , விஞ்ஞானம் இன்னும் ‘அண்ட ரகஸ்யத்தை’ விண்டு கொண்டே வருகிறார்கள்! எதிலும் முற்றான ‘உண்மை’ என எந்த விஞ்ஞானியாலும் கூற முடியாது, அண்ட ரகசியம் மென்மேலும் வெளிப்பட்டு வருவதால்! //

      இது முற்றிலும் உண்மை ஏற்றுக்கொள்கிறேன்

      // சுயனலம் கருதி , மதவாதிகளுக்கே இறுதியான உண்மை தேவைப்படுகிறது, மக்களை முட்டாளாக வைத்திருக்க! //

      புத்தகத்தில் படித்த விஞ்ஞானத்தை தற்போது ‘விஞ்ஞான ரீதியாகவே’ கேள்வி கேட்கிறார்கள். புத்தகத்தில் உள்ளது ‘ஆகவே அது தான்’ சரி என்று வாதாடுபவர்களை நீங்கள் என்ன சொல்வீர்கள் ?

      Newton’s 3rd law எதிரான ஒரு சிறு விவாதத்தை இங்கு பதிகிறேன்

      Wild Heretic January 6, 2016 at 10:08 am
      // The core of your argument is that an object in motion does NOT stay in motion, contrary to Newton’s 3rd law (and don’t turn this into an ad hominem argument against Newton himself; that will get you nowhere.) // – Correct. It does not stay in motion unless in a vacuum. No point repeating what I said before.

      இப்படி விஞ்ஞான ரீதியாக எதிர்ப்பதை கூட நீங்கள் ஏன் ‘மதத்தோடு’ இணைக்கிறீர்கள் ?? ஒருவன் விஞ்ஞானித்திற்கு எதிராக கேள்வி கேட்டல் அவனை மதவாதி என்று முத்திரை குத்துவீர்களா ? தவறு என்றால் நீங்கள் அதை விஞ்ஞான ரீதியாக தவறு என்று பதியுங்கள். அதில் தவறில்லை

      எனக்கு ஒரு விஷயம் என்ன புரியவில்லை என்றால் இதற்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம் ? அவன் சொல்வதில் உண்மையே இருக்க கூடாதா ??

      // தலைப்பை மீறி கருத்து பகிர்வு எஙெஙோநீண்டுவிட்டது; வினவு இன்னும் எதற்கு காத்திருக்கிறது? //

      விவாதிப்பதில் தவறேதும் இல்லை என்று வினவு நினைத்து இருக்கலாம்

  39. சதீஷ், ராமன்! நல்ல வேடிக்கைதான் போங்கள்! கெப்லர் , கோபெர்னிக்கஸ், கலிலியோ காலத்திற்கு பிறகு அய்சக்ந்யூடன், அய்ஸ்ன்டீன், தற்போது ஃகிக்கின்ஸ் தியரி வரை , விஞ்ஞானம் இன்னும் ‘அண்ட ரகஸ்யத்தை’ விண்டு கொண்டே வருகிறார்கள்! எதிலும் முற்றான ‘உண்மை’ என எந்த விஞ்ஞானியாலும் கூற முடியாது, அண்ட ரகசியம் மென்மேலும் வெளிப்பட்டு வருவதால்! சுயனலம் கருதி , மதவாதிகளுக்கே இறுதியான உண்மை தேவைப்படுகிறது, மக்களை முட்டாளாக வைத்திருக்க! தலைப்பை மீறி கருத்து பகிர்வு எஙெஙோநீண்டுவிட்டது; வினவு இன்னும் எதற்கு காத்திருக்கிறது? கடைசியா அந்த கான் கேவ், கான் வெக்ஸ் தியரியையும் அலசிவிடுங்கள், சதீஷ் !

    • Ajathasathru, ராமன் உங்கள் பார்வையில் ‘சூரிய மைய்ய கொள்கை’ 100% சரியானது என்று சொல்ல வருகுறீர்களா ?

      ‘சூரிய மைய்ய கொள்கையை எதிர்த்து’ யாரும் கேள்வியே கேட்க கூடாது என்று சொல்ல வருகுறீர்களா ?

      ஒரு சாதாரண பாமரனின் கேள்விகளுக்கு கூட பதில் அளிக்கவில்லையே.

      உதாரணமாக ‘பூமியின் வேகத்தை எந்த கருவியை பயன்படுத்தி கண்டுபிடித்தனர்’, ‘சுற்றும் பூமியில் பறவை தன்னுடைய கூட்டை எப்படி கண்டுபிடிக்கிறது’ என்பன போன்றவை

      இவைகளை கூட ஒருவன் கேட்கக்கூடாது என்பது உங்கள் எண்ணமா ?

      மேலே உள்ள கேள்விகள் என்ன மதம் சார்ந்த கேள்விகளா ? மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்லுங்கள் பார்ப்போம்

  40. // கடைசியா அந்த கான் கேவ், கான் வெக்ஸ் தியரியையும் அலசிவிடுங்கள், சதீஷ் ! //

    இதற்க்கு முன்பு நான் சொன்னவற்றை எதுவுமே ஏற்கவில்லை. இதை மட்டும் எப்படி ஏற்பீர்கள் ? Moreover பூமி ‘concave’ or ‘convex’ என்பது தற்போதைக்கு என்னுடைய ‘area of interest’ இல்லை

    • முன்னர் சொன்னதை ஏற்கவில்லையென்று இனி பதிவிடுவதையேநிறுத்திவிட உத்தேசமா? பிகு பன்னாமல் உங்கள் கருத்தை சொல்லுங்கள் ! அடுத்து கொடனாடு விவகாரத்திற்கு போகவேண்டும்!

      • தற்போதைய விஞ்ஞானபடி பூமி ‘convex’ தான்

        ஆனால் பூமி ‘concaveவாக’ இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த pageல் பார்க்கலாம். அவரும் ‘அறுதியிட்டு’ சொல்லவில்லை. ஒரு சில வாதங்களை முன் வைக்கிறார் அவளோ தான்

        http://www.wildheretic.com/concave-earth-theory/

        ஆனால் மேலும் சிலர் ‘concave + flatஆக’ இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். ஆனால் இவை எல்லாம் இன்னும் எங்கும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போதைக்கு விஞ்ஞான ரீதியான ‘கருத்து பரிமாற்றங்கள்’ மட்டும் நடந்து கொண்டு இருக்கின்றன.

        நன்றி

        • // தற்போதைக்கு விஞ்ஞான ரீதியான ‘கருத்து பரிமாற்றங்கள்’ மட்டும் நடந்து கொண்டு இருக்கின்றன//

          பைத்தியகாரங்கள் எல்லாம் உளறுவதற்கு பெயர் விஞ்ஞான பரிமாற்றம் கிடையாது
          🙂 🙂 🙂

          யானையை தடவும் குருடர்கள் போல தடவி கொண்டே இருங்கள் , கடைசி வரை உண்மை புரிய போவது இல்லை .

          பின்குறிப்பு : எங்கள் ஊர் டி கடையில் ஒருவர் பூமி பாத்திரம் மாதிரி இருக்கிறது என்கிறார் , இன்னொருவர் பூரி கட்டை வடிவில் இருக்கிறது என்கிறார் . ஆகவே தற்போதைய விஞ்ஞாபடி அதுவே விவாதிக்கப்பட்டு வருகிறது 🙂 🙂 🙂

  41. போதுமே இந்த பூமி ஆரய்ச்சி! எப்படியும் இன்னும்100 வருடங்களில் இங்கு மனிதன் வாழ முடியாதாம்! கிளம்புங்கள் மூட்டை கட்டிகொண்டு! சாடுத்து செவ்வாய் கிரகம்?

    http://www.thehindu.com/sci-tech/science/stephen-hawking-humans-must-leave-earth-in-100-years-to-survive/article18378305.ece

    • நிறைய ஊகங்கள், கருத்துக்கள் உலவுகின்றன. எது உண்மையான உண்மை என்பது நமக்கு தெரியாது

  42. இந்த விவாதங்கள் பதிவுக்கு தொடர்பற்ற வகையில் இருப்பது ஒரு பிரச்சினை. பிறகு அதுவும் கூறியவையே திரும்பப் திரும்ப வருவது மற்றுமொரு பிரச்சினை. ஆகவே பேச வேண்டியவை இங்கே நிறைய பேசப்பட்டு விட்டதால் பின்னூட்ட பெட்டியை மூடுகிறோம். புரிந்துணர்வுக்கு நன்றி.

Comments are closed.