privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கடெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்

-

DIGITAL INDIA வின் தலைநகரில் விவசாயிகளின் நிர்வாணப்போராட்டம் !

ஓவியம் : முகிலன்
palachennaitn@gmail.com
பேச: 95518 69588

இணையுங்கள்:

***

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் பு.ஜ.தொ.மு-வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள், விவசாய கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை, இதுவரை பிரதமர் மோடியோ, அவரது அமைச்சர்களோ, சந்தித்து அவர்களின் பிரச்சினை குறித்து கேட்கவில்லை. அதே நேரம், தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, நாடெங்கும் விவசாயிகளுக்காக மாணவர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் போராடி வருகின்றனர்.

அதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பு.ஜ.தொ.மு வினர் விவசாயகளின் போராட்டத்தை ஆதரித்தும் இந்த பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வது என்கிற வகையில்,  07/04/17 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று காவல் துறையிடம் அனுமதி கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், தோழர்கள் கையில் தட்டி, பேட்ஜ்யுடன் பேருந்து நிலையம் , பேருந்து நிறுத்தம்,மார்க்கெட் போன்ற 6 இடங்களில் முழக்கமிட்டு,போராட்டம் நடத்தினோம். விவசாயகளின் போராட்டத்தை திரும்பி பார்க்காத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் மோடியை அம்பலப்படுத்தி, தோழர்கள் பேசினார்கள். இந்த போராட்டத்தை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து ஆதரித்தனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க