privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்உலக தண்ணீர் தினத்தில் காலிக் குடங்களின் இந்தியா - படங்கள்

உலக தண்ணீர் தினத்தில் காலிக் குடங்களின் இந்தியா – படங்கள்

-

லக தண்ணீர் தினமென்று மார்ச் 21-ம் நாளை ஐ.நா சபை அனுசரித்திருக்கிறது. உலகெங்கும் தண்ணீரை தனியாருக்கு அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்ட நிலையில் இந்த தினம் எதைச் சாதிக்கப் போகிறது? தண்ணீரை சுத்தமாக பாதுகாப்பாக குடியுங்கள் என்பதில் துவங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எவையும் தனியார் மயத்தை கண்டு கொள்வதில்லை. இன்று சுத்தமான பாதுகாப்பான குடிநீர் என்பது உலகெங்கும் வசதி படைத்த மக்களுக்கு மட்டுமே என்பதை நிலைநாட்டியிருக்கிறது உலகமயம்.

முதலாளித்துவம் எனும் நச்சை அகற்றாமல் நல்ல நீர் எப்படிக் குடிக்கும்? புவி வெப்பமாதல் அதிகரித்து வரும் நிலையில் வறட்சியும், வெயிலும் ஆண்டுக்காண்டு  அதிகரிக்கின்றன. புவி வெப்பமாதலுக்கு முதன்மைக் குற்றவாளிகளாக மேற்கத்திய நாடுகள்தான் இத்தகைய ‘தண்ணீர் உபதேசங்களையும்’ நடத்துகின்றன. உலக தண்ணீர் தினமென்று இந்தியாவெங்கும் காலி குடங்களுடன் காத்திருக்கிறார்கள் மக்கள். அந்தக் காட்சியை ஜம்மு, அஸ்ஸாம், ஹைதராபாத் என்று அனைத்து மாநிலங்களிலும் காணலாம்! சில படங்கள் இங்கே இடம்பெறுகின்றன. தண்ணீர் தாகத்திற்காக இலாபத்திற்கா என்ற பிரச்சினை தீர்க்கப்படாத வரை நமது குடங்களில் நீர் நிரம்பிவிடாது.

மார்ச் 21 2017 உலக தண்ணீர் தினத்தில் போபால் மக்கள் எப்போது தண்ணீர் வருமென்று காலி பாத்திரங்களுடன் காத்திருக்கிறார்கள். வாழ்வில் பெரும் பகுதி காத்திருத்தல் என்பது நமக்கு தண்ணீருக்காகத்தான்!

லையில்தண்ணீர் சுமையுடன் செல்லும் பெண்கள் – ஜம்முவில். குடிநீர் உயிர்வாழ அத்தியாவசியமென்றால் நீர் எடுக்க அலைவது அன்றாட கடமையாகிவிட்டது.

ஸ்ஸாம் தலைநகரம் கௌகாத்தியில் பொதுக்குழாயில் வரப்போகும் நீருக்காக காத்திருக்கும் சிறுமி. அருகில் மக்கள் வரிசைப் பதிவுக்காக விட்டுச் சென்றுள்ள காலிக் கேன்கள். விளையாடப் போகாமல் இப்படி குடிநீருக்காக காத்திருப்பது குழந்தை தொழிலாளர் உழைப்பென்று என்ஜிவோக்கள் கருதவில்லையா?

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் மரபார்ந்த ஆடை அலங்காரங்களோடு இரண்டு அடுக்கு குடங்களுடன் செல்லும் பெண். ஆடை அணிகலன்களோடு குடங்களும் சேர்ந்து விட்டன!

ஹைதராபாத்: பொதுக்குழுயில் எப்போது நீர் வருமென்று காலிக் குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள். போதுமான அளவு நீர் கிடைக்காத போது இங்கே சண்டையும் சகஜம். குழாயடிச் சண்டை என்ற வழக்கே குடிநீர் கிடைப்பது அரிது என்ற அவலநிலையை சுட்டாமல் பெண்கள் என்றால் சண்டை என்று மடை மாற்றுகிறது

குஜராத்தின் அகமதாபாத்தில் கைவண்டியில் குடிநீர் எடுத்துச் செல்லும் பெண். மோடியின் மண்ணில் குடிநீர் கிடைப்பது அவ்வளவு கடினம்.

கௌகாத்தி: மலைமேல் சென்று நீர் எடுத்து வரும் ஒரு பெண். குடிநீருக்கா அலையும் உழைப்பு ஒரு உடற்பயிற்சியல்ல அது ஒரு உடல்வதை!

ஹைதராபாத் புறநகர்ப்பகுதியில் பொதுக்குழாய் ஒன்றில் குளிக்கும் தொழிலாளி. இப்படி எப்போதாவதுதான் குற்றாலக் குளியல் வாய்ப்பு கிடைக்கும்! இதை வைத்து நீரை விரயமாக்காதீர்கள் என்று நீச்சல் குளங்களில் நித்தம் நீர் மாற்றும் கனவான்கள் மன்றாடுவார்கள்!

லக தண்ணீர் தினத்தை முன்னிட்டு “ பாதுகாப்பான குடிநீரை அருந்துங்கள்” எனும் விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் தேசிய விருது வென்ற நடிகை ரிதுபர்ணா சென்குப்தா. பாதுகாப்பான குடிநீருக்கு இப்படி பளிச்சென்று விளம்பரம் கொடுக்கும் அம்மணிகள்தான் தண்ணீரை பறித்து வைத்திருக்கும் பெப்சி கோக்கிற்கும் ஆஸ்தான தூதர்களாக இருக்கிறார்கள்.

லைக்கவசத்தோடு பூஜை செய்யப்பட்ட பூ இதர பொருட்களை எடுத்துச் சென்று பிரம்ம்புத்திரா நதியில் கொட்டச் செல்கிறார் ஒருவர் – இடம் கௌகாத்தி. இந்திய நதிகளை சாக்கடையாக்குவதில் பார்ப்பனியத்திற்கு போட்டி யாருமில்லை.

கௌகாத்தி: பிரம்மபுத்ரா நதியில் பக்தர்கள் வீசிய காசுகளை தேடி எடுக்கும் சிறுவன். நதியில் காசுகளை வீசும் பக்தர்கள் குடிநீருக்கும் காசுகளை அல்ல கணிசமான பணத்தையே ஒதுக்க வேண்டும்.

நன்றி: Out Look

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க