privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைபோராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் - படக்கட்டுரை

போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை

-

நம்மைப் பொறுத்தவரை ஒரு மாதம் என்பது ஊதியத்திற்கான கால மதிப்பீடு. அல்லது பள்ளிக் குழந்தைகளின் தேர்வுக் காலம். அல்லது வருடத்தில் கடந்து செல்லும் மற்றுமொரு மாதம். ஆனால் பாலஸ்தீன மக்களுக்கோ அது அப்படியல்ல. பிறப்பு, இறப்பு, பட்டினி, போராட்டம், வீடிழப்பு, அகதிகாளய் வெளியேறுதல், ஆதரவற்ற குழந்தைகள், உறுப்புகள் இழந்தோர், வேலையிழந்தோர் என்று வாழ்வின் அத்தனை அழிவுகளையும் அன்றாடம் பார்த்து வரும் மண்ணிது. மார்ச் மாதம் 2017-ல் மட்டும் அங்கு நடந்தவற்றின் காட்சிப்பதிவுகளை இங்கே காணலாம்.

தெற்கு காசாவில் இருக்கும் ராஃபா அகதி முகாமில் 15 வயது சிறுவனான யூசுப் ஷபீன் அபு அத்ராவின் இறுதி ஊர்வலம். சிறுவன் அபு அத்ரா, காசா மற்றும் இஸ்ரேல் எல்லையில், இஸ்ரேலிய இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டான். அன்றாடம் ஒப்பாரியும் முழக்கமும் கேட்கும் மண்ணிது. (மார்ச் 22)

ஸ்ரேலின் மேற்கு கரை நகரமான பெத்லகேமில் இஸ்ரேலின் பிரம்மாண்டமான காங்கிரீட் சுவருக்கு அருகே “தி வாலட் ஆஃப் ஹோட்டல்” எனும் விடுதியின் முகப்பு. இதைத் திறந்து வைத்த பிரிட்டீஷ் கலைஞரான பாங்க்ஸ்கி, “உலகின் மோசமான காட்சியை தரிசிக்க உதவும் விடுதி” என்று கூறினார். இந்த விடுதியில் சாப்பிடச் செல்வோரின் நிலையை பாருங்கள்! (மார்ச் 3)

ஸ்ரேலின் மேற்கு கரை நகரமான நாப்லஸில், இஸ்ரேலிய விமான போக்குவரத்து நிறுவனத்தால் கைவிடப்பட்ட போயிங் விமானம் ஒன்று காலி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை கடந்து போகிறார் பாலஸ்தீனியர் ஒருவர். குப்பைகளுக்கு இடம் கொடுக்கும் இசுரேல் பாலஸ்தீனர்களின் தாய்நாட்டிற்கு எதையும் கொடுப்பதில்லை.(மார்ச் 7)

தெற்கு காசாவிலிருந்து ராஃபே வழியாக எகிப்திற்கு அகதிகளாய் செல்ல அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். மனிதாதபிமான உதவிக்காக இந்தப் பாதையை எகிப்து திறந்திருக்கிறது. இருக்குமிடத்திலும் வாழ்வில்லை, செல்லுமிடத்திலும் நிம்மதியில்லை! (மார்ச் 7)

ழைக்கும் மகளிர் தினமன்று, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவேண்டுமென்றும், பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்தும் காசா நகரத்தில் பாலஸ்தீனிய பெண்கள் நடத்திய போராட்டம். இழப்புகளுக்கு அஞ்சாத பாலஸ்தீன பெண்கள்! (மார்ச் 8)

ரு கால் அகற்றப்பட்ட பாலஸ்தீனக் கலைஞரான முகமது டோடா, காசா நகர கடற்கரையில் காயமுற்ற பாலஸ்தீனர்களுக்கா அனுசரிக்கப்படும் மார்ச் 12 நாளை குறிப்பிடும் மணற் சிற்பத்தின் பின் நிற்கிறார். காயமுற்றவர்களுக்கு ஒரு நாளென்றால், ஒரு ஆக்கிரமிப்பில் அவதிப்படும் மண்ணில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும்? (மார்ச் 12)

காசா நகரத்தை பிரித்திருக்கும் இஸ்ரேலின் தடுப்புச் சுவர் தற்போது பத்தாவது வருடத்தில் நுழைகிறது. அதை அகற்றுமாறு காசாவில் இருக்கும் ஐநா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். ஆண்டுகள் பத்தானாலும் சோர்வடையாத போராட்டம்! (மார்ச் 13)

மார்ச் 6 அன்று, அங்கே அனைவரும் அறிந்த களச்செயல்பாட்டளரும், அறிஞருமான பாசெல் அல் அராஜ், இஸ்ரேலின் இராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் மேற்கு கரை நகரமான பெத்லஹேம் அருகே இருக்கும் அல் வாலஜா எனும் கிராமத்தில் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலத்தில் பாலஸ்தீன பெண்கள் தலை வணங்காத வீரத்துடன் கலந்து கொள்கிறார்கள். (மார்ச் 17)

மேற்கு கரை நகரமான ஹெப்ரான் அருகே இருக்கும் க்யுலாக் கிராமத்தின் முதன்மை நுழைவு வாயிலை 17 வருடங்களாக மூடிவிட்டது, இஸ்ரேல் இராணுவம். இதை எதிர்த்து போராடும் பாலஸ்தீன மக்கள். சொந்த மண்ணில் எத்தனை தடுப்புக்கள், அரண்கள், சுவர்கள், சோதனைச் சாவடிகள்! (மார்ச் 17)

தெற்குகரை நகரமான பெத்லகேமில் இஸ்ரேல் இராணுவம் அமைத்திருக்கும் சோதனை வாயிலில் குவிந்திருக்கும் பாலஸ்தீன தொழிலாளிகள். வாயில் திறந்த உடன் இஸ்ரேல் பகுதியில் விரைவாக வேலைக்கு போக அவர்கள் முன்பே வந்து காத்திருக்கிறார்கள். இவர்களைச் சுரண்டும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை போராளிகளாக பார்க்க விரும்புவதில்லை! (19 மார்ச்)

மீபத்தில் சுவிட்சர்லாந்து அரசு ஒரு மசோதாவைக் கொண்டு வந்து அதன் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு போய்ச் சேரும் நன்கொடைகளை, அரசுப்பணத்தை தடை செய்திருக்கிறது. அதைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரமான ராமல்லாவில் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதிநிதித்துவ அலுவலகம் எதிரில் பாலஸ்தீன மக்களின் ஆர்ப்பாட்டம். எப்படியெல்லாம் பொருளாதார முற்றுகை போடுகிறார்கள்! (20 மார்ச்)

மார்ச் 22 அன்று மேற்கு கரை நகரமான பெத்லகேமில் ஆர்ப்பாட்டம் செய்த பாலஸ்தீன மக்கள் மீது ரப்பர் பூசப்பட்ட இரும்பு குண்டுகள், காதைக் கிழிக்கும் ஒலிக் கொண்டுகள் மற்றும் கண்ணீர் குண்டுகளை வீசியது இசுரேலின் இராணுவம். இதில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களை தர மறுக்கும் இசுரேலைக் கண்டித்து போராடுகிறார்கள் மக்கள். 2015-ம் ஆண்டிலிருந்து இப்படிக் கொல்லப்படும் மக்களின் உடலை தர மறுத்து சுயேச்சையான சவப்பரிசோதனை செய்வதையும், முறையாக நல்லடக்கம் செய்வதையும் தடுக்கிறது இசுரேல் அரசு. நல்லடக்கம் செய்வது குறித்து கொலைகாரர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்!

ராணுவத்தில் பணியாற்ற மறுத்த மூன்று மாணவர்களை இஸ்ரேல் அரசு கைது செய்ததைக் கண்டித்து அதி தீவிர பழமைவாத யூதர்கள் ஜெருசேலத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தண்ணீரை பீற்றி கலைக்க முயல்கிறது போலீசு. இசுரேலின் மக்கள், இராணுவம் இரண்டு பிரிவுமே ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத படி இணைந்திருக்கிறது.

சுரேலின் எல்லையில் இருக்கும் வடக்கு காசாவில் ஒரு இசுரேலிய உளவுத்துறை அதிகாரி, பாலஸ்தீனர்களிடம் தகவல் சொல்லுபவர்களை சேர்க்க முயற்சிக்கிறார். இந்த எல்லையில் பாலஸ்தீனத்தின் பக்கம் இருக்கும் பகுதியை ஹாமாஸ் அதிகாரிகள், மாசென் ஃபுகாகா கொல்லப்பட்ட பிறகு மூடி விட்டனர். ஆட்காட்டிகள் இன்றி ஆக்கிரமிப்பு ஏது? (மார்ச் 26)

மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் குடியமர்த்தப்பட்டிருக்கும் யூதக் குடியிருப்புக்களை கண்டித்து பதாகை பிடிக்கிறார் ஒரு பாலஸ்தீனத்து பெண். இசுரேலின் குடியிருப்பு ஒரு ஆக்கிரமிப்பு – பாலஸ்தீனத்தின் குடியுரிமை ஒரு அடிப்படை உரிமை. (மார்ச் 26)

கொல்லப்பட்ட ஹமாசின் அதிகாரியான மாசென் ஃபுகாகாவின் மகளை தோளில் சுமக்கிறார் காசாவில் செயல்படும் ஹமாசின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார். கொல்லப்பட்ட தலைவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தும் ஹமாஸ் ஆதரவாளர்கள். அப்பா போனால் என்ன என்று மகன் வந்து விட்டான்!

பாலஸ்தீனத்து மண்ணை ஆக்கிரமித்த இசுரேலைக் கண்டித்து போராடிய ஆறு பாலஸ்தீனர்கள் மார்ச் 30, 1976-ம் ஆண்டில் கொல்லப்படுகிறார்கள். அந்த தினத்தை நில தினமென்று வருடந்தோறும் மக்கள் கடைபிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இங்கே மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் மார்ச் 30 நடந்த ஆர்ப்பாட்டம். நிலத்தை மீட்பதற்காக ஒரு விடாப்பிடியான போராட்டம்!

நன்றி:  Electronicintifada.net

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க