privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு !

தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு !

-

பத்திரிக்கை செய்தி, நாள் : 13.04.2017

 

புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் பொதுக்குழு 12.04.2017 புதன் அன்று மேடவாக்கம் சமுதாயக் கூடத்தில் நடத்தப்பட்டது.

இந்த பொதுக் குழுவிற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சிவசங்கரன் அவர்கள் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளருமான தோழர். சி. வெற்றிவேல் செழியன், சிறப்புத் தலைவர் தோழர். சுப. தங்கராசு, மாநில பொதுச் செயலாளர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இல.பழனி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்தப் பொதுக்குழுவில் சத்தியபாமா பல்கலைக் கழக பணியாளர்கள், ஒட்டுநர்கள் மற்றும் ஜேப்பியார் குழும கல்வி நிறுவன பணியாளர்கள் எனப் பெருவாரியான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சத்தியபாமா பல்கலைக் கழக பணியாளர்களுக்கு போனசு வழங்கவேண்டும் என்ற தொழிலாளர் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிர்வாகம் நிறைவேற்றச் செய்வது பற்றியும், தனியார் கல்வி நிறுவனங்களில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதையும் மற்றும் உரிமை மறுப்புக்கு எதிராகப் போராடிய மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது நிர்வாகம் ஆலையில்ஏற்பட்ட தீவிபத்து கொலையை நீதிமன்றத்தின் உதவியுடன் தொழிலாளர்கள் மீது திணித்து தண்டித்துள்ளது பற்றியும், தமிழக விவசாயிகள் போராட்டங்கள், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரும் போராட்டங்கள் மீது அரசு, போலீசின் காட்டுமிராண்டி தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இது சம்மந்தமாக இந்த பொதுக்குழு கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

  1.  தனியார் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு PF ESI சம்பளத்துடன் கூடிய EL, CL, போனசு போன்ற தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப் படவேண்டும்.
  2. தனியார் கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்களில் பேருந்து ஒட்டும் தொழிலாளிகள் பேருந்துகளிலேயே வாழ்க்கை நடத்தும் கொத்தடிமை முறை நீக்கப்பட்டு முறைப்படுத்திய பணி தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
  3.  தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கும் விதமாக மாருதி தொழிலாளர் மீதான நீதிமன்ற தண்டனையை நிபந்தனை இன்றி நீக்கி விடுதலை செய்யப்பட வேண்டும். அதிகாரியின் கொலைக்கான உண்மையைக் கண்டறிய வேண்டும்.
  4. தமிழக மக்கள் வாழ்வாதாரத்துக்கான விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், செல் கேஸ் திட்டங்களை ரத்து செய்யவும், டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரும் பொதுமக்கள் போராட்டங்கள் மீதான போலீசின் பொய் வழக்குகள், கொலை வெறித் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்.
  5. திருப்பூர் சாமளபுரம் டாஸ்மாக் கடையை அகற்றப் போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய “ஆண்” ஏ.டி.எஸ்.பி. திரு. பாண்டியராஜனைப் பணி நீக்கம் செய்துநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

என இந்தப் பொதுக்குழு எங்கள் கோரிக்கைகளோடு சமூகத்தின் பிரச்சினைகளையும் விவாதித்து மேற்கண்ட தீர்மானங்களை ஏக மனதாக நிறைவேற்றியுள்ளது.

இவண் :
சி. வெற்றிவேல் செழியன், பொதுச்செயலாளர்.
புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க