privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்சென்னை சேத்துப்பட்டில் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா !

சென்னை சேத்துப்பட்டில் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா !

-

அண்ணல் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா !
நாடு முழுவதும் பரவி வரும் பார்ப்பன பாசிச இந்து மதவெறியை முறியடிப்போம் !

அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதியேற்போம் !

அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை ம.க.இ.க.வின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அனந்தப்ப ராஜா தலைமை தாங்கி நடத்தினார்.

முதல் நிகழ்ச்சியாக முழக்கமிடப்பட்டது.

தோழர் காமராஜ்

மார்க்சிய ஆசான் தோழர் மார்க்ஸ் வாழ்க !
அண்ணல் அம்பேத்கர் வாழ்க !
தந்தை பெரியார் வாழ்க !

முறியடிப்போம் முறியடிப்போம் !
பார்ப்பன-இந்து மதவெறி
பா.ஜ.க-இந்து முன்னணி கும்பல்களை
முறியடிப்போம் முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்க துடிக்கின்ற
பா.ஜ.க சதியை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இந்துமதவெறியூட்டி
சாதி-மத கலவரம் தூண்டி
உழைக்கும் மக்களை கூறுபோடும்
பா.ஜ.க-இந்துமுன்னணி கும்பலை
முறியடிப்போம் முறியடிப்போம் !

சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மோடியின் டிஜிட்டல் இந்தியா
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மேக்கின் இந்தியா-கிளின் இந்தியா
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மோடியின் கருப்புபண ஒழிப்பெல்லாம்
மோடியின் ஊழல் ஒழிப்பு-நாடகமெல்லாம்
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!

அரிசி இல்லை! பருப்பு இல்லை!
சர்க்கரை இல்லை! கோதுமை இல்லை!
பாமாயில் இல்லை! மண்ணெண்ணெய் இல்லை!
அட தூ ! துவரம் பருப்பு ஏதுமில்லை!
உணவுப்பொருளுக்கு மானியம் இல்லை !
ஸ்மார்ட் கார்டு – என்னமசுருக்கு !
ஸ்மார்ட் கார்டு – என்ன மசுருக்கு !

உழைக்கும் மக்களே, உசார் உசார் !!
கும்பல் வருது ! கும்பல் வருது !
பா.ஜ.க-இந்துமுன்னணி கும்பல் வருது !
முஸ்லீம் மக்களை கொன்றுகுவிக்கும்
தலித்மக்களை கொன்றுகுவிக்கும்
இந்து மதவெறி கும்பல் வருது !
உழைக்கும் மக்களே, உசார்! உசார் !!

முழக்கங்கள்

பன்னாட்டுமுதலாளிகளின்
ஓட்டல்களுக்கு தாராளமாக தண்ணிரு
எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு
தாரளமாக தண்ணிரு
நீதிபதி – ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ்.
அதிகாரிகளுக்கு – தாராளமாக தண்ணிரு
கோல்ஃப் – மைதானத்திற்கு தண்ணிரு
நீச்சல் குளத்திற்க்கு தண்ணிரு
மக்களுக்கு – எஸ்.கே. – தண்ணிரு

பதில் சொல் ! பதில் சொல் !!
இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க-வே
பதில் சொல் ! பதில் சொல் !
உழைக்கும் மக்கள் – சாமியை தொட்டால் தீட்டு என்றாய்
கருவறைக்கு நுழைந்தால் தீட்டு என்றாய்
மக்கள் தரும் தட்டில் துட்டு தீட்டில்லை !
உண்டியல் துட்டு தீட்டு இல்லை !
பூ பழம், தேங்காயும் தீட்டில்லை !
பதில் சொல் ! பதில் சொல் !!
இந்துமதவெறி – பிஜேபியே
பதில் சொல் ! பதில் சொல் !!

அடுத்ததாக அம்பேத்கரின் சிலைக்கு சேத்துப்பட்டு பகுதி தோழர்கள் ஜெயகாமராஜ், பாஸ்கர் ஆகியோர் அம்பேத்கர், பெரியாரின் சிலைகளுக்கு மாலையணிவித்தனர். இதைத் தொடர்ந்து ம.க.இ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் புவன் உறையாற்றினார்.

தோழர் புவன்

அவர் பேசியதாவது ”அம்பேத்கரின் இந்த 126-வது பிறந்தநாள் தினத்தை நம்மை போன்று பல்வேறு அரசியல் சக்திகள், ஜனநாயக சக்திகள் மாலையணிவித்து நினைவுக்கூறும் அதே நேரத்தில்தான் அவர் தீவிரமாக யாரை எதிர்த்தாரோ அந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பலும் அவருக்கு மாலையணிந்து மரியாதை செலுத்துகின்றனர்.

நாடு முழுவதும் சாதி – மத வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை பிளவுப்படுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.மோடி கும்பலுக்கு அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்க எந்த அருகதையும் இல்லை.

மேலும், நாடு முழுவதும் இன்றைக்கு, தலித் மக்கள், சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல், சாதி-மதவெறியைத் தூண்டி மக்களை பிளவுப்படுத்துவது. உழைக்கும் மக்களின் உணவான மாட்டுக்கறிக்கு தடை போடுகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டுக்கறியை வைத்திருந்தாலே அவர்களுக்கு மரணதண்டனை என பாசிச சட்டங்களை போடுகிறது.

இதுமட்டுமல்லாமல் நாட்டில் விவசாயிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றி அவர்களையும், உழைக்கும் மக்களையும் மரண குழியில் தள்ளுகிறது. பாசிச மோடி அரசு.

பரவி வரும் பார்ப்பன பாசிச இந்து மதவெறியை முறியடிக்க அம்பேத்கரின் பிறந்த நாளில் உறுதியேற்போம் ” என்றுபேசினார்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588