privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகளக் கணிப்புகோக் பெப்சி புறக்கணிப்பு : சென்னையில் ஒரு கருத்துக் கணிப்பு

கோக் பெப்சி புறக்கணிப்பு : சென்னையில் ஒரு கருத்துக் கணிப்பு

-

மிழகத்தில் காளைக்காக நடந்த போராட்டமானது காவிகளை மட்டுமல்ல, கார்பரேட்களையும் கலங்கச் செய்தது. அமெரிக்க மோகம் மற்றும் நுகர்வு மோகத்தாலும், கிரிக்கெட் நட்சத்திரங்கள், சினிமா நடிகர்கள் ஆகியோரின் விளம்பர மோகத்தாலும் இளைஞர்களிடையே ஒரு பண்பாடாக பரவி இருந்த கோக் – பெப்சியை அதே இளைஞர்களே சுயமரியாதை உணர்வோடு மெரினா போராட்டத்தில் சாலைகளில் ஊற்றி ”அமெரிக்க கோலா பானங்களைத் தடை செய்” என முழக்கமிட்டனர்.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் கோக், பெப்சி புறக்கணிப்பு முழக்கம் மக்களின் முழக்கமாக மாறியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் கோக் – பெப்சியை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இந்த புறக்கணிப்பைப் பற்றி கடந்த மார்ச் மாதத்தில் வினவு செய்தியாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கணிசமான வணிகர்கள் உணர்வுப்பூர்வமாகவே அதனை அமுல்படுத்தியிருந்தனர். பல வாடிக்கையாளர்களும் இந்திய குளிர்பானத் தயாரிப்புகளைக் கேட்டு வாங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனாலும் பொதுவில் கோடைக்காலம் ஆரம்பிக்கும் போது தான் கோக்-பெப்சி குறித்த மக்களின் மனநிலை தெரியவரும் என்றனர்.

வணிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு வாடிக்கையாளர் கேட்கும் சரக்கு வேண்டும். பல கடைகளில் மக்கள் வாங்குவதில்லை என்பதால் கோக் பெப்சி இருப்பில்லை என்றனர். சில கடைகளில் புறக்கணிப்பிற்கு முன்பே வாங்கிய இருப்பு இன்னும் இருப்பதாக கூறினர். சில கடைக்காரர்கள் கோக் பெப்சி தொடர்ந்து வாங்குவதாகக் கூறினர். சில வணிகர்கள் உணர்வுப் பூர்வமாகவே புறக்கணித்தனர். இருப்பினும் அனேகர் கூறியது என்னவென்றால் மக்கள் வாங்குவது, புறக்கணிப்பதை வைத்தே கோக் பெப்சி விற்பனை தொடரும் அல்லது குறையும்.

சரி, அதையும் நேரில் அறியலாம் என்று இந்த கணிப்பை மேற்கொண்டோம்.

இதோ, கோடைகாலம் தொடங்கி விட்டது. ஏப்ரல் மாத துவக்கத்திலேயே வரவிருக்கும் தண்ணீர் பஞ்சமும் நம் கண் முன்னே தெரிய ஆரம்பித்துவிட்டது. எனவே இந்த சமயத்தில் கோக் – பெப்சி பற்றி மக்களின் கருத்ததை அறிவது இன்னும் பொருத்தமாகவும் இருக்கும்.

கடந்த 9.4.2017 ஞாயிறு அன்று சுமார் 15 தோழர்கள் இக்கணிப்பை மக்களிடம் நடத்தினர். சென்னை நகரில் மட்டும் மேற்கொண்ட இக்கணிப்பில் வடபழனி, வடபழனி முருகன் கோவில், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, மீர்சாப்பேட்டை, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்றனர்.

முதன்முறையாக இக்கணிப்பை சர்வே விண்ணப்பங்களுக்கு பதில் கேள்விகளை படித்துக் காண்பித்து பதில்களை செல்பேசியில் ஒரு செயலியில் பதிவு செய்து கொண்டோம். இதன் மூலம் மக்களுக்கு கேள்விகளை தெளிவாக விளக்கி பதிலை வாங்கலாம் என்பதோடு பிறகு கருத்துக் கணிப்பு முடிந்த பிறகு தனியாக கணினியில் விவரங்களை உள்ளீடு செய்யும் பெரும் பணி மிச்சம். அந்த வகையில் இதை ஒரு சோதனை முயற்சியாகவும் மேற்கொண்டோம். எதிர்காலத்தில் இத்தகைய ஸ்மார்ட் ஃபோன் மூலம் மேற்கொள்ளப்படும் சர்வேயை பரந்து பட்ட மக்களிடம் எடுத்த கையோடு முடிவுகளை வெளியிடுவதையும் செய்ய முடியும்.

கணிப்பைப் பொறுத்த வரை பெரும்பாலான மக்கள் பொதுவில் கோக் பெப்சியை குடிப்பதே இல்லை. நடுத்தர வர்க்கம், ஐ.டி போன்ற மாதச் சம்பளம் வாங்கும் பிரிவினரைத் தாண்டி மற்றவர்களிடம் இக்குளிர்பானங்களை குடிக்கும் பழக்கம் இல்லை. டாஸ்மாக் மிக்சிங்கிற்காக சிலர் வாங்குகிறார்கள். அதிலும் நீரை பயன்படுத்தும் மக்களே அதிகம். இக்கணிப்பில் கோக் பெப்சியோடு தண்ணீர் தனியார் மயம் குறித்தும் சில கேள்விகள் இருக்கின்றன. தண்ணீருக்காக அதிகம் செலவழிக்கும் நிலை வந்தாலும் மக்கள் தண்ணீரை தனியாருக்கு விடுவதை எதிர்க்கின்றனர்.

தாமிரபரணி தண்ணீரை தாரை வாய்ப்பதை எதிர்க்கும் மக்கள் வணிகர் சங்கங்களின் கோக் பெப்சி புறக்கணிப்பை வரவேற்கின்றனர். மொத்தம் 511 பேர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் தமிழக மக்களின் மன ஓட்டத்தை காட்டுவதாக இருக்கின்றன.

கருத்துக் கணிப்பில் கேட்க்கப்பட்ட கேள்விகள் – அதற்கு மக்கள் அளித்த பதில்கள்

1. உங்கள் வீட்டில் எந்தக் குடிநீர் உபயோகிக்கிறீர்கள் ?

————————————-

2. அரசாங்கம் தண்ணீர் வியாபாரத்தை அனுமதிப்பது

—————————————–

3. அரசாங்கம் மக்களுக்கு தரமான இலவச குடிநீர் வழங்காமலிருக்கக் காரணம் ?


4. தாமிரபரணி நீரைக் கோக் நிறுவனம் எடுக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது சரியா ?


5. வணிக சங்கங்கள் – கோக் பெப்சி விற்பதில்லை என அறிவித்திருப்பதை ஆதரிக்கிறீர்களா ?


6. லிம்கா ஃபாண்டா போன்ற குளிர்பானங்கள் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது ?


7. “பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது” என மத்திய அரசு கூறுவதை ஆதரிக்கிறீர்களா ?


8. இதற்கு முன்னால் கோக், பெப்சி குடித்து வந்திருந்த நீங்கள், தற்போது குடிப்பதை நிறுத்தியிருந்தால் அதற்கு என்ன காரணம் ?


9. கோக், பெப்சி விளம்பரத்தில் நடிகர்கள் தோன்றுவது


ஆய்வு – ஒருங்கிணைப்பு: வினவு கருத்துக் கணிப்புக் குழு