privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்வேலூர் : லெனின் பிறந்த நாளில் புதிய உதயம் !

வேலூர் : லெனின் பிறந்த நாளில் புதிய உதயம் !

-

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் வேலூரில், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது. ஏற்கனவே வேலூரில் இயங்கி வருகின்ற இரண்டு கிளைகளின் அரசியல் செயல்பாடுகளை பார்த்து இந்த வியாபாரிகள் புஜதொமு-வுடன் இணைவது, என முடிவு செய்து தொடர்பு கொண்டு பேசினார்கள்.

அதன் அடிப்படையில் தோழர் லெனின் பிறந்த தினத்தில், புதிய கிளை திறக்கப்பட்டது. புதிய கிளை திறப்பு நிகழ்ச்சியும், ஏப்ரல்-22 தோழர் லெனின் பிறந்த தினத்தை நினைவுகூறுவதும், இரண்டும் ஒன்று சேர்ந்து நடத்தப்பட்டது. மூன்று இடங்களில் தோழர் லெனின் படத்தை திறந்து வைத்து, கொடியேற்றி, தோழர்கள் லெனின் பற்றியும், இரசிய புரட்சி பற்றியும், பேசினார்கள். பழைய மீன் மார்க்கெட், பெரியார் பூங்கா, அடுக்கம்பாறை போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதில் சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில தலைவர் தோழர் முகுந்தன், உறுப்பினர்கள் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய தோழர்கள், “அழுக்குச் சட்டையும் நாட்டை ஆளமுடியும் என்று நிரூபித்தவர் தோழர் லெனின்”, 70 ஆண்டுகளாக விலைவாசியே மாறாத நாடாக இரசியா இருந்தது, பசி அறியாத நாடாக இரசியா இருந்தது, என சோசலிச சாதனைகளைப் விளக்கி பேசினர்.

இன்றைய சூழலில் தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் அமைப்பாக திரளவேண்டியதன் அவசியம் குறித்தும்,  மற்றும் சங்க நிர்வாகிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், தோழர்கள் கூட்டத்தில் பேசினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம்)
வேலூர் மாவட்டம். தொடர்புக்கு : 84897 35841

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க