privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மே தினம் : மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம் !

மே தினம் : மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம் !

-

மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … செங்கொடி ஏந்தி போராடு… !

8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான்.

8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை ! தொழிற்சங்கம் துவங்கியதற்காக கொலைப்பழியோடு வாழ்நாள் சிறையில் தள்ளப்பட்டுள்ள மாருதி ஆலைத் தொழிலாளர்களும், முதலீட்டாளர்களது இலாபவெறிக்காக ஒருமணிநேர அவகாசத்தில் வேலையை விட்டே துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான காக்னிசண்ட் ஐடி நிறுவன ஊழியர்களும் மிகச்சமீபத்திய உதாரணங்கள். இரண்டு பிரிவிலும் வேலைமுறைதான் வெவ்வேறாக இருக்கிறதே தவிர, துயரங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறது. வாழ்நாள் சிறையும், வேலைபறிப்பும் சாராம்சத்தில் ஒரே மாதிரியான தண்டனைதான்.

எல்லா வேலைகளும் காண்டிராக்ட்மயமாகி விட்டதால் எப்போது வேலை பறிபோகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. வேலை கிடைப்பதே அரிதாகி வருகிறது. கிடைக்கிற காண்டி ராக்ட் வேலைக்கும் போட்டிகள் அதிகரித்து வருகிறது. எத்தனை மணிநேர வேலைக்கும் தயார்; எவ்வளவு குறைந்த சம்பளத்துக்கும் தயார், எந்த வேலைக்கும் தயார் என்றெல்லாம் இறங்கி வந்து, கிடைத்த காண்டிராக்ட் வேலையை காப்பாற்றிக் கொள்ள குட்டகுட்ட குனிந்து நிற்க வேண்டி இருக்கிறது.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பதை உள்ளடக்கிய மறுகாலனியாக்கக் கொள்கையை மத்திய – மாநில அரசுகள் கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமல்படுத்தியதால் முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளி வர்க்கம் மட்டும் பலியாகவில்லை. விவசாயிகள், சிறுவணிகர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களும் பேரழிவை சந்தித்து வருகின்றன. நாட்டின் இயற்கை வளங்கள், தாது வளம், ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் ஆகிய அனைத்து வாழ்வாதாரங்களையும் சூறையாடி வருகிறது, மறுகாலனியாக்க நடவடிக்கைகள்.

மறுகாலனியாக்கக் கொள்கையானது இந்திய விவசாயத்தை குறிவைத்து அழித்து வருகிறது. விவசாயத்துக்கு தரப்படுகின்ற சலுகைகள் அனைத்தையும் வெட்டுவது, விவசாயக் கடன்கள் மறுப்பு, நீராதாரங்களை வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவது, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய ஆதாரவிலையை நிர்ணயிக்க மறுப்பது, உரம், விதைகள் உள்ளிட்ட இடு பொருட்களை பன்னாட்டு நிறுவனங்களது ஆதிக் கத்துக்கு விட்டுவிடுவது, வீரிய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கட்டாயமாக்கி, விதைகளுக்காக பன்னாட்டு விதைக்கம்பெனி களை சார்ந்து நிற்பது, ஒப்பந்த விவசாயம் என்கிற பெயரில் சிறுவிவசாயிகளையும், உணவுப்பயிர் விவசாயத்தையும் ஒழித்துக்கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நம்பி இருந்த விவசாயம் கைவிட்டுப்போன நிலையில் கடன் தொல்லை தாங்க முடியாமலும், பிழைப்புக்கு வழி தெரியாமலும் தற்கொலை செய்து கொள்ளுகின்ற விவசாயிகள் மத்தியில், பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்தால் காண்டிராக்ட் வேலையைத் தவிர வேறு வழியில்லை.

ஆன்லைன் வர்த்தகம், ஒற்றை முத்திரை – பல் முத்திரை வணிகம் ஆகிய அனைத்துக்கும் அனுமதி அளித்து சிறுவணிகத்தை ஏகபோக வர்த்தகத்துக்கு பலியிட்டுள்ளது, அரசு. நவீனமயமாக்கல், காப்புரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் சிறுதொழில்கள் சுடுகாட்டுக்கு அனுப்பப்பட்டுள் ளன. பலகோடி பேருக்கு வேலைவாய்ப்பினை தந்து கொண்டிருந்த சிறுவணிகமும், சிறுதொழில்களும் ஒழிக்கப்பட்ட நிலையில், இவற்றை சார்ந்திருந்த மக்களின் கதி என்ன?

காடுவளம், தாதுவளம், நீர்வளம், கடல்வளம் ஆகிய அனைத்தும் இலாபத்துக்காகவே என்கிறது, அரசின் கொள்கை. குடிப்பதற்கு தண்ணீரின்றி தவித்தாலும், கோக்-பெப்சிக்கு தண்ணீர் தந்தாக வேண்டும். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களை துரத்திவிட்டு, காடுகள், மலைகளை கார்ப்பரேட் கம்பெனிகளது சூறையாடலுக்கு அனுமதிக்க வேண்டும். கடலன்னை மீன்வளத்தை வாரிக்கொடுத்தாலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கே அவை சொந்தம்.

சொந்த நாட்டு மக்களைவிட கார்ப்பரேட் கம்பெனிகளது இலாபவேட்டை முக்கியம் என்கிறது, அரசு. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை, மானியங்கள், பொதுத்துறைகள் தாரைவார்ப்பு, மின்சாரம் உள்ளிட்ட எல்லா அடிப்படை துறைகளிலும் தொழில் துவங்க அனுமதி, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வணிகமாக்கிக் கொள்ள அனுமதி, இயற்கை வளங்களை அள்ளிக் கொள்ள அனுமதி, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், நில அபகரிப்பு ஆகிய அனைத்தையும் செய்து முடிக்கிறது.

வாழ்வதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் எங்கு போனாலும் வேலையின்மையும், விலைவாசி உயர்வும் நம்மை துரத்திக் கொண்டு தானிருக்கின்றன. கார்ப்பரேட் காட்டாட்சி நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதை என்னதான் பிழைப்புக்கு வழியில்லை என்றாலும் எத்தனை காலத்துக்கு இந்த கொடுமைகளை சகித்துக் கொண்டிருப்பது ? மறுகாலனியாக்க கோரத்தாண்டவத்தை ஆடினாலும், இந்து மதவெறியர்கள் உழைக்கும் மக்களை தேசபக்தி போதையில் மூழ்கடித்து வருகின்றனர்.

இத்தனை நெருக்கடியிலும் மக்கள் தங்களது வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க போராட்டக்களம் புகுந்துள்ளனர். குறிப்பாக, மெரீனா எழுச்சிக்குப் பின்னர் போராட்டமே தமிழகத்தின் முகவரியாகி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக போராட்டங்கள் நடந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன. குறைந்தபட்ச போராட்டமே மறியலும், முற்றுகையும்தான் என்கிற அளவுக்கு தமிழக மக்களது போராட்டங்கள் வீச்சாக நடந்து வருகின்றன.

இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு போலீசு விதவிதமான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது. நியாயம் கேட்டு நீதிமன்றம் போனால், நீதிமன்ற பாசிசம் மக்களது  ஜனநாயக உரிமைகளைக்கூட பறிக்கிறது. அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதாக சொல்லிக் கொண்டாலும், நடந்து கொண்டிருப்பது முதலாளிகளது அரசுதான் என்பதை ஒவ்வொரு நடவடிக்கையும் நிரூபிக்கின்றன. மக்கள்நலன், நாட்டுநலன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எந்த கட்சி ஆட்சி செய்தாலும் கார்ப்பரேட் முதலாளிகள் போடுவதே சட்டம் என்றாகிவிட்டது. உழைக்கும் மக்கள் வாழ வேண்டும் என்றால் இந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

மக்களுக்கான அரசு தேவை என்றால், அங்கு கார்ப்பரேட்டுகளது அதிகாரம் ஒழிக்கப்பட்டு மக்களது அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும். முதலாளித்துவ இலாபவெறிக்காக திணிக்கப்பட்டு வருகின்ற மறுகாலனியாக்கத்துக்கும், அதனைப் பாதுகாப்பாக சுமந்து செல்கின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கும் முடிவுகட்டுகின்ற ஆற்றல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே இருக்கிறது. போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது, அந்த போராட் டங்கள் புரட்சிகர அரசியலை ஏந்தி நிற்பதும், புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படுவதும். தமிழகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் நடந்து வருகின்ற மக்கள் போராட்டங்களை புரட்சிகர அமைப்புகளது தலைமையின்கீழ் ஒருங்கிணைப் போம். போராட்டக்களத்தில் செங்கொடி ஏந்தி முன்னேறுவோம். மேதினத்தின் போராட்ட பாரம்பரியத்தையும், மே தினத் தியாகிகளது நினைவையும் உயர்த்திப்பிடிப்போம்!

மேதின தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்துவோம் !

  • மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம் !
  • பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை மோதி வீழ்த்துவோம் !
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
  • பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைக் கட்டியமைப்போம் !

பேரணி – ஆர்ப்பாட்டம்
மே 1, 2017
நேரம்  : மாலை 4.30 மணிக்கு
ஆவடி – கும்மிடிப்பூண்டி – காஞ்சிபுரம் – வேலூர்

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.
94444 61480, 94453 68009, 88075 32859, 84897 35841.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க