privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபாலஸ்தீன் நாக்பா பேரணி : நாங்கள் மீண்டும் வருவோம்

பாலஸ்தீன் நாக்பா பேரணி : நாங்கள் மீண்டும் வருவோம்

-

டந்த 2017, மே 15-ம் தேதி 69 வது நாக்பா அல்லது பேரழிவு நாளை பாலஸ்தீன மக்கள் நினைவு கூர்ந்தனர். 1948 ஆம் ஆண்டு இசுரேல்  நாட்டை உருவாக்குவதற்காக 7,50,000 பாலஸ்தீனிய மக்கள் அவர்களது சொந்த மண்ணை விட்டு துரத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர். 1947 மற்றும் 1949 ஆண்டுகளுக்கிடையில் பாலஸ்தீனர்களின் 500 கிராமங்கள் மற்றும் நகரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் உலகம் முழுவதும் இருந்து யூதர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். உரிமைகள் பறிக்கப்பட்ட இந்த நாளையே நாக்பா அல்லது பேரழிவு என்ற பெயரில் ஆண்டுதோறும் மே மாதம் 15-ம் நாளில் பாலஸ்தீனியர்கள் நினைவு கூர்கிறார்கள்.

இசுரேல் உருவாக்கப்பட்ட ஏழு பத்தாண்டுகளுக்குப் பின்னர் அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தையும் தாண்டி விட்டது. 1948 ஆம் ஆண்டிலிருந்து இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அகதிகள் முகாம்களில் தான் வசிக்கின்றனர். உள்நாட்டு அகதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் (ADRID) புள்ளிவிவரங்கள் படி ஐந்து பாலஸ்தீனியர்களில் ஒருவர் அகதியாக இருக்கிறார்.  இந்த பிரச்சினையை சட்டவழியில் தீர்ப்பதற்குத் தேவையான ஆவணங்களை இசுரேல் குழி தோண்டி புதைத்து விட்டது. “ஐக்கிய நாடுகளின் சபையின் தீர்மானத்திற்கு விரோதமாக பாலஸ்தீனர்களை அவர்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இசுரேல் தடுத்து வருகிறது. என்னைப்பொறுத்த வரையில் ஆக்கிரமிப்பில் தான் பிறந்தேன். ஆக்கிரமிப்பிற்கு இடையே தான் நான வளர்ந்தேன். என்னுடைய ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்பினுள் தான் கழிகிறது” என்று பாலஸ்தீன பத்திரிக்கையாளர் எலியியா கோர்பியா கூறுகிறார்.  “சட்டவிரோத இசுரேலிய குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. புதிய குடியிருப்புகளுக்காக இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” என்கிறார்.

இசுரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுபவர்கள் ஒன்று பாசில் அல்-அராஜை போல படுகொலை செய்யப்படுகிறார்கள் அல்லது இசுரேலிய சிறையில் அவர்கள் தம் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டியிருக்கும். இசுரேலின் அதிகாரத்திற்கு அடிபணியாதீர்கள் என்று நாக்பா நினைவு நாளில் பாலஸ்தீனிய மக்களை வலியுறுத்தியிருப்பதுடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் பாலஸ்தீனிய அரசியல் கைதிகள் 1500 பேர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டக்காரர்களில் ஒருவரான மஜ்த் ஸைடேஹ் கடந்த 2002 ஆண்டில் அரசியல் கைதியாக சிறை பிடிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 18. “நான் இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரானவன். நான் ஆக்கிரமிப்பை வெறுக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் யூதர்களுக்கும் ஆக்கிரமிப்பிற்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது…. நான் நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை. எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் என்னை அது பெருமைபடுத்துவதாகவே இருக்கும்” என்று நீதிமன்றத்தில் தான் கூறியவற்றை நினைவு கூறுகிறார் மஜ்த். நீதிமன்றத்தில் அவர் பேசிய இந்த வார்த்தைகளால் அவரின் மேல் முறையீட்டு விண்ணப்பத்தை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

“எனது மகனும் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலைக்காக மட்டுமே போராடுகிறார்கள். மற்ற எல்லோரையும் போல தான் நாங்களும். எங்களுக்கும் தாய்மார்கள் இருக்கிறார்கள். எங்கள் கண்களிலும் நிறம் இருக்கிறது. நாங்களும் நேசிக்கிறோம். ஆனால் மற்றவர்களுக்கு போல் எங்களுக்கு தாய் நாடு என்று ஒன்றில்லை” என்று மஜ்தின் தந்தை மஹ்மூத் ஸைடேஹ் கூறுகிறார்.

“பாலஸ்தீனத்திற்கு நாங்கள் திரும்ப வருகிறோம்” என்று அரபு மொழியில் பொறிக்கப்பட்ட ஒரு சாவி சின்னத்தை பாலஸ்தீனியர்கள் எடுத்து வருகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரான ரமல்லாஹில் 69 ஆவது நாக்பா நினைவு நாளை நினைவு கூர்ந்து திரண்ட பேரணி ஒன்றில் பாலஸ்தீனக் கொடியையும் பதாகைகளையும் எடுத்துச் செல்கின்றனர் போராட்டக்காரர்கள்.

நாக்பா நினைவு நாளை அரங்கேற்றுவதற்காகத் திரண்ட பாலஸ்தீன மக்கள் கூட்டமொன்றில் தன்னுடைய பழைய குடும்ப வீட்டிற்கான சாவியை கையில் பிடித்திருக்கிறார் பாலஸ்தீன பெண்மணி ஒருவர்.

இசுரேலை உள்ளடக்கிய பழைமையான பாலஸ்தீனம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் காசாவைச் சேர்ந்த மக்கள் திங்கள்கிழமை அன்று பேரணிகள், கூட்டங்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஊர்வலங்களை நடத்தினர்.

இசுரேல் தன்னுடைய விடுதலைப் பிரகடனத்தை 1948 ஆம் ஆண்டு வெளியிட்டதற்கு இடையில் நாக்பா அல்லது பேரழிவு நிகழ்ந்தது.

நாக்பா நாள் பேரணி ஒன்றில் பாலஸ்தீன முதன்மை அமைச்சர் ரமி ஹம்தல்லாக் கலந்து கொண்டார்.

திங்கள்கிழமை – நாக்பா நினைவு நாள் மட்டுமல்ல இசுரேலிய சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனிய அரசியல் கைதிகள் 1500 பேர் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தின் 29 ஆவது நாளும் ஆகும்.

யூத குடியேற்றமான பெய்ட் எல்லுக்கு அருகே ஒருப் போராட்டத்தில் இசுரேலியப் படைகளுடன் நடக்கும் மோதல்களுக்கு நடுவில் ஒரு பெண் போராட்டக்காரர் .

ஆக்கிரமிப்பு மேற்குக்கரை நகரமான பெத்லஹேமில் நடந்த மோதல்களில் இசுரேலியப் படையினரால் வீசப்பட்டக் கண்ணீர் புகை குண்டுகளில் இருந்துத் தப்ப மறைவிடத்தை நோக்கி ஓடுகின்றனர் பாலஸ்தீனப் பள்ளி மாணவிகள்.

பெத்லஹேமில் நடைபெற்ற 69 வது நாக்பா நினைவு நாளில் நடந்த போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட மோதல்களில் இசுரேலியப் படைகளை நோக்கி பாலஸ்தீனியர் ஒருவர் கற்களை எறிகிறார்.

நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம்: சுந்தரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க