privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதருமபுரி டாஸ்மாக் போராட்டம் - வங்கி திருட்டு - களச் செய்திகள்

தருமபுரி டாஸ்மாக் போராட்டம் – வங்கி திருட்டு – களச் செய்திகள்

-

தருமபுரி  பாலக்கோடு  அருகே  அண்ணாமலைஅள்ளி   டாஸ்மாக்  கடையை  அடித்து நொறுக்கிய அப்பகுதி பெண்களின்  போராட்ட அனுபவம் !

ப்பகுதியில்  கடந்த  ஓருமாதகாலமாக  டாஸ்மாக்  இருக்கிறது என்கிறீர்கள்  இதனால்  என்ன மாதிரியான  பாதிப்புகளை  அனுபவித்துவந்தீர்கள்?

பஸ்டாப்பை ஒட்டியே  டாஸ்மாக் கடை, இங்கு எந்த நேரமும் கூட்டம் கூட்டமாக குடிச்சிட்டுதான் இருப்பாங்க. கெட்ட கெட்ட வார்த்தையால  பேசுவானுங்க. பொம்பளங்க  யாராவது வந்தா வெறிச்சி பாத்துக்கிட்டே  இருப்பானுங்க.அதுமட்டுமா?  10,15, வயசு  பசங்க குடிக்குறாங்க,10 வயசு  பொண்ணுங்க கூட  பள்ளிக்கூடத்துக்கு  போகமுடியல.

பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )

நாங்க சங்கத்துல இருக்கிறோம்,வாரம்வாரம்  பணத்தை  பேங்கல  போடனும்  அந்த வழியா வந்தா  பயமா? இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு  போற  பொண்ணுங்களுக்கு  பலாத்தாரம் ஏதாவது  நடந்திருமோ? என்கிற  பயம்  அதிகமா  இருந்துச்சு. எங்கள்ல  பலபேரு வீட்டுக்காரங்க  குடிக்கிறதில்ல, ஆனா  பொதுவா இவ்வளவு  பிரச்சினைகள்  இருக்கிறதால  இந்த கடை  இருக்க  கூடாதுங்கிற  கோபமும்  ஆத்திரமும்   எங்களுக்குள்ள  இருந்துச்சு.

இந்த கடையை   மூடுவதற்கு  என்ன  மாதிரியான  முயற்சியை  மேற்கொண்டிங்க?

2 முறை  200 பெண்கள்  சேர்ந்து  கலெக்கடர்  அலுவலகத்தில்  மனுக்கொடுத்தோம்.  அப்போது  15 நாள்   அவகாசம்  கொடுத்து  அதுக்குள்ள  எடுத்துடுறோம்   என்று  சொன்னாங்க. 15 நாளுக்கு  அப்புறம்  கடையை  எடுக்காம, சாராய  லோடை கொண்டுவந்து  இறக்கினாங்க. அப்பதான் எங்களுக்கு  புரிஞ்சிச்சு  எங்கள  ஏமாத்துறாங்கனு; அதுக்கப்புறம்  என்ன செய்யறதுனு  புரியாம  இருந்தோம் .

பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )

அப்பதான்  மக்கள்  அதிகாரத்துக்கார  அண்ணனுங்க  இரண்டுபேர்  வந்து  எங்ககிட்ட  பேசினாங்க,  நீங்களும்  இரண்டு  முறை  மனுக் கொடுத்துட்டீங்க  கலெக்டர்  கண்டுக்கவே இல்லை  சாராயத்தை  விற்க சொல்லறதே  கலக்டருதான். அவருக்கிட்ட  மனுக் கொடுத்தா சாராய கடையை மூடமுடியாது. அதனால  உடைப்பதுதான்   தீர்வுனு  சொன்னாங்க, அதுக்கப்புறம்தான்  எங்களுக்கு  ஒரு நம்பிக்கை  வந்துச்சு,நாங்களும்  உறுதியா யாருக்கும்  பயப்படாம  எறங்கி  உடைச்சோம்.

இந்தமாதிரி  சாராயக் கடையை  உடைச்சா  இது அரசாங்கத்தோட  பொதுசொத்து  அதனை  சேதபடுத்திட்டாங்க  என்று  குற்றம்  சுமத்துகிறார்களே?

அராசாங்க  பொது சொத்துனு சொன்னா? மளிகைகடைய  வச்சி கம்மி விலையில  அரிசி, பருப்ப  கொடுத்தா  மக்களுக்கு   உபயோகமா   இருக்கும். அதவுட்டுட்டு  டாஸ்மாக்கை  வைச்சதால  படிக்கிற  பசங்க குடிக்கிதுங்க. போற வழியில  பொண்ணுங்களுக்கு  ஏதாவது  ஆயிடுமோனு  பயந்து  சாகறதா இருக்குது. பல பெண்களின்  பூவையும்,பொட்டையும் இழந்து நிற்கிறோம்.

இரண்டு  நாளுக்கு  முன்னாடிதான்  இந்த சாராயத்தை  குடிச்சிட்டு  இங்க ஒருத்தன்  செத்துபோனான். அவனோட  குடும்பம், குழந்தைங்க  நடுத்தெருவுல  நிக்குது. பல பெண்களோட  வாழ்க்கை  இப்படிதான்  இருக்குது. இதுவா  பொதுசொத்து ?

பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )

இப்போராட்டத்தின்  மூலமாக  தமிழ்நாட்டு  பெண்களுக்கு  என்ன சொல்ல வருகிறீர்கள்  ?

அவங்க   அவங்க ஊர்ல  வரக்கூடிய  டாஸ்மாக்கை விரட்ட மனுக்கொடுக்கிறத  விட்டுட்டு, அடிச்சி  விரட்டுங்க.  ஊருக்கள்  விடக்கூடாது. அப்போதுதான்  எங்கள  மாதிரி  நிம்மதியா  நடமாட முடியும்,வாழ முடியும்.

-பு.ஜ செய்தியாளர்.


வங்கியில்  சேமிக்கப்பட்ட   பணத்தை  பறிக்கொடுத்து   ஏமாந்த   தருமபுரி   அரசு ஊழியர்கள் !

தார்   இந்திய  குடிமகனின்  அடையாளம்,  பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு  என்றெல்லாம்  நியாயப்படுத்தி  அதனை  கட்டாயமாக்கியது  மோடி கும்பல்.  இதன் விளைவாக  இந்திய  குடிமகனின்   தனிமனித  சுதந்திரம்  பறிக்கப்பட்ட கையோடு, அவர்களின்  வாழ்வாதாரத்தை   பறிக்கும்  வகையில்  ரேசன்  மானியம் , சிலிண்டர்  மானியத்தை    வெட்டி வருகிறார்கள். வெந்த புண்ணில் வேல்  பாய்ச்சுவது  போல  சிறுக சிறுக   வங்கில் சேமித்து  வைத்திருக்கும்  பணத்திற்கும்   பாதுகாப்பு  இல்லாத  நிலை ஏற்பட்டுள்ளது.

படிப்பறிவில்லாத  பல கோடி மக்கள் வசிக்கும்   இந்தியாவில்  பணப்பரிவர்த்தணை, டிஜிட்டல் முறையை  கொண்டு வந்து  ஒட்டுமொத்த மக்களையும்  கழுத்தை  பிடித்து  நெட்டி  தள்ளி வரும் வேளையில் படித்த  அறிவுஜீவிகளே  பணத்தை  பறிக்கொடுக்கும்   சம்பவம்   நாடு முழுவதும்  அரங்கேறிவருகிறது.அதுதான்  தருமபுரியில்  சென்ற மாதம்  நடந்தது.

தருமபுரி   மாவட்டம் பென்னாகரத்தில்  அரசு மருத்துவ  மனையில் உதவியாளராக  பணிபுரிந்து ஒய்வு  பெற்றவர்  ஜெயமணி .  அவர் கூறுகையில்,  என்னுடைய  செல்லுக்கு   போன் வந்தது, அப்போது  உங்க பெயர்   ஜெயமணிதானே  என்று  கேட்டனர்.  அதற்கு  நானும்  ஆமாம் என்றேன்.  பிறகு  நான்  எஸ்.பி.ஐ -யில்  இருந்து  பேசுகிறேன். உங்களுடைய   வங்கி கணக்கு   காலாவதியாகிவிட்டது.   அதனை  ஆதார்  எண்ணுடன்  இணைத்து  புதுப்பிக்க வேண்டும்  அதனால்  உங்களுடைய  ஏடிஎம்  நெம்பரும்,ஆதார் நெம்பரும்  சொல்லுங்கள்  என்றதும்  நானும்  சொல்லிவிட்டேன்.

பிறகு  5  நிமிடத்தில்   என்னுடைய   வங்கிகணக்கில்  இருந்து  ரூ.1,000  எடுத்ததாக  என்னுடைய  செல்லுக்கு  தகவல் வந்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  பிறகு  அருகில் இருக்கும் எஸ்.பி.ஐ  கிளையில்   விசாரிக்கும்  போது  அந்த தொகை  மும்பையில்  எடுத்தாக  வங்கி மேளாலர் கூறினார். பிறகு  அந்த  மேளாலரை  கேட்கும்  போது  நீங்கதான்  எச்சரிக்கையாக  இருக்கனும்னு செல்லி, இந்த அக்கவுண்டை  மூடிவிட்டு  புதியதாக  அக்கவுண்டை   வைத்து  இனிமேல் எச்சரிக்கையாக  இருங்கள் என்று  கூறி அனுப்பினாங்க, புதியதாக  வங்கிகணக்கை  தொடங்கிய  அவர்  பணத்துக்கே  பாதுகாப்பு இல்லை அதனால   இனிமேல்  500 ரூபாய்க்கு  மேல  நான்  பணத்த வைச்சிக்கே மாட்டேன் என்று கூறி என்ன  நாடோ? என்ன  கவர்மண்டோ?  என்று  பதறினார்.

சீரியம்பட்டியை  சார்ந்த  அண்ணாமலை என்பவர்  அரசு போக்குவரத்து கழகத்தில்  நடத்துனராக  வேலைபார்த்து  வருபவர்.  அவர் கூறுகையில், என்னுடைய  மகள்  திருமணம்  கடந்த  9 ஆம் தேதி  நடக்க இருந்தது.  இந்நிலையில் தான்  ஒருத்தன்    என்னை   தொடர்பு கொண்டான்.   உங்கள்  பேர்  அண்ணாமலையா?  என்று  கேட்ட உடனே  நானும் ஆமாம் என்றேன்.  உங்கள்  கணக்கு  குளறுபடியாக  இருக்கிறது.  அதை சரிபார்க்க  வேண்டும் அதனால்  உங்களுடைய  ஏடிஎம்  நெம்பர் மற்றும் ஆதார்   நெம்பரை  கூறுங்கள்  என்று  கேட்டான். உடனே  நானும்   சொல்லிவிட்டேன். அடுத்த  நிமிடமே   என்னுடைய   வங்கி  கணக்கில்  ரூ. 3,000  எடுத்தாக  என்னுடைய   செல்லுக்கு  தகவல்  வந்ததை  பார்த்து  என்ன  செய்றதுன்னு  தெரியாம    திகைச்சி போய்ட்டேன். என்று  அழாத குறையாக  வெளிபடுத்தினார். இப்படி  பரவலாக  பலரும்  ஏமாற்றமடைவதை  பார்க்க முடிகிறது.

இந்த திருட்டு ஒரு மோசடி என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே பல வங்கிகள் தொலைபேசியில் ஏடிஎம் பின் எண்ணை சொல்லாதீர்கள் என்றெல்லாம் விளம்பரம் கொடுக்கிறார்கள். பிரச்சினை அதுவல்ல. மும்பையில் இருந்து தருமபுரி மக்களிடமிருந்து பணத்தை எடுத்த திருட்டு கும்பல் தனது அடையாளம் அல்லது ஆதார் எண்ணை மறைத்து விட்டு எப்படி எடுக்க முடிகிறது? ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று மிரட்டும் அரசு இத்தகைய திருட்டுக் கும்பலை பிடிக்க முடியாமல் இருக்கிறதே ஏன்?

எதற்கெடுத்தாலும் ஆதாரைக் கொடு என்று கேட்கிறார்கள். அதன் விளைவாகத்தான் இத்தகைய திருட்டுக் கும்பல்கள் நாடு முழுவதும் அப்பாவி மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கின்றன.

அரசாங்கமே  டாஸ்மாக்கை  தெருத்தெருவுக்கு  திறந்துவிட்டு   குடி நாட்டுக்கும் வீட்டுக்கும்  உயிருக்கும் கேடு என்று கூறி   குடிப்பவர்கள்  திருந்த வேண்டும்  என்று  அறிவுரை கூறுவது  போல, ஆதாரை  பலநாடுகளில்  சாத்தியமில்லை  என்று அறிந்தும்  ஆதார்  மூலம்  ஊழலை ஒழிக்க போகிறேன் என்று சவடால்  அடித்த  மோடியால்  இதுபோன்ற  மோசடியை  தடுக்க முடியுமா?   பறி கொடுத்த   பணத்தைதான்  மீட்டுக்கொடுப்பாரா?  மாறாக  ஏமாறக்கூடிய  மக்களை  பார்த்து  ;  மக்கள் ஏமாறாமல்  இருக்க  மக்கள்  விழிப்புணர்வாக  இருக்க வேண்டும். என்று அரசு  அறிவுரை கூறுவதை  வேடிக்கை    பார்த்து    ஏமாறுவதை  கைவிட்டுவிட்டு   வெகுண்டெழுந்து  போராடுவது, அரசை  கேள்விக்குள்ளாக்குவது என்று  செய்தால்தான்  நம்முடைய  பணத்திற்கு, நம்முடைய  சேமிப்பிற்கும்  பாதுகாப்பு  இருக்கும். அதற்கு  அணைவரும் ஒண்றினைவதுதான்  தீர்வு.

-புதிய ஜனநாயகம் செய்தியாளர்

தருமபுரி.
24.05.2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க