privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைகபாலி டிக்கெட் 2000 ரூபாய் காலா டிக்கெட் 5000 ரூபாய்

கபாலி டிக்கெட் 2000 ரூபாய் காலா டிக்கெட் 5000 ரூபாய்

-

அண்ணன் வர்றாரு

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்…

கொள்ளையடிப்பதற்கான மணல்
இன்னும் மிச்சமிருக்கிறது ஆற்றில்,

திருடி விற்பதற்கான நீர்
இன்னும் மிச்சமிருக்கிறது நிலத்தடியில்,

ஒருமுறை சொன்னால் நூறுமுறை வெட்டி எடுக்க
இன்னும் மிச்சமிருக்கிறது கிரானைட்,

பச்சைத்தமிழன் குடிக்கவேண்டிய சாராயம்
இன்னும் மிச்சமிருக்கிறது டாஸ்மாக்கில்…

கால் கழுவ தண்ணீர் இல்லாவிட்டால் என்ன
பால் அபிசேகம் செய்ய கட்அவுட் இருக்கிறது

காவிரியில் தண்ணீர் ஓடாவிட்டால் என்ன
திரையரங்கில் காலா ஓடப் போகிறது

கபாலி டிக்கெட் இரண்டாயிரம்
காலா டிக்கெட் அய்யாயிரம்
தமிழனை முன்னேற்ற
தலைவர் வழி தனி வழி!

அவரை விட்டால்
இதெல்லாம் யாரால் முடியும்?

நாட்டை மிச்சம் வைக்காமல்
உச்சம் தொடுவதில்
மோடி என்னடா மோடி,

சூப்பர் ஸ்டார்
மோடிக்கெல்லாம் டாடி!

சிஸ்டம் சரியில்லை!
கஷ்டப்படுபவர்களே
இதோ… ரஜினி வருகிறார்
இனி  உங்களுக்கு என்ன கவலை?
கவலையே ரஜினியாக வரும்போது!

– துரை. சண்முகம்

  1. ரஜினிக்கு எதிரான உங்களின் பொறாமை தான் இங்கே தெரிகிறது

    ஐயோ பாவம் உங்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.

    • மிஸ்டர் கோவில் மணி இந்த கவிதையே பார்த்து ரஜினிக்கு கோவம் வருதோ இல்லையோ உங்கள மாதிரி எடுப்பிடிக்கு, சோம்பு அடிக்கற கை கூளிக்கு நல்லா வருது கோவம் எல்லாம் விசியமும் அம்மணமாக தெரியும் பொழுதே நீங்க இவ்வளவு பேசறியே எவ்வளவு கொழுப்பு. இது மாதிரி கமான்ட் போடும்பொழுது இத மத்தவங்க பார்த்து காரி துப்புவாங்கனு தெரியாதா? மிஸ்டர் பிச்சுமணி உனக்கெல்லாம் இது உரைக்கவா பொது …..து சாரல் மூஞ்சில படுது துணியால தொடைச்சிக்கோ rss ****

      • உனக்கு எங்கடா எரியுது?? ரஜினி பயம் உன்னிடம் அதிகமா உள்ளது. எங்கள்
        சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியல் களம் காணுகிறார்.

        • ஜேம்ஸ்வசந்தன், ரஜினி அரசியல் களம் காணட்டும்.களத்தில் நின்று போராடட்டும் பிறகு வெல்லட்டும். யாரும் அவரை தடுக்க முடியாது. ஆனால் அரசியல் களம் என்பது தேர்தலில் நிற்பதும் மேடையேறி பேசுவதும் கை தட்டல் வாங்குவதும் இல்லையே ஜேம்ஸ்.இன்றைக்கு களத்தில் பெருச்சாளிகள் அனைத்தையும் விரட்டி உறுதியான தெளிவான மக்கள் நலம் நாடும் ஆட்சியை அமைப்பது எவ்வளவு எவ்வளவு எவ்வளவு பெரிய சவாலாக இருக்கும்? திரையில் நாம் அவரை ரசித்தோம். பத்திரிகளில் அவரைப்பற்றி வரும் செய்திகளை படித்து அவரின் எளிமை பக்தி ஆகியவைகளை கண்டு குளிர்ந்தோம்.ஆனால் அரசியல் களம் என்பதற்க்கு இது மட்டும் போதாது ஜேம்ஸ். அரசியலில் கூட மிகச்சிறந்த மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள்.நல்லகண்ணு நல்லகண்ணு என்று ஒருவரை பார்த்ததுண்டா ஜேம்ஸ்?அவரைப்பற்றி தினத்தந்தியிலோ சன் டீவியிலோ போட மாட்டார்கள் வசந்த்.மக்கள் பிரச்சினைக்க்காக மாநிலம் முழுக்க சுற்றிக்கொண்டே இருக்கிற மனிதர். அவருக்கு மேக்கப் கிடையாது, சாதாரணமான மனிதர்களிலிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக்காட்டும் தோற்றம் கிடையாது. த்னியாக நின்று 100 பேரை பந்தாடுகிற திரை இமேஜ் இல்லை. அவரை ஆதரிக்க நாமும் தயாராய் இல்லை.நம்முடைய சூப்பர்ஸ்டார் கைக்குழந்தைக்கும் தெரிந்தவர் என்பது உண்மைதான்.42 வருடங்களுக்கு முன் நமக்கு அறிமுகமாகி 35 வருடங்களாக தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தியாக இருப்பவர். 25 வருடத்திற்க்கு முன்பே அவர் களத்தில் குதித்திருக்க வேண்டும்.தேர்தலில் போட்டி இடுவதுதான் களம் என்று இல்லை. தமிழர்களாகிய நாம் 25 வருடங்களாக நிறைய பிரச்சினைகளை சந்தித்திருக்கிறோம்.அவர் ஒவ்வொன்றிலும் முன்னின்று நமக்கு வழி காட்டி இருக்க வேண்டும். ஆள்வோரை தன் படை கொண்டு வறுத்து எடுத்திருக்க வேண்டும். செய்யவில்லையே ஜேம்ஸ். இதுதானே ஜேம்ஸ் களத்திற்க்கு வருவதற்க்கான தகுதி. அந்த காலம் என்றால் குதிரையேற்றம் வாள் பயிற்ச்சி என்றெல்லாம் எடுப்பார்கள். இப்போது அது தேவையில்லை.” மக்கள் பணத்தில் ஆடம்பரமா? நீ மகாராணியா மக்கள் பணியாளரா”என்று ஜெயலலிதாவை கேட்டிருக்க வேண்டும். ” நீங்கள் என்ன முடிசூட்டிய மன்னரா? உங்களுக்கு பின் உங்கள் மகன் கள் பதவிக்கு வர? அதிலும் மாவட்டத்திற்க்கு ஒருவன் இருந்து கொண்டு தமிழ்நாட்டையே பட்டயம் போட்டு வாங்கி கொண்டது போல் நடக்கிறீர்கள். மாநிலத்தின் தொழிலையெல்லாம் கபளீகரம் செய்கிறீர்கள் மக்களுக்கு அஞ்சுங்கள் மக்களுக்காக ஆளுங்கள் ” என்று கருணாநிதி குடும்பத்தை பார்த்து கொந்தளித்திருக்க வேண்டும்.செய்யவில்லையே ஜேம்ஸ். இதுதான் ஜேம்ஸ் களம். இந்த களம்தான் அவரை தேர்தல் களம் நோக்கி தள்ளும்.ஏனெனில் ஒட்டுமொத்த சிஸ்டமே சரியில்லை என்று சூப்பர்ஸ்டார் வருந்துகிறார். சிஸ்ட்டத்தையே மாற்றுவதாய் இருந்தால் அவர் எவ்வளவு பயிற்ச்சிகளும் பாய்ச்சல்களும் நிகழ்த்தி இருக்க வேண்டும்? எதுவுமே நடக்கவில்லையே ஜேம்ஸ்.

  2. அப்படி ரஜினி என்னத்த தூக்கிநிறுத்துனானு தெரியல இப்டி சப்போர்ட் பன்னுராய்ங்க..

  3. தமிழ்மக்களின் நன்மைக்காக படம் நடிச்சு எங்கள வாளவச்ச தலைவா ….!

    உன்ன ஆளவச்சு அழகு பாக்குறதுதான் எங்கள் லட்சியம்.

    நீ காவிரிக்காக குரல் கொடுக்கியா அல்லது காவிக்காக குரல் கொடுக்குயான்னுலாம் கேக்கவே மாட்டோம்….

    வா தலைவா…!
    வா…!

    நீ எங்கள காரி துப்பி, செருப்பால அடிச்சாலும் சூடு சொரணை இல்லாம வாங்கிக்க்குவோம் தலைவா,

    வா….

  4. விசிலடிச்சான் ரசிகக் குஞ்சுகள் வந்து போய்விட்டனர்.

    நுண்ணரசியலை நுண்ணோக்கி கொண்டு தேடும் லேபிள் புரட்சியாளர்களை காணோமே…!

    ஒரு வேளை தோழர் ரஜினியின் பட புரமோஷனுக்கு போயிருப்பங்களோ…?

    ???

  5. ரஜினிக்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டிக்கொள்ளும் வயதரிச்சல் அரசியல்
    வாதிகள்.யார் கரடியாக கத்தினாலும் ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்க
    முடியாது

  6. ஓட்டுப் போடுவதும் போடாததும் அவரவர் சொந்த விருப்பம் மற்றும் உரிமை.
    ஆனால் அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை
    இல்லை.
    அவரை ஏத்திக்கிறையே அவர் என்ன ஊழல் செய்தார் உன்னை போல ஊழல் அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனம் டா எங்க ரஜினி

  7. காலா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அடுத்த வெற்றி வைர மகுடம் என்றால் அது மிகை இல்லை.
    தலைவர் ரஜினி அவர்களின் காலா மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

    • பாடி சோடா, மூனு கமெண்டையும் ஒரே மின்னஞ்சலில் இருந்து போட்டுவிட்டீர்கள். கொண்டை தெரிகிறது.

      • ஆர்வ கோளாறில் செய்து இருப்பார் ஆனாலும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் எங்கள் ரஜினி தான்

        • நீங்க எல்லாரும் ஆளுக்கு மூனு மூனு கள்ள ஓட்டு போட்டாலும் ஜெயிக்க முடியாது.

          உத்திரப்பிரதேசம், மஹராஷ்டிராவில் பயன்படுத்திய அதே பிஜேபி டெக்னிக்கை இங்கே ரஜினி-பிஜேபி கூட்டணிக்கும் யூஸ் பண்ணுவேமுன்னு சொல்லுங்க. ஓட்டிங் மிசின், தேர்தல் ஆணையம் உதவி பண்ணுன்னா ஜெயிச்சுடலாம்.

          • தேத்தல் ஆணையம் கொடுத்த சவாலில் EVMல் மோசடி செய்து இருக்கிறார்கள் (செய்ய முடியும்) என்று நிரூபிக்க வேண்டியது தானே அப்போது கோழைகளை போல் ஓடி ஒளிந்து விட்டு இப்போது பொய் பிரச்சாரம் செய்வதற்கு மட்டும் வந்து விட்டிர்கள். உங்களின் வார்த்தைகளை எல்லாம் பார்க்கும் அடுத்து பிஜேபி தான் ஆட்சிக்கு வர போகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.

            • ஆமா.. ஆமா ..

              நடந்து முடிஞ்ச உ.பி. தேர்தல்ல, தனக்குத் தானும், தன் குடும்பத்தார்களும் போட்ட ஓட்டு எங்கடா போச்சுன்னு கேட்டு ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர் பாவம் லூசு மாதிரி சுத்திட்டு இருக்கானாம்யா !!. அங்க போயி சொல்லும் ஓய்.. ஓட்டிங் மிசினு நெம்ப நல்லதுன்னு !!//

Leave a Reply to Nelson பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க