“விவசாயியை வாழவிடு” என சீர்காழியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என நான்காவது முறையாக தமிழக காவல் துறை அனுமதி மறுத்திருக்கிறது.
விவசாயியை வாழவிடு! விவசாயியின் அழிவு சமூகத்தின் பேரழிவு!! என்ற உண்மையை எச்சரிக்கை முழக்கமாக தமிழகம் முழுவதும் சுவரெழுத்து, பிரசுரம், பேருந்து பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் என மக்கள் அதிகரம் சார்பில் பிரச்சாரம் செய்து வருகிறோம். தஞ்சையில் ஆகஸ்ட் 5, 2017 அன்று மாநாடு – கருத்தரங்கம் நடத்த உள்ளோம்.
சீர்காழியில் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த கடந்த மே மாதம் மாதம் 10 , 22, 28 ஆகிய தேதிகளில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கடைசி நேரத்தில் போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அனுமதி மறுத்தார்கள். பிற அமைப்புகள் கூட்டம் நடத்துகிறார்கள் எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை? என்றால் “சார் மேலிடம் சொல்கிறது நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்கிறது சீர்காழி காவல் துறை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பேச்சுரிமையை மறுக்கிறார்கள் நியாயமா என முறையிட்டோம். கூட்டத் தேதி முடிந்து விட்டது. மீண்டும் போலீசாரிடம் மனுதாக்கல் செய்யுங்கள் என நீதிமன்றம் திருப்பி அனுப்புகிறது.
தற்போது 17-6-2017 பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகேட்டு மீண்டும் மனு கொடுத்தோம். ஆனால் இம்முறை கடைசி நேரத்தில் மறுக்காமல் ஒருவாரம் முன்பாக போலீசு மறுத்திருக்கிறது. விவசாயியை வாழ விடு என மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் போட்டு பேசினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என சொல்கிறது போலீசு. மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம்.
மக்களுக்கு சட்டப்படியான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால், மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக போவதை தவிர வேறு வழியில்லை என்பது அரசுக்கு தெரியும். சட்டத்தின் ஆட்சியை, ஜனநாயகத்தை உறுதி செய்வது ஆள்பவர்களின் கடமை. ஆனால் அதில் மீண்டும் மீண்டும் தோற்று கொண்டிருக்கிறார்கள் என்பது தொடரும் அரசியல் நிகழ்வுகள் உறுதி செய்கிறது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.
காவல் துறையின் கருத்துரிமைக்கு எதிரான செயல்களை அம்பலப்படுத்தி சீர்காழி,சிதம்பரம், வடலூர,புவனகிரி,நெய்வேலி, கடலூர் என்று முடிந்த இடங்களில் எல்லாம் சுவரொட்டி ,நோட்டிஸ் மூலம் அம்பலப்டுத்துங்கள் தோழர்…… சீர்காழியில் மக்கள் அதிகாரம் அமைப்பு வலிமையாக இருக்கும் எனில்17/06/2017 அன்று காவல் துரையின் அராஜகத்துக்கு எதிராக பொது கூட்டத்துக்கு பதிலாக ஆர்பாட்டம் நடத்துங்கள் தோழர்….வாழ்த்துக்கள்….
உங்களுக்கு போராட்டம் பொழப்புனா
போலிசுக்கு தடுக்கிறதுதான் பொழப்பு
என்னா பொழப்பு இது?
மக்கள் அதிகாரம் உயர்ந்ததென்றால்
ஏன் காவல்துறையின் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர் ?
பாஸ்,
என்ன பண்றது? நாங்க மட்டும் இல்லை பொது மக்களும் அபப்டி தான் சொல்றாங்க. அரசியல்வாதி எவனும் சரியில்ல. எந்த ஆட்சியையும் சரியில்லை. என்ன பண்றது வேற வழியில்லனு சொல்றாங்க. அவனுங்கள ஒட்டு போட்டு தேர்ந்தேடுக்கறாங்க…
போலிசே கொலை பண்றாங்க திருடறாங்க இலஞ்சம் வாங்குறாங்க ரேப் பண்றாங்க ஆனா என்ன பண்றது அவுங்ககிட்ட தான கம்ப்ளைன்ட் பண்றோம்.
what is your suggestion mr. வசிஷ்டன் ? Obey or Not to obey the “law enforcement” ? You might have an idea ?
நீதி மன்றம் மக்கள் விரோதமானது என மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் நீங்கள் ஏன் நீதிமன்ற கதவை தட்டி காத்து கிடக்கிறீர் ?
நீதிமன்றம் மக்கள் விரோதமானது தான். அனைத்தும் மக்கள் விரோதமானது என்ற நிலையிலும் மக்களுக்கு வேறு வழியில்லை. இன்னும் பெரும்பான்மையான மக்கள் சகித்துக் கொண்டு தான் வாழ்கிறார்கள். அதனால் நமக்கும் வேறு வழியில்லை. தனி நபர் ஹீரோயிசம் சினிமாவில் மட்டும் தான் சாத்தியம்.
ஆனால் நம்முடைய கடைசி சில பத்தாண்டுகளை கவனித்தீர்கள் என்றால் போராட்டங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.
மக்களுக்காக தோழர்களும் போராடுகிறார்கள். மக்களும் போராடுகிறார்கள் சட்டத்திற்குட்பட்டு. ஆனாலும் சுடப்படுகிறார்கள். நீதிமன்றம் பிணை கொடுக்க மறுக்கிறது. நமக்கும் வேறு வழியில்லை. இதற்கு போலிசையோ நீதிபதிகளையோ பலி வாங்க முடியாது. காத்திருக்க தான் வேண்டும்.
பெரும்பான்மையான மக்கள் எப்படி இருக்கிறார்களோ எப்படி சிந்திக்கிறார்களோ அதற்கு தகுந்தார் போல தான் செயல்பட முடியும். பெரும்பான்மையான் மக்கள் இந்த கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்று நினைப்பார்களானால் போலிசை எதிர்பார்கலானால் அன்று பொலிசையோ நீதிமன்றங்களை நம்ப தேவையில்லை. அது வரைக்கும் வேறு வழியில்லை.