அமெரிக்காவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நேற்று 25.06.2017 அன்று வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கே முதல்வேலையாக உலகப் பெருநிறுவனங்களில் முதல் 20 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், சிஸ்கோ, அடோப், மாஸ்டர்கார்ட், எமெர்சன் ஆகிய நிறுவனங்களும் அதில் அடக்கம். இந்தியாவில் பெருநிறுவனங்கள் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய இதுவரை சுமார் 7000 சீர்திருத்தங்களை, தமது அரசு மேற்கொண்டுள்ளதாக மோடி அந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். மேலும் இந்தியாவில் தொழில் செய்பவர்களின் வசதிக்காக, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். முதலாளிகளின் நல்வாழ்வுக்கான இச்சீர்திருத்தங்கள் அனைத்தும் தொழிலாளர் உரிமைப் பறிப்பு மற்றும், விவசாயிகளின் வாழ்வாதாரப் பறிப்புச் சட்ட்திருத்தங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
தனது டிவிட்டர் பக்கத்தில் தனது பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள மோடி, முஸ்லீகளுக்கு தனது ஈத் முபாரக் வாழ்த்துக்களையும் தவறாமல் தெரிவித்துள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில், இந்த மங்களகரமான நாள், சமூகத்தில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆறு முசுலீம் நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவில் வரக்கூடாது என்று உத்தரவு போட்ட டிரம்பின் தேசத்தில் மோடி தெரிவித்த ரம்ஜான் வாழ்த்தின் பொருள் என்ன?
மூன்று நாட்களுக்கு முன்பு, ஹரியானா மாநிலம், பல்லாப்கர் என்னும் ஊரைச் சேர்ந்த ஜுனைத், ஹசிம், சகிர் மூன்று சிறுவர்கள் இரம்ஜான் பண்டிகைக்காக டில்லியிலிருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு இரயில் ஏறி தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இடையில் இரயிலில் ஏறிய ஒரு கும்பல், சகோதர்ரகளாகிய அம்மூவரையும், முஸ்லீம்கள் என்ற காரணத்திற்காகவே தாக்கி, அவர்களை இருக்கையில் இருந்து எழச் செய்திருக்கின்றது. எழ மறுத்த அச்சிறுவர்களின் தலைக் குல்லாய்களை கழற்றி கீழே போட்டு மிதித்தது. அச்சிறுவர்களை மாட்டுக்கறி தின்னும் தேசவிரோதிகள் எனக் கூறி, சரமாரியாக கத்தியால் குத்தியிருக்கின்றது. இதில் கடுங்காயமடைந்த ஜுனைத் சிறிது நேரத்திலேயே மரணமடைந்தார். ஹசிமும், சகிரும் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மோடியின் ட்விட்டர் பக்கம் வாய்மூடி அமைதி காக்கிறது. மோடி மட்டுமல்ல, இச்சம்பவம் நடந்த ஹரியானா மாநிலத்தின் முதல்வர் கட்டாரின் சமூக வலைத்தளப் பக்கங்களோ, வேறு எந்த ஒரு பாஜக தலைவரின் சமூக வலைத்தளங்களோ வாயே திறக்கவில்லை. அமித்ஷா, இராஜ்நாத் சிங்கும் ஒரு படி மேலே போய், பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்திற்கு வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனரே தவிர, மதத்தைக் காரணம் காட்டி சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டிப்பதாக சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. அப்பகுதி எம்.எல்.ஏ மட்டும் பாதிக்கப்பட்ட ஜுனைத்தின் குடும்பத்தை இரண்டு நிமிடங்களில் சந்தித்துவிட்டு கிளம்பி விட்டார்.
இச்சம்பவம் குறித்து ஆதங்கப்படும் ஜுனைத்தின் அக்கம்பக்கத்தார், ஆளும் மாநில அரசின் சார்பாகவோ, மத்திய அரசின் சார்பாகவோ யாரும் வந்து பார்க்கவில்லை. முசுலீம் என்ற காரணத்திற்காகவே கொல்லப்பட்டிருக்கும் சிறுவன் ஜுனைத்தின் கொலையைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட யாரும் விடவில்லை. என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
மோடி ஆட்சி அமைத்த பிறகு இது போன்ற பல பத்து சம்பவங்கள் நடந்துவிட்டன. உ.பி-யில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்த பின்னர், அங்ளே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வழக்கமாக இது போன்று இந்துத்துவக் கும்பல்களின் கிரிமினல் நடவடிக்கைகள் நடைபெறும் மோடி அமைதி காப்பார். மோடியின் இந்த அமைதி என்பது, இத்தகைய செயல்களைத் தொடர இந்துத்துவக் கும்பல்களுக்கு வழங்கும் அங்கீகாரமே.
பிரச்சினையின் தீவிரம் தணிந்த பின்னர், ஏதாவது ஒரு பொதுக் கூட்டத்தில் இத்தகைய சம்பவங்களைக் கண்டிக்காமல் ஏதோ கொஞ்சம் பார்த்து போட்டு பேசுவார். இதுதான் மோடியின் வாடிக்கை. ஒருபுறம் நாட்டைக் கூறு போட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, அவர்களது கொள்ளைகளுக்கு ஏற்றாற் போல் மக்களை ஒடுக்கும் பல்வேறு சட்டங்களையும், சட்ட சீர்திருத்தங்களையும் கொண்டு வருகிறார் மோடி. இதன் மூலமாக பெரும்பான்மை விவசாயிகள், தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து அவர்களை மரணத்தை நோக்கித் தள்ளுகிறார்.
அமெரிக்காவில் பெரும் பணத்தை கொடுத்து ஆயுதங்களை வாங்க இருக்கும் ஒப்பந்தமே மோடி பயணத்தின் நோக்கம். அமெரிக்க முதலாளிகளிடம் அவர் பேசும் கருணை முகம் மட்டுமல்ல, இந்தியாவில் முசுலீம் மக்களை ஒடுக்கும் அவரது கொடூர முகமும் கூட உண்மையானதுதான்.
மேலும் :
இம்மாதிரியான செயல்கள் எல்லாம் வேதனையை கொடுக்கிறது. 17 வயது சிறுவனுக்கு என்ன தெரியும்.
காவல்துறை இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து இருக்கிறது, கைது செய்தால் மட்டும் பத்தாது விரைவில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும், ஜாமினில் வெளியே வர முடியாதபடி செய்ய வேண்டும். உடனே சட்டப்படி கடும் தண்டனை கொடுத்தால் இந்த மாதிரி செயல்கள் குறையும்.
மணி,
முசுலீம்னா தேச விரோதி, மாட்டுக்கறி திங்குற தேசவிரோதின்னு ஒரு கும்பல் சொல்லி அவனைக் கொலை செய்யுதுன்னா , அது சாதாரண கொலை கிடையாது மணி. அப்படிப்பட்ட ஒரு மோசமான கருத்து அந்தக் கும்பல் கிட்ட பரப்பப் பட்டிருக்கு .
அதுக்குக் காரணம் இப்போ இருக்குற இந்துத்துவக் கும்பல் தான். மோடிங்குற கிரிமினல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இப்படி எதுவும் நடந்ததில்லையே ஏன் ?. மோடி வந்ததும் வரிசையா துளிர் விட்டுப் போய் இந்த்துத்துவக் கிரிமினல்கள் ஆடுவது ஏன்?, அப்பாவி சிறுவனை கிரிமினல் கும்பல் அடிச்சுக் கொன்னதைக் கண்டிச்சு, எந்த பாஜக கார தே. பசங்களும் வாயைத் தொறக்கலையே ஏன் ?. மோடி ட்விட்டருல கூட வாயத் தொறக்கலையே ஏன் ?. அமெரிக்காவுல ட்ரம்ப்பு காலை நக்குறதுல பிசியா இருந்ததால வாயத் திறக்க முடியலையோ ?.
நீலிக் கண்ணீர் வடிக்கிறீங்களா மணி ?.. அசிங்கமா இருக்கு தொடச்சுக்கோங்க ?
பிரக்யா சிங், அசீமானந்தாவை பண்ணுன மாதிரி பண்ணனும், ஆமா சொல்லிப்புட்டேன்!
செய்றதே நீங்க தானே? பண்றதையும் பண்ணிட்டு இப்படி அப்பன் குதிருக்குள்ள இல்லை-ங்கற மாதிரி கூச்சல் வேறயா?
கேள்வியே புரியல்லையே மணிகண்டா ” 17 வயது சிற்வனுக்கு என்ன தெரியும்” என்று கேட் கிறாயே கொஞசம் விசயம் தெரிஞ்சவனைத்தான் கொல்ல வேண்டும் என் கிறாயா? ஒருவனை கும்பலாக கூடி கொல்ல வேண்டுமென்றால் அவனுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் எவ்வளவு வயது நிரம்பி இருக்க வேண்டும் மணிகண்டா?
முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் எல்லோருமே சராசரி மனிதர்கள் தான் யாரும் கொலைகளை ஆதரிப்பது இல்லை, எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் இந்த மாதிரி கொலை மனதை வறுத்த தான் செய்யும், இதில் ஹிந்து என்ன முஸ்லீம் என்ன ??? முதலில் மனிதாபிமானத்தை புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
அதேபோல் இந்த விவகாரத்திற்கு காரணம் பிஜேபி RSS என்ற கதைகளை நான் ஏற்கவில்லை… வெங்கய்ய நாய்டு கண்டன அறிக்கை விட்டு இருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது நடந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது, அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போதும் இது நடந்து இருக்கிறது.
Mob mindset காலம் காலமாக மனித இனத்தில் இருந்து வரும் ஒரு விஷயம்.
என்ன நடந்தாலும் மணிகண்டா உன் காவி கூட்டத்தை காப்பாற்றாமல் விட மாட்டாய் இல்லையா? செய்தி என்ன செய்தியின் உள்ளடக்கம் என்ன ? தொடர்ந்து இந்த நாட்டில் என்ன மாதிரி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது அதற்க்கு ஆளும் அரசாங்கத்தின் எதிர்வினை எப்படி வருகிறது….இது எதுவுமே உன்னை போன்றவர்களுக்கு தெரியவில்லை இல்லையா? ஒரு சின்ன உதாரணம்: இதே செய்தி தமிழ் இந்து இணைய பக்கத்தில் வருகிறது.அதற்க்கு கீழ் உள்ள செய்திக்கான விமர்சன பகுதியில் உங்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவன் கருத்து பதிகிறான் ” என்னவோ இந்தியாவில் இப்போதுதான் கொலை நடந்தது போல குதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட ரம்ஜானை ஒட்டி ஒரு இந்து பிரமுகர் கொல்லப்பட்டிருக்கிறார் அதெல்லாம் கேட் க நாதியில்லை இந்து உயிர் என்றால் இளக்காரமா? ” எப்படி உன் சகோதரனின் பதிவு? அட பதர்களா…ஒரு அப்பாவி சிறுவன் அவன் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவன் என்ற காரணத்திற்க்காக அநியாயமாய் கொல்லப்படுகிறான் அந்த பதபதைப்பு கொஞ்சமும் இன்றி எப்படி இவன் களால் சிந்திக்க முடிகிறது? இந்த மரத்துப்போன மனசாட்சியை கொண்டுதானே மாட்டுக்காக மனிதனை கொல்கிறான். பிறகு இவன் களிடம் ஏது ஈரம்? அட இரக்கமற்ற அரக்கர்களா கும்பகோண்த்தில் பல குழந்தைகள் அநியாயமாய் தீயில் கருகி இறந்ததுகள். அனைவருக்கும் ஈரக்குலை நடுங்கியது உண்மை. அதற்க்காக வேறு ஒரு பள்ளியில் கூரை இடிந்து ஒரு குழந்தை கொல்லப்பட்டால், கும்பகோணத்து சம்பவத்தை சொல்லி “இதெல்லாம் ஒரு மேட்டரா” என்று சொல்லி போய்டுவீங்களாடா? சென்னையில் ஒரு இயக்கத்தை சேர்ந்தவன் கொல்லப்படுகிறான். பல காரணங்களுக்காக, அரசியல் சொத்து தகராறு பெண்ணை வைத்து ,தொழில் போட்டி குடி போதையில் என்று கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவும் அதுவும் ஒன்றா? அந்த பிஜேபி காரன் கொல்லப்பட்டதும் அவன் சுற்றத்தால்தான் என்று இன்று செய்தி வருகிறது.ஆனால் அந்த கொலை நடந்த உடனேயே பிஜேபி என்ற கட்சியின் தேசிய செயலாளராம் எச்.ராஜா, முஸ்லிம் தீவிரவாதிதான் கொன்றான் ஆரம்பித்து வைக்க அதை அடியொட்டி அத்தனை காவிகளும் அதை வாந்தி எடுக்க, தமிழன் பதறாமல் நின்று சூழ்ச்சியை வென்றான். மிக மோசமான நிலையை நோக்கி போறீங்கடா…எதையோ நினைத்து இப்படி ஒரு காரியத்தை செய்றீங்க .இது உங்கள் வீட்டிற்க்குள் உன் சகோதரனின் மேல் வெறுப்பு கொண்டு அவன் படுக்கைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கிறீர்கள். தீ பற்றி பிடித்தால் எறிந்து சாம்பலாவது உன் வீடுதான் உன் வீட்டோடு சேர்ந்து நீயும்தான். முட்டாள் காவிகளே மனதில் வையுங்கள்.
முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கடமை அதில் மத்திய அரசு தலையிட முடியாது
உங்களுக்கு வேண்டுமானால் மோடியை வெறுக்க வேண்டும், RSS இயக்கத்தை வெறுக்க வேண்டும் என்ற compulsive mindset இருக்கலாம் எனக்கும் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்னை பொறுத்தவரையில் காரணம் இல்லாமல் வெறுப்பை தூண்டுவது தவறு.
மோடி தான் காரணம் RSS தான் காரணம் என்று ஆதாரம் இல்லாமல் என்னால் உங்கள் கதைகளை ஏற்க முடியவில்லை.
மணிகண்டா நீ கண் கொண்டு இந்த நாட்டின் நிகழ்வுகளை பார்க்கிறாயா இல்லையா? ஆட்சி பீடத்தில் இருக்க கூடிய பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிஜேபி என்ற கட்சியின் அதிகாரபூர்வ தலைவர்களும் பதவி ஏற்ற காலத்திலிருந்து அவர்களின் கருத்துகள் அறிக்கைகள் உன் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டுகிறதா இல்லையா? ” ராமனுக்கு பிறந்தவன் இந்த நாட்டில் இருங்கள் முறை தவறி பிறந்தவர்கள் ஓடுங்கள் ” என்று ஆரம்பித்து ஒரு நாலாந்தர கட்சி பேச்சாளன் அடிமட்ட தொண்டனை குஷி படுத்த எவ்வளவு தரம் இறங்கி பேசுவானோ அவ்வளவையும் இந்தியா என்ற இவ்வளவு பெரிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இதை கேட் கிற அடிமட்ட தொண்டன் என்ன ஆவான்? இப்படித்தான் காட்டு மிருகத்தின் குணம் ஏறி இரத்த வெறி ஏறி அலைவான். நாம் ஒரு குடும்ப தலைவனாக பிள்ளைகளுக்கு அப்பனாக இருந்தால் நல்ல நெறிகளை பொறுமையை சொல்லி கொடுத்து வளர்ப்பது எப்படி? “அவனை அடி அவனை கடி அவனை தூக்கி க்டலில் வீசு அவன் நம்மை போல் இல்லை நாம் உண்பதை அவன் உண்பதில்லை நாம் சொல்வதை அவன் சொல்வதில்லை ஆக்வே அவன் இங்கே இருக்க கூடாது ” என்று வெறி ஏற்றி வளர்ப்பது எப்படி ?நம் பிள்ளை எப்படி வளர்வான்? இதை செய்கிறவன் அனைவரும் நாங்கள் ஆர் எஸ் எஸ் சால் வளர்க்கப்பட்டவர்கள் என் கிறான். மோடி, காதில் காற்று கூட போகாதபடி இறுக்க பஞ்சை வைத்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை நீயும் அப்படி பஞ்சை காதிலும் கருப்பு துணியை கண்ணிலும் கட்டிக்கொண்டு திரிகிறாயா மணிகண்டா? எங்களுக்கு எவனையும் அர்த்தமின்றி ஆதரிக்கவும் எதிர்க்கவும் தேவையில்லை. காங்கிரஸ் காரனையும் உளுத்துப்போன மரக்கட்டையாகத்தான் பார்க்கிறோம்.நான் கம்யுனிஸ்ட்டும் இல்லை. ஓரளவு நேர்மையாய் ஆட்சி செய்தால் போதும்.எவனா இருந்தாலும் ஆதரிக்க தயார்
மனசாட்சி மறத்துப் போய் நாட்டில் கண்கூடாய் நடப்பது கதை என் கிறாயே மணிகண்டா..நீ இந்த தலைமுறை இளைஞ்சன் தானே இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டவனும் உலக நிகழ்வுகளை அறிந்து கொண்டிருப்பவனும் தானே ஏன் உன்னால் நியாயத்தின் பக்கம் வரமுடியவில்லை.அரசியலுக்காக ஆளும் அரசை விமர்சிப்பவர்களை விடு.லஞசம் ஊழல் ரவுடித்தனம் கலவரத்தை பற்ற வைத்து ஆதாயம் தேடல் பழிவாங்கல் இவையெல்லாம் நம் நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உள்ள பொதுவான குணம். கருணாநிதியிடம் இல்லாததா ஜெயலலிதாவிடம் இல்லாத்தா? ஒரு கருத்து கணிப்பிற்க்காக அந்த பத்திரிகை அலுவலகத்தையே கொளுத்தி அப்பாவி ஊழியர்களை கருக வைத்து சாகடித்தான் திமுக காரன். நீதிமன்ற தீர்ப்பிற்க்காக ஒரு கல்லூரி பேரூந்தை கொளுத்தி ஏதும் அறியா மாண்விகளை கொளுத்தி சாகடித்தான் அதிமுக காரன். இது அரசியல் வாதிகளுக்கு வாடிக்கைதான். இந்த பட்டியலில் சேராதைய்யா இன்றைய பிஜேபியின் வன்முறை. ஒட்டு மொத்த நாட்டையும் கொளுத்தி பஸ்பமாக்கும் ஆபத்து இல்லையா மத வெறி நெருப்பு. தலைவன் செத்தால் கடைகளை சூறையாடுவது வாகனங்களை தீக்கிரையாக்குவது பொது மக்களை காயப்படுத்துவது கொல்வது என்ற காட்டுமிராண்டி தனங்களை நாம் எப்படி சகிக்க முடியாதோ அதை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமோ அதை விட பல பல மடங்கு ஆக்ரோஷமாய் திரண்டு கிளர்ந்து எழுந்து எதிர்க்க வேண்டியது மத நெருப்பை பற்ற வைப்பவர்களை. பசு பாதுகாவலர்கள் என்றே ஒரு கும்பல் தைரியமாய் சுற்றி திரிகிறது. தன் மனம் போனபடி யாரை வேண்டுமானாலும் அடித்து நொறுக்குகிறது. இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்க்கு சட்டத்தின் மேலோ அரசின் மேலோ சிறிதும் அச்சமில்லை. இந்த துணிச்சல் ஒரு கும்பலுக்கு வரலாமா? வருகிறதென்றால் இது தொடர்கிறதென்றால் எப்படி? தண்டிக்க வேண்டிய அரசு சட்டம் எல்லை மீறி போகும்போது மட்டும் லேசாய் கண்டிக்கிறது தண்டிப்பதில்லை.எல்லை மீறிப்போனால் நாளை நீயும் தானே மணிகண்டா பாதிக்கப்பட போகிறாய். இவைகளை கண்டு அச்சமுற்று நாங்கள் பேசினால், நீ , ஆர் எஸ் ஆர் எஸ்சை எங்களுக்கு பிடிக்கவில்லை அதனால் பழி போடுகிறோம் என் கிறாயே… தேசப்ப்ற்றுள்ள் இயக்கம் தேசத்தையே நிர்மூலமாக்கும் இந்த செயல்களை கடுமையாய் கண்டித்து அதன் தலைமையிடமிருந்து ஒரே ஒரு அறிக்கை உண்டா காட்டு.
நீதிமன்றத்தில் மோடி குற்றவாளி என்று சொல்லியிருந்தால் நிச்சயம் நான் மோடியை ஆதரித்து இருக்க மாட்டேன். உங்களை போன்றவர்கள் சொன்னா எந்த ஒரு குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை மோடி குற்றவாளி என்றும் நீதிமன்றம் சொல்லவில்லை.
மேலும் நான் பொய் பிரச்சாரங்களை நம்புவது இல்லை, மோடிக்கு எதிராக நிறைய பொய் பிரச்சாரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
வருந்துகிறேன் மணிகண்டா
நீ மனசாட்சியற்றவன் என்பதை சந்தேகமற நிரூபித்து விட்டாய்.
நான்,இந்நாட்டின் ஒரு குடிமகனாக எனக்கும் உனக்குமான உறவில் அக்கறை உள்ளவனாக நமக்குள் இருக்கும் தடுப்புச்சுவர்கள் அனைத்தும் நொறுக்கப்படவேண்டும் என்ற உணர்வோடு மிக நிதானமாக எடுத்துச்சொன்னாலும் , நீ ,நீதிமன்றம் தீர்ப்பு என்று அரசியல்வாதியாய் பிதற்றுகின்றாய்.காவி வக்கிரம் ஆழ பதிந்து விட்டது உனக்கு.
உன் மோடியை இறுக்க கட்டி பிடித்துக்கொண்டு தூங்கு. விழித்துப்பார்த்தால் நீயும் உன் மோடியும் காவி கூட்டமும்தான் இருப்பீர்கள். இந்தியர்களான தமிழர்களான மனிதர்களான நாங்கள் உன் கூட்டத்தை விட்டு வெகுதூரம் சென்றிருப்போம். இதை நீ உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
உங்களை போன்றவர்கள் என்ன சொன்னாலும் கடைசியில் இப்படி தான் பேசுவீர்கள்… காரணம் இருக்கிறதோ இல்லையோ நீங்கள் மோடியை வெறுக்க தான் போகிறீர்கள்.
குஜராத் கலவரம் நடந்து இருக்கவிட்டாலும் நீங்கள் மோடி RSS மீது வெறுப்பை தூண்டி கொண்டு தான் இருப்பீர்கள், இதை மாற்ற முடியாது…
மணிகண்டன்,
மோடியை வெறுப்பதற்கு இனிமேலும் காரணங்கள் தேவையில்லை. விளைவுகளில் இருந்து தான் நாங்கள் பேசுகிறோம்.
ஆம்.
ஒருவேளை குஜராத் கலவரம் நடக்கவில்லை என்றால்…..எப்படி ஆர்.எஸ்.எஸ் பசுமூத்திரதாசர்களை எப்படி எதிர்ப்பது? ஐயோ என் செய்வது?
குஜராத் கலவரம் நடக்காவிட்டாலும் அதற்கு முன்பே இரதயாத்திரை கலவரம் நடத்தப்பட்டது.
காசுமீர் படுகொலைகள்.
முசாரப் நகர் கலவரம் நடந்தே இருக்கும்.
நாடு முழுதும் பசுவிற்கு பிறந்து அதன் மூத்திரத்தை குடித்து மூளை பிதுங்கிய மூடர்கள் தலித்துக்களுக்கு எதிராகவும் இசுலாமியர்கள் கிருத்துவர்களுக்கு எதிராகவும் நடத்தும் வன்முறைகள நடக்க தான் செய்யும்.
எனவே காரணங்களுக்காக இந்து மத வெறியர்கள் கவலைப்பட தேவையில்லை.
சார்வால்,
ஒங்க பி.ஜெ.பி தான் மத்திய அரசு. அதே சமயத்தில் இந்தியாவின் 16 மாநிலங்களின் சட்ட ஒழுங்கை பராமரிப்பதும் அதே பி.ஜெ.பி மற்றும் அதன் அல்லாக்கைகள் தான்.
புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தல் கூட உங்காளுக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு என்பது ஏனைய மாநிலங்களின் சட்ட ஒழுங்கை விட படுமோசமாக இருக்கிறது என்பதற்கு புள்ளிவிவரங்கள் சாட்சியாக இருக்கின்றன.
பி.ஜெ.பி ஆளும் மாநிலங்களின் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் என்பது கூட காங்கிரசின் சதியாக இருக்குமோ என்பது குறித்து எனது மனித மூளைக்கு தெரியவில்லை. ஒருவேளை உங்களது அதி உயர்ந்த மாட்டு மூளைக்கு தெரிந்திருந்தால் தாழ்ந்த மனித மூளைகளுக்கு கூறலாம்.
//ஜுனைத் சிறிது நேரத்திலேயே மரணமடைந்தார். ஹசிமும், சகிரும் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓடும் ரயிலில் கொல்லப்பட்ட சிறுவன் ஜூனைத்
இச்சம்பவம் குறித்து மோடியின் ட்விட்டர் பக்கம் வாய்மூடி அமைதி காக்கிறது//
A leader should have condemned this first.
தங்களின் நியாயமான வருத்தம் எனக்குப் புரிகிறது.
ஆனால் என் செய்வது? தலைவர் ஒவ்வொரு முறை கண்டனம் தெரிவிக்க வாய் திறவும் போதும் பிறகும் கொலைகள் அதிகம் விழுகின்றன. அதனால் தலைவர் சகல துவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்தாலே கொலைகள் கொஞ்சம் குறையும் என்று பாதிக்கபடுபவர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks for posting the truth.
@ meeran .. Raman and Manikandan Pondravargalidam edharku vivadham seiringa nu puriyala .. ivanuga sonnadhayae thirumba thirumba soluvanuga .. ivanuga mattum illa, neraya per ipdi than.. idhai Nan 2016 election la therinjiten .. JJ and MK rendu perayayum thitti theerthanuga oor la ellarum but result vandhappo ellarum avanga 2 per ku than vote potu irundanga.. ( sorry for taminglish typing )
திரு அருண்குமார்,ராமன் மணிகண்டன் என்ற தனிநபர்களை முன்னிறுத்தி விவாதம் புரிந்தாலும் அவர்கள் ராமன் மணிகண்டன் என்ற ஒற்றை நபர்கள் அல்ல.
அவர்களுக்கு பின்னே பல ராமன் கள் மணிகண்டன் கள் இருக்கிறார்கள்.அவர்களில் பலர் அறியாமையிலும் இருக்கிறார்கள். அறிந்து கொண்டே ” சாதிக்கிற” இவர்களை போன்ற கல்லுளிமங்கன் களும் இருக்கிறார்கள்.
யாருடைய சிந்தனையை எந்த கருத்து தூண்டி விடும் என்பதை நாம் அறியமாட்டோம்.இந்த இருவரின் மூலமாய் வெளிப்படும் கருத்து, அதற்க்கான பதில் பலரையும் சென்றடையலாம்.கசப்புகள் நீங்கப்பட்டு நல்ல பலன் விளையலாம்.
தெரிந்த உண்மைகளை சொல்லிக்கொண்டே இருப்போம். கேட் கும் மக்கள் கேட் கட்டும்.
“ஜே ஜே , எம் கே யை திட்டி தீர்த்தாங்க ஆனால் அவங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டாங்க ” என்று நீங்கள் சொல்வது புரியவில்லை.
ராமன் மணிகண்டனிடம் விவாதிப்பதற்க்கும் மக்கள் ஓட்டுப்போடுவதற்க்கும் உள்ள தொடர்பு என்ன என்று எனக்கு புரியவில்லை.எதற்க்காக இதையும் அதையும் இணைக்கிறீர்கள்? விளக்கினால் நன்றாக இருக்கும்.