கோவையில் புதிய மாணவன் இதழை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து விற்பனை செய்துகொண்டிருந்த பு.மா.இ.மு மாணவர் வினோத் பாஜக குண்டர்கள் கூறியதன் பெயரில் காவல்துறையால் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்நாட்டில் மோடியை விமர்சித்து பத்திரிகை விற்பதற்கு கூட ஜனநாயகம் மறுக்கப்படுவது பாஜக காவி கும்பல் மாணவர்களின் இத்தகைய பிரச்சாரங்களை கண்டு எவ்வளவு தொடை நடுங்கி பீதிக்குள்ளாகியிருக்கிறது என்பதை காட்டுகிறது.
தோழர் வினோத் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர் மக்களிடம் பிரச்சாரம் செய்து விற்ற மோடியை அம்பலப்படுத்தும் அதே இதழை நேற்று சென்னைப்பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்து விற்பனை செய்தோம்.
இதழை மாணவர்கள் உற்சாகத்துடன் வாங்கிக்கொண்டனர். சற்று நேரத்தில் எடுத்து வந்த இதழ்கள் அனைத்தும் தீர்ந்தன.
மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் பாஜக பாசிச கும்பலை தமிழ் மண்ணில் நசுக்கி எறிவோம்.
பார்ப்பன பாசிச கும்பலை வீழ்த்தி இந்தியாவிற்கு தமிழகத்தை வழிகாட்டியாக்குவோம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னைப் பல்கலைக்கழகம் APSC (MU)