ரிலையன்ஸ் ஜியோவின் சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 2017 ஜூலை 9-ம் தேதி அன்று Magicapk.com என்கிற இணையதளம் ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசி எண்களின் வாடிக்கையாளர் விவரங்களை இணையத்தில் வெளியிட்டது. சுமார் ஒரு மாதத்திற்கு முன் மும்பையைச் சேர்ந்த ஐ.பி முகவரியில் பதிவு செய்யப்பட்ட மேற்படி இணையதளம், நேற்றும் மாலையில் (9ம் தேதி) இருந்து இரவு 11:00 மணி வரை ஜியோ வாடிக்கையாளர்களின் விவரங்களைத் தனது வலைப்பக்கத்தில் வைத்திருந்தது.
ஜியோ செல்பேசி இணைப்பின் எண்ணை மேற்படி தளத்தில் உள்ளீடு செய்தால், அந்த எண்ணின் உரிமையாளர் பெயர் விவரங்களும், எந்த தேதியில் அந்த எண் செயல்பாட்டுக்கு வந்தது, அது எந்த பகுதியைச் சேர்ந்த எண் மற்றும் பயனரின் மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிலாகத் தந்தது. ஒரு சில ஜியோ எண்களை உள்ளீடு செய்த போது அதன் உரிமையாளருடைய ஆதார் எண்ணும் வெளியானதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மேற்படி இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அரசின் பூரண ஆசிர்வாதம் இருப்பதால், தீயாக வேலை செய்து உடனடியாக தளத்தை முடக்கியுள்ளனர். எனினும், மேற்படி விவரங்கள் இன்னமும் திருடியவர்களிடமே இருப்பதால் வேறு புதிய தளம் ஒன்றைத் துவங்கி தங்களிடம் உள்ள தகவல்களை வெளியிடும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இணையத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் தடங்களை (Traces) அழிப்பதும் சிரமம்.
சுமார் 12 கோடி பயனர்களைக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோ, ஆதார் எண்ணின் அடிப்படையிலேயே தனது பயனர்களின் விவரங்களை சரிபார்த்து அவர்களுக்கான தொலைபேசி எண்களை செயலூக்கம் (activate) செய்துள்ளது. மின் முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் (e-KYC) ஜியோ, இதற்கு ஆதார் எண்களையும் அதனோடு தொடர்புடைய உயிரியளவு விவரங்களையும் (Biometric Information) அடிப்படையாக கொண்டுள்ளது.
தற்போது ஹேக்கர்களின் கைகளில் சிக்கியுள்ள விவரங்கள் ரிலையன்ஸின் கணினிகளில் இருந்தே களவாடப்பட்டதா அல்லது ஆதாரின் தகவல் கிடங்கிலிருந்து களவாடப்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. எப்படியிருப்பினும், இணையதளங்கள் மற்றும் மின் தரவுகளின் பாதுகாப்பு குறித்து ஆதார் திட்டத்தை எதிர்ப்பவர்களின் சந்தேகங்கள் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமக்கள் அனைவரின் உயிரியளவு விவரங்களும் மின் தரவுகளாக மையப்படுத்தப்பட்ட ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருப்பதால், அவற்றைக் களவாடுவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட விவரங்களைக் கைப்பற்றுவதும் ஹேக்கர்களுக்கு எளிமையாகியுள்ளது. ஆதாரின் விவரக் கிடங்கு (DataBase) பல்வேறு நிரலாக்கத்தக்க இடையிணைப்பு நிரலிகளுடன் (Application programable interface – API) எளிதில் இணைக்கும் விதமான செயற்தளமாக (Platform) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள் என்ன? எந்த ஒரு தொழில் நிறுவனமும் ஆதாரின் மின் தரவுக் கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்களை இடையிணைப்பு நிரலிகளின் மூலம் நேரடியாக கையாள முடியும். இதனடிப்படையில் தான் தனது பயனர்களின் விவரங்களை சரிபார்த்தது ரிலையன்ஸ் ஜியோ. இவ்வாறு தனியார் தொழில் நிறுவனங்களுடன் ஆதாரின் மின் தரவுக் கிடங்கு இணைக்கப்படும் போது, ஒரு புறம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கப்படுகின்றது – இன்னொரு புறம், தொழில்நுட்ப ரீதியிலான இந்த இணைப்பே தகவல்களைத் திருடும் ஹேக்கர்களின் வேலையைச் சுலபமாக்கி விடுகின்றது.
மேற்படி தகவல் திருட்டை ஏராளமான ஜியொ பயனர்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ரிலையன்ஸ் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டாலும், உண்மை வெளியாகுமா இல்லையா என்பது அந்த உண்மை ஜியோவின் வர்த்தக நலனை பாதிக்குமா இல்லையா என்பதைப் பொறுத்தே உள்ளது.
எவ்வாறாயினும், 130 கோடி இந்தியர்களின் உயிரியளவு விவரங்கள் பாதுகாப்பற்று இருப்பது இச்சம்பவத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த லட்சணத்தில் எதிர்காலத்தில் ஆதாருடன் டி.என்.ஏ விவரங்களை இணைக்கும் திட்டமும் தன்னிடம் இருப்பதாக வெட்கமின்றிச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு.
பின் குறிப்பு : ஹேக்கர்களால் களவாடப்பட்ட ஜியோ பயனர்களின் தரவுகள் தற்போது டார்க்வெப் என்று சொல்லப்படும் நிழல் இணையதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய இணையதளங்களில் ஜியோ பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண்ணுடன், பயனர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களும், தொலைபேசி கட்டணங்கள் செலுத்திய விவரங்களும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் :
ராமன் போன்ற ஆதார் ஆதரவு *** எங்கிருந்தாலும் விவாத மேடைக்கு வரவும்! விவாதத்தில் உங்களுக்கு எல்லாம் கருத்தியல் ரீதியாக செருப்டி கொடுக்கவேண்டியுள்ளது….****போடற ஜட்டி சைசில் இருந்து பெண்கள் போடும் உள்ளாடை சைஸ் வரைக்கும் ஆதார் என்ற பெயரில் கேட்பார் ஊர் சுற்றும் இந்திய பிரதமர் மோடி…. நல்லா போய் கொடுங்க ராமன் வைகையாராக்களே ! தூ இந்த பிழைப்புக்கு மணிகண்டன் போன்று நீங்களும் **** வயித்தை ரொப்பிகலாம்…
(வினவுக்கு இந்த பின்னுட்டம் அரசியல் அற்றதிட்டுதல் என்று தடை செய்யாதீங்க….ராமன் வைகய்றாக்கள் உள்ளாடை விவரம் வரைக்கும்கொடுக்க தயாராக தான் இருக்காங்க என்ற விசயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)
கணினி ஆசிரியரான ஒருவருக்கு புரியாத “Federated Architecture” பற்றி
மற்ற ஓரளவு சிந்திக்கும் திறன் பெற்றவர்களுக்காக சிறு விளக்கம் தருகிறேன் .
ஆதார் தகவல் மையத்தில் ஆதார் மட்டும்தான் இருக்கும் .
ஆதார் தகவல் கிடங்கில் பாண் என்னோ டிரைவிங் லைசென்சு என்னோ இருக்காது .
பாண் ஏன் தகவல் கிடங்கில் ஆதார் எண் இருக்கும்
லைசென்சு தகவல் கிடங்கில் ஆதார் எண் இருக்கும்
பாஸ்போர்ட் தகவல் கிடங்கில் ஆதார் எண் இருக்கும்
இப்பொழுது ஆதார் என்னை வைத்து கொண்டு ஒருவருடைய
பாண் எண் , லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் தகவலை ஆதார் மையத்தால் தர முடியாது .
வருமான வரி துறையிடம் சென்று ஆதார் எண் கொடுத்து பாஸ்போர்ட் தகவலை பெற முடியாது
வெளியுறவு துறையிடம் சென்று ஆதார் எண் கொடுத்து லைசென்சு தகவலை பெற முடியாது
போக்கு வரத்து துறையிடம் சென்று ஆதார் எண் கொடுத்து பாண் எண் தகவலை பெற முடியாது .
ஆதார் என்னை வைத்து அணைத்து தகவலையும் பிக் டேட்டா முறையில் ஒருங்கிணைப்பு செய்தால் மட்டுமே அது சாத்தியம். அத்தகைய ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே 1984 நாவலில் கூறப்பட்டது போன்ற கண்காணிப்பு சாத்தியம்.
இந்த ஆதார் எண் இல்லை என்றாலும் , பெயர் வயது பிறந்த நாள் போன்ற காரணிகளை கொண்டு அத்தகைய பிக் டேட்டா தகவல் ஒருங்கிணைப்பு செய்துவிட முடியும். ஸ்னோடென் போன்றவர்கள் இது போன்ற தகவல் ஒருங்கிணைப்பதான் எதிர்க்கிறார்கள் . எஸ் எஸ் என் போன்ற அடையாள தருவதை அல்ல
இத்தகைய கண்காணிப்பு தகவல் கிடங்குகள் இல்லாமலே ஸ்டாலினும் மாவோவும் வெற்றிகரமாக தங்கள் நோக்கத்தை நிறைவேற்றினார்கள்.
இந்த ஆதார் தளம் இந்தியாவை கணினி உலகிற்கு கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கும் .
வெளிநாடுகளில் இரவு 12 மணியில் யாரும் இல்லாத காட்டில் சிவப்பு விளக்கிற்கு நின்று செல்வதற்கு காரணம் , அவர்களுடைய பண்பாடு மட்டும் காரணம் அன்று , மீறி சென்றால் ஏற்படும் விளைவுகள் காரணம் . அதற்கு மேலை நாடுகளுக்கு பெரும் உதவி செய்தது ,அடையாள எண்கள் .
சோசியலிச திட்டங்களில் பிற வரி செலுத்துவோரின் உதவி பெரும் ஒருவர் , தான் இன்னார் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு கொண்டவர் .
அதே போல அத்தகைய திட்டங்களில் செலவு செய்ய அரசு வரி வசூலிக்கும் பொறுப்பு , மற்றும் தகுதி உடையவருக்கு மட்டும் சென்று சேரும் பொறுப்பு கொண்டுள்ளது.
ஆதார் போன்ற தளம் இல்லாமல் இவை சாத்தியம் ஆகாது .
உறுமுவது திட்டுவது போன்ற ஒரு சிலரின் சிறுபிள்ளை தனங்களை கண்டு வேடிக்கையாக இருக்கிறது. அதே சமயம் அந்த மாணவர்களை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது
அந்த மாணவர்களுக்கு சிறு உதவி