கோவை அரசுக் கல்லூரி வாயிலில் மாணவர்கள் மத்தியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் வெளியீடான புதிய மாணவன் புத்தகத்தை வினியோகித்துக் கொண்டிருந்த போது பாஜக -வின் வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பு.மா.இ.மு -வின் கோவை மாவட்ட அமைபாளர் தோழர் வினோத் அவர்களை கைது செய்தது கோவை போலீசு.
அதன் பின்னர் அவர் மீது பொய்வழக்கு புனைந்து சிறையில் அடைத்தது போலீசு. அதைத் தொடர்ந்து பிணை கோரி நீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், போலீசு கூறிய காரணங்களையே வழிமொழிந்து தோழர் வினோத்தின் பிணை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மோடியை விமரிசித்து இந்நாட்டில் ஒரு விமரிசனம் எழுதக்கூடாது என்பதே பாஜக-விற்கு அடியாள் பார்க்கும் போலீஸ் விடுக்கும் செய்தி. இதனால் எமது போராட்டம் முடங்கிவிடாது என்பதே நாம் அவர்களுக்கு விடுக்கும் செய்தி.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கோவை.
PUDHIYA MANAVAN VINOTHUKU BAIL KUDUKKADHE.MEERI
BAIL KODUTHU PALA LATCHAM PUDHIYA MANAVANGAL URUVAGAPPOVADHAI THADUKKADHE.