privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டைத் தடை செய்தது துருக்கி

டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டைத் தடை செய்தது துருக்கி

-

சார்லஸ் டார்வின்

டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு விஞ்ஞானரீதியில் ஒரு பயனற்ற அழுகிய கோட்பாடு என்று கூறி ஒன்பதாம் வகுப்பு உயிரியல் பாடத்தில் இருந்து துருக்கி அரசு நீக்கியிருக்கிறது. ரமலான் நோன்புக்குப் பிறகு செப்டம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த பாடத்திட்டத் திருத்தத்திற்கு இசுலாமிய அடிப்படைவாதியான அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு போதிய வயதில்லை என்று பாட நீக்கத்திற்கு காரணம் கூறியிருக்கிறார் துருக்கி கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்டக்குழு தலைவர் அல்புஸ்லன் டர்முஸ். எனவே பரிணாமவியல் கோட்பாடு இளங்கலை படிப்பு வரைக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று மேலும் கூறியிருக்கிறார். என்ன இருந்தாலும் இவர்களால் டார்விணின் கோட்பாட்டை முற்றிலும் தடை செய்ய முடியவில்லை.

சவூதி அரேபியாவிற்குப் பிறகு பரிணாமவியல் கோட்பாட்டை தேசியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியிருக்கும் இரண்டாவது நாடு துருக்கி என்று கூறுகிறார் துருக்கியின் ஆசிரியர் சங்கமான எகிடிம் சேன்னின் தலைவர் ஃபெரே அய்ட்கின் அய்டோகன். பரிணாமவியல் குறித்து 60 மணி நேரமும் டார்வினைப் பற்றி 11 மணி நேரமும் ஈரானில் கூட பாடம் எடுக்கிறார்கள் என்று மேலும் அவர் கூறினார்.

ஏக இறைவனே களிமண்ணில் இருந்து ஆதாமை படைத்ததாக இஸ்லாம் நம்புவதற்கு மாறாக ஆதாமைப் படைத்தது இயற்கைத் தேர்வே என்று டார்வின் கூறுவது இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. அதனால் தான் “பரிணாமவியல் மட்டுமல்ல அனைத்து வகுப்புகளுமே [இசுலாமிய] மதம் சார்ந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது” என்று அய்டோகன் கூறுகிறார். “இந்த புதியப் பாடத்திட்டம் மாணவர்களுக்கும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் பெருங்கேட்டையே கொண்டு வரும்” என்பது அவரது வாதம்.

“துருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுதான் ஆபத்து. இதற்கெதிராக எங்கள் ஆசிரியர்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அரசின் நடவடிக்கைகளைப் பற்றி கவலையில்லை மாறாக மதச்சார்பற்ற அறிவியல் மதிப்பீடுகளின் படி வகுப்பறைகளில் மாணவர்களுக்கு அவர்கள் கல்விக் கற்றுக் கொடுப்பார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

1922 ஆம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தில் இருந்த துருக்கியை முஸ்தபா கெமாலின் தலைமையில் சோவியத் யூனியன் உதவியுடன் துருக்கியில் தேசியப்புரட்சி நடந்தது. மதச்சார்பற்ற அறிவியல் கல்விக்கான கதவினையும் அந்தப் புரட்சி தன் குடிமக்களுக்கு திறந்து விட்டது. பரிணாமவியல் பற்றி அடிப்படை வகுப்புகளில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் அது ஆழமாக விதைத்திருந்தது.

நூற்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியலைப் பற்றியதான துருக்கியின் இந்த நிலைப்பாடு இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே உரிய ஒன்றன்று. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் கூட கிறித்தவ திருச்சபைகள் பரிணாமவில் கொள்கையை மறுத்து பேசி வருகிறது. இந்தியாவிலோ வர்ணாஸிரமும் விஷ்ணுவின் தசாவதாரமுமே பரிணாமவியல் கொள்கையாக இந்துமத அடிப்படைவாதிகள் பேசுகின்றனர்.

அறிவியலைக் கற்பதற்கு சக்தி, முயற்சி மற்றும் காலத்தை அதிகமாகச் செலவிடுவது அவசியம். மார்க்ஸ் கூறுவது போல “விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.” இறைவனே அனைத்தையும் படைத்தான் அவன் விதிப்படி தான் சகலமும் இயங்குகின்றன என்ற மதவாதிகளின் மூளைகள் அத்தகைய கடுமுழைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாதவை.

கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா உள்ளிட்ட மிகச்சிறிய உயிரினங்கள் ஒவ்வொரு கணமும் நுண்கூர்ப்பு (microevolution) அடைகின்றன. மிக உயரமான மலைச்சிகரங்களில் உயிர்ப்பிழைத்திருப்பதற்கான பெருங்கூர்ப்பை (macroevolution) மூவாயிரம் ஆண்டுகால போராட்டத்தினால் திபெத்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது டார்வினின் இயற்கைத்தேர்வுக்கு மிகச்சிறந்த நிரூபணங்கள்.

உயிர்ப் பிழைத்திருப்பதற்கான ஒவ்வொரு கணமும் பரிணாமத்திற்கான நிரூபணம் என்று அறிவியல் உலகம் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஆனால்  அறிவியல் கூற்றை ஏற்காமல் பரிணாமம் புரியவில்லை பொய்யானது என்று படைப்புவாதிகளும் அடிப்படைவாதிகளும் கூறுவது மக்களை அறியாமையில் மூழ்கடித்து மூடர்களாக அடிக்கவே என்பது தெள்ளத் தெளிவு.

செய்தி ஆதாரம்:

_________________________________________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா?

  1. இந்தியா போல மத சார்பற்ற துருக்கி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
    அங்கேயும் இதற்கு எதிராக கோர்ட்டிற்கு சென்று இருக்கிறார்கள்.

    //ஏக இறைவனே களிமண்ணில் இருந்து ஆதாமை படைத்ததாக இஸ்லாம் நம்புவதற்கு மாறாக ஆதாமைப் படைத்தது இயற்கைத் தேர்வே என்று டார்வின் கூறுவது இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு வேப்பங்காயாக கசக்கிறது//

    களிமண்ணிற்கு உயிர குடுத்த கதை யூதர்களுடையது.
    தலைப்பாகையும் யூதர்களுடையது.
    சுன்னத் செய்வதும் யூதர்களுடையது.

    இறைவன் முதலில் அனுப்பிய தூதர் ஆபிரகாம் இவை எல்லாம் அங்கீகரித்தார் .
    அவருக்கு பின் இறைவன் அனுப்பிய தூதர் ஜீசஸ் சுன்னத் , தலைப்பாகை எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டார்.
    கடைசியாக வந்த இறைவன் அனுப்பிய தூதர் சுன்னத் , தலைப்பாகை எல்லாம் மீண்டும் வேண்டும் என்று கூறி விட்டார்.

    இறைவன் நிலையான சிந்தனை கொண்டவரல்ல என்று தெரிகிறது .

    • கட்டுரைக்கும்,நீ இங்கு சொன்னதற்க்கும் என்ன தொடர்பு? எல்லா கதைகளும் முழுதும் (அல்லது பெரும்பாலும்) கற்பனையே. இப்போ விஷயம் சுன்னத் பற்றியோ, தலைப்பாகை பற்றியோ அல்ல. பள்ளிகளில் அறிவியல் உண்மைகள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதே! உன்னால் அறிவியலை ஏற்க முடியாது. காரணம் உனக்கு ராமர் பாலமும், ராம ஜென்ம பூமியும் வர்ணாஷ்ரமமும், திருநள்ளாறு மேலே பறக்கும் நாசா சாட்டிலைட்டும், பஞ்சகாவியமும், யோகாவும் இன்னும் கணக்கற்ற போலி அறிவியல் நம்பிக்கைகளும் வேன்டும். பின் நீ எப்படி அறிவியலை ஏற்பாய்?

      • மரியாதை தெரியாத, இறைவன் காலடியில் கிடக்கும் அற்பவாதி அவர்களே !

        நான் கூறாத கருத்துக்களை நான் கூறியதாக உங்கள் கருத்தை கூறி , அதையே அடித்து துவம்சம் செய்து இருக்கின்ரீர் . இது போன்ற straw man அயோக்கிய விவாதத்தை செய்வதை விட வேறு உபயோகமான வேலையை பார்க்கலாமே !

        சுன்னத் செய்த ஒவ்வொருவரும் ஏவொலுஷன் மூலமாக உருவானவன் மனிதன் என்பதை பறை சாற்றுகிறார்கள்.

        மனிதன் எல்லாம் தெரிந்த சரியான ஒரு சக்தியினால் படைக்கப்பட்டு இருந்தால் சுன்னத் தேவை பட்டு இருக்காது .

        அந்த சக்தியினால் படைப்பில் மாற்றம் செய்ய முடியும் என்றாலும் தேவை பட்டு இருக்காது. அவர் அடுத்த குழந்தை பிறக்கும் முன்னர் குறையை நிவர்த்தி செய்து இருப்பார்.

        சுன்னத் தேவை படுகிறது என்றால் இறைவன் செய் நேர்த்தி இல்லாதவர் என்று ஆகிறது.

        சிக்கிசம் மட்டுமே இறைவன் படைப்பை அப்படியே ஏற்று கொண்டு முடி திருத்துவதை கூட செய்வது இல்லை .

        • I am not a creationist. An I think all religions are man-made. I have clearly said that those are imaginary things and have no impact on the issue at hand. First Judaism-Christianity-Islam, now Shikism. Try to bring in more religions just to avoid discussing Hindutva’s anti-science stand. If you are open-minded just tell me what are all the things you don’t accept in the pseudo-scientific things I have listed above?

          What type of respect you expect and why?

          • // If you are open-minded just tell me what are all the things you don’t accept in the pseudo-scientific things I have listed above?//

            First of all I have never supported those kind of stuff. You only wrote I supported and you want me to deny those statements which i haven’t made.

            பொது சபையில் நாகிரகம் தெரியாத உன்னை போன்ற அயோக்கிய விவாதம் செய்யும் உஅற்ப மனிதர்களை நான் மதிப்பது இல்லை .

            Go get a life!

        • இறைவன் செய் நேர்த்தி இல்லாதவர் என்பதால் சுன்னத் தேவை படுகிறது அல்லவா? உண்மை தான் ராமன்… அவர் “படைப்பில்” தவறு ஏதும் இல்லை என்றால் மரபியல் தொடர்பான எந்த குறைபாடும் (கண் குருட்டு,காது செவிடு போன்ற……)மனிதனுக்கு ஏற்பட்டு இருக்காது அல்லவா? இந்த கருத்தை நீங்கள் ஏற்பிர்கள் என்றால் நீங்களும் நாத்திகவாதி ஆகின்ரீகள்…. இந்த கருத்தை நீங்கள் ஏற்கின்ரீரா?

    • ராமன்
      எதையுமே முழுமையாய் தெரியாமல்,”நமக்கும் ஒரு பிடி கிடைத்து விட்டது” என்று உளறக்கூடாது.
      யூத கிறித்துவ இஸ்லாமிய மதங்களுக்குள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை அது தனி பிரிவு.அது ஒரு வரலாறு.ஆர்வம் இருந்தால் அதை யாராலும் அறிந்து கொள்ள முடியும்.அரைகுறையாக எதையாவது மேய்ந்து விட்டு “எல்லாம் ஒன்றுதான் ” என்று காட்ட முனைந்தால் மூக்குடைபடுவதில்தான் முடியும்.
      டார்வின் கோட்பாட்டை பேசுவதாக இருந்தால் பேசுவோம்.அதில் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் தொடர்ந்து கொணடே போகின்றது.சரியான விடைகளும் விளக்கங்களும் தேவையாயிருக்கின்றது.
      தலைப்பிற்க்கு சற்றும் தொடர்பில்லாத யூதம் சுன்னத் தலைப்பாகை என்று ,பலவீனமான கண்ணாடிக்கூண்டிலிருந்து கல்லெறிய முயற்ச்சித்தால் கடைசிவரை தாக்கு பிடிக்க வேண்டும்.இடையில் ஓடக்கூடாது.நான் கடைசிவரை ரெடி.

      • கடைசிவரைக்கும் பரிணாமக் கோட்பட்டை ஏற்கப்போவதில்லை. அப்பறம் நீ தாக்குப்பிடிச்சா என்ன பிடிக்கலாட்டி என்ன?

        • மிஸ்ட்டர் பீட்டு

          பரிணாம கோட்பாட்டை நான் ஏற்ப்பேனா ஏற்க மாட்டேனா, ஏற்றே ஆகவேண்டுமா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நீர் அல்ல.அது என் விருப்பம் என் உரிமை.
          டார்வினை கண்ணை மூடிநம்பும் உரிமை உனக்கிருந்தால் உன் கண்ணை திறக்கும் கடமை எனக்கும் உண்டு.

          • திரு. மீராசாஹிப்,

            மன்னிக்க வேண்டும். இதில் ஒரு மாற்று கருத்தை பதிய விரும்புகிறேன். பரிணாம கோட்பாடு, கிருமி கோட்பாடு, புவிஈர்ப்பு போன்ற அறிவியல் உண்மைகள் மற்றும் பொதுவே உண்மைகள் எல்லாருக்கும் பொது. அது நம்பிக்கை சார்ந்த விஷயம் அல்ல. சில அடிப்படை உண்மைகள் எல்லாரும் ஏற்று கொண்டு தான் நம் சமூகம் இயங்குகிறது. அவை ஏற்பது விருப்பம் என்னும் வலைவில் கொண்டு வருவது தவறு.

            We definitely get our own opinions but we dont get our facts and we certainly dont get our own science. டார்வினை கண்ணை மூடி நம்பும்படி யாரும் உங்களை கட்டாய படுத்தவில்லை. இருக்கும் ஆதாரத்தை அறிவியல் கொண்டு அலசுவோம். அது என்ன முடிவுக்கு இட்டு செல்கிறதோ அதை ஏற்போம். உயரினங்கள் எவ்வாறு வந்தது என்பதை இருக்கும் அனைத்து ஆதாரமும் விளங்கும் படி, எவ்வாறு அது நடந்தது, நிலைமை, மாறி இவ்வாறு இருந்தால் அது எப்படி நடக்கும் என்று கணிக்கவும். மேலும் நடப்பதை நாம் பார்த்து உறுதிபடுத்தவும் இன்று வரை பரிணாம வளர்ச்சி கோட்பாடு பல சோதனைகளை கடந்து நிற்கிறது. எனவே தான் அதை அனைவரும் ஏற்கின்றனர். டார்வின் சொன்னதை எல்லாம் கண்ணை மூடி யாரும் நம்ப வில்லை, நம்பவும் வேண்டாம். அவரே பல சொதபல்கள், மிக பெரிய தவறுகள் அவர் எழுத்தில் செய்துள்ளார்.

            உயரியல் என் துறை அல்ல. அனால் பரிணாம வளர்ச்சி பற்றி கொஞ்சம் ஆழ்ந்து படித்து உள்ளேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது அதை பற்றி பேச விரும்பினாலோ, தாராளமாக கேளுங்கள். என்னால் இயன்ற வரை பதில் அளிக்கிறேன். இங்கு வேண்டாம் என்றால் என் blog லிங்க் உள்ளது. அங்கயும் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

            • வாங்க சிந்தனை செய்! ரொம்ப நாள் ஆயிற்று உங்கள் விவாதத்தை கண்டு களித்து….! வணக்கம் நண்பரே… சரி விசயத்துக்கு வருகிறேன்…பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது அறிவியல் சார்ந்தது.. இறையியலில் தீவிர நம்மிக்கை உடையவர்கள் அவர்கள் எம்மதத்தவராக இருந்தாலும் டார்வினை புறக்கனிக்கவே செய்வார்கள்.. அவர்கள் நிருவனம்யமாகப்ட்ட கிறிஸ்துவராக இருந்தாலும் சரி…., மீரான் பாய் போன்ற தனி நபராக இருந்தாலும் சரி டார்வினை புறகனிக்கவே செய்வார்கள்….அது நமக்கு எப்ப பிரச்சனையாக மாறும் என்றால்… இத்தகைய அறிவியல் பூர்வமான கோட்பாடுகளை கல்வி தளத்தில் மதவாதிகள் தடை செய்யும் தருணத்தில் தான் பிரச்சனையாக மாறுகின்றது…அப்போது நம் போன்றவர்கள் மத மதவாதிகளுக்கு சரியான பதிலடியை கொடுத்து தான் ஆகவேணும்… அதனை தான் இந்த கட்டுரையும் செய்கிறது, நீங்களும் செய்கின்றீர்கள்… மிக்க நன்றி…

              • Catholic Church and mainstream Protestant Churches accept evolution. Though there are some points where they have some compromises to fit their religion in, in large they accept and even preach evolution.

                • இந்த சர்சுகள் பரிணாம கொள்கை விசயத்தில் நடத்தும் இரட்டை நாடகத்தை பற்றி ஒரு விசத்தை கூறினால் நீங்கள் அதிர்ந்து போவிர்கள்…ஹிஸ் பீட்…

                  ஆமாங்க நான் 2006களில் கொடைக்கானல் கிருஸ்துவ கல்லூரியில் கணினி ஆசிரியராக இருந்தேன்… பல நாட்டு மாணவர்களையும் சந்திக்கும் சந்தர்பத்தை அங்கே பெற்றேன்… குறிப்பாக ஆப்பிரிக்க மாணவகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து…எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது…கம்யுனிட்டி மீல்ஸ் என்று சமத்துவம் எல்லாம் இருக்கத்தான் செய்தது… கல்லுரி முதல்வர் பாதிரியார் ஆங்கில ஆசிரியர்…… அவர் மாணவர்களுக்கும் சரி , ஆசிரியர்களுக்கு சரி நிறைய சொல்லிக்கொடுப்பார்…

                  ஆனா பாருங்க… மாலையில் கல்லுரி முடிந்துடன் மாணவர்களும் , ஆசிரியர்களும் ஒரு செமினார் கொடுக்கணும் எங்க கல்லுரியில்…. எல்லாரும் தலைப்புகளை கொடுத்தார்கள்… நானும் கொடுத்தேன்…எனக்கும் slot அல்கேட் ஆனது… ஆனால் என் முறை வரும் போது எல்லாம் அந்த செமினாரை தலைமை ஏற்று நடத்தும் என் நண்பர் கிறிஸ்டியன் செடியிஸ் ஆசிரியர் என்னிடம் ரிக்வஸ்ட் செய்து தேதியை மாற்றுவார்… இப்படியஎன் தேதிகளை மாற்றி மாற்றி ஒரு ஆண்டுகளை ஓட்டிவிட்டார்….

                  என் செமினார் டாப்பிக் என்னவென்று தெரியுமா நண்பரே…

                  Applications of Evolution Theory in Modern medical Science…!

                  நவீன மருத்துவ அறிவியலில் பரிணாம கொள்கையின் பயன்பாடு….

                  இப்ப கூட அந்த கிறிஸ்டியன் செடியிஸ் ஆசிரியர் எனக்கு நண்பர் தான்.. அந்த படிப்பை யாரும் படிக்க சேராததால் அவர் வேளையில் இருந்து விடுவிக்கப்பட்டார்… இப்ப பாஸ்ராக தெக்கத்திப்பக்கம் இருக்கின்றார்… நான் சென்னைக்கு அருகில் மறைமலைநகரில்….

                  அந்த செமினாரை கொடுக்க இயலாமல் போனதற்காக எனக்கு வருத்தம் எல்லாம் ஏதும் இல்லை…. ஆனால் எனது கருத்துரிமை சுதந்திரம் தடை செயப்படு கற்பழிக்கப்பட்டு விட்டதே என்ற வலி மட்டும் தான் எனக்கு இனமும் இருக்குங்க….

                  • I just said that they are supporting and accepting. But they are not doing it with 100% open mind. And the Christian studies itself should be removed from secular colleges. Religion should be kept outside schools and colleges. Christians should first do this as they started the trend.

                    • ஏற்பிற்கு உரிய உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நண்பர் ஹிஸ்பீட் ! கணினி, காமர்ஸ் படித்து பொருளைத்தேடும் இவ்வுலகம் இறையியல் கல்வியை புறகணிக்கின்றது என்கின்றபோது நன்னெறிகள் சார்ந்த படிப்புக்கு உள்ள முக்கியத்துவம் இன்மை என்னை சிறிது வருத்தம் அடையத்தான் செய்கிறது…(கிருஸ்துவ படிப்பில் மத துவேசத்தை எல்லாம் பரப்ப மாட்டார்கள் என்ற என் நம்பிக்கையின் அடிப்டையில் இதனை கூறுகின்றேன்)

              • செந்தில்குமரன்
                நீங்கள் என் மீது வைத்திருக்கிற மரியாதைக்கு மிக்க நன்றி.எனக்கும் உங்கள் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
                எனக்கு தனிநபர் என்ற ஒரு அடையாளத்தை கொடுப்பதை காண்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது..நான் தனிநபர் அல்ல. எல்லோரையும் போல நானும் இந்த சமுதாயத்தின் ஓர் அங்கம்தான்.அதில் நீங்கள் நான் மணிகண்டன் உண்மைவிளம்பி எல்லோரும் அடக்கம்.
                அதே நேரத்தில் நான் ஒரு தீவிர இஸ்லாமியன் என்பதையும் எந்தவித ஒளிவும் மறைவும் இன்றி வெளிப்படுத்திக்கொள்கிறேன்.
                டார்வினை ஏற்றுக்கொள்வதா புறக்கணிப்பதா என்பதல்ல பிரச்சினை.டார்வினின் கோட்பாடு அறிவியல் பூர்வமானதா என்பதுதான் பிரச்சினை.
                டார்வினின் கோட்பாடு நாத்திகத்திற்க்கு வலு சேர்ப்பதால் நாத்திகர்கள் இதை அறிவியல்தான் என்ற முடிவிற்க்கு வந்துவிடுகிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.
                விஞ்சாணிகளின் தந்தையாக புகழப்படுகிற ஐன்ஸ்டீன் கடவுளை நம்புபவனாக்வே இருந்தான்.
                டார்வினுக்கு பரிணாம கோட்பாடு தாண்டி வேறு என்ன அறிவியல் ஆய்வுகள் இருந்தது?
                விவாதிப்போமே…..

                • இந்த விவாதம் உங்களுக்கும் எனக்கும் நேரவிரையத்தை தான் ஏற்படுத்தும் பாய்… இன்றைய பயோஇன்பர்மெடிக்ஸ் ஆய்வுகள் எல்லாம் டார்வின் தியரியின் அடிப்டையில் தானே நடந்து கொண்டு உள்ளது…குறிப்பாக ஜீன் மியுடேசன் போன்ற ஆய்வுகள் அத்தனயுமே பரிணாமகொள்கையின் அடிப்டையில் தான்… உங்களை நான் இத்தகைய ஆய்வுகளை ஏற்றுகொள்ளவேண்டும் என்று வலியுருதவில்லை. ஆனால் என் கேள்வி என்னவென்றால் பரிணாம கொள்கையை ஏன் மதவாதிகள் கல்வி துறையிலில் இருந்து விலக்கிவைக்க முயலுகின்றார்கள் என்பதே… அது சரியா? துருக்கியின் செயல் சரியா?

                  • என் கேள்விக்கான துல்லியமான பதிலாக இது இல்லையே செந்தில்குமரன்.

                    பரிணாமம் என்பதே கிடையாது என்ற முடிவில் நான் வாதாடவில்லை செந்தில்.
                    டார்வினின் கோட்பாடு அதாவது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா?
                    நிச்சயம் உலகில் அனைத்து உயிரிணங்களும் தாவர வகைகளும் பரிணாம மாற்றம் அடைந்தே இருக்கும்.நிலக்கரியே பரிணாமத்தின் வரவுதானே.
                    மனிதனின் உயர அகலம் வலிமை ஆயுள் இப்படி எண்ணற்ற பரிணாம மாற்றங்களை உலகம் அறிந்து கொண்டுதான் இருக்கிறது.
                    ஒட்டுமொத்த படைப்புகளும் ஒன்றிலிருந்தே உருவாகி தனித்தனி வடிவம் தனித்தனி தன்மை பெற்றதாக டார்வின் சொல்லும்போது அதற்க்கு ஆறிவியல் ஆதாரம் உண்டா?என்பதுதான் கேள்வி.

                    அடுத்து துருக்கியில் பரிணாம பாடத்தை பாட புத்தகத்திலிருந்து தூக்கலாமா என்பது கேள்வி..
                    இந்த துருக்கி மட்டும் ஐரோப்பாவில் மாட்டிக்கொண்டு பல்வேறுவகையான சித்தாந்த அரசியல் அலைகளால் தத்தளித்துக்கொண்டேதான் இருக்கின்றது.இதை நான் பொதுவாக சொல்கிறேன் பரிணாம கொள்கைக்காக சொல்லவில்லை.
                    அங்கே என்ன மாதிரியான பாடம் நீக்கப்பட்டது எதற்க்காக நீக்கப்பட்டது தெரியவில்லை.
                    ஆனால் நான் திரும்பவும் சொல்வது….பொதுவான பரிணாம கொள்கைக்கு எதிராக சிந்தனையாளர்கள் இருக்க முடியாது.அப்படி இருந்தால் மனித அறிவின் மகத்துவமிக்க அறிவியல் உண்மைகளை மறுதலிக்கும் மண்டு மூழிகளாகத்தான் இருப்பார்கள்.
                    திரும்பவும் கேட் கிறேன் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பது அறிவியல் நிரூபிக்கிறதா?
                    குரங்கோடு மனிதனை சேர்ப்பது நாத்திகத்திற்க்கு உவப்பாய் இருக்கிறது.
                    இல்லவே இல்லை. ஒவ்வொன்றும் தனித்தனி படைப்புகள் அனத்தும் இறைவனின் படைப்புகள் என்பதில் ஆத்திகம் உறுதியாய் இருக்கிறது.
                    ஆக இங்கே அறிவியல் பின்னுக்குபோய் ஆத்திக நாத்திக சண்டைதான் முன்னுக்கு வருகிறது.
                    இது தேவையா? ஆய்வுப்பூர்வமான முடிவின் அடிப்படையில் பரிணாம கொள்கையை படிப்போம் சிந்திப்போம்.ஒரு வேளை அது டார்வினின் குரங்கு-மனிதன் கதையை நிரூபித்து விட்டதென்றால் பகிரங்கமாய் பரப்புவோம்.” என் அப்பாவும் அம்மாவும் குரங்கே”

                    • மீரான் பாய், உங்களுக்கான பதிலை நேற்றே கொடுத்து விட்டேன் என்று நம்புகின்றேன்… என் பின்னுட்டம் 1.2.1.1.2 இங்கே கீழ் தான் உள்ளது.. படித்துப்பாருங்கள்…. அங்கே நீங்கள் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

                      டார்வின் தியரி அடிபடையில் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினானா என்ற கேள்வியை ,சந்தேகத்தை எழுப்பியுள்ளீர்கள்? சரியான கேள்வி தான்… இதற்கான விடை அறிவியல் தளங்களில் ஏராளமாக கொட்டிகிடகிறது… படித்துப்பார்த்துவிட்டு என்னுடம் விவாதிக்கலாமே! இங்கே சிறுவிளக்கம் கொடுக்கிறேன்.. நம் தாய் தந்தையர்கள் எல்லாம் குரங்கு இல்லை என்று நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்… இந்த புவியுலகில் உயிரங்களின் வாழக்கை என்பது மதங்களின் தோற்றத்துக்கான அதிக பச்சம் 3000 ஆண்டுகளை விட மிக மிக அதிகம் முந்தையது…. 4.5 பில்லியன் ஆண்டுகள் முந்தையது….

                      மனிதனின் வாழ்க்கை 200,000 years முன்பே இந்த புவியில் தொடங்கிவிட்டது.Humans are primates. Physical and genetic similarities show that the modern human species, Homo sapiens, has a very close relationship to another group of primate species, the apes…!

                      Humans and the great apes (large apes) of Africa — chimpanzees (including bonobos, or so-called “pygmy chimpanzees”) and gorillas — share a common ancestor that lived between 8 and 6 million years ago.

                      இவை எல்லாம் அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்ட உண்மைகள்..மேலும் மதங்களின் வரலாற்று காலம் என்பது வெறும் அதிகபச்சம் 3000 ஆண்டுகள் என்கின்ற போது மதங்கள் கூறும் மனித வாழ்வின் தொடக்கத்தை பற்றிய கதைகளை எப்படி நம்புவது மீரான் பாய்?

                    • மீரான் பாய்,

                      நண்பர்கள் சிந்தனை செய்யும் செந்திலும் நல்ல விளக்கங்கள் அளிக்கிறார்கள்.

                      இந்த கட்டுரை பேசுவது துருக்கி பள்ளிகூடத்தில் பரினாமத்தை தடை செய்தது குறித்து. அதே பள்ளிக்கூடத்தில் மதக்கல்விக்கு தடையில்லை. பரினாமத்தை தடை செய்ததற்கு அவர்கள் கூறிய விளக்கத்தை ஏற்கின்றீர்களா? முதலில் பரிணாமம் பற்றிய படத்தை ஏன் பள்ளியில் இருந்து நீக்க வேண்டும்?

                      ஏனெனில் சாதாரண மக்கள் மதத்தை நம்புவதற்கும் மதத்தை கட்டுப்படுத்துபவர்கள் நம்புவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஏனெனல் ஏழை மக்கள் ஏழையாகவே இருப்பதற்கு மதம் ஒருக் காரணமாக இருக்கிறது அதே போல பணக்காரர்களுக்கும் அதுவே ஒருக் காரணமாக இருக்கிறது.

                      உலகம் முழுவதும் நடக்கும் படுகொலைகள் வன்முறைகளை ஏன் எல்லாம் வல்ல அல்லாவால் தடுக்க முடியவில்லை. சிரியா, ஈராக், ஆப்கனிஸ்தான், பாலஸ்தீனம், பாகிஸ்தான் என்று இசுலமைய நாடுகளில் இசுலாம் பெயரால் நடக்கும் தீவிரவாத படுகொலைகளை ஏன் அல்லாவாலோ இசுலாமின் மதக் கொட்படுகலாலோ தடுக்க முடியவில்லை.

                      எண்ணெய்க்காகவும் இயற்க்கை வளங்களுக்ககவும் ஆசியா ஆப்பிரிகா நாடுகளை ஏகதிபத்தியங்கள் சுரண்டுவதை ஏன் இசுலாத்தால் தடுக்க முடியவில்லை. இசுலாமிய மக்களே தங்களுக்குள் ஒருவராவ்யோருவர் அடித்துக் கொல்வதை ஏன் ஏக இறைவனால் தடுக்க முடியவில்லை.

                      தன்னுடைய தாய்நாட்டின் இயற்கை வளங்களை ஒருத்தன் கொள்ளையடிக்கிறான் என்பது புரிந்தால் தான் அதனை எதிர்த்து போராட முடியும். மதம் அதனை தடுக்கும் அபினியாக இங்கே இருக்கிறது. தன்னுடைய தாய் மண்ணை காப்பதற்கு போராட வேண்டிய கைகளை திருப்பி தன கண்களையே குத்த வைப்பது எது?

                      மத்திய காலகட்டங்களில் அறிவியலுக்கு இசுலாமிய அறிஞர்கள் கொடுத்த கொடைகள் ஏராளம் ஆனால் அவையெல்லாம் அல்லாவோ இசுலாம் என்ற மதமோ கொடுததல்ல. அந்த அறிஞர்களின் மதம் வேண்டும் என்றால் இசுலாமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உழைப்பு அறிவியல் அதற்கும் மதத்திற்கும் துளியும் சமந்தம் இல்லை.

                    • செல்வம் “வரலாற்றின் மத்திய கால கட்டங்களில் முஸ்லிம் கள் அறிவியலுக்கு கொடுத்த கொடைகள் ஏராளம்.” என்ற உங்கள் கருத்தின் ஊடே இஸ்லாம் அறிவியலுக்கு எதிராக இல்லை என்ற உண்மையும் கலந்தே இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

                      //இஸ்லாத்திற்க்கும் அறிவியலுக்கும் சம்மந்தமில்லை.ஆனால் அந்த காலகட்டத்தில் அறிவியலை முன்னெடுத்துச்சென்ற விஞ்ஞாணிகள் முஸ்லிகளாக இருந்தார்கள்//
                      என்பது உங்கள் கருத்து.
                      சரி..உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்.மத இறைநம்பிக்கையற்ற உங்களுக்கு இதை சொல்லும் உரிமை உண்டு.
                      அதேவேளை இஸ்லாம் என்றாலே பிற்போக்கு அதை பின்பற்றுபவன் மதவெறியாளனாய் அனைத்திற்க்கும் மதத்தின் பின்னால் ஒளிபவனாய் மூர்கனாய் மூடனாய் தான் இருப்பான் என்ற ஒரு கருத்து எல்லா அரைகுறைகளின் மூளையிலும் உறைந்துபோய் கிடக்கிறது.
                      அவைகள்தான் இதை சிந்திக்க வேண்டும்.
                      அறிவியலுக்கும் விஞ்ஞாணத்திற்க்கும் இஸ்லாம் காரணமில்லை என்ற உங்கள் கருத்து முழு உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அந்த விஞ்ஞாணிகள் அனைவரும் முஸ்லிம்களாகவும் இஸ்லாமிய ஆட்சிசிக்குட்பட்ட அரசிலும்தான் வாழ்ந்தார்கள்.
                      இந்த நேரத்தில் கலீலியோகலிலியின் நிலையை நினைவூட்ட விரும்புகிறேன்.
                      எக்காலத்திலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அறிவியல் ஆய்வுக்கு எந்த தடையும் இருந்ததில்லை. மாறாக அனைத்து துறை ஆராய்ச்சிகளும் சிறந்து விளங்கிற்று.

                  • செல்வம்,
                    உண்மை திரு சிந்தனைசெய் ஆழமாக பரிணாமம் பற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நானும் எனக்கான சந்தேகங்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
                    அடுத்து துருக்கியில் பரிணமத்தை பள்ளியில் தடுத்துவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
                    பரிணாமம் சம்மந்தமான பாடத்தை தடுத்துவிட்டதாக செய்தி. பரிணாமம் என்ற கொள்கையை முற்றிலுமாய் யாராலும் மறுத்துவிட முடியாது என்பதே உண்மை.
                    துருக்கியில் நடந்தது என்ன என்பது பற்றி முழுமையாக என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.அப்படியே துருக்கியில் என்ன நடந்தாலும் அதற்க்கு பொறுப்பேற்க்கவோ வக்காலத்து வாங்கவோ எனக்கு கடமையோ அவசியமோ இல்லை.
                    பரிணாம கோட்பாட்டு பல்வேறு வகையான ஆரய்ச்சிகளை உள்ளடக்கியது.அதில் டார்வினின் கோட்பாடும் அடங்கலாம்.
                    பரிணாம கோட்பாடு என்பதே டார்வின் தான் என்பதோ பரிணாம ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் டார்வினை ஏற்றுக்கொண்டார்கள் என்றோ அறுதியிட்டு கூறமுடியுமா?
                    டார்வினுடையது ஒரு தியரி.
                    அது ஒரு அனுமானம்.அது உண்மையாக இருக்குமா? ஊகமா? ஆய்வுகள் தொடர்கிறது.
                    எல்லா பரிணாம ஆராய்ச்சியாளர்களும் டார்வினை அட்டியாக ஒப்புக்கொண்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா?
                    உலகின் உயிர்கள் பரிணாமம் பெற்று மாற்ற மடைந்திருக்கின்றன் என்று ஏற்க்கும் ஒருவர் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்காமல் இருக்கலாம்.அவரை எப்படி கட்டாயப்படுத்த முடியும்?
                    “உலகில் உள்ள அநியாய அக்கிரங்களையெல்லாம் அல்லாவால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?
                    இஸ்லாமியர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வதை ஏன் அல்லாவால் தடுக்க முடியவில்லை?
                    இவ்வளவு பல்வீனமான முறையிலா எங்களின் இறை நம்பிக்கை இருக்கும்?
                    உலகில் நடக்கும் அநியாய அக்கிரமங்களையெல்லாம் உடனுக்குடன் தண்டிக்கப்படவேண்டும் தீயவர்கள் அடியோடு அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதை நியதியாக கொன்டு இந்த உலகம் இயங்கவில்லை என்பதே எங்களின் நம்பிக்கை.
                    இது எங்கள் நம்பிக்கை சம்மந்தபட்டது இதற்க்கு மேல் விளக்கினால் அதில் மத பிரச்சார நெடிதான் அடிக்கும்.அதை கண்டிப்பாய் நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
                    அதுமட்டுமில்லாமல் இது வேறு ஒரு விவாதமாக மாறிவிடும்.
                    இதுபோக பலவீன்மான ஒரு இறைவனை நம்புவதும் வணங்குவதும் எங்களின் நிலையாக இருந்துவிட்டு போகட்டுமே செல்வம்…அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையே

                    • //அனைவரும் டார்வினை ஏற்றுக்கொண்டார்கள் என்றோ அறுதியிட்டு கூறமுடியுமா?
                      டார்வினுடையது ஒரு தியரி.
                      அது ஒரு அனுமானம்.அது உண்மையாக இருக்குமா? ஊகமா? ஆய்வுகள் தொடர்கிறது.
                      எல்லா பரிணாம ஆராய்ச்சியாளர்களும் டார்வினை அட்டியாக ஒப்புக்கொண்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா?//

                      ஒரு செல்லில் இருந்து அனைத்தும் வந்தன என்பது நிரூபிக்க பட்டு விட்டது. ஊகம் எதுவும் கிடையாது . பூமி உருண்டைன்னு சொல்லிக்கிறாங்கப்பா , நான் நம்ப மாட்டேன் என்று ஒருவர் ஒதுங்கியதை போல நீங்களும் பின்வாங்குகிறீர்கள்.

                      அறிவியல் ஊகம் செய்வது அந்த முதல் செல் வந்தது எப்படி என்பது தான்.

                      ஒரு செல் உருவாக தேவையான அனைத்தும் பூமியிலே இருந்தது என்னும் போது , அந்த ரெசிபியை கண்டு பிடித்து இன்னொரு செல்லை உருவாக்க முடியுமா ?

                      அதற்கான ரெசிபியை கண்டுபிடிப்பது கடினம். அதே சமயம் பூமியை போன்ற இன்னொரு கிரகத்தில் உயிரினம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அறிவியலின் புதிர் தீர்க்க வாய்ப்பாக அமையும்.

                    • திரு. மீரான்சாஹிப்,

                      இந்த கலந்துரையாடலில் நடுவே நுழைவதற்கு மன்னிப்பு கோரி கொள்கிறேன். நீங்கள் கூறியதில் ஒரு சில அறிவியல் சம்பந்தப்பட்ட தவறுகள் உள்ளன. எனவே அதை சுட்டி காட்ட விழைகிறேன்.

                      //டார்வினுடையது ஒரு தியரி.//

                      இது ஒரு misnomer. அறிவியலில் தியரி என்பது தான் மிக உயர்ந்த அங்கிகாரம். ஆங்கிலத்தின் தியரி என்ற வார்த்தை விளக்கம் வேறு, அறிவியல் தியரி (Scientific Theory) என்பது வேறு. அறிவியல் பாதை, scientific method, மூலம் ஒரு hypothesis பல கட்ட சோதனைகள், பல்வேறு ஆய்வுகள், அது தவறு என நிரூபிக்கும் முயற்சிகள், அத்துடன் போட்டியிடும் மற்ற hypothesis ஆகியவற்றை விட இதுவே மிக consistent முடிவுகள், prediction ஆகியவை தருகிறது என்பது போன்ற பல படிகளை கடந்து தான் ஒரு hypothesis, தியரி என அறிவியலில் வருகிறது. தியரி என்பது வெறும் ஊகமோ, அல்லது அனுமானமோ அல்ல. பல ஆயிரம் விஞ்ஞானிகள், பல ஆயிரம் ஆய்வுகள் , பல கட்ட rigorous சோதனைகள்ஆகியவற்றை கடந்து, இருக்கும் அனைத்து dataவிற்கும் எது மிக பொருத்தமான விளக்கம் அளித்து, அது போன்ற மற்ற இயற்கை நிகழ்வுகளுக்கும் இதை கொண்டு சரியான prediction தர முடியுமோ அதுவே தியரி.

                      இதை சற்றே விளக்கமாக பேசும் இரு லிங்க் கீழே உள்ளன. அந்த காணொளிகளை பார்க்கவும். ஒன்று hypothesis எவ்வாறு தியரி என மாற்றம் பெறுகிறது என்பதை விளக்குகிறது. மற்றொன்று எவ்வாறு ஒரு பிரச்சனையை விளக்க ஒரு hypothesis தரப்பட்டு, அது ஆராயப்பட்டு பிறகு தியரி என ஆகிறது, எவ்வாறு அனுமானம்(hypothesis) ஒதுக்கி தள்ள படுகிறது என்பதை உதாரணம் கொண்டு விளக்குகிறது.

                      டார்வினுடயது அனுமானம்(hypothesis) அல்ல. பரிணாம கொள்கையும் அனுமானம் அல்ல. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பல அறிவியல் ஆய்வுகள், genetics, palentology, geology, biology போன்ற பல அறிவியல் கிளைகள் (branches of science) தனித்தனியே செய்த பல ஆயிரம் ஆய்வுகள் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சந்தித்து தான் இப்போதைய பரிணாம கொள்கை தியரி என நிற்கிறது. அனைத்து பரிணாம ஆய்வாளர் மட்டும் அல்ல, மருத்துவத்தில் இருந்து பயோ-இன்ஜினியரிங் வரை பல துறைகளின் அடிப்படை அடித்தளமே பரிணாம கொள்கை தான். இதில் டார்வினை யாரும் ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. அவரை வெளியே வீசி எரிந்து விட்டாலும் பரிணாம கொள்கை அசைக்கமுடியாத உண்மை. நாம் ஒப்ப்க்கொள்ள வேண்டியது அறிவியலை மட்டுமே அல்லாது அதை சொன்னவர் இவர் என்பதால் யாரும் ஒப்புக்கொள்வதில்லை. ஐன்ஸ்டீனை அனைவரும் ஒப்புக்கொல்கிறார்களா என யாரும் கேட்பதில்லை, Francostoroவை ஒப்புக்கொல்கிறார்களா என கேட்பதும் இல்லை. மாறாக நாம் கேட்பது Relativity ஒப்புக்கொல்கிறார்களா, Germ Theory of disease ஒப்புக்கொல்கிறார்களா என்று தான். சொன்னது யார் என்பது பற்றி அறிவியலுக்கு கவலை இல்லை. விஞ்ஞானிகளுக்கும் கவலை இல்லை, யாருக்கும் அந்த கவலை இல்லை.

                      Links:

                      How does a hypothesis become a theory –
                      http://study.com/academy/lesson/how-does-a-hypothesis-become-a-theory.html

                      The mystery of Mercury’s orbit –

                    • மீராசாஹிப்,

                      மேல உள்ள ஒரு லிங்க் முழுவதும் பார்க்க account வேண்டும். எனக்கு account இருப்பதால் அதை கொடுத்து விட்டேன். மன்னிக்கவும். அதே விசயத்தை விளக்கும் இன்னொரு லிங்க் கீழே. அதையும் தாங்கள் பயன்படுத்தலாம்

                      How does a hypothesis become a theory and the scientific method – http://www.oakton.edu/user/4/billtong/eas100/scientificmethod.htm

                • I am not atheist. I am just an open minded Christian. I accept evolution theory not because it fits with my religious views but because I have studied it in schools and my teachers explained me well and my dad clarified my doubts by both explaining and buying me various books on the topic. Nobody is accepting evolution as it supports atheism. Biology is a discipline of science. It has no need to prove or disprove the existence of God or validity of any religion. It just tests the facts presented and comes to the best possible conclusion. In face of new facts, it will change it stance too. That is the beauty of science.

                  For example: If tomorrow, there comes a evidence that points to creation of humans from clay and the evidence is presented and debated in the scientific community and comes clear, it can also be accepted. Then someone like Manikandan will say that only because it supports the view of Abrahamic religions, it is accepted without question. But truth is, nothing in science is favored or accepted without scrutiny.

          • மீரான் பாய் ,பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நம்புவதும் நம்பாததும் அவர் அவர் விருப்பம்… அவர் அவர் கொண்டு உள்ள இறையியல் நம்பிக்கையை சார்ந்ந்து அது. ஆனால் கல்வித்துறையில் அறிவியல் பாடத்தில் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை துருக்கியில் தடை செய்தது போன்று தடை செய்ய இறையியல் ஆளர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று யோசியுங்கள் மீரான் பாய்!

            அறிவியல் அடிப்படையில் உயிர்களின் தோற்றமும் அவற்றின் வளர்சியும் பற்றி பரிணாம கொள்கை பேசுகின்றது… ஆம் அந்த அறிவியல் கொள்கை மத நூற்கள் கூறும் உலகத்தின் தோற்றம் பற்றிய கருதாக்துடன் முரண்படுகிறது என்னும் நிலையில் இறையியல் ஆளர்கள் எதற்காக அறிவியல் கோட்பாடுகளை தடை செய்ய முயலவேண்டும்?

            • சிந்தனைசெய் செந்தில்குமரன்
              மதவட்டம் தாண்டி சுதந்திர சிந்தனை உள்ள உங்களிடம் கேட்டு விளக்கம் பெறவே விரும்புகிறேன்

              ரெவெலியுஷன் தியரி எனப்படுகிற டார்வினின் பரிணாம கோட்பாடு உண்மையில் அறிவியலா?
              நிரூபனமான அறிவியல் ஆய்வுக்குட்பட்ட உண்மையா?அல்லது ஊகமா?

              நாம் பார்க்கிற இந்த உலகின் உயிரினங்கள யாவும் பல்வேறு தன்மை படைத்ததாகவே காணுகிறோம்.ஒவ்வொன்றும் தனித்தனி தன்மைகள் பேற்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
              ஒருசெல் உயினத்திலிருந்து பரிணாமம் பெற்றதென்றால் அவை உடலியல் பரிணாமம் பெற்றதா?
              மன் இயல் அறிவு இயல பரிணாமும் சேந்து பெற்றதா? தான் வாழ த்ன்னை தகவைமைத்துக்கொள்ளும் உயிரினங்கள் தன் உடலால செயலால் தன்னை மாற்றிக்கொண்டே வந்தது சரி.
              பகுத்தறிவு என்ற ஒன்று எப்படி பெற்றது?
              உயிரினம் நிலைத்திருக்க பகுத்தறிவு என்ற ஒன்று தேவையில்லையே வலியது வாழ்ந்துவிட்டு போகிறது.
              உயிரினம் பல்வேறு பரிணாமம் அடைந்து குரங்கில் வந்து நின்று குரங்கு மனித நிலையை அடைந்தது என்றால், உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் குரங்கு ஒன்றே மனிதனோடு மிக நெருக்கமான உடல் மன அமைப்பை பெற்றிருக்க வேண்டும்.
              உண்மையில் அறிவியல் ஆராய்ச்சி அப்படி ஒத்துக்கொள்கிறதா?
              மரபணுக்கள் உள்ளுறுப்புகள் ரத்த மாதிரி அனைத்தும் மனிதனின் தன்மையை குரங்கு கொண்டிருக்கிறதா?
              சமீபத்தில்,” ஒரு ஆப்பிரிக்க தாய் தந்தைக்கு பிறந்ததே மனித இனத்தின் துவக்கம்” என்ற ஆராய்ச்சி முடிவும் அதன் தொடர்ச்சியான விவாதமும் இதே தளத்திலேயே நாம் நடத்தி இருக்கிறோம்.
              ஒரே தாய் தந்தைக்கே நாம் அனைவரும் பிறந்து ப்ல்கினோம் என்பதை ஒத்துக்கொண்டால் பரிணாமத்தோடு அவை முரண்படவில்லையா?
              பரிணாமத்தால் உயிரிகள் மாற்றமடைந்தன என்றால் ஒரு தாய் தந்தைக்குத்தான் அனைவரும் பிறந்தோம் என்று எப்படி வரைய்றுக்க முடியும்?
              கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது…விவாதிப்போம் விவாதம் தெளிவை நோக்கி நம்மை தள்ளும்.

              • திரு மீராசாஹிப்,

                தங்கள் பதிவை படித்தேன். கேள்விகளுக்கு என்னால் இயன்ற வரை பதில் அளிக்கிறேன். ஒரு வேலை தமிழ் பதில் சரி வர விசயத்தை விளக்கவில்லை அல்லது என்னால் சரியாக தமிழில் கூற/மொழிபெயர்க்க இயலவில்லை என்றால் அந்த பகுதி மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும். இதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறன்.

                முதல் விஷயம்.உங்கள் பதிவில் பரிணாம கொள்கை பற்றிய பல தவறான புரிதல்கள் உள்ளன. பல பேரிடம் இருக்கும் misconceptions தான். அவற்றை முதலில் பேசுவோம்.

                முதலில் டார்வின் பரிணாம கோட்பாடு என்பது. இது டார்வின் கோட்பாடு அல்ல. இது உயரியல் பரிணாம கோட்பாடு. Evolutionary Biology and Theory of Evolution. டார்வினுக்கு முன்னும் இருந்தன. முதலில் தொகுத்து கூட டார்வின் அல்ல. அவரும் அவருக்கு முன்னால் இருந்தவர்களிடம் இருந்து பல விசயங்களை கடன் வாங்கினார். அவர் காலத்தில் கூட அவர் மட்டும் இந்த அறிவியலை பேசவில்லை. அவருடன் இல்லாமல் தனியாக Alfred Russel Wallace இதே பரிணாம கோட்பாடை ஒரு framework உருவாக்கினார். இருவரின் தனி ஆய்வும் சேர்ந்தே தான் Linnean Societyயில் சமர்பிக்கபடுகிறது. டார்வின் தன் நூலில் அடிப்படை விசயங்களை எளிதாக, ஆதி முதல் தொகுத்து ஆய்வு முடிவுகள், observation துணை கொண்டு எழுதினார். அதனால் அவர் famous. மற்றபடி டார்வின் மட்டுமே தனியாக இந்த அறிவியலை துவக்கியோ, தனியாக கட்டமைதோ வரவில்லை. டார்வின் காலம் தொட்டு பல ஆயிரம் ஆய்வுகள், அறிவியலின் பல துறைகள், பல வித ஆதாரங்கள் கொண்டு ஒரு அசைக்க முடியாத அறிவியல் உண்மையாக, மற்ற அறிவியல் கொள்கைகள் போலவே தான் பரிணாம கொள்கையும் இப்போதைய நிலையை அடைந்து உள்ளது. இந்த கோட்பாடு ஊகம் அல்ல.

                அடுத்தது, இந்த quote:

                // உயிரினம் நிலைத்திருக்க பகுத்தறிவு என்ற ஒன்று தேவையில்லையே வலியது வாழ்ந்துவிட்டு போகிறது.//

                இதை பரிணாம கொள்கை கூறவில்லை. வலியது தான் நிலைக்கும் என்பது தவறு. இருக்கும் சூழலுக்கு எது மிக பொருத்தமானதோ அதுவே நிலைக்கும். Its not survival of the strongest, its survival of the fittest. இந்த மாற்றம் ஏனோ தானோ என்றெல்லாம் ஏற்படுவதும் இல்லை. அனைத்து உயிரும் DNA replicate செய்யும். இதில் பிழைகள் ஏற்படுவது சகஜம் (mutation). இந்த mutation ஒன்றுமே இல்லதாதாக இருக்கலாம் (உதாரணமாக கண் நிறம்) அல்லது ஒரு உயரினம் அதே இடத்தில மற்ற உயிர்களுடன் போட்டி இட்டு உணவு பெறுவதிலோ அல்லது தன்னை வேட்டை ஆடும் predator இடம் தப்பிகவோ உதவி செய்யும் மாறுதலாக இருக்க கூடும். இல்லை இருக்கும் சூழல் மாறும்போது புது சூழலுக்கு கொஞ்சமே கொஞ்சம் advantage தரும் mutation என்றால் அது தன குழுவை சேர்ந்த மற்ற மெம்பர்கள் விட அதிக வாழும் chance உண்டு. அது 1% என்றாலும் பல ஆயிரம் specimen, பல தலைமுறைகள் என வரும் போது அதுவே இயற்கையாக natural selection மூலம் dominant trait ஆக வரும்.

                உயரினம் இருக்கும் சூழல் தான் இங்கு ராஜா. அந்த சூழலில் எது advantage தருகிறதோ அதுவே survive ஆகும். அதுவே அடுத்த தலைமுறைக்கும் pass on ஆகும். சுருக்கமாக, the genes of the most fittest survivor, for a given situation gets passed on.

                இதில் பகுத்தறிவு என்பது எவ்வளவு வலிய trait என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. ஒரு செடி விஷம் என்னும் அறிவை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுத்தால் அது வாழ்வதற்கு வாய்புகள் அதிகம் அல்லவா? இது பகுத்தறிவு மட்டும் அல்ல. நம் instincts கூட இப்படி shape செய்யப்பட்டது தான். உதாரணமாக ஏதோ ஒரு சப்தம் கேட்கிறது என்று வைத்து கொள்வோம். நம்மில் கிட்ட தட்ட அனைவரும் அது என்ன என்று ஒரு கணம் உன்னிப்பாக கவனிப்போம். இதற்க்கு காரணமும் பரிணாமம் தான். காட்டில் நம் முன்னோர் அலைந்து கொண்டு இருக்கும் போது ஒரு சிறு சலசலப்பு ஒரு predator வரும் அறிகுறியாக இருக்கலாம். எனவே எந்த சப்தம் கேட்டாலும் முன்ஜாக்கிரதையாக கவனமாக கேட்டு இருந்தவர்கள் predator என்றால் தப்பிக்க வாய்ப்பு அதிகம். எனவே காலபோக்கில் அந்த trait natural selection மூலம் அவர்களின் சந்ததியன்ர்களுக்கு வந்தது. அவர்கள் சந்ததியில் வந்த நாம், காட்டில் இல்லாவிட்டாலும் நம் DNA அவர்களிடம் இருந்து inherit செய்யப்பட்டதால், அதே எச்சரிக்கை நம் பழக்கத்திலும் உள்ளது.

                //உயிரினம் பல்வேறு பரிணாமம் அடைந்து குரங்கில் வந்து நின்று குரங்கு மனித நிலையை அடைந்தது என்றால், உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் குரங்கு ஒன்றே மனிதனோடு மிக நெருக்கமான உடல் மன அமைப்பை பெற்றிருக்க வேண்டும்.//

                இது தவறு. குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை. இன்றைய குரங்குகள் (chimps, great apes), மனிதன் உட்பட ஒரு ape like ancestorஇல் இருந்து பிரிந்து வந்தவை. குரங்கு என்பதும் ஒரு இனமோ, ஒரு species கிடையாது. மற்ற விலங்குகளை விட நம் DNA குரங்குகளோடு அதிகாமாக ஒத்து போகிறது. இது அறிவியல் ஒத்து கொள்ளும் உண்மை. தோற்றம் எல்லாம் சும்மா. தோற்றம் இருக்கும் நிலைக்கு ஏற்ப மாறுதல் அடையும். எனவே தோற்றம் என்பது சரியான comparison அல்ல. DNA ஒப்பீடே சரி. அப்படி DNA ஒப்பீடு செய்தால் மனிதனின் மிக நெருங்கிய ‘சொந்தம்’ great apes தான். மனிதன் மற்ற great apes DNA ஒப்பீடு செய்தால் மனித DNA chimps, bonobo DNAவுடன் 99% ஒத்து போகிறது. அதே gorilla DNA என்றால் அது 98%, பசு என்றால் 80%, fruit flu 61%, இவ்வளவு ஏன் மனித DNA வாழைபழத்துடன் ஒப்பிட்டால் 6௦% ஒத்து போகிறது. இது அனைத்தும் common ancestory என்பதை தான் காட்டுகிறது.

                இதிலே இன்னொரு சிறு தவறும் உள்ளது. பரிணாம் குரங்கில் வந்து நின்று, பிறகு மனிதன் வருவது என்பது தான் பரிணாமத்தின் குறிக்கோள் என்பது போல உங்கள் வாக்கியம் தோன்றுகிறது. அது தான் தாங்கள் கூறியது என்றால், அது தவறு. பரிணாம மாறுதல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் ஒன்று. குரங்கோ, மனிதனோ வருவது அதன் நோக்கம் அல்லது end result அல்ல. Evolution is always occuring and has no end result or goal. நாம் குரங்கில் இருந்து வந்தது pure chance.

                //மரபணுக்கள் உள்ளுறுப்புகள் ரத்த மாதிரி அனைத்தும் மனிதனின் தன்மையை குரங்கு கொண்டிருக்கிறதா?//

                ஆம். குரங்குகள் மட்டும் அல்ல. நாய், பூனை, எலி, பசு உள்ளிட்ட பல விலங்குகளுக்கு உள்ளுறுப்புகள், ரத்த வகை எல்லாம் உண்டு. கிட்னி failure, கண்புரை, புற்றுநோய், சக்கரைவியாதி போன்றவையும் அவற்றுக்கு உண்டு. சில வியாதிகள் கூட பொது.

                //சமீபத்தில்,” ஒரு ஆப்பிரிக்க தாய் தந்தைக்கு பிறந்ததே மனித இனத்தின் துவக்கம்” என்ற ஆராய்ச்சி முடிவும் அதன் தொடர்ச்சியான விவாதமும் இதே தளத்திலேயே நாம் நடத்தி இருக்கிறோம்.
                ஒரே தாய் தந்தைக்கே நாம் அனைவரும் பிறந்து ப்ல்கினோம் என்பதை ஒத்துக்கொண்டால் பரிணாமத்தோடு அவை முரண்படவில்லையா?
                பரிணாமத்தால் உயிரிகள் மாற்றமடைந்தன என்றால் ஒரு தாய் தந்தைக்குத்தான் அனைவரும் பிறந்தோம் என்று எப்படி வரைய்றுக்க முடியும்?//

                இந்த விவாதம் எது என எனக்கு தெரியாது. இது ஒரு ஊகம் தான். நீங்கள் mitochondrial eve மற்றும் Y-chromosomal adam பற்றியா? அப்படி இல்லை என்றால் நீங்கள் குறிப்பிட்டு உள்ளது எந்த ஆய்வு என்று லிங்க் தர முடியுமா?

                மேலே உள்ளதில் நான் ஏதேனும் நீங்கள் கூறியதை தவறாக புரிந்து கொண்டுள்ளேன் என்றால் தயவு செய்து சுட்டி காட்டவும். அப்படி தவறுகள் இருந்தால், மன்னிப்புகள்.

                Links:

                https://www.scientificamerican.com/article/tiny-genetic-differences-between-humans-and-other-primates-pervade-the-genome/

                http://www.businessinsider.com/comparing-genetic-similarity-between-humans-and-other-things-2016-5/#and-while-the-egg-laying-and-feathered-body-are-pretty-different-from-a-humans-about-60-of-chicken-genes-have-a-human-gene-counterpart-7

                https://en.wikipedia.org/wiki/Blood_type_(non-human)

                • சிந்தனைசெய்
                  உங்களின் நீண்ட விளக்கத்தை நான் படித்தேன்.
                  உங்களிடம் ஒரு உண்மையை விளக்க ஆசைப்படுகிறேன்.நான் பெரிய படிப்பாளியோ மொழிப்புலமை உள்ளவனோ கிடையாது.மெத்த படித்தவர்களின் பின்புலமும் எனக்கு கிடையாது. நான் ஒரு வியாபாரி
                  அநேகமாக இங்கே கருத்து பதிபவர்களில் நான் தான் மிக எளியவனாக இருப்பேன்
                  என்னோடு மிகத்தீவிரமான எதிர் கருத்து உள்ளவர்களான மணிகண்டன் ராமன் உண்மைவிளம்பி போன்றவர்களெல்லாம் கூட நல்ல படிப்பறிவும் ஆங்கில அறிவும் உள்ளவர்கள்தான். அவர்கள் காவித்துணியால் கண்ணை இறுக்க கட்டிக்கொண்டிருப்பதால் உண்மைக்கு முன் திணறுகிறார்கள். காவி கட்டை அவிழ்த்து விட்டால் கண்டிப்பாய் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள்தான்.
                  நான் அப்படிப்பட்டவன் அல்ல.
                  உங்களை ம்றுத்து வாதம் புரிவது என் நோக்கம் அல்ல.என் இயல்பான சந்தேகங்களை தீர்க்கவே விரும்புகிறேன்.
                  உதாரணத்திற்க்கு பகுத்தறிவு மனித இனத்திற்க்கு மட்டும் எப்படி வந்தது என்ற என் கேள்வியின் விடை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.
                  சப்தத்தால் உயிரினங்கள் கவனம் ஈர்க்கப்படுவதை பகுத்தறிவிற்க்கு நீங்கள் உதாரணம் காட்டுவது பொருந்தி போக முடியாததாக இருக்கிறது.
                  ஒலியால் ஒரு உயிரினம் ஆபத்தை உணர்ந்து எச்சரிக்கை அடையலாம் ஒலியை வைத்து தன் இனத்தின் அருகாமையை அடையாளம் காணலாம்.இவை பகுத்தறிவோடு தொடர்புடையாதா?
                  ஒரு நாய் தன் எஜமானனை பார்வையாலும் மோம்பத்தாலும் அடையாளம் கண்டு வாலாட்டுவது, புது மனிதனை அதே வகையில் அடையாளம் கண்டு குரைத்து தள்ளுவது ஒரு நாயின் தன்மையாகவே நான் காண்கிறேன்.இதை புலனறிவு என்று சொல்ல முடியுமே அன்றி பகுத்தறிவு என்ற வகையில் வருமா என்பதை நான் விளங்க முடியவில்லையே…

                  அடுத்து..
                  டி என் ஏ பற்றி நீங்கள் விளக்கும்போது, காமன் ஆன்செஸ்டரி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.உயிரினங்கள் அனைத்திற்க்கும் பொதுவான ஒற்றுமைகள் இருக்கிறது என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
                  உள்ளுறுப்புக்ளில் இருக்கிற ஒற்றுமைகள் ஒருபக்கம் இருக்கட்டும் உணர்வுகளில் கூட எத்தனை விலங்குகள் மனிதனைப்போன்ற அன்பு பாசம் வாஞ்சை போன்ற உணர்வுகள் கொண்டவைக்ளாக இருக்கின்றன..
                  இவைக்ளெல்லாம் ஒன்றிலிருந்தே அனைத்தும் உருவானது என்பதற்க்கு ஆதாரங்கள் ஆகுமா என்ற கேள்வியே குடைகிறது.
                  ஒவ்வொரு இனமும் தனித்தனி தனமை பெற்றதாகவல்லவா இருக்கின்றது.
                  வலிமையான பல விலங்குகள் மனிதனுக்கு கீழ் படிகிற நிலையை அடைந்தது எப்படி?
                  இப்படிப்பட்ட மேம்பட்ட நிலை மனிதனுக்கு எப்படி சாத்தியமானது?
                  மனிதன் பகுத்தறிவு பெற்றதனால், பரிணாமம் நின்று போய்
                  தன் அறிவை கொண்டு சாதனங்களால் இன்னும் இன்னும் உயர்ந்து போகிறானா?
                  மற்றவைகளின் பரிணாமம் நின்று போனதா?
                  இவைகளை விளங்கிகொள்ள என் அறிவு இன்னும் பல பரிணாமம் பெற வேண்டுமா?
                  என் புலனறிவால் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து என் பகுத்தறிவால் பிரித்து அறிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இன்றுவரை.
                  இன்னும் என் அறிவு மேம்பட்டு அனைத்தும், “தான் தோன்றியது” என்ற உண்மை உரைக்குமானால் கடவுளை தூக்கி கடலில் போட்டுவிட்டு அந்த சமுத்திர துளியிலிருந்து உண்டானவனே நான் என்று உரக்க சொல்லி முடிப்பேன

                  • திரு. மீராசாஹிப்,

                    நீங்கள் கூறியது பிரச்சனையே இல்லை. தங்கள் சந்தேகங்கள் எதுவானாலும் தாராளமாக கேட்கவும். நானும் விவாதிக்க விரும்பவில்லை. இரு நண்பர்கள் உரையாடுவதாக தான் நான் நம் பேச்சை பார்கிறேன். So please do not hold back anything.

                    நான் கூறிய ஒலி பற்றிய உதாரணம் பகுத்தறிவு என்பதற்கு அல்ல. குழப்பத்துக்கு மன்னிக்கவும். சப்தம் பற்றிய உதாரணம் நம் instincts, உள்ளுணர்வு எவ்வாறு பரிணாம கொள்கையால் பல தலைமுறைகள் வாயிலாக வடிவமைக்க பட்டது என்பதை விளக்கவே. பகுத்தறிவு பற்றி தங்கள் கேள்விக்கு பதில் அளிபதர்க்கு முன், குழப்பம் தவிர்க்க ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் definition படி பகுத்தறிவு என்றால் என்ன, அது எப்படி மற்றவற்றில் (எ.க: புலனறிவு) இருந்து மாறுபடுகிறது? இதை முதல் படியாக கொண்டு மேலே பேசலாம்.

                    உங்களின் அடுத்த பகுதிக்கு வருவோம். ஒரு உயிரினத்தின் அனைத்து விசயங்களையும் தீர்மானிப்பது DNA தான். எனவே உயரினங்கள் அனைத்துக்கும் common ancestor இருந்தது என்று ஒத்துகொள்ளும் போது, உறுப்பு ஒற்றுமை மட்டுமென்ன, உணர்வுகளில் கூட ஒத்துபோவதில் என்ன ஆச்சர்யம்? அனைத்து உயிர்களின் அடிப்படை நோக்கம் என்று பார்த்தால் அது என்ன? தான் வாழ்ந்து அடுத்த சந்ததி மூலம் தன் DNA வாழவேண்டும். ஒரு பக்டீரியா, வைரஸ் போன்றவை நோய் உண்டாக்குவது அது பல்கி பெருகுவதின் பக்கவிளைவே. சிங்கம் வேட்டையாடுவது, மான் தப்பித்து ஓடுவது, போன்ற அனைத்துமே தான் வாழவேண்டும். பிறகு அடுத்த சந்ததி, அதன் மூலம் அதன் DNA பல்கி பெருகி வளர வேண்டும். இது தான் அனைத்து உயிர்களின் நோக்கம். பூக்கள் தேனீக்களை கவரும் விதமாக இருப்பதும், பழம் பறவைகளை கவரும் விதமாக இருப்பது எல்லாம் இதற்க்கு தான். அன்பு, பாசம், வாஞ்சை போன்ற உணர்வு எல்லாம் அந்த DNA பாதுகாப்பின் பல வெளிப்பாடுகள். அவ்வளவு தான். இது எல்லாவற்றையும் நீங்கள் DNA ஒப்பீடு மூலம் கண்கூடாக பார்க்க முடியும். நம்பிக்கை வேண்டாம், ஆதாரம் நம் DNAவில் உள்ளது.

                    தனி தனி தன்மை என்பது பல தலைமுறையாக, பல ஆயிரம் வருடங்களாக அந்த உயரினம் வாழ்ந்த சூழலால் mould செய்யப்பட்டது. மேலே கூறிய மான் உதாரணத்தை எடுத்துகொள்வோம். ஒரே மான் கூட்டம், ஒரே பரந்த புல்வெளி நிலத்தில் இருக்கிறது. ஆனால் உணவு போதுமான அளவு இல்லை அனைவருக்கும் என்ற போது ஒரு சிறு கூட்டம் பிரிந்து புல்வெளியின் விளிம்பில் இருக்கும் காட்டில் சென்று வாழ ஆரம்பிக்கிறது. இப்போது இரண்டு குழுக்கும் போதுமான உணவு இருப்பதால் அவை பல்கி பெருக ஆரம்பிக்கின்றன. ஆனால் அவை இருக்கும் சூழல் வேறு வேறு. புல்வெளியில் இருக்கும் மான் சந்திக்கும் பிரச்சனைகள், ஆபத்துக்கள் வேறு, காட்டில் இருப்பவை சந்திப்பது வேறு. உதாரணமாக காட்டில் பெரிய கொம்பு தப்பித்து ஓடுவதற்கு தடங்கல். எனவே கொம்பு அளவு கம்மியாக உள்ள மான்கள் வாழ வாய்ப்பு கொஞ்சமே அதிகம். இதுவே பல தலைமுறைகள் செல்லும் போது அந்த மான் குழுவின் கொம்பு அளவு பரவலாக on average குறைகிறது. அடுத்து ரோமத்தின் நிறம். ஒரே நிறமாக இருப்பதை விட மரத்தின் நிழல் போல ரோமம் சற்றே கருப்பாக இருப்பவை சற்றே எளிதாக தப்பிகின்றன. எனவே பல தலைமுறைகள் கடந்து செல்லும் போது, ரோமம் கருப்பாக மாறுகிறது. இப்படி பல தலைமுறைகள், பல மாற்றங்கள் என நடக்கும்போது இரு மான் கூட்டமும் மிகுந்த வித்யாசம் கொண்டவையாக மாறுகின்றன. ஒரே இடத்தில இருந்து வந்தவை தான். ஆனால் சூழ்நிலை அவற்றை முற்றிலும் மாற்றி விட்டது. இது தான் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படை. Evolution by natural selection. இதை இன்னும் எளிதாக விளக்கும் வீடியோ இங்கே. ஆங்கிலத்தில் உள்ளது.

                    https://www.youtube.com/watch?v=10QRBfcxQyU

                    அடுத்து நீங்கள் கேட்டு இருப்பது மிக, மிக அருமையான கேள்வி. இதற்க்கு பதில் பல முனை பட்டது. நாய்கள் கீழ படிந்தது மனிதனுடன் இருந்தால் அவற்றுக்கு பல பிரச்சனைகள் (உணவு வேட்டையாடுதல், அடுத்த தலைமுறை பாதுகாத்தல்) தீர்ந்தன. மனிதனுக்கும் அவற்றுடன் இருப்பதில் பல advantage இருந்தன. எனவே ஒரு mutually beneficial relation ஓநாய்கள், மனிதன் இடையே உண்டானது. இது தானாகவே கீழ்படிதல். இது ஒரு வகை, மனிதன் மற்ற விலங்குகளை கட்டி ஆள்வதில்.

                    ஆனால்மனிதன் மற்ற விலங்குகளில் இருந்து எப்படி தனிதுவம் பெற்று இருக்கிறான் என்பது உங்கள் கேள்வியானால், மற்ற விலங்குகளுக்கு மற்ற பல trait போல, நமக்கு அறிவு, மூளை ஆகியவை select செய்யப்பட்டன. அப்படியும் லட்சகணக்கான ஆண்டுகள் கற்காலம் தான் இருந்தோம். நம் மூளை ஒன்றும் பெரிதாக மாற்றம் அடையவில்லை. இரண்டரை மில்லியன் ஆண்டுகள் கற்காலம், அதில் வாழ்ந்த மனிதனின் மூளையும், இப்போதைய மனிதனின் மூளையும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால் கற்காலத்தில் வாழ்ந்த மனிதன் தன்னை விட வலிய விலங்குகளை கட்டி ஆளவில்லை. நம்மால் அதை செய்ய முடிவதன் காரணம், அப்போது இருந்த மனிதனை விட இப்போது நமக்கு சிறந்த tools உள்ளன. சிறந்த tools செய்யும் திறன் select செய்யப்பட்டது. இந்த முறை நம் சமூகத்தால். இயற்கைக்கு பதில் நம் மனித குழு. அவ்வளவு தான். சிறந்த tools செய்த சமூகம் பெருகியது, மற்றவற்றை அடக்கி ஆள முடிந்தது. அது தான் அடிப்படை காரணம். இப்போது intelligence மிக சிறந்த trait ஆக இருக்கிறது. இதுவே நாம் வாழும் நிலைமை மிக மாறினால், intelligence சரியான trait இல்லை என்று ஆனால், மனிதனும் அழிந்து விடுவான். அவ்வளவு தான். சுருங்க சொல்ல வேண்டும் என்றால் In this generation, we are the most successful species due to intelligence being the best trait. But that doesnt mean we are invincible much like dinosaurs before us. இப்போதும் ஒரு சூப்பர் வைரஸ் வந்தால் நாம் அனைவரும் அழிய கூடிய வாய்ப்பும் உள்ளது. நாம் ஒன்றும் பரிணாம வளர்ச்சியை வென்று விட வில்லை, அதுவும் முடியாது.

                    நம்மை பல லட்சம் ஆண்டுகளாக வட்டி வதைத்த நோய்களை நம் அறிவை கொண்டு இன்னும் வெல்ல முடியவில்லை. பரிணாம வளர்ச்சி இன்னும் நின்று போய்விடவில்லை. மற்றவைகளிடமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதர்களிடம் கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது என்றும் நிற்காது. கிருமி anti-bacterial resistance பெறுவதும் பரிணாம வளர்ச்சியால் தான். ஒரு சில மனிதர்கள் ஒரு சில நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை பெறுவதும் அதே காரணம் தான். இவ்வளவு ஏன், நம் முன்னோர்களுக்கு மிக எதுவாக இருந்த பல trait இன்று நமக்கு பெரும் பிரச்சனையாக உள்ளன. Evolutionary baggage என்று இதற்க்கு பெயர். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் இயற்கையாக மலேரியா எதிர்ப்பு தன்மை தர கூடிய ஒரு mutation தான் Sickle cell anemia என்ற நோய்க்கும் காரணம். ஆனால் மலேரியா எதிர்ப்பு என்பது முற்காலத்தில் அதிக beneficial. சிறிய வயதிலயே மலேரியா கொல்ல வல்லது என்பதால், sickle cell anemia பல வருடங்கள் கழித்து தரும் பிரச்சனையை விட மிக சீக்கிரம் வரும் மலேரியா என்பதன் எதிர்ப்பு திறன் பல்கி, பெருகியது. ஆனால் இப்போது நம்மிடம் anti-malarial மருந்துகள் உள்ளன. எனவே அந்த traitக்கு வேலை இல்லை. இது போன்ற விஷயங்கள் பல உள்ளன. பரிணாம வளர்ச்சி என்பது மிக சிறந்த selection, அற்புதமான process என்பது எல்லாம் அல்ல. Evolution is stupid. இருக்கும் நிலைமைக்கு எது மிக advantage தருகிறதோ, அது dominant ஆக வரும். அவ்வளவு தான். நாம் அறிவு பெற்றது, ஏன் நம் மனித நாகரிகம் உட்பட அனைத்தும் இந்த என்றும் நிற்காத, நாம் வெல்லவே முடியாத stupid processஇன் விளைவு தான். நாம் ஒன்றும் pinnacle of evolution அல்ல. ஒரு நீண்ட, பெரிய புத்தகத்தின் ஒரு அத்தியாயம் நாம். அவ்வளவே.

                    • சிந்தனைசெய்
                      பரிணாம இயலின் ஆர்வமும் அதன் காரணமாய் உங்களின் வாசிப்பறிவும் பாராட்டத்தக்கவை.
                      மிக முக்கியமான இந்த கலந்துரையாடலை உடனுக்குடன் தொடரமுடியாத சில வேலைகள்.போன வாரம் வரை நிறைய நேர அவகாசங்கள் இருந்தது.இப்போதுதான் உங்களின் பதிவை பார்த்தேன்.உடனே பதில் வரைகிறேன்

                      ப்ரிணாமத்தை அறவே மறுத்தவனாக நான் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே நான் சுட்டிக்காட்டி விட்டேன்.ஆகவே, ரொம்ப அதிகம் வேண்டாம் ஒரு நான்ங்கு தலைமுறை மனிதர்க்ளோடு ஒப்பிட்டாலே இன்றைய நம்முடைய ஆற்றல் செயல்பாடுகளில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை காணுகிறோம்.போன தலைமுறையோடு ஒப்பிட்டாலே வாய் கணக்கு போடும் திறன் இந்த தலைமுறையில் குறைந்திருக்கிறது. மூன்றையும் இரண்டையும் கூட்ட கல்குலேட்டர் தேவையான காலமாக இது மாறியிருக்கிறது.
                      கையை பிடித்து பார்த்தே நோயின் அறிகுறி அறியும் மருத்துவர்களின் காலம் போய் தடுமல் காய்ச்சலுக்கும் ஸ்கேன் பண்ணி பார்த்து அறியும் கேலிக்கூத்தான காலத்தில்தான் வாழ்கிறொம். பணத்தாசை ஒரு காரணம் என்றாலும் மதிநுட்பம் குறைந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
                      இவை மனிதனின் வேறுபட்ட அணுகுமுறையினால் அவனிடம் இருந்த இயல்பு ,மாற்றம் பெறுகிறது.பரிணாமம் இப்படித்தான் தொடர்கிறது இல்லையா? நிச்சயம் இது அறிவியல்.

                      எனக்கு இன்னும் விளங்கி கொள்ள முடியாத கேள்விகள்…
                      நாய் என்று ஒரு படைப்பு .உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிறங்களில் நாய்கள் வாழ்கின்றன.நாய் நாயாகத்தான் இருக்கின்றது. ஓநாய் ஒநாயகத்தான் இருக்கின்றது.
                      யானைகள் உலக்ம் முழுக்க இருக்கின்றது ஆப்பிரிக்க யானை ஆசிய யானை என்ற சற்றே வித்தியாசமுடையனவாக இருந்தாலும் எல்லா யானையும் நீண்ட தும்பிக்கையோடு ஒரே குணாதிசயம் கொண்டனவாகத்தான் இருக்கின்றது.
                      எப்படி ஒவ்வொரு இனமும் மனிதன் மிக எளிதாக விளங்கி அவைகளின் குணாதிசயத்தை கொண்டு அவற்றை பழக்கி எடுக்க கூடிய வகையில் குண ஒற்றுமை கொண்டதாக இருக்கின்றது.
                      பசித்தாலும் புலி புல்லை திண்ணாது என்று உறுதியாக அறிந்து வைத்திருக்கின்றோம்.
                      பரிணாமத்தால் இவ்வளவு கச்சிதமாகவா உயிரிகள் மாற்றம் பெற முடியும்?
                      நீங்களே ஒரு கருத்தை கூறினீர்கள்…
                      குரங்கிலிருந்துதான் மனிதன் என்றில்லை பரிணாமம் என்பது அது பாட்டிற்க்கு இயற்க்கையின் இயல்பான சுழற்ச்சியால் நிகழ்ந்து கொண்டே இருக்கிற ஒன்று என்று. இல்லையா
                      அப்ப்டி என்றால் எங்கேனும் ஒரு புலி புல்லை திண்ணலாம். எங்கேனும் ஒரு ஆடு பூனையை கடிக்கலாம்.
                      ஆண்டாண்டு காலமாய் உயிரினங்களின் குணாதிசயம் இயல்பு மாறுவதே இல்லையே சிந்தனை செய்.
                      எல்லாமே மிக கச்சிதமாய் ஒரே உருவ அமைப்பில் குணாதிசயத்தில் பரிணாமம் அடைந்ததெப்படி?
                      பகுத்தறிவிற்க்கு விளக்கம் கேட்டீர்களில்லையா..
                      ஒரு உயிரினம் தான் நிலைத்திருக்க தன் சந்ததிகளை பெருக வைக்க டி என் ஏ வை கடத்தச்செய்கிறது சரி…பல கால அளவுகளால் பரிணாமம் பெற்று தன் உள்ளுணர்வை வளர்த்துக்கொண்டிருக்கிறது அதுவும் சரி…
                      நான் மீண்டும் கேட்பது பகுத்தறிவு என்பது உயிரினம் நிலைத்திருக்க தேவையே இல்லாத ஒன்று.
                      நாம் இப்போது பார்க்கும் மனிதனை தவிர்த்து உள்ள அத்தனை உயிரினங்களும் ஐந்தறிவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கண்டு கேட்டு முகர்ந்து தொட்டு சுவைத்து இவைகளில் தான் அனைத்தும் உண்டு குடித்து தன்னை வளர்த்து இணை சேர்ந்து தன் இனம் தன் எதிரி இனம் என்று போதுமான புலனறிவோடு அவைகள் வாழ்கின்றன.
                      இடையில் மனிதன் என்ற இனம் மட்டும் பகுத்தறிவு பெற்றது எப்படி?
                      அதாவது மற்ற விலங்குகள் போல ஐந்தறிவையும் பெற்று ஆறாம் அறிவான பகுத்தறிவு கொண்டு, அவைகள் சிந்திக்காத அனைத்தையும் சிந்தித்து ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து, இதோ “சிந்தனைசெய் “போல ப்ரிணாம கோட்பாட்டை மண்டை முழுக்க ஏற்றி என்னைப்போன்ற பாமரனுக்கு மிக எளிதாக அவற்றை விளக்கவும் ஆற்றல் பெற்ற பகுத்தறிவு வந்தது எப்படி?
                      உயிரினம் நிலைத்திருக்க அல்லது அவை தன் இனத்தை கடத்த பகுத்தறிவு என்ற ஒன்று நிச்சயம் தேவையில்லை.எப்படி மனித இனம் பகுத்தறிவு பெற்ற இனமாக மாறி முழு உலகையும் ஆளும் பிரதிநிதியாய் ஆனது?

                • //ஒரே தாய் தந்தைக்கே நாம் அனைவரும் பிறந்து ப்ல்கினோம் என்பதை ஒத்துக்கொண்டால் பரிணாமத்தோடு அவை முரண்படவில்லையா?//

                  அறிவியல் கூறும் தாய்க்கும் தந்தைக்கும் எழுபதாயிரம் ஆண்டு இடை வெளி உள்ளது . இருவரும் சமகாலத்தில் வாழ்ந்ததாக அறிவியல் கூற வில்லை .

                  பெரிய மூளையுடன் குட்டி போடும் ஆற்றலை உயிரினம் மெதுவாகத்தான் பெற்றது .

                  மதம் கூறும் ஒரே தாய் தந்தைக்கு சீனர்கள் , வெள்ளையர்கள் , அரபிகள் , இந்தியர்கள் எல்லோரும் எப்படி பிறந்து இருப்பார்கள் என்று சிந்தித்து உண்டா ?

                  • பரவாயில்லை..அறிவியலை ஏற்றுக்கொள்கிற ராமனுக்கு பாராட்டுகள்.
                    அறிவியல் கூறும் தாய்க்கும் தந்தைக்கும் எத்தனை ஆண்டு இடைவெளியும் இருக்கட்டும்.ஆக அனைவரும் ஒரு தாய் தந்தைக்குத்தான் பிறந்தோம் என்பது நம் அனைவரையும் சமமாக ஆகச்செய்தால் சரிதானே
                    அடுத்தது,//பெரிய மூளையுடன் குட்டி போடும் ஆற்றலை உயிரினம் மெதுவாக பெற்றது// இருக்கட்டும்.
                    யானையும் எருமையும் திமிங்கலமும் நம்மைவிட பெரும் மூளைதான்.மூளையின் அளவு எப்படியும் இருந்து தொலையட்டும்.அந்த மூளையின் ஆற்றலில் உள்ள வேறுபாடு வந்தது எப்படி?
                    நம்மையும் விட மிகப்பெரும் நாக்கு கொண்ட ஒரு மாடு, மூக்கு உள்ளே நாக்கை கொண்டு போய் வழிக்கும் ஆற்றலை பெற்றும் ஏன் நம்மை போல் பேசுவதில்லை?
                    “//ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவன் வெவ்வேறு நிறத்தில் வெவ்வேறு வடிவில்//
                    இது நல்ல சிந்தனை.
                    இதுதான் பரிணாமம்.காலச்சூழல் இடப்பெயர்ச்சி சீதோசணம் மனிதனை வெவ்வேறு நிறமாக குலமாக பிரிக்கிறது.
                    இதைக்கொண்டே ஆரியன் என்றும் திராவிடன் என்றும் மங்கோலியன் என்றும் நாம் அடையாளம் காணுகிறோம்.
                    இவை மனிதனை வெவ்வேறு வகை வாழ்க்கை முறைகளாலும் நாகரிகங்களாலும் செதுக்கி கொண்டே வந்திருக்கிறது.
                    நிச்சயம் வெள்ளை தோல் உள்ளவன் உயர் பிறப்பாகவும் கருத்தவன் இழிபிறப்பாகவும் இருக்க வாய்ப்பே இல்லை.

                    • //பரவாயில்லை..அறிவியலை ஏற்றுக்கொள்கிற ராமனுக்கு பாராட்டுகள்.
                      //
                      🙂

                      // இதுதான் பரிணாமம்.காலச்சூழல் இடப்பெயர்ச்சி சீதோசணம் மனிதனை வெவ்வேறு நிறமாக குலமாக பிரிக்கிறது //

                      அப்படி என்றால் மனிதன் படைக்கப்படவில்லை , பரிணாமம் வளர்ச்சி மூலம் வந்தவன் என்பதை ஏற்று கொள்கிறீர்களா ?

    • //இந்தியா போல மத சார்பற்ற துருக்கி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.//

      இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதற்கு இராமன் நிரூபணம் கொடுக்க வேண்டும். சட்டகாகிததை கொடுத்து படித்து பார் என்றால் சரியல்ல. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது..சக்கரை என்று எழுதி நாக்கினால் இனிக்காது….

  2. இந்த கொள்கையை தற்போது ஒருவர் (கேரளாவை சேர்ந்தவர் என்று நினைவு) மாறுபடுகிறார். அவருடைய 10 ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பின்

    • யார், என்ன, எவ்வாறு அந்த முடிவுக்கு வந்தார் என்று விளக்க முடியுமா? சும்ம இப்படி ஜாகிர் நாய்க் போல பேச வேண்டாம்.

      • வாங்க பகுத்து. அது ஏன் பகுத்துக்கள் கேள்வி மட்டுமே கேட்டு கொண்டு இருக்கிறார்கள் ? என்ன டிசைன் இது ?

        நீங்களே தேடுங்கள். உங்களுக்கு தேடி கிடைக்கவில்லை என்றால் என்னிடம் வாருங்கள்.

        • உங்களுக்கு அப்ப பகுத்தறிவு என்பது சுத்தமா கிடையாதா உண்மையார் ? உங்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது! சொல் புத்தியும் கிடையாது.. அப்படி தானே? நீங்கள் என்ன ரோபோவா sayer ? என்ன version நீங்க என்று சொன்னால் அதற்கு ஏற்ப உங்களுக்கு கட்டளையிட்டு வேலைவாங்க முடியுமே! ஒய்யால அதுவென்னடா “பகுத்து”? //வாங்க பகுத்து. அது ஏன் பகுத்துக்கள்//

          • ஒய்யால அது என்னடா ‘பக்த்’ பின்ன ? நீங்க ஏன் போறவனா, வரவனா எல்லாம் ‘பக்த்ன்னு’ சொல்லுவீங்க, ‘பார்ப்பானு’ சொல்லுவீங்க அதெல்லாம் என்ன கணக்குல வரும் ?

            பகுத்து எல்லாருக்கும் இருக்கு என்றது எனக்கு தெரியும். இங்கே பகுத்தறிவாதம் என்றால் என்ன ? முதல்ல அதை சொல்லு அப்பறம் மத்ததை பேசுவோம்

            • பாப்பானை பாபாப்பான்னு சொல்லாம அவனின் வருணசிரம அராஜக கொள்கையை விமர்சிக்காம எப்படி அம்பி பகுத்தறிவை பற்றி பேசமுடியும்? பகுத்தறிவு சிந்தனை செயல்பாடு என்றால் உன்னை போன்ற பார்பன வந்தேறிகளையும் உனது பார்பன ஹ்ந்துதுவா கொல்கைகளையும் விம்ர்சிப்பதில் இருந்து தான் தொடங்கும் என்ற உண்மையை நினைவில் கொள்…உனக்கு பகுத்தறிவு சிந்தனை இருந்தால் உன் பூனுலையும் , மக்களை பாகுபடுத்தும் படுத்தும் பார்பன கொள்கைக்களையும் தூக்கிஎரிந்து விட்டு மனிதனாக மாற முயற்சி செய்வாயா அம்பி உன்ன்மையரே?

              • வாங்க போராளி. நலமா

                // உன்னை போன்ற பார்பன வந்தேறிகளையும் உனது பார்பன ஹ்ந்துதுவா கொல்கைகளையும் விம்ர்சிப்பதில் இருந்து தான் தொடங்கும் என்ற உண்மையை நினைவில் கொள் //

                ஒருத்தன் கமெண்ட் போட்ட அவன் பார்ப்பானா ? என்ன ஒரு பகுத்துஅறிவு ? முடியல …. நான் பார்ப்பனன் என்பதற்கு என்ன ஆதாரம்.

                ‘பார்ப்பனரை’ சொல்லுவது போல் வேற ஜாதிக்காரன் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்.

                facebokல் ஒரு பெண் போராளிகளை கதற விட்டது ‘viral ஆக’ பரவி வருகிறது. அந்த பெண் கேட்டதை இங்கு பதிகிறேன்

                பார்ப்பனர்கள் ஆணவ கொலைகளில் ஈடுபடுவதில்லை ? இது மற்ற ஜாதிகளில் நடக்கிறதா இல்லையா ?

                அதை ஒன்னு சைடு பகுத்து இன்னும் பார்க்கவில்லை போலும்.

                போங்க பாஸு.

                // உனக்கு பகுத்தறிவு சிந்தனை இருந்தால் உன் பூனுலையும் , மக்களை பாகுபடுத்தும் படுத்தும் பார்பன கொள்கைக்களையும் தூக்கிஎரிந்து விட்டு மனிதனாக மாற முயற்சி செய்வாயா அம்பி உன்ன்மையரே //

                எது சார் பகுத்தறிவு ? கொஞ்சம் விளக்குங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்

                ********அதென்ன ‘பகுத்தறிவு பத்திரிகையில்’ ‘வேறு மதத்தை சேர்ந்தவர்கள் குண்டு வைத்தார்கள்’ என்று எழுதி இருக்கிறீர்கள். அது என்ன சார் அது வேறு மதம் ?

        • இவர்கள் எல்லாம் திருவிளையாடல் நாகேஷ் மாதிரி கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும் 🙂

          • Hello Mr. Bellboy, if you have asked about evolution, I could have answered. He said some statement and I just raised my questions. Is it wrong to question? Fine. Let me know if you have any questions about Darwinism or evolution. I will try my best to answer.

        • I know that guy. A stupid who claims that entire solar system is a living entity. For some, such illness can be cured with treatment for others, they may need to stay in lunatic asylum for rest of their lives.

      • நண்பர் ஹிஸ் பீட் அவர்களே ,TruthSayer போன்ற கோமாளிகளுடன் விவாதத்தை வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்… அது நேரவிரையம் மட்டும் அல்ல எரிச்சல் ஊட்டும் செயலும்கூட…. இந்த கோமாளி என்ன பதில் சொல்லியுள்ளார் என்று கவனியுங்கள்… கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ,இல்லாதவர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்குமே பகுத்தறிவு உண்டு என்ற சிறிய உண்மை கூட இந்த கோமாளிக்கு புரியாமல் வாந்தி எடுத்துகொண்டு இருக்கிறார்…. இந்த உண்மையர்….

        • உங்க கோமாளித்தனம் GST விவாதத்துலேயே நல்ல தெரியுது. உங்க வாந்தியை உங்க சகாக்கள் கிட்ட எடுங்க. ஒண்ணு-சைடு பகுத்தறிவாதம் என்னிடம் வேண்டாம்

          • பிஜேபியின் கோமாளியே, உண்மையரே உங்களுக்கு சிந்தனையில் , செயலில் எந்த கட்டுபாடும் இல்லையா? லூசு தனமாக இங்கே வந்து எண்ணத்துக்கு பெனாத்திகொண்டு இருக்க GST யை பற்றி ?GST பற்றி தான் தனி பதிவு வந்து இருக்கு இல்லையா? அங்கே வந்து உன் வீரசாகசங்களை காட்டவேண்டியது தானே உண்மையரே? GST பற்றி பல கட்டுரைகள் வினவில் வந்து இருக்கு… அங்கே வந்து உமது நச்சு கருத்துகளை வக்கணையாக கூறலாமே நீர்!

            https://www.vinavu.com/2017/07/12/how-gst-affect-small-business-report/

            https://www.vinavu.com/2017/07/12/how-gst-affect-small-business-video/

            https://www.vinavu.com/2017/07/11/ndlf-demonstration-against-gst/

            லிங்க் எல்லாம் கொடுத்து இருக்கேன்… வா வந்து உன் கருத்துகளை எடுத்துவைக்கவும்…

            • வாங்க கம்யூனிச கோமாளியே. அதிமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஏற்று கொண்டு, 16 ஆண்டுகள் கழித்து வந்திருப்பது தான் இந்த GST

              இது இறுதி வடிவம் பெற ஒரு 2 ஆண்டுகள் ஆவது ஆகும் இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தெரிந்த விஷயம் தான்

              நான் வாந்தி எடுப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் already எடுத்த வாந்திக்கு பதில் சொல்லுங்கள்

              1) நீங்கள் அம்பானியாகவோ, அதானியாகவோ இருந்தால் எனக்கு எவளோ ஷேர் கொடுத்து இருப்பீர்கள் ?

              2) ஏன் பெட்ரோல் மற்றும் டீசல் ‘GSTகுள்’ வரவில்லை ?

              தான் நினைப்பது (அல்லது) எழுதுவதே சரி என்கிற உங்கள் அறிவாளித்தனத்தை ennavendru solla

              இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். பிறகு இருவரும் வாந்தியை மாறி மாறி எடுப்போம்

              வினவு ஆசிரியரே கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதுங்கப்பா. ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்

              ஆங்….வரட்டா

              • அட லூசு வெண்ணையே, பையித்திய கார உணண்மையரே !(செல்வம் என்னை மன்னிக்கவும்) உனக்கு உண்மையிலேயே கிறுக்கு தான் பிடித்து இருக்கு… உன் மரமண்டைக்கு எவ்வளவு கூறினாலும் புரியாதா? இந்த பதிவு எந்தனை பற்றியாவது தெரிந்து தான் உன் பின்னுட்டங்களை போடுகின்றாயா ? இல்லை சோமபானம் குடிச்சிட்டு இங்கே வந்து வாந்தி எடுகின்றாயா? தூ…. துப்புகேட்டவேரே! GST பற்றிய பதிவில் இந்தனை பற்றி உன் கேள்விகளை பற்றி தெளிவாகவே எழுதி யுள்ளேன்… உன் கண்ணு நொள்ளையா? இல்ல கண்ணை மூடிக்கிட்டு தான் நீ பேசுவீயா? சம்மந்தம் இல்லாமல் இங்கே GST பற்றி பதிவு போடும் உன்னை அனுமதிக்கும் வினவை தான் குறை சொல்லணும் என்று நினைகின்றேன்… வா GST பதிவில் நான் எழுதியுள்ள பதிலுக்கு பதில் சொல்ல துப்பு இருக்கா சொல்லு பார்க்கலாம்…

                https://www.vinavu.com/2017/07/11/ndlf-demonstration-against-gst/

                பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இந்த பொருட்கள் எல்லாம் GST வரிவிதிப்பின் கீழ் வந்து இருந்தால் எவ்வளவு அதிகபச்சம் வரி வந்து இருக்கும்? அதிக பச்சம் 28% . ஆனால் இவைகளுக்கு என்ன வரி என்றாவது தெரியுமா? 50%க்கும் மேல்! இப்ப தெரியுதா மோடி எப்படிஎல்லாம் மக்கள் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார் என்று?

                Taxes exceed actual cost of petrol; Rs 31.20 in retail price of Rs 60.70 in Delhi is tax

                • //அட லூசு வெண்ணையே//
                  செந்தில்குமரன் ,படித்து படித்து வயிறு புண்ணானது.
                  எதற்க்கு இப்படி சம்மந்தமில்லாமல் பேசுகிறார்கள்
                  இதற்க்கு அவர்களின் தலைமையில் தனி பயிற்ச்சி குடுத்திருப்பான் களோ
                  டிவியிலும் சரி பத்திரிகைகளிலும் சரி நேரில் இது போன்றவர்களிடம் பேசினாலும் சரி இதே சம்மந்தமற்ற பேச்சுத்தான்.
                  சபையை குழப்பி ஆட்டத்தை கலைக்கவென்றே இவர்களுக்கு முதல் பயிற்ச்சி கிடைக்கும் போல.
                  சரியோ தவறோ விவாதம் என்றால் அதற்க்கு பொருத்தமாக எதையாவது பேசிவிட்டு போகட்டுமே..
                  நம் கவனத்தை திருப்புவது வேறு எங்கெங்கோ இழுத்துபோய் பேச வந்ததை நம்மை மற்க்க செய்வது
                  ப்ரிணாமம் பற்றிய உரையாடலுக்கும் ஜிஎஸ்டி க்கும் என்ன சம்மந்தம்?

                  • விவாதத்தை சிதைப்பது தானே காவி வானரங்களின் நோக்கம்! அதனை தான் இவர் முறையாக செய்கின்றார்….இத்தனைக்கும் பரிணாம கொள்கை மீது எல்லாம் ஹிந்துதுவகளுக்கு பெரியதாக யாதொரு யோசனையும்-அறிவும்@ இல்லாத நிலையில் இவருக்கு இவரின் பிஜேபி ஊடக தலைமை விவாதத்தை சிதைக்க செல்லிகொடுத்த முறையை தவறான இடத்தில் பயன் படுத்திவிட்டார் என்றே நினைகின்றேன்….

                    @அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவாயினும் அது எங்கள் இதிகாசதிலேயே உள்ளது, திப்பு கண்டுபிடித்த ராக்கெட் எங்கள் மகாபாரதத்தில் உள்ளது என்றும், பிள்ளையாருக்கு அன்றைக்கே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நிருபித்தாயிர்று என்று பெனாத்தும் கூட்டம் தானே இந்த ஹிந்துத்துவா கூட்டம்…

                    • According to ‘Sindhanai Sei’ we (human beings) are APEs too

                      You and Meeran Sahib forgot one more important info from religious books

                      Please find the missing one and post it. Better luck next time

    • நீங்கள் கூறுவது இந்த நண்பரை என்று நினைக்கிறன்.

      http://zeenews.india.com/science/indian-professor-from-kerala-claims-he-can-prove-charles-darwins-theory-of-evolution-wrong-watch-video-2007857.html

      அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்றால், இது gishgallop. பரிணாம கொள்கை அறிவியல் அடிப்படை கொண்டு செவ்வனே சென்று கொண்டு இருக்கிறது. இவர் மற்ற fundamentalist போலவே, மதத்தையும், அறிவியலையும் ஏதோ விபரம் தெரியாத ஆட்களிடம் ஓட்டி கொண்டு இருக்கிறார். அவ்வளவே.

      • சிந்தனை செய் அவர்களே வணக்கம்

        நானும் அவருடைய ஒரு சில விஷயங்களை பார்த்தேன். ஆனால் நான் அவரை மட்டும் வைத்து சொல்லவில்லை

        வேறு ஒரு சில தகவல்களை மேலோட்டமாக தான் படித்துள்ளேன். அவற்றை நான் ஆதாரங்கள் என்று சொல்லவில்லை மாறாக கருத்து வேறுபாடு உள்ளது அறிவியல் ரீதியாக

        • If you just read without indepth understanding, then everything would seem like scientific argument. But the truth is they are not. Hard science is not always understood by casual reading. If you are really serious about knowing more about evolution, I will suggest you some good books on the same.

            • Greatest Show on Earth by Richard Dawkins
              Why Evolution is True by Jerry A Coyne

              If you are very new to science, you can read Bill Bryson’s “A Short History of Nearly Everything”. That is not a great book and that is not about evolution, but you can get a taste of science with some interesting stuffs.

        • I’d be very happy to discuss this genleman and his claims or any other research, if you would like to Mr. TruthSayer. I have looked into most such claims and have not found any substantial ones. I very well could have missed it. So if you would like to, we can certainly have a chat about the particular research/news and the scientific disagreements. If you would like to chat here or offline or some messenger like Whatsapp, please do let me know.

            • That site is run by fundamentalist Christians. That itself won’t undermine its credibility, but there is a good chance for them to twist the facts or spread lies to support their worldview. I have gone through the home page and one more page. They lack proper understanding of evolution. They are just writing “scientists have proved this” and “scientists have proved that” but who, where and what part is missing. Also the way they have written clearly shows that they are confusing too many things. As a highlight, they are claiming that Shroud of Turin is proof for Jesus’ resurrection. That much is their intellectual honesty.

            • Mr. Truthsayer,

              This will be a bit of rant in some places, so i apologize in advance for that. I am writing it at the end of a very long day, so my day got the better of me at some places. Apologies for that.

              There are so many lies and falsehoods on the website i dont know where to start. Lets begin with the most basic one. Evolution doesnt deal with chance. Evolution does not take place by chance, in fact, its the exact opposite. The traits that are selected by natural selection are ones that give better chances of survival. There is absolutely no chance here. If a mutation increases survival chance by even 1%, then thats what gets passed on. Lets take the simple example of animals in colder regions. If evolution is pure chance, then what you would expect to see is a mixture of all sorts of animals. Ones with thick fur, one with absolutely no fur, ones with dark fur and so on. But that is not the case. Animals in a colder region with lighter and thicker coats have better chance of survival. Therefore, we see those traits dominant in the population, being selected over generations.

              They claim god has 9 billion years to form before our sun came into existence and therefore, there very well could be a god. Lets ignore the obvious problem of what do we mean by god here and all its associated problems. That still leaves us with a very big problem. What evidence do we have for god and how he formed? We have tons and tons of evidence for evolution from DNA to fossils to observable evidence to paleontology to bio-engineering and on and on. There are literally mountains of evidence to back up evolution and we can use the framework to predict and the predictions can indeed be fulfilled. On the other hand, we have literally zero evidence for god, how he formed, how he was when he was formed, how did he grow and how we became supernatural. Sure in 9 billion years anything could have happened and a supernatural god could have been formed. But so could have supernatural planet sized pixies or the Great Noodle Monster. There is about the same evidence for all 3 being real.

              After that, there are tons of false claims but ill just go over two more. The claims about Painter and the 24 chromosome pairs for humans. Yes, when the techniques and tools were not the best, they made an error. Guess what? When we got better tools, we revised it. Thats how science works. This has happened and continues to happen in science. If the theory doesnt fit the evidence, science changes the theory. This has happened in everything from Newtonian model of planets being replaced by General Relativity when they encountered the problem of Mercury’s orbit. It has happened with the ulcer is caused by spicy food theory. Scientists proved ulcers are caused by bacteria so science changed the fact about ulcers. Science goes where the evidence leads. And theories should be updated if new facts come to light. Thats not an issue, thats a fundamental strength of science.

              Oh and the 23 compared to 24 chromosomes, didnt throw a wrench in apes and humans having common ancestor. Because now, with the better tools, we could actually pinpoint where the two chromosomes from apes have fused into one in humans. Human second chromosome is actually a fusion of two chromosomes from apes. Comparing the sequences of chromosome 2 and the two unfused chromosomes from chimpanzees, you actually find them identical with very minor differences. And finally, they give the dog example saying scientists had no trouble saying dog had 36 so why the confusion for humans. This is another blatant flasehood since dogs werent studied until much, much later with better tools.

              To add on to this, they claim there is no evidence of chromosomal change or fusion in any other mammal. The thing is we can see it in multiple animals from mice to cows, horses and tons of other animals. Ill leave the links at the end of the post.

              I can go and debunk the rest too, in just one sentence. All the comparison between apes and humans, ape and human DNA is absolutely wrong. You know why? We didnt evolve from apes. We too ARE apes! The other great apes(chimpanzees, bonobos) and us descended from a common ancestor. So the comparison itself is wrong because they are not our ancestors. Therefore, of course we would have substantial differences from them since we are two branches from a same ancestor.

              I will stop here. Hope that answered some questions you had. If you have any more, please feel free to ask. Lets have a conversation. I would much prefer that to me semi-ranting about utter falsehoods from a website. I would much prefer for this to be a conversation since i actually enjoy talks 🙂 Have a great day!

              Links:

              https://www.youtube.com/watch?v=oweUN-GaN3M

              https://academic.oup.com/mbe/article/26/1/199/973911/Horse-Domestication-and-Conservation-Genetics-of

              http://www.indiana.edu/~ensiweb/chrom.surviv.html

              https://en.wikipedia.org/wiki/Chromosome_2_(human)

              https://www.ncbi.nlm.nih.gov/pubmed/17026745

              • Dear Mr Sindhanai Sei,

                Thanks for your polite and clear response. I’ll certainly go through the links posted by you as I just started on evolution

                // The other great apes(chimpanzees, bonobos) and us descended from a common ancestor.//

                I’d like to go by ‘Logic’ here and not science. Because we cannot go back and trace what happened before 4.5 billions years ago

                Humans and Apes are derived from Common Ancestor. This is what science says. My question is

                Why ‘Common Ancestors’ cannot be up by ‘1 Level’? means I assume the following

                ‘Ancestor I’ —> Apes (I assume ‘apes’ are derived from ‘Ancestor I’)

                ‘Ancestor II’ —> Human (I assume ‘humans’ are derived from ‘Ancestor II’)

                ‘Ancestor Main’ —> ‘Ancestor I’ and ‘Ancestor II’ are derived from ‘Common Ancestor’ ie Ancestor Main

                In my assumption (literally) there’s no direct ‘Common Ancestor’ for ‘Apes’ and ‘Humans’

                Instead ‘Common Ancestor’ (ie ‘Ancestor Main’ via micro evolution) produced ‘Ancestor I’ and ‘Ancestor II’. From ‘I’ and ‘II” apes and humans were evolved RESPECTIVELY

                How does ‘Science’ deals with the above scenario? Does ‘Science’ defies the assumption which I mentioned above?

                Yesterday I was going the link mentioned below which questions the theory devised ‘Jerry A Coyne’ which accepts ‘MicroEvolution’ (with no doubt) and questions ‘Macro evolution’.

                http://scienceagainstevolution.info/v13i8f.htm

                Please shed some light. Thanks again

                • //I’d like to go by ‘Logic’ here and not science. Because we cannot go back and trace what happened before 4.5 billions years ago…. How does ‘Science’ deals with the above scenario? Does ‘Science’ defies the assumption which I mentioned above?//

                  One thing you have to remember is, go far back enough and you can find a common ancestor for any two species/genus/family, etc. After all, we are all evolved from single cell organisms whose genetic code we still carry. With that in mind, lets investigate your claim.

                  What you are proposing here i.e. Ancestor I -> Apes, Ancestor II -> Humans and Ancestor
                  Main -> Ancestor I and Ancestor II. This is called a clean split. That is both Ancestor I and Ancestor II have split off cleanly from Ancestor Main and that their respective branches continued to evolve distinctly. This could certainly be the case. It has happened in nature plenty of times.

                  However, when we look at the evidence of human evolution, especially the DNA, we do not see such a clean split. Evidence suggests that there was complex hybridization and speciation between proto-chimpanzees and proto-humans i.e. our human ancestors and ape ancestors were still interbreeding while starting to diverge. Imaging something like a cross between a donkey and a horse. The only difference is that the offspring is fertile rather than sterile.

                  From there on out, we both continued to diverge and speciated into different species, over millions of years. However, there is also recent evidence to suggest that a reverse-hybridization event might have taken place after our ancestors diverged. That is, the proto-humans and proto-chimpanzees who diverged later intermingled and started to breed and from there on out, branched out again. The X chromosome diverged much later suggesting that human ancestors and ape ancestors certainly had the ability to interbreed. Therefore, with this evidence we can conclude that it is not a clean split like you proposed. Rather humans and apes speciated and even hybridized on their respective paths to current situation. This is not something new or a special case either. Modern Humans themselves for example, i.e. homo sapiens, have interbred with Neanderthals. 1-4% of DNA from all humans today, apart from Sub-saharan africans are of Neanderthal descent. The same process has occurred in multiple other species too, so we are not an isolated case either.

                  // esterday I was going the link mentioned below which questions the theory devised ‘Jerry A Coyne’ which accepts ‘MicroEvolution’ (with no doubt) and questions ‘Macro evolution’.//

                  This is part of a tactic used by evolution deniers to confuse people. Micro and macro evolution, missing link all stem from a fundamental flaw in understanding evolution. Usually micro evolution is defined as a very small change in a single or population of organisms while macro evolution is defined as the change in characteristics on a macro scale or formation into different species for example. To give an example, micro evolution will be defined as something like a fly evolving darker wings and macro evolution will be defined as the fly completely evolving into a different species or dogs coming from wolves.

                  The sleight of hand comes here in the fact that macro evolution is just an accumulation of micro changes. For example, a wolf doesnt just give birth to a dog one day. Wolves will always give birth to wolves. But these wolves can be slightly different from their parents in just something very simple, lets say their fear of humans. For ease’s sake lets call them Wolf A and Wolf B. Wolf B is a lot less afraid of humans compared to Wolf A. Now Wolf A and Wolf B share a lot of common genetic material and therefore will be able to interbreed. This is an example of micro evolution, a very small change in a specific population with very small effects.

                  Now lets say a group of Wolf B starts hanging around human settlements since they are not very afraid of them. They start to scavenge the food that is leftover. Now their aggression has to go down even more since they dont want to be chased away from their food. Now these wolves, will be Wolf C. Now Wolf C will still be able to interbreed with Wolf A. Now this process goes on and on for generations and the traits that are favored in each generation means each subsequent one i.e. Wolf D will have all the changed traits of Wolf C and will have newer ones themselves. Eventually, this gradual amount of changes will start to accumulate and lets say in Wolf Z, it will still be able to breed with Wolf Y and maybe even upto Wolf N. But Wolf A and Wolf Z wont be able to interbreed, since the amount of genetic changes accumulated over time have become too big to let them interbreed. They are still wolves but different species now.

                  This phenomenon occurs very commonly in nature and is one example of macro evolution i.e. a genus or a specific animal in an area diverging via speciation. Species like this is called Ring species. This is why things like i accept micro but dont accept macro evolution or where is the missing link are completely meaningless most of the time. I have linked a Youtube playlist below by a reputed science communicator that goes into the necessary details about evolution. It is very, very simplified but should be enough to give you a good understanding. If you have any additional questions, please do feel free to ask.

                  Links:

                  Our origins made easy – https://www.youtube.com/watch?v=wg1fs6vp9Ok&list=PL82yk73N8eoX8RpvQfjdupAKFWKjtMhTe

                  https://en.wikipedia.org/wiki/Speciation

                  https://www.primates.com/chimps/humans-chimpanzees.html

                  https://en.wikipedia.org/wiki/Archaic_human_admixture_with_modern_humans

                  Crash Course – Human evolution
                  https://www.youtube.com/watch?v=UPggkvB9_dc

                  https://en.wikipedia.org/wiki/Ring_species

                  • I did not expect such a quick response 🙂 as I am in the process of going through the links provided by you

                    This debate can be never concluded If I am not wrong. Reason why is say that there is no ‘observable evidence’ for a change in kind. This video talks about

                    https://www.youtube.com/watch?v=p1ghYX9xZ9s

                    In addition to that, I found the following interesting

                    https://www.ucg.org/vertical-thought/prove-evolution-is-false-even-without-the-bible

                    • Mr. Truthsayer,

                      Sorry, i beg to differ. This discussion can certainly be concluded. All it takes a rigorous application of scientific method to both sides. And whichever one that holds up or doesnt need to lie or twist facts, that ultimately will stand as science. And in the 100+ years the debate between creationism and evolution has been going on, one side has constantly been successful in the rigorous application of the scientific method. That is evolution.

                      Now, lets move on to your other points in the post. The video claims there has been no ‘observable’ evidence for a change in kind (Im using ‘observable’ in quotes here because as always, this is another red herring from creationists. You will see why by the end of the discussion). Lets completely ignore the fact that the definition of kind is insanely vague and can range anywhere from species to family in taxonomy. Lets put emphasis on the claim of change in kind.

                      As we know, evolution by natural selection is a very slow process. It takes multiple, hundreds, even thousands of generations for a change to become dominant in a population and will take hundreds more for the species to diverge by speciation to form an entirely new species. We are talking about the scale of hundreds to millions of years here, depending on the creature in question. Now do we have any method of data recording that stretches back that far? Absolutely not. So until such a method is invented, there is only one possibility to investigate any claims with regards to how life became what it is now by applying the scientific method:

                      1. We have to reconstruct the path from past evidence i.e. fossils, DNA, paleo-geology, paleo-biology, etc. Use the data we gather from past, devise a hypothesis. Apply the hypothesis to any and all found evidence and test it out in smaller living creatures e.g bacterial colonies or fruit flies where hundreds of generations can be observed within a human lifespan. If the hypothesis passes all the tests, then even without waiting to observe on a scale of hundreds or millions of years, we can strongly conclude that the hypothesis has passed the scientific test and can be accepted as an established scientific theory. The minute the framework cannot explain any data or when we have any data that contradicts the framework, it gets tossed out.

                      This is not completely unheard of in science or in our life either. Lets see some examples of this both in science and real life:

                      1. If a family has branched off 6 generations ago i.e. two brothers who went to separate places in 1800s and settled there, lets say, one in Madurai and another in Malaysia. Now how can we go about determining they are related? We have zero ‘observable’ evidence of the great-great-great-great-grandfathers being brothers. So we can take DNA samples. We can just compare the Y chromosome for male descendants and mitochondrial DNA for females. We trace back the lineage and if they are indeed related, then they both would have DNA from same set of parents. So we can conclude both these families were branches some X generations ago. The same logic can be applied to fossils too.

                      2. Now lets see a real life example of something having no ‘observable’ evidence but has such strong scientific backing that we can be 100% sure it is valid even without observation. Consider the orbit of Pluto. Pluto was discovered in 1930. Yet we know its orbital period around the sun is 248 years. Now we havent ‘observed’ Pluto completing an orbit around the sun. There is absolutely no ‘observable’ evidence to claim that Pluto’s orbital period is 248 years. Still it is an established scientific fact. How is that? We calculated Pluto’s orbital period by our various collected data of the solar system such as our observation of other planets, observation of Pluto’s movement, the effect of other planets on Pluto and so on. We collated all these data into our existing framework of planetary motion i.e. General relativity and calculated the orbit duration of Pluto to 248 years. And the observations on the smaller scales of tens of years do match our prediction. Therefore, we can conclude that the fact that Pluto’s orbital period is 248 years as a scientific fact, even without ‘observable’ evidence.

                      Now, lets see another example of how a similar issue that was paraded by creationists just a decade or so as one of the fundamental problems that evolution can never address, was actually solved. The evolution of whales and the cetacean family in general. Even though these animals live in water, they are not fish. They are aquatic mammals. Eventhough they make look like fish in appearance, they are absolutely unlike fish in any other way i.e. anatomically, genetically, morphologically, etc. Evolution tells us that mammals came from reptiles and were land dwellers. We didnt find any evidence of a fish even remotely acquiring mammalian traits. Therefore, by the evolutionary framework, the only logical and possible conclusion was that whales evolved from land dwelling mammals that went back into water.

                      But there was one slight problem. There was absolutely no evidence of it in the fossil record. There were no part land-dwelling, part-sea dwelling mammal that the whale family could have evolved from in the fossil record. But biologists were confident and predicted from the collected data that the ancestor we were looking for was a four legged mammal with thick bony wall around the outer ear. Having trouble like this is not uncommon since changes like this take place in a specific geographic location and its basically trying to narrow down from the entire world to a specific location geographically by collecting data on where to look. Science is expensive and we cant just go digging everywhere. In the meantime, the creationists had a field day and were mocking the scientists with their predictions and the hypothesized creature. And after searching for a while, the scientists actually found the location where this evolutionary change happened. It was in the Indus River valley. They uncovered a series of fossils of a four legged land mammal that gradually evolved into an aquatic mammal and adapted its features to be more suited to aquatic environments rather than land (such as modifying of inner ear, modification of front legs into flippers, etc.). And once the fossils were found and studies were conducted in various branches of science independently, it was proven beyond doubt that these fossils did indeed represent the ancestors of the whales.

                      The reason i give you this example is to show you how science actually works and how the ‘observational’ evidence that they use is absolutely ridiculous. The evolutionary framework is strong much similar to our planetary understanding and has stood upto test time and time again. So if you see anyone claiming ‘observational’ evidence for macro evolution, feel free to laugh in their face. Its that absolutely meaningless.

                      The second link discussion is in another post below since i wanted to keep the topics separated. As always i included some links below. Feel free to go through them.

                      Links:

                      https://www.youtube.com/watch?v=lIEoO5KdPvg

                      https://www.youtube.com/watch?v=q9a-lFn4hqY

                      http://evolution.berkeley.edu/evolibrary/article/evograms_03

                    • Now, lets take a look at the second link.

                      Ill try and go through point by point but this wont be exhaustive. Ill try to be as exhaustive as i can. Ill quote the point one by one and then submit the scientific evidence or if its a misunderstanding, ill explain it and clear it up.

                      1. No previous ancestors of these arthropods have been found.

                      To support this claim, the writer quotes a passage from a book in 1982. This is not written by a scientist but a creationist TV script writer. He has absolutely no scientific credential and has fundamental flaws in his science understanding. But lets all ignore that. Lets just take the claim. So have we found no arthropod ancestors i.e. proto-arthropod? Nope, thats a blatant lie. There is an entire family of animals discovered in the Ogygopsis and Burgess shale.

                      http://paleobiology.si.edu/burgess/anomalocaris.html

                      2. The watchmaker argument

                      This doesnt carry weight since the crux of the argument is that there are no previous models found. As shown above, we do have samples of previous models and therefore the argument becomes void.

                      To add just a bit more, this is one form of the teleological argument that has been used in many forms. Watches need a watchmaker, therefore world needs a creator. Painting needs a painter, therefore world needs a creator, and so on and on. This is very widely used by creationists but it is a very flawed argument. Others have done an excellent job on identifying the issues with the argument and why it cannot be applied for creation of life, so ill just link them here.

                      https://www.youtube.com/watch?v=7e9v_fsZB6A

                      https://www.youtube.com/watch?v=PHmjHMbkOUM

                      https://www.youtube.com/watch?v=tDdn0UPDjmk

                      3. Thousands of transitional forms needed are still missing in the fossil record

                      Nope. Absolutely wrong. There are literally millions of transitional forms found in the fossil record. One example is the whales i showed above. You can pretty much pick any animal and find the origins of its evolution just on Wikipedia. To support this they quote another passage from another book. And they explain what they are looking for clearly:

                      “There are no fossils of creatures whose scales were changing into feathers or whose feet were changing into wings, no fossils of fish getting legs or of reptiles getting hair. ”

                      There are two problems with this. One, a change of this scale doesnot occur in one generation or one transition. It will take many gradual subtle changes to get the final product of scales to feathers for example. And in some forms, the scales/feathers might stay the same since it needs to adapt to a different environment in a different trait such as weight, bone structure, body structure, etc. This is a fundamental twisting of what evolution is and a purposely spread falsehood. And two, these transitional forms HAVE been found. The creationists dont want to accept it since they have a fantasy of how evolution works that they are hanging on to compared to how evolution works in nature.

                      4. A for Assumption

                      Once again, we see the falsehood about transitional forms. After that we see another falsehood about how evolution is ‘just a theory’. They conclude by saying evolution does not fit all the evidence but offer none to support the case. The ones offered before have been proven false.

                      5. Chicken or the egg. How can be one without the other

                      This question has been answered. Proto-chicken and proto-rooster combined to form an egg that had mutations to give rise to a slightly different animal. Over generation, this gene spread and grew and eventually gave rise to the chicken. Therefore, the egg came first. This is once again, how evolution works. The child is slightly different from its parent whose different/changed gene then gets passed along. When this procreates and spreads, it gradually acquires more changes becoming an entirely new species over many hundreds of generations. The following link explains it in a simplified manner:

                      https://www.mnn.com/earth-matters/animals/stories/finally-answered-which-came-first-the-chicken-or-the-egg

                      6. Symbiotic relationship

                      This is again well understood. It is called co-evolution. The co-evolution of pollinators and flowers and the constant arms race in nature between different flowers and even between flowers and pollinators is nothing short of amazing. Lets start with something simple. Plant gets a mutation to produce nectar or it observes that using insects to spread pollen is more efficient than just making tons of pollen and using wind. Making pollen is expensive so the lower it can, the better. But if insects are the best option, then plants need ways to attract them to come to them. They do this by multitude of ways. The most common is giving something in return which in most cases is nectar. Plants start producing nectar by mutation and an insect tastes it. It likes it so the plant’s pollen with the nectar producing mutation is spread to more and more plants giving rise to more plants with nectar. Since nectar is abundant now, the insects that better gather nectar and can better help in spreading pollen of those plants get selected for. Now this results in plants developing better adaptations to attract insects to them instead of the neighboring plant such as more or sweeter nectar, a short but broad flower to let many insects feed, developing spots to point to the nectar pouch, mimicking female insects, etc. Insects inturn evolve adaptations to better use those flowers and thereby they co-evolve, helping each other and evolving together.

                      http://evolution.berkeley.edu/evolibrary/article/evo_33

                      https://web.stanford.edu/group/stanfordbirds/text/essays/Coevolution.html

                      And just to add a cherry on top, the two may not always continue to co-evolve in a co-operative manner. Its just one possibility. Sometimes co-evolution can also be driven by predator-prey or robber-defense. In the above example, another insect may start to steal the nectar without pollinating by drilling holes at the bottom or evolving longer suckers to just take the nectar without pollinating. The plants will evolve defenses to counter this by creating thorns or having long, deep flowers with nectar at bottom. These have all been observed in nature especially in isolated island habitats.

                      Or even better, other plants may start to mimick the flowers loved by the insects. These dont offer any nectar but cheat the pollinator and use it to spread pollen. This in turn will drive pollinators to evolve and also drive the original plants to evolve so that they dont loose their pollinators. There is a constant arms race going on in nature especially in co-evolution which is one of the most fascinating displays of natural selection. And remember when i say, plants or pollinators evolving to do different things, it is of course done by natural selection over multiple generations and not just adapting immediately the next day. This TED talk goes into more details about the co-evolution in nature:

                      https://www.ted.com/talks/jonathan_drori_the_beautiful_tricks_of_flowers#t-284897

                      7. Engineering

                      This is another tired old argument and most of the time another form of teleological argument. No, life and living things are not exquisitely designed. There are tons and tons of examples we can see in nature that completely refutes this point. Humans have a blind spot in their eye, our sexual organ doubles as the excretion organ, our kidneys are held up by very loose holders which come off unholstered easily with just some shaking, our breathing and food intake is using the same pipe which leads us to choke easily, our adrenal glands are too big for our bodies, the most important organ in our body, heart is only one. There are millions of other such stupid ‘design’ that we can point out which any half decent engineer wont do. But perhaps the most striking example is the laryngeal nerve.

                      The laryngeal nerve is a nerve that runs from the base of the brain stem to the larynx. If it is designed what would be the path to take. We will of course take the direct route to the larynx since the end point is very, very close to the start, irrespective of animals. But you know how it is? In humans, it goes all the way down to our heart, loops around one of our main arteries, loops back and changes direction and then goes back to the brain stem. Thats not elegant or engineered design at all! Atleast in humans it can be forgiven since its maybe a two feet of extra length. But its the same in a long necked animal like the giraffe! The laryngeal nerve runs all the way down the giraffe’s neck, wraps around the heart, loops back and runs all the way up the neck again to get to the larynx. How is a detour of 5 meters in any way engineered? But it is perfectly what you would expect from evolution. The reason being the path the nerve takes is the most direct route in our fish like ancestors from which all modern tetrapods came from! In those fishes, it would have traveled from brain, past the heart and to the gills. This is what we see in modern fishes too. The ridiculous laryngeal nerve is just another artifact from our long history of evolution and is a left over since it wasnt a trait that was pressured in anyway. This video actually explain it in more details with the dissection of a giraffe. Please do take a look.

                      https://www.youtube.com/watch?v=cO1a1Ek-HD0

                      There are many more examples that can absolutely falsify any claim of engineering or intelligent ‘design’.

                      And that brings us to the end of the article. Its a lot of stuff and i apologize for the info dump. I just got in the mode and it just grew this big before i realized. Apologies for that ? Please do take your time and give it a read. I wont be online over the weekend. So if you got further questions or any topics that you are interested in, we can pick it up from Monday. Have a great weekend!

  3. There is no justification in bringing India and its mythology here; Indians have learnt to work around the mythology and scientific findings. There has been no attempt to remove Darin from our books. If Muslims are doing something retrograde, it is fashion to bring Hindus also; that is “secular style”. Keep it up

    • Recent moves to add pseudo-scientific things to text books and claiming that evolution is already part of our dasavatar myth etc are classic symptoms of fake pride. Plastic surgery to Ganesh, pushpaka vimana, celibate peacock, oxygen exhaling cow, text books saying eating meat makes one to rape and commit crime etc are all part of your glorious Hindu tradition.

      Even one can claim that Bible or Koran talks about evolution or big-bang. The order of Biblical creation myth corresponds with evolution. I have seen some Islamic preacher interpreting some Koran verses that talks about big-bang etc.

      These nations are ruined because they are ruled by religious nutjobs. India under BJP rule is just starting to dive in to the same path. Good luck. Soon Darwin will be replaced by Dasavatar and then humans will be “vedic-scientifically” classified as four species Homo brahmana, Homo shatriya, Homo vaisya and Homo sudra. Then there are sub-human species like Homo panjama, Homo mleccha. WOW!! Good going bro!

  4. சிந்தனைசெய் அவ்ர்களே
    உங்களின் இறுதி பதிவையும் வானியல் பரிணாமத்தின் வீடியோவையும் பார்த்தேன்.இரண்டு லிங்க்கிற்க்கான தள முகவரி அளித்திருந்தீர்கள். அதை இன்னும் போய் பார்க்கவில்லை.கண்டிப்பாய் பார்க்கிறேன்.
    விஞஞாணத்தின் மீதும் பரிணாம கோட்பாட்டின் மீதும் நம்பிக்கையற்றவனோ ஆர்வமற்றவனோ நான் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
    அவைகளின் மூலமாய் உருவான கேள்விகளையே உங்கள் முன் வைத்து தெளிவு பெற விரும்பினேன்.
    //அறிவை விரிவு செய்து மேலும் மேலும் செழுமை அடைந்து மதம் என்றும் கடவுள் என்றும் போலிகளை நம்புவதை விடுத்து மதமென்ற அடையாளம் துறந்து மனிதாய் அனைவரையும் கை கோர்க்க வைப்போம்// என்ற ஆர்வம் உங்களுக்கு.

    இவ்வளவு நல்ல சிந்தனையாளர் எப்படி படைத்தவன் இல்லாமல் படைப்புகள் உண்டாகி இருக்கும் என்று நம்புகிறார்?
    எந்த பரிணாமும் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி ஏதோ ஒரு புள்ளியில் முடிய வேண்டுமே அதை இவர் சிந்திக்க கூடாதா?
    “ஒன்றிலிருந்துதான் இன்னொன்று. சூனியத்திலிருந்து எதுவுமில்லை”
    இதுதானே ஐன்ஸ்டீனின் தியரி.சிந்தனைசெய் என்ற சிந்தனைக்கார மனிதனின் சிந்தனை இதை ஏற்று, நிச்சயம் இந்த அண்ட சராசரங்களியும் படைத்து அவற்றை துல்லியமாய் நிர்வகித்து வரக்கூடிய ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாதா?
    என்ற ஆர்வம் எனக்கு.
    அவரவர், அவரவர் அறிவு சிந்தனையின் படி பயணித்துக்கொண்டே இருக்கிறோம்.எதை யார் ஏற்ப்போம் என்பதை காலம் முடிவு செய்யும்.
    ஆனால் உங்க்ளோடு செய்த கலந்துரையாடல் என் அறிவை பலபடி உயர்த்தி இருக்கிறது என்பது உண்மை.

    • //விஞஞாணத்தின் மீதும் பரிணாம கோட்பாட்டின் மீதும் நம்பிக்கையற்றவனோ ஆர்வமற்றவனோ நான் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.//

      நீங்கள் அவ்வாறு என்று நான் எங்குமே கூறவில்லை மீராசாஹிப். மீண்டும் சொல்கிறேன், தங்களுக்கு என்ன கேள்விகள் என்றாலும் தாராளமாக கேட்கவும். என்னுடைய முக்கிய நோக்கம் அறிவியல், அறிவியல் ஆர்வம், மக்களிடம் அறிவியல் சேர்ப்பு போன்றவை தான். மற்றது அனைத்தும் சும்மா side effect. என் world view ரொம்ப எளிது சார். எது உண்மையோ அதை நம்பவேண்டும். அவ்வளவு தான். அதற்க்கு நம்மிடம் இருக்கும் மிக சிறந்த கருவி, அறிவியல். இருப்பதை அறிவியல் கொண்டு அலசுவோம். அதன் முடிவை எவ்வளவு ஆய்வுக்கு வேண்டுமானாலும் உட்ட்படுதலாம். அறிவியல் சோதனையை எது வெற்றிகரமாக கடக்கிறதோ அதை ஏற்ப்போம். அவ்வளவே. இதில் உங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இருக்காது என நம்புகிறேன்.

      //இவ்வளவு நல்ல சிந்தனையாளர் எப்படி படைத்தவன் இல்லாமல் படைப்புகள் உண்டாகி இருக்கும் என்று நம்புகிறார்?//

      இதில் மாற்று கருத்து இல்லை. படைப்பு என்று இருந்தால் படைத்தவன் இருக்க வேண்டும். ஆனால் உயிர், உலகம், அண்டம் எல்லாம் படைப்பு என்று எவ்வாறு முடிவு செய்தோம்? ஒரு ஓவியமோ, கட்டிடமோ இயற்கையாக உருவானதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்று வரை நமக்கு தெரிந்த அனைத்து ஓவியமும், கட்டிடமும் ஏதேனும் ஒரு படைத்தவன் இருக்கிறான். எனவே அவை படைக்கப்பட்டன என்று முடிவு செய்வது சரி. இதே போல நம் அண்டத்தை எடுத்து கொள்வோம். மனிதன் படைக்க பட்டான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம்? இன்று வரை இல்லை. சரி ஏதேனும் உயிர் படைக்கப்பட்டன என்பதற்கு ஆதாரம்? அதுவும் இல்லை. உயிரின் மிக, மிக அடிபடையான self replicating chemicals கூட அறிவியல் ஆய்வகத்தில் உருவாக்க பட்டு விட்டது. நம் சூரிய குடும்பமோ, பூமியோ கூட இதுவரை நாம் கண்ட மற்ற நட்சத்திர குடும்பங்களில் இருந்து ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை. அண்டத்தின் ஆரம்பம் வரை நமக்கு தெரியும். பெரு வெடிப்பு, big bang, நடந்த நொடிகள் முதல் என்ன நடந்தது என்று நமக்கு தெரியும்.

      சரி இவ்வாறு ஒரு பெரு வெடிப்பு என்பதும் நம் அறிவியல் அறிவுக்கு அப்பார் பட்டதா என்றால் அதுவும் இல்லை. எதுவுமே இல்லாமல், எந்த காரணமுமே இல்லாமல் அது பாட்டுக்கு, தான்தோன்றித்தனமாக எதுவும் வர முடியுமா என்று பார்த்தால் அதுவும் முடியும் என்கிறது அறிவியல். virtual particle, ஒவ்வொரு நொடியும் அது பாட்டுக்கு பல லட்சம், பல கோடிகள் ஒவ்வொரு சதுர இடுக்கிலும் தானே தோன்றுகிறது, தானே மறைகிறது.

      இப்படி எல்லாவற்றுக்கும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்து இருக்கிறது என்று நாம் காண்கிறோம். இதில் எந்த ஒரு இடத்திலோ supernatural எங்கேயும் உள்புகுந்தது என்பதற்கு எந்த வித அறிகுறியும் இல்லை. இந்த உலகம் படைக்கப்பட்டது என்பதற்கு இம்மி அளவு கூட நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை. படைப்பு என்று இருந்தால் படைத்தவன் இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால் இது படைப்பு என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாத போது, எதை கொண்டு நாம் இதை படைப்பு என்று தீர்மானிப்பது?

      //ஒன்றிலிருந்துதான் இன்னொன்று. சூனியத்திலிருந்து எதுவுமில்லை//

      ஐன்ஸ்டீனுக்கு பிறகு அறிவியல் நூறு ஆண்டுகளில் எவ்வளவோ வந்து விட்டது. மேற்கூறிய virtual particle என்பதை காண்க. எதுவமே இல்லாமல், எந்த காரணமுமே இல்லாமல் வெறும் vaccumஇல் தோன்றி, மறையும் அவை. பெரு வெடிப்புக்கு முன்பு அனைத்தும் ஒரு புள்ளியில் இருந்தது என்பது வரை நமக்கு தெரியும். வெடிப்பு முதல் எந்த இடத்திலும் எந்த கடவுளோ, எந்த படைப்போ நிகழந்தது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. சரி அந்த வெடிப்பை துவக்கியது கடவுள் அல்லது அந்த வெடிப்புக்கு காரணமான அனைத்தையும் படைத்து கடவுள் என நீங்கள் கூறலாம். ஆனால் அதற்க்கு ஆதாரம்? இயற்பியல் விதி படி matter, energy இரண்டையும் உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது என கொண்டாலும், logical முடிவு என்ன? அது எப்போதுமே இருந்தது என்பதோ அல்லது அது எங்கே இருந்து வந்தது என்பதோ நமக்கு தெரியாது என்பது தானே? அதை விடுத்து படைப்பு என்று எவ்வாறு கூற முடியும்? ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், பதில் தெரியவில்லை என்பது தான் சரியான பதிலே தவிர, இது வரை கண்டிடாத, கேட்டிடாத, எந்த ஆதாரமுமே இல்லாத ஒன்று தான் பதில் என்று எப்படி கூற முடியும்?

      படைத்தவனுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற போதிலும், படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்படியும் நம் கேள்விக்கு விடை தெரியவில்லையே! எல்லாமும் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி, ஏதோ ஒரு புள்ளியில் முடிய வேண்டும் என்றால், அந்த படைத்தவன் என்பதன் தொடக்கம், முடிவு என்ன? அந்த படைத்தவன் எங்கிருந்து, எப்படி வந்தான்? அவன் இயற்கை விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் என்றால், அதற்க்கு ஆதாரம் என்ன? அவன் தன்மை இது, அவன் குணாதிசயம் இது என்று எவ்வாறு அறுதியிட்டு கூறுவது?

      சுருங்க சொன்னால், முதலில் இது படைப்பு என முதலில் ஐயமற நமக்கு தெரியவேண்டும். இன்று வரை படைப்பு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஏன் படைப்பு என்று நம்ப வேண்டும்? நாளையே ஒரு வேலை வான் நட்சந்திரங்கள் “கடவுள் என்பவன் இதோ இருக்கிறேன்” என வாக்கியம் அமையும் படி மாறி அமைந்தால் அல்லது ஏதேனும் supernatural அல்லது படைத்தவன் என்று ஒன்று இருக்கிறது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் நமக்கு கிடைத்தால், படைத்தவன் என்று நம்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி எதுவும் இல்லாத பொது, இருக்கும் அனைத்தும் இயற்கைக்கு உட்பட்டு தான் இருக்கிறது என்று நமக்கு இருக்கும் அனைத்து ஆதாரமும் அறுதியிட்டு, ஐயமற கூறும்போது எதற்கு ஆதாரமே இல்லாத படைத்தவன் என்று ஒன்றை உள்ளே கொண்டுவர வேண்டும்? ஆதாரம் வரும்போது நம்புவதில் பிரச்சனை இம்மியளவும் இல்லை. அது வரை படைத்தவனுக்கு இங்கு எந்த வேலையும், அவசியமும் இல்லை.

      • சிந்தனைசெய்
        அற்புதம்.மிக நுட்பமான பரிணம கோட்பாடு துவங்கி மிக எளிமையான படைப்பு காரணங்கள் வரை உங்களின் விளக்கம் அருமை.
        உங்கள் நுண்ணிய அறிவியல் விளக்கங்களின் முன்னால் என்னுடைய எளிமையான சில கேள்விகள் விடை தெரியாத மயக்கத்தில்தான் உள்ளன சிந்தனைசெய்.

        அறிவியலுக்கு மனசாட்சி உண்டா? கிடையாது.
        அறிவியல், நீதி நேர்மை நியாயம் வாய்மை அறியுமா? அறியவே அறியாது.
        மனிதனை தவிர்த்துள்ள உலகின் கோடானகோடி உயிரினங்கள் அறம் சார்ந்த உணரவுகள் உடையாதா இல்லவே இல்லை.
        ஆனால் இந்த உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் அறம் அறிவோம்.
        ஆகவேதான் மனித இனம் மட்டும் நியாயம் என்றும் சட்டமென்றும் நீதி என்றும் வைத்திருக்கிறோம்.
        இந்த நியாயத்தை நேர்மையை மீறும் மனித மீறலை நித்தம் நித்தம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். சிறிய அளவிலோ பெரிய அளவிலோ..
        ஏதோ மன்னிக்க கூடிய அளவு என்றால் பொறுத்துக்கொள்கிறோம்.மன்னிக்கிறோம்.இல்லையென்றால் பகையாகிறோம்.
        தாங்கவே முடியாத கொடூரர்களின் முன்னால் நம் நிலை என்ன?
        அதிகார பல்த்தோடு நடக்கும் அத்துமீறல்கள் இந்த உலகில் எத்தனை எத்தனை?
        அறிவியல் பேசும்போது இவன் தத்துவம் பேசுகிறானே என்று திகைக்க வேண்டாம்.
        நான் திரும்ப திரும்ப பகுத்தறிவு பற்றி கேள்வி எழுப்பியது இதனால்தான்.

        தான் தோன்றிய படைப்பின் பரிணாம சங்கிலி பகுத்தறிவு பெற்ற மனித இனத்தின் முன்னால் அறுந்து விட்டது போன்ற நிலை ஏற்படுகிறதே.
        மனித மனதின் கோரவெறி, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை சிதைக்கிறதே…
        இங்கே அறிவியல் மயங்கி நிற்கவில்லையா?
        பகுத்தறிவு பெறாத எந்த விலங்காவது தன் தேவைக்கன்றி அல்லது தன் பாதுகாப்பிற்க்கன்றி இவ்வாறு செய்து குதூகலம் கொள்ளுமா?
        இது மட்டுமா?
        இந்த மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து செய்துவருகிற அநியாய அக்கிரமங்கள் எத்தனை எத்தனை?
        நம் கண்முன்னால் நடக்கிற இது போன்ற காரியங்களை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிகிறதா?
        ஒரு செய்தியாக கேட் கும் போதே தூக்கம் தொலைகிறதே இவற்றை நேரில் பார்த்த மனசாட்சி உள்ள மனிதனின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
        ஒரு கும்பலின் கோரத்தாண்டவத்திற்க்கு முன்னால் அல்லது ஒரு அரச பயங்கரவாதத்திற்க்கு முன்னால் என் மகனையோ மகளையோ தயையோ மனைவி சகோதரிகளையோ பலி கொடுக்கும் என் மனது என்ன நிலை எடுக்கும்?
        எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல். என் இறைநம்பிக்கை ஒன்றுதான்.
        நிச்சயமாக இப்படி ஒரு அநீதி வெல்ல முடியாது…ஆனால் வெல்கிறதே
        எத்தனையோ கொடிய மனித மிருகங்கள் நல்ல படியாய் வாழ்ந்து முடிந்திருக்கிறதே…
        அவ்வாறு அல்ல.நிகழ்வுகளை பார்க்கும் பொழுது அனைத்திற்க்கும் ஒரு முடிவும் ஒரு விளைவும் இருந்தே தீரும்.
        ஒரு அற்ப படைப்பான மனிதனே நியாயம் என்றும் நீதி என்றும் உணர்ந்திருக்கிறானே(அதை கடை பிடித்தல் வேறு)இவ்வளவு கச்சிதமான பிரம்மாண்ட படைப்புகளை படைத்த இயற்க்கை அல்லது இறைசக்தி அதை உணர்ந்திருக்காதா?
        பரிணாமத்தின் துவக்கம் ஏதோ ஒன்றில் தொடங்குகிறது.இது அறிவியல்.ஐன்ஸ்டீன் சொன்னது போல சூனியத்திலிருந்து எதுவுமில்லை.ஒன்றிலிருந்தே இன்னொன்று.
        தானாய் ஒன்று உருவாகி அது பல்கி பெருகியது என்று நம்பும் உங்கள் அறிவு, தக்க காரணத்தோடு ஒன்று இவற்றையெல்லாம் உருவாக்கியது என்று ஏன் நம்ப கூடாது?
        அதற்க்கு உங்கள் பதில், அறிவியல் இதுவரை அதை அறிந்து சொல்லவில்லை என்பதுதான்.சரி..
        இப்போது இந்த இரண்டு நம்பிக்கைக்கும் ஆதாரங்கள் இல்லை.ஆனால் எந்த நம்பிக்கை மனித மனதிற்க்கு ஆறுதலையும் ஒரு வடிகாலையும் தருகிறது….
        சிந்தனைசெய்..
        என் கண் முன்னால் நடக்கும் அனைத்து பாகுபாடுகள்..முறைகேடாய் உழைத்து இன்பம் துய்க்கும் கூட்டம் இவைகளை கண்டு வெதும்பும் என் உள்ளம் பரிணாமம் தாண்டிய பகுத்தறிவு கொண்டே அமைதி அடைகிறது.இறைவன் அறிவியலால் நிரூபிக்க படாத ஒன்றாக இருக்கலாம்.
        அறவியல் என்ற ஒன்றிர்க்கு அவன் தேவையானவனாகவே இருக்கிறான்.
        இறைநம்பிக்கை அறிவியலுக்கு முரண்பட்டதாக நான் காணவில்லை.அறிவியலுக்கு அறவியலை கொடுப்பதாகவே நான் காண்கிறேன்.

        • திரு. மீராசாஹிப்,

          தங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. ஆனால் அது அனைத்தும் எனக்கும் அறிவு கொடுத்த பல நூறு அறிஞர்களுக்கு சேர வேண்டியது. கடவுளை பற்றி பேசும்போது தத்துவம் வந்தே தீரும். எனவே தாராளமாக தாங்கள் கூறலாம். உங்கள் பதிவை படித்த போது எங்கோ படித்த இந்த வாசகம் தான் நினைவில் வருகிறது – “கடவுள் இல்லைனு சொல்லல, ஆனா கடவுள்னு ஒன்னு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது”. ஏதோ உங்களை கேலி செய்கிறேன் என நினைக்க வேண்டாம். நம்மில் பல பேர் கடவுள் நம்பிக்கைக்கு இது தான் காரணம். இதை தவறு என்று சொல்லவில்லை. எந்த ஆதாரமும் இல்லாத போதும் கடவுள் என்று ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் நம்மில் பலரை தினசரி செலுத்துகிறது. அதில் எதுவுமே பிரச்சனை இல்லை.

          தங்கள் பதிவின் மைய கருத்துக்கு வருவோம். உங்கள் வார்த்தை படி:

          //மனிதனை தவிர்த்துள்ள உலகின் கோடானகோடி உயிரினங்கள் அறம் சார்ந்த உணரவுகள் உடையாதா இல்லவே இல்லை. ஆனால் இந்த உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் அறம் அறிவோம்.//

          இதை எவ்வாறு அறிந்தீர்கள்? மற்ற உயிரினங்களில் அறம் இருக்கிறதா, சமூக கட்டமைப்பு இருக்கிறதா, சட்டம்(எழுதபடாவிட்டலும்) இருக்கிறதா என தாங்கள் சிந்தித்து உண்டா? அறம், சட்டம், சமூக கட்டமைப்பு, அத்துமீறல், இளம் பிஞ்சுகள் கொலை என நீங்கள் கூறிய அனைத்தையும் நாம் விலங்குகளிடம் பார்க்க முடியும். chimpanzee குரங்குகளை ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் Jane Goodall இது அனைத்தும் chimpanzee சமூகத்தில் இருப்பதை ஆதார பூர்வமாக ஆய்வு செய்து, தொகுத்து உள்ளார். மனிதன், குரங்குகள் என்று அல்ல, சமூக கூட்டமைப்பு ஏதோ ஒரு விதத்தில் இருக்கும் எல்லா விலங்குகளும் சட்டம், கட்டமைப்பு, அதிகாரம் போன்றவை ஏதோ ஒரு விதத்தில் இருக்கிறது.

          இறை நம்பிக்கை ஒரு வடிகால், ஒரு ஆறுதல் என நீங்கள் கூறுவதை நானும் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், அப்படி இறைவன் என ஒருவன் இருக்கிறான் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை, அது முழுக்க, முழுக்க நம்பிக்கை மட்டுமே என்பது தான் இங்கே நிதர்சனம். கடவுள் என்பது ஆறுதல், வடிகால் தருகிறது என்பதால் மட்டுமே அதை ஒப்புக்கொள்ள முடியாதே! ஆறுதல், வடிகால் தருகிறது என்பதால் மட்டுமே அதற்க்கு legitimacy வந்து விடாதே. அப்படி இருந்தால் இன்று தமிழ்நாட்டில் தலையாய கடவுள் மது தான். நம் விருப்பம் என்பது, நம் மனதுக்கு ஆறுதல் தருகிறது என்பதால் அதை உண்மை என கூற முடியாதே. இங்கு நாம் பேசுவது நம் உலகில் கடவுள் என்று ஒன்று இருக்கிறதா என்னும் உண்மையை தானே. 7G ரெயின்போ காலனி படம் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறன். அதில் தன காதலியை இழந்த கதாநாயகன் அவள் இறந்த பிறகும் அவளிடம் பேசிக்கொண்டு இருப்பான். அவன் மனதுக்கு ஆறுதல் என்பதால் அந்த காதலி மீண்டும் வந்து அவனுடன் பேசுகிறாள் என்பதாகி விடுமா? நாம் அனைவரும் வாழும் உலகம், reality என்று ஒன்று இருந்து தொலைகிறதே. அந்நியன் படத்தில் வருவது போல என்ன தப்பு செய்தாலும் உடனே தண்டனை கிடைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் நம் உலகில் நாம் செய்தால் மட்டுமே எதுவும் நடக்கிறது. அது அக்கிரமம் என்றாலும் சரி, நன்மை என்றாலும் சரி. இரண்டிலும் கடவுள் என்ற ஒன்றின் கை இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை.

          அடுத்த கட்டமாக, இறைசக்தி என்று ஒன்று நீதி என ஒன்றை உணர்ந்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பிறகு ஏன் அந்த நீதிக்கு புறம்பான செயலை செய்வது தவறு, அதை செய்யக்கூடாது என்று நம் அனைவரிலும் அழுந்த எழுதாமல் விட்டது ஏனோ? எல்லாம் செய்த பிறகு, அவனுக்கு தண்டனை தருவது சிறந்த வழியா அல்லது அவன் தவறான பாதையில் செல்லாமல் தடுப்பது சரியா? மலை உச்சியில் இருந்து விழுவதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு பிறகு அனைத்து மருத்துவமும் செய்வது சரியா, அல்லது விழும் முன்பே தட்டுப்பது சரியா? நீங்கள் கூறியது போல கருவில் இருக்கும் குழந்தையை பெண்ணின் வயிற்ரை கிழித்து செய்பவனை “இதை செய்யாதே! இது தவறு” என அவனில் அந்த எண்ணம் விதைக்காமல் விட்டது ஏன்? எல்லாம் செய்து முடித்து அவனுக்கு என்ன நடந்தால் என்ன? இல்லை அவன் இறந்த பிறகு எந்த தண்டனை தந்தால் என்ன?

          இதே நம் கண்முன்னே நடக்கிறது. இதே நிலையில் நீங்களோ, நானோ இருந்தால் என்ன செய்வோம்? கடவுள் பார்த்துக்கொள்வான் என சும்மா இருப்போமா, அல்லது ஆனது ஆகட்டும் என நம்மால் முடிந்ததை செய்வோமா? ஒரு பேச்சுக்கு கடவுள் இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். எந்த சக்தியும் இல்லாத போதும் துணிந்து தன்னால் முடிந்ததை செய்யும் மனிதனை விட எல்லா சக்தி இருந்தும் வேடிக்கை பார்த்த கடவுள் என்னை பொறுத்தவரை என் மரியாதைக்கு அருகதை அற்றது. என்னை பொறுத்தவரை அவன் அறத்தை விட என்னுடைய சக மனிதன் மீது, பரிணாம வளர்ச்சி தந்த குழு பாதுகாப்பு எனும் அறம் சிறந்தது.

          சுருங்க சொன்னால், இறைவனுக்கும் அறவியலுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இறைவன் தந்ததாக மதங்கள் கருதும் அறத்தை விட, நம் மனிதநேய அறம் பல படி உயர்ந்தது. எல்லா சக்தியும் கொண்ட இறைவன் என ஒன்று ஒரு பெண் கருவறுக்க படுவதை பார்த்துகொண்டு இருந்தால், அவனை விட அவளுக்கு உதவி செய்யும் சக மனிதன் என் மரியாதைக்கு தகுந்தவன். அந்த கடவுளை விட பல படி மேலானவன். மற்றவருக்கு ஆறுதல், வடிகால் தருகிறது என்பதால் மட்டுமே சக மனிதனை விட கீழான கடவுள் என்பதை ஏற்க என்னால் ஏற்க முடியாது. மன்னிக்கவும்.

          • சிந்தனைசெய்
            அறிவியலை துல்லியமாய் விளங்கி தெளிவாய் விளக்கும் நீங்கள் அறம் என்பதை விளங்குவதில் தடுமாற்றம் கொள்கிறீர்கள்.இது புரிந்து கொள்வதில் உள்ள கோளாறா தெரியவில்லை.
            விலங்குகளிடம் சில தன்மைகள் இருக்கின்றது.
            சிங்கம் கூட்டத்தோடு வாழ்வதும் வியூகம் அமைத்து வேட்டையாடுவதும் அதன் இய்ல்பு.இப்படி ஒவ்வொரு இனத்திற்க்கும் தனித்தனி இயல்புகள் இருப்பதை நான் அன்றே பதிவு செய்திருக்கிறேன்.இவை என் வாதத்திற்க்கு வலு சேர்ப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.ஏனெனில் ஒன்றே ஒன்றிலிருந்து அனைத்தும் உருவானது என்பது உங்கள் கருத்து.
            இல்லை அனைத்தும் தனித்தனி இயல்பிலான படைப்புகள் என்பது என் கருத்து.

            அறம் என்ற சொல்லிற்க்கு இவைகளை உதாரணம் காட்ட முடியாதே சிந்தனை செய்.
            ஒன்றை சரி என்றும் தவறு என்றும், உண்மை என்றும் பொய்மை என்றும்,வாய்மை என்றும் கீழ்மை என்றும் உணர்ந்து, எது சரியோ எது உண்மையோ எது மேன்மையோ அதை நோக்கி பயணிப்பதில்லையா அறம்.
            இந்த தன்மைகள் எந்த சிம்பன்சி குரங்கிடம் இருப்பதாக அறிவியல் சொல்கிறது?

            இறைநம்பிக்கையை வடிகால் என்றும் ஆறுதல் என்றும் நான் சொன்னது கடைசி கடைசியான் என் வாதம்.
            அதாவது ஒன்றிலிருந்து தான் அனைத்தும் தோன்றியது சரி..அந்த ஒன்று எப்படி தோன்றியது?என்ற கேள்விக்கு, “கடவுள் எப்படி தோன்றினான்?”என்ற எதிர் கேள்வி உங்களிடமிருந்து வரும்.ஆக ஏதோ ஒன்று தானாக தோன்றியிருக்க வேண்டும்( தானாக எதுவும் தோன்றியிருக்க முடியாது என்று ஐன்ஸ்டீன் நிறுவுகிறான் )அந்த ஒன்று கடவுளாக இருந்தால் என்ன?
            கடவுளுக்கு பின் உள்ள ஒன்று தானாக தோன்றியிருக்கும் என்று நம்புவதை விடவும் கடவுள் தோன்றி தக்க காரணத்தோடு அனைத்தையும் படைத்தான் என்று நம்புவது ஒரு பெரிய நன்மையை மனித குலத்திற்க்கு அளிக்கிறதில்லையா என்ற அர்த்தத்தில் அந்த கருத்தை பதிந்தேன்.ஆறுதல் தருவதற்க்காக மட்டும் கடவுளை நம்பவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

            “மனிதன் ஏன் நீதிக்கு புறம்பான செயலை செய்ய கடவுள் அனுமதிக்கிறான் மனிதனை குற்றச்செயல் செய்ய அனுமதித்து விட்டு பிறகு என்ன அவனுக்கு தண்டனை”
            என்ற கேள்விகள் தலைப்பு மாறியதாக இருந்தாலும் இவை பகுத்த்றிவுப்பூர்வமான கேள்விகளே..
            இதைத்தான் நான் தொடர்ந்து உங்களிடம் எழுப்புகிறேன்.
            மனிதன் மட்டுமே இந்த சுதந்திர சிந்தனையை பெற்றிருக்கிறான்.விலங்குகள் அறியுமா இந்த வேறுபாட்டை?சிம்பன்சி குரங்குகள், தான் செய்வது நன்மையான காரியம், தான் தவிர்த்தது தீமையான காரியம் என்பதை உணர்ந்தா அவைகள் காரியமாற்றுகின்றன.
            அவைகளின் செயல்பாடெல்லாம் தேவை தேவையற்றது.விருப்பம் விருப்பமற்றது.
            புலனறிவு கொண்டு உள்ளுணர்வால் அவைகள் காரியமாற்றுகின்றன.மனித இனம் ஒன்றே பகுத்தறிவு கொண்டு செயாற்றுகின்றது.தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை செய்கிறது.சரி என்று புரிந்தும் வாளாவிருக்கிறது.
            இந்த சுதந்திரம் மனித இனம் மட்டும் பெற்றது எப்படி?இவை பரிணாமத்தால் சாத்தியாமா? என்பதே என் கேள்வி.
            //அநீதியை அநியாயத்தை கடவுள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறான் நடக்கும் அக்கிரமங்களை தடுக்கும் நாதியற்ற கடவுள் இருந்தென்ன தொலைந்தென்ன//
            என்ற உங்களின் பார்வை கடவுள் நம்பிக்கையாளர்களின் கடவுளைப் பற்றிய உலகின் படைப்பிலக்கணத்தை சரியாய் புரிந்து கொள்ளாததின் விளைவு.
            இதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் உங்களுக்கில்லை.உங்கள் பார்வை வேறு
            இருந்தும் என் பார்வையிலிருந்து என் தனிப்பட்ட அனுபவத்தை நான் சொல்கிறேனே..
            கடந்த இரண்டரை வருடமாக ( மோடி மாமா வந்ததிலிருந்து) வியாபாரம் மிக மோசமாய் போய்க்கொண்டிருக்கிறது.நல்ல முறையில் வியாபாரம் செய்து தாராளமாய் செலவழித்து பழகிய குடும்பத்திற்க்கு இன்றைய நிலையை கடப்பது மிகச்சிரமமாய் இருக்கின்றது.
            செலவுகளை கூடுமானவரை குறைத்து விட்டோம்.ஆனாலும் நெருக்கடியை சமாளிப்பது மிகக்கடினமாய் இருக்கின்றது.
            இதுவரை நாங்கள் கொள்முதல் வியாபாரிகளிடம் நல்ல பெயரோடு இருக்கிறோம்.அந்த நம்பகத்தன்மை கெட்டுவிடக்கூடாதே என்ற பதைபதைப்புதான் எண்ணமெல்லாம்.
            நாம் எந்தவித முறைகெட்ட வகையிலும் பொருளீட்டவில்லை.தரமற்ற வகையில் செலவிடவும் இல்லை.சரியாக கணக்கு பார்த்து ஜகாத் என்ற ஏழை வரிகளையும் சரியான் முறையில் கொடுத்துதான் வருகிறோம்.
            இந்த சஞ்சலத்தோடு இருக்கும் இந்த நேரத்தில் ஒரு செய்தி வருகிறது.
            பெங்களூர் சிறைச்சாலையில் சகல வசதியோடு சசிகலா…
            ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் உல்லாசமாய் கொட்டமடிக்கிறார்கள்.இவரோடு சுருட்டிய இன்னொருவர் செத்தபிறகும் புரட்சி தலைவியாய் புதைந்திருக்கிறார்.
            இதனால் எனக்கு கடவுள் மேல் நம்பிக்கையற்று போகிறதா?
            இப்படி அல்ல எங்களின் கடவுள் நம்பிக்கை.இந்த உலகமும் வாழ்வும் ஒரு சோதனை கூடம் இங்கே நோய் வறுமை நட்டம் இழப்பு துரோகம் அனைத்தையும் சந்திப்போம்.இது நிரந்தரமல்ல.
            மரணத்தோடு முடிவதும் அல்ல.இதற்க்கு தொடர்ச்சி இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை.
            பரிணாம கோட்பாட்டிற்க்கு தேவையற்ற ஒன்றுதான் இந்த கருத்து.
            கடவுளைப்பற்றிய உங்களின் விமர்சனத்தால் விளக்க வேண்டி வந்தது.

            எனக்கு முன்னால் என் நண்பரான நீங்கள் அநியாயமாய் தாக்கப்பட்டல் நாந்தான் தடுத்தாக வேண்டும்.கடவுள் வந்து தடுப்பான் என்று ஒருபோதும் நான் எண்ண மாட்டேன்.இது என் கடமை இதற்க்கே எனக்கு அறிவும் வலுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
            எனக்கு வரும் எந்த இக்கட்டிலும் நீதி வழுவாமல் நியாயம் பிறழாமல் நான் இருந்தாக வேண்டும்.இருக்காமலும் போகலாம்.
            இந்த வேறுபாட்டை பகுத்து பார்க்கும் அறிவு எந்த விலங்குக்கும் சிம்பன்சி உட்பட உண்டா என்பதே என் கேள்வி.

            • மீராசாஹிப்,

              சிங்கம் கூட்டமாக வேட்டையாடுவதை எப்போது நான் அறத்துக்கு உதாரணமாக தந்தேன்? மனிதனிடம் இருக்கும் அறம் போன்ற சிந்தனை, மற்ற தீயவை என்ற அனைத்தையும் விலங்குகளிடம் ஏதோ ஒரு விதத்தில் பார்க்க முடியும் என்பதை தான் அறிவியல் சொல்கிறது. அறம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் என்பது குறைந்த பட்சம் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனை. நீங்கள் கேட்டபடி:

              //ஒன்றை சரி என்றும் தவறு என்றும், உண்மை என்றும் பொய்மை என்றும்,வாய்மை என்றும் கீழ்மை என்றும் உணர்ந்து, எது சரியோ எது உண்மையோ எது மேன்மையோ அதை நோக்கி பயணிப்பதில்லையா அறம். இந்த தன்மைகள் எந்த சிம்பன்சி குரங்கிடம் இருப்பதாக அறிவியல் சொல்கிறது?//

              உண்மை, பொய், வாய்மை, ஏமாற்றுதல், ஏமாற்றினால் அது தவறு என புரிந்து தண்டனை தருதல் என் பல குணாதிசயங்கள் விலங்குகளிடம் உண்டு. விலங்குகள் என குறிப்பிட்டதை கவனிக்கவும். chimpanzee குரங்குகள் மட்டும் அல்ல. சமூக விலங்குகள்(social animals) அனைத்தும் பல தன்மைகளை பொதுவே கொண்டு உள்ளன. இதில் அறமும் அடக்கம். அன்பு, பாசம், சக குழு உறுப்பினர்க்கு உதவி செய்தல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், அனுதாபம், பச்சாதாபம், குழுவின் பொதுநலம், ஏமாற்றுதல், ஏமாற்றபடுவதை அறிதல், ஏமாற்று குணத்தை திருத்துதல், சச்சரவுக்கு தீர்வு காணுதல், சமாதானம் விரும்புதல், குழுவின் விதிகள் பற்றிய தெளிவு, அவற்றுக்கு உட்பட்டு நடத்தல் இவ்வளவு ஏன் மற்றவர் தன்னை பற்றி என்ன நினைக்கிறார் என self-awarness வரை பல குணாதிசயம் சமூக விலங்குகளுக்கு உண்டு.

              நம்முடைய அறமும் எங்கும் வானத்தில் இருந்து வரவில்லை. சுயநலத்தை விட குழுவின் பொதுநலத்தை மேம்படுத்தும் செயல்கள் தான் அறம் என இப்போது சொல்கிறோம். தான் செய்வது தவறு என தெரிந்துகொள்வதும், தவறு என தெரிந்து செய்வதும், என்ன இக்கட்டான சூழலிலும் சரியானதை செய்யும் நோக்கமும் விலங்குகளிடம் உண்டு. பல நாள் பட்டினி கிடந்தாலும் பெரும்பாலான குரங்குகள் உணவுக்காக தன சக குரங்குக்கு மின்சார ஷாக் கொடுக்க முன்வருவது இல்லை. தனக்கு வேண்டியது கிடைத்தாலும் அவ்வாறு செய்வது தவறு என்னும் அறம் இருக்கிறதே. இதை மீறுபவை இருக்கின்றன. இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் சுயநலம் vs எது சரி என பார்த்தே செயல்படுகின்றன.

              நம் அறமும் ஏதோ கடவுள் தந்தது அல்ல. மதத்தின் அடிபடையும் அல்ல. நாமும் சமூக விலங்குகள் தான். அடித்து பிடுங்குவது தவறு என நாம் நினைப்பது குழுவின் அடிப்படை விதிக்கு அது எதிராக இருப்பதால் தான். நம் அற விதிகளும் நம் புரிதலுக்கு ஏற்ப பல மாற்றங்களை சந்தித்தே, வளர்ந்து உள்ளன. அடிமை என்பது விலங்குகளிடம் இல்லை. அறம் பெற்ற மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக சக மனிதனை அடிமையாக்கி, அதை அறம் என்றும் வாழ்ந்தது எப்படி?

              விருப்பம், தேவை, புலனறிவு கொண்டு மட்டுமே விலங்குகள், அதுவும் குறிப்பாக சமூக விலங்குகள், செயலாற்றுவதில்லை. அவற்றுக்கும் நன்மை, தீமை, குழுநலம், அன்பு, பாசம், அதிகார துஷ்ப்ரயோகம் செய்யும் தலைவனை தண்டித்தல் என பல அறம் அவற்றிடம் உண்டு.மேற்கூறிய சோதனையை எடுத்துக்கொள்வோமே. பல நாள் பட்டினி கிடந்த ஒரு குரங்கிடம் உனக்கு உணவு வேண்டும் என்றால் இந்த பொத்தானை அழுத்து. உன் சக குரங்கை அது துன்புறுத்தும், ஆனால் உனக்கு உணவு கிடைக்கும் என்ற choice தரப்பட்டது (இதில் பொத்தானை அழுத்தினால் துன்புருதபடுவது போன்ற சப்தம் மட்டுமே வரும். உண்மையாகவே மின்சாரம் பாய்ச்சுவது கிடையாது. ஆனால் அது குரங்குக்கு கண்ணால் பார்க்க முடியாத வண்ணம் மறைப்பு இருக்கும். எனவே குரங்கை பொறுத்தவரை உண்மையில் துன்புறுத்த படுவது போன்ற பிம்பம் உண்டாகும்).

              நீங்கள் கூறுவது போல விருப்பு, தேவை என்று மட்டுமே செயல்பட்டால் அடுத்த நொடி பொத்தான் அழுத்தப்படும். ஆனால் அது நடக்கவில்லை. தனக்கு இப்போது அவசர தேவை என்றாலும் சக குரங்கை துன்புறுத்தி தான் அது கிடைக்க வேண்டும் என்றால் அதை பெருன்பாலான குரங்குகள் செய்யவில்லை. Rhesus குரங்குகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவை பாருங்கள்:

              1. A majority of rhesus monkeys will consistently suffer hunger rather than secure food at the expense of electroshock to a conspecific.

              2. This sacrificial pattern is induced primarily by visual communication, remains characteristic for individual animals, and is enhanced by familiarity or previous
              experience of shock, but is not significantly related to relative age, size, sex, or dominance.

              3. Such protective or “succorance” behavior, observable throughout the animal kingdom

              இது ஒரு ஆய்வு தான். இது போல பல ஆயிரம் உள்ளன. விலங்குகளுக்கும் அறம் என்பது உண்டு, அந்த அறத்தை மீறுவதும், மீராததும் சூழ்நிலை, அந்த குறிப்பிட்ட விலங்கு என்பதை பொருத்து உள்ளது என்பது ஐயமற நிரூபிக்கப்பட்டும் விட்டது. இது உங்களுடைய

              //எனக்கு வரும் எந்த இக்கட்டிலும் நீதி வழுவாமல் நியாயம் பிறழாமல் நான் இருந்தாக வேண்டும்.இருக்காமலும் போகலாம். இந்த வேறுபாட்டை பகுத்து பார்க்கும் அறிவு எந்த விலங்குக்கும் சிம்பன்சி உட்பட உண்டா என்பதே என் கேள்வி.//

              என்னும் கேள்விக்கு பதில் அளித்து இருக்கும் என நம்புகிறேன். நாம் மட்டுமே ஆறு அறிவு விலங்குகள், அறம் நமக்கு மட்டுமே உண்டு என்பது எல்லாம் பல நூற்றாண்டு முந்தைய கூற்று. நம்முடைய அறமும் ஒன்றும் புதியது அல்ல, பரிணாம வளர்ச்சியால் சமூக விலங்குகளிடம் என்ன எதிர்பார்கிரோமோ அதே போல தான் நம் அறம், behavior எல்லாம் இருக்கிறது. அறம் என்பது நமக்கே உரிய சொத்து மட்டும் அல்ல. மனிதனை விடவும் சில இடங்களில் விலங்குகள் அதிக அறத்துடன் நடந்து கொள்கின்றன. குறிப்பாக கட்டளை, authority வரும் போது விலங்குகளை விட நம் அறம் ஒரு படி கீழ்தான் (கீழே இரண்டாம் லிங்க் பார்க்க).

              Links:

              http://www.madisonmonkeys.com/masserman.pdf

              https://thedoctorweighsin.com/who-is-the-fairest-of-them-all-you-be-the-judge/

              https://www.nature.com/news/monkeys-stay-away-from-meanies-1.12551

              https://www.ted.com/talks/frans_de_waal_do_animals_have_morals

              • சிந்தனைசெய்
                நெருங்கி வந்து பிறகு விலகுவது போல் இருக்கிறது உங்கள் கருத்து.
                உள்ளுணர்வும் பகுத்து அறிந்து தெளிவு பெறுதலும் எப்படி ஒன்றாகும்?
                உதாரணத்திற்க்கு தாய்மை என்ற ஒரு உணர்வு..
                தாய்மை இல்லாத உயிரினம் ஏது?மனிதனை போலவே எல்லா ஜீவனம் தாய்மை என்ற உணர்வை பெற்றிருக்கின்றன.
                அதுதான் ஒரு கவிஞன் சொல்கிறான்
                //பறவையாய் இருந்தும் பறக்காத கோழி பருந்து கண்டதும் பறந்தடிக்கிறதே ஏன்// என்று வினவுகிறான்.
                ஒரு கோழையான கோழி தன் குஞ்சுகளோடு இருக்கும் பொழுது நாம் அருகில் போனால் சிலிர்த்து கொண்டு வருகிறது.
                வருபவன் எவ்வளவு பலசாலி அவனை நாம் விரட்ட முடியுமா என்ற பகுத்தறிவு கணக்கெல்லாம் அதனிடம் இல்லை.தாய்மை என்ற அதன் உணர்வு அப்படி ஒரு வேகத்தை அதற்க்கு கொடுக்கிறது.
                அதே குஞ்சுகள் வளர்ந்து தாய்க்கு இணையாய் ஆகிவிட்டால் தாய் யாரோ மகன் யாரோ.
                அவைகளுக்குள்ளேயே இணை சேர்ந்து புது தலைமுறையையும் உருவாக்கி கொள்கிறது.
                நீங்கள் சொல்லும் வாதத்தை பார்த்தால் உயர்தினை அக்ரினை என்று எதுவுமே இல்லாமல் உலகில் அனைத்தும் மனிதனுக்கு இணையான அறிவை பெற்றுவிட்டது போன்ற கருத்தைதான் தருகிறது.
                நீங்கள் ஆரம்பத்தில் ஒரு உதாரணம் வைத்தீர்கள்.
                “காட்டில் திரியும் ஓநாய்க்கு மனிதனோடு இருப்பதில் வேட்டையாடி உண்ணும் சிரமம் இல்லை.மனிதனுக்கோ நாயை கொண்டு உதவி.ஆகவே இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து விட்டார்கள்”
                நாய்க்கு இந்த உதாரணம் சரி.. யானைக்கு?
                அதன் பலம் என்ன? பக்கத்தில் நின்று ஓங்கி பிளிறினாலே மனிதன் தாங்குவானா?
                கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு, பதினைந்து வயது எலும்படி பையன் யானையை மேய்த்துக்கொண்டு போகிறான்.
                அதற்க்கு இவனோடு இருந்தால்தான் பாதுகாப்பா?அல்லது மனிதனால் மட்டும்தான் அதன் வயிறை நிறைக்க முடியுமா?
                பெரும்பாலான யானை பாகன் கள் எடுக்கும் பிச்சையில் அவனும் உண்டு யானைக்கும் கொடுத்தால் அதன் கால் வயிறு நிறைந்தாலே அதிசயம்.பிறகு ஏன் அம்மாம்பெரிய உருவம் இவனை அண்டி கிடக்கிறது?
                யானைக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு.
                தாய்மை காதல் காமம் கோபம் கனிவு பாசம் விசுவாசம் தன்னோடு இருப்பவன் யார் புதியவன் யார்?தன்னை மேய்ப்பனிடம் எப்படி நடந்து கொள்வது புதியவனை எப்படி எதிர்கொள்வது..

                எல்லாமே யானை அறியும்.இவை பகுத்தறிவா?இந்த அத்தனை குணமும் மனிதரிடமும் உண்டு.அப்படியென்றால் யானை மனித நிலையை அடைந்து விட்டதா?
                நீங்கள் சொல்வதைப்பார்த்தால் மனிதன் விலங்குகளிடமிருந்து எந்த வகையிலும் வேறுபட்டு விடவில்லை என்ற கருத்தல்லவா தொணிக்கிறது.
                எப்படி இந்த முடிவுக்கு வருகிறீர்கள் சிந்தனை செய்?
                ஒருவேளை, கூடிய விரைவில் அவைகள் மனித நிலையை அடைந்து விடும் என்று சொல்ல வருகிறீர்களா?
                அப்ப்டியே அடைந்தாலும் பரிணாமத்திற்க்கு, அதாவது உயிரினங்கள் நிலைத்திருக்க பகுத்தறிவு தேவையா?
                சூழ்நிலைக்கேற்ப்ப உயிரிகள் தங்களை தகவமைத்துக்கொள்ள பகுத்தறிவு என்ற ஒன்று ஏன்?
                நான் பெரியார் வழியில்தான் சிந்திக்கிறேன்.
                இறைநம்பிக்கையை பற்றி பெரியார் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை.பின் வந்தவர்கள் தான் அவரை இறைமறுத்தவர் என்ற ஒற்றை அடையாளத்தோடு சுருக்கி அவரை குறுக்கி விட்டார்கள்.
                அவர் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து கேட்டுக்கொண்டே இரு என்றுதான் சொன்னார்..
                இந்த மூடநம்பிக்கையில் புழுத்து போன மக்களை…

                • சிந்தனை செய், இடை மறித்தலுக்கு மன்னிக்கவும். நான் சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.

                  மீரான் பாய்,

                  பெரியார் கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள் என்றும் அதை வணங்குபவனை காட்டுமிராண்டி என்றும் கூறியிருக்கிறார். நீங்கள் ஏன் சேம் சைடு கோல் போடுறீங்க.

                  உங்களுடைய மத நம்பிக்கை நண்பர் சிந்தனை செய் கூறும் அறிவியல் விளக்கத்தை ஏற்க மறுக்கிறது. இதுவே தான் வேறு விதத்தில் உண்மை விளிம்பியும் செய்கிறார். பொதுவாக மத நம்பிக்கையுள்ளவர்களுக்கு அறிவியல் விளக்கங்கள் தத்தமது நம்பிக்கைக்கு ஊரு விளைவிக்காத வரையில் ஏற்புடையதாக இருக்கும்.

                  நம்முடைய பகுத்தறிவுக்கு அடிப்படை அறிவியலே. களிமண்ணில் இருந்து மனிதர்கள் வந்தார்களா இல்லை பிரம்மன் படைத்தானா என்ற கேள்வி பரிணாமவியலுக்கு அடிப்படையா இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அதற்கு நிருபணம் ஒன்றும் இல்லை. அது மனிதனது சிந்தனை மட்டுமே. களிமண்ணில் இருந்துதான் மனிதனை கடவுள் படைதான் என்பதும் மனிதனின் சிந்தனையே. என்ன கடவுள் படைத்து விட்ட பிறகு அதில் பகுத்தறிவுக்கு வேலை என்ன வேண்டி கிடக்கு?

                  ஆனால் அறிவியல் வளர்ந்த பிறகு களிமண்ணும் கிடையாது பிரம்மனும் கிடையாது பரிணாமம் தான் உயிரினங்களின் தோற்றுவாய் என்று அறிவியல் நிரூபணம் கிடைத்த பிறகு பகுத்தறிவுக்கு பக்கபலம் கிடைக்கிறது அல்லவா? அது தான் பெரியார்களின் தோற்றுவாய்.

                  தக்கன பிழைக்கும் என்ற இயற்கை விதிபடி சூழல தான் உயிரினங்கள் இருப்பை தீர்மானிக்கிறது. இதனால் தான் ஆப்ரிக்க காடுகளில் தண்ணீரைத் தேடி யானைகளை அலைய வைக்கிறது. தண்ணீரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் வேறு வழியில்லை. அது அழிய வேண்டியது தான்.

                  ஆனால் மனிதன் அப்படியல்ல. மனித சமூகம் சூழ்நிலையை தனக்குத் தக்கவாறு மாற்றிவிட்டது. கிணறுகளை தோண்டியது. குளம் குட்டைகளை நிருவியது. இனி தண்ணீரைத் தேடி யானை போல நெடுந்தொலைவு அலைய வேண்டியது இல்லை என்ற அளவில் மட்டும் தக்கன பிழைக்கும் என்ற அறிவியலின் இயற்கை விதி வேலை செய்கிறது. இது தனி ஒரு மனிதனுக்கோ இல்லை விலங்குக்கோ பொருந்தாது. ஒரு சமூகத்தை பார்க்க வேண்டும்.

                  ஆனால் இயற்க்கை அறிவியலின் விதியானது சமூக விதிகளுக்கு அப்படியே பொருந்தாது. ஏனெனில் அது இயற்கையையோடு இயந்து வாழும் உயிரினங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். மனிதன் அதை தண்டி வந்துவிட்டான். குளத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால் யானை சமூகம் சில மாதங்களில் அழிந்துவிட கூடும். ஆனால் அடுத்த சில மாதங்களில் மழை பெய்ய கூடும். இப்பொழுது தண்ணீர் மனிதனது சொத்து. இனி இந்த பூப்பந்தில் தண்ணீர் ஒட்டுமொத்தமாக காய்ந்து விட்டால் தான் மனித சமூகம் அழிய கூடும். அதுவரை காசிருப்பவனுக்கு தண்ணீர் கிடைக்கும். மற்றவன் செத்துவிடுவான். இது வலுத்தவன் வாழ்வான் என்ற பரிணாமக் கொள்கை கிடையாது.

                  பரிணாமவியல் உள்ளிட்ட இயற்கையை இயக்கம் விதிகளை கண்டுபிடித்து விட்டோம். ஆனால் மனித சமூகத்தை இயக்கும் விதிகளை எப்படி கண்டு கொள்வது? தண்ணீர் எப்படி விற்பனைச்சரக்கானது அது எப்படி அப்படி மாறியது? அது எப்படி ஒட்டுமொத்த சமூகத்திடம் இருந்து சில கைகளுக்கு சென்றது என்பதை பகுத்து ஆராய்வது தான் சமூக அறிவியல். ஒரு சிலர் பணக்காரராக சுக வாழ்வு வாழ பல பேர்கள் நோகிரார்களே. அதை ஆராய்வது. அப்படி சமூக ஆய்வு செய்து அதை சரி செய்யும் போது தான் மனித சந்ததி அடுத்த தலைமுறைக்கும் செல்லும்.

                  எதுவும் மாறிக் கொண்டே இருக்கிறது என்ற இந்த இயற்கையின் பரிணாம விதி அப்படியே சமூகத்திற்கு பொருத்தினால் சமூகமும் மாறிக் கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை. நம்முடைய பகுத்தறிவும் தான். மாறாநிலை தத்துவங்களும் கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் என்றப் படைப்புக் கொள்கைகளுக்கும் அங்கெ வேலையில்லை.

                  • // இதுவே தான் வேறு விதத்தில் உண்மை விளிம்பியும் செய்கிறார். //

                    ஒரே ஒரு மாற்று கருத்து. பிரம்மன் இல்லை. அல்லாஹ் இல்லை, இயேசு இல்லை. சரி.

                    Nature is stupid என்று சிந்தனை செய் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். Nature stupid என்று வைத்துக்கொண்டால்

                    என்னுடைய அடிப்படையான கேள்வி, ‘பசி’ என்று ஒன்று இருந்தால் தான் இந்த ‘உலகம்’ இயங்கும் என்று ‘பரிணாமத்துக்கு’ எப்படி தெரிந்தது. ? இதற்கான பதிலை தான் நான் கேட்கிறேன்

                    1) ‘பசி’ இல்லை என்றால் விலங்குகளோ, மனிதர்களோ உழைக்க வேண்டிய அவசியமில்லை. நம் அனைவரும் எதற்காக ஓடுகிறோம்? ‘பசி’ என்று ஒன்று இருப்பதால் தானே ?
                    2) ‘பசி’ இல்லை என்றால் ‘வியாதிகளுக்கும்’ அவ்வளவாக இடமில்லை. ‘மருந்து, மாத்திரைகளும்’ அவசியமில்லை

                    அதே சமயம் ‘பசி’ இல்லாத மனிதனையோ, விலங்கையோ அறிவியல் உருவாக்கினால் பிறகு இங்கு அனைத்தும் மதிப்பிழக்கும்

                    • நண்பரே,

                      பரிணாமம் என்பது உயிர்களின் தோற்றம் பற்றி விளக்கும் ஒரு அறிவியல் கொள்கை. அவ்வளவுதான். இதை நண்பர் சிந்தனை செய் அவர்கள் சிறப்பாக
                      நமக்கு விளக்கியுள்ளார்.

                      உங்க கேள்விய அப்படியே உங்களுக்கே திருப்பிக் கேட்டு பாருங்க.

                      ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு ஏன் உணவை அடிப்படையாக கொண்டுள்ளது? எதற்காக தண்ணீர் தேவை,எதற்காக காற்றுத் தேவை, எதற்காக சூரிய ஒளித் தேவை? எதற்காக இந்த பூமி சுற்றுகிறது?

                      இதெல்லாம் இல்லாமலேயே உயிரினங்கள் வாழ்வதற்கான ஒரு ஒழுங்கமைப்பை ஏன் அந்த அறிவார்ந்த வடிவமைப்பால் செய்ய முடியவில்லை? Nature is stupid என்றால் அது அறிவார்ந்த வடிவமைப்பிற்கு எதிர்பதம். இன்னும் புரியும் படி சொன்னால் ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு செய்யக் கூடிய எந்த செயலையும் இந்த இயற்க்கை செய்வதில்லை.

                      But to me nature is neither stupid nor intelligent.

                    • இன்னொரு முக்கியமான விடயம்.

                      நீங்க பசின்னு சொல்றீங்க. அதை அறிவியல் உயிர்களுக்குத் தேவைப்படும் எனெர்ஜி என்று கூறுகிறது. அதாவது நீங்கள் ஒரு உயிர் என்றால் இரண்டு செயல்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒன்று சாப்பிடுவது மற்றொன்று மறு உற்பத்தியில் ஈடுபடுவது இவை இரண்டும் உயிர்கள் எனப்படும் அனைத்திற்கும் பொருந்தும்.

                      இது தான் உயிர்கள் தலைமுறைகளாக வாழ்வதற்கான முதல் விதி. அடுத்ததாக சூழலுக்கு தக்கன பிழைக்கும் இயற்கையின் இன்னொரு விதி. இது தான் இறைச்சி மட்டுமே சாப்பிடும் உயிரினங்களை புள் பூடுகளை சாப்பிட வைக்கும் .புல் பூடுகளை சாப்பிடும் உயிரினங்களை இறைச்சியையும் சாப்பிட வைக்கும். இதற்கு தக்காதவை அழிந்து விடும்.

                      இயந்திரங்களை இயக்குவதற்கு கூட உள்ளீடு வேண்டுமல்லவா. இன்னொரு முக்கியமான விசியம். ஒரு ஆற்றல் என்ற வகையில் இங்கே எதுவும் அழியப் போவதில்லை. ஒன்று இன்னொன்றாக மாறுகிறது அவ்வளவுதான்.

                      இயக்கம் இல்லாத எனெர்ஜி இல்லாத எந்த பொருளும் இங்கே இல்லை.

                    • இன்னொரு கேள்வியை கேட்க மறந்து விட்டேன்.
                      பசி இல்லை சரி. மறு உற்பத்தியைப் பற்றி கேட்க மறந்து விட்டீர்களே.

                      நீங்க சாப்பிட மாட்டீங்க ஆனா குழந்தைய மட்டும் பெத்துகிட்டா என்னவாகும்.
                      புலி மான சாப்பிடாம விட்டா என்னவாகும். மான் செடி கொடிகளை சாப்பிடாம விட்டா என்னவாகும். செடிகொடிகள் ஒளிசெர்க்கை மூலம் உணவை சூரிய ஒழி மற்றும் தண்ணீரில் இருந்து தயாரித்து கொள்கின்றன. விலங்கினங்களுக்கு பச்சையமணி (cloroplast) இல்லாததால் உணவை சொந்தமாக தயாரிக்க முடிவதில்லை. எனவே தாவர வகைகள் தாம் ஏனைய உயிரினன்ன்களுக்கு அடிப்படை. அதை வைத்தே நாம் ஊனுண்ணிகள், ஒட்டுண்ணிகள், தாவர் உண்ணிகள், அனைத்துண்ணிகள் என்று பிரிக்கிறோம்.

                      எனவே புலிக்கு பசியில்லை என்றால் மான் என்ற ஒன்று தோன்றியிருக்க தேவைபடாது. தாவர உண்ணிகள் என்று ஒன்று தொன்றியிருக்கவிட்டால் புல் பூண்டு செடி கொடிகள் தேவைப்படாது. மாமிச உண்ணிகள் தோன்றியிருக்காது. எனவே இங்கே பசி என்பதற்கு பின்னணியில் ஏரளாமான விசியங்கள் உள்ளன.

                  • செல்வம்
                    பெரியாரின் சிலைக்கு கீழே இருக்கும் வாசகம்,அதாவது நீங்கள் சுட்டிக்காட்டிய பொருள்தரக்கூடிய வாசகம் பெரியாருடையது அல்ல என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.இதை விபரம் தெரிந்த பெரியாரியர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளலாம்.
                    அவர் கடவுள் இருக்கிறானா இல்லையா என்பதை பற்றி வாழ்நாளெல்லாம் உட் கார்ந்து ஆராய்ச்சி செய்தவர் இல்லை.அவரின் கவலையெல்லாம் மக்களை பற்றியதாகவே இருந்தது.
                    மக்களின் நலனுக்கும் அவர்களின் தன்மானம் சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்ப்படும் என்றால் அந்த கடவுளையும் மதத்தையும் அழித்து ஒழிப்போம் என்பதே அவரின் சங்கநாதம்.
                    ஒரு தீவிர கடவுள் மறுப்பாளராக மட்டும் அவர் இருந்திருந்தால் வைக்கம் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி இருக்க மாட்டார்.
                    வைக்கம் வீரர் என்ற பட்டப்பெயரோடு அவர் அழைக்கப்படுவதற்க்கு காரணமான அந்த போராட்டம் கோவிலுக்குள் மக்களை அழைத்துச்சென்று அவர்களின் கடவுள் நம்பிக்கையை சுயமரியாதையோடு வெளிப்படுத்துவதற்க்கானேயன்றி கோயிலில் குழப்பம் விளைவிக்க அல்ல.இதுதான் பெரியார்.
                    நான் சேம்சைட் கோல் போடக்கூடக்கூடியவன் அல்ல.யாரையும் தாஜா செய்பவனும் அல்ல.
                    பெரியாரை சரியாக புரிந்து கொண்டே பேசுகிறேன்.ஏற்ப்பவற்றை ஏற்ப்பேன் விடுபவற்றை விடுவேன்.
                    அவர் ஒரு சமூக விஞ்சாணி அறிவியல் விஞ்சாணி அல்ல.அவருக்கு கடவுளைப்பற்றிய கவலை அல்ல.மக்களைப்பற்றியே அவரின் சிந்தனை.
                    அவரின் அனைத்து கருத்திற்க்கும் அனைத்து போராட்டத்திற்க்கும் பின் இருந்த சமூக அக்கறை கொண்டே நான் பெரியாரை பார்க்கிறேன்.பெரியார் நிறைய முரண்பட்டார்…
                    பெண்கள் திருமணம் முடிக்க வேண்டாம் என்றார்.கூந்தலை வெட்டிவிடுங்கள் என்றார்.பிறகு அவரே ஒரு பெண்ணை திருமணமும் செய்தார்.அவருக்கு கூந்தல் வெட்டப்படவில்லை.
                    நான் இவற்றை நேரடி அர்த்தம் கொண்டு, அவரை இகழக்கூடியவனாக இல்லை.அதற்க்கு பின் உள்ள அவரின் ஆவேசம் அந்த ஆவேசத்திற்க்கான நோக்கம் இதுதான் நான் பார்க்கும் பெரியார்.
                    போதும்…இது பெரியார் பற்றிய விவாதம் அல்ல.
                    பரிணாமத்தை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

                  • செல்வம்
                    விவாதம் பரிணாமம் பற்றியதுதான் மத கருத்துகள் பற்றியது அல்ல.
                    களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்ற என தனிப்பட்ட மத நம்பிக்கையை நான் இங்கு வந்து திணிக்கவில்லை.அது தனி.
                    ஒன்றிலிருந்தே அனைத்தும் பரிணாமம் பெற்றது என்ற உங்கள் அறிவியல் கருத்திற்க்கு எனக்கு ஏற்ப்படும் சந்தேகத்திற்க்கு விளக்கம் மட்டுமே நான் கேட் கிறேன்.இதற்க்கான விளக்கம் எனக்கு வந்து விட்டதென்றால் களிமண் கதை பிசுபிசுத்து போகும்.
                    இன்னொரு அம்சமும் இருக்கிறது.
                    கடவுளைப்பற்றிய நம்பிக்கை உலகம் முழுக்க பெரும்பாலான மக்களிடம் உண்டு.அது எப்படிப்பட்டதாக இருக்கிறது? கடவுளுக்கான இலக்கனத்தை எல்லோரும் ஒரே மாதிரிதான் கொண்டிருக்கிறார்களா?
                    மனிதனைப்போல்வே கடவுளை உருவக படுத்தக்கூடிய தனமைதான் பலரிடம் நிறைந்து இருக்கிறது.
                    இதுவே கடவுளைப்பற்றிய புரிதலை பகுத்தறிவு வாதிகளிடமிருந்து துரத்தி விடுகிறது.பெரியார் உட்பட.
                    நான் உங்களிடம் கேட்பது மிக எளிமையான கேள்விதான்..
                    பரிணாமத்தால் வளர்ச்சிதை மாற்றத்திற்க்கு உள்ளான உயிரிகள் பல்வேறு வடிவம் பல்வேறு வண்ணம் பெற்று மாறிக்கொண்டே இருக்கின்றது.இவற்றில் மடிந்து போனவைகளும் உண்டு.
                    //இதனால் இதனை இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை
                    அவன் கண் விடல்//
                    என்ற பகுத்தறிவு பெற்றது எப்படி?
                    //குளத்தை மனிதன் வெட்டினான் .காட்டிற்க்குள் தண்ணீர் பஞ்சம் அதனால் யானை ஊருக்குள் வந்து மனித்னோடு ஒன்றி விட்டது//
                    என்றால்,
                    காட்டை அழித்து நாசப்படுத்தியதே மனித வேலைதானே.
                    எந்த விலங்கு எந்த மிருகம் இந்த வேலையை செய்தது?
                    ஒரு மதம் கொண்ட யானை கூட்டம் அழித்து ஒழித்த காட்டு வளம், மனித கூட்டம் அழித்து ஒழித்ததில் கோடியில் ஒரு பங்கு இருக்குமா?
                    இதற்க்கான காரணம் என்ன?
                    மனிதனின் பகுத்தறிவு.
                    ஒன்றைக்கொண்டு ஒன்றை அறிவது பகுத்தறிவு.
                    கண்னால் பார்த்தும் காதால் கேட்டும் மூக்கால் முகர்ந்தும் நாவால் ருசித்தும் தோலால் உணர்ந்தும் அறிந்து கொள்வது மனிதன் தவிர அத்தனை உயிரினங்களும்.
                    மனிதன் ஒருவனே அத்தனையையும் அளந்து கணித்து தன்னை உயர்த்தி கொண்டே வருகிறான்.
                    இதை பரிணாமம் எப்படி வரையறுக்கிறது?
                    எப்படியாவது கடவுளை இல்லாமலாக்க வேண்டும் என்று வரிந்து கட்ட வேண்டாம்.
                    கடவுளை மறந்து விடுவோம்.அவன் இருக்கட்டும் இல்லாமல் போகட்டும்.
                    நாம் அறிவியல் கொண்டே பரிணாமம் ஆராய்வோம்.

  5. மீராசாஹிப்,

    weekend என்பதால் நான் இங்கே இருக்க மாட்டேன். எனவே ஏன் பதில் திங்கள்கிழமை தருகிறேன். உங்களை காத்திருக்க செய்வதற்கு மன்னிக்கவும்.

    • Mr Sindhanai Sei, Thanks for your lengthy reply 🙂

      Let’s say that ‘evolution theory’ is 100% correct and it’s beyond doubt

      Science answered how it evolved.

      To elaborate

      1) How ‘nature’ knows that there has to be a ‘male’ and ‘female?
      2) How it knows the importance of ‘sexual reproduction’? But trees does reproduction on its own (eg banana tree) and some via seeds.
      3) Chameleon has a unique feature compared to anything.
      4) Normally females conceive. But, long before I read in news that one of the ‘male creature’ (lives in water) conceives

      From where ‘nature’ obtained this intelligence? From which source ‘nature’ obtained this intelligence? Which source? ( eg Sand, Water, clay, rocks, mountains, stars, planets???) From where?

      • Mr. TruthSayer,

        Sorry for saying this again and again, but you have a fault in the basic understanding of evolution. You assume that evolution has to somehow ‘know’ things and once something evolves, it stays or that evolution has some kind of goal in mind. That is absolutely not the case. Lets take your questions one by one.

        1&2. HAS to be male and female and sexual reproduction

        No, there is absolutely no need for there to be male and female. There are definitely much more advantages if the DNA comes from two sources rather than one. Even in early eukaryotic cells where the early origins of sex split is considered to have taken place, you can clearly see the advantages. If the reproduction is purely asexual, then damaged DNA cannot be repaired effectively and neither can novel traits be passed off and unfavorable traits be suppressed successfully from one generation to the next. For example, if a population is infected by a parasite for example, asexual reproduction will mean lower survival rate or evolution of resistance at a much slower rate than sexual reproduction. Please bear in mind that sexual reproduction here can mean something as simple as Horizontal gene transfer where a cell gets a copy of the DNA from another cell to compare with before splitting via mitosis. Recent research has shown that sexual reproduction i.e. just DNA comparison can remove the ‘limit’ of speed of evolution enabling a population to adapt to rapid changes much more effectively. And as always, the population and trait that most fits is passed on. There are also tons more experiments and research being carried on in this area and this is one of the most hot topics in evolutionary biology.

        Also, even with its widespread nature, sexual reproduction isnt all that important in nature. Even with organisms that have sexes, it doesnt necessarily mean that they will reproduce sexually. There are plenty of organisms that reproduce asexually even with sexes using methods such as parthenogenesis (growth of embryos without fertilization of egg) in animals and apomixis in plants. And one more thing. It also doesnt mean that once something starts reproducing sexually, that will be the case forever. If the environmental pressures are right, they can shed the sexual reproduction capability. Even more, it is not mandatory that there HAS to be male and female always. There are organisms in nature where the entire population is female only. No male has ever been observed and they reproduce through parthenogenesis alone without ever needing a male. So to answer your questions, no we dont NEED male and female even for sexual reproduction and nature certainly doesnt make this a must.

        Also the banana tree example that you gave doesnt really work. That is because the banana we see and consume today has been specifically bred to eliminate seeds. They have been bred over generations carefully to not form seeds. They actually have three sets of genes (triploids) compared to the usual two found in wild bananas. You can go and see for yourself how a wild banana looks or google image search. Same applies to almost all crops we cultivate. They have been bred over thousands of years to eliminate unwanted traits which is another method of evolution i.e. evolution by artificial selection.

        3. Chameleon feature

        Not really no. There are tons of animals in nature that do camouflage as a defense mechanism. Camouflage is really common as a survival mechanism among organisms and even active camouflage like chameleon is not unique. Take a look at the video below for example, where an octopus exhibits far better active camouflaging capability than chameleon. Again, we think its unique due to popular thought but its not unique at all.

        https://www.youtube.com/watch?v=eS-USrwuUfA

        4. Female conception

        Just one of many methods. Many organisms carry the fertilized eggs in different location ranging from mouth to stomach to body, etc. Seahorse for example, conceive as you said. The female ejaculates the fertilized egg into a pouch the male has. But it is not mandatory that either the male or female has to ‘conceive’. Many fishes and frogs for example, fertilize completely outside either parent’s body. Both parents shed their respective gametes into the environment and then the fertilization takes place completely outside the body. There is no one fixed rule when it comes to conception of the young too.

        Coming to your final point, that word right there, ‘Intelligence’ is the crux of the misunderstanding. Do we have any evidence of intelligence being imparted? We know and have proven that just by natural selection, organisms are able to adapt to various environmental pressures and thrive while developing new and novel traits to ensure survival. Thats all there is to life as we know. There is no design or intelligence or knowledge. Its just a very, very, very long time and natural selection at work. Nature is not intelligent, its stupid. Whatever will survive the current environmental pressures and conditions the best, are selected for and they thrive. If the conditions change, it may very well get wiped off and another completely insignificant organism may thrive. The classic example of this are the dinosaurs. They got wiped out due to the inability to change fast enough and that pried open a niche where our mammalian ancestors could survive. Nature/natural selection has absolutely zero foresight or intelligence. 98% of all living beings that were alive on earth so far have gone extinct. The fundamental thing here is that you assume, nature and by extent life has intelligence. It really doesnt. It just selects traits that are best suited for survival in current condition and thats it. Please refer back to the laryngeal nerve example i gave above. That should prove that there is no ‘intelligence’ in nature.

        • Mr Sindhanai Sei, Thanks for your reply. There’s something else which proved the ‘existing of intelligence’ and that’s beyond science. What could that be ? 🙂

          • I probably missed the thing you are talking about. Ill try to look it up but in the meantime, could you entertain a request of mine?

            Could you please share this proof and the existence of intelligence? And if its not too much to ask, could you also some details about how they proved it and what we can do to verify it?

              • Science is not holy or absolute. Science will accept anything that produces independently verifiable claims. But nothing beyond this exists. Anything that claims itself beyond science is either not true or not able to produce verifiable proofs yet.

                And the burden of proof rests on the person who claims somethings. For example, I can claim that Abdul Kalam’s ghost came to me and said that Modi is evil. Now who has to prove that the above said is true? Me right? If I am just repeating my statement and claiming that it is beyond your understanding and you have to prove me false, can you do it? This is how reversed burden of proof works.

              • Mr. Truth Sayer,

                Could you show me the proof that is with me always and beyond science? I dont find any and if there is a proof like you say that i am blind to, i would certainly like to correct myself. Ill even give you the steps needed to do the same:

                1. Show that there is something beyond science. Since science is the study of everything natural, what you are claiming here is that there is something supernatural. So lets begin with that.

                2. Next, we have to show that whatever this supernatural thing maybe, it is with everyone in this world, always.

                3. And after these two are done, we have to prove that it is intelligent.

                4. Then, we need proof that it indeed can interfere in the natural world.

                5. After that, the next step would be to prove that this supernatural thing indeed had a hand in the creation of life or humans as we know it.

                Lets make it simple and go step by step. Since you are claiming to have knowledge of something supernatural and that it can be proven by something other than science, could you please share using what method we can prove it? Lets start from step 1 and go from there.

                • Dear Sindhanai Sei,

                  I see nature as nature and not as science. Following are my understanding about nature and I feel there’s some intelligence exists

                  1) When there’s a start there must be an end. All of the creatures there were born on this earth are going to die one day or another.
                  Similarly ‘earth itself’ is a creature. In order to destroy or put en end to earth ‘nature’ needed something extra-ordinary. ‘Animals’, ‘Plants’, ‘Trees’, ‘Insects’ are not capable of destroying earth. Hence, nature created (in my point of view) a ‘human being’ to destroy ‘earth’ slowly but steadily

                  2) We are all aware that animals can be categorized into Herbivores, Omnivores and Carnivores. Why ‘Omnivores’ eat only ‘non-veg’ and why ‘Herbivores’ eat only ‘veg food’? You can say either it’s nature (or) by practice.

                  What will happen if ‘Omnivores’ starts eating ‘veg’? If this is the case, assume the count of ‘deers’, ‘wildbeasts’ and ‘buffaloes’ and the amount of ‘fishes’ in water. That will severely impact nature in various ways particularly food-chain. Do you agree ?

                  3) And the all important for existence of intelligence is ‘hunger’. This is the one which keeps ‘world very active’ and this in turn leads to ‘Diseases’. ‘Diseases’ in turn leads to scientific inventions (not all)

                  Birth, Death and Sexual reproduction happens by natural selection. Ok. For Birth, Death and Sexual reproduction this world need not to be active.

                  How about ‘hunger’? How ‘nature’ knows that without ‘hunger’ this world WONT be active? This was the ‘core point’ of Drama which was starred by ‘Kathaadi Ramamoorthy’

                  I am not aware of any animal and human being who can live without food and even trees as well It’s for the ‘very reason’ we work even animals as well.

                  Science can’t challenge ‘hunger’. If science creates a ‘human being’ or ‘animal’ without ‘hunger’ imagine how this earth will be? ‘Human beings’ and ‘Animals’ need not to try anything

                  Thanks

                  • Lets take your questions one by one.

                    1. No. Absolutely nothing extra ordinary is needed. Even for destroying earth, when Sun dies and becomes a red giant, earth will be swallowed and will be gone. Also,for destroying earth,just a bacteria or a virus that can mutate very rapidly is enough. No need to go for the scale of insects even. And for the premise that every living thing has to die one day, nope. There are organisms that are biologically immortal i.e. they can be killed actively but they dont die of old age. As long they avoid being killed by a predator for example, they can go on living forever.

                    http://www.bbc.com/earth/story/20150622-can-anything-live-forever

                    2. If there is scarcity of food, animals definitely change their nature of what food they eat. We think monkeys for example, usually dont eat meat and are herbivores, eating fruits, leaves, etc. But monkeys do certainly hunt and eat meat. Even the pinnacle of herbivore that we usually give, cows and deer, eat meat. See links below. If food is available, there is no need for them to change. After all, what advantage do they get by changing? But if the condition is that there is not enough food, herbivores can start eating meat and carnivores can start eating grass. We have a saying ” புலி பசித்தாலும் புல்லை தின்னாது”. Implying they are strict carnivores and eat only meat they hunt. This is false too. Tigers do indeed eat grass both in wild and in captivity. Again link below.

                    The crux of the issue with your point is that you assume animals change their nature all the time. No, thats not what evolution says. If the environmental conditions and pressures stay unchanging, they do not change. Evolution is the adaptation of living beings due to changes in environment. Environmental pressures cause the animals to change and not vice versa.

                    http://www.smithsonianmag.com/smart-news/when-herbivores-arent-poor-chicken-got-eaten-cow-180951115/

                    https://www.youtube.com/watch?v=LdnlPIk_ERs

                    https://worldbuilding.stackexchange.com/questions/41417/is-it-possible-for-an-herbivore-to-evolve-into-a-carnivore

                    3. You have it backwards again. For birth, death and reproduction, we NEED an active world. In a passive world, nothing will happen. Lets take a world full of photons for example. Lets remove any sort of ‘hunger’. Which in the case of photons would be interaction with other photons to form fundamental particles. They just keep zipping around but cannot do anything. Then there would be absolutely nothing except photons. There is no activity in this world since photons dont loose energy. Therefore, there is no need for hunger. Its the active world that creates the need for interaction, absorption of energy, etc. and what we call ‘hunger’. Its not the other way around where ‘hunger’ creates an active world.

                    To put it simply, its not that without hunger this would WONT be active. Its that, if you need any kind of activity, that activity needs an input whether it be matter or energy. It can be something as fundamental like gravitational attraction for two particles to come close enough to interact. This input of matter or energy is what we call hunger. Sure a world can exist just passively, but nothing would come out of it. Imagine a world full of inert gas. Absolutely no reaction to form anything.

                    Hunger is the by-product of an active world. For any activity to happen, it NEEDS input, which is what we call hunger. Its not the other way around where hunger keeps the world active. The act of the world and the laws enabling activity, created hunger i.e. need for actively seeking input. Its not the other way around where seeking input created an active world.

                    • I had gone by Logic and you used science to answer to those queries

                      // The crux of the issue with your point is that you assume animals change their nature all the time // Sorry, I did not mean this

                      // But if the condition is that there is not enough food, herbivores can start eating meat and carnivores can start eating grass //

                      Let us assume ‘Omnivores’ does not have enough food. The question which needs ANSWERING is “What factors will lead them to not have enough food ? and Why ???”

                      I did not mean ‘ACTIVE’ using scientific (or) biologic terms. Lets assume this scenario

                      // Therefore, there is no need for hunger //
                      a) If there’s no need for hunger, ‘first of all’ why should we feel hungry ?
                      b) Why this world did not remain passive ?
                      c) With scientific advancements, why ‘Science’ can’t provide medicines / tablets to all humans / animals so that we can remain passive ? Why should we work hard / stress ourselves when ‘Science’ can provide such things ? THere’s nothing wrong in using science right
                      d) Why ‘evolution’ made ‘humans’ and ‘animals’ to run for their daily life?
                      e) What will be the SEA LEVEL now if ‘animals which lives in water’ never ever felt hungry for all these billions of years ?
                      f) What will be the ‘density of forests’ had human ‘never cut down any tree’ for all these billions of years ?

                      In Short, how this world will be, had none of the creature was hungry for all these billions of years???

  6. என்னுடைய கேள்வி நேரடியானது மற்றும் யதார்த்தமானது. ஒரு விஞ்ஞான பார்வை இல்லாதவனின் கேள்வி

    நீங்கள் இந்த இரண்டு ‘5.1.1.1.1.1.1.1.1.2 and 5.1.1.1.1.1.1.1.1.3’ ரிப்ளைகளில் சொன்னதை தான் நானும் ‘6.1.1.1.1.1.2.1.1.1ல்’ கேட்டு இருக்கிறேன்

    Proto-chicken and proto-rooster மூலமாக ‘முட்டை’ தான் முதலில் வந்தது என்று ‘சிந்தனை செய்’ அவர்கள் சொல்லி இருக்கிறார்.

    // ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு ஏன் உணவை அடிப்படையாக கொண்டுள்ளது? //

    என்னுடைய புரிதல் அது ‘அறிவார்ந்த வடிவமைப்பாக’ இருப்பதால் தான் ‘உணவை’ அடிப்படையாக கொண்டுள்ளது. அதனால் தான் மீண்டும் கேட்கிறேன் ‘பசி’ என்பது இருந்தால் தான் இந்த உலகம் இயங்கும் என்பது எங்கே இருந்து வந்தது ?

    இல்லை ‘பசி’ இருப்பது ‘அறிவற்ற அமைப்பு’ என்றால் விஞ்ஞானம் தான் ‘பசி’ என்பது ஏன் அடிப்படையாக உள்ளது என்று விளக்க வேண்டும் (அல்லது) விஞ்ஞானம் ‘பசி’ இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். ஏனென்றால் ‘பசி’ என்பது ‘அறிவற்ற வடிவமைப்பில்’ தானே வருகிறது

    • உண்மை விளம்பி,

      ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு ஒரு சிக்கலான உடலமைப்பை கொண்டியங்க தேவையில்லை. எடுத்துகாட்டாக பிரசவம். ஒரு புதிய உயிர் பிறப்பது இன்பமயமான நிகழ்வாக இருக்க முடியாது. அது ஒரு சிக்கலான நிகழ்ச்சியின் தொடர்ச்சியை கொண்டிருக்கிறது. அது கண்டிப்பாக அறிவார்ந்த வடிவமைப்பாக இருக்க முடியாது. ஆனால் ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு ஏன் இந்த சிக்கலான அமைப்பை வடிவமைத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள சற்று முயற்சி செய்தாலே போதும்.

      இயற்கையின் இந்த சிக்கலான வடிவமைப்பு மனிதர்களுக்கு என்று ஒரு தனித்துவமான வடிவமைப்பையும் விலங்குகளுக்கு என்று ஒன்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு வடிவமைப்பது இல்லை. அது வளர்ச்சிப் போக்கில் சூழலின் போக்கில் வந்து சேர்கிறது.

      பசி என்பதை நீங்கள் வெறும் தத்துவ ரீதியில் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள். அறிவியல் அதற்கு கூறும் விளக்கத்தை ஏற்க மறுக்கிறீர்கள்.

      பசி இருந்தால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்ற உங்களது புரிதல் அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது. இப்புவிப்பந்தில் 99 விழுக்காடு உயிரினங்கள் ஏற்கனவே அழிந்து விட்டன. மீதியிருக்கும் உயிர்கள் அழிந்தால் கூட இந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கும். இந்த விண்வெளி மண்டலம் இயங்குவதற்கு நீங்கள் பசியுடன் இருக்க வேண்டியது அவசியம் இல்லை.

      இந்த விண்வெளி மண்டலம் இயங்குவதற்கு கூட ஆற்றல் தேவைப்படுகிறது. உருண்டையான் இந்த பூமியில் நீங்கள் நிலையாக இருப்பதற்கு கூட ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த பூபி ஒரே நேர்கோட்டில் சுற்றி வருவதற்கும் ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது.

      உங்களுக்கு அறிவியல் ரீதியில் புரிய வைப்பது மிகவும் கடினம் என்றே நினைக்கிறன். சிந்தனை செய் உண்மையிலேயே கடினமாக முயற்சி செய்தார் என்றே நான் கருதுகிறேன்.

      வேறு யாரவது நண்பரை தெளிய வைக்க வேண்டுகிறேன்.

      • // இப்புவிப்பந்தில் 99 விழுக்காடு உயிரினங்கள் ஏற்கனவே அழிந்து விட்டன. மீதியிருக்கும் உயிர்கள் அழிந்தால் கூட இந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கும். இந்த விண்வெளி மண்டலம் இயங்குவதற்கு நீங்கள் பசியுடன் இருக்க வேண்டியது அவசியம் இல்லை. //

        நான் இந்த “உலக இயக்கம்” என்று சொன்னது வார்த்தை பிழை. உலகில் உள்ள “”உயிரனங்கள்”” இயங்க ‘பசியே’ பிரதானமானது

        விண்வெளி வெளி இயங்க ‘பசி’ முக்கியமில்லை சரி. ‘சிக்கலான கட்டமைப்பு’ உருவாக்கிய ‘பசியுடன்’ நாம் ஏன் வாழவேண்டும் ? ஏன் அறிவியலை பயன்படுத்தி ‘பசியை’ அடக்கக்கூடாது ? இதற்கான பதில் எங்கே ???

      • // ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு ஒரு சிக்கலான உடலமைப்பை கொண்டியங்க தேவையில்லை //

        I’d like to point one more thing here. When you find time please watch ‘Doctor vs Doctors’ episode in Neeya Naana

      • ///இந்த பூபி ஒரே நேர்கோட்டில் சுற்றி வருவதற்கும் ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது.///
        Just to point out. Please be cautious on the statement / words.

        • சுட்டிக் கட்டியதற்கு நன்றி நண்பரே.

          இந்த பூமியும் ஏனைய கோள்களும் உருவாகும் போது கிடைத்த விசையைத் தவிர
          பூமி சுற்றுவதற்கு என்று தனியாக எந்த ஆற்றலும் தேவையில்லை. ஏனெனில் பூமியின் இயக்கத்தை தடுப்பதற்கு என்று எதுவுமில்லை. ஆனால் நிலவு மற்றும் சூரியனின் அலைவிசைகள் பூமியின் சுழற்சி வேகத்தை மிகச்சிறிய(மில்லிசெகண்ட்ஸ்) அளவில் குறைக்கின்றன.

          இது தான் நான் படித்ததில் புரிந்து கொண்டது. இதை ஆற்றல் என்று கூறியது கண்டிப்பாக தவறான பொருளை தான் கொடுக்கும் என்பது புரிகிறது. என்னுடைய புரிதலில் தவறு தவறு இருந்தால் திருத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்.

  7. // பசி என்பதை நீங்கள் வெறும் தத்துவ ரீதியில் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள். அறிவியல் அதற்கு கூறும் விளக்கத்தை ஏற்க மறுக்கிறீர்கள். //

    My question was not philosophical and it has got some logic behind it. What description did science provide for this ? I did not mean why we feel hungry ?

    // பசி இருந்தால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்ற உங்களது புரிதல் அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது //

    I really don’t know what mistake did I do

    // இல்லை ‘பசி’ இருப்பது ‘அறிவற்ற அமைப்பு’ என்றால் விஞ்ஞானம் தான் ‘பசி’ என்பது ஏன் அடிப்படையாக உள்ளது என்று விளக்க வேண்டும் (அல்லது) விஞ்ஞானம் ‘பசி’ இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். ஏனென்றால் ‘பசி’ என்பது ‘அறிவற்ற வடிவமைப்பில்’ தானே வருகிறது //

    I did not get answer for this. Why science should not change it?

    Whatever it’s lets wait for Mr Sindhanai Sei to respond.

Leave a Reply to சிந்தனை செய் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க