privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஜிஎஸ்டி – வரியல்ல, வழிப்பறி ! ஆவடியில் ஆர்ப்பாட்டம் !

ஜிஎஸ்டி – வரியல்ல, வழிப்பறி ! ஆவடியில் ஆர்ப்பாட்டம் !

-

ஜிஎஸ்டி – வரியல்ல, வழிப்பறி! என்ற தலைப்பில் 08.07.2017 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6.30 வரை ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் (கிழக்கு – மேற்கு) மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தோழர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கிளை/இணைப்பு சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பினர். அப்பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் நின்று ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தனர்.

தலைமை உரையில் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை சாத்தியமில்லை என்றும், ஜிஎஸ்டி வந்தால் குஜராத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசுக்கு வரி வருவாயில் இழப்பு ஏற்படும் என்றும், என் பிணத்தின் மீது தான் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த முடியும் என கொக்கரித்த மோடி தான் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி புதிய இந்தியா பிறந்துள்ளதாக கூறியுள்ளார். சிறுதொழில், சிறு வணிகம், குடிசை தொழில் ஆகிய அனைத்தையும் அழித்து கார்ப்பரேட்களின் சந்தையை விரிவாக்குவதுடன், இலாபத்தையும் உத்திரவாதப்படுத்தியுள்ளார், மோடி. இதனை முறியடிக்க போராடுகின்ற மக்களுடன் கரம் கோர்ப்போம், இவ்வரசை தூக்கியெறிய புரட்சிகர அரமைப்புகளில் அணித்திரள்வோம் என கூறினார்.

அதன் பின்னர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் கண்டன உரையாற்றினார். தனது உரையில் அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்களுக்காக மக்கள் மீது கடுமையான வரி சுமையை சுமத்தியிருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதித்ததன் மூலம் விலைவாசி உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி பட்டியலில் இருந்து மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்றவைகள் எல்லாம் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அம்பானியின் எண்ணெய் நிறுவனத்திற்கும், அதானியின் மின்சார நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுவிட கூடாது என்றே விலக்களிக்கப்பட்டுள்ளது.

பீட்ஸா, பர்கர் போன்ற அன்னிய உணவு பொருளுக்கு 5% வரி, இட்லி, குடிதண்ணீர், கடலை மிட்டாய், சிலிண்டர், ஸ்டவ், குக்கர், துணி, பிரஷ், பேஸ்டு, பிளேடு ஆகியவற்றுக்கும் வரி விதிப்பு. ஜிஎஸ்டி வரியின் மூலம் இந்திய அரசு 30 இலட்சம் கோடி ரூபாய் வரை நிதி திரட்ட உத்தேசித்துள்ளது. இதில் இராணுவத்திற்கு மட்டும் 10 இலட்சம் கோடி செலவழிக்க உள்ளது. இதற்காகத்தான் இந்திய – சீன எல்லையில் பதற்றம் என கூறி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. இராணுவ தளவாடங்களை தனியாரிடம் வாங்க அனில் அம்பானியிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை வரி சலுகையாக அம்பானிக்கு அளிக்க உள்ளார்கள்.

2ஜி ஸ்பெக்டிரம் வழக்கில் உண்மை குற்றவாளிகளான டாடா, மிட்டல், அம்பானி போன்ற முதலாளிகளை பாதுகாக்கின்ற அரசு, அவர்களுக்கு வரி மற்றும் மானிய சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனை முறியடிக்க தேர்தல் அரசியலால் முடியாது, மாறாக புரட்சிகர அரசியலை வரித்துக் கொண்டு போராடுகின்ற அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என கண்டன உறையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க
ஒற்றை வரி பெயராலே
உழைக்கும் மக்களை
வழிப்பறி செய்யுது அரசாங்கம்
மோடியின் அரசாங்கம்

வரிக்கு மேலே வரியை போட்டு
உழைக்கும் மக்களை
சுண்டுது அரசாங்கம்
மோடியின் அரசாங்கம்

சிறுவணிகர்களை ஒழித்துக்கட்டி
வர்த்தகம் எல்லாவற்றையும்
கார்ப்பரேட்டிடம் குவிப்பதற்கே
ஜிஎஸ்டி வரிவிதிப்பு

சிறுதொழில்களை ஒழித்துக்கட்டி
கார்ப்பரேட்களை வளர்ப்பதற்கே
ஜிஎஸ்டி வரிவிதிப்பு

நிரந்தர தொழிலாளர்களை ஒழித்துக்கட்டி
காண்டிராக்டு முறையை தீவிரமாக்குவதே
ஜிஎஸ்டி வரிவிதிப்பு

கடலைமிட்டாய்க்கு வரிவிதிப்பு
பதினெட்டு சதவீதம்
பீட்ஸா, பர்கருக்கோ
ஐந்து சதவீதம்

திங்கிற பிஸ்கெட்டுக்கோ
பதினெட்டு சதவீதம்
தங்க பிஸ்கெட்டிற்கு
மூன்று சதவீதம் வரிவிதிப்பு

இட்லி, தண்ணீ, துணிக்கும் வரி
குக்கர், ஸ்டவ், சிலிண்டருக்கும் வரி
பேஸ்டு, பிரஷ், பிளேடுக்கும் வரி

எதற்காக எதற்காக?
அத்தியாவசிய பொருட்களுக்கு
அநியாய வரியை போட்டு

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது
எதற்காக, எதற்காக?
கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு
மானியங்கள் – சலுகைகளை
வாரிகொட்ட, வாரிகொட்ட

அதானி-அம்பானி
திருட்டுக் கும்பலின் எடுபிடி
மோடி-ஜேட்லி கும்பலே
ஏய்க்காதே ஏய்க்காதே
உழைக்கும் மக்களை ஏய்க்காதே!

கொல்லாதே கொல்லாதே
ஜிஎஸ்டி வரி என்ற பெயரில்
சிறுதொழிலை அழித்துவிட்டு
சிறுவணிகத்தை அழித்துவிட்டு
உழைக்கும் மக்களை கொல்லாதே!

செய்யாதே செய்யாதே
வரிகள் என்ற பெயரில்
உழைக்கும் மக்களிடம்
வழிப்பறி செய்யாதே!

நம்பாதே நம்பாதே
கார்ப்பரேட்டுகள் நடத்துகின்ற
வரியேய்ப்பை ஊக்குவித்து
சாமானிய மக்களை
வழிப்பறி செய்கின்ற அரசை
நம்பாதே நம்பாதே!

தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்
மக்கள் விரோத அரசு எந்திரத்தை
தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்
தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்
கார்ப்பரேட்களது காவல் அரசை
தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்

கட்டியமைப்போம் கட்டியமைப்போம்
மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை
கட்டியமைப்போம் கட்டியமைப்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.

  1. // ஜிஎஸ்டி பட்டியலில் இருந்து மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்றவைகள் எல்லாம் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அம்பானியின் எண்ணெய் நிறுவனத்திற்கும், அதானியின் மின்சார நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுவிட கூடாது என்றே விலக்களிக்கப்பட்டுள்ளது. //

    வினவு, செய்வது ஒன்னு-சைடு பகுத்தறிவாதம். அதையாவது ஒழுங்காக செய்யுங்களேன். வினவு ஆசிரியரே நீங்கள் தெரிந்து தான் எழுதுகிறீர்களா ?

    • உண்மையர் எதுக்கு அதானிக்கும், அம்பானிக்கும் ஜால்ரா தட்டுறார் ? சோழியன் குடுமி சும்மா ஆதாதே ? இந்த அதானி மற்றும் அம்பானி நிறுவனங்களில் உண்மையர் எம்புட்டு ஷேர் வைத்து இருக்கார்?

      • வாங்க ஒன்னு-சைடு பகுத்து

        நீங்க வினவுடன் என்ன ஷேர் வைத்து இருக்கிறீர்களோ அதே ஷேர் தான் நானும் அம்பானி, அதானியுடன் வைத்து இருக்கிறேன்

        என்ன நடந்து இருக்கிறது என்று தெரியாமல் ஒருவர் கட்டுரை எழுதுகிறார். அதற்க்கு பகுத்துக்கள் என்ற பெயரில் கமெண்ட் செய்கிறார்கள்

        உங்கள் வினாவிடம் கேளுங்கள். செய்வது ஒன்னு-சைடு பகுத்தறிவாதம். அதையாவது ஒழுங்காக செய்யுங்களேன்

    • பெட்ரோல் டீசல் மின்சாரத்திற்கு GST விதித்து இருந்தால் உடனே ஏழைகள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று வினவு கூப்பாடு போட்டு இருப்பார்கள் அதற்கு வழி இல்லை என்றவுடன் அதானி அம்பானி என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். மோடி என்ன செய்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் அதற்கு பெயர் தான் புரட்சி என்று லூசுத்தனமாக வினவு கூட்டங்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

      • மணிகண்டன் இந்த பொருட்கள் எல்லாம் GST வரிவிதிப்பின் கீழ் வந்து இருந்தால் எவ்வளவு அதிகபச்சம் வரி வந்து இருக்கும்? அதிக பச்சம் 28% . ஆனால் இவைகளுக்கு என்ன வரி என்றாவது தெரியுமா? 50%kkum மேல்! இப்ப தெரியுதா மோடி எப்படிஎல்லாம் மக்கள் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார் என்று?

        Taxes exceed actual cost of petrol; Rs 31.20 in retail price of Rs 60.70 in Delhi is tax

  2. ஸ்ஸ்ஸ்ப்பா….இப்போவே கண்ணை கட்டுதே

    வாங்க பகுத்து. தெய்வமகள் சீரியலில் வரும் அன்னியாரால் பாதிக்கப்படும் பிரகாஷ் போன்று செந்தில் மோடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது

    உனக்கு துப்பு இருந்தா நான் கேட்ட முதல் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே. மீண்டும் அந்த கேள்வியை பதிகிறேன்

    1) நீங்கள் அம்பானியாகவோ, அதானியாகவோ இருந்தால் எனக்கு எவளோ ஷேர் கொடுத்து இருப்பீர்கள் ?

    // பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இந்த பொருட்கள் எல்லாம் GST வரிவிதிப்பின் கீழ் வந்து இருந்தால் எவ்வளவு அதிகபச்சம் வரி வந்து இருக்கும்? அதிக பச்சம் 28% . ஆனால் இவைகளுக்கு என்ன வரி என்றாவது தெரியுமா? 50%க்கும் மேல்! இப்ப தெரியுதா மோடி எப்படிஎல்லாம் மக்கள் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார் என்று? //

    2) அந்த நொன்னைய தான் கேட்குறேன் என் GSTகுள்ள எடுத்துட்டு வரலைன்னு ? மொதல்ல காரணத்தை சொல்லு. அப்புறம் விவாதம் பண்ணு

    காரணத்தை சொன்னால் தானே ‘மணிகண்டன் வகையிராக்களுக்கும்’ என்னை போன்ற ‘கோமாளிகளுக்கும்’ மோடி எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் என்று தெரியும்

    அதை விட்டுட்டு இப்படி உதார் விட்றதும், உப்புமா கின்றதுமா இருந்த எப்படி பகுத்து ? வர்ட்டா

    • ஏன் லூசு உண்மையர், இதுக்கு மேலே என்ன விளக்கம் வேண்டும் உனக்கு? உன்னை போன்ற முட்டாள்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது இல்லையா…? பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இந்த பொருட்கள் எல்லாம் GST வரிவிதிப்பின் கீழ் வந்து இருந்தால் எவ்வளவு அதிகபச்சம் வரி வந்து இருக்கும்? அதிக பச்சம் 28% . ஆனால் இவைகளுக்கு என்ன வரி இப்ப என்றாவது தெரியுமா? 50%க்கும் மேல்! Taxes exceed actual cost of petrol; Rs 31.20 in retail price of Rs 60.70 in Delhi is tax…..கொள்ளையடிகின்றவன் யாரு நீயே யோசி? என்ன மயித்துக்கு இவைகள் எல்லாம் GST கீழ் வரவில்லை என்று யோசி… சிம்பன்சி போன்றே உருமுவதனை நிறுத்திவிட்டு யோசி….

      • செந்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பர்ரேல் 47 டாலர் என்று வைத்து கொண்டால் அதில் 159 லிட்டர் பெட்ரோல் கிடைப்பதாக வைத்து கொண்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19.18 ரூபாய்க்கு வரும்.

        பிறகு

        Entry tax, சுத்திகரிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு 5.65 ரூபாய்
        போக்குவரத்து செலவிற்காக 2.68 ரூபாய்
        மத்திய அரசின் Excise Duty 21.48 ரூபாய்
        பெட்ரோல் பம்ப் டீலர் கமிஷன் 2.57 ரூபாய்
        மாநில அரசின் வரி 13.92 ரூபாய்

        ஆக மொத்தம் 65.48 ரூபாய் வருகிறது (இந்த விலை தற்போது தினமும் மாறுகிறது).

        சரி இதில் எங்கே இருந்து அம்பானி அதானி வருகிறார்கள். அடக்க விளையான 19 ரூபாயில் 18 சதவீதம் GST என்று வைத்து கொண்டால் இழப்பு அரசுக்கு தானே. சும்மா ஒரு பேச்சுக்கு பெட்ரோலிய பொருட்களை GSTயின் கீழ் கொண்டு வருகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். பெட்ரோலின் விலை 35 ரூபாய்குள் வரும் அதில் எங்கே இருந்து அதானி மற்றும் அம்பானிக்கு லாபம் கிடைக்கும் ? அவர்கள் விற்க போவதும் 35 ரூபாய்க்கு தானே.

        பெட்ரோலிய பொருட்களை GST கீழ் கொண்டு வராததற்கு காரணம் மாநில அரசுகளின் வருவாய் இழப்பு ஏற்படும், அதனால் அவர்கள் அதை விட்டு கொடுக்க விரும்பவில்லை. அம்பானிக்கு அதானிக்கும் எந்த சம்பந்தமும் இதில் இல்லை.

        • // பெட்ரோலிய பொருட்களை GST கீழ் கொண்டு வராததற்கு காரணம் மாநில அரசுகளின் வருவாய் இழப்பு ஏற்படும், அம்பானிக்கு அதானிக்கும் எந்த சம்பந்தமும் இதில் இல்லை. //

          Exactly. மாநில அரசுகள் கேட்டு கொண்டதற்கு இணங்க GSTகுள் அவை சேர்க்க படவில்லை

          வினவின் வரிகளே அவர்களுக்கு ஆதாரம். ஆனால் மோடி நல்லதே செய்து இருந்தாலும் எவனும் அதை சொல்லக்கூடாது

        • உங்கள் வாக்கு மூலத்துக்கு நன்றி மணிகண்டன்… முதலில் GSTயில் ஏன் பெட்ரோல் வரவில்லை என்ற வியத்துக்கு முடிவுக்கு வருவோம்… அப்புறம் அம்பானி அதானி பற்றி விரிவா பேசுவோம்.

          ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ரூபா என்று வைத்துக்கொண்டாலும் அதற்கான வரி மட்டும் மத்திய + மானில வரி மட்டும் உங்கள் கணக்கு படியே 21.48 + 13.92 = Rs 35.40 வருதுங்க…இருபது ரூபா பெட்ட்ரோளுக்கு 35.40 ரூவா வரி என்றால் அது எத்தனை சதவிதம் என்று கணக்குபண்ணி சொல்லுங்க மணிகண்டன்! 170% kku மேலே வரி வருதே! இப்ப இதே பெட்ரோல் மற்றும் டிசல் GSTக்கு கீழ் வந்து இருந்தால் அதிகபச்சம் 28% தானே வரி வரும்! மோடியின் வில்லங்கம் புரியுதா உங்களுக்கு?

          • செந்தில் பெட்ரோல் GST கீழ் வந்தாலும் வராவிட்டாலும் அம்பானிக்கு வருமானங்கள் கிடைக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

            அம்பானி அதானிக்கு எங்கே வருமானம் வருகிறது தெரியும்மா ?

            5.65 ரூபாய் இதில் சுத்திகரிப்பு மற்றும் இதர செலவுகள் இதில் அவர்களுக்கு லாபம் வரும். அடுத்தது இன்று 47 டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்கினால் நாளை அதே கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் 50 என்று விலை ஏறினால் இவர்களுக்கு 3 டாலர் ஒரே நாளில் லாபம் கிடைக்கும். அதேபோல் இறங்கினால் இவர்களுக்கு பெரும் நஷ்டமும் ஏற்படும்.

            அடுத்தது போக்குவரத்து செலவு 2.68 ரூபாய் இதில் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் வரும்.

            அடுத்து பெட்ரோல் பம்ப் டீலர் கமிஷன் 2.57 ரூபாய் அதில் வருமானம் வரும்.

            கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளா போன்ற மாநிலத்தில் கூட இது தான் நிலை. கொச்சியில் இன்றைய பெட்ரோல் விலை 66.49 காசுகள். கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால் மாநில அரசின் வரியை குறைக்க சொல்லுங்களேன் பார்ப்போம், நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

            தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை 66.34 ரூபாய் அதாவுது கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவை விட தமிழகத்தில் விலை குறைவு.

            • இந்தியா போன்ற ஒரு முதலாளித்துவ நாட்டில் ரிலையன்ஸ் அம்பானி மற்றும் அதானி போன்ற முதலாளிக்கு வருமானம் வரவில்லை என்றால் தான் அது ஆச்சிரியமான விசயம் மணிகண்டன்…என்ன இவர்கள் விற்கும் பெட்ட்ரோலிய பொருட்ட்கள் GST யில் சேர்த்து அவற்றுக்கு இந்த முதலளாளிகள் வரியை கட்டவேண்டு இருக்கும்… இந்தியாவின் “கார்பெரெட் ஆண்டவன்” மோடியின் புண்ணியத்தில் பாராளுமன்ற கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மிகவும் ஏழைகளான இவர்களின் நிறுவனங்களுக்கு-இவர்களுக்கு வரிவிலக்கு கிடைத்துவிட்டது.. அதனால் இவர்களுக்கு ஆண்டுக்கு எத்தனை கோடி லாபம் அதிகரிக்கும் என்று கணக்கு போட்டு சொன்னால் உடனே குமார் போன்றவர்கள் கோவம் கொள்வார்கள்…சரி பல நூறு கோடிகள் இவர்களுக்கு லாபம் என்று வைத்துக்கொள்வோம்… கணக்குவழக்கு எல்லாம் இப்போதைக்கு வேண்டாம்..!

              உங்களிடம் கேரள அரசை கம்யுனிஸ்டு அரசு என்று யாரவது கூறினால் உங்களுக்கு ஏன் சந்தேகம் வரவில்லை..இந்தியா போன்ற முதலாளித்துவ நாட்டில் கம்ம்யுநிடு அரசு எப்படி சாத்தியம் மணிகண்டன்?

              மக்கள் நலனை நாடும் அரசாக பிஜேபி அரசு இருந்து இருந்தால் அது பெட்ட்ரோலிய பொருட்களுக்கான மத்திய அரசின் Excise Dutyயை 21.48 ரூபாயில் இருந்து குறைத்து இருக்கவேண்டியது தானே? முதலாளிகளுக்கு வரி விலக்கு அளிக்கும் மோடியால் தொழிலாளர்களை பரந்துபட்ட பாமர மக்களின் நலன்களை கவனிக்கமுடியவில்லை அப்படி தானே?

              • பிழைதிருத்தம் : என்ன இவர்கள் விற்கும் பெட்ட்ரோலிய பொருட்ட்கள் GST யில் சேர்த்து இருந்தால் அவற்றுக்கு இந்த முதலளாளிகள் வரியை கட்டவேண்டி இருக்கும்…

              • செந்தில் நிறைய விஷயங்கள் உங்களுக்கு புரியவில்லை. மன்மோகன் சிங் ஆட்சியின் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 150 டாலருக்கு மேல் விற்ற போது நம்மூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 ரூபாய் தான் கொடுத்தோம். தற்போது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் 47 விற்கும் போது நாம் பெட்ரோல் லிட்டருக்கு 67 ரூபாய் கொடுக்கிறோம். பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

                இது எதனால் என்று சொல்ல முடியும்மா ? உடனே அம்பானி மோடி அதானி என்று எதாவுது லூசுத்தனமா உளறி கொட்ட வேண்டாம்

                • நல்ல கேள்வி மணிகண்டன்…..நீங்களே வந்து விவாத வலையில் மாட்டிக்கொண்டீர்கள்! நன்றி… என் வேலை எளிமையாகின்றது மோடியின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலபடுத்த! அன்று கச்சா எண்ணெய் 150 டாலருக்கு மேல் விற்ற போது நம்மூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 ரூபாய்..தற்போது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் 47 விற்கும் போது நாம் பெட்ரோல் லிட்டருக்கு 67 ரூபாய் கொடுகின்றோம் என்றால் நீங்கள் தான் இதற்கு சூத்திரதாரியான இந்த அரசின் சார்பில் இந்த அரசை ஆளும் திரு மோடியின் சார்பில் பதில் அளிக்க வேண்டும்!

                  பெட்ரோல் விலை குறையாமைக்கு என்ன காரணம் மணிகண்டன்?

                  கச்சா எண்ணை விலை 300%மேல் குறைந்து உள்ளது… ஆனால் பெட்ரோலின் விலை வெறும் மூன்று ரூபாய் தானே குறைந்து உள்ளது மணிகண்டன்? இதற்கு காரணம் என்னவென்று மோடியிடம் கேட்டு சொல்லுங்கள்….!

                  • இந்த கேள்வியை நான் உங்களிடம் கேட்டு இருக்கிறேன், இது ஏன் என்று நீங்கள் ஆராய்ந்து அதற்கான பதிலை கொடுக்க வேண்டும். அந்த பதிலில் தான் 35.40 வரிக்கான விளக்கமும் இருக்கிறது.

                    இது நம் நாட்டில் மட்டும் அல்ல ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் இதை செயல்படுத்தி இருக்கிறார்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறினாலும் இறங்கினாலும் பெரியளவில் பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்காது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்வாறு செயல்படுவதற்கு காரணம் வேறு. நாம் நாட்டில் இவ்வாறு செயல்படுவதற்கு காரணம் வேறு.

                    ஒன்று மட்டும் நிச்சயம் சொல்வேன் அம்பானிக்காக மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் வரியில் எந்த சலுகையும் கொடுக்கவில்லை.

                    • பெட்ட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து உள்ள போதும் அதன் அடிபடையில் இந்தியாவில் விலையை குறைக்காத மோடியின் அரசு மக்கள் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது அல்லவா? அதற்கு நீங்கள் தானே பதில் அளிக்கவேணும் மணிகண்டன்? கச்சா எண்ணை விலை 300%மேல் குறைந்து உள்ளது… ஆனால் பெட்ரோலின் விலை வெறும் மூன்று ரூபாய் தானே குறைந்து உள்ளது மணிகண்டன்? இதற்கு காரணம் என்னவென்று மோடியிடம் கேட்டு சொல்லுங்கள்….! என் பார்வையில்மோடியின் அரசு மக்கள் விரோத அரசு தான்…

              • என்ன செந்தில் கேரளாவில் உங்கள் கம்யூனிஸ்ட் ஆட்சி தானே அவர்கள் தானே 14 ரூபாய்க்கு மேல் பெட்ரோலுக்கு VAT வரி விதிக்கிறார்கள், அவர்களை முற்றிலும் அந்த வரியை விலகி கொள்ள சொல்லுங்களேன் செந்தில்.

                இந்த வரி முழுக்க முழுக்க மாநில அரசின் கைகளில் உள்ளது அதனால் கேரளா கம்யூனிஸ்ட் அரசு நினைத்தால் இந்த வரியை முற்றிலும் விலக்கிக்கொள்ளலாம்.

                ஏன் செய்யவில்லை ? பதில் சொல்லுங்கள் செந்தில்

                • நீங்கள் பின்னுட்டங்களை முழுமையாக ,ஒழுங்காக படிப்பது இல்லை என்ற உண்மை உங்களின் மேல் உள்ள கருத்தின் அடிபடையில் உணருகின்றேன்… மேலே உள்ள எனது பின்னுடம் 2.1.2.2.1.1 ஐ படியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் அதில் தெளிவாக உள்ளது.! சிறு விளக்கம் இங்கே! இந்தியா ஒரு கம்யுனிச நாடா? இல்லையே! கேரளத்தில் நடப்பது கம்யுனிசத்தின் அடிபடையிலான ஆட்சி என்று நீங்கள் தான் பீற்றிகொள்கிண்றீகள் ! நான் இல்லை… சரி சரி எனது பின்னுட்டம் 2.1.2.2.1.1 ஐ படியுங்கள்.., அங்கிருந்து பதிலை அளியுங்கள்…!

          • எதிர் கட்சியாக இருப்பதில் தவறில்லை ஆனால் எதிரியாக இருப்பது தான் தவறு கம்யூனிஸ்ட்கள் பிஜேபியின் எதிரியாக செயல்படுகிறார்கள். இது தவறான நேர்மையற்ற அரசியல்

  3. உங்களுக்கு கேள்வி புரிகிறதா புரியாத மாதிரி நடிக்கிறீர்களா ?

    நீங்கள் சொல்வது GSTகுள் ‘பெட்ரோல் அண்ட் டீசல் வந்தால்’ அதன் விலை குறையும் என்பது. அது இங்கு இருக்கும் எல்லாருக்குமே தெரியும். இது தனி டிபார்ட்மென்ட்

    என்னுடைய கேள்வி வினவு போட்ட கட்டுரையின் அடிப்படையிலானது

    // / ஜிஎஸ்டி பட்டியலில் இருந்து மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்றவைகள் எல்லாம் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அம்பானியின் எண்ணெய் நிறுவனத்திற்கும், அதானியின் மின்சார நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுவிட கூடாது என்றே விலக்களிக்கப்பட்டுள்ளது. //

    மற்றும் தங்களை போன்றவர்கள் ‘மோடி ஏமாற்றுகிறார்’, ‘மோடி ஏமாற்றுகிறார்’ என்று கூப்பாடு போடுகிறீர்கள் அல்லவா அதற்காக மீண்டும் தெளிவாக கேட்கிறேகன்

    1) மோடி ‘பெட்ரோல் மட்டும் டீசலை’ பொறுத்தவரை எப்படி ஏமாற்றுகிறார் ?

    2) ஏன் மோடி ‘பெட்ரோல் மட்டும் டீசலை’ GSTகுள் ஏன் எடுத்து வரவில்லை ? இதற்க்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் தானே? அது என்ன காரணம்?

    3) மோடி ‘பெட்ரோல் மட்டும் டீசலை’ GSTகுள் எடுத்து வராதனன் மூலம் ‘அம்பானிக்கும்’, ‘அதனிக்கும்’ துணை போகிறார் என்றால் ஆதாரம் எங்கே ?

    மேல் உள்ள மூன்று கேள்விகளுக்கும் ஆதாரத்துடன் விடை அளிக்கவும்

    • என்ன உண்மையர்…!

      கேள்வியும் நீர் பதிலும் நீரா?

      1) மோடி ‘பெட்ரோல் மட்டும் டீசலை’ பொறுத்தவரை எப்படி ஏமாற்றுகிறார் ?
      2) ஏன் மோடி ‘பெட்ரோல் மட்டும் டீசலை’ GSTகுள் ஏன் எடுத்து வரவில்லை ? இதற்க்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் தானே? அது என்ன காரணம்?

      உமது பதில் : நீங்கள் சொல்வது GSTகுள் ‘பெட்ரோல் அண்ட் டீசல் வந்தால்’ அதன் விலை குறையும் என்பது. அது இங்கு இருக்கும் எல்லாருக்குமே தெரியும்.

      விரிவாக விவரம்:

      ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ரூபா என்று வைத்துக்கொண்டாலும் அதற்கான வரி மட்டும் மத்திய + மானில வரி மட்டும் உங்கள் கணக்கு படியே 21.48 + 13.92 = Rs 35.40 வருதுங்க…இருபது ரூபா பெட்ட்ரோளுக்கு 35.40 ரூவா வரி என்றால் அது எத்தனை சதவிதம் என்று கணக்குபண்ணி சொல்லுங்க மணிகண்டன்! 170% kku மேலே வரி வருதே! இப்ப இதே பெட்ரோல் மற்றும் டிசல் GSTக்கு கீழ் வந்து இருந்தால் அதிகபச்சம் 28% தானே வரி வரும்! மோடியின் வில்லங்கம் புரியுதா உங்களுக்கு?

      • ஒருவேளை நீங்க மத்திய அரசின் Excise Duty 21.48 ரூபாய் GST யின் கீழ் வராது என்று கூறினாலும் கூட ஒரு லிட்டர் பெட்ட்ரோளுக்கு(அதன் விலை Rs 19.18) மாநில அரசின் வரி 13.92 ரூபாய் என்பது 72.57% வரி வருதே….மணிகண்டன்! GSTயின் கீழ் வந்து இருந்தால் அதிகப்ச்ச வரியே 28% தானே வரி வந்து இருக்கும்? எதுக்கு மோடி 72% வரி போட்டு மக்களை கொடுமை படுத்தும் இம்சை அரசனாக இருகாரு ? பதில் சொல்லுங்க சாமி….!

  4. // என்ன மயித்துக்கு இவைகள் எல்லாம் GST கீழ் வரவில்லை என்று யோசி //

    என்ன மயித்துக்கு நான் யோசிக்கணும். அப்போ காரணம் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது. ஆனால் மோடியை விமர்சனம் செய்ய வேண்டும் என்ன மயித்துக்கு பகுத்து உங்கள நீங்களே சொல்லிக்கிறீங்க

    • ஏன் லூசு உண்மையர், பகுத்தறிவு கூட இல்லாத மந்தியா நீயி? பதிலை கொடுத்துவிட்டு தானே உன்னிடம் கேள்வி கேட்கின்றேன்… மறுபடியும் கேட்கின்றேன்…பதில் சொல்லு மதிகெட்ட மந்தியே! பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இந்த பொருட்கள் எல்லாம் GST வரிவிதிப்பின் கீழ் வந்து இருந்தால் எவ்வளவு அதிகபச்சம் வரி வந்து இருக்கும்? அதிக பச்சம் 28% . ஆனால் இவைகளுக்கு என்ன வரி இப்ப என்றாவது தெரியுமா? 50%க்கும் மேல்! Taxes exceed actual cost of petrol; Rs 31.20 in retail price of Rs 60.70 in Delhi is tax…..கொள்ளையடிகின்றவன் யாரு நீயே யோசி? என்ன மயித்துக்கு இவைகள் எல்லாம் GST கீழ் வரவில்லை என்று யோசி… சிம்பன்சி போன்றே உருமுவதனை நிறுத்திவிட்டு யோசி….

      யோசிக்க முடியவில்லை என்றால் கீழ் உள்ள என் பதிலை படித்தாவது உன் முட்டாள்தனத்தை போக்கிகொள்…மந்தியே…!

      ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ரூபா என்று வைத்துக்கொண்டாலும் அதற்கான வரி மட்டும் மத்திய + மானில வரி மட்டும் உங்கள் கணக்கு படியே 21.48 + 13.92 = Rs 35.40 வருதுங்க…இருபது ரூபா பெட்ட்ரோளுக்கு 35.40 ரூவா வரி என்றால் அது எத்தனை சதவிதம் என்று கணக்குபண்ணி சொல்லுங்க மணிகண்டன்! 170% kku மேலே வரி வருதே! இப்ப இதே பெட்ரோல் மற்றும் டிசல் GSTக்கு கீழ் வந்து இருந்தால் அதிகபச்சம் 28% தானே வரி வரும்! மோடியின் வில்லங்கம் புரியுதா உங்களுக்கு?

  5. இந்த விவாதத்தில் நாம் அனைவருமே புரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது

    எப்படி இங்கு நல்ல அரசியல்வாதிகளை பார்ப்பது கடினமாக உள்ளதோ, அதே போல் நடுநிலை ஊடங்கள் என்பது இந்நாளில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்

    அரசியல் கட்சிகளுக்கு எப்படி ஒரு நிலைப்பாடு இருக்கிறதோ அதே போல் தற்போது ‘பத்திரிகைகளுக்கும்’ ஒரு நிலைப்பாடு இருக்கிறது

    ஒரு பத்திரிகையில் யாரவது ஒருவர் ஏதாவது எழுதி விட்டால் அது தான் உண்மை என்றாகி விடுகிறது

    பிஜேபி ஆட்சி 100% நல்ல ஆட்சியா? ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளன ? அவை மக்களை சென்று அடைந்ததா என்பதை ஆராயலாம். அதில் தவறு இல்லை

    ஆனால் பிஜேபி எதை செய்தாலும் தவறு என்பது எப்படி சரியாக இருக்கும் என்று தெரியவில்லை

    பிஜேபிக்கு மட்டுமல்ல எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது பொருந்தும்

    • உண்மை விளம்பி,

      ஒருப் பத்திரிக்கையில் எழுதினாலே உண்மை என்றாகி விடாது. சரிதான். அப்போ எது சரி தவறு என்று நாம் நாட்டு நடப்புகளை வைத்தும் பார்க்க வேண்டும் தானே. பி.ஜெ.பி எத்தனை விழுக்காடு சரி என்பது அது எந்த தரப்பு மக்களுக்கு தீங்கிழைக்கிறது என்பதை வைத்து நாம் கண்டு கொள்ளலாம். அதுவும் ஒவ்வொரு பிரச்சினையையும் வைத்து தான் நாம் பரிசீலிக்க முடியும்.

      பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி என்பது அவற்றில் சில. பெட்ரோலுக்கும், மின்சரதிற்கும் வரி குறைப்பு பூனுலூக்கு வரி சலுகை என்பதும் நாப்கினுக்கு வரி அதிகம் என்பதையும் வைத்து மக்கள் விரோதபோக்கின் விழுக்காடு கணக்கு நாம் போடலாம்.

      • // துவும் ஒவ்வொரு பிரச்சினையையும் வைத்து தான் நாம் பரிசீலிக்க முடியும். //

        உண்மை

        // பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி என்பது அவற்றில் சில. பெட்ரோலுக்கும், மின்சரதிற்கும் வரி குறைப்பு //

        விவாதம் போய் கொண்டு இருக்கிறது

        // பூனுலூக்கு வரி சலுகை என்பதும் நாப்கினுக்கு வரி அதிகம் என்பதையும் வைத்து மக்கள் விரோதபோக்கின் விழுக்காடு கணக்கு நாம் போடலாம். //

        இதை நீங்களே சொல்லுங்களேன்

        ஆனால் அன்றாடம் பயன்படுத்தப்படும் ‘உப்புக்கு’ வரி போடவில்லை. இதற்கும் சேர்த்து கணக்கு போடுங்கள். இதை மக்கள் ஆதரவு போக்கு என்று எடுத்து கொள்ளலாமா ?

  6. ஒருவேளை பெட்ரோல் ,டீசல் ஆகியவை GST யின் கீழ் வந்து இருந்தால் அம்பானியின் ரிலைன்ஸ் பொட்ரோலிய நிறுவங்கள் எப்படி அதிகமான வரி சுமையை பெற்று இருக்கும் என்பதற்க்கான ஆதாரங்கள் கீழ் உள்ள செய்தி கட்டுரையில் உள்ளன… மணிகண்டன் போன்ற பிஜேபி ரசிகர்கள் படித்து பயன் அடையும்படி கேட்டுகொள்கின்றேன்…

    Compliance by petrol pumps under GST will raise costs: Industry
    http://www.hindustantimes.com/business-news/compliance-by-petrol-pumps-under-gst-will-raise-costs-industry/story-2KnwitA5VdCrTOgSDYLRJO.html

    Oil companies to face higher tax burden under GST: Parliamentary panel
    http://www.livemint.com/Industry/DNjFav8qlRKLVZ8pVCOAYM/Oil-companies-to-face-higher-tax-burden-under-GST-Parliamen.html

    கார்பரேட்டுகளுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் தான் மோடி செயல்படுவார் என்பதற்கான உறுதியான சான்றாக தான் இந்த இரு கட்டுரைகளும் உள்ளன. மணிகண்டனால் இந்த கட்டுரைகளை படித்து புரிந்துகொள்ள முடியாவிட்டால் தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கவும் நான் தயாராக உள்ளேன்.

  7. GST யில் இருந்து ஏன் பெட்ரோல்,டீசல் விடுவிக்கப்ட்டது என்பதற்கான பாராளுமன்றத்தின் வாக்குமூலம் :(என்னை நிறுவனங்களின் வரி சுமையை குறைக்க)

    Upstream oil and gas producers like Oil and Natural Gas Corp. and Oil India Ltd will face “substantial additional tax” liability under the proposed goods and service tax (GST) regime due to the clipping of existing tax breaks, a higher tax rate on services and the temporary exclusion of five hydrocarbons from the new indirect tax system, a parliamentary panel has reported.

    வினவு கட்டுரையில் கூறப்பட்டு உள்ள கீழ் உள்ள கருத்து , பாராளுமன்றத்தின் என்னை கம்பெனிகளின் வரி குறைப்புப்புக்காக தான் அவைகள் “”””அந்த ஹைட்ரோகார்பன் எண்ணை பொருட்கள் GSTயில் சேர்க்கப்படவில்லை””””” என்ற கருத்துடன் ஒருமித்து போவதனை நம்மால் உணரமுடியும்…. மணிகண்டன் போன்றவர்கள் உணர்வார்களா?

    வினவு கூறியது என்ன என்றும் பார்கலாம் :

    அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்களுக்காக மக்கள் மீது கடுமையான வரி சுமையை சுமத்தியிருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதித்ததன் மூலம் விலைவாசி உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி பட்டியலில் இருந்து மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்றவைகள் எல்லாம் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அம்பானியின் எண்ணெய் நிறுவனத்திற்கும், அதானியின் மின்சார நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுவிட கூடாது என்றே விலக்களிக்கப்பட்டுள்ளது.

    முடிவுரை :

    கம்யூனிஸ்ட்டுகாரன் ஒன்றும் ஆதாரம் இல்லாமல் மணிகண்டன் மற்றும் உண்மையர் போன்று மதிகெட்டு பேசமாட்டார்கள்…. என்பதற்கு ஆதாரமே மேல் உள்ள நான் கண்ட உண்மைகள்….! என்னை நிறுவனங்களை GST யில் இருந்து விடுவித்து அவற்றின் வரி சுமையை குறைப்பதன் மூலம் யாருக்கு லாபம்? அந்த நிறுவங்களை நிர்வகிக்கும் முதலாளிகளுக்கும் , மேலும் அந்த நிறுவங்களில் பங்கு வைத்து உள்ளவர்களுக்கும் தானே லாபம்… அந்த நிறுவங்களின் பங்கு விலை ஏறும்… மேலும் வரி சுமை குறைவதன் காரணமாக அவர்களுக்கு லாபம் அதிகரித்து பங்குகளுக்கான டிவிடன்ட் அதிகம் கிடைக்க வழி ஏற்படும்….

  8. This has been answered. Why states did not object then except ADMK ? It’s a collective decision after table’ing the bill in parliament.

    Are politicians of all states not aware of this ?

    // மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதித்ததன் மூலம் விலைவாசி உயர்ந்துள்ளது // This is also not completely true

    • TruthSayer,பாராளுமன்ற கமிட்டி GST தொடர்பாக வைத்த அறிக்கையின் அடிபடையில் பேசிகிட்டு இருக்கேன்…அந்த அறிக்கை பெட்ரோலிய பொருட்ட்களை GST யில் சேர்த்தால் பெட்ரோலிய நிறுவங்களுக்கு வரி சுமை அதிகரிக்கும் என்ற அந்த கமிட்டியின் கருத்தை உங்களுக்கு பல முறை எடுத்துக் கூறியாயிற்று.. அந்த பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கை படிதான் பெட்ரோலிய நிறுவங்களுக்கு வரிசுமையை குறைக்க மோடியின் அரசு பெட்ரோலிய பொருட்ட்களை GST யில் இருந்து விலக்கி வைத்து உள்ளது என்பதனையும் நிருபிதாயிர்று…இந்த மோடியின் அரசு மக்களுக்கானது அல்ல அது கார்போரெட்டுக்ளுக்கனது என்பதும் நிருபணம் ஆகிறது…இப்ப நீங்க பேசுங்க TruthSayer!@

  9. மோடியின் ஏமாற்று வேலை……

    ஒரு வேலை இந்த பெட்ட்ரோலிய பொருட்ட்கள் GST யின் கீழ் வந்து இருந்தால் அதிகபச்ச வரி என்பது தற்போதைய வரியான லிட்டருக்கு@ 72% வரியை விட குறைவாக# 28% என்ற அளவுக்கு தான் இருந்து இருக்கும்… ஆனால் இவைகள் GSTயில் சேர்க்காததால் மக்களுக்கு தான் வரி சுமை ஏற்றபட்டு உள்ளது. மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறது இந்த மோடியின் அரசு… அதே நேரத்தில் இதே பொருட்களை GSTயில் சேர்த்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வரிசுமை அதிகரிக்கும் என்று பாராளுமன்ற கமிட்டியில் அறிக்கை கூறுகின்றது… அதன் படியே மோடியின் அரசு பெட்ரோலிய பொருட்களை GSTயில் சேர்க்காமல் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வரியை குறைத்து உதவுகிறது. அப்படி எனில் இந்த மோடியின் அரசு மக்களின் மீது வரி சுமையை ஏற்றும் அதே நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வரி சுமையை குறைத்து கார்பரேட் நிறுவங்களின் லாபத்தை அதிகரிக்க உதவுகிறது…இந்த மோடியின் அரசு மக்களுக்கானதா அல்லது கார்பரேட்டுகளுக்கு ஆனதா என்று வாசகர்கள் எளிதில் உணர்ந்துகொள்ளலாம்…

    @(மாநில அரசின் வரி 13.92 ரூபாய்)

    #(மத்திய அரசின் Excise Duty 21.48 ரூபாய் வேற தனி அது கிட்டத்தட்ட 100%).. மொத்தத்தில் எல்லா வரியும் சேர்த்து(மத்திய ,மாநில வரிகளை சேர்த்து) ஒரு லிட்டர பெட்ரோலுக்கு(விலை RS 19.18) RS35.40 நாம் அரசுக்கு கட்டுகிறோம்…

    • பதிலே சொல்லாமல் பதில் சொல்லிவிட்டேன் என்று சொல்கிறீர்கள் 🙂

      சரி உங்களுக்கு புரியும்படி கேள்வியை கேட்கிறேன்.

      மத்திய மாநில அரசுகளின் வரி அரசாங்கத்து தானே போகிறது, இந்த 35.40 ரூபாய் வரி பணத்தில் எங்கே அம்பானி வருகிறார் அதானி வருகிறார் என்று சொல்லுங்கள் ? இந்த 35 ரூபாயில் அம்பானிக்கு எவ்வுளவு லாபம் அதானிக்கு எவ்வுளவு லாபம் என்று சொல்லுங்கள் ? இந்த 35 ரூபாய் வரி பணத்தில் எந்த விதத்தில் மோடி அம்பானிக்கு சலுகை காட்டினார் ?

      • பரவாயில்லை மணிகண்டன்…, உங்களுக்கு என்னுடைய பின்னுட்டம் 7 புரியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது எனது கடமையல்லவா?… மீண்டும் விளக்குகின்றேன்

        GST யில் இருந்து ஏன் பெட்ரோல்,டீசல் விடுவிக்கப்ட்டது என்பதற்கான பாராளுமன்றத்தின் வாக்குமூலம் :(என்னை நிறுவனங்களின் வரி சுமையை குறைக்க)

        Upstream oil and gas producers like Oil and Natural Gas Corp. and Oil India Ltd will face “substantial additional tax” liability under the proposed goods and service tax (GST) regime due to the clipping of existing tax breaks, a higher tax rate on services and the temporary exclusion of five hydrocarbons from the new indirect tax system, a parliamentary panel has reported.

        இந்த பாராளுமன்ற கமிட்டியின் பரிந்துரையின் பேரில் தான் GSTயில் இருந்து பெட்ரோலிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கபட்டு உள்ளது…இந்த செயலின் மூலம் பாராளுமன்ற கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மோடியின் அரசால் பெட்ரோலிய பொருட்கள் GST யில் இருந்து விலக்கிவைக்க பட்டு உள்ளதால் பயன் அடைவது அம்பானி மற்றும் அதானி “”போன்ற””” சில பெருமுதலாளிகள் தானே மணிகண்டன் ?

        இந்த விசயத்தை தானே வினவு இந்த செய்தி கட்டுரையில் கீழ் கண்டவாறு பதிவு செய்து உள்ளது.!

        வினவு கூறியது என்ன என்றும் பார்கலாம் :

        அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்களுக்காக மக்கள் மீது கடுமையான வரி சுமையை சுமத்தியிருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதித்ததன் மூலம் விலைவாசி உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி பட்டியலில் இருந்து மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்றவைகள் எல்லாம் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அம்பானியின் எண்ணெய் நிறுவனத்திற்கும், அதானியின் மின்சார நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுவிட கூடாது என்றே விலக்களிக்கப்பட்டுள்ளது.

        மேலும் விவரங்களுக்கு என்னுடைய பின்னுட்டம் 7 ஐ மீண்டும் படிக்கவும் மணிகண்டன் …

        • நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு ஏதோ சொல்லி கொண்டு இருக்கிறீர். திரும்பவும் கேட்கிறேன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அம்பானி கட்ட வேண்டிய வரி பணம் 35.40 ரூபாய் இதில் என்ன சலுகை அம்பானிக்காக கொடுப்பபட்டது அதை எப்படி மோடி அம்பானிக்கு கொடுத்தார் என்பதை ஆதாரத்தோடு நீங்கள் சொல்ல வேண்டும்.

          அப்படி நீங்கள் சொல்லவில்லை என்றால் நீங்கள் பேசுவது வெறும் அவதூறு என்று ஒப்புக்கொள்ளுங்கள்.

          செந்தில் அதே பாராளுமன்ற கமிட்டி சொன்ன இந்த வார்த்தைகளையும் சொல்லுங்கள் செந்தில் அதை சொல்லாமல் விட்டால் எப்படி ?

          Crude oil, petrol, diesel, jet fuel and natural gas have been temporarily excluded from GST as part of an understanding between the Union and state governments meant to prevent any disruption in states’ revenue from the oil sector in the initial years of the tax reform. The GST Council is expected to take a call after a couple of years on the inclusion of petroleum products under GST.

          • பொது வெளியில் கிடைக்கும் செய்திகளை உங்களுக்கு சாதகமாக திரிக்க தான் உங்கள் பிஜேபியின் சமுக வலையதள பயிற்சி தலைமை சொல்லிகொடுத்ததா மணிகண்டன்? நாடாளுமன்ற கமிட்டிக்கும் , GST கவுன்சிலுக்கும் உள்ள வேறுபாடு கூட உங்களுக்கு தெரியாதா?

            அந்த பாராளுமன்ற கமிட்டி கொடுத்த அறிக்கையில் தான் பெரு முதலாளிகளுக்கு குறிப்பாக அம்பானிக்கு சாதகமான விசயமும் உள்ளது என்பதனை ஏன் நீங்கள் நம்ப மறுகினறீர்கள் என்று விளக்க முடியுமா மணிகண்டன்…?

            Upstream oil and gas producers like Oil and Natural Gas Corp. and Oil India Ltd will face “substantial additional tax” liability under the proposed goods and service tax (GST) regime due to the clipping of existing tax breaks, a higher tax rate on services and the temporary exclusion of five hydrocarbons from the new indirect tax system, a parliamentary panel has reported.

            பெரு முதலாளிகளுக்கு சாதகமாக பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கையில் உள்ள விசயம் தானே மேல் உள்ள விசயம்..?

            நீங்கள் கூறுவது போல நீங்கள் கூறும் விசயம் ஒன்றும் பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கை அல்ல மணிகண்டன்..அது GST கவுன்சில் எடுத்த முடிவு… //Crude oil, petrol, diesel, jet fuel and natural gas hav……//

            வேறு வேறு விசயங்களை , மாறுபட்ட கருத்துகளை வேறுபடுத்தி கற்க முயலுங்கள் மணிகண்டன்…

            பொது வெளியில் கிடைக்கும் செய்திகளை உங்களுக்கு சாதகமாக திரிக்க தான் உங்கள் பிஜேபியின் சமுக வலையதள பயிற்சி தலைமை சொல்லிகொடுத்ததா மணிகண்டன்?

        • அம்பானிக்காக மத்திய அரசு சலுகை காட்டுவதாக இருந்தால் இந்த 35.40 வரி பணத்தை அம்பானி கட்ட தேவையில்லை அல்லது அதில் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டினால் போதும் என்று மத்திய அரசு அம்பானிக்காக சலுகை கொடுத்து இருந்தால் அப்போது தான் நீங்கள் மோடியை குறை சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

          இப்போது நீங்கள் மோடி அரசுக்கு எதிராக பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை உங்கள் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை.

          • என் குற்றசாட்டு 35.40 வரி பணத்தை அம்பானி கட்ட தேவையில்லை என்பது பற்றியது அல்ல மணிகண்டன்…. விசங்களை நுணுக்கமாக கற்ற முயலுங்கள்…நாடளுமன்ற கமிட்டியின் அறிக்கை படி GSTயில் பெட்ட்ரோலிய பொருட்கள் சேர்க்கபட்டால் அது இந்த பெரு முதலாளிகளின் நிறுவனங்களுக்கு வரி சுமையை அதிகரிக்கும் என்பது… எனவே இந்த பெருமுதலாளிகளை வரி சுமையில் இருந்து காப்பாற்ற உங்கள் மோடியின் அரசு GST யில் இருந்து இந்த நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கபட்டு உள்ளது என்பது தான் என் குற்றசாட்டு…பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கையை மீண்டும் ஊன்றி கவனமாக படியுங்கள் மணிகண்டன்….!

            Parliamentary Comitty Report :

            Upstream oil and gas prod cers like Oil and Natural Gas Corp. and Oil India Ltd will face “substantial additional tax” liability under the proposed goods and service tax (GST) regime due to the clipping of existing tax breaks, a higher tax rate on services and the temporary exclusion of five hydrocarbons from the new indirect tax system, a parliamentary panel has reported.

            இவ்வளவு மொழி பெயர்த்து கூறினாலும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே மண்கண்டன்!

            அது சரி பெட்ட்ரோளுக்கு வரியாக வரும் பணத்தையும் அம்பானிகளே கொடுப்தாக எதேனும் திட்டம் உங்கள் மோடியிடம் உள்ளதா மணிகண்டன்? ஹஹஹா…

            • செந்தில் ஆக மொத்தம் உங்களிடம் மோடி அதானி அம்பானிக்கு சலுகை கொடுத்தார் என்பதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றசாட்டை தான் உங்களால் மோடி மீது சுமத்த முடிகிறது.

              உங்களால் மத்திய அரசும் மாநில அரசும் அதிக வரிகள் விதிக்கிறார்கள் என்று மட்டுமே ஆதார பூர்வமாக குற்றம் சொல்ல முடிகிறது…

              சரி விஷயத்திற்கு வருவோம் மன்மோகன் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் ஒரு பர்ரேல் 150 டாலர் விற்ற போது அப்போது டாலரின் மதிப்பு 74 ரூபாய்க்கு மேல் இருந்தது. அந்த விலைக்கு கணக்கு போட்டால் ஒரு லிட்டர் ஏறக்குறைய 70 ரூபாய்க்கு மேல் வரும். அதாவுது மத்திய மாநில அரசுகள் வரிகள் எதுவும் இல்லாமல் மற்ற செலவுக்குள் கூட இல்லாமல் மக்களுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் பெட்ரோலை 70 ரூபாய்க்கு கொடுத்தார்கள். இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறை பல ஆயிரம் கோடி… எண்ணெய் நிறுவங்களும் பெரும் இழப்பை சந்தித்தார்கள். எண்ணெய் நிறுவங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தான் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்தார்கள்.

              சும்மா ஒரு கற்பனைக்கு அப்போது வரிகள் மற்றும் இதர செலவுகளை சேர்த்து பெட்ரோல் விற்று இருந்தால் அதன் விலை ஒரு லிட்டர் 140 ரூபாய்க்கு மேல் சென்று இருக்கும். அப்போது என்ன நடந்து இருக்கும் என்று யோசித்து பாருங்கள் ?

              அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கண்டபடி ஏறி மக்களுக்கு பெரும் தீமையை கொண்டு வந்து இருக்கும். அதை தடுப்பதற்கு தான் அப்போது அரசுக்கும் எண்ணெய் நிறுவங்களுக்கும் நஷ்ட்டம் ஏற்பட்டாலும் விலையை ஏற்றாமல் இருந்தார்கள்.

              சரி இப்போது தான் சர்வதேச சந்தையில் காசா எண்ணையின் விலை குறைந்து இருக்கிறதே இப்போதும் ஏன் 67 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம் இதற்கான காரணம் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறை. இதை சமாளிக்க அதிக வரி விதிக்கிறார்கள்.

              இதற்கான காரணங்கள் பல இருக்கிறது.

              1. நம் நாட்டில் வருமான வரி கட்டுபவர்கள் வெறும் 1 சதவீதம் தான், அரசு சொல்லும் வருமானத்திற்கும் மேல் பலர் சம்பாதித்தாலும் அவர்கள் அரசை ஏமாற்றி வருமானம் காட்டாமல் இருப்பது ஒரு காரணம்.

              2. அடுத்த காரணம் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கும் நிதிப்பற்றா குறை. தமிழக அரசை மட்டும் எடுத்து கொண்டால் அது 2 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதை சமாளிக்க தமிழக அரசுக்கு நிதி வேண்டும் அதை பெட்ரோலிய பொருட்கள் மீது வரி விதித்து சமாளிக்கிறார்கள். பெட்ரோலை GSTயின் கீழ் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்க்க இது ஒரு முக்கிய காரணம்.

              3. சர்வதேச சந்தையில் விலை குறையும் போது நம் நாட்டிலும் அதற்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைத்தால் அதற்கு ஏற்றார் போல் மற்ற பொருட்களின் விலை குறையும்மா என்றால் இல்லை. விலை ஏற்றினால் ஏற்றியது தான் என்று வியாபாரிகள் விலையை குறைப்பது இல்லை, இதை நாம் கண்கூடாக பார்த்து இருக்கிறோம். அதனால் பெட்ரோல் விலை குறைந்தால் அதனால் சாதாரண மக்களுக்கு பெரிய பலன் எதுவும் இல்லை.

              4. பொருளாதாரத்தில் ஒரு நிலை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச சந்தையில் விலை குறைந்தால் அரசு அதற்கு ஏற்றார் போல் வரியை ஏற்றுகிறார்கள், விலை ஏறினால் வரியை குறைக்கிறார்கள். பொருளாதாரத்தில் fluctuation பெரிதாக இருக்க கூடாது என்தற்காக செய்யப்படும் விஷயம் இது.

              இந்த விஷயம் நம் நாட்டில் மட்டும் இல்லை உலகின் பல நாடுகளிலும் இருக்கும் நடைமுறை தான். பொருளாதாரத்தில் நிலைத்த தன்மை, மத்திய மாநில அரசுகளின் நிதி பற்றாக்குறை, மக்களுக்கு அளிக்க படும் சலுகைகள் (மிக்ஸி கிரைண்டர் இலவச மின்சாரம் etc etc) நாம் செய்யும் வரி ஏய்ப்புகள் இப்படி பல காரணங்களால் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் அதன் பலன் மக்களுக்கு சென்றடையாமல் இருக்கிறது.

              மோடி அதானிக்கு சலுகை கொடுத்தார் அம்பானிக்கு சலுகை கொடுத்தார் அதனால் பெட்ரோலை GSTயின் கொண்டு வரவில்லை என்று நீங்கள் சொல்வது எல்லாம் கற்பனை கதைகள் அதில் எந்த உண்மையும் இல்லை.

  10. மணிகண்டன் மற்றும் உண்மையரின் சந்தேகங்களுக்கு (மோடி எப்படி அம்பானிக்கு வரி சுமையை குறைத்து உதவுகின்றார்,மக்களின் மீது எப்படி வரி சுமையை ஏற்றுகின்றார்? ) பதில் அளித்து உள்ளேன்…. தேவைபட்டால் இன்னும் கார்பரேட்டுகளுக்கு எப்படி எல்லாம் மோடி உதவுகின்றார் என்று சந்தேகங்கள் இருந்தால் மேலும் கேள்விகளை வைக்கலாம்…

  11. அதானிக்கு உதவும் மோடி… அதானியின் மின்சார நிறுவனத்துக்கு 500 கோடி வரிச்சலுகை…….

    கடந்த ஜூன் 17-ம் தேதி அன்று வெளியான இ.பி.டபிள்யு. இதழில் வெளியான அந்தப் புலனாய்வுக் கட்டுரையில், ” சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தித் திட்டங்களில், அடிக்கடி விதிகளை மாற்றியமைக்கட்டுள்ளது. இதன் மூலம் அதானி மின்சார நிறுவனமானது ரூ.500 கோடி அளவுக்கு சுங்கவரியைத் திரும்பப் பெறுவதற்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறை வழிவகுத்தது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில், அதானி நிறுவனத்தின் முந்த்ரா மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தலா 330 மெகாவாட் திறன் கொண்ட நான்கு மின்நிலையங்களையும் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து மின்நிலையங்களையும் கொண்டதாகும். இவற்றின் மூலப்பொருளான நிலக்கரியை இறக்குமதி செய்தபோது சுங்கவரியைச் செலுத்தியதாக அதானி நிறுவனம் கூறுகிறது.
    இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சுங்கவரி செலுத்தியிருந்தால், அதைத் திரும்பப்பெற முடியும் என விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அதை வைத்து, ரூ.506 கோடியைத் திரும்பத் தருமாறு அதன் மின்சார நிறுவனம் கேட்டது. இதில், அதானி மின் நிறுவனமானது வரியையே செலுத்தவில்லை என்பதுதான் இ.பி.டபிள்யு. வைக்கும் குற்றச்சாட்டு.
    இதற்கான ஆவணங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்றும் இ.பி.டபிள்யு.வின் புலனாய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கேள்வி கேட்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் கடிதம் அனுப்பியதாகவும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றும் இ.பி.டபிள்யு. குறிப்பிட்டிருந்தது.
    அரசுத் தரப்பிடமிருந்து எந்த பதிலோ விளக்கமோ மறுப்போ வராதநிலையில், அந்தக் கட்டுரையால் அதானி குழுமத்துக்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இபிடபிள்யு-வுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது, அதானி நிறுவனம்.
    ஆனால் மன்னிப்பு கேட்காத இபிடபிள்யு பத்திரிகை, அதானி குழுமத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பிய வழக்காடல் நிறுவனத்துக்கு தன் பதிலை அனுப்பியிருக்கிறது.
    அந்த பதிலில், “ இபிடபிள்யு பத்திரிகையில் அதானி குழுமம் தொடர்பாக வெளிவந்த இரண்டு கட்டுரைகளும், முழுக்க உண்மையானவை மட்டுமல்ல சான்றுகளையும் கொண்டிருக்கிறது; பொதுநலன் அடிப்படையிலேயே இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன; இதை வெளியிடுவதற்கு இபிடபிள்யு பத்திரிகைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை உண்டு” என்று மிகவும் அழுத்தமாக இபிடபிள்யு பத்திரிகை தெரிவித்துள்ளது.

    மோடியின் ரசிகர்கள் பதில் அளிப்பார்களாக!

    • வினவை போல் EPW பத்திரிகையும் கம்யூனிஸ்ட் குட்டையில் ஊறிய மட்டைகள் தானே அதனால் இவர்களிடம் எல்லாம் உண்மைகளை எதிர்பார்க்க கூடாது. எப்போதும் போல் பொய்கள் வெறுப்பு அவதூறுகளை தான் எதிர்பார்க்க வேண்டும்.

      • Economic and Political Weekly (EPW) பத்திரிக்கையில் வந்த குற்றசாட்டுகளை வாதிட்டு வெல்ல வழியற்ற மணிகண்டன் சும்மா வினவில் கூவுவதால் யாதொரு பயனும் இல்லை…உங்களுக்கு மட்டுமா பதில் சொல்ல வக்கு இல்லை மணிகண்டன் ! மத்திய அமைச்சர்கள்(மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும்) இந்த அதானியின் வரி எய்ப்பு விவகாரத்தில் பதில் அளிக்க வார்த்தைகள் இன்றி தானே அதானியின் ஆட்களாக அம்பலப்பட்டு நிற்கின்றார்கள்!

  12. Mr Senthil, you are going by calculations and parliamentary evidence for exclusion of ‘Petrol and Diesel’ from GST

    You’re coming up with calculations again and again

    My questions are very simple and beyond politics

    1) What our MP’s were doing when this bill is passed?
    2) Modi he himself cannot pass this bill without MPs consent. Do you say that Modi deceived all the MPs in this matter?
    3) Did communist raise their voice against exclusion of ‘Petrol and Diesel’ from GST? They are very strict against corporates by nature

    And all important question is

    4) WHY DID STATES DID NOT OPPOSE THIS? WHY, WHY and WHY ‘STATES’ WANTED TO RETAIN THE EXISTING ‘SLAB RATE’ FOR ‘PETROL AND DIESEL’

    Ambani and Adani are already enjoying tax benefits with the existing Tax System. No matter which party rules in Centre (either BJP or Congress)

    In order to answer my question you need to come out of ‘calculations first’

    • குமார்.., முதலில் நான் வைக்கின்ற பெட்ரோலிய பொருட்கள் ஏன் GSTயில் சேர்க்கபடவில்லை என்பதற்கான வாதங்களை நீங்கள் ஏற்கின்றீர்களா இல்லையா என்று கூறுங்கள்… ஏற்பீர்கள் என்றால் மேல் உள்ள உங்களின் கேள்விகள் அனைத்துமே ஒன்றும் இல்லாமல் அடிபட்டு போய்விடும்…… நான் பதில் அளிக்கவே தேவை இருக்காது… ஒருவேளை என் வாதங்கள் தவறானவை என்றால் எப்படி அவை தவறாகும் என்று விளக்குங்கள் குமார்… அப்போது உங்களுக்கு தேவையான அளவுக்கு திருப்தியான பதிலை அளிக்கின்றேன்… இது தான் சரியான விவாத வாத முறை என்று நினைகின்றேன்….

  13. நான் உங்களின் கருத்து முழுவதும் சரியானவை என்றும் சொல்லவில்லை. முழுவதும் தவறானவை என்றும் சொல்லவில்லை

    ஆனால் ‘பெட்ரோல் மற்றும் டீசல்’ வரி விளக்கு ‘அம்பானி, அதானிக்காகவே’ அளிக்கப்படுகிறது என்கின்ற ஒற்றை காரணத்தை முற்றிலும் ஏற்க முடியவில்லை

    மாநிலங்களின் பங்களிப்பும் அந்த வரி விளக்கில் முக்கியவத்துவம் பெறுகிறது என்பது என் வாதம்

    • உங்களின் மூன்றாவது கேள்விக்கான விடையை நான் அளித்து பல மணிநேரம் ஆகின்றது உண்மையார்….ஆமாம் நீங்கள் தான் குமாரா?

      அது எப்படி என் கருத்தை முழுவதும் ஏற்க்க முடியவில்லை , முழுவதும் புறகணிக்க முடியவில்லை என்று கூறுகின்றீர்கள் உண்மையரே ? என் வாதம் தவறு எனில் அதனை உங்கள் எதிர் வாதங்கள் மூலம் அடித்து நொறுக்கவேண்டியதுயது தானே? பாராளுமன்ற கமிட்டியின் பரிந்துரையின் பேரில் பெட்ரோலிய பொருட்கள் GST யில் இருந்து விலக்கிவைக்க பட்டு உள்ளதால் பயன் அடைவது அம்பானி மற்றும் அதானி “”போன்ற””” சில பெருமுதலாளிகள் என்று என் வாதத்தை மாற்றிப்படியுங்கள் சார்… இந்த மோடியின் அரசு யாருக்கானது என்று உண்மையிலேயே புரியும்!

        • // நான் உங்களின் கருத்து முழுவதும் சரியானவை என்றும் சொல்லவில்லை. முழுவதும் தவறானவை என்றும் சொல்லவில்லை //

          இதற்க்கு மட்டும் தான் பொதுவான பதில் வந்துள்ளது

          // ஆனால் ‘பெட்ரோல் மற்றும் டீசல்’ வரி விளக்கு ‘அம்பானி, அதானிக்காகவே’ அளிக்கப்படுகிறது என்கின்ற ஒற்றை காரணத்தை முற்றிலும் ஏற்க முடியவில்லை

          மாநிலங்களின் பங்களிப்பும் அந்த வரி விளக்கில் முக்கியவத்துவம் பெறுகிறது என்பது என் வாதம் //

          இவற்றிற்கு பதில் வரவில்லை. மேலே உள்ள இரண்டு விஷயங்களை ஏற்கிறீர்களா ? இல்லையா ?

          // மோடி ஏமாற்றினார் என்று சொல்வதை விட ஒட்டு மொத்த அரசியல்வாதிகள் இதற்க்கு துணை போனார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். MPக்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமற்றது //

          இதற்கும் சேர்த்து பதில் அளியுங்கள. ஏற்கிறீர்களா ? இல்லையா ?

          • பதில் என்னுடைய பின்னுட்டம் 13.2 ல் இருகின்றதே உண்மையர்…

            //மாநிலங்களின் பங்களிப்பும் அந்த வரி விளக்கில் முக்கியவத்துவம் பெறுகிறது என்பது என் வாதம் //

          • இந்த விசயத்தில் மோடியை தப்ப வைக்க ஒட்டு மொத்த பாராளுமன்றத்தையே நீங்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்தி யுள்ளீர்கள் உண்மையர்… சில நேரங்களில் இது போன்று நீங்கள் மிக தெளிவாக உண்மையை பேசுகின்றீர்! நன்றி… ஆம் ஒட்டுமொத்தமாக பாராளுமன்றமே இந்த விசயத்தில் குற்றவாளி என்ற நிலையில் GSTயில் இருந்து பெட்ட்ரோலிய பொருட்களை விலக்கி அதானிக்கும் , அம்பானிக்கும் வரி சலுகை அளித்த குற்றத்துக்கு இந்த மக்கள் விரோத செயலுக்கு தலைமை ஏற்ற பிரதமர் மோடி தானே தலைமை மக்கள் விரோத பிரதமர் மற்றும் குற்றவாளி? உங்களுக்கு இதில் ஏதேனும் கருத்து வேறுபாடு உண்டா உண்மையர்? கூட்டு சதியில் தலைமை ஏற்பவருக்கு தானே அதிகபச்ச தண்டனை ?

            // மோடி ஏமாற்றினார் என்று சொல்வதை விட ஒட்டு மொத்த அரசியல்வாதிகள் இதற்க்கு துணை போனார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். MPக்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமற்றது //

        • மோடி ஆட்சியில் ஊழல், லஞ்ச புகார் என்றால் அதை ‘மோடி அல்லது பிஜேபி மேல் சொல்லலாம்’. ஆனால் GST என்பது அப்படி கெடையாது. பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் இது சாத்தியமற்றது

          The statement mentioned above is fairly simple and straight forward

          • அதனை தான் கூறுகின்றோம் இந்த மோடியின் அரசு மட்டும் அல்ல மன்மோகன் சிங் அரசாக இருந்தாலும் கூட அது முதலாளிகளின் நலனை தான் கருத்தில் கொள்ளுமே தவிர மக்களின் நலனை புரகநிக்கவே செய்யும் என்று அழுத்தமாக கூறுகின்றோம்…GSTயில் இருந்து பெட்ட்ரோலிய பொருட்களை விலக்கி அதானிக்கும் , அம்பானிக்கும் வரி சலுகை அளித்ததன் மூலம் இந்த அரசு பெரு முதலாளிகளுக்கு தானே சாதகமாக உள்ளது… மக்களுக்கு வரி சுமையை ஏற்றி பறந்து பட்ட மக்களின் நலனை இந்த அரசு காற்றில் பறக்கவிட்டு விட்டது அல்லவா ?

    • உண்மையர்…, ,GSTயில் இருந்து இந்த பெட்ரோலிய பொருட்கள் விலக்கி வைக்கபட்டுள்ளதற்கு மாநிலங்களின் பங்களிப்பு என்னவென்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் அது இந்த விவாதத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா? எந்த மாநில அரசு இந்த பெட்ரோலிய பொருட்களை GSTயில் இருந்து விலக்கி வைக்க கோரியது? அப்படி கோரியதன் மூலம் அம்பானிக்கும் ,அதானிக்கும் வரிவிதிப்பில் இருந்து விலக்கிவைத்து வரிசலுகையை கோரியது? பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கையின் அடிபடையில் தான் இந்த வரி சலுகை பெருமுதாளிகளுக்கு கிடைத்தது என்பது தான் இது வரையில் நம் வாதங்கள் முன் வைக்கபட்டுள்ள தடயங்கள்….இந்த தடையங்கள் யாராலும் மறுக்க இயலாத சான்றுகள்… ஏன் என்றால் இந்த தகவல் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் கீழ் பதிவு செய்யபட்டு உள்ளது.

      ///மாநிலங்களின் பங்களிப்பும் அந்த வரி விளக்கில் முக்கியவத்துவம் பெறுகிறது என்பது என் வாதம்///

      • மணிகண்டன் ஒரு சில கேள்விகளை கேட்டுள்ளார். நீங்கள் இருவரும் அதை பற்றி உரையாடினால் உங்களுக்கே புரியும் ‘மாநில அரசுகளின் பங்கீடு’ என்ன என்பது

        இந்த Petrol, Diesel விஷயத்தை இருவரும் விரைவில் முடித்து கொள்ளுங்கள். ஏனெனில் வினவின் அடுத்த அதிரடியை கொஞ்சம் அலசுவோம்

        // பீட்ஸா, பர்கருக்கோ
        ஐந்து சதவீதம்

        திங்கிற பிஸ்கெட்டுக்கோ
        பதினெட்டு சதவீதம்
        தங்க பிஸ்கெட்டிற்கு
        மூன்று சதவீதம் வரிவிதிப்பு //

        மேற்சொன்ன விஷயங்களில் வினவு ஆசிரியர் கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதலாம்.

        • விவாதத்தில் இருந்து ஜர்க் அடித்து வெளியேறவேண்டாமே உண்மையர்! நீங்கள் கூறும் விசயத்தை நீங்கள் தான் விளக்கவேனும்….. மணிகண்டன் அல்லவே! //மணிகண்டன் ஒரு சில கேள்விகளை கேட்டுள்ளார். நீங்கள் இருவரும் அதை பற்றி உரையாடினால் உங்களுக்கே புரியும் ‘மாநில அரசுகளின் பங்கீடு’ என்ன என்பது //

          இந்த பெட்ரோல் டிசல் விசத்தில் என்னுடன் விவாதத்தை தொடங்கிய நீங்கள் தானே என் வாதம் தவறு என்றால் பதில் அளிக்கவேண்டும்… முதலாளிகளுக்கு சாதகமாக மோடியின் அரசு பெட்ட்ரோலிய பொருட்களை GSTயில் இருந்து விளக்கியுள்ளது என்ற குற்றசாட்டை பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கையின் அடிபடையில் உங்கள் முன் வைத்து உள்ளேன்… பதில் தான் இல்லை உங்களிடம் இருந்து…! அப்ப மக்களுக்கு வரி சுமையை அதிகரிக்கும் , பெருமுதலாளிகளுக்கு வரிசுமையை குறைக்கும் இந்த மோடியின் அரசு மக்கள் விரோத அரசு என்று முடிவுரை எழுதிடலாமா ?//இந்த Petrol, Diesel விஷயத்தை இருவரும் விரைவில் முடித்து கொள்ளுங்கள். ஏனெனில் வினவின் அடுத்த அதிரடியை கொஞ்சம் அலசுவோம் //

  14. நான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். அதிமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் ”கம்யூனிஸ்ட்கள் உட்பட” ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம் தான் இந்த GST

    இப்போது உள்ள GST இறுதியானது அல்ல. இது அவ்வப்போது review செய்யப்பட்டு தேவைப்பட்டால் revise செய்யப்படும். இது இறுதி வடிவம் பெற 2 ஆண்டுகள் ஆவது பிடிக்கும்

    அடுத்த reviewவில் கூட ‘மோடி ‘பெட்ரோல் மற்றும் டீசலை GSTகுள் எடுத்து வரலாம்’. அது நிதிநிலையை பொறுத்து எடுக்கப்படும்

    // இந்த விசயத்தில் மோடியை தப்ப வைக்க ஒட்டு மொத்த பாராளுமன்றத்தையே நீங்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்தி யுள்ளீர்கள் உண்மையர். GSTயில் இருந்து பெட்ட்ரோலிய பொருட்களை விலக்கி அதானிக்கும் , அம்பானிக்கும் வரி சலுகை அளித்த குற்றத்துக்கு இந்த மக்கள் விரோத செயலுக்கு தலைமை ஏற்ற பிரதமர் மோடி தானே தலைமை மக்கள் விரோத பிரதமர் மற்றும் குற்றவாளி? உங்களுக்கு இதில் ஏதேனும் கருத்து வேறுபாடு உண்டா உண்மையர்? கூட்டு சதியில் தலைமை ஏற்பவருக்கு தானே அதிகபச்ச தண்டனை ? //

    நான் மோடியை தப்ப வைக்க முயற்சிக்கவில்லை. நான் சொன்னது நடைமுறை யதார்த்தம் மற்றும் உண்மை

    ஒரு வாதத்திற்கு கேட்கிறேன். மோடி ‘பெட்ரோல் மற்றும் டீசலை GSTகுள் எடுத்து வந்து இருந்து இருந்தால்’ குறைந்தபட்சம் இந்த ஒரு விஷயத்தில் ‘மோடி நல்லவர்’ என்று சொல்வீர்களா ?

    மோடியை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதற்கு முன் நீங்கள் இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்

    1) GST மூலம் அம்பானி, அதானி பயன் அடைந்தார்கள் என்பது உண்மையானால் ‘நவரத்னா’ என்று அழைக்கப்படும் இந்தியா அரசே ஏற்று நடத்தும் ‘எண்ணெய் நிறுவனங்கள்’ இந்த GST விலக்கினால் லாபம் அடையுமா? நஷ்டம் அடையுமா ?

    ‘நவரத்னாவிற்கு’ லாபம் என்றால் அந்த பணம் எங்கே, யாருக்கு போகும்? நஷ்டம் என்றால் யார் தலையில் அதன் பாதிப்பு விழும் ?

    அல்லது அம்பானி, அதானி மட்டுமே இந்த GST மூலம் பயன் அடைகிறார்களா ? இந்த GSTயை பொறுத்த வரைக்கும் ‘நவரத்னவின்’ நிலை என்னவென்று ‘விளக்குமாறு’ கேட்டு கொள்கிறேன்

    2) வினவு எழுதிய கட்டுரையில் இந்த விஷயம் சொல்லப்பட்டுள்ளது

    // என் பிணத்தின் மீது தான் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த முடியும் என கொக்கரித்த மோடி தான் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி புதிய இந்தியா பிறந்துள்ளதாக கூறியுள்ளார். //

    மோடி அப்போது இதை என் எதிர்த்தார் ? இப்போது ஏன் கொண்டு வந்தார் என்று வினவு எழுதவில்லை

    உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள்

    // எந்த மாநில அரசு இந்த பெட்ரோலிய பொருட்களை GSTயில் இருந்து விலக்கி வைக்க கோரியது? அப்படி கோரியதன் மூலம் அம்பானிக்கும் ,அதானிக்கும் வரிவிதிப்பில் இருந்து விலக்கிவைத்து வரிசலுகையை கோரியது? //

    நீங்கள் ”’பெட்ரோல் மற்றும் டீசலில் அதிக வரி வசூல் செய்யப்படுகிறது”’ என்று சொல்கிறீர்கள் அல்லவா. அந்த ”அதிக வரி தான்” மாநிலங்களுக்கு தேவைப்படுகிறது. இதை எனக்கு தெரிந்து ஹச். ராஜா, மா பா பாண்டியராஜன் மற்றும் இரு வேறு பொருளாதார நிபுணர்கள் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் சொல்லியுள்ளனர்.

    குறைந்தபட்சம் நீங்கள் ‘மா பா பாண்டியராஜனை’ இந்த விஷயத்தில் நம்பலாம்.

    பெட்ரோல் மற்றும் டீசலை GSTகுள் எடுத்து வந்தால் அனைத்து பொருட்களின் விலை குறையும். இதனால் மாநிலங்களின் ‘வரி வருவாய்’ கடுமையாக பாதிக்கப்படும். உங்கள் கருத்துப்படி

    1) பெட்ரோல் மற்றும் டீசலை GSTகுள் எடுத்து வரவேண்டும். சரி
    2) அதன் மூலம் அனைத்து பொருட்களின் விலை குறையும். சரி
    3) மத்திய மாநில அரசுகள் ‘வரி சுமையை’ மக்கள் மீது போட கூடாது. சரி
    4) ‘மாநில அரசு’, மத்திய அரசிடம் கடன் வாங்க கூடாது. சரி. ஏனெனில் ‘மாநில அரசு’ கடனில் இருந்தால் அது மீண்டும் மக்கள் தலையில் தான் விழும்.
    5) டாஸ்மாக் இருக்கக்கூடாது. மிகவும் சரி.

    ஏற்கனவே நம் தமிழ்நாடு ‘3 லட்சம் கோடி கடனில்’ ஓடி கொண்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ‘வரி வருவையாய்’ இழந்து விட்டால் பணத்திற்கு ‘மாநில அரசாங்கம்’ என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்

    நன்றி

  15. GSTயில் இருந்து பெட்டோர்லிய பொருட்களை விலகியது தவறு என்று ஏற்றுகொண்டு அதற்கு காரணம் மோடி மட்டும் அல்ல , முழு பாராளுமன்றமும் தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமுலம் கொடுகிண்றீகள் உண்மையர்… மோடியின் மக்கள் விரோத குற்றத்தை அவர் அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடன் சேர்த்து தான் செய்தார் என்று ஏற்றமைக்கு மிக்க நன்றி…நன்றி…

    1.பெருமுதலாளிகளுக்கு சாதகமாக பெட்ட்ரோலிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க அவற்றை GST யில் இருந்து விடுவிக்கின்றார்கள் என்றால் அந்த காரியத்தை யார் செய்து இருந்தாலும் அது குற்றம் தானே உண்மையர்…? நான் இந்த விசயத்தில் என்ன கூறவருகின்றேன் என்றால் இந்த குற்றத்துக்கு தலைமை ஏற்றது மோடியும் அவரின் அரசும் தானே? அப்படி என்றால் யார் முதன்மை குற்றவாளிகள் ? மக்களுக்கு அதிக வரி, காற்பறேடுகளுக்கு வரி விலக்கு என்ற கொள்கை படி அரசை வழி நடத்தும் மோடி அவர்கள் தானே முதன்மையான மக்கள் விரோத பிரதமர்..?

    2.GST மூலம் அம்பானி, அதானி பயன் அடைந்தார்கள் என்பது உண்மையானால் ‘நவரத்னா’ என்று அழைக்கப்படும் இந்தியா அரசே ஏற்று நடத்தும் ‘எண்ணெய் நிறுவனங்கள்’ இந்த GST விலக்கினால் கிடக்கும் வரி விலக்கால் பலன் அடையத்தான் செய்யும்…அமபானியின் அதானியின் நிறுவங்கள் பலன் அடைய செய்யும் இந்த வரி விலக்கு மற்றும் GST யில் இருந்து வில்க்கு என்பது அதே தொழிலை செய்யும் அனைவருக்குமே சாதகமாக தானே அமையும்…இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் உண்மையர்… ? மோடி பெரு முதலாளிகளுக்கு சாதகமாக வரி விலக்கு அளித்து GST யில் இருந்து விலக்கு அளித்து நடந்து கொள்கின்றார்… அதனால் பெரு முதலாளிகளும் , அரசு எண்ணை நிறுவங்களும் பலன் அடைகின்றன என்று நேர்மையாக கூறுங்கள்…!

    3. GST விசயத்தில் அன்று ஒன்று பேசிய மோடி இன்று ஒன்று பேசுகின்றார் என்றால் இரட்டை நிலைபாடு கொண்ட மோடிதான் தன் பச்சோந்தி தனத்துக்கு விளக்கம் அளிக்கவேண்டும்… ஆனால் இதுவரையில் விளக்கம் அளிக்காமல் தன்னை ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியாக காட்டிக்கொள்கின்றார் இவர்… நீங்கள் வேண்டுமானால் அவரிடம் விசாரித்து ஏன் GST விசயத்தில் அன்றும் , இன்றும் வேறுபட்டார் என்று கூறுங்கள்….

    4.ஹச். ராஜா, மா பா பாண்டியராஜன் ..இவர்கள் எல்லாம் கூறினால் நீங்கள் நம்புவீர்கள் என்றால் அது உங்கள் அறிவாற்றலின் பலவீனத்தை தானே சுட்டிக்காட்டுகிறது உண்மையர்… ஊதரிதன்மாகவும், முறைகேடாகவும் நடத்தப்படும் தமிழ் நாடு அரசுக்கு முன்று லச்சம் கோடி என்ன அதற்கும் மேலும் தானே கடன் வந்து நிற்கும்… இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து முடிக்கும் போது அந்த கடன் இரு மடங்காக ஆகவும் சாத்தியம் உள்ளது அல்லவா? இவர்களின் இலஞ்ச ஊழல் ,ஊதாரித்தன முறைகேடுகளுக்காக மக்கள் தான் தங்கள் பணத்தை பெட்ரோலிய பொருட்ட்க்ளுக்கான வரியாக அதிக அளவு செலுத்த வேண்டுமா உண்மையர்?

  16. // மோடிதான் தன் பச்சோந்தி தனத்துக்கு விளக்கம் அளிக்கவேண்டும்… ஆனால் இதுவரையில் விளக்கம் அளிக்காமல் தன்னை ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியாக காட்டிக்கொள்கின்றார் இவர் //

    கேள்வி 3க்கு பதில்: That’s it. All over. இதை நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ‘Parliamentary evidence’ கொடுக்க தெரிந்த உங்களுக்கு இதை சொல்ல தெரியவில்லை என்றால், நீங்கள் மோடியை ஏற்கனவே உங்கள் மனதில் ‘குற்றவாளியாக’ உருவாக்கி வைத்துளீர்கள் என்பது மிகவும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

    இனி பின்வரும் பதில்கள் யாவும் வெறும் ‘சம்பரதாயமே’ உங்களை பொறுத்தவரை

    இங்கே நான் பதிந்த பதில்களை நிஜமாகவே புரிந்து கொண்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு இது ஓரளவுக்கு விடை அளிக்கலாம்

    // மோடியின் மக்கள் விரோத குற்றத்தை அவர் அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடன் சேர்த்து தான் செய்தார் என்று ஏற்றமைக்கு மிக்க நன்றி…நன்றி… //

    இது முற்றிலும் தவறு. அது என் கருத்து அல்ல. நீங்கள் புரியாமல் குற்றம் சத்தியத்திற்கு நான் அந்த பதில் அளித்தேன்

    அப்போது நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் கொள்கையில் இருந்து விலகி இருந்து கார்பர்டேகளுக்கு உதவி செய்தது என்று நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா ?

    // திங்கிற பிஸ்கெட்டுக்கோ பதினெட்டு சதவீதம் தங்க பிஸ்கெட்டிற்கு மூன்று சதவீதம் வரிவிதிப்பு //

    எதுகை மோனை வசனங்கள் இருக்கும் கட்டுரைகளை படித்து அதை நம்பி போராட்டம் செய்பவர்களிடம் பதிலை வேறு எப்படியும் எதிர்பார்க்க முடியாது

    அம்பானி மற்றும் அதானியை நீங்கள் என்ன இவளோ ‘சப்பையாக’ நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் ?

    1) 16 வருடங்கள் இந்த GST விவாதம் நடைபெற்று இப்போது வந்துள்ளது. 16 வருடங்கள் ‘தவம் செய்து வரத்திற்கு’ காத்திருக்க ‘அம்பானி’ மற்றும் ‘அதானி’ என்ன ரிஷிகளா ?

    2) UPA-IIல் ‘ஜெயபால் ரெட்டி’ ஏன் ஒரே நாள் இரவில் மாற்றப்பட்டார் ?

    பதில் #1: உங்களக்கு ஏற்க மனமில்லை என்றால் அதற்க்கு நான் எதுவும் செய்யமுடியாது. இந்த GST செட்டில் ஆக 2 வருடங்கள் ஆகும் என்று அரசாங்கமே தெளிவாக சொல்லியுள்ளது. This is just an initial version. We need sometime to analyze the impact and the ‘tax loss’ incurred by state government

    பதில் #2: அது உங்கள் பார்வை. அரசு எண்ணை நிறுவங்கள் நஷ்டம் அடைகின்றன என்று தான் அந்த நிறுவனங்கள் கூறுகின்றன. இப்போது அம்பானி நஷ்டம் அடைகிறார் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா ?

    பதில் #4: ‘ஹச். ராஜா, மா பா பாண்டியராஜன்’ சொன்னால் நம்பக்கூடாது. ‘ஹச். ராஜா’ வேறு விஷயங்கள் எவ்வளவோ பேசுகிறார். அதையும் இதே போல் விட்டுவிடலாமே சரி.

    ‘இரு வேறு பொருளாதார நிபுணர்கள்’ வெவ்வேறு நிகழ்ச்சியில் சொல்லியுள்ளனர் என்று பதிலில் குறிப்பிட்டு இருந்தேன். வேறு யார் சொன்னால் நீங்கள் நம்புவீர்கள் ?

    உங்கள் கருத்துப்படி ‘பெட்ரோல் அண்ட் டிசீலை’ இப்போது Immediate’யாக GSTகுள் எடுத்து வந்தால் அடுத்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு ‘திவால்’ தான் ஆக வேண்டும். அப்போது அதற்க்கு யாரை குற்றம் சொல்வீர்கள் ?

    • ஹி ஹி ஹி ஹி உங்கள் நிலையை பார்த்தால் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. எப்படி மோடி அம்பானிக்கு அத்தனைக்கும் சலுகை காட்டினார் என்று கேட்டால் பாராளுமன்ற அறிக்கையை படி என்கிறீர்கள் சரி அந்த அறிக்கை மூலம் எப்படி அம்பானிக்கு சலுகை கொடுத்ததாக சொல்ல முடியும் என்று கேட்டால் நுணுக்கமாக படி என்கிறீர்கள்.

      உங்களை போன்றவர்களின் நுணுக்கம் எல்லாம் மோடி என்ன செய்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடித்து (குறை இருக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம்) கண்டபடி மோடியை திட்டுவது தான்.

      இதற்கு எல்லாம் என்ன காரணம் தெரியும்மா மோடி ஹிந்து என்று சொல்லி ஆட்சிக்கு வந்து இருக்கிறார், இந்த போலி மதசார்பின்மை பேசி உங்களை போல் ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கவில்லை.

      உங்களை போன்றவர்களின் ஹிந்து மதத்தின் மீதான வெறுப்பு தான் மோடி மீது பாய வைக்கிறது, அவர் ஹிந்து, இந்தியா, தேச ஒற்றுமை என்று உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகளை பேசி மக்களை ஒன்று படுத்துவதால் உங்களை போன்றவர்கள் மோடி மீது கண்மூடித்தனமான வெறுப்பை வளர்த்து கொண்டு இருக்கிறீர்கள், உண்மை இருக்கிறதோ இல்லையோ கண்ணைமூடி கொண்டு அவதூறை பரப்புகிறீர்கள், என்னை போல் யாராவுது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எங்கே என்று கேட்டால் திரு திரு என்று முழிக்க வேண்டியது.

      செந்தில் கவுண்டமணி காமெடி மாதிரி இன்னொரு பழம் (ஆதாரம்) எங்கே என்று கேட்டால் அதானே இது என்று மழுப்பி வேண்டியது.

      போங்க சார் போய் புள்ள குட்டிய படிக்க வையுங்கள் உங்களை போன்றவர்களின் பொய்கள் எல்லாம் எடுபடாது… better luck next time

      • என்ன மணிகண்டன் உங்க இந்துத்துவா நபர் கூடவே சண்டையை ஆரபிச்சிட்டிங்க? (உண்மையருக்கும் இங்கே என் பதில் இருக்கு)மண்டை குழபிடிச்சா உங்களுக்கு? உங்க நண்பர் உண்மையராவது பரவாயில்லை பாராளுமன்ற அறிக்கைபடி வரி விலக்கில் இருந்து பயன் அடைவது அரசு எண்ணை நிறுவங்களும் தானே என்று உண்மையை போட்டு உடைத்து உள்ளார்… ஆமாங்க தனியார் நிறுவனத்துக்கு GSTயில் இருந்து விலக்கு அளித்து தனி சட்டம் , அரசு நிறுவங்களை GSTயில் சேர்த்து தனி சட்டம் போட்டால் மோடி அரசின் மானம் கேட்டுபோயிடாது?

        //உண்மையர் : நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் ‘Oil and Natural Gas Corp. and Oil India Ltd’ என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுமே இந்தியன் அரசு நிறுவனங்கள் தான். ‘Relianceக்காக’ என்று சொல்வதை விட ‘Relianceம்’ அந்த துறையில் பங்காற்றுகிறது என்பதே உண்மை ///

        உண்மைய்ரின் கூருப்படி இந்த GST விலக்கு அதனால் ஏற்படும் வரி விலக்கால் லாபம் அடைவது தனியார் மற்றும் அரசு பொதுத்துறை எண்ணை நிறுவங்கள் என்று நாம் எளிதில் புரிந்து கொள்ளாம் அல்லவா?

        மணிகண்டன் வழக்கமான உங்களின் ஹிந்துத்துவா பேச்சுகளை நான் உதிர்ந்த மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை…

        • Vinavu’s argument was the other way around.

          // ஏனெனில் அம்பானியின் எண்ணெய் நிறுவனத்திற்கும், அதானியின் மின்சார நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுவிட கூடாது என்றே விலக்களிக்கப்பட்டுள்ளது. //

          The statement was like ‘Petrol and Diesel’ have been excluded, exclusively for ‘Ambani’ and ‘Adani’ which is not true indeed

          If you want to pass separate laws for ‘government’ and ‘private’ we need to repeat that every sector

          • உண்மையர்.., டெக்னிக்கலாக பேசி 2g-ஆ.ராசா மாதிரி தப்பிக்க வேண்டாம். நட்டம் ஏற்படக்கூடாது என்ற அணுகுமுறை எதனை நோக்கிய செயல்….;லாபத்தை நோக்கிய செயல் தானே உண்மையார்? உங்களுடைய தொழிலில் நட்டம் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் லாபத்தை நோக்கி தானே பயணிக்கின்றீர்கள் என்று அர்த்தம்…

        • அதை தான் முன்பே சொல்லி விட்டேனே உங்களின் ஹிந்து மத மற்றும் இந்திய வெறுப்பை தான் மோடி மீது காட்டி கொண்டு இருக்கிறீர்கள் என்று அதனால் நீங்கள் என் கருத்துக்களை மதித்து அதில் இருக்கும் உண்மைகளை ஏற்றுக்கொண்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.

          • மணிகண்டன் உங்கள் ஹந்துதுவா கொலை வெறியனால் கொல்லபட்ட ஹிந்து தலித் பெண் மற்றும் நீங்கள் “பாசத்துடன்” பின்னுட்டம் இட்ட ஹிந்து தலித் மாணவி அனிதா ஆகிய இரு நிகழ்வுகளின் நீங்கள் ஹிந்து மதத்தில் உள்ள சமுக பொருளாதார நிலைகளின் பின்தங்கிய தலித் மக்கள் மீதான உங்கள் கொடுரபார்வையை பார்த்துவிட்டேன் மணிகண்டன்…! உங்களின் போலியான ஹிந்துத்துவா கொள்கையை நம்ப நான் தயாராக இல்லை…

            • நீங்கள் ஹிந்து மதம் மற்றும் பிராமணர் மீது கண்மூடி தனமான வெறுப்பை வளர்த்து கொண்டு எதை எடுத்தாலும் அதற்கு காரணம் ஹிந்து ஹிந்துவா என்று கற்பனை செய்து வெறுப்பை வளர்த்து கொண்டு இருக்கிறீர்கள் அதனால் மனித இயல்புகளை கூட சரியாக உங்களால் பார்க்க முடிவது இல்லை.

              உங்கள் கம்யூனிஸ்ட் டிசைன் அப்படி யாரும் ஒன்றும் செய்வதற்கு இல்லை.

              • உங்கள் ஹிந்துத்துவா டிசைனை விட மற்ற யாருடைய டிசைனும் மோசமானது அல்ல மணிகண்டன்…உங்களுக்கு ஹிந்துகள் என்றால் அது பார்பனர்கள் மட்டுமே என்ற நிலையில் இருகின்றீர்கள்….ஹிந்து தலித் மக்கள் எல்லாம் உங்களை பொறுத்த வரையில் உங்களுக்கு அடிமைகளாகவே இர்க்கவேனும் என்ற உங்கள் நினைப்பு ,விருப்பம் அடித்து நொறுக்கப்டும்

                • நான் சொல்லாத… நினைக்காத விஷயங்களை எல்லாம் நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு என் மீது வெறுப்பை கக்குகிறீர்கள் இது உங்களை போன்ற பல கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கும் வியாதி (அல்லது பாசிஸ்ட் மனநிலை). “Either with me or against me” என்ற உங்களின் முட்டாள்தனமான பாசிஸ்ட் கம்யூனிஸ்ட் கொள்கைகளை ஆதரித்தால் நல்லவன், எதிர்த்தால் ஹிந்துத்துவா பிராமணன் etc etc etc

                  குதிரையை வண்டியில் பூட்டும் போது அதன் கண்களுக்கு மறைப்பு கவசம் போடுவார்கள் காரணம் அது அங்கே இங்கே என்று பார்க்காமல் ஒரே திசையில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதற்காக, உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் வண்டியில் பூட்டப்பட்ட குதிரைகளை போன்றவர்கள் (இது வினவிற்கும் பொருந்தும்) ஹிந்து மாதத்தில் இருக்கும் பல நல்ல விஷயங்கள், இந்த நாட்டின் பண்பாட்டில் இருக்கும் உயர்வுகள் எதையும் உங்களால் பார்க்க முடியாமல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தவைகளை எல்லாம் தப்பும் தவறுமாக புரிந்து கொண்டு வெறுப்பை வளர்த்து கொண்டு இருக்கிறீர்கள்.

                  இந்த குதிரை பார்வையால் தான் உங்களை போன்ற இந்தியாவின் நியாயத்தை கூட புரிந்துகொள்ள முடியாமல் பாக்கிஸ்தான் சீனா ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்.

                  • என்ன மணி ! ஹிந்து தலித் பெண்களை மீது நீங்கள் கொண்டு உள்ள கரிசனத்தை எடுத்துக் கூறினால் அதனை பற்றி ஒரு வார்த்தை பதி அளிக்க துப்பு இன்றி சீனாவுக்கு ஓடுறீங்க! சீனா காரனுக்கு ஆமாங்க அந்த நாட்டின் தலைவனுக்கு அறுசுவை உணவளித்து வாங்க வந்து எங்க எல்லையை தாக்குங்க , இந்தியாவை பிடிங்க என்று மறைமுகமாக அழைப்பது யார் என்று குஜராத்தில் உண்டு ஊஞ்சலில் உறவாடியவ்ரிடம் தானே நீங்க கேட்கணும்!

                    • நீங்கள் ஒரு பெண்ணின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள் அந்த மரணத்திற்கு காவி சாயம் பூசி வெறுப்பை வளர்க்கிறீர்கள். உண்மை இருக்கிறதோ இல்லையோ இப்படி தான் பேச வேண்டும் இப்படி தான் சிந்திக்க வேண்டும் என்றே நீங்கள் கம்யூனிஸ்ட்களால் டிசைன் செய்யப்பட்டவர். இதை மீறி உங்களால் சிந்திக்க முடியாது

                      இரு தனி நபர்களின் ஒழுக்க தவறிய செயலால் ஏற்பட்ட பின்விளைவு தான் இந்த மரணம் என்று சொன்னேன்… திருமணத்திற்கு முன் ஆண் பெண் உறவால் ஏற்படும் விளைவுகளுக்கு பெண்களே பொறுப்பு, இது இயற்கையின் நீதி. பின்விளைவு என்ன என்று தெரிந்தே ஒரு பெண் உறவில் ஈடுபடும் போது அதன் விளைவுகளுக்கு அவளே பொறுப்பு. இதில் எங்கே ஹிந்து பிராமணர் எல்லாம் வந்தார்கள், இத்தனைக்கும் அந்த நபர் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்

                      http://indianexpress.com/article/india/india-news-india/cpm-leader-names-kerala-gangrape-victim-justifies-act-3738584/

                      இந்த செய்தியில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கற்பழிப்பு செயலில் ஈடுபட்டார் என்பதற்காக கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள், அதற்காக ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட்களும் இந்த செயலுக்கு காரணம் என்று சொல்ல முடியுமா ?

  17. மணிகண்டன் மற்றும் உண்மையர் .., நல்லவேளையாக நீங்கள் இருவரும் அரசு தரப்பு வழக்கரிஞராக இல்லை… அப்படி இருந்து இருந்தால் உங்கள் அறிவற்ற தனத்தால் குற்றவாளிகளை எளிதில் வழக்கில் இருந்து விடுவித்து நிரபராதியாக ஆக்கிஇருப்பீர்கள்… குற்றத்துக்கான அடிப்படையான ஆதாரங்கள் (இங்கே பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கை பெருமுதலாளிகளுக்கு சாதகமாக) இருந்தாலும் கூட அவற்றை கண்டும் காணாமலும் செல்லும் உங்களின் அறிவின்மையால் தப்பிப்பது குற்றவாளி மட்டும் அல்ல , நீதியும் அதன் நிலையில் இருந்து சிதைகின்றது…!

    1. அன்று முதலவராக இருந்த மோடி GST என்ற வரி கட்டமைப்பை கடுமையாக எதிர்த்துவிட்டு இன்று அதே GST கட்டமைப்பை செய்ல்ப்டுத்துகின்றார் என்றால் அது பச்சோந்தி தனம் இன்றி வேறு என்ன வென்று நீங்கள் தான் இங்கே எம்மால்-வினவால் குற்றம் சாட்டப்ட்டுள்ள மோடியின் சார்பாக விளக்கம் தரவேண்டுமே தவிர நானோ அல்லது வினவோ அல்ல…

    2.மணிகண்டன் அவர்கள் பாராளுமன்ற கமிட்டியின் அம்பானிக்கு சாதகமான அறிக்கை என்ற அடிப்படை ஆதாரம் இருந்தும் அதனை புறக்கணித்து செல்வது என்பது அவரின் அறிவற்ற தனத்தை மட்டும் காட்டவில்லை அவர் கொண்டு உள்ள ஹிந்துத்துவா கொள்கை படி அவர் கார்பரேட் ஆதரவு பிரதமர் மோடியையும் இந்த பிஜேபி அரசையும் எப்படியாவதுஇந்த குற்றசாட்டில் இருந்து காக்க வேண்டும் என்ற முரட்டுத்தனமான, முட்டாள் தனமான துடிப்பு தான் வெளிபடுகிறது…

    3.மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெட்ரோலுக்கு வரியே இல்லை என்று பொய் கூறி காங்கிரஸ் அரசுக்கு வக்காலத்து வாங்க முயலவேண்டாம்மணிகண்டன்… அவர் ஆட்சி காலத்தில் குறிப்பாக சொல்வது என்றால் Customs duty on petrol and diesel were raised to 7.5 per cent from 2.5 per cent while excise duty was raised by INR 1 per litre to INR 14.35 and INR4.60 per litre on non-branded (normal) petrol and diesel respectively. அந்த மன்மோகன் சிங் அரசு சரியில்லை என்று தானே மக்கள் அந்த அரசை தூக்கி எறிந்தார்கள்? அப்படி பட்ட நிலையில் உங்கள் மோடியின் அரசு மேலும் மேலும் Customs duty மற்றும் excise duty ஐ அதிகரித்து இன்று ஒரு லிட்டருக்கு Excise Duty as Charged by Central Government Rs 21.48 / Litre on Petro என்ற அதிக அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி மக்களை சுரண்டுகின்றது…

    4. மக்கள் வரி கட்டவில்லை, மத்திய மாநிலஉதாரி அரசுகளுக்குநிதி சுமை அதிகரித்து விட்டது ,தனியார் எண்ணை நிறுவங்கள் எல்லாம் நட்டத்தில் ஓடுவதால் தான் இந்த வரி சுமை மக்கள் மீது ஏற்றபடுகிறது என்ற அயோக்கிய தனமான காரணங்களை எல்லாம் கூறி நீங்கள் இங்கே யாரையும் ஏமாற்ற முடியாது மணிகண்டன்…இந்தியா போன்ற விவசாயத்தை பெருமளவு அடிபடையாக கொண்டு உள்ள நாட்டில் ஒரு சதவிதம் மக்கள் தான் வரி கட்டுகின்றார்கள் என்றால அதில் என்ன தவறு இருக்கிறது? உங்களிடம் தான் ஆதார் கார்டு, பான் கார்டு , பணமதிப்பிழப்பு போன்ற கருப்பு பணத்துக்கு எதிரான கூர்மையான ஆயுதங்கள் உள்ளன அல்லவா அதனை கொண்டு இதுவரையில் கருப்பு பணம் வைத்து உள்ளவர்களை வரிக்கட்ட வைக்க என்ன சாதித்தீர்கள்?

    5.மணிகண்டன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறையும் போது இயரற்கையிலேயே அதன் ஒரு தயாரிப்பான பெட்ட்ரோளின் விலையும்
    குறைந்து தானே ஆகவேண்டும்? அரசு வரி சுமையை மக்கள் மீது ஏற்றாமல் இருந்து இருந்தால் பெட்ரோல் விலை பெட்ரோல் பங்குகளில் குறைத்து தானே இருந்து இருக்கும் என்ற அடிபடை அறிவு கூட உங்களுக்கு இல்லையே!

    6.நீங்கள் கூறுவது போன்று உண்மையில் GST செட்டில் ஆக 2 வருடங்கள் ஆகும் என்று அரசாங்கமே கூறியிருந்தால் கூட அதுவரையில் அம்பானிக்கும் அதானிக்கும் வரி விலக்கு அளித்து விட்டு தேர்தல் நேரத்தில் மக்களுக்கான வரியை குறைத்து இந்த மோடி அரசு அயோக்கிய தனம் செய்ய்போகிறதா?

    7. மக்கள் இவ்வளவு அதிகமாக நாம் வரி கட்டியும் (170%) எண்ணை நிறுவங்கள் நட்டத்தில் இயக்கினால் அதற்கு மக்கள் எப்படி காரணம் ஆவார்கள்? அந்த நிறுவனங்களின் நிதி ஆளுமை மற்றும் நிருவாகம் சரியில்லை என்று தான் பொருள்…அவர்களின் எல்லா பிரச்சனையையும் மக்கள் மீது ஏன் ஏற்றுகிறீர்கள்?

    8. மீண்டும் கூறுகின்றேன்… ஆளும் வர்கத்து அடிமைகள் அதாவது முத்லாளைகளுக்கு ஆதரவாக அவர்கள் கூறும் வாத்தையை எப்படி ந்ம்புகிண்றீகள்?

  18. மணிகண்டன் மற்றும் உண்மையர் ..,விடுபட்ட விசயத்தையும் இந்த பின்னுட்டத்தில் கவனிகின்றேன்… பெட்ட்ரோலிய பொருட்களை GSTயில் சேர்க்காமல் அதனால் அம்பானிக்கும் , அதானிகும் வரி விலக்கு அளித்த மோடியின் மக்கள் விரோத குற்றத்தை அவர் அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடன் சேர்த்து தான் செய்தார் என்று நான் ஏற்றுக்கொள்கின்றேன்… மோடி அதானிக்கும் அம்பானிக்கும் வரி விலக்குஎ அளித்த குற்றத்தை நீங்கள் மறுக்கவில்லை… அதே நேரத்தில் அந்த குற்றத்தை பாராளுமன்ற உருபினர்களும் சேர்த்து தான் செய்து உள்ளார்கள் என்று கூருகிண்றீகள்.

    உண்மையர் உங்கள் வாதங்களை உற்று கவனியுங்கள் :

    //GST மூலம் அம்பானி, அதானி பயன் அடைந்தார்கள் என்பது உண்மையானால் ‘நவரத்னா’ என்று அழைக்கப்படும் இந்தியா அரசே ஏற்று நடத்தும் ‘எண்ணெய் நிறுவனங்கள்’ இந்த GST விலக்கினால் லாபம் அடையுமா? நஷ்டம் அடையுமா ? //

    //ஒரு வாதத்திற்கு கேட்கிறேன். மோடி ‘பெட்ரோல் மற்றும் டீசலை GSTகுள் எடுத்து வந்து இருந்து இருந்தால்’ குறைந்தபட்சம் இந்த ஒரு விஷயத்தில் ‘மோடி நல்லவர்’ என்று சொல்வீர்களா ?//

    //3) மோடி ‘பெட்ரோல் மட்டும் டீசலை’ GSTகுள் எடுத்து வராதனன் மூலம் ‘அம்பானிக்கும்’, ‘அதனிக்கும்’ துணை போகிறார் என்றால் ஆதாரம் எங்கே ?//

    உங்கள் கேள்விகளுக்கும் வாதங்களுக்குமான சாட்சியாக தான் பாராளுமன்ற கமிட்டி பெட்ட்ரோலிய பொருட்களை GST யில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்ததனை உங்கள் முன் வைத்து உள்ளேன். அந்த ஆதாரங்களை நீங்கள் மறுக்கின்றீர்கள் என்றால் அது உங்களின் மனசாட்சிக்கு விரோதமான செயலாகத்தான் நான் கருதுகின்றேன்…

    மேலும் என்னுடைய பின்னுட்டம் 16 ல் நான் வைக்கும் நான்கு வாதங்களுக்கும் நீங்கள் உப்பு சப்பற்ற பதிலை தான் பதில் என்ற பெயரில் அளித்து உள்ளீர்கள் உங்கள் பின்னுட்டம்17 ல்.மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன்…

    1. பெருமுதலாளிகளுக்கு சாதகமாக பெட்ட்ரோலிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க அவற்றை GST யில் இருந்து விடுவிக்கின்றார்கள் என்றால் அந்த காரியத்தை யார் செய்து இருந்தாலும் அது கம்ம்யுநிச்டாக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் குற்றம் தானே உண்மையர்…?

    2.எண்ணை தனியார் நிறுவங்கள் நட்டம் அடைகின்றான் என்றால் அது அவர்களின் நிர்வாக கோளாறாக ஏன் பார்க்க தவறுகிண்றீகள்? இவ்வளவு வரி சலுகைகளை அரசு கொடுத்தும் அவர்கள் நட்டம் அடைய காரணம் என்ன? உலக சந்தையில் எண்ணை விலை குறைந்து கொண்டே வரும் நிலையிலும் அவர்கள் நட்டம் அடைய காரணம் அவர்களின் நிதி ஆளுமையில் ஏற்படும் குறைபாட்டு தானே?

    3.மோடி இந்த GST விசயத்தில் அன்று ஒரு நிலைப்பாடு இன்று ஒரு நிலைப்பாடு எடுகின்றார் என்றால் அவரின் மாற்றத்தை மனசாட்சி படி விளக்க வேண்டியது அவரும் அவரை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களும் தானே தவிர அவரின் மக்கள் விரோத அரசை எதிர்க்கும் நான் அல்ல…

    4. குறிப்பாக தமிழ் மாநில அரசு ஊதாரி தனமாக , ஊழல் மயமாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அது திவால் ஆக தானே செய்யும்… அதற்காக மக்கள் தான் தண்டம் கட்டவேண்டுமா? மதுவில் கிடைக்கும் வருமானம் கொண்டு நடக்கும் இந்த ஆட்சியின் நிலையை ஆதரிக்க உங்களுக்கு எப்படி மனம் வருகின்றது..பெட்ட்ரோலிய பொருட்களுக்கு வரியை இந்த அஇதிமுக அரசு ஏற்றிக்கொண்டே போகும் நிலையை நீங்கள் எப்படி ஏற்ருகொள்கிண்றீகள் ?

  19. ஒன்று, இரண்டு உண்மையான விஷயங்களை சொல்வது அறிவற்றதனம் என்றால் இதை எங்கு போய் சொல்வது என்று தெரியவில்லை

    இந்த GST வரி விதிப்பால் பல அடுக்குகளாக இருந்த ‘வரி செலுத்து முறை’ இப்போது ‘6 ஆக குறைந்துள்ளது’ என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

    பதில் #1: போகிற போக்கில் நீங்களும், நானும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் வினவு அப்படி செய்யக்கூடாது. ஊடகத்திற்கு தனிமனிதனை விட பொறுப்புகள் அதிகம். நான் காரணத்தை சொன்ன பிறகு ‘மோடி பச்சோந்தி இல்லை’ என்று சொல்கிற மனநிலை உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் காரணத்தை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை

    பதில் #2: நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் ‘Oil and Natural Gas Corp. and Oil India Ltd’ என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுமே இந்தியன் அரசு நிறுவனங்கள் தான். ‘Relianceக்காக’ என்று சொல்வதை விட ‘Relianceம்’ அந்த துறையில் பங்காற்றுகிறது என்பதே உண்மை

    .பதில் #4: எனக்கு தெரிந்து, UPA ஆட்சி காலத்தில் இருந்து எல்லா என்னை நிறுவனங்களும் ‘லாபத்தில்’ தான் இயங்குகின்றன. நஷ்டம் என்பதெல்லாம் இல்லை. demonetisation மூலம் புதிதாக ’91 லட்சம் பேர்’ வரிஅமைப்பின் கீழ் வந்துள்ளனர்

    பதில் #5: ஏன் குறைக்கவில்லை என்பதற்கான காரணங்களை மணிகண்டன் ஏற்கனவே கூறி விட்டார். இந்த விவாதமே ‘அம்பானி, அதானிக்கு’ வரி சலுகை என்ற உங்கள் ஊகத்தின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது

    New Delhi: Oil minister Dharmendra Pradhan today said petroleum products will be covered under the new Goods and Services Tax (GST) regime and “”the inclusion will not negatively impact the earnings of state governments”” concerned.

    http://energy.economictimes.indiatimes.com/news/oil-and-gas/petroleum-products-will-be-brought-under-gst-no-impact-on-states-earnings-pradhan/57854242

    பெட்ரோலையும் GSTக்குள் எடுத்து வரும் முயற்சி நடந்து அது ‘மாநில அரசுகளின்’ வருவாய் இழப்பால் ‘தற்போதைக்கு’ கை விடப்பட்டுள்ளது

    இன்னும் ஒரு விஷயத்தையும் சேர்த்து சொல்கிறேன். GSTல் இருந்து ‘பெட்ரோல்’ தவிர்த்து ‘மதுவுக்கும்’ விளக்கு அளிக்கப்பட்டுள்ளது

    GSTகு ‘ராஜ்ய சபாவில்’ அதிமுக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. நம்மூரில் யார் மதுபான ஆலைகள் நடத்துகிறார்கள் ?

    நம்மூரில் மதுபான ஆலைகள் நடுத்துபவர்களுக்கு இது லாபம் தானே. மதுவுக்கு விளக்கு தந்ததற்கு , நம்பத்தகுந்த பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன

    ஒரு சிலவற்றிற்கு ‘temporaryஆக’ விலக்கு அளித்துவிட்டார்கள் என்கிற காரணத்துக்காகவே ‘அந்த நிறுவனங்களுக்கு’ சாதகமான முடிவை தான் அரசு எடுத்துள்ளது என்று எப்படி சொல்ல முடியும்.

    பதில் #6: இதற்க்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மோடி அரசு முடிவடையும் தருவாயில் ‘பெட்ரோல் மற்றும் டிசீலை’ GSTகுள் எடுத்து வந்தால் ‘காங்கிரஸும்’ மற்ற ‘கட்சிகளும்’ அதை பிரச்சாரம் செய்யாமல் விட்டு விடுவார்களா ?

    பதில் #7: முன்பு சொன்னது போல் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கவில்லை. எல்லா எண்ணெய் நிறுவனங்களும் லிட்டருக்கு ’23 பைசா’, ’27 பைசா’ என்று லாபம் பார்த்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் நஷ்டம் ஏன் வருகிறது என்பது மொத்தமாக வேறு விவாதம்

    பதில் #8: ஓரளவுக்கு நம்பலாம். ஏனெனில் ஒட்டு கேட்பதற்காவது அவர்கள் ஒரு சில நல்ல விஷயங்களை செய்து தான் ஆக வேண்டும்.

    நேற்று நான் சொன்னது போல் ‘பெட்ரோல் அண்ட் டிசீலை’ இப்போது Immediate’யாக GSTகுள் எடுத்து வந்தால் அடுத்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு ‘திவால்’ தான் ஆக வேண்டும். அதுவும் தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ளவர்களின் தபோதையா நிலை என்ன என்பது எல்லார்க்கும் theriyum

    நன்றி

    • உண்மையர், உங்கள் எதர்வாதத்தை எடுத்து வைத்து என்னுடைய வாதத்தை தவறு என்று நிருபிகாமல் வெட்டியா பேசிகிட்டு இருகிங்க.

      முதல் விசயம் மோடி குஜராத்தில் இருந்தபோது GSTயை எதிர்த்துவிட்டு டெல்லியில் அதே GST கட்டமைப்பை ஆதரிகின்றார் என்றால் அது அவரின் நிலையற்ற தன்மையை பச்சோந்தி தனத்தை தவிர வேறு எதன் பிரதிபலிப்பு என்று நீங்கள் தான் என் கருத்தை மறுத்து உங்கள் பக்க கருத்தை எடுதுவைகவேனும்… அதனை விடுத்து நேரத்தை வீனடித்துகொண்டு இருக்கீங்க!

      பாராளுமன்ற அறிக்கைபடி வரி விலக்கில் இருந்து பயன் அடைவது அரசு எண்ணை நிறுவங்களும் தானே என்று உண்மையை போட்டு உடைத்து உள்ளீர்கள் நல்லது…… ஆமாங்க தனியார் நிறுவனத்துக்கு GSTயில் இருந்து விலக்கு அளித்து வரி விலக்கும் அளித்து தனி சட்டம் , அரசு நிறுவங்களை GSTயில் சேர்த்து வரி போட்டு தனி சட்டம் போட்டால் மோடி அரசின் மானம் கேட்டுபோயிடாது? அதனால் தான் இப்படி ஓட்டுக்கா GST யை அனைத்து எண்ணை நிறுவங்களுக்கும் அளித்து உள்ளார் மோடி…

      இன்னும் என் இந்த கருத்துக்கு பதில் இல்லை….”மோடி இந்த GST விசயத்தில் அன்று ஒரு நிலைப்பாடு இன்று ஒரு நிலைப்பாடு எடுகின்றார் என்றால் அவரின் மாற்றத்தை மனசாட்சி படி விளக்க வேண்டியது அவரும் அவரை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களும் தானே தவிர அவரின் மக்கள் விரோத அரசை எதிர்க்கும் நான் அல்ல…”

      இப்ப அப்படி தானே நிலை உள்ளது? எந்த எதிர்கட்சி இந்த GST விலக்கை எதிர்த்து பேசிக்கொண்டு உள்ளது? காங்கிரஸ் முதல் அனைத்து எதிர்கட்சிகளும் மவுனம் தானே சாதிக்கின்றன…( அனைத்து க்டசிக்ளும் இந்த கார்பரேட் நிறுவங்களிடம் இருந்து பெரும் நன்கொடையை நினைவில் கொண்டு பதில் அளியுங்கள்…//மோடி அரசு முடிவடையும் தருவாயில் ‘பெட்ரோல் மற்றும் டிசீலை’ GSTகுள் எடுத்து வந்தால் ‘காங்கிரஸும்’ மற்ற ‘கட்சிகளும்’ அதை பிரச்சாரம் செய்யாமல் விட்டு விடுவார்களா ?//

      எண்ணை நிறுவங்களுக்கு நட்டம் என்று கூறி உண்மையில் இருந்து தூர விலகி ஒருகிண்றீகள்! ஒவ்வொரு லிட்டருக்கும் எண்ணை நிறுவங்கள் எவ்வளவு லாபம் பேசுகின்றன என்று மணிகண்டன் எனக்கு கூரியவிசத்தை கவனியுங்கள்…”5.65 ரூபாய் இதில் சுத்திகரிப்பு மற்றும் இதர செலவுகள் இதில் அவர்களுக்கு லாபம் வரும்.”

      • I believe you’re not Dreaming. Your questions have been answered already. If you did not get my answer please go ahead and re-read. I’ll answer for only those left overs

        You stick to your opinion. I am not bothered about that. But, you need to provide guidance to Government (not to me) how ‘public and private sectors should be considered as far as GST is concerned especially when they deal with same industry.

        Its your point of view that I am a BJP supporter. I am here to share the truth what I am aware of. I neither support or oppose any government

        // அனைத்து க்டசிக்ளும் இந்த கார்பரேட் நிறுவங்களிடம் இருந்து பெரும் நன்கொடையை நினைவில் கொண்டு பதில் அளியுங்கள் //

        Do you have evidence for the statement which you mentioned above ?

        // எண்ணை நிறுவங்களுக்கு நட்டம் என்று கூறி உண்மையில் இருந்து தூர விலகி ஒருகிண்றீகள்! ஒவ்வொரு லிட்டருக்கும் எண்ணை நிறுவங்கள் எவ்வளவு லாபம் பேசுகின்றன என்று மணிகண்டன் எனக்கு கூரியவிசத்தை கவனியுங்கள் //

        When did I say this ? Show me the text

        • நான் இங்கே கொடுத்தவைகள் எல்லாம் அடிப்படை ஆதரங்கள் அவற்றின் அடிபடையில் தான் வாதாடுகின்றேன்…மேலும் நான் என்னுடைய சொந்த கருத்தின் அடிபடையில் இந்த மோடியின் அரசை குற்றம் சொல்லவில்லை. அனைத்து கட்சிகளும் இந்த கார்பரேட் நிறுவங்களிடம் இருந்து பெரும் நன்கொடையை பெற்ற விவகாரம் அதிகார பூர்வமானது தானே தவிர ஊகத்தின் அடிப்டையில் அல்ல….நீங்கள் கூறும் லாபம் (23 பைசா’, ’27 பைசா’ ) தவறானது தானே?

          • // அனைத்து கட்சிகளும் இந்த கார்பரேட் நிறுவங்களிடம் இருந்து பெரும் நன்கொடையை பெற்ற விவகாரம் அதிகார பூர்வமானது //

            Do you have any records for this statement with you? Or did any media produce evidence / video on the amount received from corporates? Even if there is any evidence that must be proved in court. Only then it becomes legal

            தானே தவிர ஊகத்தின் அடிப்டையில் அல்ல….நீங்கள் கூறும் லாபம் (23 பைசா’, ’27 பைசா’ ) தவறானது தானே?

            This has been debated with the ‘evidence’ in media by the respective officials

          • The information what I mentioned can be obtained via calculated using companies P&L A/c (or) can be obtained using RTI

            But for statements mentioned by you we can’t proceed on with ‘media evidence’. It must be proved in court. Else that becomes NULL and VOID

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க