தொலைக்காட்சி விவாதங்களில் அந்தக் கனிவான முகத்தை பார்க்காதவர் யாருமில்லை. எண்ணெய் தேய்த்து வாரிய சிகை, மைக்ரோ திருநீறு – நானோ பொட்டு, காட்டன் புடவை என்று பாரதிய கலாச்சாரத்தின் சர்வ லட்சணத்துடன், கொங்கு வழக்கில் ‘இனிய’ குரலில் வாதத்தை எடுத்துவைக்கும் பாங்கு….. அவர்தான் வானதி சீனிவாசன். தமிழக பாரதிய ஜனதாவின் பெண் முகம். தொண்டர்களுக்கு அவர் வானதி அக்கா. ஊடகங்களுக்கு கொள்கைகளை எடுத்தியம்பும் வானதி ‘மேடம்’.

இலக்கிய உலகில் நேர்மை, அறிவு, இலட்சியங்களின் இலக்கணங்களையும், அவ்விலக்கணங்களைப் பின்பற்றும் மேன் மக்கள் குறித்து எடுத்துச் சொல்லும் உரிமையைப் பெற்றிருப்பவர், எழுத்தாளர் திரு ஜெயமோகன்.  அவரது “அறம்” வரிசை சிறுகதைகள் – மனிதகுலத்தின் இலட்சிய மாந்தர்களைப் பற்றி படிப்போருக்கு நாமெல்லாம் என்றுமே ‘சாதா’தான் என்ற குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் ‘பேரிலக்கியம்’.

வானதி அக்காவிற்கும் ஜெயமோகனின் அறத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்கள் நுண் ரசனையற்ற முட்டாள்கள்! சென்ற 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது எழுத்தாளர் ஜெயமோகனும், ஜோ டி குரூஸும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தினமலரிடம் கூறியிருந்தார். அதே போன்று அறம் புகழ் ஜெயமோகனின் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் நடந்த போது வானதியும் கலந்து கொண்டார்.

இந்த இலக்கிய வேள்வியில் ஐக்கியமாவதற்கு முன்பு அக்கா அன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ‘அம்மா’ செல்லமாக தடை போட்டதால், சங்க பரிவாரம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே செல்லமாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில்தான் அக்கா ஆவேசமாக முழக்கம் போட்டுவிட்டு, மாலையில் அமைதியாக வெண்முரசு-வில் ஐக்கியமானார்.

சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் அக்கா போட்டியிட்டார். அதே  கோவையில் “விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்” எனும் ஜெயமோகனின் ’தீவிரவாதப் படை’ ஒன்று இயங்கி வருகிறது. அந்த வட்டத்தில் முக்கியமான தாதாவாக திகழும் திருவாளர் அரங்கசாமி அவர்கள் அக்காவிற்காக ஒரு வார்டு கவுன்சிலரை விடவும் அதிகமாகப் பிரச்சாரம் செய்தார், வேலை செய்தார். காரணம் காந்திக்கு அடுத்த படியாக கோவையில் ஜனித்த ஒரு மகாத்மா, வானதி அக்காதான் என்பது அவரது கிட்னி முதல் ’அட்ரினல் கிளாண்ட்’ வரை உணர்ந்து கொண்ட ஒன்று.

எனினும் சர்க்கரை அதிகரிப்பினால் கிட்னி செயலிழந்து டயாலிசிஸ்  செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுவதும் உண்டுதான். ஒருவன் கொழுப்பெடுத்துத் திரிகிறான் என்பது மக்கள் வழக்கில் உண்டு. மருத்துவர ரீதியில் கொழுப்பினால் மாரடைப்பு வருவதும் உண்டு. இங்கோ எளிமையின் சின்னமாக மகாத்மாவாக, அறம் கோஷ்டியனரால் அக்காவாக போற்றப்படும் வானதி சீனிவாசனுக்கு ஊழல் கொழுப்பேறிய கதையைப் பார்க்க இருக்கிறோம்.

பா.ஜ.க மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது (A party with a Difference) என்று பாஜகவினர் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம், குடும்ப ஆதிக்கம், ஊழல், உட்கட்சி பூசல் போன்றவற்றால் அடையாளம் காணப்படும் போது, பா.ஜ.க அவற்றுக்கு எதிரான கட்சியாக, ஹிந்துப் பண்பாட்டை மீட்கும் கட்சியாக, தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.

மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜ.க வேறுபடுவது ஒரு விதத்தில் உண்மைதான். தி.மு.க-வின் ஊழலை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வின் ஊழலை தி.மு.க-வும் வெளியிடுவார்கள். ஆனானப்பட்ட காங்கிரசில் கூட கோஷ்டி மோதலில் வேட்டியை கிழித்துக் கொண்டாலும் அவர்களது ஊழலை எதிர்க்கட்சிகள்தான் அம்பலப்படுத்துவார்கள். ஆனால் பா.ஜ.க-வின் ஊழலை மட்டும் அவர்கள் கட்சியினரே ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்கள்.

திருச்செந்தூரில் 2003-ம் ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் வானதி சீனிவாசன் மற்றும் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார். அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.

ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.

“கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.

அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.

அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.”

டந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:

அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ.  50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:

அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

வானதி அவரது கணவர் சீனிவாசனுடன்.

ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன? அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும்.

ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். “சைலாக் சிஸ்டம்ஸ்” (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன். “சிஸ்டம்” சரியில்லை என்று பா.ஜ.க தனது கட்சிக்குள் சேர்க்க விரும்பும் ரஜினி சொல்லியிருந்தாலும் அவரது சிஸ்டத்தில் பாஜக-வின் இந்த “சிஸ்டமேடிக்” ஊழல் வராது.

சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார்.  வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.

சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.

சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி (வலது)

சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.

மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின்  நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள். இதன் விரிவான செய்திகளை இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

காங்கிரசைச் சேர்ந்த கஜநாதன் இந்த ஊழல் நடந்த போது சைலாக் நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார். இந்த பின்னணியில் தான் 2009-2013 காலகட்டத்தில் வங்கிகளில் கடன்களை வாங்கிக் குவித்துள்ளது சைலாக். கஜநாதன், வானதி மற்றும் அவரது கணவர் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகனிடம், ஜூனியர் வழக்குரைஞர்களாக பயிற்சி பெற்றவர்கள் தான். ஆக இது திட்டமிட்ட முறையில் இந்திய வங்கிகளை ஏமாற்றி முறைகேடாக சொத்துக்களை வாங்கிய ஊழல்.

வானதி, அவரது கணவர் மற்றும் சைலாக் இயக்குநர்கள்.

தமிழகத்தில் கூட மாவட்ட அளவில் சட்டவிரோதமாகவும், சட்டப்பூர்வமாகவும் ‘தொழில்’ செய்யும் தி.மு.க – அ.தி.மு.க நபர்களிடையே ‘புரிந்துணர்வு’ இயல்பாக இருக்கும். ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பது அப்புரிந்துணர்வின் தர்மமாகும். அதே விதி காங்கிரஸ் – பா.ஜ.க-விற்கும் உண்டு.

கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.

மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.

இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.

சைலாக் நிறுவனத்தின் முறைகேடு வெளிவந்த பத்திரிகைச் செய்தி!

இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.

அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இவற்றை பாலசுப்பிரமணிய ஆதித்யன் அம்பலப்படுத்துவதன் அவசியமென்ன என்பதை பின்னர் பார்ப்போம். இவற்றை அம்பலப்படுத்திய உடன்  எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் ஊழலில் தொடர்புடைய பா.ஜ.கவின் கே.டி ராகவன் தனது ஃபேஸ்புக் நட்பு பட்டியலில் இருந்து பாலசுப்பிரமணிய ஆதித்யனை விலக்கம் செய்கிறார், கண்டிக்கிறார். அதோடு கட்சிக்குள்ளும், வழக்கு தொடர்பாகவும் வானதிக்கு ஆதரவளிக்கிறார்.

வானதியின் ஊழலை அம்பலப்படுதும் பாலசுப்ரமணிய ஆதித்தன் மற்றும் சங்கர நாராயணன்

ஆனால் கே.டி.ராகவனது எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் ஊழல் குறித்து ஒரு ஸ்கீரின் ஷாட் பதிவு போட்ட எஸ்.வி.சேகரை பேஸ்புக் நட்பு பட்டியலில் இருந்து ராகவனால் நீக்க முடியாது. ஏனெனில் அந்த அம்பி இந்த அம்பியை விட பெரிய அம்பி. பாலசுப்பிரமணியனோ திருச்செந்தூரில் வசிக்கும் ஒரு சூத்திரன் என்பதால் சார்வாள் உடனே ஆக்சன் எடுத்து விட்டார்.

இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது  தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள். தொட்டதுக்கெல்லாம் திராவிட இயக்கம் தமிழகத்தை நாசமாக்கிவிட்டது என்று முதலைக் கண்ணீர் வடித்தார்கள்.

அரசின் ஒப்பந்தப்புள்ளி கோரல் அழைப்பிற்கு குறைவான தொகையை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும். இதில் என்ன விதிமீறல் அல்லது முறைகேடு இருக்கிறது. மேலும், ஒரு நிறுவனத்தின் நிறுவனர்கள் செய்த முறைகேடுகளுக்கு வானதியோ அல்லது பாஜகவோ எப்படி பொறுப்பாக முடியும் என்றும் சிலர் வாதிடக்கூடும். இது குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.

மேலும், வானதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாலசுப்பிரமணியனின் குற்றச்சாட்டிற்கு அளித்த பதில் பற்றியும், சைலாக் நிறுவனத்தின் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரைப் பற்றியும் இனி பார்ப்போம்.

ரஜினி நடிக்கும் எந்திரன் – 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் கம்பெனியின் ஊழல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறோம். அந்தப் படத்தின் வசனகர்த்தா சாட்சாத் ஜெயமோகன் என்பதால் அவருக்கு இந்த கார்ப்பரேட் மோசடிகள் குறித்து அதிர்ச்சி ஏதும் இருக்காது. ஏனெனில் அந்தப்படத்தின் முன்னோட்ட விழாவிற்கு மும்பை சென்ற போதுதான் அவர் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை நேரடியாக ஆதரித்தார். அவரது அறமே எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதல்ல, சம்பாதித்த பணத்தில் எப்படி இலக்கிய ரசனையாக வாழ்கிறார்கள் என்பதே!

ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்.

(தொடரும்)

– வினவு புலனாய்வுக் குழு

(இந்த ஊழலின் ஆதாரங்கள் பல திரு பாலசுப்ரமணியன் ஆதித்யனால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டவைதான். அவற்றை சரி பார்த்து, ஆராய்ந்து, வேறு சில தகவல்களை தேடிப் பெற்று தொகுத்து இங்கே தருகிறோம்.)

இதன் அடுத்த பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 2

ஆதாரங்கள் :

  1. ஆர்.எஸ்.எஸ்-ன் குருஷேத்திரம் – ஜெயமோகனின் பிருந்தாவனம்
  2. BALASUBRAMANIA ADITYAN
  3. VANTHI SRINIVASAN(CRIMINAL & ASSET DECLARATION) – 2011
  4. COIMBATORE (SOUTH)VANATHI SRINIVASAN(CRIMINAL & ASSET DECLARATION)
  5. ZYLOG SYSTEMS LIMITED IPO (ZYLOG IPO) DETAIL
  6. SIVAKUMAR KANDASWAMY
  7. ZYLOG SYSTEMS EUROPE LIMITED
  8. ASSISTANT SOLICITORS GENERAL IN THE VARIOUS HIGH COURTS
  9. OUTCOME OF BOARD MEETING (AGM ON SEPT 28, 2015)
  10. http://mygov.in
  11. UNION BANK OF INDIA COMPLAINT ON ZYLOG INDIA AND CBI FIR
  12. BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் – ஆதாரங்கள்

_____________

பா.ஜ.க-வின் ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும்
இந்த புலனாய்வுக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு  நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

57 மறுமொழிகள்

  1. கட்டுரை தாெடரட்டும் … புகைப்படத்தில் ” நாயாேடு ” காட்சி தருபவர் யார்….? பக்ஜாதி நாயை பார்த்தாலே புரிகிறது … தற்பாேதைய வாழ்வும் …வசதியும் ….!

  2. இந்த அக்கா பொழப்பே இப்படி நாறுது அதுக்குள்ள அடுத்தவங்கப் பத்தி வாய் கிழிய பேச வந்துடுறாங்க. . .

  3. ஆஹா! அருமை அருமை…

    ஆதித்யா vs கேடி ராகவன் அருமை அருமை….

    அக்கா வானதியின் அருமைத் தம்பிகளின் தூக்கத்தைக் கெடுத்த வினவுக்கு வாழ்த்துக்கள்…

  4. ம்.. ஆகட்டும், அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

    சஸ்பென்ஸ் விட்டதால் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் 🙂

  5. மிக்க நன்றி.
    நான் பாஜக உறுப்பினர்.
    நீங்கள் தொடர்ந்து தமிழக பாஜக பற்றி எழுத வேண்டும்!இப்படித்தான் மோடி பற்றி ஆயிரம் கட்டுரைகள் எழுதி அவரை ஆட்சியில் அமர வைத்தீர்கள்.அதற்கொரு நன்றி.அதுபோல தமிழக பாஜக பற்றி எழுதி அவர்களையும் ஆட்சியில் அமரவைக்க வேண்டும்.நன்றி வினவு

    • இந்த டீல் நல்லா இருக்குது! 🙂

      //நீங்கள் தொடர்ந்து தமிழக பாஜக பற்றி எழுத வேண்டும்//

      நாங்க தொடர்ச்சியா ஊழல் செய்கிறோம், நீங்கள் தொடர்ச்சியாக எழுதுங்கள் என்று நேரடியாக சொல்லுங்க பாஸ்..

  6. பரவில்லையே மணிகண்டன் ராஜேஷ் என்ற பெயரில் மறுபிறப்பு எடுத்து இருக்காரே.. இவருக்கு தெரியல… வினவு சார்ந்த அரசியில் அமைப்புகள் மோடியை பாராளுமன்ற தேர்தலின் போது HDI* தமிழகத்துக்கும், குஜராத்துக்கும் ஒப்பீடு செய்து மோடியின் குஜரத்தை விட தமிழகம் சிறந்தது என்று நிருபித்து மோடியை தோல் உரித்து தொங்க போட்ட கதை. தமிழகம் எங்கும் மோடியின் பாமாக , விஜயகாந்து என்று கூட்டாளிகள் தோற்று ஓடிய கதை இவருக்கு தெரியல போல… தமிழகம் என்ன இந்தியா முழுக்க அடுத்த தேர்தலில் பிஜேபியை தோல்வி அடைய செய்து துரத்தி அடிப்போம்.

    HDI-The Human Development Index (HDI) is a composite statistic of life expectancy, education, and per capita income indicators, which are used to rank countries into four tiers of human development.

  7. // 2011ல் அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ. 50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.//

    இதை சொன்ன தாங்கள் அவர் எதனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார் என்று சொல்லவில்லையே ? All of the sudden இவ்வளவு சொத்துக்களை குவித்து விட்டாரா ?

    // அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

    ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன? //

    சொத்து 500 மடங்கு உயர்ந்ததா அல்லது 600 மடங்கு உயர்ந்ததா என்பது இங்கு முக்கியமில்லை

    குறிப்பாக Fixed Assets விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்நது கொண்டு தான் இருக்கும். வேண்டுமென்றால் liquid assetsஐ பற்றி விவாதிக்கலாம். அதுவும் ஊழல் செய்து உள்ளார் என்று நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகி உள்ளதா ?

    ஏனென்று கேட்டால் ‘தா பாண்டியன்’ மகன் தற்போது துணை வேந்தர் பொறுப்பில் இருந்து கீழே இறக்கப்பட்டுள்ளதாக செய்தி உள்ளது. அப்படி என்றால் ‘தா பாண்டியன்’ மகன் ஊழல் செய்தவரா ?

    அதுவும் இல்லாமல் zylog systems பற்றி அவர் தனது முகநூலில் நீண்ட விளக்கமளித்துள்ளார்.

    ஆனால் உண்மையின் மறு உருவமாக இருக்கும் ‘வினவிற்கு’ ஒன்னு-சைடு பகுத்தறிவை follow செய்வதால் பிஜேபி மட்டுமே ஊழல் கட்சியாக இருக்க முடியும்

    • பாஸ், பி.ஜே.பி மட்டும் ஊழல் கட்சியல்ல….பி.ஜே.பியும் ஊழல் கட்சி.
      உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில் அதனை அம்பலப்படுத்தி எழுதிய அளவிற்கு பி.ஜே.பி பற்றி யாரும் பத்திரிக்கையில் எழுதுவதில்லை என்பது தான் உண்மை. ஒரு சிலர் மட்டுமே எழுதுகிறார்கள். EPW போன்ற பத்திரிக்கையில் எழுதினாலே மிரட்டி கட்டுரையையும் ஆளையும்நீக்கி விடுகிறார்கள்.

      பி.ஜே.பி யும் ஊழல் கட்சி தான் என்பதற்கு இந்த கட்டுரையையும் அதில் இணைக்கப்பட்டுள்ள லிங்கையும் பார்த்து விடவும்.

      https://www.vinavu.com/2017/08/18/the-myth-of-an-incorruptible-modi/

  8. இங்கே எந்த கட்சியும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என்று நான் சொல்லவில்லை

    உண்மையை சொல்ல போனால் பிஜேபியில் ‘பங்காரு லக்ஷ்மணன்’ தண்டிக்கப்பட்டு இருக்கிறார். ‘ரெட்டி ப்ரதெர்ஸும்’ நிலைமை என்னவென்று தெரியவில்லை. மற்ற கட்சிகளில் தண்டிக்கபட்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை

    அப்படி என்றால் இந்தியாவில் மற்ற கட்சிகள் ஊழல் செய்வதில்லையா ? அவ்வளவு பரிசுத்தமான கட்சிகளா மற்ற எல்லா கட்சிகளும்

    என்னுடைய கேள்வி ஒன்று தான். ஏன் பிஜேபி, admk ஊழல்கள் மட்டுமே வினவில் வருகிறது ?

    • இது கேள்வி அல்ல, அப்பட்டமான அவதூறு, பொய்ப் பிரச்சாரம்!
      //என்னுடைய கேள்வி ஒன்று தான். ஏன் பிஜேபி, admk ஊழல்கள் மட்டுமே வினவில் வருகிறது ?//

      கட்டுரையிலிருந்து.. :

      // பா.ஜ.க மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது (A party with a Difference) என்று பாஜகவினர் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம், குடும்ப ஆதிக்கம், ஊழல், உட்கட்சி பூசல் போன்றவற்றால் அடையாளம் காணப்படும் போது, பா.ஜ.க அவற்றுக்கு எதிரான கட்சியாக, ஹிந்துப் பண்பாட்டை மீட்கும் கட்சியாக, தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.

      மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜ.க வேறுபடுவது ஒரு விதத்தில் உண்மைதான். தி.மு.க-வின் ஊழலை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வின் ஊழலை தி.மு.க-வும் வெளியிடுவார்கள். ஆனானப்பட்ட காங்கிரசில் கூட கோஷ்டி மோதலில் வேட்டியை கிழித்துக் கொண்டாலும் அவர்களது ஊழலை எதிர்க்கட்சிகள்தான் அம்பலப்படுத்துவார்கள். ஆனால் பா.ஜ.க-வின் ஊழலை மட்டும் அவர்கள் கட்சியினரே ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்கள். //

    • //பிஜேபியில் ‘பங்காரு லக்ஷ்மணன்’ தண்டிக்கப்பட்டு இருக்கிறார். //

      He is from SC community,
      at that time actually BJP wanted to get rid of him,
      as he is PRESIDENT OF BJP at that time.

    • Our Truthsayer says that he does not know what happened to Reddy Brothers.How come he does not know that one of the Reddy brothers celebrated his daughter’s wedding at a modest cost of Rs 500 crores that too during demonetization?He must also know about the Godmother of these Reddy Brothers.

      • Dear Sooriyan, I am not a politician and I meant about the status of case against ‘Reddy brothers’. Do you know the current status of case against ‘Reddy brothers’ and what’s happening?

  9. வினவு ஆசிரியருக்கே தெரியும் ‘தமிழ் நாட்டில் ‘ எதைப்பற்றி எழுதினால் வியாபாரம் ஆகுமென்று

    // பா.ஜ.க மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது (A party with a Difference) என்று பாஜகவினர் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம், குடும்ப ஆதிக்கம், ஊழல், உட்கட்சி பூசல் போன்றவற்றால் அடையாளம் காணப்படும் போது //

    எல்லா கட்சிகளிலும் ஊழல் செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்ததே. பிஜேபி தும்மினால் கூட மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுதும் வினவு, மற்ற கட்சிகளின் ஊழலை பற்றி எல்லாம் எழுத வேண்டாம். அதை பின்னால் பார்த்து கொள்ளலாம்

    ‘காவேரி வழக்கு’ குறித்து தற்போது இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால் திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் வெளிநாட்டில் உள்ளனர். இது பற்றியும் வினவு எழுதுமா ?

    • //எல்லா கட்சிகளிலும் ஊழல் செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்ததே. ///

      இதையா தேர்தலில் எதை பிரச்சாரம் செய்தீர்கள்? A party with a Difference என்பதை தானே பிரச்சாரம் செய்தீர்கள், செய்கிறீர்கள்?
      ஊழல் செய்தவர்களை பா.ஜ.க வெளியே அனுப்பிவிட்டதா என்ன?

      ஊழல்வாதிகளை வைத்துக் கொண்டே ஊழல் இல்லாத சுத்தபத்தமான கம்பெனியாக பிரச்சாரம் செய்வதால் கொஞ்சம் சாதா-ஸ்பெசலா கவனிக்கிறார்கள்.

      நாங்களும் ஊழல்வாதிகள் தான் என்று நீங்களும், உங்கள் ஆட்களும் இப்போது சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டால் உங்களை ஏன் ஸ்பெசலாக கவனிக்கப் போகிறார்கள்? இதோ நீங்களே சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் பாருங்கள் ! நல்ல முன்னேற்றம் தான் 🙂

      • முடியல அப்பா. முடியல. நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள். அதற்கான விளக்கத்தை தான் நான் அளித்து உள்ளேன்

        உங்களுக்கு பிஜேபி பற்றி பேசுவேண்டுமானால் நீங்கள் நேரடியாக பிஜேபி உறுப்பினர்களிடம் பேசுங்கள். என்னிடமல்ல அரசியலில் எனக்கு தெரிந்ததை சொல்பவன் நான்.

        உலுத்துப்போன ‘பார்ப்பன எதிர்ப்பு’ என்கிற ஆயுதத்தை வைத்து தமிழ்நாட்டில் இன்னும் ‘வினவு போன்ற’ சில அமைப்புகள் கம்பு சுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

        ‘பார்ப்பன எதிர்ப்பு’ உளுத்துப்போன ஆயுதம் என்று நான் சொல்லவில்லை. அதை சொன்னது ‘டாக்டர் ராமதாஸ்’.

        முடிந்தால் வினாவை அனைத்து கட்சிகளும் நடக்கின்ற ஊழல்களை பற்றி முதலில் எழுத சொல்லுங்கள். பின்பு நாம் விவாதிக்கலாம்

        • திரும்ப திரும்ப கையப் புடிச்சு இழுத்தியான்னு கேட்டா, மறுபடியும் மொதல்ல இருந்து உங்க பொண்டாட்டி ஓடிப்போன கதையில இருந்து சொல்ல முடியாது..

          //முடிந்தால் வினாவை அனைத்து கட்சிகளும் நடக்கின்ற ஊழல்களை பற்றி முதலில் எழுத சொல்லுங்கள். பின்பு நாம் விவாதிக்கலாம்//

          இது அவதூறு, பொய்ப் பிரச்சாரம். முதலில் நீங்கள் உண்மையை பேசுங்கள், பிறகு விவாதிக்கலாம்.

  10. //என்னுடைய கேள்வி ஒன்று தான். ஏன் பிஜேபி, admk ஊழல்கள் மட்டுமே வினவில் வருகிறது ?//
    அடேய் போய் வினவின் தேடுதல் பகுதியில் பொய் விரும்பிய கட்சியின், மதத்தின் , நபரின் பெயரை எழுதி தேடிப்பார் எத்தனை பதிவுகள் கிடைகின்றன என்று. கருணாநிதியை கிழிக்கும் பதிவுகள் ரிசல்ட்ஸ் மட்டும் பத்து பக்கம் கிடைக்கும்.

    //வினவு ஆசிரியருக்கே தெரியும் ‘தமிழ் நாட்டில் ‘ எதைப்பற்றி எழுதினால் வியாபாரம் ஆகுமென்று//
    எது வியாபாரமா? மக்களை ஏமாற்றி ‘ஆன்மீகத்தை’ விற்கும் காலத்தில் மக்களை நிஜத்துக்கு இழுத்துக்கொண்டு வர சல்லிக்காசு எதிர்பாராது அயராது பாடுபடும் கூட்டமடா இது. எனக்குதெரியும் தள நிர்வாக சந்தா அறிமுகமே தோழர்களுக்கு சங்கடத்தை கொடுத்திருக்கும், மாட்டு மூத்திரத்தை காசுக்கு விற்கும் நாட்டில் அற்புத மனித விழுமியங்களையும் விடுதலைக்கு சரியான வழியையும் போதிக்கும் கூட்டமடா இது. நீயா.. விட்டால் சிறை சென்ற தோழர் வளர்மதியும் போலீசால் மக்களின் குரலாக இருந்த ஒரே காரணத்துக்காக மண்டை பிளக்கப்படும் தோழர்களும் , மார்பகத்தில் பூட்ஸ்காலால் உதைபடும் பெண்தோழர்களும் வீதியில் வந்து கேள்வி கேட்டதற்காய் கன்னத்தில் அறைபட்ட அந்த தாயையும் கூட வியாபரத்துக்கு செய்கிறார்கள் என்பாய் மதிகெட்டவனே.

    \\உலுத்துப்போன ‘பார்ப்பன எதிர்ப்பு’ என்கிற ஆயுதத்தை வைத்து தமிழ்நாட்டில் இன்னும் ‘வினவு போன்ற’ சில அமைப்புகள் கம்பு சுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

    ‘பார்ப்பன எதிர்ப்பு’ உளுத்துப்போன ஆயுதம் என்று நான் சொல்லவில்லை. அதை சொன்னது ‘டாக்டர் ராமதாஸ்’.\\

    பாத்தியா உன் எண்ணம் என்னவென்பதை வெளிபடுதிவிட்டு மாங்காய் ராமதாசிய கோத்து விடுறா, ராமதாசி வேலையத்து புடுங்கிய ஆணிய எதுக்கு இங்க வந்து அடிக்கிறா?
    அறிவு கேட்டுகொள், முதலாளித்துவ எதிர்ப்பு, சமுகநலன், சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமை, பெண்ணுரிமை, சமவுடமை, தீண்டாமை/சாதி ஒழிப்பு , முடநம்பிக்கை/கடவுள் மறுப்பு என எண்ணற்ற உன்னத கொள்கைகளில் ஒன்றுதான் பார்ப்பனிய எதிர்ப்பு எங்களுக்கு.
    இவைதான் எல்லாம் உன்னை போன்றவர்க்கு கசக்குமே, அதுதான் உளுத்துபோனது பழுத்து போனது என பினாத்துகிறாய், உளுத்து போகவில்லை இன்னும் கூர்மையாகிறது.

    முற்போக்கு என்றுவிட்டு சாதி என்றவுடன் ரிவர்ஸ் கியரில் கம்பு சுற்றும் சிலரை போல் எண்ணிவிட்டாயா நம்மை பார்பன எதிர்ப்பை மட்டும் வைத்து கம்புசுற்ற?

  11. டேய் தம்பி சின்ன சவுண்ட் ஓவரா இருக்கே

    மொதல்ல வினவ நான் போட்ட கமெண்ட் போடா சொல்லு. நான் வினாவிடம் நேரடியான கேட்ட கேள்விக்கு இன்னும் வினவு பதில் பதியவில்லை, என்னுடைய கமெண்ட்டையும் பதியவில்லை

    மரியாதை இல்லாமல் எனக்கும் பேச தெரியு. மரியாதை இல்லாமல் பேசினால் என்ன பெரிய இதுவா நீ. மொதல்ல பதிய சொல்லு. அப்புறம் பேசலாம் சரியா. இப்போ கிளம்பு. வரட்டா

    • TruthSayer, மரியாதை அற்ற சொற்களை பயன்படுத்த உங்களுக்கு அனுமதி கொடுத்து யார்? வினவு உங்கள் பின்ன்ட்டங்க்களை வெளியிடாவிட்டால் வினவுடன் முட்டி மோதுங்கள்.., அதனை விட்டுவிட்டு எதற்காக மரியாதை குறைவான வார்த்தைகளுடன் சின்னா மீது நீங்கள் பாயவேண்டும்? உணர்சி வயபடுவது என்பது விவாதத்துக்கு ஆகாது. இந்த க்ட்டுரையில்ன் எல்லையை மீறி சாதியத்தை பற்றிய விம்ர்சங்க்களை முதலில் வைத்தது நீங்கள் தான். அதற்கு சின்னா பதில் அளித்து உள்ளார். முடிந்தால் மேலும் அவருடன் விவாதியுங்கள்.

      ஏன் வானிதி மீதான குற்றசாட்டுகளை சாதி ரீதியில் பார்கின்றீர்கள் ? பிஜேபி யின் துணை மாநில தலைவர் தானே அவர்? இது சாதி ரீதியான குற்றசாட்டு என்றால் அவர் சார்ந்த கட்சி அவரை பார்பனர் என்பதால் தான் பதவியில் அம்ர்த்தியுள்ளதா? இந்த குற்றசாட்டுகளை அவர் மீது அவர் கட்சியினரே வைத்ததன் அடிப்டையில் தானே வினவு புலன்ன்னாய்வு செய்து இந்த கட்டுரையை வெளியிட்டு உள்ளது.

      //உலுத்துப்போன ‘பார்ப்பன எதிர்ப்பு’ என்கிற ஆயுதத்தை வைத்து தமிழ்நாட்டில் இன்னும் ‘வினவு போன்ற’ சில அமைப்புகள் கம்பு சுத்தி கொண்டு இருக்கிறார்கள். //

  12. குமார் நீங்கள் கண்ணை திறந்து வைத்து கொண்டு தானே படிக்கிறீர்கள். கீழ்வருவனவற்றை படித்துவிட்டு வினவின் மலிவான, கீழ்த்தரமான அரசியலை புரிந்து கொள்ளுங்கள்

    முதலில் யார் ஆரம்பித்தார்கள் என்று கூட தெரியாமல் கமெண்ட் செய்வீர்களா ???

    சின்னா பதிந்தவை
    ===============

    1) “அடேய்” போய் வினவின் தேடுதல் பகுதியில் பொய் விரும்பிய கட்சியின், மதத்தின் , நபரின் பெயரை எழுதி தேடிப்பார்

    2) ‘பாத்தியா உன் எண்ணம்’ என்னவென்பதை வெளிபடுதிவிட்டு மாங்காய் ராமதாசிய கோத்து விடுறா, ராமதாசி வேலையத்து புடுங்கிய ஆணிய எதுக்கு இங்க வந்து அடிக்கிறா?

    3) அந்த தாயையும் கூட வியாபரத்துக்கு செய்கிறார்கள் என்பாய் மதிகெட்டவனே.

    ஆணி சொன்னது
    ==============

    1) மறுபடியும் மொதல்ல இருந்து உங்க பொண்டாட்டி ஓடிப்போன கதையில இருந்து சொல்ல முடியாது.. —> அரசியல் பேசுவதற்கு கூட அடுத்தவன் பொண்டாட்டி பற்றி பேசியே ஆகவேண்டும் போல.

    உங்க மனைவியை பற்றி யாரவது கமெண்ட் செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ?

    // ஏன் வானிதி மீதான குற்றசாட்டுகளை சாதி ரீதியில் பார்கின்றீர்கள் ? // நான் சாதி ரீதியாக எல்லாம் பார்க்கவில்லை. முதலில் என்னுடைய comment #8 பார்க்கவும். பின்பு பேசுங்கள்

    மாட்டு மூத்திரம், தொழிலாளர் உரிமை, தீண்டாமை மற்றும் பார்ப்பனிய எதிர்ப்புக்கு பதில் அளிக்க நான் தயார்.

    முதலில் வினவு இதற்க்கு பதில் சொல்லட்டும்

    // வினவு பெயரில் வரும் பின்னூட்டங்களைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. அது வினவு கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம் //

    அவரவர் கமென்டிற்கு அவரவர் தான் பொறுப்பு தான் வினவு எதிர்க்காக ‘mask’ செய்யவேண்டும்.

    அடுத்தவன் பொண்டாட்டிய பத்தி ஒருத்தன் கமெண்ட் போடுவானாம் அதை வினவு allow பண்ணுமாம். அதை பாதிப்பட்டவன் கேட்ககூடாதாம் ஆனால் அது தான் விவாதமாம். சூப்பர் பகுத்தறிவாதம்!!!

    • மன்னிக்கவும் TruthSayer..,இது எனது கவனகுறைவு தான். கூர்ந்து பார்த்து இருந்தால் முதலில் அவர்களை தான் கண்டனம் செய்து இருப்பேன். இவர்களின் பின்னுட்டங்கள் மிகவும் தவறானவை தான். தவறானவை மட்டும் அல்ல முற்போக்கனவர்கள் என்று கூறிக்கொண்டே தாய் மற்றும் மனைவி போன்ற பெண்களை இழிவு செய்கின்றார்கள். அவர்களின் பின்ன்னுடதுடன் ஒப்பிடும் போது “டேய் தம்பி சின்ன” என்பது எல்லாம் பெரிய குற்றமே அல்ல. வினவு ஏன் இது போன்ற தவறான,பெண்களை இழிவு செய்யும் பின்னுட்டங்களை வெளியிடுகின்றது ? மாற்று கருத்து உடையவர்களை எதிர்கொள்ள அரசியல் அற்றவர்கள் தான் இந்த சின்னாவும், ஆணியும் என்பது நிருபணம் ஆக்கிறது.

      என்னுடைய கவன குறைவுக்காக (அவர்களின்அசிங்கமான பின்னுட்டங்களை சரியாக படிக்காமைக்காக ) மன்னிப்பு கேட்கின்றேனே தவிர அவர்கள் சார்பாக அல்ல… முற்போக்கு பொறுக்கிகளை நான் என்றும் ஆதரிப்பது இல்லை. அதே நேரத்தில் அவர்களை போன்றே நீங்களும் ஆபாசமாக் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று உரிமையுடன் கோருகின்றேன். நன்றி.

    • அட ராமா…! எதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டிய கொடுமையான நிலைமைக்கு என்னய ஏண்டா ஆளாக்குறே..

      “கையப்புடிச்சு இழுத்தியா” என்பதும் “மறுபடியும் மொதல்ல இருந்து உன் பொண்டாட்டி ஓடிப் போனதுல இருந்து வா” என்பதும் தமிழ் திரைப்பட காமெடி டயலாக்குகள்..

      நீங்கள் செய்வது அவதூறு, பொய்ப் பிரச்சாரம். நீங்கள் அரசியல் பேசவில்லை. திரும்ப திரும்ப சொன்னதையே நீங்களும் சொல்கிறீர்கள், என்னையும் சொல்ல வைக்கிறீர்கள். அதனால் நான் அந்த காமெடியை சொன்னேன்…

      மீண்டும் சொல்கிறேன்:
      முதலில் நீங்கள் உண்மையை பேசுங்கள், பிறகு விவாதிக்கலாம்.

      • ஆணி, அதுவெல்லாம் படத்தில் வரும் காமெடி என்று எளிதில் நீங்க தப்ப முடியாது ஆணி… படங்களில் இன்னும் என்ன என்னமோ கூட வரும்… படங்களில் வரும் பிற்போக்கு சிந்தனைகளை எல்லாம் , அதனை எல்லாம் உங்க விவாத கருப்பொருளில் உள் நுழைபீர்களா? அது எப்படி நியாயம் ஆகும்? பொறுமையாக சிந்தித்து நேர்மையாக , கவனமாக, கடமையுணர்வுடன் பதிவுகளை அளிக்க கோருகின்றேன்.

        • ஐயா குமார்,

          அவதூறு, பொய்ப் பிரச்சாரத்திற்கு என்ன பதில் சொல்ல சொலிகிறீர்கள்? அதையே திரும்ப திரும்ப சொல்லும்போது.. ?

          வார்த்தைகளை பிடித்துக் கொண்டு பெண்களை அவமானப்படுத்துவது, கீழ்த்தரமாக நினைப்பது என்ற உள்நோக்கம் கற்பிக்கிறார் அவர் (நீங்களும் தான்). இதுவும் அவதூறு தான்..

          இந்து மதத்தையும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வையும் ஆதரித்துக் கொண்டே நான் பெண்களை வார்த்தைகளால் அவமானப்படுத்துவதை எதிர்க்கிறேன் என்பதெல்லாம் கேலிக்கூத்து.

          //மறுபடியும் மொதல்ல இருந்து உங்க பொண்டாட்டி ஓடிப்போன கதையில இருந்து சொல்ல முடியாது// – இதில் ”உங்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன்.. அது என்னுடைய தவறு தான்.

          ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வினரைப் பார்த்து தாய்நாட்டையும், உங்கள் தாயான கோமாதாவையும் அந்நியர்களுக்கு கூட்டிக்கொடுக்கிறார்கள் என்று சொல்வது சரியா தவறா? அது முற்போக்கு பொறுக்கித்தனமா இல்லையா?

          • பாதி உண்மையை மறைத்தது ஏன் ஆணி?

            1.மணிகண்டன் அவர்களின் வாக்கு மூலம் என்னவென்று படியுங்கள். அதன் பின்னால் பின்னால் பேசுங்க.. மாட்டை அம்மாவுடன் ஒப்பீடு செய்த மணிகண்டனுக்கு நான் கொடுத்த பதில் தானே அது? பாதி உண்மையை மறைத்தது ஏன் ஆணி? என் பின்ன்னுட்டதிலேயே தெளிவாக தானே சுட்டிக்காட்டியுள்ளேன். மணிகண்டன் அம்மாவை மாட்டுடன் ஒப்பீடு செய்து அதனை வெட்டி கொன்று உண்பது சரியா என்று கேட்ட கேள்விக்கு தானே அப்ப மாட்டை(அம்மாவை) வெட்டி கூறுபோட்டு பதபடுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது எல்லாம் சரியா என்று தானே கேள்வி எழுப்பினேன். அவரே அந்த எதிர் பதிலுக்கு முகம் கொடுக்க இயலாமல் ஓடி ஒளியும் போது போலி முற்போக்குகளான நீங்கள் அவர் சார்பாக பதில் எழுதுவது ஏன் ? மாட்டை என் அம்மாவுடன் ஒப்புமை செய்தவனுக்கு நான் கொடுத்த பதில் அடியில் எப்டி முற்போக்கு பொறுக்கித்தனம் வந்தது என்று விவரமாக் கூருங்க ஆணி!//ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வினரைப் பார்த்து தாய்நாட்டையும், உங்கள் தாயான கோமாதாவையும் அந்நியர்களுக்கு கூட்டிக்கொடுக்கிறார்கள் என்று சொல்வது சரியா தவறா? அது முற்போக்கு பொறுக்கித்தனமா இல்லையா?//

            2. அவர் பொய் பிரசாரம் செய்கின்றார் என்றால் அதனை அம்பல படுத்துங்கள் ஆணி.. பொறுமை இழக்காமல் மதிகொண்டு அம்பலப்டுத்துங்கள். இந்த கட்டுரை எழுப்பும் முக்கிய குற்றசாட்டுகளை கேள்விகளாக மாற்றி அவரிடமே கேளுங்க.. அதனை விட்டுவிட்டு சினிமாவில் வரும் வசனங்களை கம்ம்யுநிடு(உண்மையில் நீங்கள் கம்ம்யுநிடு தானே?) என்று கூறிக்கொண்டு நீங்கள் பயன்படுத்தினால் விவாதத்தில் இத்தகைய சிக்கல் தான் வரும். எப்படிஇருந்தாலும் பகுதி அளவுக்கு உங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரியமைக்கு மிக்க நன்றி. உங்கள் சினிமா வசனத்தில் “உங்கள்” என்ற சொல் தான் அவருக்கு மிக்க பிரச்சனையை உருவாக்கியுள்ளது அல்லவா..? அதனை நீங்கள் உணர்ந்தவ்ரைக்கும் எனக்கு மகிழ்வே.//அவதூறு, பொய்ப் பிரச்சாரத்திற்கு என்ன பதில் சொல்ல சொலிகிறீர்கள்? அதையே திரும்ப திரும்ப சொல்லும்போது.. ?//

            3. வார்த்தையில் உள்ள தவற்றை உணர்ந்த நீங்கள் தானே மன்னிப்பு கோரியுள்ளீர்கள். அப்புறம் நான் எப்படி வார்த்தைகளை பிடித்துகொண்டு தொங்குவதாக கூருகிண்றீகள்? நாம் தவறு செய்யும் நிலையில் அத்தகைய தவற்றை சுய விமர்சனம் செய்து கொண்டு களைவது அதன் மூலம் சமுக பணியில் முன்னேறி செல்வது தான் சரியான வழிமுறையாகும்.//வார்த்தைகளை பிடித்துக் கொண்டு பெண்களை அவமானப்படுத்துவது, கீழ்த்தரமாக நினைப்பது என்ற உள்நோக்கம் கற்பிக்கிறார் அவர் (நீங்களும் தான்). இதுவும் அவதூறு தான்..//

            4.இந்த விவாதத்தில் அவரிடம் இந்த கட்டுரை சார்ந்த செய்திகளின் அடிப்டையில் கேள்வி எழுப்புவது தான் நல்லதே தவிர செய்த தவற்றை பிடித்துகொண்டு அது சரிதான் என்று வாதிப்பது வேலைக்கு ஆகாது.

            புரிந்த்ளுக்கு நன்றி. இது தொடர்பாக இனி நான் பேசப்போவது இல்லை. truth sayer அவர்களை கேள்விகேட்டு அம்பலப்டுத்தவேண்டிய பணி எனக்கு உள்ளது. மேலும் கம்ம்யுநிடு என்ற பெயரில் பொருக்கி தனம் செய்து கொண்டு உள்ள சின்னாவுக்கு எல்லாம் நான் இந்த விசயத்தில் இனி பதில் எழுதும் நோக்கம் எல்லாம் எனக்கு இல்லை.

    • TruthSayer, உங்கள் பின்னுட்டத்தையும் (8) மற்றும் வானதி ஒரு மாதத்துக்கு முன் முக நூலில் கொடுத்த விளக்கத்தையும் படித்தேன். அவர் மீது அவர் கட்சிகாரர்கள் கூறும் குற்றசாட்டுகள் அடிபடையிலும் அதற்கு அவர் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் தானே இந்த கட்டுரை பேசுகின்றது. உங்களுக்கு நேரமும் ,பொறுமையும் இருந்தால் இந்த கட்டுரை வானதி மீது வைக்கும் குற்றசாட்டுகளை ஒவ்வொன்றாக முகம் கொடுத்து அவற்றுக்கு பதில் கொடுங்கள்.

      நான் இந்த கட்டுரை தொடர்பாக உங்களிடம் விவாதிக்க தான் போகின்றேன். விவாதத்தில் கவனத்தை சிதறடிகாமல் இந்த கட்டுரை தொடர்பாக மட்டுமே பேசுவீர்கள் என்றால் அது பயன் உள்ளதாக இருக்கும்!

  13. பாருங்க வாசகர்களே, திரித்தலுக்கு புதிய அர்த்தமே கொடுக்கின்றனர். நீங்களே ஒருதடவை முழுபின்னூடங்களையும் படித்து விட்டு தீர்மானித்து கொள்ளுங்கள். யார் இங்கே நாடகமாடுவது என்று. ஆணி, வேண்டாம் வாசகர்களிடமே விட்டுவிடுங்கள்.

    • அய்யா சின்னா ,உங்க வீட்டில் நீங்களே அல்லது ஆணி அவர் வீட்டிலோ இப்படி ஆபாசமா பேசினால் யார் கேள்வி எழுப்பப்போறோம் சொல்லுங்க? அத விட்டுட்டு வினவு இணைய தள பின்னுட்ட பகுதியில் இப்படி டாஸ்மாக் சரக்க அடிச்சமாதிரி உங்க ஆபாச/அருவருப்பு கருத்துகளால வாந்தி எடுத்து வைத்தால் அது சரியா? தகுமா? நீங்க ஒரு வேல கம்யுனிஸ்டு என்றால் சரியான பொறுக்கி கம்ம்யுஸ்டா இருப்பிங்க போல…!

  14. என்னங்க குமார் இது அவர்தான் உங்கள் அளும்பு தாங்காமல் ஒரு திரைப்பட காமிடியை உங்கள் அரைத்த மாவை அரைக்கும் வாதத்துக்கு ஒப்பாக கூறியுள்ளார், இதில் எங்கே கருப்பொருளுக்கு நுழைப்பது? கருப்பொருளுக்கும் ஆணியின் ஒப்புவமைக்கும் என்ன சம்பந்தம்? அவரைத்தான் கருப்பொருளை பற்றி பேச விடாமல், என்ன கைய புடிச்சி இழுத்தியா என ட்ரோல் செய்தால் அவர் வேறு எதை கூறுவதுஉங்களுக்கு? அதை அப்படியே பெண்ணை கேவல படுத்துகிறார் என பிளேடை திருப்பி போட வேண்டியது, நேக்கு நேக்கு

    நான் truthsayer அவருக்கு கோபமாக கூறியதில் அந்த ‘தாய்’ மற்றும் ‘வியாபாரம்’ எனும் வார்த்தைகளை மட்டும் குறிப்பிட்டு என்னை பெண்களை கேவல படுத்துவதாக திரிக்கிரீர்கள். இங்கு வரும் வாசகர்கள் இறுதி பின்னூட்டத்தை மட்டும் படிப்பவர்கள் என நினைத்து விடுகிறீர்களோ? என் முன்னைய முழு பின்னூட்டத்தையும் படிப்பவர்க்கு புரியும் நான் மரியாதை இல்லாமல் பின்னூட்டம் போட்டதன் நியாயம், ஆம் அவரின் ‘வியாபாரக்’ கதையை தான் சொல்கிறேன்.

    சரி மக்களே எனது கூற்றையும் , அதை TRUTHSAYER அவர்களும் குமாரும் திரிப்பதை போடுகிறேன்

    நான் முழுதாக கூறியது –

    //எது வியாபாரமா? மக்களை ஏமாற்றி ‘ஆன்மீகத்தை’ விற்கும் காலத்தில் மக்களை நிஜத்துக்கு இழுத்துக்கொண்டு வர சல்லிக்காசு எதிர்பாராது அயராது பாடுபடும் கூட்டமடா இது. எனக்குதெரியும் தள நிர்வாக சந்தா அறிமுகமே தோழர்களுக்கு சங்கடத்தை கொடுத்திருக்கும், மாட்டு மூத்திரத்தை காசுக்கு விற்கும் நாட்டில் அற்புத மனித விழுமியங்களையும் விடுதலைக்கு சரியான வழியையும் போதிக்கும் கூட்டமடா இது. நீயா.. விட்டால் சிறை சென்ற தோழர் வளர்மதியும் போலீசால் மக்களின் குரலாக இருந்த ஒரே காரணத்துக்காக மண்டை பிளக்கப்படும் தோழர்களும் , மார்பகத்தில் பூட்ஸ்காலால் உதைபடும் பெண்தோழர்களும் வீதியில் வந்து கேள்வி கேட்டதற்காய் கன்னத்தில் அறைபட்ட அந்த தாயையும் கூட வியாபரத்துக்கு செய்கிறார்கள் என்பாய் மதிகெட்டவனே.//

    இதை அவர்கள் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்றால் –
    truthsayer-
    //3) அந்த தாயையும் கூட வியாபரத்துக்கு செய்கிறார்கள் என்பாய் மதிகெட்டவனே.//

    குமார்-
    //முற்போக்கனவர்கள் என்று கூறிக்கொண்டே தாய் மற்றும் மனைவி போன்ற பெண்களை இழிவு செய்கின்றார்கள்//

    பாருங்கள் முழுபதிலும்என்னவோ கருத்தை சொல்ல இவர்கள் தாம் திரிக்க வசதியாக கடைசி வரியை மட்டும் காட்டுகிறார்கள். உண்மையில் இவர்கள் மனதிலேயே நஞ்சு உள்ளதற்கு இதைவிட சான்று வேண்டுமா? என்னங்க குமார் நேர்மை , கவனம் , கடமை என்றெல்லாம் எழுத்து பிழையே இல்லாமல் அச்சாவாக எழுதுகிறீர்கள், ஆனால் உள்ளீட்டைத்தான் காணோம் உங்கள் பதில்களில்.

    • சின்னா, ஆணி அவர்கள் அவரின் தவற்றை பகுதி அளவுக்கு ஏற்றுகொண்டு மன்னிப்பு கோரியுள்ளார். அதனால் அவர் சார்பாக பேசவேண்டிய அவசியம் உமக்கு இல்லை. எந்த வாதத்தில் எந்த நிலையில் நீர் பெண்களை இழிவு செய்யும் நோக்கத்துடனோ அல்லது இழிவு செய்யும் தோரணை உடனோ பேசினாலும் கூட அது தவறு தான். truth sayer என்ன நீர் கூறும் அந்த அவதுரு வார்த்தைகளை கொண்டு தான் பேசினாரா? உமக்கு வரும் கோபம் சமுக அநிதிகலை எதிர்த்து வரும் கோபமாக தெரியாவில்லை.தனிநபர் விரோதமாக தான் விவாதங்களை நடத்த முயலுகின்றீர். அவர் கூறாத கீழ் உள்ள வார்த்தைகளை நீரே பொய்யாக புனைந்து அவர் மீது குற்றம் சுமத்துவது ஏன் சின்னா? விவாதத்தை திசை திருபுவ்தனை விட வேறு என்ன நோக்கம் உமக்கு?

      “அடேய்” என்று விளிர்த்து மற்றவரை அழைப்பது எல்லாம் என்னமாதிரியான விவாத முறை. ?

      //பெண்தோழர்களும் வீதியில் வந்து கேள்வி கேட்டதற்காய் கன்னத்தில் அறைபட்ட அந்த தாயையும் கூட வியாபரத்துக்கு செய்கிறார்கள் என்பாய் மதிகெட்டவனே.////

    • சின்னா லூசு தனமாக உளறிகிட்டு இருக்கிங்க.. முதல் உளறல் “என்னங்க குமார் இது அவர்தான் உங்கள் அளும்பு தாங்காமல் ஒரு திரைப்பட காமிடியை உங்கள் அரைத்த மாவை அரைக்கும் வாதத்துக்கு ஒப்பாக கூறியுள்ளார்” என்பது. நான் எங்கே அவருடன் இந்த விவாதத்தில் பேசினேன்? சொல்லுங்க பார்க்கலாம்? நான் என்ன அலும்பு செய்து பேசினேன் என்று கூருங்க பார்க்கலாம்? truthsayer மற்றும் ஆணி தானே பின்ன்ட்டங்கள் 8,9,9.1,10,10.1,10.1.1,10.1.1.1 ஆகியவற்றில் பேசிக்கொண்டு இருக்காங்க. மேலும் ஆணியின் பதில் எனக்கானது அல்லவே? அது truthsayer க்கு ஆனது தானே? இந்த அடிபடை கூட தெரியாமல் கோபம் கொப்பளிக்க நீர் பேசும் போது உமது அறிவு அங்கே எங்கே வேலை செய்கின்றது? அறிவற்ற தனமாகஇப்படி எனக்கு பதில் அளிபது என்பது என்ன மாதியான நியாயம் ? சொல்லுங்க பார்க்கலாம்.

      ஆணிக்கு சொன்ன அறிவுரை தான் உங்களுக்கும்.truthsayer பொய் பிரசாரம் செய்கின்றார் என்றால் அதனை அம்பல படுத்துங்கள் .. பொறுமை இழக்காமல், மதிகொண்டு அம்பலப்டுத்துங்கள். இந்த கட்டுரை எழுப்பும் முக்கிய குற்றசாட்டுகளை கேள்விகளாக மாற்றி அவரிடமே கேளுங்க.. அதனை விட்டுவிட்டு நீங்களும் கோபம் கொண்டு பேசி விவாதத்தை திசை திருப்புவது ஏன்?

  15. truthsayer, இந்த கட்டுரை தமிழத்தின் பிஜேபி துணை தலைவர் அவர்கள் மீது வினவு வைக்கும் வைக்கும் குற்றசாட்டுகளை பற்றி ஏதேனும் உங்களுக்கு மாறுபாடு இருப்பின் அவற்றை நீங்கள் விவாதத்தை வேறு திசையில் திசை திருப்பாமல் நேரடியாகவே பதில் அளிக்க இயலுமா? இயலும் என்றால் வானதி சார்பாக பதில் அளியுங்கள். இல்லை என்றால் வெட்டியாக பேசுவது எல்லாம் நமது நேரத்தை வீணடிக்கும் செயல் தானே?

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ. 50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

    எனது கேள்வி

    1.என்னவென்றால் ஒரு கோடி ரூபாய் அளவு உள்ள சொத்துக்கள் ஆறு கோடி அளவுக்கு அதிகரித்து உள்ளது என்றால் அதுவும் வெறும் ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது என்றால்அது எப்படி சாத்தியம் ஆகும்.இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு guide line value வை நிலவிற்பனைக்குஅதிகரிக்காத நிலையில் இது எப்படி சாத்தியம் ஆகும்?

    2.வானதியின் ஆண்டு வருமானம் என்பது 2015 – 2016 Rs 5,77,380 மற்றும் 2008 – 2009 Rs 2,45,568 ~ என்று இருக்க அவரின் சொத்து மதிப்பு மட்டும் ஒரு கோடியில் இருந்து ஆறு கோடி அளவுக்கு எப்படி உயர்ந்தது.

    3. வானதியின் அசையும் சொத்து 48,29,891 ல் இருந்து ரூ. 1,17,51,853 அளவுக்கு ஐந்து ஆண்டுகளில் உயர்ந்தது எப்படி ? அவருடைய வருமானத்துக்கும் அவரின் சொத்துகளின் மதிப்புக்கும் தொடர்பே இல்லையே? அப்படி என்றால் வருமானத்தில் முறைக்காக கணக்கு காட்டாமல் வருமான வரி துறையை ஏமாற்றி கருப்பு பணம் மூலம் இந்த அசையும் சொத்துகளை வாங்கியுள்ளாரா அவர்?

    4. அசையா சொத்துகள் ரூ. 68,80,000 அளவில் இருந்து ரூ 5,30,50,000 அளவுக்கு உயர்த்து எப்படி? உண்மையில் சொத்து மதிப்பு மட்டும் தான் உயர்த்ததா? அல்லது அவர் புதியதாக அசையா சொத்துகளை அவர் காட்டும் அவரின் வருமானத்துக்கு சற்றும் தொடர்பு இல்லாமல் அல்லது வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணம் மூலம் வாங்கியுலாரா?

    இந்த ஐந்து கேள்விகளே இன்று போதும் என்று நினைக்கிறன். முடிந்தால் மட்டுமே பதில் அளிக்கவும்… பதில அளிக்கவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை உங்களுக்கு. ஒரு வேலை நீங்க பதில் அளித்தால் மேலும் மேலும் அவரின் முறைகேடான சொத்து குவிப்பை பற்றி நான் வினவில் அம்பல படுத்த ஏதுவாகும். நன்றி.

    • ஐந்தாவது கேள்வி விடுபட்டு போய்விட்டது அதனையும் சேர்த்துகொள்ளுங்கள் உண்மை விளம்பியே!

      5. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ள வானதி மீது அரசு (மத்திய அரசு) வருமான வரித்துறை மற்றும் அமலாக துறை மூலம் நடவடிக்கை எடுகலாம் அல்லவா? அது சரியான நடவடிக்கையாக தானே இருக்கு?

  16. தறிகெட்ட வார்த்தைகளுடன், தரங்கெட்ட விவாதத்தை முன்னெடுக்க உதவும் வினாவிற்கு நன்றி

    இனி தமிழ் படங்களில் வரும் ‘தரங்கெட்ட காமெடிளை’ யாரேனும் குறிப்பிட்டால் (அது எவ்வளவு கீழ்தரமானதாக இருந்தாலும் சரி) அதை வெறும் ‘தமிழ் பட காமெடியாகவே’ வாசகர்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

    வினவிற்கு ‘அடுத்தவன் பொண்டாட்டி’, ‘அடுத்தவன் setup’ என்று வருகின்ற ‘காமெடிகள்’ மிகவும் பிடிக்கும் போல்

    ஆணி பதிந்தது
    ===============

    அவதூறு, பொய் பிரச்சாரம் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனென்றால் நான் எந்த காட்சியிலும் உறுப்பினர் இல்லை. அரசியலில் எனக்கு தெரிந்ததை சொல்பவன் நான்

    ‘பொய் பிரச்சாரம்’ வினவு செய்ததற்கான ஒரு உதாரணம் . நேரம் கிடைக்கும் போது பொறுமையாக படியுங்கள்

    https://www.vinavu.com/2017/07/11/ndlf-demonstration-against-gst/

    காவேரி பிரச்சனையில் ‘காங்கிரஸ் செய்த துரோகம் என்ன’, ‘பிஜேபி செய்த துரோகம் என்ன’, ‘அதிமுக செய்த துரோகம் என்ன’, ‘திமுக செய்த துரோகம் என்ன’ என்று அனைத்து கட்சிகளும் செய்த தவறுகளை முதலில் எழுத சொல்லுங்கள்.

    *****************edit

  17. குமார் என்னை லூசுத்தனமாக உளறுவதாக கூறிவிட்டு நீர்தான் லூசாக போகிறீர்.

    // நான் எங்கே அவருடன் இந்த விவாதத்தில் பேசினேன்?//
    உமது பின்னூட்டம் 13.2.1 இல் என்ன செய்திருக்கிறீர்? உங்களின் அலும்பு என்று கூறியது உமதும் truthsayer இனதும் பிஜேபி மட்டும் குறித்து கட்டுரை எழுத தேவையில்லை என நைச்சியமாக ‘ஊழல் யார்தான் செய்யவில்லை’ என அதை அப்படியே நீர்த்துபோக செய்யும் விதமான ‘மற்ற கட்சிகாரனையும் சொல்லேன்’ என்ற கருத்துகளைஅதற்கு ஏராளமான பதிவுகள் இருக்கின்றனவே என நாம் மறுபடியும் மறுபடியும் கூறியும்.

    இதை தான் ‘என்ன கைய புடிச்சி இழுத்தியா’ என ஆணியும் ‘அலும்பு’ என நானும் கூருன்கிறோம், இதே அலும்பை தான் சாதியை வைத்து திவ்ய பாரதி பதிவில் செய்தீர், இன்னுமா புரியாத மாதிரி கேட்கிறீர்.

    இதில்கூட பிஜேபியை தோல்வி அடைய செய்து துரத்தி அடிப்போம் என்றுவிட்டு பகுதி இரண்டில் பிஜேபி பற்றி தனி கட்டுரை எல்லாம் தேவை இல்லை என்றவர் தானே.

    //சின்னா, ஆணி அவர்கள் அவரின் தவற்றை பகுதி அளவுக்கு ஏற்றுகொண்டு மன்னிப்பு கோரியுள்ளார். அதனால் அவர் சார்பாக பேசவேண்டிய அவசியம் உமக்கு இல்லை.//
    அறிவு, நான் பின்னூட்டம் போட்டது 9.18pm , ஆணி ‘மன்னிப்பு’ கோரிய பின்னூட்டம் போட்டது 10.22pm
    சரி ஆணி தனிநபர் தாக்குதல் என நீங்கள் கூவுவதால் (அதுகூட பாருங்கள், திரைப்பட வசனத்தை தன் மனைவியை சொன்னதாக திரித்தது truthsayer) மன்னிப்பு கேட்டு தொலைக்க வேண்டியதாயிற்று, அதாவது ‘இவன்கிட்ட மாட்டிகிட்டு லூசு இல்லைங்கிறத விட பேசாம லூசுன்னு ஒத்துகினு உசுரோட ஊர் போய் சேரத்தான் நல்லது’ என சென்றுவிட்டார். அதுபோக truthsayer இற்காக நீங்கள் கம்பு சுற்றும்போது ஆணிக்காக நான் புடுங்க கூடாதா? என்னங்க லாஜிக் இது?

    //அவர் கூறாத கீழ் உள்ள வார்த்தைகளை நீரே பொய்யாக புனைந்து அவர் மீது குற்றம் சுமத்துவது ஏன் சின்னா? விவாதத்தை திசை திருபுவ்தனை விட வேறு என்ன நோக்கம் உமக்கு?//
    //பெண்தோழர்களும் வீதியில் வந்து கேள்வி கேட்டதற்காய் கன்னத்தில் அறைபட்ட அந்த தாயையும் கூட வியாபரத்துக்கு செய்கிறார்கள் என்பாய் மதிகெட்டவனே.////

    என்னங்க குமார், மறுபடியும் என் பதிலை ரிபீட் பண்ணனும? இக்கட்டுரைகளை ‘வியாபரத்துக்கு’ எழுதபடுகிறது என்பவனை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பீரோ? இதழ் விற்பனையாக பெண்ணுடலை போடும் பத்திரிகை சஞ்சிகை என்ற ரீதியில் தானுங்களே அந்த கருத்து வந்தது? அவனின் மன நிலை இப்படித்தானே இருக்கும்? அதை சொன்னால் நீங்கள் வந்து ப்ளேடை அப்படியே திருப்பி எம்மை பெண்களை இழிபடுதுவதாக கம்பு சுற்றல், இதை உணராதவர்கும் இதே மனநிலை என்றுதானே அர்த்தம்?
    சரி நீங்க சொல்லுங்க பார்போம் குமார் , எதை எழுதினால் வியாபாரம் ஆகுமென்றால், வினவையும் அதே மஞ்சள் ரேஞ்சில் பார்பதுதானே அர்த்தம்? நாம் என்ன கிளர்சிக்ககவா படிக்கிறோம் வினவை?

    truthsayer இட்காக கம்புசுற்றி விவாதத்தை திசை திருப்புவது நீரே. infact இங்கு விவாதமொன்றே நடைபெறவில்லை, truthsayer வழக்கம் போல் ‘பிஜேபியை மட்டும் சொல்லுவியா’ என ஆரம்பித்தார் (அதாங்க நீங்க பகுதி 2 இல் சற்று கமுக்கமாக சொன்னது) அதற்கு ஆணி பதில்சொல்ல போக அதை அப்படியே பெண்ணை கேவலபடுதுகிறான் என்ற உங்கள் விதண்டா வாதமே இங்கு நடக்கிறது. அதில் ஆணிக்காக நான் புடுங்க கூடாது என ராஜேந்தர் கௌதமி ரேஞ்சுக்கு உங்கள் பாயிண்டுகள்

    • நண்பர்களே விவாதம் தலைப்பை விடுத்துச் செல்கிறது. இதில் போதுமான அளவு பேசிவிட்டதால் இனி கட்டுரைப் பொருளில் பேசுமாறு கோருகிறோம். இதில் ஒருவர் கருத்தை தவிர்த்து மற்றவர் கருத்து மட்டும் வெளியிடக்கூடாது என்று எண்ணியதால் நிறைய தேவையற்ற விவாதங்களை வெளியிட்டுவிட்டோம். இனி வெளியிட இயலாது. புரிந்துணர்வுக்கு நன்றி. இந்த பதில் குமார, உண்மை, ஆணி, சின்னா அனைவருக்கும். மீண்டும் நன்றி

      • விவாதத்தின் திசை திருப்பல்களை சரி செய்ய முயலும் வினவுக்கு மிக்க நன்றி.

      • தேவை பட்டால் விவாதத்தின் தேவை கருதி இந்த கட்டுரைக்கு தொடர்பற்ற பின்னுடங்க்களை என்னுடையதையும் சேர்த்தே நீங்கி விடுங்கள்… அப்போது இந்த விவாதம் இன்னும் கூர்மையுடன் செல்லும் என்று நம்புகின்றேன். புரிதலுக்குநன்றி.

  18. உண்மை விளம்பி உட்பட அனைத்து வினவு வாசகர்களுக்கும் இந்த பதிவு. வானதியின் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு தொடர்பாக :
    —————————————————————————

    தமிழக பிஜேபி துணைத்தலைவர் வானதி சீனிவாசனின் சொத்து மதிப்பை அவரின் கணவரின் சொத்துகளை சேர்க்காமல் ஆய்வு செய்து பார்த்தால் கூட அதில் மாபெரும் சட்ட விரோத செயல் நடத்து உள்ளது, அவர் அவரின் வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்து உள்ளார் என்ற உண்மை எளிதில் புலப்படுகின்றது.

    1. முதல் விஷயம் என்னவென்றால் அவர் வருமான வரி துறையிடம் காட்டும் ஆண்டு வருமானம் என்னவென்றால் 2015 – 2016 Rs 5,77,380 மற்றும் 2008 – 2009 Rs 2,45,568. ஆக 2008 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைபட்ட எட்டு ஆண்டுகளில் அவரின் வருமானம் அதிக பச்சம் ரூபாய் 32,000,00 (ஆண்டு சராசரி வருமானம் 4,000,00 * 8 ஆண்டுகள் = 32,000,00)ஆக தான் இருக்கிறது. சரியான அவரின் இந்த எட்டு ஆண்டு வருமானத்தை நாம் எளிதில் RTI போட்டு வருமானவரி துறையிடம் இருந்து பெற முடியும். அனால் அவரின் அசையும் சொத்து 2008 – 2009ல் 22 Lacs+ இல் இருந்து 2015 – 2016 64 Lacs+ மாக உயர்ந்து உள்ளது.அவரின் அசையும் சொத்து மட்டுமே 64-22 =ரூ 42 இலச்சம் அளவுக்கு இந்த எட்டு ஆண்டுகளில் உயர்ந்து உள்ளது.

    i. அவரின் 8 ஆண்டு வருமானமே ரூ 32 இலச்சம் என்ற அளவுக்கு தான் இருக்க அவரின் எட்டு ஆண்டுகளில் அசையும் சொத்து மதிப்பு மட்டும் ரூ 42 இலச்சம் அளவுக்கு உயர்ந்து உள்ளது என்பது இங்கே சட்டத்தின் கேள்விக்கு உரியதே. (எந்த சட்டம் என்றும் அதற்கான தண்டனை என்னவென்றும் பின்னால் பார்கலாம்)

    2.இரண்டாவது விஷயம் என்னவென்றால் 2008 – 2009 ஆண்டுகளில் அவருக்கு இருந்த அசையா சொத்து மதிப்பு ரூ 60 இலச்சதில் இருந்து 2015 – 2016 ஆண்டுகளில் ரூ 50 இலச்சம் அளவுக்கு உயர்ந்து ரூ 1.1 கோடிகள் அளவுக்கு உள்ளது. இந்த இடைபட்ட ஆண்டுகளில் அவர் Agricultural Land 20 Lacs+ ,Residential Buildings 30 Lacs+ மொத்தம் ரூ 50 இலச்சம் அளவுக்கு வாங்கியுள்ளார். அவரின் வாரிசு உரிமை சென்னை சொத்தை இங்கே நான் சேர்க்கவில்லை)

    i. அவரின் 8 ஆண்டு வருமானமே ரூ 32 இலச்சம் என்ற அளவுக்கு தான் இருக்க அவரின் எட்டு ஆண்டுகளில் அசையா சொத்து மட்டும் ரூ 50 இலச்சம் அளவுக்கு புதியதாக வாங்கப்ட்டு உள்ளது என்பது இங்கே கணக்கில் நாம் எடுத்துகொள்ளவேண்டிய விசயமே!

    3. இப்ப அவரின் கடன் எவ்வளவு என்பதனையும் பார்கலாம். 2008 – 2009 ஆண்டுகளில் அவருக்கு இருந்தகடன் தொகை Rs 50,000 ல் இருந்து 2015 – 2016 ல் அவரின் கடன் Rs 6,81,097அளவுக்கு உள்ளது.

    இப்ப விவாதத்துக்கு வருவோம்………..

    இந்த எட்டு ஆண்டுகளில் அவரின் வரவு
    —————————————–

    வானதியின் எட்டு ஆண்டு சராசரி வருமானம்…: ரூ 32,000,00
    வாங்கிய புதிய கடன் ……………………: ரூ 6,000,00
    மொத்த வரவு ………………………….: ரூ 38,000,00

    இந்த எட்டு ஆண்டுகளில் வாங்கிய புதிய சொத்துகள்
    —————————————————-

    அசையும் சொத்து மதிப்பு மட்டும்…………..: ரூ 42,000,00
    புதியதாக வாங்கபட்ட அசையா சொத்து மதிப்பு.: ரூ 50,000,00
    புதியதாக சேர்த்த சொத்துகளின் மதிப்பு………: ரூ 92,000,00

    வானதியின் எட்டு ஆண்டு வரவு மட்டும் ரூ 38,000,00 ஆக இருக்க அவர் எப்படி புதியதாக ரூ 92,000,00 அளவுக்கு சொத்துக்களை வாங்க முடியும். அவரின் வருமானத்தை மீறி (92,000,00 -38,000,00 = ரூ54,000,00 ) அளவுக்கு புதியதாக சொத்துகளை வாங்கியிருக்க முடியும்?
    இதில் இருந்து புலப்படுவ்து என்னவென்றால் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார் என்பது தான்.

    இந்த குற்றத்துக்கு எதிராக என்ன சட்டம் உள்ளது ? அந்த சட்டம் என்ன தண்டனையை விதிக்கின்றது என்று அடுத்து பார்கலாம்.

    • வினவு என் பதிலை எடிட் செய்து தன்னுடைய நடுநிலைமையை நிலை நிறுத்திவிட்டது

      எனக்கு கம்பு சுற்ற வேண்டிய அவசியம் இல்லை. வினவு GSTல் என்ன பதிந்தது என்பதை மேலே கொடுத்து உள்ளேன்

      குமார் நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ள முயல்கிறேன்

      // 2015 – 2016 Rs 5,77,380 மற்றும் 2008 – 2009 Rs 2,45,568. ஆக 2008 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைபட்ட எட்டு ஆண்டுகளில் அவரின் வருமானம் அதிக பச்சம் ரூபாய் 32,000,00 (ஆண்டு சராசரி வருமானம் 4,000,00 * 8 ஆண்டுகள் = 32,000,00) //

      எட்டு ஆண்டுகளில் அவரின் வருமானம் அதிக பச்சம் ரூபாய் 32,000,00 (32 lakhs) என்று எவ்வாறு கணக்கிட்டீர்கள் ?

    • குமார் அவர்களே நான் தெளிவாக கேட்காமல் விட்டு விட்டேன்

      // ஆண்டு சராசரி வருமானம் 4,000,00 * 8 ஆண்டுகள் = 32,000,0 //

      ஆண்டு சராசரி வருமானம் 4,000,00 என்று எவ்வாறு கணக்கிட்டீர்கள் ?

      • வானதி அவர்கள் வருமான வரி துறையிடம் காட்டும் ஆண்டு வருமானம் என்னவென்றால் 2015 – 2016 க்கு Rs 5,77,380 மற்றும் 2008 – 2009 க்கு Rs 2,45,568. என்று இருக்கிறது. இடைபட்ட காலகட்டத்தில் அவர் வருமானத்தை எப்படி நாம் கணக்கீட்டு செய்வது என்றால் அவரின் அதிக பட்ச வருமானத்தின் , குறைந்த பட்ச வருமானத்தின் சராசரி அடிபடையில் தான். அதனால் தான் இந்த எட்டு ஆண்டுகளில் அவரின் ஆண்டு சராசரி வருமானம் 4,000,00 என்று எடுத்துக்கொண்டேன். வேண்டுமால் அவரின் சரியான வருமானம் பற்றி நாம் RTI போட்டோ அல்லது வருமானவரிதுரையின் இணைய தளத்தில் அந்த விவரம் கிடைத்தாலோ பெற்றுகொள்ள்ளலாம். புரிதலுக்கு மிக்க நன்றி.

      • TruthSayer, ஒருவேளை வானதியும் எட்டு ஆண்டு வருமாதத்தை பற்றிய நான் கூறும் விவரத்தை நீங்கள் ஏற்கவில்லை என்றால் .., வானதி அவர்களை அவரின் முக நூல் பக்கத்தில் அந்த எட்டு ஆண்டுகளில் அவர் வருமான வரி துறையிடம் தாக்கல் செய்த ஆண்டு வருமான விவரங்களை வெளியிட்டு தன்னை ஊழல் அற்றவர் அல்லது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்காதவர் என்று நிருபிக்க சொல்லுங்கள் !

      • TruthSayer, ஒருவேளை வானதியின் 2015 – 2016 க்கு உரிய வருமானத்தியே (Rs 5,77,380) அவரின் சராசரி எட்டு ஆண்டு வருமானமாக எடுத்துகொண்டால் கூட அந்த எட்டு ஆண்டுகளில் அவரின் மொத்த வருமானம் என்பது Rs 46,19,040 என்ற அளவுக்கு தானே வருகின்றது.? புதியதாக உங்களுக்காக கணக்கு போடுவோம்…

        இந்த எட்டு ஆண்டுகளில் அவரின் வரவு
        —————————————–

        வானதியின் எட்டு ஆண்டு சராசரி வருமானம்…: ரூ 46,19,040
        வாங்கிய புதிய கடன் ………………………………: ரூ 6,00,000
        மொத்த வரவு ………………………………………….: ரூ 52,190,40

        இந்த எட்டு ஆண்டுகளில் வாங்கிய புதிய சொத்துகள்
        —————————————————-

        அசையும் சொத்து மதிப்பு மட்டும்………………….: ரூ 42,000,00
        புதியதாக வாங்கபட்ட அசையா சொத்து மதிப்பு..: ரூ 50,000,00
        புதியதாக சேர்த்த சொத்துகளின் மதிப்பு……………: ரூ 92,000,00

        அப்படி பார்த்தாலும் எட்டு ஆண்டு மொத்த வருமானம் ரூ 52,190,40 என்று இருக்க இந்த எட்டு ஆண்டுகளில் வாங்கிய புதிய சொத்துகள் 92,000,00 என்று இருகின்றதே!? வருமானத்துக்கு வராமல் அவர் சேர்த்த சொத்து மதிப்பு என்பது Rs 39,80,960 என்ற அளவுக்கு இருகின்றதே! கிட்ட தட்ட Rs40 இலச்சம் ரூபாய்கள் அளவுக்கு அவர் சொத்து சேர்த்து உள்ளது உங்களுக்கு புலப்படுகின்றதா இல்லையா?

  19. truthsayer, இந்த கட்டுரை தமிழத்தின் பிஜேபி துணை தலைவர் அவர்கள் மீது வினவு வைக்கும் வைக்கும் குற்றசாட்டுகளை பற்றி ஏதேனும் உங்களுக்கு மாறுபாடு இருப்பின் அவற்றை நீங்கள் விவாதத்தை வேறு திசையில் திசை திருப்பாமல் நேரடியாகவே பதில் அளிக்க இயலுமா? இயலும் என்றால் வானதி சார்பாக பதில் அளியுங்கள். இல்லை என்றால் வெட்டியாக பேசுவது எல்லாம் நமது நேரத்தை வீணடிக்கும் செயல் தானே?

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ. 50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

    எனது கேள்வி

    1.என்னவென்றால் ஒரு கோடி ரூபாய் அளவு உள்ள சொத்துக்கள் ஆறு கோடி அளவுக்கு அதிகரித்து உள்ளது என்றால் அதுவும் வெறும் ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது என்றால்அது எப்படி சாத்தியம் ஆகும்.இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு guide line value வை நிலவிற்பனைக்குஅதிகரிக்காத நிலையில் இது எப்படி சாத்தியம் ஆகும்?

    2.வானதியின் ஆண்டு வருமானம் என்பது 2015 – 2016 Rs 5,77,380 மற்றும் 2008 – 2009 Rs 2,45,568 ~ என்று இருக்க அவரின் சொத்து மதிப்பு மட்டும் ஒரு கோடியில் இருந்து ஆறு கோடி அளவுக்கு எப்படி உயர்ந்தது.

    3. வானதியின் அசையும் சொத்து 48,29,891 ல் இருந்து ரூ. 1,17,51,853 அளவுக்கு ஐந்து ஆண்டுகளில் உயர்ந்தது எப்படி ? அவருடைய வருமானத்துக்கும் அவரின் சொத்துகளின் மதிப்புக்கும் தொடர்பே இல்லையே? அப்படி என்றால் வருமானத்தில் முறைக்காக கணக்கு காட்டாமல் வருமான வரி துறையை ஏமாற்றி கருப்பு பணம் மூலம் இந்த அசையும் சொத்துகளை வாங்கியுள்ளாரா அவர்?

    4. அசையா சொத்துகள் ரூ. 68,80,000 அளவில் இருந்து ரூ 5,30,50,000 அளவுக்கு உயர்த்து எப்படி? உண்மையில் சொத்து மதிப்பு மட்டும் தான் உயர்த்ததா? அல்லது அவர் புதியதாக அசையா சொத்துகளை அவர் காட்டும் அவரின் வருமானத்துக்கு சற்றும் தொடர்பு இல்லாமல் அல்லது வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணம் மூலம் வாங்கியுலாரா?

    5. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ள வானதி மீது அரசு (மத்திய அரசு) வருமான வரித்துறை மற்றும் அமலாக துறை மூலம் நடவடிக்கை எடுகலாம் அல்லவா? அது சரியான நடவடிக்கையாக தானே இருக்கு?

    இந்த ஐந்து கேள்விகளே இன்று போதும் என்று நினைக்கிறன். முடிந்தால் மட்டுமே பதில் அளிக்கவும்… பதில அளிக்கவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை உங்களுக்கு. ஒரு வேலை நீங்க பதில் அளித்தால் மேலும் மேலும் அவரின் முறைகேடான சொத்து குவிப்பை பற்றி நான் வினவில் அம்பல படுத்த ஏதுவாகும். நன்றி.

  20. உண்மை விளம்பி உட்பட அனைத்து வினவு வாசகர்களுக்கும் இந்த பதிவு. வானதியின் கணவர் சீனிவாசன் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தாரா இல்லையா?:
    ——————————————————————————————————————–
    பின்னுட்டம் எண் 19 ல் தமிழக பிஜேபி துணைத்தலைவர் வானதி சீனிவாசனின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததை பற்றி ஆதார பூர்வமாக கண்டோம். இப்போது அவர் கணவர் சீனிவாசனின் சொத்துக்கள் எப்படி அவரின் வருமானத்துக்கு பொருத்தம் இல்ல்லாமல் தாறுமாறாக 2008 – 2009 ஆண்டுகளில் இருந்து 2015 – 2016 ஆண்டுகளுக்குள் ஏதேனும் சொத்து சேர்த்தாரா இல்லையா என்றும் பார்க்கலாம்.

    1. 2008 – 2009 வருமானம் ( Rs 3,03,145 ) ஆண்டுகளில் இருந்து 2015 – 2016 வருமானம் ( Rs 12,24,790 )ஆண்டுகளுக்குள் இடைபட்ட எட்டு ஆண்டுகளில் அவரின் வருமானம் என்பது சராசரியாக எட்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ 48,000,00 (ஆண்டுக்கு 6,000,00 * 8ஆண்டுகள் = 48,000,00) என்ற அளவுக்கு கூட அதிகபச்சமாக வைத்துக்கொள்வோம்.

    2. இப்ப வானதியின் கணவர் சீனிவாசனின் அசையும் சொத்துகள் எட்டு ஆண்டுகளில் அதிகரித்த விவரத்தை பார்க்கலாம். இந்த இடைபட்ட எட்டு ஆண்டுகளில் அவர் புதியதாக சேர்த்த அசையும் சொத்துகளின் (Details of Movable Assets)விவரங்கள் பின்வருமாறு:

    Indian Overseas Bank, RK Nagar Branch, Chennai 28 SB A/C No. 14298
    5,14,328 5 Lacs+ (2008 – 2009 ஆண்டு சேமிப்பு ஒரு லச்சம் தவிர்த்து தவிர்த்து):Rs 4,00,000

    SBI Venkat Narayana Road Mandaveli SB A/C No. 10150928974
    7,83,872 7 Lacs+(2008 – 2009 ஆண்டு சேமிப்பு ஒரு லச்சம் தவிர்த்து தவிர்த்து).:Rs 6,83,000

    Zylog Shares 20000 @ Rs. 5/- 1,00,000 1 Lacs+………………………..:Rs 1,00,000

    oyota Innova Reg. No. TN06J5555, Year 2015 15,50,000 15 Lacs+………….:Rs15,00,000

    எட்டு ஆண்டுகளில் புதியதாக வாங்கிய அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு…:Rs 22,83,000
    ……………………………..(Rs Twenty two lacks and eighty three thousands only)

    3. இந்த எட்டு ஆண்டுகளில் சீனிவாசன் அவர்கள் புதியதாக சேர்த்த அசையா சொத்துகளின் (Details of Immovable Assets)மதிப்பை இப்ப விவரமாக காணலாம்.

    Agricultural Land Inampoondi Village, Walajabad SRO, Kancheepuram District,
    S.F. No. 73/9 & 10 Total Area 75 cents Whether Inherited N……………….Rs 15,000,00

    Residential Buildings Jointly with Spouse equal Share Rs 24,631,33…,,……Rs 24,631,33

    எட்டு ஆண்டுகளில் புதியதாக வாங்கிய அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு…..:Rs 39,631,33
    …….(Rs Thrity nine lakes and sisxy three thousand and hundreds and thirty three only)

    3. இந்த எட்டு ஆண்டுகளில் அவரின் கடன் ……………………………..: Rs 28,36,247

    இப்ப கூடி கழித்து அவரின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளாரா இல்லையா என்று பார்க்கலாம்.

    இந்த எட்டு ஆண்டுகளில் அவரின் வரவு
    —————————————–

    சீனிவாசனின் எட்டு ஆண்டு சராசரி வருமானம்: ரூ 48,00,000
    வாங்கிய புதிய கடன் ………………………………..: ரூ 28,36,247
    மொத்த வரவு ……………………………………………: ரூ 76,36,247

    இந்த எட்டு ஆண்டுகளில் வாங்கிய புதிய சொத்துகள்,செலவுகள்
    —————————————————-

    அசையும் சொத்து மதிப்பு மட்டும்……………………:Rs 22,83,000
    புதியதாக வாங்கபட்ட அசையா சொத்து மதிப்பு….:Rs 39,63,133
    புதியதாக சேர்த்த மொத்த சொத்துகளின் மதிப்பு……….:RS 62,46,133

    எட்டு ஆண்டுகளில் அவரின் மொத்த செலவு
    —————————————————

    புதியதாக சேர்த்த மொத்த சொத்துகளின் மதிப்பு……….:RS 62,46,133

    எட்டு ஆண்டுகளுக்கு குடும்ப செலவு மதிப்பு
    ஆண்டுக்கு இரண்டு லச்சம் என்ற அடிபடையில்
    எட்டு ஆண்டுகளுக்கு……………………….:Rs 16,00,000

    எட்டு ஆண்டுகளில் மொத்த செலவு. ………….;Rs 78,46,133

    எட்டு ஆண்டுகளில் குவித்த சொத்து மதிப்பு மற்றும் குடும்ப செலவு (சீனிவாசன் குடும்ப தலைவர் என்ற முறையில் அவரின் பொறுப்பு) சேர்த்து Rs 78,46,133 என்ற அளவுக்கு இருக்க ஆனால் அவரின் இந்த எட்டு ஆண்டுகளின் மொத்த வருமானம் கடனையும் சேர்த்து ரூ 76,36,247 என்ற அளவுக்கு தானே உள்ளது? சரி பரவாயில்லை கணக்கில் வராமல் செலவு செய்த இந்த இரண்டு இலச்ச்த்தை விட்டுவிட்டால் கூட அவர் மீது ஏதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக நாம் கருத முடியாது.

    அதே நேரத்தில் பிஜேபி யின் தமிழ துணை தலைவர் வானதியின் வருமானத்தையும் அவர் குவித்த சொத்துகளையும் பார்க்கும் போது மிக பெரிய வித்தியாசம் உள்ளது…அவர் வருமானத்தையும் மீறி ரூ54,000,00 அளவுக்கு இந்த எட்டு ஆண்டுகளில் சொத்துகளை வாங்கி குவித்ததையே நமக்கு உணர்த்துகின்றது.

    என்ன குற்றம் இது? என்ன சட்டம் இந்த சட்டவிரோத செயலை எதிர்கொள்ளும்? அந்த சட்டம் என்ன தண்டனையை குற்றவாளிக்கு தரலாம் என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

  21. குமார், நான் வக்கீலோ அல்லது அரசியல்வாதியா இல்லை. இருந்தாலும் நான் யதார்த்தத்தை எழுதுகிறேன்

    உங்கள் பின்னூட்டங்கள் 19.2.1, 19.2.2 மற்றும் 19.2.3 பதில் இது

    1) என்னுடைய புரிதல் சரி என்றால் இந்த இரண்டு ஆண்டுகளின் ( 2008 – 2009 Rs 2,45,568 மற்றும் 2015 – 2016 Rs 5,77,380 ) வருமானத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு எழுதத்தப்பட்ட கட்டுரை இது.

    2) சராசரி வருமானம் Rs 5,77,380 என்பதும் ஒரு யூகமே

    2009-2015ம் ஆண்டுக்கான வருமானம் பற்றிய ‘தகவல்களே இல்லாமல்’ வினவு இந்த கட்டுரையை எழுதியுள்ளது. தகவல் இருந்தால் சரி பார்க்கலாம். ‘தகவலே’ இல்லை என்றால் ? வினவு ஆசிரியருக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை

    எனக்கு தெரிந்து ‘வானதி’ அவர்கள் 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்கள்

    1) 2008ம் ஆண்டுக்கு முன்பு அவருடைய அசையும் சொத்துக்கள் (liquid assets) அவர் ‘பெயரில்’ தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லையே. அதாவது 2008ம் ஆண்டுக்கு முன்பு அவர் சம்பாதித்த பணத்தை அவருடைய ‘குழந்தைகள் மீதோ’ (அல்லது) அவர் யாரை நம்புகிறாரோ அவர்கல் பெயரில் சிறுக சிறுக ‘deposit’ செய்து அது இப்போது ‘mature’ ஆகி இருக்கலாம்

    2) வக்கீலாக இருப்பதால் 2009-2015கான இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் ‘பெரிய case’ கிடைத்து ‘lump amount’ வந்து இருக்கலாம்

    இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். இன்னும் வழக்கு, நீதிமன்றம் என்று போனால் 100கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படலாம்

    மறைந்த முதல் ஜெயலலிதா விஷயத்தில் நீதிபதிகள் ‘இறுதி தீர்ப்பிற்கு’ என்ன சொன்னார்கள்? வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்தார்கள் என்பது பிரச்சனையில்லை. முறைகேடான வழியில் சொத்து சேர்த்தார் என்பதே ஆராய்யப்படவேண்டும்

    இப்படி அரை குறையான தகவல்களை வைத்து கொண்டு ‘ஊழல்’ என்று ‘வினவு’ நீதியபதியாகவே உருவெடுத்து முத்திரை குத்தியுள்ளது

    வானதி தவறு செய்தாரா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் மட்டுமே இதை விவாதிக்க சரியான இடம்

    ஆனாலும், வானதி அவர்கள் தார்மீக அடிப்படையில் அவர் நிரூபித்துக்கொள்வதில் எந்த தடையும் இல்லை.

    விவாதத்தை கண்ணியமாக நகர்த்தியதற்கு நன்றிகள் குமார்

    • அவர் பினாமி சொத்து சேர்த்துவைத்து உள்ளார் என்று சொல்ல வருகின்றீர்களா? அவர் அபிடவிட்டில் அப்படி ஏதும் அடுத்தவர் பெயரில் சொத்து சேர்த்ததாக அவர் கூறவில்லையே! அப்படி சேர்த்து வைத்தாலும் அது குற்றம் தானே? மேலும் அந்த எட்டு ஆண்டுகளுக்கு இடைபட்ட வருமான விவரத்தை அவர் தான் கொடுக்க வேண்டும்.. நாம் என்ன விவரம் உள்ளதோ அந்த விவரத்தின் அடிப்டையில் தான் பேசமுடியும். அவரின் வருமானம் நீங்கள் கூறியது படி ஜம்ப் அடித்து உள்ளது உண்மை என்றால் அவற்றை அவரின் முக நூல் பக்கத்தில் ஆண்டு வரிசைகிரமப்டி கூரசொல்லுங்கள்.. அவர் வருமான வரி கட்டுபவராக இருபதால் அவரின் வருமானம் என்ன அவரின் வருமான வரி என்ன என்பது அவருக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.

      குற்றம் சாட்டப்ட்ட வானதி அவர் வருமான விசத்தை மறைகின்றார் என்றால் அவர் குற்றத்தை மறைப்பது என்று தான் பொருள்.

    • Truth Sayer,

      வினவு கட்டுரை நீங்கள் கூறுவது போன்று இந்த விசயத்தை வருமான விசயத்தை சார்ந்து எழுதபட்டது அல்ல அவைகள் வானதியின் அபிடவிட்டை வைத்து நான் செய்த என்னுடைய சொந்த கணக்கீடுகள் என்பதனை உங்களுக்கு உணர்த்த விரும்புகின்றேன்.

      வினவு கூறும் விசயங்கள் அதனையும் தாண்டி உள்ளது. வினவு கூறும் விசயத்தை பார்கலாம்.அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன? அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று “””””””””வானதி சமாளிக்கக் கூடும்””””””””””””””.ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும்…..

      இங்கிருந்து தான் இதற்கு அடுத்த நிலையில் இருந்து தான் வினவு கட்டுரை வானதி மீது மைய்ய குற்ற சாட்டே எழுத தொடங்குகிறது. நீங்கள் பதில் அளிக்கவேண்டிய பகுதிகள் இங்கிருந்து தான்.! (பாகம் 1 மற்றும் பாகம் 2 ல்)

      //இப்படி அரை குறையான தகவல்களை வைத்து கொண்டு ‘ஊழல்’ என்று ‘வினவு’ நீதியபதியாகவே உருவெடுத்து முத்திரை குத்தியுள்ளது//

      • குமார், நான் வக்கீல் இல்லை என்பதால் எனக்கு affidavit விவரம் தெரியாது

        // அவர் பினாமி சொத்து சேர்த்துவைத்து உள்ளார் என்று சொல்ல வருகின்றீர்களா? //

        நான் பினாமி என்று சொல்லவில்லை. உதாரணமாக அவரின் குழந்தைகள் பெயரில் Long term ‘Insurance Policy’ மற்றும் ‘Term Deposits’ போன்றவை எடுத்து இருக்கலாம் என்கிற ரீதியில் நான் கூறினேன்

        என்னுடைய வாதம் இரண்டு தான்

        1) முதலில் அவரின் 2009-2015கான வருமான வரி விவரங்கள் தெரியாமல் ‘ஊழல்’ என்று முத்திரை குத்துவது தவறு.

        Aircel-Maxis வழக்கில் ஊழல், முறைகேடு என்று என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனக்கு தெரிந்தவரை தீர்ப்பு வரும் முன் ‘ஊழல்’ என்று சொல்வது சட்டத்திற்கு எதிரானது.

        2) வழக்கு ஏற்கனவே பதிந்து நீதிமன்றத்தில் இருந்தால் தீர்ப்பு வரும் காத்திருக்க வேண்டியது தான்

        நன்றி

  22. என்ன குற்றம் இது? என்ன சட்டம் இந்த சட்டவிரோத செயலை எதிர்கொள்ளும்? அந்த சட்டம் என்ன தண்டனையை குற்றவாளிக்கு தரலாம் என்பது பற்றி பார்க்கலாம்.வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயா மற்றும் மன்னார்குடி கொள்ளை கூட்டத்துக்கு என்ன சட்ட பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதோ அதே தண்டனையை நீதிமன்றம் இவருக்கும் அளிக்க முடியும். அபராத தொகை வேண்டுமானால் வேறுபடலாம்..!

  23. ஜெயாவுக்கு தாராள , தர்மவான் நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பின் அடிபடையில் பார்த்தால் கூட இவங்க சட்டத்தில் இருந்து தப்ப முடியாது…..தப்பமுடியாது. எப்படி என்று பார்கலாம். 10% சதவீதம் வரைக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்று நீதிபதி குமாரசாமி Krishnanand Agnihotri Vs. The State of Madhya Pradesh வழக்கு தீர்ப்பின் அடிபடையில் பேசுறாரு. அவர் கொடுக்கும் சலுகையை அப்படியே இவிங்களுக்கும் கொடுத்து பார்கலாம்.
    ,

    DISPROPORTIONATE ASSETS :

    Total Assets – Total Income
    ரூ 92,000,00 – ரூ 52,190,40 = Rs 39,80,960

    DISPROPORTIONATE ASSETS Percentage = Disproportionate assets x 100 /Income
    = 39,80,960 *100 /52,190,40
    = 76.3%

    in the chick period of financial years 2008 – 2009 and 2015 – 2016 (Both inclusive) She acquired DISPROPORTIONATE ASSETS in the sum of Rs 39,80,960 that is 76.3% of her that 8 years income.(கணக்கில் எடுத்துக்கொண்ட இந்த எட்டு ஆண்டுகளில் அவயங்களின் VRUMAANTTHUKKUA அதிகமான சொத்து குவிப்பு என்பது Rs 39,80,960 அது அவர்களின் எட்டு ஆண்டு வருமானத்தை விட 76.3% அதிகமாக இருக்குங்க…)

    நீதிபதி குமாரசாமி கிட்ட இந்த வழக்கு போனால் கூட அவரே வருமானத்துக்கு அதிகமாக 76.3% சொத்து சேர்த்த குற்றத்துக்காக கண்டிப்பா தண்டனை தருவாரு !

    THANKS TO : STATE OF KARNATA Versu SELVI J. JAYALALITHA & ORS case Judgement by Hon Suprem court Judge Pinaki Chandra Ghose, J.

  24. உண்மை விளம்பி,

    வினவு இந்த கட்டுரைகளை வானதியின் எட்டு ஆண்டு கால வருமானத்தின் அடிபடையில் பேசவே இல்லை. அந்த விசத்தை முன்னுரையாக தான் கொடுத்து இருக்கு!. அவர் செய்த ஊழல் முறைகேடுகளின் அடிபடையில் தான் விரிவாக பேசிகிட்டு இருக்கு. வானதியின் ஊழலகளை பற்றிய இரு பாகங்கள் கொண்ட இந்த கட்டுரையை ஒழுங்கா படிக்காமல் ,முழுமையாக படிக்காமல் இருப்போருக்கு நான் என்னை உதவி பேராசிரியர் பதவியில் இருந்து கல்லூரி விரிஉரையாளராக டிபிரமோட் செய்து கொண்டு விவரிக்கணும் போல…!!!!!

    இந்த பின்னுட்ட பகுதியில் நான் கவனித்த வரைக்கும் பின்னுட்டம் எழுதுவோம் எவருமே இந்த இரு பாக கட்டுரைகளை முழுமையாக படிச்சிட்டு பேசுவது போல தெரிய வில்லை, உண்மை விளம்பி உட்பட….

    இங்கே விவாதத்தில் ஒரே கூச்சல் குழப்பம் தான் அதிகமாக இருந்தது. வினவின் துனையால அந்த குழப்பங்கள் எல்லாம் சரி செய்ய்பட்டாலும் உண்மை விளம்பியை தவிர வேறு யாரும் முற்போக்காளர்கள் வானதியை மக்கள் முன் அம்பல படுத்த வரமாட்டேன் என்று அடம் பிடிகின்றார்கள். என்ன செய்ய! பிஜேபி காரர்கள் பொய்யை பிரச்சாரம் பண்ணி ஜெயிக்கும் போது இந்த முற்போக்காலர்களுக்கு உண்மையை மக்களிடம் எடுத்து உரைக்க கூட கஷ்டமாக இருக்கு !போல!

Leave a Reply to குமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க